பாசுர மடல் 098 : மச்சாவதாரமும் கருங்கடல் பெருக்கும் .

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:07, 9 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


மச்சாவதாரமும் கருங்கடல் பெருக்கும்.



திருமாலின் பத்து அவதாரங்களில், முதல் அவதாரம் மீன் அல்லது மச்ச அவதாரம்.மனு என்னும் அரசன் நதியில் நீராடும் போது ஒது மீன் அவன் கையில் அகப்பட்டதாம்.அவன் அதை மீண்டும் நீரில் விட எத்தனிக்க, மீன் அவனிடம் அபயம் கேட்டதாம்.நல்ல அரசனான மனு அதை ஒரு கலத்தில் போட, மீன் அதைவிட வளர, அவன் அதைக்குளத்திற்கு மாற்ற-அது அதைவிட வளர, அவன் நதிக்கு மாற்ற அதுவும் போதாமல் அதுவளர அவன் இறுதியில் இது தெய்வ மீன் என்று உணர்ந்து தஞ்சம் புக. மீன் வடிவில் இருந்த இறைவன் வரப்போகும் நீர்ப்பெருக்கைப் பற்றி எச்சரித்து ஒரு பெரிய கப்பல் செய்யுமாறு ஆணையிட்டு அதில் வகைக்கு ஒன்றாக தாவரங்கள், விலங்குகள் இவைகளை சேகரித்து காத்திருக்குமாறு சொல்ல, அவனும் அதுபடி செய்தான். கொஞ்ச நாளில் வெள்ளம் பெருகி ஓட, மீன் சொன்ன படி வந்து கப்பலை தள்ளிக் கொண்டு உயர்வான ஒருமலைக்கு இட்டுச் சென்று உயிர்களைக் காத்ததாம். இதுதான் மச்சாவதாரத்தின் கதை.


                                                                              
Matsa avatar.jpg

                                                      



இக்கதை எவ்வளவு தூரம் விவிலியக் கதையுடன் ஒத்துப் போகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அங்கு நோவா, இங்கு மனு. அங்கும் கப்பல், இங்கும் கப்பல். அங்கும் தாவர, விலங்குகள், இங்கும் அதே. ஒரே வெள்ளப் பெருக்கு!! எப்படி இவ்வளவு பொருத்தம்?


வெவ்வேறு நாடுகளில் இக்கதைகள் உலவினாலும் அதன் ஆக்கம் எங்கோ ஓரிடத்தில் நடந்திருப்பது தெரிகிறது. அது கருங்கடல் பகுதிகளான ஆசியா மைனரில் நடந்திக்க வாய்ப்பிருப்பதாக கடலியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இன்றைய கருங்கடல் சுமார் 7000-9000ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய ஏரி. மத்தியதரைக் கடலுக்கும், கருங்கடலுக்கும் அன்று தொடர்பு கிடையாது, ஏனெனில் மத்திய தரைக்கடல் இதைவிட தாழ்ந்தபகுதியில், குறைந்தளவே நீர் கொண்டு இருந்திருக்கிறது. ஆயின் இரண்டாம் பனிக்காலத்தில் உலகின் தட்ப வெப்பம் மாற, துருவப் பனி உருகி கடல் நீரின் அளவு அதிகமாகத் தொடங்கியது. அக்காலக் கட்டத்தில் தான் போஸ்போரஸ் வழியாககடல் உடைத்துக் கொண்டு 50 கியூபிக் கிலோ மீட்டர் கடற் தண்ணீர் உட்புகுந்து அன்றையக் கருங்கடலை நாளுக்கு சுமார் 15 செ.மீட்டர் உயரும் அளவிற்கு பெரிதாக்கி விட்டிருக்கிறது. (Science Vol.279, pp.1132, 1998)

                                                                                                                               
Black sea screen saver-67880-scr (2).jpeg


இப்படியானதொரு நிகழ்வு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எத்தகைய பாதிப்புகளை நிகழ்த்தியிருக்கும் என்று ஊகிக்கலாம். குய்யோ, முறையோ என்று பல்வேறு திக்கும் ஓடிவந்த மக்களில் ஒரு பிரிவினர் அன்றைய மெசபடோமிய நாட்டில்குடி புகுந்திருக்கலாம். அவர்கள் வழியாக இச்செய்தி பண்டைய சுமேரிய வெள்ளப்பெருக்கு தொன்மமாகி பின் நோவா கப்பல் தொன்மமாகவும், மச்சவதாரத் தொன்மமாகவும் மாறியிருக்க வேண்டும். பண்டைய சுமேரியாவிற்கும், தமிழ் நாட்டிற்குமான தொடர்புகளை முனைவர் லோகநாதன் மொழியியல் வாயிலாக நிறுவ முனைகிறார். அத்தொடர்பு ஊர்ஜிதப் படும் போது இத்தொன்மங்களின் தொடர்பு நன்கு விளங்கும்.


வானோரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம்,
வலியுருவில்மீனாய் வந்து வியந்துய்யக்
கொண்ட கண்டா மரைக்கண்ணன்


என்று இக்கதையை பாசுரமாக வடிக்கிறார் திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி).வான் உயரத்திற்கு முது நீர் (அதாவது கடல் நீர்), முன்பு வந்த போது இழுக்கக் கூடியமீனாய் மக்கள் வியந்து உய்யுமாறு கொண்டவன் தாமரைக் கண்ணுடைய கண்ணன் என்பது அவரது வர்ணனை.



Matsya-Avataar Yantra


குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்து,
மண்ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து
பன்றியாய்,நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே?

என்கிறார் திருமழிசைப்பிரான் (திருச்சந்த விருத்தம்)


நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து, பின் நீள் கடல் கிடந்து பல்வேறுஅவதாரங்கள் எடுத்த ஆதிதேவன் திருமால் என்கிறார். தொடர்ந்து இவர்கள் ஒருதொடர்ச்சி பற்றிப் பேசுவது ஆய்விற்கு ஒத்தாசையாக இருக்கிறது. பரிணாமயியலிலும்ஒரு தொடர்ச்சி இருக்கிறது அவதாரத் தொன்மங்களிலும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.இரண்டும் உயிர்களின் தோற்றம் பற்றி, அவை இன்றுள்ள நிலைக்கு வருவதற்கு முன்னுள்ள கூர்தல் பற்றிப் பேசுகின்றன.

                                                                                                             
Ark3dia.jpg


தொன்மங்களுள் சரித்திர பூர்வமான ஒரு செய்தி இருக்கலாம், இல்லை ஒருகோட்பாடு இருக்கலாம். அதைக் கண்டு சொல்வது வல்லவர் கடன்.




நா.கண்ணன்..


Date - Sat., 25 Nov., 2000  21.59.38 +0200.






பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 9 டிசம்பர் 2010, 17:07 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,434 முறைகள் அணுகப்பட்டது.