பாசுர மடல் 063 : வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி.....மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:38, 26 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி ...........
மதுரைக் காரர்களுக்கு மீனாட்சி இல்லாமல் வாழ்தல் சிரமம் :-) வழக்கமாக போய்வரும் என்னை ஒரு நாள் ஒரு சிறுமி கேட்டாள், "என்ன மாமா? இன்று ரொம்ப லேட்?", தாமதித்து வந்த நான் பதில் சொன்னேன், "இல்லடியம்மா! பாசுர மடல்கள் எழுதி அனுப்பி விட்டு வர தாமதமாகிவிட்டது" என்று. அவளுக்கு ஒரே ஆச்சர்யம்! "பாசுரமடல்களை நீங்கள் எழுதுவானேன்? நீங்கள்தான் சைவராச்சே!" என்றாள்.
அவள் என்னை அன்புடன் "சைவன்" என்று சொன்ன சொல்லை என்னால் மறுதலிக்க முடியவில்லை. வைணவத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்று சொன்னேன். ஆழ்வார்களின் அருளிச் செயல் இல்லாமல் தமிழ் அவ்வளவு இனிக்காது என்று சொன்னேன். அவள் தலையாட்டி கேட்டுக் கொண்டாள்
சட்டென எனக்கு ஆழ்வார்களில் மூத்தவரான பொய்கையார் நினைவு வந்துவிட்டது! அவர் யாத்த முதல்திருவந்தாதியில் சொல்கிறார்:
அரன்நாரணன் நாமம்; ஆன்விடைபுள் ளூர்தி;
அரன்-நாரணன் - நாமங்கள்; ஆன்விடை(எருது)-புள்(கருடன்) - ஊர்தி; . எவ்வளவு அன்பான பார்வை. அரனும், நாராணனும் உயிரும் உடலும் போல ஒன்று என்கிறார் . அந்தக் காலத்து மனிதர்களே தனிதான்! சங்கம் முடிந்த பின் வரும் களப்பிரர் காலத்தில் தமிழ் சமயங்கள் அனாதைகளாய் இருந்த காலம். இருண்ட காலத்தில்தான் ஒளி வேண்டி இருக்கிறது. இக்காலக் கட்டத்தில் ஒளி தந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் உண்டு. அவர்களுக்குள் நல்லிணக்கமும் இருந்திருக்கிறது. அத்தகைய நாயன்மார்களுள் காரைக்கால் அம்மையார் முக்கியமானவர். தன்னைப் பேயாக மாற்றியேனும் சிவன் ஆடும் ஊழிக்
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
உமையொரு பாகன் மட்டுமல்ல அவன், மாலொரு பாகனும் கூட என்கிறார் இத்தாய். இவரும் பூதத்தாழ்வாரும் சேர்ந்து அந்தாதி என்ற அழகு தமிழை அளித்தாக ஒரு ஐதீகம் உண்டு. பூதத்தார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் மூவரும் சேர்ந்து திருமாலை அனுபவித்த அழகான கதையொன்று உண்டு (காண்க பாசுர மடல்: ஆழ்வார்களின் அறிமுகம்). அப்படியெனில் காரைக்கால் பேயாரும், பேயாழ்வாரும் சம காலத்தவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. பெயர் பொருத்தம் போதாதோ! அப்படியில்லை :-) அவர்கள் பார்வையிலும் ஒற்றுமை உள்ளது. திருவாலங்காட்டு ஈசனை காரைக்கால் பேயார் மாலொரு பாகனாய் பார்க்கிறார். பேயாழ்வார் திருவேங்கடவனை வேங்கடேஸ்வரனாக (வேங்கடம் + ஈசன்) பார்க்கிறார்:
தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும் (மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்)
வேங்கடத்தான் பொல்லாத ஆசாமி :-) அவர் கோயிலை வெளியிலிருந்து பார்த்தால் சிம்மம் இருக்கும். சரிதான் இது அம்பாள் கோயில் போலுள்ளது என்று நினைக்கலாம். உள்ளே போனால் காஞ்சி ஆசார்யர் வில்வ பூஜை செய்து கொண்டிருப்பார். சரிதான் இது சிவன் கோயில் போலுள்ளது என்றால், காலையில்
(குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி 4.9)
என்று வைணவ மெய்யடியார்கள் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொண்டிருப்பர். இராமானுசர் காலத்தில் இது குமரன் கோயிலாக தரிசிக்கப் பட்டதாக குருபரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. (இத்தனை மூர்த்தங்களும் ஒன்றாய் இசைந்ததாலோ என்னமோ அங்கு அருள் மழையும், பொருள் மழையும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது!)
