நவராத்திரி நாயகியர் 7

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:31, 25 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக


நவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம் நாள்!


இன்றைய அலங்காரம் கல்யாணி!


மகாகெளரி: எட்டு வயதுச் சிறுமி இவள். அம்பிகையின் சிறுமி வடிவான இவளே, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி.
Images.jpgmahagouri.jpg
மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நவராத்திரியின் திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே. திங்கட்கிழமைகளில் இவளை வணங்கவேண்டும். தண்டகாரண்யத்தின் முனிவர்களின் அல்லல்கள் தீர, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டமே சுத்தத் தாண்டவம் எனப்படும். ஈசனின் இந்தத் தாண்டவத்தில் தோன்றியவளே மஹாகெளரி ஆவாள்.


மூன்றாம் நாளான இன்று கோலம் பூக்களாகப் போடவேண்டும். மஹிஷனை வதம் செய்த அம்பிகையை
Images.jpgஅம்பிகை.jpg
சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.

வெள்ளைக்காராமணியை வழக்கம்போல் முதல் நாளே ஊற வைத்துப் பின் வேக வைத்து, மொச்சைச் சுண்டல் செய்முறை போல் செய்யவேண்டும்.


துர்கா அஷ்டகம் மூன்றாம் பாடல்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


Images.jpg லலிதா.jpg
ஸ்ரீ லலிதையின் படம் மேலே.


லலிதா நவரத்தினமாலையின் இன்றைய ரத்தினம் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

இந்தப் பதிவுக்குரிய வழிபாடுகள் திங்கட்கிழமைக்கானது.


--Geetha Sambasivam 09:31, 25 நவம்பர் 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=நவராத்திரி_நாயகியர்_7&oldid=3416" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2010, 09:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,690 முறைகள் அணுகப்பட்டது.