சாரதாமணி அம்மையார்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

அறிமுகம்

அன்னை சாரதாமணி அவர்களுக்கு நான் எழுதும் "அவரது வாழ்க்கையை" சம்ர்ப்பிக்கிறேன் இது எழுத என் உடல் ஆரோக்கியமும் மனதில் தெம்பும் அவரது அருளும் வேண்டுகிறேன் எனக்கு பதில் மடல் போடமுடியாவிட்டாலும் தயவு செய்து இதைப்படித்தாவது பார்த்தால் எனக்கு மன நிறைவு ஏற்படும் டிசம்பர் 22 அவரது பிறந்த நாள். ஓம் சாயிராம்!!

விசாலம்: மின்னஞ்சல்: rvishalam@gmail.com


பகுதி 1


ஸ்ரீ ராமகிருஷண பரம ஹம்சர் பிறந்து 17 வருடங்கள் கழித்து பிறந்தவள் அன்னை சாரதா ஏழைக்குடும்பத்தில் பிற்ந்த் அவர் தன் பெற்றோருக்கு மிக உதவியாக இருப்பார் இவர்தான் மூத்த பெண்,இவருக்குக்கீழே 6 தம்பிகள் , உண்டு தங்கைகளும் உண்டு இடுப்பு வரை இருக்கும் தண்ணீரில் நின்று பசுக்களுக்காக புற்களை வெட்டுவாள்,வயலில் வேலைச்செய்யும் ஏழைகளுக்கு உணவு எடுத்துச்செல்லுவார் .இதனாலே அவள் மேல் அந்தக்கிராமமே அன்பு கொண்டிருந்தது அவ்ருக்கு என்று எது வேண்டுமனாலும் செய்யத்தயாராக இருந்தது ,இவரது எளிமையான வாழ்க்கை இவர் திருமணம் ஆனப்பின்னும் தொடர்ந்தது அவள் வயலில் வேலைச்செய்யும் போதும்
அவள் வீட்டில் இருக்கும் போதும் அவளைச்சுற்றி பல உறவினர்கள் நண்பர்கள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்
தெய்வமே நம்முடன் இருக்கிறதே என்று அவர்களுக்குஅப்போது தெரியவில்லை"சாரதா விளையாட வரயா ? மணலில் வீடு கட்டலாம் "

 

"உஹூம் நான் வரலை "

"சரி பாண்டி விளையாடலாமா?"

"உஹூம் நான் வரலை எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை"

நான் சும்மா அமர்ந்து பார்க்கிறேன் "

இதனால் சாரதாமணி அமர்ந்து விளையாட்டைப்பார்க்க, நடுவில் ஏதாவது சண்டை வந்தால் அதைச்சமாதானமாக
தீர்த்து வைப்பார்.மிகவும் வெகுளியாகவும் உண்மையை நேசிக்கும் பெண்ணாகவும் இருந்ததால் எல்லோரும் இவரைச்சுற்றினர் மிக அன்புடன் பழகினர்.   இவருக்கு என்று ஒரு விளையாட்டு இருந்தது அது என்னவென்றால் களிமண்ணைப்பிசைந்து காளி லட்சுமி பொம்மைகள் செய்து அதற்கு வர்ணங்கள் பூசி அதை ஒரு மரத்தடி
கீழ் வைத்து பின் பல பூக்களால் பூஜிப்பார் அப்போது தியானமும் செய்ய ஆரம்பித்து விடுவார்
ஒரு தடவை கோயிலில் ஜகதாத்ரி தேவியைப்பூஜை செய்து பின் தியானம் செய்து அவளையுமறியாமல் தேவியின் மடியிலேயே அமர்ந்திருந்ததை சிலர் பார்த்து வியந்தனர். இவர் பள்ளிக்குப்போவதை ஒருவரும் விரும்பவில்லை எதோ ஒரிணடு வகுப்புக்கள் படித்திருக்கலாம்.

