"சீதாலட்சுமி - நினைவலைகள் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("சீதாலட்சுமி - நினைவலைகள் 2" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))
வரிசை 1: வரிசை 1:
 
இக்கட்டுரைகள் சீதாலட்சுமி அவர்களால் மின்தமிழ் மடலாடல் குழுவில் எழுதப்பட்டவை.  
 
இக்கட்டுரைகள் சீதாலட்சுமி அவர்களால் மின்தமிழ் மடலாடல் குழுவில் எழுதப்பட்டவை.  
  
சீதாலட்சுமி: மின்னஞ்சல்: <br>
+
சீதாலட்சுமி: மின்னஞ்சல்: <br>  
  
 
----
 
----
  
== பகுதி 10 ==
+
== பகுதி 10 ==
 
+
 
+
  
 
அம்மாவின் அறிவுரைகளில் சில -“பணி செய்யும் பொழுது எளிய உடைகளுடன் இருப்பது நல்லது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தோற்றம் இருக்கக் கூடாது. கிராமத்தினரின் மதிப்பையும் நம்பிக்கையும் பெறும் வண்ணம் அவர்களுடன் பழக வேண்டும்.சாதி, மதம். அரசியல் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். குடும்பங்களுடன் ஒன்றிப் பழகினால் ,நாம் சொல்லுவதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். சின்னச் சின்ன பிரச்சனைளை முடிந்த மட்டும் தீர்க்க வேண்டும். பணிப் பட்டியலில் இல்லையே என்று எண்ணக் கூடாது. சமுதா யத்திற்கு நல்லது என்று நினைப்பதைச் செய்வது முக்கிய கடமையாக எண்ண வேண்டும். தன்னிடம் இருப்பதையும் கொடுத்து செய்யும் சேவையே சமுதாயப் பணி. அப்படியிருக்க சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்களின் கடமை இரட்டிப்பாகின்றது. முதலில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சமூக சேவை புனிதமான பணி.” இதயத்தில் பதிவு செய்து கொண்டேன்.  
 
அம்மாவின் அறிவுரைகளில் சில -“பணி செய்யும் பொழுது எளிய உடைகளுடன் இருப்பது நல்லது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தோற்றம் இருக்கக் கூடாது. கிராமத்தினரின் மதிப்பையும் நம்பிக்கையும் பெறும் வண்ணம் அவர்களுடன் பழக வேண்டும்.சாதி, மதம். அரசியல் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். குடும்பங்களுடன் ஒன்றிப் பழகினால் ,நாம் சொல்லுவதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். சின்னச் சின்ன பிரச்சனைளை முடிந்த மட்டும் தீர்க்க வேண்டும். பணிப் பட்டியலில் இல்லையே என்று எண்ணக் கூடாது. சமுதா யத்திற்கு நல்லது என்று நினைப்பதைச் செய்வது முக்கிய கடமையாக எண்ண வேண்டும். தன்னிடம் இருப்பதையும் கொடுத்து செய்யும் சேவையே சமுதாயப் பணி. அப்படியிருக்க சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்களின் கடமை இரட்டிப்பாகின்றது. முதலில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சமூக சேவை புனிதமான பணி.” இதயத்தில் பதிவு செய்து கொண்டேன்.  
  
 
+
<br>
  
 
சுதந்திரப்போராட்டத்தின் பொழுது மக்களிடையே ஒரு வேகம் இருந்தது. பெண்களும் நிறைய பங்கு கொண்டனர். அந்த வேகத்துடன் மகளிர் நலப்பணிகளும் ஆரம்பமாயின. துர்க்கா பாய் தேஷ்முக்கின் சாதனைகள் வரலாற்றில் ஆழப்பதிந்தி ருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் பொழுது போர் வீரர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பொருட்கள் சேகரிக்கப் பட்டு அனுப்பப்பட்டன. அதனை வெற்றியுடன் செய்த திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் ஆரம்பித்ததுதான் மகளிர்நலத் துறை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , அம்புஜம்மாள், மஞ்சுபாஷிணி அவர்கள், கிளப்வாலா ஜாதவ் அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருமதி. சரோஜினி வரதப்பன் இன்னும் பல பெண்கள் சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள்.  
 
சுதந்திரப்போராட்டத்தின் பொழுது மக்களிடையே ஒரு வேகம் இருந்தது. பெண்களும் நிறைய பங்கு கொண்டனர். அந்த வேகத்துடன் மகளிர் நலப்பணிகளும் ஆரம்பமாயின. துர்க்கா பாய் தேஷ்முக்கின் சாதனைகள் வரலாற்றில் ஆழப்பதிந்தி ருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் பொழுது போர் வீரர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பொருட்கள் சேகரிக்கப் பட்டு அனுப்பப்பட்டன. அதனை வெற்றியுடன் செய்த திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் ஆரம்பித்ததுதான் மகளிர்நலத் துறை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , அம்புஜம்மாள், மஞ்சுபாஷிணி அவர்கள், கிளப்வாலா ஜாதவ் அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருமதி. சரோஜினி வரதப்பன் இன்னும் பல பெண்கள் சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள்.  
வரிசை 19: வரிசை 17:
 
<br>அந்தக்காலத்தின் காந்தீய உணர்வை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன் காந்திக் கட்சி என்றுதான் நினைப்பேன். கதர்த்துணி அணிந்தவர் யாராவது குடிப்பதைப் பார்த்தால் சண்டைக்குப் போய் விடுவேன். “கதர்த் துணியைக் கழற்று. அதைப் போட்டுக் கொண்டு அயோக்கியத்தனம் செய்யாதே “ என்று கத்துவேன். அது சீருடையன்று.  
 
<br>அந்தக்காலத்தின் காந்தீய உணர்வை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன் காந்திக் கட்சி என்றுதான் நினைப்பேன். கதர்த்துணி அணிந்தவர் யாராவது குடிப்பதைப் பார்த்தால் சண்டைக்குப் போய் விடுவேன். “கதர்த் துணியைக் கழற்று. அதைப் போட்டுக் கொண்டு அயோக்கியத்தனம் செய்யாதே “ என்று கத்துவேன். அது சீருடையன்று.  
  
<br>பெரும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அவர் வழி நடக்கின்றோம் என்று கூறிக்கொண்டு சுய நலத்துடனும், சுரண்டலும் செய்து கொண்டு இருப்பவரைப் பார்க்கும் பொழுது இந்த வயதிலும் அன்று கண்ணகிக்கு இருந்த சக்தி வரக்கூடாதா என்று துடிப்பேன். <br>ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ <br>தரும மொன்றி யற்றிலாய் போ போ போ <br>நீதி நூறு சொல்லுவாய் காசொன்று <br>நீட்டினால் வணங்குவாய் போ போ போ <br>தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே <br>தீமை நிற்கிலோடுவாய் போ போ போ <br>சோதி மிக்க மணியிலே காலத்தால் <br>சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ <br>அன்றே முழக்கமிட்டான் பாரதி. இன்றையச் சூழலில் சுயநலத்துடன் அலைவோரைப் பார்க்கும் பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று சேர்ந்து பொங்குவோமா? சாதியை ஒழிப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான சாதிகளும் அதனால் சண்டைகளும் தோன்றி சமுதாயம் அமைதியை இழக்க ஆரம்பித்துவிட்டதே! இதற்குப் பொறுப்பானவர்களை என்னவென்று அழைப்பது?  
+
<br>பெரும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அவர் வழி நடக்கின்றோம் என்று கூறிக்கொண்டு சுய நலத்துடனும், சுரண்டலும் செய்து கொண்டு இருப்பவரைப் பார்க்கும் பொழுது இந்த வயதிலும் அன்று கண்ணகிக்கு இருந்த சக்தி வரக்கூடாதா என்று துடிப்பேன். <br>
 +
<blockquote>
 +
 
 +
 
 +
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ <br>தரும மொன்றி யற்றிலாய் போ போ போ <br>நீதி நூறு சொல்லுவாய் காசொன்று <br>நீட்டினால் வணங்குவாய் போ போ போ <br>தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே <br>தீமை நிற்கிலோடுவாய் போ போ போ <br>சோதி மிக்க மணியிலே காலத்தால் <br>சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ <br>
 +
 
 +
 
 +
</blockquote>
 +
அன்றே முழக்கமிட்டான் பாரதி. இன்றையச் சூழலில் சுயநலத்துடன் அலைவோரைப் பார்க்கும் பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று சேர்ந்து பொங்குவோமா? சாதியை ஒழிப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான சாதிகளும் அதனால் சண்டைகளும் தோன்றி சமுதாயம் அமைதியை இழக்க ஆரம்பித்துவிட்டதே! இதற்குப் பொறுப்பானவர்களை என்னவென்று அழைப்பது?  
  
<br>ஆங்கிலேயன் நம்மை அடிமைப் படுத்தி நாட்டைச் சுரண்டி னான். ஆனால் சில நன்மைகளும் ஏற்பட்டன என்பதை மறுப்பதிற்கில்லை. துண்டு துண்டாக இருந்து, நமக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை மாற்றி ஒன்றுபடுத்தி ஓர் இந்தியாவை உருவாக்கிக் கொடுத்தானே! அன்னியன் செய்த நன்மையை இப்பொழுது அழிக்க ஆரம்பித்திருக் கின்றோம். <br>”கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? ” - இதுவும் பாரதி பாடியதே!
+
<br>ஆங்கிலேயன் நம்மை அடிமைப் படுத்தி நாட்டைச் சுரண்டி னான். ஆனால் சில நன்மைகளும் ஏற்பட்டன என்பதை மறுப்பதிற்கில்லை. துண்டு துண்டாக இருந்து, நமக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை மாற்றி ஒன்றுபடுத்தி ஓர் இந்தியாவை உருவாக்கிக் கொடுத்தானே! அன்னியன் செய்த நன்மையை இப்பொழுது அழிக்க ஆரம்பித்திருக் கின்றோம். <br>
  
 +
”கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? ” - இதுவும் பாரதி பாடியதே!
  
 +
<br>
  
நம்மை நாம் நமக்காக ஆண்டு கொண்டிருக்கின்றோம். ஒரு வினாடி யாவது மனச்சாட்சியுடன் இருந்து பார்ப்போமே! நம்மால் முடியாது. அந்த ஒரு வினாடியிலும் குறுக்கு வழியில் ஆதாயம் தேடிப் போகும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது மனம். வரலாற்றை என்ன தான் நாம் மாற்றி எழுதினாலும் உண்மை சாகாது. ஒரு நாள் விழித்தெழுந்து கைகொட்டிச் சிரிக்கும். “அப்பொழுது நான் இருக்க மாட்டேன்” என்கின்றாயா ? நம் சந்ததிகளுக்கு இந்த அவமானத்தையா சேர்த்து வைப்பது? காலம்தான் பதில் சொல்ல முடியும்.நான் குறிப்பிட்டு யாரையும் குறை கூறவில்லை. தவறு செய்கின் றவன் மறைத்துச் செய்யவில்லை. எல்லோருக்கும் தெரிந்தே செய்கின்றான்.  
+
நம்மை நாம் நமக்காக ஆண்டு கொண்டிருக்கின்றோம். ஒரு வினாடி யாவது மனச்சாட்சியுடன் இருந்து பார்ப்போமே! நம்மால் முடியாது. அந்த ஒரு வினாடியிலும் குறுக்கு வழியில் ஆதாயம் தேடிப் போகும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது மனம். வரலாற்றை என்ன தான் நாம் மாற்றி எழுதினாலும் உண்மை சாகாது. ஒரு நாள் விழித்தெழுந்து கைகொட்டிச் சிரிக்கும். “அப்பொழுது நான் இருக்க மாட்டேன்” என்கின்றாயா&nbsp;? நம் சந்ததிகளுக்கு இந்த அவமானத்தையா சேர்த்து வைப்பது? காலம்தான் பதில் சொல்ல முடியும்.நான் குறிப்பிட்டு யாரையும் குறை கூறவில்லை. தவறு செய்கின்றவன் மறைத்துச் செய்யவில்லை. எல்லோருக்கும் தெரிந்தே செய்கின்றான்.  
  
 
<br>பாரதியின் எட்டயபுரம் என்னை வளர்த்தது. காந்திகிராமம் எனக்குப் பயிற்சி கொடுத்தது. அதுதான் இக்காலத்துக்குப் பொருந்தாமல் புலம்புகின்றேன். பணிக்களத்தில் வேகத்தை விட விவேகம் வேண்டும்.  
 
<br>பாரதியின் எட்டயபுரம் என்னை வளர்த்தது. காந்திகிராமம் எனக்குப் பயிற்சி கொடுத்தது. அதுதான் இக்காலத்துக்குப் பொருந்தாமல் புலம்புகின்றேன். பணிக்களத்தில் வேகத்தை விட விவேகம் வேண்டும்.  
வரிசை 35: வரிசை 43:
 
<br>திருச்சி வானொலி நிலையத்தார் திண்டுக்கல் வந்து நேரடியாக ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய இருந்தார்கள். அதன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கிராமீயக் கலைஞர்களை திண்டுக்கல் வரவழைத்து மேடையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொது மக்கள் பார்வையாளர்கள். புதியவள் என்று தயங்காமல் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு செய்தேன். கிராமம் கிராமமாகச் சென்று கலைஞர் களைச் சந்தித்து, அங்கேயே அவர்களை பாடச் சொல்லி ஆடச் சொல்லி, சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு திரையரங்கிலுள்ள மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தினோம். எல்லோராலும் பாராட்டப்பட்டதுடன் எனக்கு வானொலி அறிமுகமும் கிடைத்தது. அத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் நிறையக் கற்க முடிந்தது..பஞ்சம்பட்டி கிராமம் மறக்க முடியாது. அங்குதான் நிறையப் பாடல்கள் கற்றுக் கொண்டேன். திண்டுக்கல்லிடம் விடை பெற்றேன்.  
 
<br>திருச்சி வானொலி நிலையத்தார் திண்டுக்கல் வந்து நேரடியாக ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய இருந்தார்கள். அதன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கிராமீயக் கலைஞர்களை திண்டுக்கல் வரவழைத்து மேடையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொது மக்கள் பார்வையாளர்கள். புதியவள் என்று தயங்காமல் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு செய்தேன். கிராமம் கிராமமாகச் சென்று கலைஞர் களைச் சந்தித்து, அங்கேயே அவர்களை பாடச் சொல்லி ஆடச் சொல்லி, சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு திரையரங்கிலுள்ள மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தினோம். எல்லோராலும் பாராட்டப்பட்டதுடன் எனக்கு வானொலி அறிமுகமும் கிடைத்தது. அத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் நிறையக் கற்க முடிந்தது..பஞ்சம்பட்டி கிராமம் மறக்க முடியாது. அங்குதான் நிறையப் பாடல்கள் கற்றுக் கொண்டேன். திண்டுக்கல்லிடம் விடை பெற்றேன்.  
  
<br>'''வாடிப்பட்டி '''<br>
+
<br>'''வாடிப்பட்டி '''<br>  
  
 
ஐந்தாண்டுகளில் நான் முற்றிலும் மாறினேன். வாழ்க்கை அரங்கத்தில் எனக்குப் பல வேடங்கள் கிடைத்தன. எனக்கு ஏணிப்படியைத் தந்தது அந்த கிராமம். போராட்டங்கள் கூட இனித்தன. சுவையான அனுபவங்கள். இலக்கியத்தரம் வாய்ந்த நட்புகள். என் திறமைகளை எனக்கே எடுத்துக் காட்டியது அந்த சின்ன கிராமம்.  
 
ஐந்தாண்டுகளில் நான் முற்றிலும் மாறினேன். வாழ்க்கை அரங்கத்தில் எனக்குப் பல வேடங்கள் கிடைத்தன. எனக்கு ஏணிப்படியைத் தந்தது அந்த கிராமம். போராட்டங்கள் கூட இனித்தன. சுவையான அனுபவங்கள். இலக்கியத்தரம் வாய்ந்த நட்புகள். என் திறமைகளை எனக்கே எடுத்துக் காட்டியது அந்த சின்ன கிராமம்.  
வரிசை 43: வரிசை 51:
 
<br>வாடிப்பட்டியில் பணியில் சேர்ந்தேன். என்னுடைய பணிப்பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர். கூப்பிடுகின்ற வர்கள் எஸ். இ. ஓ அம்மா என்று அழைப்பார்கள். ஏற்கனவே கூறியிருந்தபடி சமூகக் கல்வி பொறுப்பில் முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஓர் ஆண் அமைப்பாளர் பதவி உண்டு. ஆனால் சில மாதங்கள் அது வெற்றிடமாக இருந்தது. அதன்பின் அந்த இடத்திற்கு வந்தவர் பெயர் ருத்ரதுளசிதாஸ். இளம்பாரதி என்ற புனைபெயரும் உண்டு. பிற்காலத்தில் சாகித்ய அக்காடமி விருது முதல் பல விருதுகள் வாங்கியவர். 47 புத்தகங்களுக்குச் சொந்தமானவர். அவர் வேலைக்கு வந்த பொழுது சாந்தமான நல்ல பிள்ளை. நான்தான் சுட்டிப் பெண்.  
 
<br>வாடிப்பட்டியில் பணியில் சேர்ந்தேன். என்னுடைய பணிப்பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர். கூப்பிடுகின்ற வர்கள் எஸ். இ. ஓ அம்மா என்று அழைப்பார்கள். ஏற்கனவே கூறியிருந்தபடி சமூகக் கல்வி பொறுப்பில் முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஓர் ஆண் அமைப்பாளர் பதவி உண்டு. ஆனால் சில மாதங்கள் அது வெற்றிடமாக இருந்தது. அதன்பின் அந்த இடத்திற்கு வந்தவர் பெயர் ருத்ரதுளசிதாஸ். இளம்பாரதி என்ற புனைபெயரும் உண்டு. பிற்காலத்தில் சாகித்ய அக்காடமி விருது முதல் பல விருதுகள் வாங்கியவர். 47 புத்தகங்களுக்குச் சொந்தமானவர். அவர் வேலைக்கு வந்த பொழுது சாந்தமான நல்ல பிள்ளை. நான்தான் சுட்டிப் பெண்.  
  