சைவ சமயம் இன்றுள்ள நிலைக்கு திருஞான சம்மந்தரும், அப்பரும் பெருந்தொண்டு ஆற்றி உள்ளனர். ஊர் ஊராகப் போய் கோயில்களை உருவாக்கி, பழைய கோயில்களின் பெருமையை நிலை நாட்டி, வாது வந்தால் வாதிட்டு, மந்திரம் கேட்டால் மந்திரம் செய்து, தந்திரம் கேட்டால் தந்திரம் செய்து சிவத் தலங்களை நிலைப்படுத்தினர். அத்தகைய பேரருளாளரான அப்பர் பெருமான் பாடுகிறார்
பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்
உலகம் உண்ட பெருவாயனான கண்ணனை தன்பால் கொண்டுள்ளான் புரம் அழித்த முக்கண்ணன் என்று சொல்கிறார்.
தமிழ் வைணவத்தின் பிதாமகரான நம்மாழ்வார் திருவாய்மொழியின் ஈற்றில்
அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
என்று முடிக்கிறார். அவா அற சூழ் அரியை என்றால் விரும்பியவற்றை நல்குபவன் திருமால் என்று பொருள்.
சேர்த்து வாசித்தால் அரியை, அயனை, அரனை அலற்றி (கூப்பிட்டு) வீடு பெற்ற சடகோபன் என்று முடியும். ஒரு சன்மார்க்க நெறியை கோடி காட்டி விட்டுச் செல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.
மாற்றாக, அயனை அரனை அவாவற்று, அரியை அலற்றி, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்றும் சொல்லலாம். இது வைஷ்ணவர்களை மகிழ்வூட்டும் வியாக்கியானம்.
அயனை அரனை அவா அறச் சூழ் அரியை அலற்றி, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்பது இன்னொரு வகை. அதாவது அயன், அரன் இவர்களுக்கும் மங்களத்தை நல்குபவனான சர்வேஸ்வரனான அரியை வழி பட்டு முக்தி அடைந்த சடகோபன் என்பது இதன் பொருள். இதுதான் வீர வைஷ்ணவர்களுக்கான வியாக்கியானம் :-))
சேரமான் பெருமாள் நாயனாரின் பார்வையல்லவோ நமக்கு வேண்டும்:
இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய் (பொன் வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்)
இடதுபுறம் திருமால்- திருத்துழாய் மாலை, துகிலாடை, சுடராழி, கரிய நிறம்
சிங்கப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் முருகனுக்கும், பிள்ளையாருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. கள்ளழகர் சந்நிதியில் பிள்ளையார் உட்கார்ந்து இருக்கிறார். நல்ல வேளை நல்ல திருநாமத்துடன் (பிழைத்தார்!). விஜயவாடாவில் உள்ள நரசிம்மப் பெருமாள் கோயிலை நான் முன், பின் கண்டதில்லை. என் தோழன் அழைத்துச் சென்றான். நல்ல
என்று கேட்டால், "நரசிம்மரின் உக்கிரத்தை தனிக்க சந்தனக் காப்பு செய்து, செய்து அது லிங்கம் போல் வந்துவிட்டது" என்றார்கள். அந்த சந்தனக் காப்பை சுரண்ட வேண்டுமென்று அவா உள்ளத்தில் வந்தது. எலும்பு முறிந்துவிடும் என்று தெரிந்ததால் அப்பரைப் போல், பொய்கையாழ்வார் போல், காரைக்கால் அம்மையார் போல், பேயாழ்வார் போல், சேரமான் பெருமாள் நாயனார் போல் நானும் இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து இருப்பதாய் எண்ணி தரிசித்து மீண்டேன்!!
நா.கண்ணன் Date - Wed., 1 Dec., 1999 - 08.34. 02 - 0800.[PST]
. |