 

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் தெய்வீக அன்னையை முதல் தடவையாக பார்த்தார் அதிலிருந்து அந்தப்பெணதான் தனக்கு வரவேண்டும் என்று மனதில் நிச்சயித்துக்கொண்டார். இதனால் அவரது போக்கிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன ,
சிலர் அவரது மனம் பேதலித்து விட்டதோ என்றும் எண்ணினர்.  இந்த விஷயம் காமார்புகூரிலிருந்த அவரது தாயின் செவிக்கு எட்டியது ,அவர் மனதிலும் எதவது ஒருபெண்ணை மணம் செய்து வைத்தால் தன் மகனது
மனநிலை ஒழுங்கில்,வரும் என நினைத்தார்.திருமணம் ஆனப்பின் அந்தப்பெண்ணின் அன்பாலும்
சேவையினலும் தன் மகன் மாறிவிடுவான் என நினைத்தாள் அந்தத்தாய்.

 

ஸ்ரீ ராமகிருஷணருக்கு இதில் அவ்வளவு நாட்டம் இல்லை என்றாலும் தான் மனதில் பர்ர்த்தப்பெண்ணை நினைத்து
தன் தாயிடம் " அம்மா எனக்குத்தகுந்தப்பெண் ஸ்ரீஜுட் ராமசந்தர முகோபாத்யாய்ரின் பெண் சாராதாமணி தான் அந்த இடத்தையே முடித்துவிடு ".

 

தாய் சந்த்ரமணி அந்தப்பெண்ணைப்பற்றி விவரம் அறிந்தாள் தெய்வீகமான முகம் முகத்தில் சாந்தம் எல்லோருக்கும் உதவும் பண்பு, தெய்வபக்தி என்று பல அவரிடம் இருந்ததால் உடனேயே தன் மருமகளாக வர
ஏற்பாடுகள் செய்துவிட்டாள் .


திருமணம் நடந்தது குருவின் முன் 17 வய்து வித்தியாசத்தில் ஒர் சிறுமி ! அந்த மருமகள் பின்னால் பல சிஷ்யர்களுடன் ஒரு சன்யாசினி ஆவார் என் அப்போது ஒருவரும் நினைக்கவில்லை.


பகுதி 2 

தன் ஏழு வய்தில் நடந்த திருமணம் பற்றி சிலர் அவரிடம் கேட்டபொழுது "எனக்கு ஒன்றும் புரியவில்லை திருமணம் ஆன பின் நன் காமர்புகூர் வந்தவுடன் தோட்டத்தில் ஓடி அங்கு கீழே விழுந்துக்கிடந்த
பேரீச்சம்பழங்களைப்பொறுக்கி வைத்து கொண்டிருந்தேன் " என்றாராம் அத்தனைச்சின்ன வயது.

 

ஸ்ரீ ராமகிருஷணர் திருமணம் ஆனதும் அந்தச்சிறுமியை இங்கே விட்டுவிட்டு தான் தக்ஷினேஸ்வர் போய் விட்டார் ,அங்கு அவருடைய ஆன்மீகத்தேடல் தொடர்ந்தது அன்னைக்காளியை தரிசிக்க அவர் மனம் விரும்பியது தூக்கம் போயிற்று உணவைப் பற்றிய சிந்தனையும் போயிற்று .உலக விஷயங்களில் நாட்டம் இல்லை , பெண்ணை வெறுத்தார் பணத்தை வெறுத்தார்.  பொருட்களின் மீது பற்றை ஒழித்தார்.

 

இந்த நிலையில் இருந்தவரைப்பார்த்து எல்லோரும் இவருக்கு மனம் பேதலித்து விட்டதோ என பயந்தார்கள்
சிலர் மூளையில் எதாவது பழுதோ என நினைத்தார்கள் , பல மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள் ஆனால் ஒன்றும் பலன் இல்லை. இந்த விஷயம் மெள்ள அவரது அன்னை சந்தைரமணியின் காதிற்கு எட்டியது ஒரு தாய்க்கு
இந்தச்செய்தி எப்படி இருக்கும் ?அதுவும் இப்போதுதான் திருமணம் ஆன புது மாப்பிளை! பல கோயில்களுக்கு படையெடுத்தார்.


தன் மகனுக்காக பிராத்தனைச்செய்தார் ,இந்த விஷயம் சாராதாமணிக்கும் எட்டியது ஆனால் அவருக்கு இது ஒன்றும் புரியவில்லை விளையாடும் வயதில் மனைவியின் ஸ்தானம்!

