கிள்ளு மிளகாய் சாம்பார்

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:08, 4 ஜூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
கிள்ளு மிளகாய் சாம்பார்

இது குறிப்பாய் மதுரைப் பக்குவம்னு சொல்லலாம்.  அல்லது எங்க வீடுகளில் மட்டும் செய்து வரலாம்.  தெரியலை.  ஆனால் யாரும் அதிகம் செய்து பார்த்திராத இதை நம்ம ரங்க்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடி தனியாச் சமைச்சுச் சாப்பிடறச்சே சாம்பார்ங்கற பேரிலே புளியே போடாமல் செய்து வந்திருக்கார்.  கல்யாணம் ஆனதுக்கப்புறமா என்னால் முடியாமல் போகும் தினங்களில் குழந்தைங்களுக்கு இந்த சாம்பாரைச் செய்து மேலே தெளிவாக் கிடைப்பதை ரசம்னு ஊத்திட்டு, அடியிலே கெட்டியா இருப்பதை சாம்பார்னு சொல்லிப்பார்.  இத்தோட அருமையான காம்பினேஷனா காரட்+தக்காளி+வெள்ளரிக்காய்+வெங்காயம்+கொத்துமல்லி+மிளகு+உப்பு சேர்த்த சாலட்.  தினம் தினம் புளி சேர்த்து சமையல் என்றால் ரொம்பவே சலிப்பாய் இருக்கும்.  அதற்கு ஒரு மாற்று இது.  இப்போ நம்ம செய்முறை பத்திப் பார்ப்போமா?  சாம்பாராவே தான் பண்ணுவேன்.  எனோட அம்மா இதை வாரம் ஒருமுறையாவது பண்ணுவாங்க.  அதிலே போடும் மிளகாயெல்லாம் பிஞ்சு மிளகாயாக இருக்கும் என்பதால் மிளகாயோடு சேர்த்தே சாப்பிட்டிருக்கோம்.  இங்கே சின்ன மிளகாயே காரம் அதிகமா இருக்கு.  சுமார் நாலு பேருக்குத் தேவையான அளவு



புளியே இதுக்கு வேண்டாம்.  ஆகவே இன்னிக்கு நோ புளி டேனு வைச்சுக்குங்க.

தக்காளி பெரிது எனில் 2
நடுத்தர அளவு எனில் 3 அல்லது 4

பச்சை மிளகாய்ப் பிஞ்சு எனில் 50 கிராம் அல்லது 5 பச்சை மிளகாய்(காரமுள்ளது)

சாம்பார்ப் பொடி  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்     கால் டீ ஸ்பூன்

துவரம்பருப்பு குழைய வேக வைத்தது ஒரு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

கருகப்பிலை, கொத்துமல்லி

தாளிக்க எண்ணெய்

கடுகு, வெந்தயம், 

பெருங்காயம் ஒரு துண்டு

தேவையான அளவு தண்ணீர் குழம்பில் சேர்க்க. ஒரு கிண்ணம் போதும்.

தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.  துவரம்பருப்பை முன்னதாக நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  நான் ஸ்டிக் கடாய், வாணலி அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கருகப்பிலை தாளித்து நறுக்கி வைத்த தக்காளி, பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்.  மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு ஒரு கிண்ணம் நீரை ஊற்றித் தேவையான உப்புப் போடவும்.  தக்காளி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்னர் வெந்தபருப்பில் ஒரு கரண்டி நீர் விட்டுக் கரைத்துக் கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.  ஒருகொதி வந்ததும் இறக்கிக் கொத்துமல்லி போடவும்.  சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற எதோடும் துணை போகும்.  இதிலேயே சின்ன வெங்காயமும் வதக்கிச் சேர்க்கலாம்.  அல்லது பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கிச் சேர்க்கலாம்.  சுவை மாறுபடும். படம் எடுத்திருக்கேன்.


--Geetha Sambasivam (பேச்சு) 12:07, 4 ஜூன் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜூன் 2014, 12:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,096 முறைகள் அணுகப்பட்டது.