பழமொழி தொடர்கள்

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:01, 27 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 


பழமொழிகள் மக்களிடையே நீண்ட காலமாக வழங்கி வருகிறது ,பேச்சில் ஆதாரமாகவோ, உதாரணமாகவோ காட்டப்படும் கருத்துத் தொடர்.. தமிழ் மொழியில் பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுள், உரை நடை.’ பேச்சு வழக்கிலும் ஆயிரக்கணக்கான பழமொழிகள் பேசப்பட்டு வந்துள்ளது. பழமொழி ஒவ்வொருன்றும் ஓர் அறத்தினை உணர்த்துகிறது. சுருக்கமானதாகவும், பொருட்செறிவும், மூதுரை நிறைந்ததுமான இருக்கும். பொதுவாக ஒரு சமூகம் தன்னுடைய கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் சொற்றொடர். சுருங்கச் சொல்லி விரிவாக பொருள் கொள்வது.

பழமொழிகள், ஒவ்வொரு பேச்சு வழக்கு மொழியிலும், நாட்டுப்புற இலக்கியத்திலும் இன்றியமையாத அங்கமாகக் காணப்படுகின்றன. இவை வாய் மொழி மரபிலிருந்து தோன்றிவை. ஓரே பழமொழி உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறுசிறு மாற்றுகளோடு வழங்கப்படுதுண்டு. பழைய எகிப்தியர் காலத்திலிருந்து இலக்கிய அமைப்புகள் பழமொழிகளைச் சேகரித்துள்ளன.

1998 –ல் அகத்தியர் மடலாடும் குழுவில் பழமொழிகள் என்ற தலைப்பில் சில,பல பழமொழிகளை தொகுத்திட்டேன்.அவைகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. பணியின் காரணமாக தொடர்ந்து தொடர இயலாது போய்விட்டது. அதன் பொழுது பழமொழியின் தொடரோடு ஒட்டிய உவமை யகர வரிசையினையும் தொடர்ந்தேன்.
சில, பல சமயங்களில் பழமொழியின் உள் விளத்தினை டாக்டர். ஜெயபாரதி விளக்குவார். அவைகள்
யாவும் மதிப்பு மிக்க பொருள் நிறைந்த வரிகள். அவைகளை அப்போது சேர்த்து வைக்காமல் விட்டது
ஒரு பெரும் குறையாக. இப்போது வருத்தமளிக்கிறது.

அதன் பின் இப்போது அவ்வப்போது தொகுத்த, சேர்த்த பழமொழிகளையும், உவமைத் தொடரினையும் அகர வரிசையில் உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
**************************************

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகல இருந்தால் நிகள உறவு, கிட்ட வந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் நின்கிறது வீடு.
அகல வட்டம் பகல் மழை
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அஞ்சிலே வளாதது ஐம்பதிலே வலையுமா?
அடக்கம் பெண்ணுக்கு அழகு.
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார்.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:01, 27 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பழமொழி_தொடர்கள்&oldid=8304" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 14:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,034 முறைகள் அணுகப்பட்டது.