மெளனகுரு சுவாமிகள்மரபு விக்கி இருந்துDrtv (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:58, 19 செப்டெம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் தோன்றித் தம் தவவலிமையால் ஆன்மீக நெறிகளைப பரப்பியும், பாமரர் நல்வழி நடந்து வாழவும் பாடுபட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் ஆன்மிகம் தழைக்க மௌனகுரு சுவாமிகள் என்னும் தவப்பெரியார் சித்தராகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்து மறைந்தது பலருக்கும் தெரியாத செய்தி. கவியோகி சுத்தானந்த பாரதி மௌனகுருவின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதியதோடு நின்றுவிடாமல் அவர் பெருமைகளைப் போற்றி ஓங்கார தொட்டிலிலே என்னும் தலைப்பில் ஒரு பாவும் இயற்றியுள்ளார். மௌனகுரு சுவாமிகள் ஊர், பேர், உறவு, சுற்றம் யாதுயென அறியப்படாதவர். அவர் கன்னடத்தில் ஒப்பரு இல்ல, நீ ஒந்தே ... இதயதல்லி .. ஓம் சிவம் (நீயன்றி யாரும் இல்லை, நீயே உறுதுணை .. இதயத்தில் இருக்கும் சிவனே ஓம் சிவம்) என்று அடிக்கடி கன்னடத்தில் முணுமுணுப்பார், தனக்குத்தானே பேசிக்கொள்வர். வேறு வெளிப்பேச்சு இல்லை. யாரையும் தன்னிடம் அணுகவிடாமல் தானே தானாகத் தன்னந்தனியாக இருந்த இடத்தில் மோனத்தில் ஆழ்ந்துவிடுவார். சித்தென்பது ஓர் இயக்கம். அவ்வியக்கம் எங்கிருந்து தோன்றியதோ அத்தோன்றும் இடத்திலேயே சென்று ஒடுங்குவதாகும். அப்படி தோன்றிய இடத்திலேயே சித்தம் ஒடுங்கினால் அதுவே பிரம்மம். பிரம்மம் என்றால் மௌனம் அல்லது அசையாநிலை. ஓர் இயக்கம் தோன்றிய இடத்திலேயே மீண்டும் ஒடுங்கின. |