சிறு தானிய உணவுகள் 1மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:42, 30 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் கம்பு அடை நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் கீழே. தேவையான பொருட்கள் கம்பு ஒரு கிண்ணம் இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம் துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான். 4 மி.வத்தல்+பச்சை மிளகாய் 2 உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல். கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவு உணவுக்குத் தயார் செய்யச் சரியாக இருந்தது. வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன். ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி அரை கப் இட்லி புழுங்கலரிசி முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம். சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன் பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே! வரகு புழுங்கலரிசியில் செய்த தோசை அடுத்த நாள் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம் சிறு தானியங்களைத் தான் நம்முடைய முக்கிய உணவாகச் சில நூறு வருடங்கள் முன்னர் வரையும் இருந்ததாகச் சொல்கின்றனர். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உனவாகப் பரிந்துரைக்கப் படுகிறது. |