 

அவரது 14 வயதில் அவர் தன் கணவரைப்பார்க்கப்போனார்.  அவரைப்பார்த்தப்ப்பின் ஸ்ரீ ராமகிருஷண்ரது செயலில் சிறிது மாற்றம் தெரிய எல்லோருக்கும் மகிழ்ச்சி.  அன்னை சாரதாமணிக்கு ஸ்ரீரமகிருஷணர் நிறைய பயிற்சிகள்
கற்றுக்கொடுத்தார் ஆனால் வாழ்க்கையில் ஒரு சன்யாசியாகத்தான் இருந்தார். எல்லோரையும் பிரும்மனாகவே பார்த்தார் அவரது மனைவியையும் சேர்த்துத்தான் !

 

தன் மனைவிக்கு ஆன்மீகம் போதிக்க ஆரம்பித்தார் அத்துடன் வீட்டுவேலைகள அப்பழுக்கில்லாமல் செய்யவும் கற்றுக்கொடுத்தார். சாரதாமணியும் தன் கணவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவரது அன்பை உணர்ந்து அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.  பிற்காலத்தில் அவர் இவரைப்பற்றிசொன்னது "ஒரு பெரிய பாத்திரம் முழுவதும் அந்தத்தெய்வீக அருள் நிறைந்தாற்போல் அவரது உடல் முழுதும் தெய்வீக அருள் நிறைந்திருந்தது அவருக்குச்சேவை செய்ததில் என்மனம் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது என் இதயத்தை அவரது அருள் நிரப்பி விட்டது "


திரும்பவும் தன் கணவர் த்க்ஷிணேஸ்வர் போனவுடன் அவர் மிகவும் பொறுமையாக அவரது வருகைக்காகக் காத்திருந்தார் அவரது மனமெல்லாம் தன் கண்வர் மேலேயே இருந்தது அவர் நீச்சயம் திரும்பி வருவார் என்று நம்பி வாழக்கையை கழித்தார் தானும் மௌனமாக சாந்தமாக அந்த இறைச்சக்தியை உண்ர ஆரம்பித்தார் வீட்டில் பல வேலைகள் இருந்தன ஆனாலும் ஒவ்வொர்ரு வேலையும் செய்வது அந்த இறைவனுக்கே என்ற நினைப்பில் செய்த்தால் உடல் சோர்வு தெரியவில்லை.


ஒரு நாள் அவரது வீட்டில் சிலர் வந்து" ஸ்ரீ ராமகிருஷணருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அவர் உடைகளும் களைந்து எதோ பேத்தியபடி வருகிறார் என்ற செய்தியைச்சொல்லினர். "இது நிஜமா இருக்குமா உடனேயே நான் இந்த நேரத்தில் அவர் அருகில் இருக்கவேண்டும்"என்று நினைத்து இதைப்பற்றி அவரது  வீட்டு உறவினர்களிடம் கேட்க பயந்து மனம் உருகிப்பிரார்த்தனை செய்தாள் கடவுளும் பிரார்த்தனைக்குச்செவி சாய்த்தார்.


அந்தக்கிராமத்திலிருந்து சிலர் கங்கையில் குளிக்க கல்கத்தாவுக்கு போக ஏற்பாடு செய்தார்கள் .சாராதாமணியும் தானும் அவர்களுடன் போக தன் தந்தையிடம் விருப்பம் தெரிவித்தார் அவரது உள் நோக்கம் அறிந்தத்தந்தை தானும் அவர்களுடன் பிரயாணத்தைத் தொடர்ந்தார் 60 மைல்கள் நடக்க வேண்டும்.


பணக்காரர்கள் பல்லக்கில் போவார்கள் ஆனால் இவர்களால் அதை நினைத்துக்கூடப்பார்க்க முடியாது ! சாரதாமணி தன் கணவரைப்பார்க்க உடலால் எந்தச்சிரமும் பட தயாராக இருந்தார் .மூன்று நாட்கள் நடை ,,,,,சாரதாமணியின் உடல் இந்த கடும் நடையைத்தாங்கமுடியாமல் நெகிழுந்துப்போய் சுரமும் வந்தது சுரத்தில் அவர் மயக்கமடைந்தார் அவருக்கு அப்போது உதவ ஒரு கரிய உருவம் வந்தது ஆனால் அதன் அழகோ அழகு!