 +
<br>
  
 
+
== பகுதி 11 ==
== பகுதி 11 ==
+
 
+
 
+
  
 
1957 - சுதந்திரம் பெற்று பத்தாண்டுகள் கழிந்து விட்டன. எப்படி <br>இருக்கின்றோம்? ஊன்றிப் பார்க்க வேண்டியது நம் வரலாறு. <br>. <br>பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் 32 வட்டாரங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் வாடிப்பட்டி வட்டாரம். மதுரையிலிருந்து 16 மைல் (அப்பொழுது மைல்கள் என்றுதான் கூறுவோம்) தூரத்தில் மதுரை திண்டுக்கல் பாதையில் அமைந்திருந்தது. ஊழியர்களின் அமைப்பு முன் சொன்னதே தான். நான் வேலையில் சேர்ந்த பொழுது சமூகக் கல்வி அமைப்பாளர் (ஆண்) பதவி காலியாக இருந்தது. இரு பொறுப்புகளும் நானே பார்த்தேன். என் அணுகுமுறையைப் பார்க்கலாம். ஒரு மாலைப் பொழுதில் ஒரு கிராமம் சென்றேன். அதுதான் முதலில் செல்லும் நாள். எனக்கு யாரையும் தெரியாது. வயலிலிருந்து இன்னும் பலர் திரும்பவில்லை. நடமாடிக் கொண்டிருந்த சிலர் என்னை வியப்புடன் பார்த்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அப்பொழுதுதான் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள். அம்மா வந்து சமைக்க வேண்டும். இரவில்தான் சுடுசோறு கிடைக்கும். எனவே குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே போய்க் குழந்தைகளுடன் பேச்சுக் கொடுத்தேன். சீக்கிரம் நண்பர்களாகி விட்டனர். அங்கே இருந்த ஒரு மரத்தையொட்டி மேடொன்று இருந்தது. அதில் போய் உட்கார்ந்து கொண்டு கதைபேச ஆரம்பித்தேன். புதியவளின் வருகை, வந்தவுடன் சிறு பிள்ளைகளுடன் பழகுவதைப் பார்க்கவும் பிள்ளை பிடிப்பவளோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம். அவர்கள் முகபாவம் சரியில்லை.. அவர்களில் ஒருவர் அருகில் வந்து “நீங்க யாரும்மா?” என்று கேட்டார். “நான் உங்க ஊர் எஸ்.இ.ஓ அம்மா‘ (Social Education Organiser) என்று சொல்லி அலுவலகம் பற்றியும் கூறவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது பிள்ளைகளைப் பாடச் சொன்னேன். பாடினார்கள். என்னைப் பார்த்து “டீச்சர் நீங்களும் ஒரு பாட்டு பாடுங்களேன் “ என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்தேன். தயங்காமல் “முருகா நீ வர வேண்டும் “ என்ற பாட்டைப் பாடினேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. இன்னொரு பாட்டையும் பாடினேன். பாட்டை நிறுத்தி அவ்வூர் பிரச்சனைகளை யதார்த்தமாகக் கேட்பது போல் பேச்சைத் தொடங்கினேன் .இருட்ட ஆரம்பித்தது. யாரோ ஒருவர் ஹரிக்கேன் லைட் கொண்டு வந்து வைத்தார். மின் இணைப்பு இன்னும் அவர்கள் ஊருக்கு வர வில்லை.  
 
1957 - சுதந்திரம் பெற்று பத்தாண்டுகள் கழிந்து விட்டன. எப்படி <br>இருக்கின்றோம்? ஊன்றிப் பார்க்க வேண்டியது நம் வரலாறு. <br>. <br>பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் 32 வட்டாரங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் வாடிப்பட்டி வட்டாரம். மதுரையிலிருந்து 16 மைல் (அப்பொழுது மைல்கள் என்றுதான் கூறுவோம்) தூரத்தில் மதுரை திண்டுக்கல் பாதையில் அமைந்திருந்தது. ஊழியர்களின் அமைப்பு முன் சொன்னதே தான். நான் வேலையில் சேர்ந்த பொழுது சமூகக் கல்வி அமைப்பாளர் (ஆண்) பதவி காலியாக இருந்தது. இரு பொறுப்புகளும் நானே பார்த்தேன். என் அணுகுமுறையைப் பார்க்கலாம். ஒரு மாலைப் பொழுதில் ஒரு கிராமம் சென்றேன். அதுதான் முதலில் செல்லும் நாள். எனக்கு யாரையும் தெரியாது. வயலிலிருந்து இன்னும் பலர் திரும்பவில்லை. நடமாடிக் கொண்டிருந்த சிலர் என்னை வியப்புடன் பார்த்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அப்பொழுதுதான் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள். அம்மா வந்து சமைக்க வேண்டும். இரவில்தான் சுடுசோறு கிடைக்கும். எனவே குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே போய்க் குழந்தைகளுடன் பேச்சுக் கொடுத்தேன். சீக்கிரம் நண்பர்களாகி விட்டனர். அங்கே இருந்த ஒரு மரத்தையொட்டி மேடொன்று இருந்தது. அதில் போய் உட்கார்ந்து கொண்டு கதைபேச ஆரம்பித்தேன். புதியவளின் வருகை, வந்தவுடன் சிறு பிள்ளைகளுடன் பழகுவதைப் பார்க்கவும் பிள்ளை பிடிப்பவளோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம். அவர்கள் முகபாவம் சரியில்லை.. அவர்களில் ஒருவர் அருகில் வந்து “நீங்க யாரும்மா?” என்று கேட்டார். “நான் உங்க ஊர் எஸ்.இ.ஓ அம்மா‘ (Social Education Organiser) என்று சொல்லி அலுவலகம் பற்றியும் கூறவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது பிள்ளைகளைப் பாடச் சொன்னேன். பாடினார்கள். என்னைப் பார்த்து “டீச்சர் நீங்களும் ஒரு பாட்டு பாடுங்களேன் “ என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்தேன். தயங்காமல் “முருகா நீ வர வேண்டும் “ என்ற பாட்டைப் பாடினேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. இன்னொரு பாட்டையும் பாடினேன். பாட்டை நிறுத்தி அவ்வூர் பிரச்சனைகளை யதார்த்தமாகக் கேட்பது போல் பேச்சைத் தொடங்கினேன் .இருட்ட ஆரம்பித்தது. யாரோ ஒருவர் ஹரிக்கேன் லைட் கொண்டு வந்து வைத்தார். மின் இணைப்பு இன்னும் அவர்கள் ஊருக்கு வர வில்லை.  
  
 
+
<br>
  
 
வேலைகளிலிருந்து பெண்களும் ஆண்களும் திரும்ப ஆரம்பித்தனர். பெண்மணிகள் சமைக்கப் போனதால் ஆண்கள் தான் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். சில பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிமுறைகள் கூறினேன். சிறுவர்கள் வீட்டிற்குப் போக ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சில பெண்கள் வந்தனர். பெண்களிடம் அவர்கள் குடும்பங் களைப் பற்றியும் , ஊரில் இருக்கும் வசதிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். ஒருத்தி என்னிடம் அவர்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தாள்.. உடனே, “ எங்க வீடுகள்ளே சாப்பிடுவீங்களா? என்ற ஒரு கேள்வியும் கேட்டாள். “யார் வீட்டிலும் நான் சாப்பிடுவேன். கவிச்சை மட்டும் சாப்பிட மாட்டேன்” என்றேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. இன்னொருத்தி “எங்க வீட்லே காய்கறிச் சமையல்தான் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க “ என்று அழைத்தாள். விருந்தோம்பல் பண்பு இன்னும் போகவில்லை. ஆனால் சாதிஉணர்வு மட்டும் வேரூன்றி இருந்தது. அதனை யொட்டிய பயமும் தெரிந்தது.அய்யாவை நினைத்துக் கொண்டேன். பல வீடுகளுக்குச் சென்று சில நிமிடங்கள் இருந்து பேசினேன். எல்லோருக்கும் சந்தோஷம். கடைசியில் சாப்பிடக் கூப்பிட்டவள் வீட்டிற்குச் சென்றேன். ஒரு தட்டைக் கழுவி எடுத்து வந்தவள் தயங்கி, “ அம்மா, இலை இல்லை. எங்க தட்லே சாப்பிடுவீங்களா? நல்லா கழுவிட்டேன் “ என்று அவள் கூறவும் என் மனம் வாடியது. ஏ சமுதாயமே, என்ன கொடுமை. மனிதன் பிறக்கும் பொழுது சாதி இல்லையே, இந்தக் கொடுமை எப்பொழுது, எப்படி நேர்ந்தது?  
 
வேலைகளிலிருந்து பெண்களும் ஆண்களும் திரும்ப ஆரம்பித்தனர். பெண்மணிகள் சமைக்கப் போனதால் ஆண்கள் தான் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். சில பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிமுறைகள் கூறினேன். சிறுவர்கள் வீட்டிற்குப் போக ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சில பெண்கள் வந்தனர். பெண்களிடம் அவர்கள் குடும்பங் களைப் பற்றியும் , ஊரில் இருக்கும் வசதிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். ஒருத்தி என்னிடம் அவர்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தாள்.. உடனே, “ எங்க வீடுகள்ளே சாப்பிடுவீங்களா? என்ற ஒரு கேள்வியும் கேட்டாள். “யார் வீட்டிலும் நான் சாப்பிடுவேன். கவிச்சை மட்டும் சாப்பிட மாட்டேன்” என்றேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. இன்னொருத்தி “எங்க வீட்லே காய்கறிச் சமையல்தான் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க “ என்று அழைத்தாள். விருந்தோம்பல் பண்பு இன்னும் போகவில்லை. ஆனால் சாதிஉணர்வு மட்டும் வேரூன்றி இருந்தது. அதனை யொட்டிய பயமும் தெரிந்தது.அய்யாவை நினைத்துக் கொண்டேன். பல வீடுகளுக்குச் சென்று சில நிமிடங்கள் இருந்து பேசினேன். எல்லோருக்கும் சந்தோஷம். கடைசியில் சாப்பிடக் கூப்பிட்டவள் வீட்டிற்குச் சென்றேன். ஒரு தட்டைக் கழுவி எடுத்து வந்தவள் தயங்கி, “ அம்மா, இலை இல்லை. எங்க தட்லே சாப்பிடுவீங்களா? நல்லா கழுவிட்டேன் “ என்று அவள் கூறவும் என் மனம் வாடியது. ஏ சமுதாயமே, என்ன கொடுமை. மனிதன் பிறக்கும் பொழுது சாதி இல்லையே, இந்தக் கொடுமை எப்பொழுது, எப்படி நேர்ந்தது?  
  
<br>மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதமே கிடையாத பொழுது சாதி மட்டும் எப்படி வரும்? <br>“ நான் சாப்பிடுவேன். எனக்கு சாதி கிடையாதும்மா ?” என்றேன். முகம் மலர்ந்து உணவு படைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் சில பெண்கள் வந்தார்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். இருட்டிவிட்டதால் பஸ்ஸில் ஏற்றி விட ஊர்க்காரர்கள் சிலர் வந்தனர். இன்றைய சம்பவம் காட்டிய செய்தியைப் பார்ப்போம். சுதந்திரம் வந்து பத்தாண்டுகள் கழித்தும் மின் இணைப்பு இல்லாத கிராமங்களா, அப்படியென்றால் வளர்ச்சிப் பணிகள் சரியாக நடைபெற வில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். விளக்கம் கூற வேண்டியது என் கடமை. சுதந்திரம் கிடைத்து ஆட்சியில் உட்கார்ந்தவர்கள் சுதந்திரத் திற்காகப் போரடியவர்கள். கிடைத்த சுதந்திரத்தைப் பாதுக்காக்க வேண்டுமென்ற அக்கறையுடன் என்னென்ன அடிப்படை தேவைகள் எதுவோ அவைகளில் கவனம் செலுத்தினார்கள். மதிப்பிற்குரிய டாக்டர். அம்பேத்கார் அவர்கள் சட்டங்கள் எழுதினார். அவர் யார்? ஒரு தலித். அந்த அறிவுஜீவியின் படைப்புதான் இன்றும் நாட்டில் இருக்கின்றது. சட்டங்கள் தீட்டிய பின்னர் வளர்ச்சித் திட்டங்களில்தான் கவனம் செலுத்தினர். அணைகள், பாதைகள், மருத்துவ மையங்கள், பள்ளிகள் போன்றவை கட்டப்பட்டன. தேவைகள் அதிகம் . மக்கள் கூட்டமும் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலை என்பார் முன்னால் ஜனாதிபதி, அந்த நாள் தமிழ்நாடு தொழில் அமைச்சர் திரு வெங்கட் ராமன் அவர்கள். மின்னிணைப்பும் கொடுத்துக்கொண்டு வந்தனர். ஆனால் தன்னிறைவு பெறவில்லை. மின்னுற்பத்தி போதவில்லை. இன்றும் அதில் கஷ்டப்படுகின்றோம். ஒரு பக்கம் மின் உற்பத்தி அதிகப்படுத்தும் முயற்சி, இன்னொருபக்கம் தேவைகள் அதைவிட வேகமாக வளர்கின்றது. ஆக. அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப் பட்டது.மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தவர்கள் நதிகளைத் தேசிய உடமையாக்கியிருந்தால் இன்று தமிழகம் தண்ணீருக்காக அல்லல்பட வேண்டியிருந்திருக்காது. மனிதன் ஒரு பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் சுலபத்தில் மாற்றமாட்டான். முடியாது. விவசாயம் மிகவும் இன்றியமையாதது. உற்பத்தியை அதிகப் படுத்த, நாற்று நடுவது முதற்கொண்டு ஜப்பானீய முறை என்ற புதிய உத்திகள், புதிய உரங்கள் அரசு பரிந்துரைத்தன. மாடுகள், கோழிகளில் உயர் சாதி கொடுத்து கலப்பினம் உருவாக்க உதவி செய்தனர். கூட்டுறவு முறையின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதன் மூலம் ஒருங்கிணந்த பல திட்டங்கள் உருவாக்க முனைந்தனர். இவைகளில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட பயிற்சி முகாம்கள் மூன்று நாள்கள், ஐந்து நாள்கள் நடந்தன. அதிகாரி முதல் எல்லோரும் வந்து பயிற்சி கொடுக்க வேண்டும். சிலர் கிராமத்திலேயே தங்க வேண்டும். வசதிகளை எண்ணித் தயங்க முடியாது. பள்ளியின் தரையில் அல்லது பெஞ்சுகளில் படுத்துக்கொள்வோம். ஒரே அறையில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் என்று தங்குவோம். முக்கியமான ஒரு தகவலை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அன்று பாதை போட வேண்டுமென்றால், பள்ளிக் கட்டடம் கட்டவேண்டுமென்றால் அரசு பாதிப்பணம் தான் கொடுக்கும். மீதிப் பாதிக்கு அந்த ஊர்மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.என்ன அருமையான விதிகள் இருந்தன! இதனால் இருந்த பயன்களைப் பார்ப்போம். அன்று இலவசங்களைத் தேடவில்லை. கூலிவேலைக்கு மக்களே வேலை செய்யலாம் இதற்குப் பெயர் ‘சிரமதானம்”.மண் சுமக்க, கல் சுமக்க எல்லோரும் வருவார்கள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை கலந்து கொண்டு மண் சுமப்பார்கள். அங்கே சாதி, மதம், மொழி, அந்தஸ்து எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் ஓரினம். ஒன்றாக உழைத்தோம். அய்யா பெரியாரின் முழக்கம் அங்கும் உண்டு.  
+
<br>மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதமே கிடையாத பொழுது சாதி மட்டும் எப்படி வரும்? <br>“ நான் சாப்பிடுவேன். எனக்கு சாதி கிடையாதும்மா&nbsp;?” என்றேன். முகம் மலர்ந்து உணவு படைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் சில பெண்கள் வந்தார்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். இருட்டிவிட்டதால் பஸ்ஸில் ஏற்றி விட ஊர்க்காரர்கள் சிலர் வந்தனர். இன்றைய சம்பவம் காட்டிய செய்தியைப் பார்ப்போம். சுதந்திரம் வந்து பத்தாண்டுகள் கழித்தும் மின் இணைப்பு இல்லாத கிராமங்களா, அப்படியென்றால் வளர்ச்சிப் பணிகள் சரியாக நடைபெற வில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். விளக்கம் கூற வேண்டியது என் கடமை. சுதந்திரம் கிடைத்து ஆட்சியில் உட்கார்ந்தவர்கள் சுதந்திரத் திற்காகப் போரடியவர்கள். கிடைத்த சுதந்திரத்தைப் பாதுக்காக்க வேண்டுமென்ற அக்கறையுடன் என்னென்ன அடிப்படை தேவைகள் எதுவோ அவைகளில் கவனம் செலுத்தினார்கள். மதிப்பிற்குரிய டாக்டர். அம்பேத்கார் அவர்கள் சட்டங்கள் எழுதினார். அவர் யார்? ஒரு தலித். அந்த அறிவுஜீவியின் படைப்புதான் இன்றும் நாட்டில் இருக்கின்றது. சட்டங்கள் தீட்டிய பின்னர் வளர்ச்சித் திட்டங்களில்தான் கவனம் செலுத்தினர். அணைகள், பாதைகள், மருத்துவ மையங்கள், பள்ளிகள் போன்றவை கட்டப்பட்டன. தேவைகள் அதிகம் . மக்கள் கூட்டமும் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலை என்பார் முன்னால் ஜனாதிபதி, அந்த நாள் தமிழ்நாடு தொழில் அமைச்சர் திரு வெங்கட் ராமன் அவர்கள். மின்னிணைப்பும் கொடுத்துக்கொண்டு வந்தனர். ஆனால் தன்னிறைவு பெறவில்லை. மின்னுற்பத்தி போதவில்லை. இன்றும் அதில் கஷ்டப்படுகின்றோம். ஒரு பக்கம் மின் உற்பத்தி அதிகப்படுத்தும் முயற்சி, இன்னொரு பக்கம் தேவைகள் அதைவிட வேகமாக வளர்கின்றது. ஆக. அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை யளிக்கப் பட்டது.மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தவர்கள் நதிகளைத் தேசிய உடமையாக்கி யிருந்தால் இன்று தமிழகம் தண்ணீருக்காக அல்லல்பட வேண்டியிருந்திருக்காது. மனிதன் ஒரு பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் சுலபத்தில் மாற்றமாட்டான். முடியாது. விவசாயம் மிகவும் இன்றியமையாதது. உற்பத்தியை அதிகப் படுத்த, நாற்று நடுவது முதற்கொண்டு ஜப்பானீய முறை என்ற புதிய உத்திகள், புதிய உரங்கள் அரசு பரிந்துரைத்தன. மாடுகள், கோழிகளில் உயர் சாதி கொடுத்து கலப்பினம் உருவாக்க உதவி செய்தனர். கூட்டுறவு முறையின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதன் மூலம் ஒருங்கிணந்த பல திட்டங்கள் உருவாக்க முனைந்தனர். இவைகளில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட பயிற்சி முகாம்கள் மூன்று நாள்கள், ஐந்து நாள்கள் நடந்தன. அதிகாரி முதல் எல்லோரும் வந்து பயிற்சி கொடுக்க வேண்டும். சிலர் கிராமத்திலேயே தங்க வேண்டும். வசதிகளை எண்ணித் தயங்க முடியாது. பள்ளியின் தரையில் அல்லது பெஞ்சுகளில் படுத்துக்கொள்வோம். ஒரே அறையில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் என்று தங்குவோம். முக்கியமான ஒரு தகவலை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அன்று பாதை போட வேண்டுமென்றால், பள்ளிக் கட்டடம் கட்டவேண்டுமென்றால் அரசு பாதிப்பணம் தான் கொடுக்கும். மீதிப் பாதிக்கு அந்த ஊர்மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.என்ன அருமையான விதிகள் இருந்தன! இதனால் இருந்த பயன்களைப் பார்ப்போம். அன்று இலவசங்களைத் தேடவில்லை. கூலிவேலைக்கு மக்களே வேலை செய்யலாம் இதற்குப் பெயர் ‘சிரமதானம்”.மண் சுமக்க, கல் சுமக்க எல்லோரும் வருவார்கள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை கலந்து கொண்டு மண் சுமப்பார்கள். அங்கே சாதி, மதம், மொழி, அந்தஸ்து எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் ஓரினம். ஒன்றாக உழைத்தோம். அய்யா பெரியாரின் முழக்கம் அங்கும் உண்டு.  
  
