தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 10 கவிதை

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:20, 11 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 திவ்ய பனிமயமே தூய நறுமணமே


செ.கைத்தான் கோமஸ், தூத்துக்குடி


தமதிரித்துவ சர்வேசுவரவே வாழ்க!


தாய்மரி என்னும் நறுமணமே வாழ்க!


தூய அன்னாளின் மடியினிலே--தாயே


அமலோற்பவ மணம் வீசினீர்!


தூதரின் வாழ்த்துரையில்--மரியே


தேவத்தாயாகி நறுமணம் வீசினீர்!


தேவ சுதனை சுமந்த போது--தாயே


தேவாலயமாய் ஒளி வீசினீர்!


கர்த்தரைப் பெற்ற பின்பும்--மரியே


கன்னிகையாய் மணம் வீசினீர்!


கிறிஸ்துவோடு வாழ்க்கையிலே--தாயே


ஏழ்மை தரித்து நறுமணம் வீசினீர்!


இரட்சகரின் பாடுகளிலே--மரியே


இணை இரட்சகியாய் மணம் வீசினீர்!


திருமகனின் உயிர்த்தெழுதலில்--தாயே


திருச்சபைக்கு திடம்தந்து நறுமணம் வீசினீர்!


தூய ஆவியின் வருகையிலே--மரியே


தூய அக்கினி விளக்காக ஒளி வீசினீர்!


நின் எழுபது வயதினிலே---தாயே


விண்ணரசியாக நறுமணம் வீசினீர்!


பரகதி என்னும் தங்கத் தேரினிலே


துலங்கும் பனிமய நறுமணமே!


மானிடம் மீட்படைய கமழ்ந்திடுவாய்


கிறிஸ்து என்னும் நறுமணத்தை!

--Geetha Sambasivam 06:20, 11 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 11 செப்டெம்பர் 2012, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,469 முறைகள் அணுகப்பட்டது.