அவரைத்தடவி அவருக்குச்சேவையும் செய்தது  "நீங்கள் யார்?எனக்கு ஒரு தாய்ப்போல் உடவ வ்ந்துள்ளீர்கள்"  என்று அவர் கேடக அந்த உருவம் "நான் தக்ஷிணேஸ்வர்என்ற இடத்திலிருந்து வருகிறென் நான் அந்தக்காளியின் சகோதரி என்றாராம் அந்தச்சம்பாஷணையின் பின் மறுநாள் அவரது சுரம் நன்கு விட்டுவிட்டது பின் நடந்து நடந்து எப்படியோ அவரது  கணவர் இருக்கும் தக்ஷிணேஸ்வர் இடத்திற்கு வந்தார் ஸ்ரீ ராம்கிருஷண்ரும் தன் மனைவியைக்கண்டார்.

 


பகுதி 3

"என்ன இவள் இந்த நிலையில் இருக்கிறாளே ! தள்ளாடித்தள்ளாடி நடந்துவ்ருகிறாளே "என்று நினைத்தபடி அவரிடம் ஓடோடி வந்தார்,அவரது கணவர். அன்னையின் தந்தையும் அங்கு இருக்க இருவரும் அவளுக்குத்தோள்கொடுத்து உள்ளே அழைத்து வந்தனர், ஸ்ரீராமகிருஷணர் ஓடிப்போய் ஒரு படுக்கையைத்தயாரித்து கீழ்த்தளத்தில் இருக்கும் அறையில் விரித்தார், அன்னைக்குத்திரும்பவும் உடலின் சக்தி குறைவாக இருந்ததால்
சுரம் வந்திருந்தது , ஸ்ரீராமகிருஷணர் இருந்த இடம் முதல்மாடியும் கீழ்த்தளமும் கொண்டது ,மேல்மாடியில் தான் அவருடைய டிவைன்மதர் என்று சொல்லும் தெய்வீக அன்னையான காளிமாதா வீற்றிருந்தாள் . அவளுக்குத்தனி பீடம் இருந்தது அங்குதான் பஜன் ,ஆனமீகக்கூட்டங்கள் ஆன்மீக விஷயமாக எழும் சந்தேகங்கள் கேள்வி பதில்கள் என்று பலதரப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இதற்கு குறிப்பிட்ட நேரம் என்று ஒன்றுமில்லை எப்போது,வேண்டுமானாலும் குருஜி நினைக்க அது நடந்துவிடும் காலை மாலை நித்தியப்பூஜை உண்டு.


பாவம் தன் மனைவி சாரதாவை மேலே படுக்க வைத்தால் இந்தப்பூஜைக்கூட்டங்களால் அவள் நித்திரைக்கெடும் என்றுஎண்ணி கீழ் தளத்தில் அவளைத்தங்க வைத்தார் ,அவள் நிலை இப்படி இப்படி மோசமாகி விட்டதே  என்று மாய்ந்துப்போனார்.


"அன்பு சாரதா உனக்கு நான் எப்படி பணிவிடைகள் செய்யப்போகிறேனோ தெரியவில்லையே! முன்னால் என்னிடம் திரு மாத்தூர் என்பவர் இருந்து எல்லவற்றையும் கவனித்துக்கொள்வார் .அவரும் இப்போது இல்லை அவரது ஆன்மா அவரது கூட்டைவிட்டுப்பறந்துப்போய் விட்டதே." என்று மிகவும் வருத்ததுடன் சொன்னார்.


இது அவர் மனைவிக்கு என்று செய்யவில்லை அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார் ஏனென்றால் அவர் எல்லாரிடத்திலும் எல்லா ஆன்மாவிலும் அந்த்த்தேவியையே காண ஆரம்பித்தார்.


அன்னை சாரதாதேவி தன் கணவரைப் பைத்தியம் என்றுச்சொன்னவர்களை நினைத்துப்பார்த்தார். "இவரையா மனநிலை சரியில்லாதவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என் உடல் நிலைக்குறித்து எத்தனைக்கவலையுடன்
அக்கறையுடன் சேவை செய்கிறார் என் கணவர். இவர் என் அன்புத்தெய்வம் அல்லவா"! என்று வியந்துப்போனாள்.


தன் பெண் மகிழ்ச்சியாக கணவருடன் இருப்பதைப்பார்த்து அவரது தந்தை திருராம்சந்திரரும் மனம் மகிழ்ந்தார் ,தன் ஊர் திரும்பியதும் தன் மகள் மாமியாருக்கும் அந்தகுடும்பத்திற்கும் ந்ல்ல பெயர் எடுத்துத்தருவாள் என்று எல்லோரிடமும் மனம் நிறைந்து சொன்னார்.


