மாரியம்மன் தீமிதி, கே.கே.நகர்மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 8 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் நேற்று கே கே நகர் மாரியம்மன் கோவில் பண்டிகையின் ஒரு பகுதியாக தீ மிதி விழா நடை பெற்றது. காலையில் இருந்தே தீ மிதி குண்டம் தயார் செய்யப்பட்டது. அடுக்கடுக்கான விறகுகள் போடப்பட்டு எரியூட்டப்பட்டு வந்தது. மாலை ஐந்து மணியில் இருந்தே தீ மிதிப்பதைப் பார்க்க மக்கள் கூட்டம் திறந்துக் கொண்டிருந்தது. ஆறு மணி அளவில் அங்கு நிற்க இடமில்லை. கோவிலுக்கு எதிரே இருந்த இடம் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பெண்கள் அங்கிருந்து தீ மிதியை பார்க்க வசதியாக இருந்தது. நான் அங்கு சிறிது நேரமே இருந்தேன். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் வீட்டிற்கு வீட்டில் இருந்து தொலைகாட்சியில் நேரலை செய்யப்பட்ட தீ மிதி விழாவை பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்டோர் விரதமிருந்து அக்னி குண்டத்தில் இறங்கினர். இதில் பலர் தாங்கள் வேண்டியப் படி பல காவடிகளை சுமந்த வண்ணமும், சிலர் தங்கள் உடம்பில் குத்திய வேல் /சூலாயுதம் போன்ற அலகுடனும் குண்டத்தில் இறங்கினர். சில போட்டோக்களை இணைத்துள்ளேன்
பங்களிப்பு திரு எல்கே.
--Geetha Sambasivam 04:37, 8 ஆகஸ்ட் 2011 (UTC) |