 
<br>காங்கிரஸ் கட்சி, திராவிடக்கட்சி, திராவிட முன்னேற்றக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இருந்தன. ஆனால் பொதுப்பணி யில் அந்தப் பிரிவினைகள் பாதிப்பை உண்டாக்கவில்லை. எல்லோருக்கும் தங்கள் ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்த ஒருமித்த உணர்வு அன்று நல்ல காரியங்களின் பொழுதும் இருந்தது. ஊர் நன்மைக்கு வசூல் செய்யும் பணத்தில் கையாடல் செய்யாத பண்பு இருந்தது. ஏன் இப்பொழுதும் எல்லைப்புறச் சண்டைகள் யுத்தமாக மாறும் பொழுதும் ஒன்றுபடுகின்றோம். மற்ற நேரங்களில் முரண்பாடுகள். சுதந்திரப் போராட்டத்தின் பொழுது எப்படித் தங்களிடம் இருப்பதைப் பொது நன்மைக்காகக் கொடுத்தார்களோ அதே போல் திராவிடக் கட்சிகள் வளர்ந்த பொழுதும் தங்களிடம் இருக்கும் பாத்திர பண்டங்களைக் கூட அடகு வைத்துச்சோறு போட்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். முதலில் அடிமைத்தனம் போக்கத் துடித்தோம். அடுத்து சாதி என்ற கொடுமையிலிருந்து விடுபடும் எழுச்சியில் ஒன்றுபடும் உண்மையை உணர முடிந்தது. அய்யா அவர்களோ அல்லது அறிஞர் அண்ணா அவர்களோ ஊருக்கு வந்தால் கூட்டம் வரும் அப்பொழுது வருகின்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இல்லாதவர்களும் வள்ளல்களானார்கள். அரசியலில் வசைபாடுதலை நிறுத்த முடியாது. குறை கூறாமலும் இருக்க முடியாது. அதுதான் அரசியல். ஆனால் ஒரு கட்சி, கட்ட ஆரம்பித்த கட்டடம் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவும் அது பூர்த்தி செய்யபடாமல் நிறுத்தப்பட்டு மொட்டை கோபுரமாக நிற்கின்றதே, அவைகள் அவலச் சின்னமாகத் தெரியவில்லையா?  
 
<br>காங்கிரஸ் கட்சி, திராவிடக்கட்சி, திராவிட முன்னேற்றக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இருந்தன. ஆனால் பொதுப்பணி யில் அந்தப் பிரிவினைகள் பாதிப்பை உண்டாக்கவில்லை. எல்லோருக்கும் தங்கள் ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்த ஒருமித்த உணர்வு அன்று நல்ல காரியங்களின் பொழுதும் இருந்தது. ஊர் நன்மைக்கு வசூல் செய்யும் பணத்தில் கையாடல் செய்யாத பண்பு இருந்தது. ஏன் இப்பொழுதும் எல்லைப்புறச் சண்டைகள் யுத்தமாக மாறும் பொழுதும் ஒன்றுபடுகின்றோம். மற்ற நேரங்களில் முரண்பாடுகள். சுதந்திரப் போராட்டத்தின் பொழுது எப்படித் தங்களிடம் இருப்பதைப் பொது நன்மைக்காகக் கொடுத்தார்களோ அதே போல் திராவிடக் கட்சிகள் வளர்ந்த பொழுதும் தங்களிடம் இருக்கும் பாத்திர பண்டங்களைக் கூட அடகு வைத்துச்சோறு போட்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். முதலில் அடிமைத்தனம் போக்கத் துடித்தோம். அடுத்து சாதி என்ற கொடுமையிலிருந்து விடுபடும் எழுச்சியில் ஒன்றுபடும் உண்மையை உணர முடிந்தது. அய்யா அவர்களோ அல்லது அறிஞர் அண்ணா அவர்களோ ஊருக்கு வந்தால் கூட்டம் வரும் அப்பொழுது வருகின்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இல்லாதவர்களும் வள்ளல்களானார்கள். அரசியலில் வசைபாடுதலை நிறுத்த முடியாது. குறை கூறாமலும் இருக்க முடியாது. அதுதான் அரசியல். ஆனால் ஒரு கட்சி, கட்ட ஆரம்பித்த கட்டடம் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவும் அது பூர்த்தி செய்யபடாமல் நிறுத்தப்பட்டு மொட்டை கோபுரமாக நிற்கின்றதே, அவைகள் அவலச் சின்னமாகத் தெரியவில்லையா?  
  
 +
<br>
  
 +
இது ஓர் உதாரணம்தான். எல்லா இடங்களிலும் இப்படி என்று கூறவில்லை. இதே போல பல திட்டங்கள் குறைப்பிரசவமாகி விடுகின்றன. மக்களின் வரிப்பணம் போவதுடன் மக்களுக்குத் தேவை யானதும் கிடைக்காமல் போய்விடுகின்றதே, இதை அரசியல் வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கட்சி கிடையாது. கூடாது. யார் திட்டம் போட்டாலும் அக்கறையுடன் செய்து முடிக்க வேண்டியவர்கள். வளர்ச்சிப் பணிகள் ஏதாவது காரணங்களால் முடங்கும் பொழுது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அரசுப் பணியாளர்கள் அரசியல்வாதி களாகக் கூடாது. எந்த அரசு வரினும் அவர்கள் போடும் திட்டங்களை நிறைவேற்று வதுதான் அவர்கள் கடமை. மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனப் புழுக்கம் அதிகமாகி யாரை வெறுக்கின் றோமோ அந்த வெறுப்பு ஆழமாக மனத்தில் பதிந்து விடுகின்றது.நல்லவர்கள் வெறுப்பைத் தேக்கிப் பேசாமல் ஒதுங்கக் கூடாது. சமுதாயம் நன்றக இருக்க, நடுநிலையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். பயமோ தயக்கமோ கூடாது. எப்படி? அவர்கள் தான் ஒருமித்துக் கூடி வழி காண வேண்டும். நடக்கும் தவறுகளுக்கு எல்லோருக்கும் பங்குண்டு. அரசு, அரசியல், மக்கள் மூவரும் இணைந்ததுதான் சமுதாயம் சுதந்திரம் கிடைத்தவுடன் பணிகளை அக்கறையுடனும் , பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் தான் ஆரம்பித்தோம். ஆனால் நாளாக நாளாக எல்லாம் தேய்வு நிலை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டன. இத்தனை சூழ்நிலையிலும்.
  
இது ஓர் உதாரணம்தான். எல்லா இடங்களிலும் இப்படி என்று கூறவில்லை. இதே போல பல திட்டங்கள் குறைப்பிரசவமாகி விடுகின்றன. மக்களின் வரிப்பணம் போவதுடன் மக்களுக்குத் தேவை யானதும் கிடைக்காமல் போய்விடுகின்றதே, இதை அரசியல் வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கட்சி கிடையாது. கூடாது. யார் திட்டம் போட்டாலும் அக்கறையுடன் செய்து முடிக்க வேண்டியவர்கள். வளர்ச்சிப் பணிகள் ஏதாவது காரணங்களால் முடங்கும் பொழுது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அரசுப் பணியாளர்கள் அரசியல்வாதிகளாகக் கூடாது. எந்த அரசு வரினும் அவர்கள் போடும் திட்டங்களை நிறைவேற்று வதுதான் அவர்கள் கடமை. மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனப் புழுக்கம் அதிகமாகி யாரை வெறுக்கின்றோமோ அந்த வெறுப்பு ஆழமாக மனத்தில் பதிந்து விடுகின்றது.நல்லவர்கள் வெறுப்பைத் தேக்கிப் பேசாமல் ஒதுங்கக் கூடாது. சமுதாயம் நன்றக இருக்க, நடுநிலையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். பயமோ தயக்கமோ கூடாது. எப்படி? அவர்கள் தான் ஒருமித்துக் கூடி வழி காண வேண்டும். நடக்கும் தவறுகளுக்கு எல்லோருக்கும் பங்குண்டு. அரசு, அரசியல், மக்கள் மூவரும் இணைந்ததுதான் சமுதாயம் சுதந்திரம் கிடைத்தவுடன் பணிகளை அக்கறையுடனும் , பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் தான் ஆரம்பித்தோம். ஆனால் நாளாக நாளாக எல்லாம் தேய்வு நிலை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டன. இத்தனை சூழ்நிலையிலும்.
+
<br>சிலவற்றில் வளர்ச்சிகள் இருக்கின்றன. நம்மிடையே நம் முன்னோர்கள் விதைத்த , வளர்த்த சில திறமைகள் , குணங்கள் இன்னும் துணைபுரிகின்றன. என்று முற்றிலும் அவைகளையும் நாம் அழிக்கின்றோமோ அன்று நாம் நாமாக இருக்க மாட்டோம். இந்த வேதனையைக் கண்ணீருடன் சொல்லுகின்றேன் ”வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ? ”  
 
+
<br>சிலவற்றில் வளர்ச்சிகள் இருக்கின்றன. நம்மிடையே நம் முன்னோர்கள் விதைத்த , வளர்த்த சில திறமைகள் , குணங்கள் இன்னும் துணைபுரிகின்றன. என்று முற்றிலும் அவைகளையும் நாம் அழிக்கின்றோமோ அன்று நாம் நாமாக இருக்க மாட்டோம். இந்த வேதனையைக் கண்ணீருடன் சொல்லுகின்றேன் ”வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ? ”
+
 
+
 
+
 
+
== பகுதி 12 ==
+
  
 +
<br>
  
 +
== பகுதி 12  ==
  
 
வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் பகுதி எழில் நிறைந்த பகுதி. பச்சைப் பசேலென்று வயல் வெளிகள். காற்றிலே சிலிர்க்கும் நெற்பயிர் நம் மனத்தை வருடி அங்கே உட்காரச் சொல்லும். வரப்புகளில் உட்கார்ந்து அவற்றுடன் பேசுவேன். பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். அக்கரையில் தென்கரை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்று நம்மை வரவேற்கும். இந்த வேலை கிடைத்ததில் நான் அதிருஷ்டசாலி. என் ரசனைகளுக்கேற்ற பணி. என் திறமைகள் அனைத்தும் பயன்படுத்த முடிந்த அற்புதமான பணி. ஒவ்வொரு வருக்கும் தன் வேலையில் திருப்தி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பணிகளும் சிறக்க முடியும். சிலருக்குத்தான் விரும்பியவை கிடைக்கும்.  
 
வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் பகுதி எழில் நிறைந்த பகுதி. பச்சைப் பசேலென்று வயல் வெளிகள். காற்றிலே சிலிர்க்கும் நெற்பயிர் நம் மனத்தை வருடி அங்கே உட்காரச் சொல்லும். வரப்புகளில் உட்கார்ந்து அவற்றுடன் பேசுவேன். பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். அக்கரையில் தென்கரை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்று நம்மை வரவேற்கும். இந்த வேலை கிடைத்ததில் நான் அதிருஷ்டசாலி. என் ரசனைகளுக்கேற்ற பணி. என் திறமைகள் அனைத்தும் பயன்படுத்த முடிந்த அற்புதமான பணி. ஒவ்வொரு வருக்கும் தன் வேலையில் திருப்தி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பணிகளும் சிறக்க முடியும். சிலருக்குத்தான் விரும்பியவை கிடைக்கும்.  
வரிசை 75: வரிசை 79:
 
<br>வயலில் புது முறை நடவு. ஜப்பானிய முறை நடவு. முதல் நாளே சோழவந்தான் சென்று கிராம நல ஊழியர் முத்தையா வீட்டில் தங்கினேன். அதிகாலையில் நானும் அவரும் புறப்பட்டு வயலுக்குச் சென்றோம். நான் வயலில் இறங்க வேண்டும். இந்த சேலைக் கட்டில் இறங்கி வேலை செய்ய முடியாது. இதனை அறிந்து மாற்றுடை எடுத்து வந்திருந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தின் பின் சென்று சேலைக் கட்டை மாற்றிக் கொண்டேன். கிராமத்துப் பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்பொழுது அவர்களில் நான் ஒருத்தி.  
 
<br>வயலில் புது முறை நடவு. ஜப்பானிய முறை நடவு. முதல் நாளே சோழவந்தான் சென்று கிராம நல ஊழியர் முத்தையா வீட்டில் தங்கினேன். அதிகாலையில் நானும் அவரும் புறப்பட்டு வயலுக்குச் சென்றோம். நான் வயலில் இறங்க வேண்டும். இந்த சேலைக் கட்டில் இறங்கி வேலை செய்ய முடியாது. இதனை அறிந்து மாற்றுடை எடுத்து வந்திருந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தின் பின் சென்று சேலைக் கட்டை மாற்றிக் கொண்டேன். கிராமத்துப் பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்பொழுது அவர்களில் நான் ஒருத்தி.  
  
<br>வயலில் இறங்கும் பொழுது கொஞ்சம் கஷ்டம். பிடித்து இறக்கி விட்டனர். ஏற்கனவே கிராம நல ஊழியர் இன்னொரு பக்கம் இருந்தார். நாங்கள் நாத்தை எடுத்து வரிசையாக நட ஆரம்பித்தோம். எங்களைப் பார்த்து மற்றவர்களும் செய்தனர். இரு வரிசை முடியவும் நான் மேலே வந்து விட்டேன். மற்றவர்களுக்கு இப்பொழுது சுலபமாக நட முடிந்தது. <br>அவர்களை நடவுப் பாட்டுப் பாடச் சொன்னேன். அவர்கள் பாடிக் கொண்டே அசைந்து அசைந்து நாற்று நடுவதும் எனக்கு நாட்டியமாகப் பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைகள்! வேலையின் கடினம் தெரியாமல் இருக்க ஏற்றப்பாட்டு முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பாட்டு. மனிதன் இசையுடன் இசைந்து வாழ்ந்திருக்கின்றான். ஆனால் இப்பொழுது அந்த இசை எங்கே? பாட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டது. தாலாட்டை நாம் ரசிப்போம். தாலாட்டை விட ஒப்பாரிப் பாட்டு மிகவும் அருமை. தாலாட்டில் வம்சத்தின் பெருமைகளும், பிள்ளைமேல் கொண்ட ஆசையும் வரும். ஒப்பாரியில் இவைகளும் வரும். அத்துடன் வயிற்றெரிச்சல் முதல் எண்ணுகின்ற எல்லாம் கொட்டலாம். நான் பார்த்த பணியில் ஒவ்வொரு வினாடியும் உயிரும் உணர்வும் கலந்து வாழ்ந்தேன். அங்கிருந்து நானும் முத்தையாவும் புறப்பட்டு புதிதாகக் கட்டி முடித்திருந்த ஹரிஜன காலனிக்குச் சென்றோம். ஹரிஜனங் களுக்குப் புதிய குடியிருப்பு வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வந்த திட்டம். பல திட்டங்கள் சிறந்த நோக்கத் துடன் தீட்டப்படும். எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் காலங்களில் சில புதிய திட்டங்கள் வரும். ஆனால் நடை முறைப்படுத்தும் பொழுது சில குறைகள் நேர்ந்து விடுகின்றன. அவைகளில் சில பார்ப்போம். நம் குறைகளைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாமே.  
+
<br>வயலில் இறங்கும் பொழுது கொஞ்சம் கஷ்டம். பிடித்து இறக்கி விட்டனர். ஏற்கனவே கிராம நல ஊழியர் இன்னொரு பக்கம் இருந்தார். நாங்கள் நாத்தை எடுத்து வரிசையாக நட ஆரம்பித்தோம். எங்களைப் பார்த்து மற்றவர்களும் செய்தனர். இரு வரிசை முடியவும் நான் மேலே வந்து விட்டேன். மற்றவர்களுக்கு இப்பொழுது சுலபமாக நட முடிந்தது. <br>
 +
 
 +
<br>அவர்களை நடவுப் பாட்டுப் பாடச் சொன்னேன். அவர்கள் பாடிக் கொண்டே அசைந்து அசைந்து நாற்று நடுவதும் எனக்கு நாட்டியமாகப் பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைகள்! வேலையின் கடினம் தெரியாமல் இருக்க ஏற்றப்பாட்டு முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பாட்டு. மனிதன் இசையுடன் இசைந்து வாழ்ந்திருக்கின்றான். ஆனால் இப்பொழுது அந்த இசை எங்கே? பாட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டது. தாலாட்டை நாம் ரசிப்போம். தாலாட்டை விட ஒப்பாரிப் பாட்டு மிகவும் அருமை. தாலாட்டில் வம்சத்தின் பெருமைகளும், பிள்ளைமேல் கொண்ட ஆசையும் வரும். ஒப்பாரியில் இவைகளும் வரும். அத்துடன் வயிற்றெரிச்சல் முதல் எண்ணுகின்ற எல்லாம் கொட்டலாம். நான் பார்த்த பணியில் ஒவ்வொரு வினாடியும் உயிரும் உணர்வும் கலந்து வாழ்ந்தேன். அங்கிருந்து நானும் முத்தையாவும் புறப்பட்டு புதிதாகக் கட்டி முடித்திருந்த ஹரிஜன காலனிக்குச் சென்றோம். ஹரிஜனங் களுக்குப் புதிய குடியிருப்பு வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வந்த திட்டம். பல திட்டங்கள் சிறந்த நோக்கத் துடன் தீட்டப்படும். எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் காலங்களில் சில புதிய திட்டங்கள் வரும். ஆனால் நடை முறைப்படுத்தும் பொழுது சில குறைகள் நேர்ந்து விடுகின்றன. அவைகளில் சில பார்ப்போம். நம் குறைகளைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாமே.  
  
 
<br>அன்று ஹரிஜன காலனி கட்டும் பொழுது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த புறம்போக்கு நிலங்களில் கட்டடங்கள் அமைந்தன. இருக்க இடம் கொடுக்கும் நோக்கமாக அப்பொழுது இருந்தது. ஆனாலும் அவர்களை சமுதாயத்தை விட்டு நாமும் தள்ளியே வைத்தோம். ஊருக்குள் அவ்வளவு பெரிய இடம் இருக்காது, அல்லது ஊரார் விரும்பார். இப்பொழுது சமத்துவபுரம் வீடுகள் வருகின்றன. எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த மட்டில் அற்புதமான திட்டம். இதில் அக்கறை குறைந்தால் நோக்கம் சிதறிவிடும். உயர் ஜாதியுடன் பல ஜாதி மக்களும் கலந்து வாழும் திட்டம். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் சேர்ந்து வாழும் இடம். சாதி காழ்ப் புணர்ச்சி மாற வாய்ப்புள்ள திட்டம். ஆனால் சில ஜாதிகளில் குடி வராமல் இருந்தாலோ, அல்லது இடம் மாறிச் சென்றாலோ பின்னர் இஷ்டம் போல் குடிவைக்க ஆரம்பித்து விட்டால் நோக்கம் சிதறி விடும்.  
 