அன்னையின் உடல் சற்றுத்தேறியதும் அவள் தன் மாமியார் இருக்கும் இடம் வந்துச்சேர்ந்தாள் , ஒருவருடம் ஓடியது ,ஸ்ரீராமகிருஷணர் அவரைப்பார்க்க வரவில்லை இதேபோல் நான்கு வருடங்கள் கழிந்தன .வீட்டில் காலையிலிருந்து மாட்டுக்குத்தீனி வைப்பதும் வீட்டை மெழுகி சுத்தம் செய்வதும்.


அம்மியில் அரைப்பதும் ஆற்றிலிருந்து தண்ணீர் குடம் குடமாக தூக்கிவருவதும் ,,பின் சமையல் செய்வதும் பெரியவர்களுக்குச்சேவை செய்வதும் என்று பல தரப்பட்ட வேலைகள்,,,,,,,,,,,,,


இதுவே அவரது கோயில் பூஜை எல்லாம் எப்போதும் தன் கணவரைத்தெய்வமாக நினைத்து மானசிகமாகவே பூஜிப்பார்.அந்தச்சிறுவயதில் வாழ்க்கையின் இன்பங்களைக்காணாது.


கணவரிடமிருந்து தூர விலகி கர்மமே கண்ணாயினாய் என்பதுக்கொப்ப தன் புக்ககத்தில் இருந்தது எத்தனைப்பெரிய தியாகம் !


கடவுளுக்கே இது பொறுக்கவில்லை போலும் ,,கணவரிடம் ,,போக ஒரு வாய்ப்பு கொடுத்தார் போலும் ,,ஒருதடவை அவருக்கு தன் கணவரிடம் போக வாய்ப்பு வந்தது உடனே தக்ஷிணேஸ்வர் கிளம்பினார் 1872வது ஆண்டு ஐந்துவருடங்கள்பிறகு அவரைக்காண செல்கிறார் மனதிலே பல எண்ணங்கள் ,வீடு வந்தது அன்னை சாரதா தன் கணவரைத்தேடினார் பின் மாடி ஏறி வந்து தன் கணவரைப்பார்த்தார்.


இந்தத்தடவை கணவர் அவரைக்கண்டு ஓடிவரவில்லை. அங்கு ஸ்ரீராமகிருஷ்ணர் காளியின் முன் ஒரு மயக்க நிலையில் இருந்தார் இவர் வந்ததுக்கூட அவருக்குத்தெரியவில்லை ,,அங்கு இருந்த சில சிஷ்யர்கள்
"அம்மா இப்பொழுதெல்லாம அவர் எப்போதும் தியானநிலையில் தான் இருக்கிறார் ,தியானத்திலிருந்து விடுப்பட்டு வந்தவுடன் பஜனை ஆரம்பித்துவிடும் பசி தாகம் ஒன்றும் இல்லாமல் இப்படியே காளிமாதாவின் அருகில் அமர்ந்தபடி இருக்கிறார்" என்றனர்.


அன்னை அங்கு வந்தப்பின் அவரைக்கவனிக்கும் வேலையும் அவருடன் நிழற்போல் எல்லாவற்றிலும் பங்குக்கொள்ளும் வேலையையும் மனதார ஏற்றுக்கொண்டாள், குருஜி வீட்டில் இருந்தாரே தவிர எப்போதும் தெய்வீகச்சந்திப்பு என்ற வீட்டிலேயே இருந்ததை அன்னை உணர்ந்தார் ,அவருக்குத்தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது
என்றும் தெரியாத ஒரு சமாதிநிலை.


சமாதிநிலை முடிந்து சில நேரங்கள் வெளியே வந்தால் அன்னையுடன் ஆன்மீகம் பற்றி பேசுவார் பஜனையில் பங்கு பெற்று பிரசாதங்கள் வழங்க அன்னை ஏற்பாடுசெய்வார். நாளடைவில் ஸ்ரீராமகிருஷணர் அன்னை சாரதாமணியை தன் இஷ்ட தெய்வமான அன்னைக்காளியாகவே பார்க்க ஆரம்பித்தார் அன்னைசாரதாவின் முகத்தில் காளியே சாந்தமாக அவரைப்பார்ப்பதை அவர் உணர்ந்தார்.


பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=சாரதாமணி_அம்மையார்&oldid=707" இருந்து மீள்விக்கப்பட்டது