முதற் பக்கம்

மரபு விக்கி இருந்து

Dev (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:58, 29 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

                                                                        ஆசார்ய பரம்பரை

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது;  பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார்.


ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
பெரிய நம்பி (மஹாபூர்ணர்) (1017-1317 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (கிபி: 1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b1074AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD )
நஞ்சீயர் (1113-1208)
நம்பிள்ளை (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை  (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:)( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் (1268-1369 AD )
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
மணவாள மாமுனிகள் ( 1370-1443 AD )

இந்த மஹாசார்யருடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது மரபு; இவர் அரங்கன் திரு முன்னிலையில் ஓராண்டு காலம் திருவாய்மொழிப் பொருள் கூறியதாகவும், அரங்கன் ஒரு சிறு பிள்ளைவடிவில் தோன்றி,


“ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||”


என்னும் தனியனை அருளியதாகவும் வரலாறு.
(தனியன் என்பது ஆசார்ய புருஷர்களுக்கான த்யாந ச்லோகம்)
மாமுனிகளுக்கான தனியனை இயற்றியதால் இவர் மாமுனிகளின் சீடராகிறார்; ஸ்ரீமந்நாராயணன், பெரிய பிராட்டி, சேனை முதலியார், நம்மாழ்வார் என்று தொடங்கும் குரு பரம்பரை மீண்டும் நாராயணனிடம் நிறைவு பெறுகிறது;


ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;

குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )

பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

சில குறிப்புக்கள்

பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர்.

கூரத்தாழ்வான் உடையவரைக் காட்டிலும் வயதில் பெரியவர்; முன்பு தோன்றி முன்பே மரித்துப் பரமபதத்தில் ஆசார்யனை எதிர்கொள்ளக் காத்திருந்தார்.

மஹா விரக்தரான கூரேசருக்கு 60 வயது கடந்தபின் குழந்தைகள் பிறந்தனர்;

வடக்குத்திருவீதிப்பிள்ளையின் சரி்தமும் இது போன்றதே.

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் வந்த கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர்;

நம்பிள்ளைகள் 2ம் ராஜராஜன், 3ம் குலோத்துங்கன் இவர்களின் காலத்தவராக இருந்திருக்க வேண்டும்

பெரியவாச்சான் பிள்ளையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவதரித்தவர்கள்.

ஸ்வாமி தேசிகன் பரமபதம் சென்ற அடுத்த ஆண்டில் அவதரித்தவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள்.

பொதுவாகத் துறவியர் இல்லறத்தாருக்குச் சீடராவதில்லை. விதிவிலக்காகத் துறவியான நம்ஜீயர், பராசர பட்டரின் சீடராக இருந்தார்; ப்ரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் சீடர்.

நம் ஜீயரின் ஒன்பதாயிரப்படியும், உடையவரின் ஸ்ரீ பாஷ்யமும் ஒரே அளவு கொண்டவை.

.


பங்களிப்பாளர்கள்

Vinodh, Ksubashini, Coralsri.blogspot.com மற்றும் Dev

"https://marabuwiki.org/index.php?title=முதற்_பக்கம்&oldid=504" இருந்து மீள்விக்கப்பட்டது