<br>அன்று ஹரிஜன காலனி கட்டும் பொழுது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த புறம்போக்கு நிலங்களில் கட்டடங்கள் அமைந்தன. இருக்க இடம் கொடுக்கும் நோக்கமாக அப்பொழுது இருந்தது. ஆனாலும் அவர்களை சமுதாயத்தை விட்டு நாமும் தள்ளியே வைத்தோம். ஊருக்குள் அவ்வளவு பெரிய இடம் இருக்காது, அல்லது ஊரார் விரும்பார். இப்பொழுது சமத்துவபுரம் வீடுகள் வருகின்றன. எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த மட்டில் அற்புதமான திட்டம். இதில் அக்கறை குறைந்தால் நோக்கம் சிதறிவிடும். உயர் ஜாதியுடன் பல ஜாதி மக்களும் கலந்து வாழும் திட்டம். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் சேர்ந்து வாழும் இடம். சாதி காழ்ப் புணர்ச்சி மாற வாய்ப்புள்ள திட்டம். ஆனால் சில ஜாதிகளில் குடி வராமல் இருந்தாலோ, அல்லது இடம் மாறிச் சென்றாலோ பின்னர் இஷ்டம் போல் குடிவைக்க ஆரம்பித்து விட்டால் நோக்கம் சிதறி விடும்.  
வரிசை 83: வரிசை 89:
 
<br>இன்னொரு உதாரணமும் காட்டுகின்றேன். சென்னையில் குடிசைகளை நீக்கி கட்டடங்கள் கட்டி குடியிருப்பு செய்கின்றோம். கொத்தவால் சாவடியிலும், கப்பல்களிலும் கூலி வேலை செய்வோரை ஆதம்பாக்கம் போன்ற தூரத்தில் குடியிருப்பு வைத்தால் அவர்கள் தொழில்கள் செய்ய முடியாது. குற்றங்கள் மலியும். எனவே புதுக் குடியிருப்பு களை ஏற்படுத்தும் பொழுதும் கவனம் தேவை.  
 
<br>இன்னொரு உதாரணமும் காட்டுகின்றேன். சென்னையில் குடிசைகளை நீக்கி கட்டடங்கள் கட்டி குடியிருப்பு செய்கின்றோம். கொத்தவால் சாவடியிலும், கப்பல்களிலும் கூலி வேலை செய்வோரை ஆதம்பாக்கம் போன்ற தூரத்தில் குடியிருப்பு வைத்தால் அவர்கள் தொழில்கள் செய்ய முடியாது. குற்றங்கள் மலியும். எனவே புதுக் குடியிருப்பு களை ஏற்படுத்தும் பொழுதும் கவனம் தேவை.  
  
<br>பயணத்துடன் ஆங்காங்கே இது போன்று கொஞ்சம் மாறிச் செல்ல வேண்டியிருக்கின்றது. உடனுக்குடன் ஒத்த விஷயங்களைப் பேசினால் தான் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும். நான் கதை சொல்ல வில்லை. ஒரு ஊரில் ராஜா இருந்தார் என்று ஆரம்பித்து கல்யாணம், பிள்ளைப் பேறு என்று வரிசையாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், இது சமுதாய வரலாறு. குறைகளைக் காட்டி, முடிந்த மட்டும் சில ஆலோசனைகளையும் அவ்வப்பொழுது சொன்னால் பலன் கிடைக்கும். குறை கூறுதல் எளிது. ஒருவர்மேல் ஒருவர் குற்றம் கூறுவது சுலபம். ஆனால் இது கூட்டுப் பொறுப்பு. அரசியல்வாதிகள் திட்டம் தீட்டு கின்றனர். அரசுப் பணியா ளர்கள் செயல்படுத்த ஆவன செய்கின்றனர். ஆனால் களப்பணி செய்வது யார் ? மக்கள், காண்டிராக்டர்கள். தவறு காணும் பொழுது மக்கள் உடனுக்குடன் கேட்க வேண்டும். இதைப் படிக்கவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கின்றது. நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள் என்றுதானே. நம் சக்தி நமக்குத் தெரிய வில்லை.நமக்குள் ஒற்றுமையில்லை. சின்ன ஆதாயம் கிடைத்தால் நாம் பிரிந்து விடுகின்றோம். தப்பு இல்லையா? அதனால்தான் கூறுகின்றேன். நடக்கும் தவறுகளுக்கும் எல்லோரும் பொறுப்பு. வாய்பேசாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் பொறுப்புண்டு. யாரும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கக் கூடாது.  
+
<br>பயணத்துடன் ஆங்காங்கே இது போன்று கொஞ்சம் மாறிச் செல்ல வேண்டியிருக்கின்றது. உடனுக்குடன் ஒத்த விஷயங்களைப் பேசினால் தான் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும். நான் கதை சொல்ல வில்லை. ஒரு ஊரில் ராஜா இருந்தார் என்று ஆரம்பித்து கல்யாணம், பிள்ளைப் பேறு என்று வரிசையாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், இது சமுதாய வரலாறு. குறைகளைக் காட்டி, முடிந்த மட்டும் சில ஆலோசனை களையும் அவ்வப்பொழுது சொன்னால் பலன் கிடைக்கும். குறை கூறுதல் எளிது. ஒருவர்மேல் ஒருவர் குற்றம் கூறுவது சுலபம். ஆனால் இது கூட்டுப் பொறுப்பு. அரசியல்வாதிகள் திட்டம் தீட்டு கின்றனர். அரசுப் பணியா ளர்கள் செயல்படுத்த ஆவன செய்கின்றனர். ஆனால் களப்பணி செய்வது யார்&nbsp;? மக்கள், காண்டிராக்டர்கள். தவறு காணும் பொழுது மக்கள் உடனுக்குடன் கேட்க வேண்டும். இதைப் படிக்கவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கின்றது. நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள் என்றுதானே. நம் சக்தி நமக்குத் தெரிய வில்லை.நமக்குள் ஒற்றுமையில்லை. சின்ன ஆதாயம் கிடைத்தால் நாம் பிரிந்து விடுகின்றோம். தப்பு இல்லையா? அதனால்தான் கூறுகின்றேன். நடக்கும் தவறுகளுக்கும் எல்லோரும் பொறுப்பு. வாய்பேசாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் பொறுப்புண்டு. யாரும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கக் கூடாது.  
  
 
<br>பயணம் தொடருவோமா?  
 
<br>பயணம் தொடருவோமா?  
  
<br>அன்று மாலை மகளிர் மன்றம் சென்றேன். ஏதோ அதற்குத் தனிக்கட்டடம் என்றோ, பெரிதாகக் கூட்டம் என்றோ இல்லை. ஒரு வீட்டில் கூடிப் பேசுவோம். அந்த மகளிர் மன்றத்தில் எல்லோரும் ஏதோ கூலி வேலை செய்கின்றவர்கள். நான் சென்றால் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சி. பல பிரச்சனை களைக் கொண்டு வருவார்கள். கூலி வாங்கும் இடத்தில் பிரச்சனைகள். என்னிடம் சொன்னால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பேன். குடும்பச் சண்டை என்றால் புருஷன் ,பொண்டாட்டியை கூட்டி வைத்துப் பேசுவேன். ஒரு வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டுப் பக்கம் போடும் சண்டையும் வரும். நோய்கள் பற்றியும் வரும். வாரம் ஒரு முறை தவறாது அங்கு போவது என்று வைத்துக் கொண்டிருந்தேன். அர்த்தமற்று பக்கத்து வீட்டுக்காரியுடன் போடும் சண்டை களுக்கு பஞ்சாயத்து வைப்பது ஒவ்வொரு வாரமும் நடக்கும். வாழ்க்கையில்தான் எத்தனை கோணங்கள் ? எல்லாம் படிப்பினைகள் மேலக்கால் கிராமம் போக வேண்டிய வேலை வந்தது. அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு முனியம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவ்வூர் போனால் மதியச்சாப்பாடு அங்கேதான். அன்று போனபொழுது அவள் வீட்டில் புதிய இளைஞன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் யார் என்று விசாரித்தேன்“என் மவன் பெரிய கருப்பன்” <br>“இதுவரை பார்த்ததில்லையே!” ”ஆமாம், அவன் ஜெயிலுக்குப் போய்ட்டு இப்போத்தான் வந்தான். ஆறு மாசமா ஜெயில்லேதான் இருந்தான் “ .
+
<br>அன்று மாலை மகளிர் மன்றம் சென்றேன். ஏதோ அதற்குத் தனிக்கட்டடம் என்றோ, பெரிதாகக் கூட்டம் என்றோ இல்லை. ஒரு வீட்டில் கூடிப் பேசுவோம். அந்த மகளிர் மன்றத்தில் எல்லோரும் ஏதோ கூலி வேலை செய்கின்றவர்கள். நான் சென்றால் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சி. பல பிரச்சனை களைக் கொண்டு வருவார்கள். கூலி வாங்கும் இடத்தில் பிரச்சனைகள். என்னிடம் சொன்னால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பேன். குடும்பச் சண்டை என்றால் புருஷன் ,பொண்டாட்டியை கூட்டி வைத்துப் பேசுவேன். ஒரு வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டுப் பக்கம் போடும் சண்டையும் வரும். நோய்கள் பற்றியும் வரும். வாரம் ஒரு முறை தவறாது அங்கு போவது என்று வைத்துக் கொண்டிருந்தேன். அர்த்தமற்று பக்கத்து வீட்டுக்காரியுடன் போடும் சண்டை களுக்கு பஞ்சாயத்து வைப்பது ஒவ்வொரு வாரமும் நடக்கும். வாழ்க்கையில்தான் எத்தனை கோணங்கள்&nbsp;? எல்லாம் படிப்பினைகள் மேலக்கால் கிராமம் போக வேண்டிய வேலை வந்தது. அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு முனியம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவ்வூர் போனால் மதியச்சாப்பாடு அங்கேதான். அன்று போனபொழுது அவள் வீட்டில் புதிய இளைஞன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் யார் என்று விசாரித்தேன்“என் மவன் பெரிய கருப்பன்” <br>“இதுவரை பார்த்ததில்லையே!” ”ஆமாம், அவன் ஜெயிலுக்குப் போய்ட்டு இப்போத்தான் வந்தான். ஆறு மாசமா ஜெயில்லேதான் இருந்தான் “ .  
  
<br>எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் முனியம்மாள் சாதாரணமாகச் சொன்னாள். வாடிக்கையாகிப் போன ஒரு விஷயம்போல் பேசினாள். இதுவரை தன் மகனைப்பற்றி எதுவும் சொன்னதில்லை. <br>“ஏன் ஏதாவது திருடினானா ? “ “இல்லேம்மா, எங்க எசமான் ஒருத்தரை வெட்டச் சொன்னாரு. இவனும் போய் வெட்டினான். சாட்சி சரியில்லைனு விட்டுட்டாங்க” <br>நான் பேச முடியாமல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். முதல் அனுபவம். அதைப்பார்த்து அவளே தொடர்ந்து பேசினாள் “எங்க ஊர்ப்பக்கம் இது சாதாரணம். எங்க முதலாளிங்க என்ன சொன்னாலும் செய்வோம். சாப்பாட்டுக்கு அய்யா ஒரு குறவும் வைக்கமாட்டாருங்க, <br>எங்களுக்கு எல்லாம் எங்க எஜமான்தான்.”  
+
<br>எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் முனியம்மாள் சாதாரணமாகச் சொன்னாள். வாடிக்கையாகிப் போன ஒரு விஷயம்போல் பேசினாள். இதுவரை தன் மகனைப்பற்றி எதுவும் சொன்னதில்லை. <br>“ஏன் ஏதாவது திருடினானா&nbsp;? “ “இல்லேம்மா, எங்க எசமான் ஒருத்தரை வெட்டச் சொன்னாரு. இவனும் போய் வெட்டினான். சாட்சி சரியில்லைனு விட்டுட்டாங்க” <br>நான் பேச முடியாமல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். முதல் அனுபவம். அதைப்பார்த்து அவளே தொடர்ந்து பேசினாள் “எங்க ஊர்ப்பக்கம் இது சாதாரணம். எங்க முதலாளிங்க என்ன சொன்னாலும் செய்வோம். சாப்பாட்டுக்கு அய்யா ஒரு குறவும் வைக்கமாட்டாருங்க, <br>எங்களுக்கு எல்லாம் எங்க எஜமான்தான்.”  
  
 
<br>இதுதான் கொத்தடிமை வந்த வழி;இவர்கள் ஹரிஜனங்களில் ஒரு பிரிவினர். முனியம்மா மகனை எழுப்பினாள். அவனும் தள்ளாடிக் கொண்டே எழுந்திருந்தான். குடித்துவிட்டுப் படுத்திருந்திருக்கின்றான். முனூ முணுத்துக் கொண்டே எழுந்தவன் ஒரு புதியவளைக் கண்டதும் விழித்தான். முனியம்மாதான் பேசினாள் “கருப்பா, கடைக்குப் போய் ரெண்டு வடை வாங்கிட்டு வாடா . அவங்க சாப்பிடணும்” .“ஹூம்” கொட்டிவிட்டு வீட்டுக்குப் பின்னால் சென்றான். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தை முகம். இவன் அம்பு. எய்கின்றவன் எவனோ!? கொலைகாரனாக்கப் பட்டவன். அவன் தொழில் அது. இந்தப் பெரிய கருப்பன் என் வாழ்க்கையில் இன்றியமையாதவனாகப் போகின்றான் என்பது அப்பொழுது நான் உணரவில்லை.என் நினைவில்லத்தில் முக்கியமானவர்களுடன் இவன்இருக்கின்றான். இன்றும் எனக்குள் வாழ்கின்றவனை உங்களுக்கு இப்படி அறிமுகப்படுத்த நேர்ந்ததே என்று வருந்துகின்றேன்.  
 
<br>இதுதான் கொத்தடிமை வந்த வழி;இவர்கள் ஹரிஜனங்களில் ஒரு பிரிவினர். முனியம்மா மகனை எழுப்பினாள். அவனும் தள்ளாடிக் கொண்டே எழுந்திருந்தான். குடித்துவிட்டுப் படுத்திருந்திருக்கின்றான். முனூ முணுத்துக் கொண்டே எழுந்தவன் ஒரு புதியவளைக் கண்டதும் விழித்தான். முனியம்மாதான் பேசினாள் “கருப்பா, கடைக்குப் போய் ரெண்டு வடை வாங்கிட்டு வாடா . அவங்க சாப்பிடணும்” .“ஹூம்” கொட்டிவிட்டு வீட்டுக்குப் பின்னால் சென்றான். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தை முகம். இவன் அம்பு. எய்கின்றவன் எவனோ!? கொலைகாரனாக்கப் பட்டவன். அவன் தொழில் அது. இந்தப் பெரிய கருப்பன் என் வாழ்க்கையில் இன்றியமையாதவனாகப் போகின்றான் என்பது அப்பொழுது நான் உணரவில்லை.என் நினைவில்லத்தில் முக்கியமானவர்களுடன் இவன்இருக்கின்றான். இன்றும் எனக்குள் வாழ்கின்றவனை உங்களுக்கு இப்படி அறிமுகப்படுத்த நேர்ந்ததே என்று வருந்துகின்றேன்.  
  
 +
<br>
  
 +
கருப்பன் வடை வாங்கி வந்ததும், சாப்பிடும் பொழுது அவனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன்,. அவ்வளவுதான். “அக்கா,” என்று கூப்பிட்டான். ஏனோ அவன் மீது ஒரு பாசம் பிறந்தது. சில உணர்வுகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. வயதில் மூத்தவன். ஆனால் எனக்கு அவன் தம்பி. இனி அவன் என்னைத் தொடர்ந்து சில காலம் வருபவன்; அப்பொழுது நீங்களும் அவனைப் புரிந்து கொள்வீர்கள் .
  
கருப்பன் வடை வாங்கி வந்ததும், சாப்பிடும் பொழுது அவனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன்,. அவ்வளவுதான். “அக்கா,” என்று கூப்பிட்டான். ஏனோ அவன் மீது ஒரு பாசம் பிறந்தது. சில உணர்வுகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. வயதில் மூத்தவன். ஆனால் எனக்கு அவன் தம்பி. இனி அவன் என்னைத் தொடர்ந்து சில காலம் வருபவன்; அப்பொழுது நீங்களும் அவனைப் புரிந்து கொள்வீர்கள் .
+
<br>வாடிப்பட்டியில் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். என் தோழி சரோஜா வந்தாள். அவள் முகத்தில் கலவரம். ஏதோ சொல்லத் துடிக்கின்றாள். ஆனால் தயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள். “என்ன சரோ, சொல்ல நினைப்பதைச் சொல்லு. எதுவானாலும் சொல்லு” சரோ மெதுவாகச் சொன்னாள். செய்திகளைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். அவளுக்கோ அதிர்ச்சி. அவள் சொன்னது. என்னைப் பற்றியது. பெரிதாக இரு வதந்திகள். அசிங்கமாகப் பேச ஆரம்பித்திருக் கின்றார்கள். அதைச் சொல்லத்தான் அவள் தயங்கி இருந்திருக்கின்றாள். செய்தி கேட்டால் நான், பயப்படுவேன், அழுவேன் என்று நினைத்திருக்கின்றாள். நானோ சிரித்தேன். ”திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் <br>தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ”<br>எனக்குள் பாரதி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்&nbsp;!
  
<br>வாடிப்பட்டியில் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். என் தோழி சரோஜா வந்தாள். அவள் முகத்தில் கலவரம். ஏதோ சொல்லத் துடிக்கின்றாள். ஆனால் தயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள். “என்ன சரோ, சொல்ல நினைப்பதைச் சொல்லு. எதுவானாலும் சொல்லு” சரோ மெதுவாகச் சொன்னாள். செய்திகளைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். அவளுக்கோ அதிர்ச்சி. அவள் சொன்னது. என்னைப் பற்றியது. பெரிதாக இரு வதந்திகள். அசிங்கமாகப் பேச ஆரம்பித்திருக் கின்றார்கள். அதைச் சொல்லத்தான் அவள் தயங்கி இருந்திருக்கின்றாள். செய்தி கேட்டால் நான், பயப்படுவேன், அழுவேன் என்று நினைத்திருக்கின்றாள். நானோ சிரித்தேன். ”திறமையால் இங்கு மேனிலை சேர்வோம் <br>தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ”<br>எனக்குள் பாரதி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் !
+
<br>  
  
 +
== பகுதி 13  ==
 +
<blockquote>
 +
விரியும் அறிவுநிலை நாட்டுவீர் -அங்கு <br>வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் <br>தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -நல்ல <br>தீரப் பெருந்தொழில் பூட்டுவீர் வீட்டுப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டால் வீரப் பெண்ணாகி விட முடியுமோ? பாரதி உள்ளுக்குள் வாழ்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றான், அவன் இன்னும் சொல்லுகின்றான் -பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம் <br>பயங்கொள்ள லாகாது பாப்பா <br>மோதி மிதித்துவிடு பாப்பா -அவர் <br>முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா <br>
 +
</blockquote>
 +
அவன் தாலாட்டில் வளர்ந்தவள் நான். பாவம் இந்த மக்கள்! புதிதாகக் கண்டால் மிரளுகின்றார்கள்.
  
