ஸப்த விடங்கத் தலங்கள் 5மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:23, 2 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் ஸப்த விடங்கத் தலங்கள் 5 திருவாய்மூர் இறைவர் பெயர்: வாய்மூர் நாதர் இறைவியார் பெயர்: பாலின் நன்மொழியாள் தலமரம்: பலா வழிபட்டோர்: சூரியன் தேவாரப் பாடல்கள்: சம்பந்தர்: தளிரிள வளரென உமை... 2/111 அப்பர்: தல வரலாறு: திருமறைக்காட்டில் இருந்து (வேதாரண்யம்) திருநாவுக்கரசரைத் திருவாய்மூருக்கு வா என்று இறைவன் அழைத்துத் திருக்கோவிலைக் காட்டிய அற்புதத திருத்தலம். திருஞாநசம்பந்தருக்கு ஈசன் அம்பிகையுடன் இருந்து நடனக் காட்சி நல்கிய திருத்தலம். முசுகுந்தச் சக்கரவர்த்தியால் எழுந்தருளப்பட்ட ஏழு தியாகேசவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகேசர் நீல விடங்கர். இத்தலம் சூரியன் வழிபட்ட தலம். பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் சூரியனின் கிரணங்கள் சுவாமி மேல் படுகின்றன. இவ்வூருக்கு வடமொழியில் "லீலாஹாஸ்யபுரம்" என்ற பெயரும் உண்டு. அமைவிடம்: இத்தலத்திற்கு திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். தரிசன நேரம்,மு.ப. 7.30----12.00 பி.ப. 4.00-8.00 |