பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:02, 4 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற பல்வேறு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக இந்திய நாட்டின் அதிலும் குறிப்பாக தமிழக தொடர்பு இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்ததற்கான் சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. அவ்வகையில் கிடைத்த சான்றுகளில் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல ஆலயங்கள், மண்பாண்டங்கள் ஆலய வழிபாட்டு பொருட்கள் சுவாமி விக்ரகங்கள் போன்றவையும் அடங்கும். 


பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மெர்போக் நகரில் உள்ள சிறு கிராமமான கம்போங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) பகுதியில் ஒரு ஆலயம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது.  இதன் பெயர் சண்டி பெண்டாங் டாலாம் என குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 1960ல் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.  இந்த கண்டெடுப்பினைத் தொடர்ந்து மேலும் 1974, 1976, 1981ம் ஆண்டுகளில் இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பல பொருட்கள் மீட்கப்பட்டன.


இந்த ஆலயம் ஹிந்து ஆலய வடவமைப்பைக் கொண்டதாக உள்ளது.  ஆலய மண்டபமும் ஆலய விமானப் பகுதியும் தெளிவாக மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் அளவு, முறையே 6.75 மீட்டர் x 6.25 மீட்டரும் 6.75 மீட்டர் x 6.2 மீட்டரும் ஆகும். 


இந்த ஆலயம் அமைந்துள்ள சுற்றுப் பகுதியில் சிவலிங்கம், யோனி, ஆலய சிற்பங்களின் சிதலமடைந்த கற்கள், சீன கல்பொருட்கள்,  போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி வல்லுனர்களின் கருத்துப்படி இந்த ஆலயம் கி.பி 12 லிருந்து கி.பி 13  வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

பங்களிப்பாளர்கள்

Ksubashini, Vinodh மற்றும் 80.129.114.83