 +
<br>வதந்தி! அது தீயெனப் பரவும். கிசு கிசுவிற்குத் தனிச் சுவை. அதிலும் அடுத்தவனைபற்றி கேள்விப்படும் பொழுது ஓர் உற்சாகம்! வம்பு பேசுகின்றவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தமும் சீராகுமாம்.. ஆனால் அவர்கள் பேசும் வம்புத் தீ அடுத்தவர்க்குப் பாதிப்பை, அவமானத்தை உண்டு பண்ணுகின்றதே! விஷயத்திற்கு வருகின்றேன். என்னைப்பற்றி இரு செய்திகள் கிளப்பிய புகைச்சல்&nbsp;!என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சில ஆண்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போய் விட்டேன். ஒரு பெண் இப்படி கண்ட ஆண் பக்கத்தில் உட்கர்ந்து சினிமா பார்க்கலாமா? <br>52 ஆண்டுகளுக்கு முன்னால் சமுதாயத்தின் பார்வை.
  
== பகுதி 13 ==
+
<br>5400 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!? அக்கினிப் பிரவேசத்தின் பொழுது ராமனின் நெருப்பு வார்த்தைகள் எனக்கு சீற்றத்தைக் கொடுத்தன. இராவணனின் பார்வை பட்டதாலே சீதையின் பத்தினித் தனம் போய்விட்டதா என்று எழுதியவள்தான் நான்.இன்றைய சூழல் எப்படி மாறிவிட்டது? இந்த மாற்றம் தோன்ற எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கின்றன!. ஆனால் இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம் வேலைக்குச் செல்லும் பொழுது சில நேரங் களில் ஜீப்பில் செல்வோம். அதிகாரி முன்னால் உட்கார்ந்திருப்பார். பின்னால் ஆறு பேர் அமர்ந்திருப்போம். உடல் படுகிறதே என்று சொல்ல முடியாது. பிற ஆடவர்களுடன் வெளிச்செல்வது சமுதாயத்தால் அன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தது பார்ப்போம் இன்னொரு செய்தி வித்தியாசமானது. ஒரு ஆண்பிள்ளையை நான் அடித்துவிட்டேன். சினிமாவிற்கு நான் தனியாகச் சென்றிருந்தேன். அந்த நாளில் அதிகமாக சினிமா பார்ப்பேன். நான் வளர்ந்தது சினிமாக் கொட்டகையைச் சேர்ந்த கடைக்கருகில்தான். ஆரம்ப காலத்தில் பி. யூ. சின்னப்பா பிடிக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு சண்டை போடும் நாயகர்களைப் பிடிக்கும்.
  
 +
<br>எ,.ஜி.ஆர், அவர்கள், இப்பொழுது ரஜினி அவர்கள் எல்லோரும் சண்டை நாயகர்கள். . சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ என் சீட்டில் கால் வைத்து சேட்டை செய்வது போல் இருந்தது. பின் திரும்பி முறைத்தேன். மீண்டும் தொடல். வளையலில் கோர்த்திருந்த பின்னை எடுத்துக் குத்தினேன். கால்களை இழுத்துக் கொண்டான். ஆனால் மீண்டும் அதே சேட்டை செய்யவும் என் பொறுமை போய் விட்டது. எழுந்து திரும்பி நின்று அவனை ஓங்கி அடித்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் உடனே என்னை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். அடிபட்டவன் எழுந்து போய்விட்டான். இதுதான் நடந்தது. நான் தனியாகப் போனது முதல் குற்றம். அடுத்து ஓர் ஆண்பிள்ளையைத் தொட்டு அடித்தது இரண்டாம் குற்றம்.நான் அடக்கமில்லதவள்; கெட்டவள். இதுதான் வதந்தி. நான் பேசாமல் விட்டிருக்கலாம். வதந்தியை ஆரம்பித்தவள் நல்லவள் இல்லை. இது போன்று சிலரைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் எந்தப் பெண்ணா வது வதந்தியின் சூட்டைத் தாங்காது தன் உயிரை முடித்துக் கொள்ள நேரலாம். இவள் அடக்கப் பட வேண்டும். அதற்கு நான் தான் லாயக்கு. என் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாதையாகத்தான் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்கப் போகவேண்டும். அவள் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டேன். நான் கூப்பிடவும் சிரித்துக்கொண்டே அருகில் வந்தாள். உட்காரச் சொல்லி, அரட்டை அடித்தேன். திடீரென்று வதந்தி பற்றி கேட்டேன். அவளைக் குறை கூறாமல் கேட்டதால் அவள் நல்லவள் போல் மற்றவர்கள் பேசுவதாகக் கூறினாள். நானும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விடைபோல மெதுவாகப் பேசினேன் .பேசப் பேச அவள் முகம் மாறியது. <br><br>
  
 +
“சினிமாக் கொட்டகையிலே என்ன செய்ய முடியும்&nbsp;? (அந்தக்காலத்தில் இக்கால லீலைகள் கிடையாது.) நம்மூர் வாய்க்கால்கரைகளுக்குக் காலையில் மூணு மணிக்கே போறாங்களே. அங்கே போற சில பொம்புள்ளங்க எதுக்குப் போறாங்கண்னு தெரியும். ஒரு நாள் டார்ச், காமிராவுடே வருவேன்னு சொல்லு. படம் புடிச்சு ஊருக்குக் காட்டுவேன். அவங்களும் சினிமாக் கொட்டகைக்கு ஆட்களை அனுப்பட்டும் நான் என்ன செய்யறேன்னு படம் பிடிக்கட்டும். ரெண்டையும் ஊர்லே காட்டலாம். நான் சும்மா சொல்ல மாட்டேன். மானத்தை வாங்கிருவேன். வாயப் பொத்திகிட்டு இனிமேலாவது இருக்கச் சொல்லு. இன்னொருதரம் பேசினதாக் கேட்டேன்னா நான் சொன்னபடி செய்வேன்” அவள் பதறிவிட்டாள்.
  
விரியும் அறிவுநிலை நாட்டுவீர் -அங்கு <br>வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் <br>தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -நல்ல <br>தீரப் பெருந்தொழில் பூட்டுவீர் வீட்டுப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டால் வீரப் பெண்ணாகி விட முடியுமோ? பாரதி உள்ளுக்குள் வாழ்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றான், அவன் இன்னும் சொல்லுகின்றான் -பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம் <br>பயங்கொள்ள லாகாது பாப்பா <br>மோதி மிதித்துவிடு பாப்பா -அவர் <br>முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா அவன் தாலாட்டில் வளர்ந்தவள் நான். <br>பாவம் இந்த மக்கள்! புதிதாகக் கண்டால் மிரளுகின்றார்கள்.
+
<br>  
  
<br>வதந்தி! அது தீயெனப் பரவும். கிசு கிசுவிற்குத் தனிச் சுவை. அதிலும் அடுத்தவனைபற்றி கேள்விப்படும் பொழுது ஓர் உற்சாகம்! வம்பு பேசுகின்றவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தமும் சீராகுமாம்.. ஆனால் அவர்கள் பேசும் வம்புத் தீ அடுத்தவர்க்குப் பாதிப்பை, அவமானத்தை உண்டு பண்ணுகின்றதே! விஷயத்திற்கு வருகின்றேன். என்னைப்பற்றி இரு செய்திகள் கிளப்பிய புகைச்சல் !என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சில ஆண்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போய் விட்டேன். ஒரு பெண் இப்படி கண்ட ஆண் பக்கத்தில் உட்கர்ந்து சினிமா பார்க்கலாமா? <br>52 ஆண்டுகளுக்கு முன்னால் சமுதாயத்தின் பார்வை.
+
அவளுடைய கள்ள உறவு வாழ்க்கை அது. அவளைப் போல் சிலர் இத்தகைய வாழ்க்கை நடத்துவது கேள்விப் பட்டிருக்கின்றேன். இவளும் வம்பு பேசுகின்றவளா என்று தோன்றுகிறதோ? பெண்களைச் சந்தித்தால் வம்பு பேசும் பொழுது கேட்க வேண்டிய நிலை. பிறகுதான் புத்தி சொல்ல முடியும்.. முகம் செத்து எழுந்தவள் ” இனிமேல் அவுங்க பேசாம நான் பாத்துக்கறேன். கோவப் படாதீங்க “ என்று சொல்லி விட்டுப் போனாள்; இனி பயப்படுவாள். சரோஜா அழகான பெண். இளம் விதவை. பத்தாவது வரை படித்தவள். அவர்கள் குடும்பங்களில் இது அதிகமான படிப்பு. அவளுடைய ஊர் ராஜபாளையம். வாடிப்பட்டியில் திருமணம். பதினெட்டில் கல்யாணம், இருபத்தைந்தில் கணவரைப் பறி கொடுத்தாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். எல்லாம் வார இதழ் மாத இதழ். நான் பக்கத்தில் குடி வரவும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய நாத்தனார் கோமதி மகளிர் மன்றம் கன்வீனர். நான் வருவதற்கு முன் ஆரம்பித்த மகளிர் மன்றங்கள். அங்கும் பெரிய கூட்டங்கள் நடக்காது. வதந்தி வரவும் அவள்தான் பயந்தாள். அவள் கணவர் வீட்டார் என் வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை போட்டு விடுவார்களோ என்று அஞ்சினாள். அவளுக்காகவும்தான் நான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது. கூட்டுக் குடும்ப அமைப்பு இருந்த காலம். எப்படி, எதற்காக கூட்டுக் குடும்பம் வந்தது என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சமுதாயம், குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றிய காலம். தொழிகள் பயிலக் கல்லூரிகள் கிடையா. தலைமுறை தலைமுறை யாகத் தொழில் செய்வார்கள்&nbsp;;அவர்களுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே சாதிப் பெயராகவும் ஆகியிருக்கின்றது. சில நேரங்களில் தொழில் மாறும் பொழுது பெயரும் மாறும்.எனவே வீட்டுத் தலைமைக்குக்கீழ் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அப்பனுக்குப் பின் பிள்ளை தொழிலை எடுத்துக் கொள்வான். இப்பொழுதும் சில இடங்களில் சில குடும்பங்கள் பரம்பரைத் தொழில் என்று தொடர்ந்து செய்வதைப் பார்க்கலாம் .சொத்தும் குடும்பப் பெயரில் இருக்கும். பெரியவர்களை சிறியவர்கள் பாதுகாப்பார்கள். எனவே பிள்ளைகளைச் சார்ந்து நிற்கும் நிலை. பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் கூட்டுக் குடும்பம் வசதியாக இருந்தது. .அந்த நாட்களில் கணவன் ,மனைவி என்று அவர்களுக்குத் தனி அறை கிடையாது. கணவன் மனைவியின் கலப்பு எப்பொழுது என்று கூட மற்றவர்களுக்குத் தெரியாது. அபூர்வமானது இந்த சங்கமம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் கூடினால் இத்தகைய பிள்ளை பிறக்கும் என்ற சாஸ்திரத்தை நம்பினர். <br><br>
  
<br>5400 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!? அக்கினிப் பிரவேசத்தின் பொழுது ராமனின் நெருப்பு வார்த்தைகள் எனக்கு சீற்றத்தைக் கொடுத்தன. இராவணனின் பார்வை பட்டதாலே சீதையின் பத்தினித்தனம் போய்விட்டதா என்று எழுதியவள்தான் நான்.இன்றைய சூழல் எப்படி மாறிவிட்டது? இந்த மாற்றம் தோன்ற எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கின்றன!. ஆனால் இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம் வேலைக்குச் செல்லும் பொழுது சில நேரங் களில் ஜீப்பில் செல்வோம். அதிகாரி முன்னால் உட்கார்ந்திருப்பார். பின்னால் ஆறு பேர் அமர்ந்திருப்போம். உடல் படுகிறதே என்று சொல்ல முடியாது. பிற ஆடவர்களுடன் வெளிச்செல்வது சமுதாயத்தால் அன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தது பார்ப்போம் இன்னொரு செய்தி வித்தியாசமானது. ஒரு ஆண்பிள்ளையை நான் அடித்துவிட்டேன்.சினிமாவிற்கு நான் தனியாகச் சென்றிருந்தேன். அந்த நாளில் அதிகமாக சினிமா பார்ப்பேன். நான் வளர்ந்தது சினிமாக் கொட்டகையைச் சேர்ந்த கடைக்கருகில்தான். ஆரம்ப காலத்தில் பி. யூ. சின்னப்பா பிடிக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு சண்டை போடும் நாயகர்களைப் பிடிக்கும்.
+
அதற்கும் முன்னால் குழந்தை பிறப்பிற்காக மட்டுமே கூடுதல் என்றும் சொல்லி வந்தனர். சொல்லப் போனால் என் காலத்தில் கூட அப்பா, அம்மாவிற்குள் இப்படி உறவு இருக்கும், குழந்தை பிறக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே இத்தகைய குடும்ப வாழ்க்கையால் கூட்டுக் குடும்பம் அமைந்ததில் சோதனை வந்ததில்லை. இப்பொழுது நிலை என்ன? வெவ்வேறு படிப்பு. வெவ்வேறு தொழில்கள். தொழிலுக்காக ஊர்விட்டு ஊர் மாற்றம். ஊடகங்களின் வருகையால் மன மாற்றங்கள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இல்லத்தின் மாற்றம். கூட்டுக் குடும்பம் சலசலக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுப் பெண் பேச ஆரம்பித்துவிட்டாள். அடங்கிப் போகும் குணமும் மாற ஆரம்பித்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் சண்டைகள். பொருளாதார நெருக்கடி., கணவன், மனைவி சேர்ந்து படுக்கும் பழக்கம்., எனவே இடம் பற்றாமை. பல காரணங்கள் இன்று சோதிக்க ஆரம்பித்துவிட்டன . பாசத்திலே, பழமையின் பழக்கத்திலே தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் இருப்பதைச் செலவழித்து விட்டுத் திணரும் பெரியவர்கள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிள்ளைகளைத் திட்டுவது முறையன்று. இது காலத்தின் மாற்றம், கூட்டுக் குடும்ப அமைப்பு ஆட்டம் கண்டு விட்டது. இனி என்ன செய்யப் போகின்றோம்? இன்றைய தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கின்றோம். இது நம் இயலாமை. இந்த மாற்றங்கள் முதியோரை மிகவும் பாதிக்கின்றது. வருங்காலம் எப்படி இருக்கும்? இனி என்ன செய்யப் போகின்றோம்? புலம்பிக் கொண்டிருப்பதால் பிரச்சனை தீரப் போவதில்லை. சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம் .  
 
+
<br>எ,.ஜி.ஆர், அவர்கள், இப்பொழுது ரஜினி அவர்கள் எல்லோரும் சண்டை நாயகர்கள். . சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ என் சீட்டில் கால் வைத்து சேட்டை செய்வது போல் இருந்தது. பின் திரும்பி முறைத்தேன். மீண்டும் தொடல். வளையலில் கோர்த்திருந்த பின்னை எடுத்துக் குத்தினேன். கால்களை இழுத்துக் கொண்டான். ஆனால் மீண்டும் அதே சேட்டை செய்யவும் என் பொறுமை போய் விட்டது. எழுந்து திரும்பி நின்று அவனை ஓங்கி அடித்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் உடனே என்னை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். அடிபட்டவன் எழுந்து போய்விட்டான். இதுதான் நடந்தது. நான் தனியாகப் போனது முதல் குற்றம். அடுத்து ஓர் ஆண்பிள்ளையைத் தொட்டு அடித்தது இரண்டாம் குற்றம்.நான் அடக்கமில்லதவள்; கெட்டவள். இதுதான் வதந்தி. நான் பேசாமல் விட்டிருக்கலாம். வதந்தியை ஆரம்பித்தவள் நல்லவள் இல்லை. இது போன்று சிலரைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் எந்தப் பெண்ணா வது வதந்தியின் சூட்டைத் தாங்காது தன் உயிரை முடித்துக் கொள்ள நேரலாம். இவள் அடக்கப் பட வேண்டும். அதற்கு நான் தான் லாயக்கு. என் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாதையாகத்தான் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்கப் போகவேண்டும். அவள் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டேன். நான் கூப்பிடவும் சிரித்துக்கொண்டே அருகில் வந்தாள். உட்காரச் சொல்லி, அரட்டை அடித்தேன். திடீரென்று வதந்தி பற்றி கேட்டேன். அவளைக் குறை கூறாமல் கேட்டதால் அவள் நல்லவள் போல் மற்றவர்கள் பேசுவதாகக் கூறினாள். நானும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விடைபோல மெதுவாகப் பேசினேன் .பேசப் பேச அவள் முகம் மாறியது. <br>“சினிமாக்கொட்டகையிலே என்ன செய்ய முடியும் ? (அந்தக்காலத்தில் இக்கால லீலைகள் கிடையாது.) நம்மூர் வாய்க்கால்கரைகளுக்குக் காலையில் மூணு மணிக்கே போறாங்களே. அங்கே போற சில பொம்புள்ளங்க எதுக்குப் போறாங்கண்னு தெரியும். ஒரு நாள் டார்ச், காமிராவுடே வருவேன்னு சொல்லு. படம் புடிச்சு ஊருக்குக் காட்டுவேன். அவங்களும் சினிமாக் கொட்டகைக்கு ஆட்களை அனுப்பட்டும் நான் என்ன செய்யறேன்னு படம் பிடிக்கட்டும். ரெண்டையும் ஊர்லே காட்டலாம். நான் சும்மா சொல்ல மாட்டேன். மானத்தை வாங்கிருவேன். வாயப் பொத்திகிட்டு இனிமேலாவது இருக்கச் சொல்லு. இன்னொருதரம் பேசினதாக் கேட்டேன்னா நான் சொன்னபடி செய்வேன்” <br>அவள் பதறிவிட்டாள்.
+
 
+
 
+
 
+
அவளுடைய கள்ள உறவு வாழ்க்கை அது. அவளைப் போல் சிலர் இத்தகைய வாழ்க்கை நடத்துவது கேள்விப் பட்டிருக்கின்றேன். இவளும் வம்பு பேசுகின்றவளா என்று தோன்றுகிறதோ? பெண்களைச் சந்தித்தால் வம்பு பேசும் பொழுது கேட்க வேண்டிய நிலை. பிறகுதான் புத்தி சொல்ல முடியும்.. முகம் செத்து எழுந்தவள் ” இனிமேல் அவுங்க பேசாம நான் பாத்துக்கறேன். கோவப் படாதீங்க “ என்று சொல்லிவிட்டுப் போனாள்; இனி பயப்படுவாள். சரோஜா அழகான பெண். இளம் விதவை. பத்தாவது வரை படித்தவள். அவர்கள் குடும்பங்களில் இது அதிகமான படிப்பு. அவளுடைய ஊர் ராஜபாளையம். வாடிப்பட்டியில் திருமணம். பதினெட்டில் கல்யாணம், இருபத்தைந்தில் கணவரைப் பறி கொடுத்தாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். எல்லாம் வார இதழ் மாத இதழ். நான் பக்கத்தில் குடி வரவும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய நாத்தனார் கோமதி மகளிர் மன்றம் கன்வீனர். நான் வருவதற்கு முன் ஆரம்பித்த மகளிர் மன்றங்கள். அங்கும் பெரிய கூட்டங்கள் நடக்காது. வதந்தி வரவும் அவள்தான் பயந்தாள். அவள் கணவர் வீட்டார் என் வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை போட்டு விடுவார்களோ என்று அஞ்சினாள். அவளுக்காகவும்தான் நான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது. கூட்டுக் குடும்ப அமைப்பு இருந்த காலம். எப்படி, எதற்காக கூட்டுக் குடும்பம் வந்தது என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சமுதாயம், குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றிய காலம். தொழிகள் பயிலக் கல்லூரிகள் கிடையா. தலைமுறை தலைமுறை யாகத் தொழில் செய்வார்கள் ;அவர்களுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே சாதிப் பெயராகவும் ஆகியிருக்கின்றது. சில நேரங்களில் தொழில் மாறும் பொழுது பெயரும் மாறும்.எனவே வீட்டுத் தலைமைக்குக்கீழ் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அப்பனுக்குப் பின் பிள்ளை தொழிலை எடுத்துக் கொள்வான். இப்பொழுதும் சில இடங்களில் சில குடும்பங்கள் பரம்பரைத் தொழில் என்று தொடர்ந்து செய்வதைப் பார்க்கலாம் .சொத்தும் குடும்பப் பெயரில் இருக்கும். பெரியவர்களை சிறியவர்கள் பாதுகாப்பார்கள். எனவே பிள்ளைகளைச் சார்ந்து நிற்கும் நிலை. பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் கூட்டுக் குடும்பம் வசதியாக இருந்தது. .அந்த நாட்களில் கணவன் ,மனைவி என்று அவர்களுக்குத் தனி அறை கிடையாது. கணவன் மனைவியின் கலப்பு எப்பொழுது என்று கூட மற்றவர்களுக்குத் தெரியாது. அபூர்வமானது இந்த சங்கமம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் கூடினால் இத்தகைய பிள்ளை பிறக்கும் என்ற சாஸ்திரத்தை நம்பினர். <br>அதற்கும் முன்னால் குழந்தை பிறப்பிற்காக மட்டுமே கூடுதல் என்றும் சொல்லி வந்தனர். சொல்லப் போனால் என் காலத்தில் கூட அப்பா, அம்மாவிற்குள் இப்படி உறவு இருக்கும், குழந்தை பிறக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே இத்தகைய குடும்ப வாழ்க்கையால் கூட்டுக் குடும்பம் அமைந்ததில் சோதனை வந்ததில்லை. இப்பொழுது நிலை என்ன? வெவ்வேறு படிப்பு. வெவ்வேறு தொழில்கள். தொழிலுக்காக ஊர்விட்டு ஊர் மாற்றம். ஊடகங்களின் வருகையால் மன மாற்றங்கள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இல்லத்தின் மாற்றம். கூட்டுக் குடும்பம் சலசலக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுப் பெண் பேச ஆரம்பித்துவிட்டாள். அடங்கிப் போகும் குணமும் மாற ஆரம்பித்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் சண்டைகள். பொருளாதார நெருக்கடி., கணவன், மனைவி சேர்ந்து படுக்கும் பழக்கம்., எனவே இடம் பற்றாமை. பல காரணங்கள் இன்று சோதிக்க ஆரம்பித்துவிட்டன . பாசத்திலே, பழமையின் பழக்கத்திலே தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் இருப்பதைச் செலவழித்து விட்டுத் திணரும் பெரியவர்கள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிள்ளைகளைத் திட்டுவது முறையன்று. இது காலத்தின் மாற்றம், கூட்டுக் குடும்ப அமைப்பு ஆட்டம் கண்டு விட்டது. இனி என்ன செய்யப் போகின்றோம்? இன்றைய தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கின்றோம். இது நம் இயலாமை. இந்த மாற்றங்கள் முதியோரை மிகவும் பாதிக்கின்றது. வருங்காலம் எப்படி இருக்கும்? இனி என்ன செய்யப் போகின்றோம்? புலம்பிக் கொண்டிருப்பதால் பிரச்சனை தீரப் போவதில்லை. சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம் .
+
  
 
<br>பன்னாட்டுத் தொழிற்சங்கம் ஒன்றில் மகளிர் நலக்குழு உறுப்பினராக நான்காண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைபற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சுவிட்ஸர் லாண்ட்டில் உள்ள ஜெனிவாவிற்குச் சென்றிருந்தேன். எங்கள் தலைவி  
 
<br>பன்னாட்டுத் தொழிற்சங்கம் ஒன்றில் மகளிர் நலக்குழு உறுப்பினராக நான்காண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைபற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சுவிட்ஸர் லாண்ட்டில் உள்ள ஜெனிவாவிற்குச் சென்றிருந்தேன். எங்கள் தலைவி  
  
<br>ஆன்பார்வொர்டு அவர்கள் ஒன்று கூறினார் – “இந்திய கலாசாரத்தில் எங்களைப் பிரமிக்க வைத்தது உங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அது இப்பொழுது உடைந்துவிட்டது வருத்தத்திற்குரியது “ மறுக்க முடியாத உண்மை. கூடு கலைந்தது மட்டுமன்றி குடும்பத்தின் அஸ்திவாரமும் பலஹீனமாகிக் கொண்டு வருகின்றது. இன்று மயக்க நிலையில் இருக்கின்றோம். மனம்விட்டுப் பேசுவோம்.
+
<br>ஆன்பார்வொர்டு அவர்கள் ஒன்று கூறினார் – “இந்திய கலாசாரத்தில் எங்களைப் பிரமிக்க வைத்தது உங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அது இப்பொழுது உடைந்துவிட்டது வருத்தத்திற்குரியது “ மறுக்க முடியாத உண்மை. கூடு கலைந்தது மட்டுமன்றி குடும்பத்தின் அஸ்திவாரமும் பலஹீனமாகிக் கொண்டு வருகின்றது. இன்று மயக்க நிலையில் இருக்கின்றோம். மனம்விட்டுப் பேசுவோம்.  
 
+
 
+
 
+
== பகுதி 14 ==
+
  
 +
<br>
  
 +
== பகுதி 14  ==
  
அந்தக்காலத்தில் பெண் படிப்பதும் , படித்தபின் பணி செய்வதும் அதிலும் இது போன்று பயணங்களுடன் கூடிய பணி செய்வதும் மிக மிகக் கடினம். வன விலங்குகள் நிறைந்த கானகத்தில் வரும் உலாப் போன்றது. <br>என்னுடன் மேரி, ஜெம்மா என்ற இரு கிராம சேவிகாக்கள். இருவரும் காதலில் சிக்கினார்கள். உடன் வேலை பார்ப்பவர் களுடன் தான். தங்கி இருப்பதோ தனிமையில். மனத்தை மட்டும் இழக்கவில்லை; தம்மையும் இழந்துவிட்டார்கள்.ஒரு சம்பவம் கூற விரும்புகின்றேன்.
+
அந்தக்காலத்தில் பெண் படிப்பதும் , படித்தபின் பணி செய்வதும் அதிலும் இது போன்று பயணங்களுடன் கூடிய பணி செய்வதும் மிக மிகக் கடினம். வன விலங்குகள் நிறைந்த கானகத்தில் வரும் உலாப் போன்றது. என்னுடன் மேரி, ஜெம்மா என்ற இரு கிராம சேவிகாக்கள். இருவரும் காதலில் சிக்கினார்கள். உடன் வேலை பார்ப்பவர் களுடன் தான். தங்கி இருப்பதோ தனிமையில். மனத்தை மட்டும் இழக்கவில்லை; தம்மையும் இழந்துவிட்டார்கள்.ஒரு சம்பவம் கூற விரும்புகின்றேன்.  
  
 
<br>மேரிக்கும் அவள் காதலன் சபாபதிக்கும் சண்டை வர ஆரம்பித்தது. மாதாந்திரக் கூட்டம் வந்த மேரி ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டு இடையிலேயே சென்று விட்டாள். அந்தக் கடிதம் கிழே விழுந்து இன்னொருவன் கையில் மாட்டியது. “உங்களை நம்பி ஏமாந்து விட்டேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள். இனி உயிருடன் இருக்கப் போவதில்லை.தூக்குப் போட்டு சாகப்போகின்றேன் “ இதுதான் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  
 
<br>மேரிக்கும் அவள் காதலன் சபாபதிக்கும் சண்டை வர ஆரம்பித்தது. மாதாந்திரக் கூட்டம் வந்த மேரி ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டு இடையிலேயே சென்று விட்டாள். அந்தக் கடிதம் கிழே விழுந்து இன்னொருவன் கையில் மாட்டியது. “உங்களை நம்பி ஏமாந்து விட்டேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள். இனி உயிருடன் இருக்கப் போவதில்லை.தூக்குப் போட்டு சாகப்போகின்றேன் “ இதுதான் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.  
வரிசை 135: வரிசை 143:
 
<br>அதிகாரிக்குப் பூரண திருப்தி வரவில்லை. எனினும் சீக்கிரம் கூட்டத்தை முடித்துவிட்டார். சபாபதி விரைந்து வெளியில் செல்வதைப் பார்த்தேன் கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  
 
<br>அதிகாரிக்குப் பூரண திருப்தி வரவில்லை. எனினும் சீக்கிரம் கூட்டத்தை முடித்துவிட்டார். சபாபதி விரைந்து வெளியில் செல்வதைப் பார்த்தேன் கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  
  
<br>மறுநாள் காலையில் சபாபதியும் மேரியும் என் வீட்டிற்கு வந்தனர். வந்தவுடன் சபாபதி வாயில் கதவைச் சாத்தினான். என்னைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான். நான்தான் அந்தக் கடிதத்தை எடுத்து அதிகாரி யிடம் கொடுத்து அவன் மானத்தை வாங்கி விட்டேனாம். நிறுத்தாமல் சத்தம் போட்டுத் திட்டிக் கொண்டிருந்தான். என் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்கள். சட்டென்று இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்து விட்டான். மேரி உடனே பாய்ந்து அவனைக் கட்டிப் பிடித்து நிறுத்தினாள். அவள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் எனக்குக் கத்திக் குத்து விழுந்திருக்கும். நான் பயப்பட வில்லை. அவர்களை உட்கார வைத்துப் பேசினேன். மேரியின் காதலைக் கூறி சபாபதியை அவளைச் சீக்கிரம் மணந்து கொள்ளும்படி புத்திமதி கூறினேன். இதுபோன்ற தாக்குதல்கள் என் வாழ்க்கையில் பல கண்டிருக்கின்றேன். போராளி போராட அஞ்சலாமா?  
+
<br>மறுநாள் காலையில் சபாபதியும் மேரியும் என் வீட்டிற்கு வந்தனர். வந்தவுடன் சபாபதி வாயில் கதவைச் சாத்தினான். என்னைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான். நான்தான் அந்தக் கடிதத்தை எடுத்து அதிகாரி யிடம் கொடுத்து அவன் மானத்தை வாங்கி விட்டேனாம். நிறுத்தாமல் சத்தம் போட்டுத் திட்டிக் கொண்டி ருந்தான். என் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்கள். சட்டென்று இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்து விட்டான். மேரி உடனே பாய்ந்து அவனைக் கட்டிப் பிடித்து நிறுத்தினாள். அவள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் எனக்குக் கத்திக் குத்து விழுந்திருக்கும். நான் பயப்பட வில்லை. அவர்களை உட்கார வைத்துப் பேசினேன். மேரியின் காதலைக் கூறி சபாபதியை அவளைச் சீக்கிரம் மணந்து கொள்ளும்படி புத்திமதி கூறினேன். இதுபோன்ற தாக்குதல்கள் என் வாழ்க்கையில் பல கண்டிருக்கின்றேன். போராளி போராட அஞ்சலாமா?  
  
<br>சபாபதி விரும்பினாலும் அவனால் மேரியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. இருவரும் சாதியும் மதமும் வேறு. சமூகத்தை மீறும் துணிச்சல் அன்று கிடையாது. செய்தி பரவி விட்ட காரணத்தால் சபாபதிக்குச் சொந்தத்தில் திருமணம் செய்துவைத்து விட்டார்கள். ஏற்கனவே மேரியைக் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த் தத்தைப் புரிந்து கொள்ள வைத்திருந்தேன். எனவே அவள் தற்கொலை செய்து கொள்ள வில்லை. ஜெம்மாவின் காதலும் தோல்வியில் முடிந்தது. இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர். இப்படி எத்தனை எத்தனை பெண்கள் என் துறையில் அன்று இருந்தார்கள் !  
+
<br>சபாபதி விரும்பினாலும் அவனால் மேரியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. இருவரும் சாதியும் மதமும் வேறு. சமூகத்தை மீறும் துணிச்சல் அன்று கிடையாது. செய்தி பரவி விட்ட காரணத்தால் சபாபதிக்குச் சொந்தத்தில் திருமணம் செய்துவைத்து விட்டார்கள். ஏற்கனவே மேரியைக் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த் தத்தைப் புரிந்து கொள்ள வைத்திருந்தேன். எனவே அவள் தற்கொலை செய்து கொள்ள வில்லை. ஜெம்மாவின் காதலும் தோல்வியில் முடிந்தது. இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர். இப்படி எத்தனை எத்தனை பெண்கள் என் துறையில் அன்று இருந்தார்கள்&nbsp;!  
  
 
<br>நாங்கள் மூவரும் எவ்வளவு சந்தோஷமாகப் பணி செய்து வந்தோம். தீபாவளி வந்தால் முதல் நாளே என் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதிகாலையில் எழுந்திருந்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிடவுடன் மதுரைக்குப் பறந்து விடுவோம். காலைக் காட்சியிலிருந்து தொடர்ந்து நான்கு காட்சிகள் சினிமா பார்ப்போம். இரவுக் காட்சி முடியவும் மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து உட்கார்ந்து கொள்வோம். காலையில் 4 மணி பஸ்ஸில் வாடிப்பட்டி திரும்புவோம்.  
 
<br>நாங்கள் மூவரும் எவ்வளவு சந்தோஷமாகப் பணி செய்து வந்தோம். தீபாவளி வந்தால் முதல் நாளே என் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதிகாலையில் எழுந்திருந்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிடவுடன் மதுரைக்குப் பறந்து விடுவோம். காலைக் காட்சியிலிருந்து தொடர்ந்து நான்கு காட்சிகள் சினிமா பார்ப்போம். இரவுக் காட்சி முடியவும் மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து உட்கார்ந்து கொள்வோம். காலையில் 4 மணி பஸ்ஸில் வாடிப்பட்டி திரும்புவோம்.  
வரிசை 151: வரிசை 159:
 
<br>மாதவியுடன் உறவு நெருக்கமானது. அவர்கள் வீட்டினரும் அதனை ஆதரித்தார்கள். அவளை நர்ஸுக்குப் படிக்க வைத்தார். இப்பொழுது வேலையும் கிடைத்துவிட்டது. மனைவியின் அனுமதியுடன் அவளை மணக்க இருந்தார். மாதவியும் அவள் வீட்டாரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டதுதான்.  
 
<br>மாதவியுடன் உறவு நெருக்கமானது. அவர்கள் வீட்டினரும் அதனை ஆதரித்தார்கள். அவளை நர்ஸுக்குப் படிக்க வைத்தார். இப்பொழுது வேலையும் கிடைத்துவிட்டது. மனைவியின் அனுமதியுடன் அவளை மணக்க இருந்தார். மாதவியும் அவள் வீட்டாரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டதுதான்.  
  
<br>ஆனால் மதுரையில் புது சிநேகிதன் மாதவிக்குக் கிடைத்துவிட்டான். எனவே ரத்தினத்தை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் விபரம் கேள்விப் பட்டவுடன் ரத்தினம் வாடிப்பட்டிக்கு வந்தார். என்னை அவசரமாக மதுரைக்குக் கூப்பிட்டார். விபரம் சொல்லவில்லை. மாதவி வீடு பூட்டிக் கிடந்தது. தான் வந்திருப்பதைக் கூறாமல் மாதவி வேலை பார்க்குமிடம் சென்று சாவி வாங்கி வரச் சொன்னார். நான் தனியே சென்று சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தேன். கட்டிலில் அவள் துணியும் இன்னொரு ஆடவன் துணியும் கிடந்தன. மேலும் இன்னொரு ஆடவனின் வருகைக்கு நிறைய சாதனங்கள் இருந்தன. எல்லாவற் றையும் பார்த்த ரத்தினம் ’ஓ’ வென்று அழ ஆரம்பித்தார். பல ஆண்டுகள் பந்தம்.  
+
<br>ஆனால் மதுரையில் புது சிநேகிதன் மாதவிக்குக் கிடைத்துவிட்டான். எனவே ரத்தினத்தை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் விபரம் கேள்விப் பட்டவுடன் ரத்தினம் வாடிப்பட்டிக்கு வந்தார். என்னை அவசரமாக மதுரைக்குக் கூப்பிட்டார். விபரம் சொல்லவில்லை. மாதவி வீடு பூட்டிக் கிடந்தது. தான் வந்திருப்பதைக் கூறாமல் மாதவி வேலை பார்க்குமிடம் சென்று சாவி வாங்கி வரச் சொன்னார். நான் தனியே சென்று சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தேன். கட்டிலில் அவள் துணியும் இன்னொரு ஆடவன் துணியும் கிடந்தன. மேலும் இன்னொரு ஆடவனின் வருகைக்கு நிறைய சாதனங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்த ரத்தினம் ’ஓ’ வென்று அழ ஆரம்பித்தார். பல ஆண்டுகள் பந்தம்.  
  
 
<br>மாதவி வரவும் சண்டை பெரிதானது. அவளைக் கொன்றுவிட முயற்சி செய்தார். எப்படியோ தடுத்தேன். மாதவியின் இரட்டை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. போலித்தனம் எனக்குப் பிடிக்காது. ரத்தினத்திடம் நேரிடையாகத் தெரிவித்து விட்டு அவள் இன்னொருவருடன் நேசம் வைத்துக் கொண்டி ருந்தாலும் பரவாயில்லை. மன்னித்து விடலாம். அன்று அவள் கொடூரமாகப் பேசியதிலிருந்து, ஒரு பெண் பணத்திற்காக எப்படியெல்லாம் பேயாக மாறுகின்றாள் என்பதைக் கண்முன்னால் பார்த்தேன்.  
 
<br>மாதவி வரவும் சண்டை பெரிதானது. அவளைக் கொன்றுவிட முயற்சி செய்தார். எப்படியோ தடுத்தேன். மாதவியின் இரட்டை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. போலித்தனம் எனக்குப் பிடிக்காது. ரத்தினத்திடம் நேரிடையாகத் தெரிவித்து விட்டு அவள் இன்னொருவருடன் நேசம் வைத்துக் கொண்டி ருந்தாலும் பரவாயில்லை. மன்னித்து விடலாம். அன்று அவள் கொடூரமாகப் பேசியதிலிருந்து, ஒரு பெண் பணத்திற்காக எப்படியெல்லாம் பேயாக மாறுகின்றாள் என்பதைக் கண்முன்னால் பார்த்தேன்.  
வரிசை 157: வரிசை 165:
 
<br>இப்பொழுது எனக்கிருந்த அவசரப் பணி கொலையைத் தடுக்க வேண்டும். ரத்தினத்தை அங்கிருந்து கூட்டிச் சென்று விட வேண்டும். எப்படியோ முயன்று வெளியில் கூட்டி வந்து விட்டேன். அவரை மதுரையில் விட்டு வாடிப்பட்டிக்குத் திரும்ப மனமில்லை. ஏற்கனவே அவர் தவறு செய்தவர். ஒரு குடும்பம் இருக்க இன்னொரு குடும்பம் அமைக்க நினைத்தது சரியன்று. இப்பொழுது கொலை செய்து குற்றவாளியானால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே பாதிக்கப் பட்டு விடும்.அவரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடிய வில்லை. எப்படியோ முயன்று அவரை அவர் ஊர் பஸ்ஸில் ஏற்றிவிடும் வரை உடன் இருந்தேன்.  
 
<br>இப்பொழுது எனக்கிருந்த அவசரப் பணி கொலையைத் தடுக்க வேண்டும். ரத்தினத்தை அங்கிருந்து கூட்டிச் சென்று விட வேண்டும். எப்படியோ முயன்று வெளியில் கூட்டி வந்து விட்டேன். அவரை மதுரையில் விட்டு வாடிப்பட்டிக்குத் திரும்ப மனமில்லை. ஏற்கனவே அவர் தவறு செய்தவர். ஒரு குடும்பம் இருக்க இன்னொரு குடும்பம் அமைக்க நினைத்தது சரியன்று. இப்பொழுது கொலை செய்து குற்றவாளியானால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே பாதிக்கப் பட்டு விடும்.அவரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடிய வில்லை. எப்படியோ முயன்று அவரை அவர் ஊர் பஸ்ஸில் ஏற்றிவிடும் வரை உடன் இருந்தேன்.  
  
<br>பல கொலைகள் திடீரென்று ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்வது. கொஞ்சம் தாமதித்தால் உணர்ச்சிகள் அடங்கும் பொழுது கொலை வெறியும் அடங்கி விடுகின்றது. ரத்தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைய ஆரம்பித்தார். ரத்தினமும் மாதவியும் இருவருமே தவறு செய்தவர்கள். வீட்டுப் பெண்ணைப் பழக விட்டு ஆதாயம் தேடிய மாதவி குடும்பத்தைப்பற்றி என்ன சொல்வது ?  
+
<br>பல கொலைகள் திடீரென்று ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்வது. கொஞ்சம் தாமதித்தால் உணர்ச்சிகள் அடங்கும் பொழுது கொலை வெறியும் அடங்கி விடுகின்றது. ரத்தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைய ஆரம்பித்தார். ரத்தினமும் மாதவியும் இருவருமே தவறு செய்தவர்கள். வீட்டுப் பெண்ணைப் பழக விட்டு ஆதாயம் தேடிய மாதவி குடும்பத்தைப்பற்றி என்ன சொல்வது&nbsp;?  
  
 
<br>ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம். அதன் பாதிப்பு அதிகமா னால் பழியை யார் மீது, எதன் மீது போடுவது என்று மனம் அலைபாயும். <br>எதிர்பார்க்காத சூழலால் எனக்கு வந்துவிட்ட பொறுப்பு. ஒரு மனிதனின் சோதனைக் காலத்தில் அன்புடன் வழி நடத்த உறவுகள், நட்புகள் தேவை. ரத்தினத்தின் நட்பு ஒரு தொடர்கதை. அவரை அழிவிலிருந்து மீட்டுவிட்டேன் என்று அடிக்கடி கூறுவார். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், இழப்புகளின் பொழுது நல்ல நண்பராக இருந்தார். ஆம், அவர் இப்பொழுது இல்லை. இந்த சம்பவத்திற்குப் பின் இரு பக்கமும் பிரச்சனைகளைப் பார்த்தேன்.  
 
<br>ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம். அதன் பாதிப்பு அதிகமா னால் பழியை யார் மீது, எதன் மீது போடுவது என்று மனம் அலைபாயும். <br>எதிர்பார்க்காத சூழலால் எனக்கு வந்துவிட்ட பொறுப்பு. ஒரு மனிதனின் சோதனைக் காலத்தில் அன்புடன் வழி நடத்த உறவுகள், நட்புகள் தேவை. ரத்தினத்தின் நட்பு ஒரு தொடர்கதை. அவரை அழிவிலிருந்து மீட்டுவிட்டேன் என்று அடிக்கடி கூறுவார். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், இழப்புகளின் பொழுது நல்ல நண்பராக இருந்தார். ஆம், அவர் இப்பொழுது இல்லை. இந்த சம்பவத்திற்குப் பின் இரு பக்கமும் பிரச்சனைகளைப் பார்த்தேன்.  
  
<br>அக்காலத்தில் நான் உணர்ந்தது பெரிதும் பாதிக்கப்பட் டிருப்பவள் பெண் என்பதுதான். இருப்பினும் நான் அவசர முடிவு எடுக்கமாட்டேன். என் வேகத்தில் கொஞ்சம் விவேகம் கலந்தது. பள்ளிப் படிப்பைவிட அனுப வங்கள் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் நிறைய. நாம் தான் புரிந்து தெளிவடைய வேண்டும். என் பணிக்காலத்தில் இளைஞர் களையும் சமுதாயப் பணிக்குப் பயிற்றுவித்தது வாடிப் பட்டியில்தான். இளைஞர் என்று கூறும் பொழுது இப்பொழுது நான் இருக்கும் 75ஐ நினைத்து விடாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது 21 .
+
<br>அக்காலத்தில் நான் உணர்ந்தது பெரிதும் பாதிக்கப்பட் டிருப்பவள் பெண் என்பதுதான். இருப்பினும் நான் அவசர முடிவு எடுக்கமாட்டேன். என் வேகத்தில் கொஞ்சம் விவேகம் கலந்தது. பள்ளிப் படிப்பைவிட அனுப வங்கள் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் நிறைய. நாம் தான் புரிந்து தெளிவடைய வேண்டும். என் பணிக்காலத்தில் இளைஞர் களையும் சமுதாயப் பணிக்குப் பயிற்றுவித்தது வாடிப் பட்டியில்தான். இளைஞர் என்று கூறும் பொழுது இப்பொழுது நான் இருக்கும் 75ஐ நினைத்து விடாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது 21 .  
  
 +
<br>
  
 +
== பகுதி 15  ==
  
== பகுதி 15 ==
+
வாடிப்பட்டி வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைக் கற்பித்தது. என் திறமைகள் வளரக் காரணமாயிருந்த அனுபவங்கள் என்னிடம் ஓர் பக்குவத்தையும் ஏற்படுத்தியது; யாரும் கற்றுத்தரவில்லை. தானாகவே அமைந்தது. ஒரு குழந்தை முதலில் தவழும், பின் எழுந்திருக்க முயலும், கீழே விழுந்து, எழுந்து நிற்கப் பயிலும். ஓடுவதும் அப்படியே. விழும் பொழுது அழும். ஓடி இலக்கை அடைந்துவிட்டால் சிரிக்கும். அப்படித்தான் நானும் சூழ்நிலையால் உருவாக்கப் பட்டவள். <br><br>
  
வாடிப்பட்டி வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைக் கற்பித்தது. என் திறமைகள் வளரக் காரணமாயிருந்த அனுபவங்கள் என்னிடம் ஓர் பக்குவத்தையும் ஏற்படுத்தியது; யாரும் கற்றுத்தரவில்லை. தானாகவே அமைந்தது. ஒரு குழந்தை முதலில் தவழும், பின் எழுந்திருக்க முயலும், கீழே விழுந்து, எழுந்து நிற்கப் பயிலும். ஓடுவதும் அப்படியே. விழும் பொழுது அழும். ஓடி இலக்கை அடைந்துவிட்டால் சிரிக்கும். அப்படித்தான் நானும் சூழ்நிலையால் உருவாக்கப் பட்டவள். <br>வாடிப்பட்டி வட்டாரத்தில் கருப்பட்டி கிராமம் . புதிய அனுபவங்களின் தொடக்க பூமி. அவ்வூரில்தான் நான் முதலில் நடனம் ஆடியது. என் நாடக அரங்கேற்றமும் அங்குதான். முதன் முதலில் அந்த ஊருக்கு பஸ்ஸில் போய் இறங்கினேன். தனியாகப் போயிருந்தேன்; கீழே இறங்கவும் சுற்றிப் பார்த்தேன். அருகில் ஒரு பெட்டிக்கடை. அங்கே நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்; நான் இறங்கவும் முதலில் வியப்புடன் பார்த்தனர். பின்னால் ஏதோ பேசிச் சிரித்தார்கள். <br>அவர்களைச் சில வினாடிகள்தான் பார்த்தேன். உடனே அவர்களை நோக்கி நடந்தேன். சிரித்தவர்கள் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக் கருகில் சென்று ஒரு சிறு தாளை நீட்டி, “இந்த விலாசத் திற்குப் போக வேண்டும் வீடு எங்கே இருக்கின்றது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.நால்வரில் ஒருவன், “டேய் மணி, இது உங்கள் வீட்டு விலாசம்டா” என்றான். உடனே மணி அதனை வாங்கிப் பார்த்து “இவங்க எங்க அம்மாதான், வாங்க கூட்டிகிட்டுப் போறேன் “என்று சொன்னான். மற்றவர்களிடம் “போய் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மணியுடன் புறப்பட்டேன். அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கலாம். நடந்து போகும் பொழுதே அவர்கள் நால்வரின் விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  
+
வாடிப்பட்டி வட்டாரத்தில் கருப்பட்டி கிராமம் . புதிய அனுபவங்களின் தொடக்க பூமி. அவ்வூரில்தான் நான் முதலில் நடனம் ஆடியது. என் நாடக அரங்கேற்றமும் அங்குதான். முதன் முதலில் அந்த ஊருக்கு பஸ்ஸில் போய் இறங்கினேன். தனியாகப் போயிருந்தேன்; கீழே இறங்கவும் சுற்றிப் பார்த்தேன். அருகில் ஒரு பெட்டிக்கடை. அங்கே நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்; நான் இறங்கவும் முதலில் வியப்புடன் பார்த்தனர். பின்னால் ஏதோ பேசிச் சிரித்தார்கள். <br><br>
 +
 
 +
அவர்களைச் சில வினாடிகள்தான் பார்த்தேன். உடனே அவர்களை நோக்கி நடந்தேன். சிரித்தவர்கள் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக் கருகில் சென்று ஒரு சிறு தாளை நீட்டி, “இந்த விலாசத் திற்குப் போக வேண்டும் வீடு எங்கே இருக்கின்றது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.நால்வரில் ஒருவன், “டேய் மணி, இது உங்கள் வீட்டு விலாசம்டா” என்றான். உடனே மணி அதனை வாங்கிப் பார்த்து “இவங்க எங்க அம்மாதான், வாங்க கூட்டிகிட்டுப் போறேன் “என்று சொன்னான். மற்றவர்களிடம் “போய் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மணியுடன் புறப்பட்டேன். அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கலாம். நடந்து போகும் பொழுதே அவர்கள் நால்வரின் விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  
  
 
<br>பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளிப் படிப்பு முடிந்தபின் ஊரிலேயே இருந்து தந்தைக்கு உதவிகள் செய்து வந்தனர். குடும்பத்தில் பெரியவர்கள் இருந்ததால் இவர்களுக்கு வேலைச் சுமை குறைவு . கூப்பிட்ட குரலுக்குப் பிள்ளை. வேலை இல்லாத நேரங்களில் நண்பர்கள் கூடிப் பேசுவார்கள். மணியின் வீடும் வந்து விட்டது. மணியின் தாயார் செல்லம்மாள், மாதர் சங்கத்தின் தலைவி. வீட்டுக்குள் நுழைந்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் முகமலர்ந்த வரவேற்பு கிடைத்தது. உடனே மணியை நோக்கி அவன் அம்மா, ‘டேய், போய் செண்பகம் அக்காவைக் கூட்டியா “ என்று சொல்லவும் மணி புறப்பட்டுவிட்டான். செண்பகம் மாதர் சங்கத்தின் கன்வீனர். அந்த கிராமம் கொஞ்ச வசதியான ஊர். ஓரளவு படித்தவர்களும் இருந்தனர். வெளியூருக்குப் போய், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பையன்களும் உண்டு. ஆனால் பெண்கள் யாரும் ஊரை விட்டுப் போய்ப் படிக்க ஆரம்பிக்கவில்லை.  
 
<br>பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளிப் படிப்பு முடிந்தபின் ஊரிலேயே இருந்து தந்தைக்கு உதவிகள் செய்து வந்தனர். குடும்பத்தில் பெரியவர்கள் இருந்ததால் இவர்களுக்கு வேலைச் சுமை குறைவு . கூப்பிட்ட குரலுக்குப் பிள்ளை. வேலை இல்லாத நேரங்களில் நண்பர்கள் கூடிப் பேசுவார்கள். மணியின் வீடும் வந்து விட்டது. மணியின் தாயார் செல்லம்மாள், மாதர் சங்கத்தின் தலைவி. வீட்டுக்குள் நுழைந்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் முகமலர்ந்த வரவேற்பு கிடைத்தது. உடனே மணியை நோக்கி அவன் அம்மா, ‘டேய், போய் செண்பகம் அக்காவைக் கூட்டியா “ என்று சொல்லவும் மணி புறப்பட்டுவிட்டான். செண்பகம் மாதர் சங்கத்தின் கன்வீனர். அந்த கிராமம் கொஞ்ச வசதியான ஊர். ஓரளவு படித்தவர்களும் இருந்தனர். வெளியூருக்குப் போய், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பையன்களும் உண்டு. ஆனால் பெண்கள் யாரும் ஊரை விட்டுப் போய்ப் படிக்க ஆரம்பிக்கவில்லை.  
  
<br>செண்பகம் வந்துவிட்டாள்; நான் அவளுடன் வீடுகள் பார்வையிடப் புறப்பட்டேன். சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்து மணியிடம், “மணி, உன் சினேகிதப் பசங்களை 2 மணிக்குக் கூட்டிட்டு வரியா?”என்று கேட்டேன். முதலில் அவன் விழித்தான். “கொஞ்சம் பேசணும், உங்க ஊர்லே உங்களை மாதிரிப் பசங்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக் கலாம்னு நினைக்கறேன். அது சம்பந்தமா பேசணும்” என்று நான் கூறவும் அவன் முகம் மலர்ந்து “சரி “என்று கூறினான். பின் செல்லம்மா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு முன் வாசல்லே உட்கார்ந்து நாங்க பேசலாமா?” என்று கேட்டேன். உடனே அவர்களும் “எங்க ஊருக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. தாராளமா கூட்டி வச்சுப் பேசுங்க. சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு அலையறானுங்க. ஏதாவது வேலை கொடுங்கண்னு” ஆலோசனயும் கூறினாள் செல்லம்மா .
+
<br>செண்பகம் வந்துவிட்டாள்; நான் அவளுடன் வீடுகள் பார்வையிடப் புறப்பட்டேன். சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்து மணியிடம், “மணி, உன் சினேகிதப் பசங்களை 2 மணிக்குக் கூட்டிட்டு வரியா?”என்று கேட்டேன். முதலில் அவன் விழித்தான். “கொஞ்சம் பேசணும், உங்க ஊர்லே உங்களை மாதிரிப் பசங்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக் கலாம்னு நினைக்கறேன். அது சம்பந்தமா பேசணும்” என்று நான் கூறவும் அவன் முகம் மலர்ந்து “சரி “என்று கூறினான். பின் செல்லம்மா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு முன் வாசல்லே உட்கார்ந்து நாங்க பேசலாமா?” என்று கேட்டேன். உடனே அவர்களும் “எங்க ஊருக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. தாராளமா கூட்டி வச்சுப் பேசுங்க. சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு அலையறா னுங்க. ஏதாவது வேலை கொடுங்கண்னு” ஆலோசனயும் கூறினாள் செல்லம்மா .  
  
 
<br>என் பணிப்பட்டியலில் இது கிடையாது. இதை நினைத்து அந்த ஊருக்கு வரவில்லை. திடீரென்று தோன்றியது சொன்னேன். அவ்வளவுதான் செண்பகத்துடன் சில வீடுகளுக்குச் சென்று பெண்மணிகளைச் சந்தித்து வழக்கம் போல் பேசிவிட்டு செல்லம்மா வீட்டிற்குத் திரும்பும் பொழுது மணி ஒன்றாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு மணியின் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். இதற்கிடையில் செல்லம்மாவிடம் ஊர் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  
 
<br>என் பணிப்பட்டியலில் இது கிடையாது. இதை நினைத்து அந்த ஊருக்கு வரவில்லை. திடீரென்று தோன்றியது சொன்னேன். அவ்வளவுதான் செண்பகத்துடன் சில வீடுகளுக்குச் சென்று பெண்மணிகளைச் சந்தித்து வழக்கம் போல் பேசிவிட்டு செல்லம்மா வீட்டிற்குத் திரும்பும் பொழுது மணி ஒன்றாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு மணியின் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். இதற்கிடையில் செல்லம்மாவிடம் ஊர் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  
வரிசை 181: வரிசை 193:
 
<br>கிராமங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் வரும். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜி நாள், பாரதி நினைவு நாள் என்று பல முக்கியமான தினங்கள் வரும். எனவே அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று கூறினேன். குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம், அவர்களையும் சிறு கலை நிகழ்ச்ச்களில் பங்கு பெறச் செய்யலாம் . பேச்சுப் போட்டிகள் நடத்தி சிந்தனா சக்தியை வளர்க்கலாம் என்றெல்லாம் சொன்னபொழுது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். அப்படியே அவர்களை சமுதாயப் பணிக்குக் கொண்டு வந்து விடலாம். வெட்டிப் பேச்சில் மனித சக்தி வீணாவதை நான் விரும்பவில்லை. உழைக்கும் மனிதனுக்குக் களைப்பை நீக்கும் வடிகால் கூத்து. உலகில் எல்லாப் பகுதி மக்களும் வரவேற்கும் கலை கூத்து. சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கூத்தின் வாயிலாக எளிதில் வெளிப்படுத்த முடியும்.  
 
<br>கிராமங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் வரும். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜி நாள், பாரதி நினைவு நாள் என்று பல முக்கியமான தினங்கள் வரும். எனவே அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று கூறினேன். குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம், அவர்களையும் சிறு கலை நிகழ்ச்ச்களில் பங்கு பெறச் செய்யலாம் . பேச்சுப் போட்டிகள் நடத்தி சிந்தனா சக்தியை வளர்க்கலாம் என்றெல்லாம் சொன்னபொழுது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். அப்படியே அவர்களை சமுதாயப் பணிக்குக் கொண்டு வந்து விடலாம். வெட்டிப் பேச்சில் மனித சக்தி வீணாவதை நான் விரும்பவில்லை. உழைக்கும் மனிதனுக்குக் களைப்பை நீக்கும் வடிகால் கூத்து. உலகில் எல்லாப் பகுதி மக்களும் வரவேற்கும் கலை கூத்து. சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கூத்தின் வாயிலாக எளிதில் வெளிப்படுத்த முடியும்.  
  
<br>எப்படி இளைஞர்களுடன் என்னால் இவ்வளவு எளிதாகப் பழக முடிந்தது ? என்னைப் போன்ற பலரை உருவாக்கிய பெருமை என் ஆசிரியர் கே. பி. எஸ் நாரயணன் அவர்களையே சாரும். நான் படித்தது ஆணும் பெண்னும் சேர்ந்து படிக்கும் பள்ளிக் கூடம். அதுவும் ஒரு சின்ன கிராமத்தில் இருந்த பள்ளிக்கூடம். என் வகுப்பில் நான் ஒருத்தி தான் பெண். என் வகுப்பு மாணவர்களுடன் தயங்காமல் பழகுவேன். சந்தேகம்வரின் வகுப்பறையில் பையனின் அருகில் சென்று கேட்டுக் கொள்வேன். கேலி, கிண்டல் கிடையாது. 65 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு சின்ன கிராமத்தில் ஆண், பெண் பள்ளிக்கூடத்தில் எத்தகைய ஆரோக்கியமான சூழல். பெருமையெல்லாம் ஆசிரியர்களுக்கே உரியது.<br>ஆசிரியர் - மாணவர் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதற்கு அஸ்திவாரமாக ஆகும் காலம் கல்விப் பருவம். காலச் சுழற்சியில் அடிபட்ட உறவுகளில் ஆசிரியர்- மாணவர் உறவும் ஒன்று .
+
<br>எப்படி இளைஞர்களுடன் என்னால் இவ்வளவு எளிதாகப் பழக முடிந்தது&nbsp;? என்னைப் போன்ற பலரை உருவாக்கிய பெருமை என் ஆசிரியர் கே. பி. எஸ் நாரயணன் அவர்களையே சாரும். நான் படித்தது ஆணும் பெண்னும் சேர்ந்து படிக்கும் பள்ளிக் கூடம். அதுவும் ஒரு சின்ன கிராமத்தில் இருந்த பள்ளிக்கூடம். என் வகுப்பில் நான் ஒருத்தி தான் பெண். என் வகுப்பு மாணவர்களுடன் தயங்காமல் பழகுவேன். சந்தேகம்வரின் வகுப்பறையில் பையனின் அருகில் சென்று கேட்டுக் கொள்வேன். கேலி, கிண்டல் கிடையாது. 65 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு சின்ன கிராமத்தில் ஆண், பெண் பள்ளிக்கூடத்தில் எத்தகைய ஆரோக்கியமான சூழல். பெருமையெல்லாம் ஆசிரியர்களுக்கே உரியது.<br>ஆசிரியர் - மாணவர் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதற்கு அஸ்திவாரமாக ஆகும் காலம் கல்விப் பருவம். காலச் சுழற்சியில் அடிபட்ட உறவுகளில் ஆசிரியர்- மாணவர் உறவும் ஒன்று .  
  
 
<br>இளைஞர்களின் சங்கங்கள் என்று கருப்பட்டி, மட்டப்பாறை இரு இடங்களில்தான் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற வேண்டிய ருத்ர துளசிதாஸ் அப்பொழுதுதான் பணியில் சேர்ந்தார். இனி அவர் அப்பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். .என்னுடய மேடைப் பேச்சு, பாட்டு, நாடகம் இவைகளால் இளைஞர்களின் பற்றும் கிடைத்தது. மட்டப்பாறையில் எனக்கு வர இருந்த சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்த இளைஞர்கள் கூட்டம். இசையும் கூத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.  
 
<br>இளைஞர்களின் சங்கங்கள் என்று கருப்பட்டி, மட்டப்பாறை இரு இடங்களில்தான் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற வேண்டிய ருத்ர துளசிதாஸ் அப்பொழுதுதான் பணியில் சேர்ந்தார். இனி அவர் அப்பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். .என்னுடய மேடைப் பேச்சு, பாட்டு, நாடகம் இவைகளால் இளைஞர்களின் பற்றும் கிடைத்தது. மட்டப்பாறையில் எனக்கு வர இருந்த சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்த இளைஞர்கள் கூட்டம். இசையும் கூத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.  
  
<br>காலம் எவ்வளவு மாறிவிட்டது ! எழுதும் பொழுதே இக்கால நினைவுகள் வந்து மோதுகின்றன ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்.  
+
<br>காலம் எவ்வளவு மாறிவிட்டது&nbsp;! எழுதும் பொழுதே இக்கால நினைவுகள் வந்து மோதுகின்றன ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்.  
  
 
<br>காலம் மாறியிருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு, மனித சக்தியை ஒருங்கிணைத்து ஆக்க பூர்வமான பல காரியங்கள் செய்ய இயலும். ஆனால் மனிதன் சுயநலப்பேயிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றான். பொருளாசைப்படுகின்றவன் மட்டுமல்ல, நமக்கு எதுக்கு வம்பு என்று தன் அமைதிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஒதுங்கின்றவனும் சுயநலக் காரன்தான். ஒவ்வொருவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும். முடிந்த ஏதோ இன்று இரண்டாவது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.  
 
<br>காலம் மாறியிருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு, மனித சக்தியை ஒருங்கிணைத்து ஆக்க பூர்வமான பல காரியங்கள் செய்ய இயலும். ஆனால் மனிதன் சுயநலப்பேயிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றான். பொருளாசைப்படுகின்றவன் மட்டுமல்ல, நமக்கு எதுக்கு வம்பு என்று தன் அமைதிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஒதுங்கின்றவனும் சுயநலக் காரன்தான். ஒவ்வொருவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும். முடிந்த ஏதோ இன்று இரண்டாவது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.  
வரிசை 191: வரிசை 203:
 
<br>இப்போது எனக்குள்ள வயதைப் பார்த்து, சிலர் என்னிடம் “ உங்களுக்கு இக்கால இளஞர்கள்பற்றித் தெரியாது” என்று கூறுகின்றார்கள். சமூக நலப் பணியில் ஓய்வுக்கு வயது கிடையாது என்பது போல் நல்லது செய்ய நினைப்ப வர்களுக்கு எப்படி சாதி, மதம், மொழி, நாடு என்று கிடையாதோ எல்லா வயதினர்க்கும், ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் செய்ய வேண்டும். சுவையான அனுபவம் ஒன்றைக் கூறப்போகின்றேன் -<br>இக்கால அனுபவம்., இக்கால இளைஞர்களுடன் என் தொடர்பு, உங்களை ரசிக்க வைக்கும் காட்சிகள் காணலாம். நான் கணிணி எப்படி கற்றுக் கொண்டேன் என்பதைச் சொன்னாலே போதும். என் இளைஞர் படை உலகம் முழுதும் இருக்கின் றார்கள். பெரியவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னுடன் அன்புடனும், அக்கறையுடனும் ஏன், ஜாலியாகவும் பழகுவது இளைஞர்கள்தான். கொஞ்ச நேரம் கிராமத்திலிருந்து சென்னை நகர் போகலாம்.  
 
<br>இப்போது எனக்குள்ள வயதைப் பார்த்து, சிலர் என்னிடம் “ உங்களுக்கு இக்கால இளஞர்கள்பற்றித் தெரியாது” என்று கூறுகின்றார்கள். சமூக நலப் பணியில் ஓய்வுக்கு வயது கிடையாது என்பது போல் நல்லது செய்ய நினைப்ப வர்களுக்கு எப்படி சாதி, மதம், மொழி, நாடு என்று கிடையாதோ எல்லா வயதினர்க்கும், ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் செய்ய வேண்டும். சுவையான அனுபவம் ஒன்றைக் கூறப்போகின்றேன் -<br>இக்கால அனுபவம்., இக்கால இளைஞர்களுடன் என் தொடர்பு, உங்களை ரசிக்க வைக்கும் காட்சிகள் காணலாம். நான் கணிணி எப்படி கற்றுக் கொண்டேன் என்பதைச் சொன்னாலே போதும். என் இளைஞர் படை உலகம் முழுதும் இருக்கின் றார்கள். பெரியவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னுடன் அன்புடனும், அக்கறையுடனும் ஏன், ஜாலியாகவும் பழகுவது இளைஞர்கள்தான். கொஞ்ச நேரம் கிராமத்திலிருந்து சென்னை நகர் போகலாம்.  
  
 +
<br>
  
 +
<br>
  
 +
== பகுதி 16  ==
  
 
+
பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருந்தால் பித்துப் பிடித்துவிடும். கொஞ்சம் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இளைஞர்கள் பற்றி, அதுவும் தற்காலச்சூழலில் அவர்களைக் காணலாம். சங்கிலிப் பிணைப்பைப்போல் சம்பவங்கள் இணைந்துவிடும். சிறிது நேரம் நினைவுகள் இளமை ஊஞ்சலில் ஆடட்டுமே! வேடிக்கை பார்க்கலாம். அதிலும் செய்திகள் இல்லாமலா போய்விடும்! பரபரப்பாக இருந்த வாழ்க்கை பணியில் ஓய்வு பெறவும் சில ஆண்டுகளில் மூட்டுவலியால் வீட்டில் முடங்கி விட்டேன். 2001 ஆண்டு ஜுலை மாதம் மகன் அமெரிக்காவிலிருந்து வரும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் எடுத்து வந்தான்&nbsp;; “அம்மா, உங்களுக்ககத்தான் கொண்டு வந்திருக்கேன். தென்காசி போய்ட்டு வர 10 நாட்களாகும். அதற்குள் கொஞ்சமாவது நீங்க படிச்சிருக்கணும். இல்லேன்னா யாருக்காவது கொடுத்து டுவேன்” என்று கூறிவிட்டு எங்கள் வீட்டு காம்பவுண்டில் பின்னால் மாடியில் குடியிருக்கும் பையன்களைக் கூப்பிட்டு “ராஜா, என் அம்மாவுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி சொல்லிக் கொடுங்கள் “ என்றான். மாடிவீட்டுப் பையன்கள் என் பேத்தியின் நண்பர்கள். உடனே கற்பனையில் போய்விட வேண்டாம். பேத்திக்கு மூன்று வயது. வெளியில் போய்விடக் கூடாது என்று காம்பவுண்டு கதவுகளை பூட்டி இருப்போம். இவளோ மாடிக்குப் போய் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அதனால் இப்பொழுது அவர்களுக்கும் நான் பாட்டி. இதுவரை யாரும் என்னிடம் பேசியதில்லை. இனிமேல் பேசியே ஆக வேண்டும் .  
== பகுதி 16 ==
+
 
+
 
+
 
+
பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருந்தால் பித்துப் பிடித்துவிடும். கொஞ்சம் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இளைஞர்கள் பற்றி, அதுவும் தற்காலச்சூழலில் அவர்களைக் காணலாம். சங்கிலிப் பிணைப்பைப்போல் சம்பவங்கள் இணைந்துவிடும். சிறிது நேரம் நினைவுகள் இளமை ஊஞ்சலில் ஆடட்டுமே! வேடிக்கை பார்க்கலாம். அதிலும் செய்திகள் இல்லாமலா போய்விடும்! பரபரப்பாக இருந்த வாழ்க்கை பணியில் ஓய்வு பெறவும் சில ஆண்டுகளில் மூட்டுவலியால் வீட்டில் முடங்கி விட்டேன். 2001 ஆண்டு ஜுலை மாதம் மகன் அமெரிக்காவிலிருந்து வரும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் எடுத்து வந்தான் ; “அம்மா, உங்களுக்ககத்தான் கொண்டு வந்திருக்கேன். தென்காசி போய்ட்டு வர 10 நாட்களாகும். அதற்குள் கொஞ்சமாவது நீங்க படிச்சிருக்கணும். இல்லேன்னா யாருக்காவது கொடுத்து டுவேன்” என்று கூறிவிட்டு எங்கள் வீட்டு காம்பவுண்டில் பின்னால் மாடியில் குடியிருக்கும் பையன்களைக் கூப்பிட்டு “ராஜா, என் அம்மாவுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி சொல்லிக் கொடுங்கள் “ என்றான். மாடிவீட்டுப் பையன்கள் என் பேத்தியின் நண்பர்கள். உடனே கற்பனையில் போய்விட வேண்டாம். பேத்திக்கு மூன்று வயது. வெளியில் போய்விடக் கூடாது என்று காம்பவுண்டு கதவுகளை பூட்டி இருப்போம். இவளோ மாடிக்குப் போய் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அதனால் இப்பொழுது அவர்களுக்கும் நான் பாட்டி. இதுவரை யாரும் என்னிடம் பேசியதில்லை. இனிமேல் பேசியே ஆக வேண்டும் .
+
  
 
<br>நால்வரும் பொறியியல் வல்லுனர்கள். கீழைக்கரை கல்லூரியில் படித்தவர்கள். ராஜாகான், ஈசா, நயினா, ஷேக், இவர்களுடன் வெளியில் தங்கி முதுகலைப் படிப்பு படிக்கும் அப்பாஸும் அடிக்கடி வந்து தங்குவான். மாடியில் அரட்டைச் சத்தம் கேட்கும். மற்றபடி இருப்பதே தெரியாமல் அடக்கமாக இருப்பவர்கள் .அன்று இரவு ஏழுமணிக்கு ஐவரும் வந்து விட்டார்கள். நான் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தேன். ராஜா என் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் மற்றவர்களும் நாற்காலி, ஸ்டூல் என்று எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள் எனக்கு இத்தனை வாத்தியார்களா?  
 
<br>நால்வரும் பொறியியல் வல்லுனர்கள். கீழைக்கரை கல்லூரியில் படித்தவர்கள். ராஜாகான், ஈசா, நயினா, ஷேக், இவர்களுடன் வெளியில் தங்கி முதுகலைப் படிப்பு படிக்கும் அப்பாஸும் அடிக்கடி வந்து தங்குவான். மாடியில் அரட்டைச் சத்தம் கேட்கும். மற்றபடி இருப்பதே தெரியாமல் அடக்கமாக இருப்பவர்கள் .அன்று இரவு ஏழுமணிக்கு ஐவரும் வந்து விட்டார்கள். நான் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தேன். ராஜா என் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் மற்றவர்களும் நாற்காலி, ஸ்டூல் என்று எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள் எனக்கு இத்தனை வாத்தியார்களா?  
வரிசை 207: வரிசை 217:
 
<br>கணிணிபற்றி ஒவ்வொன்றாக ராஜா சொல்ல ஆரம்பிக்கவும் பயம் வர ஆரம்பித்தது. தொல்காப்பியம் மனப்பாடம் செய்ய வேண்டி வந்த பொழுது படிப்பதையே நிறுத்திவிடலாம் என்று நினைத்தவள். கணிணியும் வேண்டாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் எண்ணங்களைப் புரிந்து கொண்டவன் போல், “பயப்படாதீங்க, ஆரம்பத்திலே அப்படித்தான் தோணும். அப்புறம் பாருங்க, நீங்க கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்க மாட்டீங்க “ என்றான் ராஜா. பாவி எந்த நேரத்தில் சொன்னானோ , இப்பொழுது அப்படித்தான் எப்பொழுதும் கணிணியுடன் உட்கார்ந்தி ருக்கின்றேன். அடுத்து ஒரு பெயர் வைக்க வேண்டுமாம். மெயில் ஐடியாம் . எனக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு பெயர் சொன்னேன் ( மன்னிக்கவும் . பெயர் சொல்ல மாட்டேன் ). பாஸ்வொர்ட் என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். Messenger என்று ஒன்றாம் அதனையும் ஏற்படுத்தினான் .“பாட்டி , இதில் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெயரைப் பதிந்தால் அரட்டையடிக்கலாம் “ என்று சொல்லவும் ஒரே குஷி. தனிமை பறந்துவிடும். அடுத்து அவன் சொன்னதுதான் என்னுடைய புது பந்தம். “பாட்டி, உங்களுக்கு, keyboard, mouse கணிணியில் கவனம், மூன்றும் ஒரே சமயத்தில் வேகமாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் சாட்டிங் போனால் சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். அதனால் இப்போ உங்களை நான் சென்னை ஆன் லயன் சாட்டிங் அறைக்குக் கூட்டிப் போகப் போறேன். அங்கே வர்ரவங்ககிட்டே நீங்க அரட்டை அடிக்கணும். நான் சொல்லச் சொல்ல நீங்க டைப் செய்யுங்க “ மனத்தில் ஒரே பரபரப்பு. ஆர்வத்தை உண்டுபண்னிவிட்டான் அடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.  
 
<br>கணிணிபற்றி ஒவ்வொன்றாக ராஜா சொல்ல ஆரம்பிக்கவும் பயம் வர ஆரம்பித்தது. தொல்காப்பியம் மனப்பாடம் செய்ய வேண்டி வந்த பொழுது படிப்பதையே நிறுத்திவிடலாம் என்று நினைத்தவள். கணிணியும் வேண்டாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் எண்ணங்களைப் புரிந்து கொண்டவன் போல், “பயப்படாதீங்க, ஆரம்பத்திலே அப்படித்தான் தோணும். அப்புறம் பாருங்க, நீங்க கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்க மாட்டீங்க “ என்றான் ராஜா. பாவி எந்த நேரத்தில் சொன்னானோ , இப்பொழுது அப்படித்தான் எப்பொழுதும் கணிணியுடன் உட்கார்ந்தி ருக்கின்றேன். அடுத்து ஒரு பெயர் வைக்க வேண்டுமாம். மெயில் ஐடியாம் . எனக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு பெயர் சொன்னேன் ( மன்னிக்கவும் . பெயர் சொல்ல மாட்டேன் ). பாஸ்வொர்ட் என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். Messenger என்று ஒன்றாம் அதனையும் ஏற்படுத்தினான் .“பாட்டி , இதில் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெயரைப் பதிந்தால் அரட்டையடிக்கலாம் “ என்று சொல்லவும் ஒரே குஷி. தனிமை பறந்துவிடும். அடுத்து அவன் சொன்னதுதான் என்னுடைய புது பந்தம். “பாட்டி, உங்களுக்கு, keyboard, mouse கணிணியில் கவனம், மூன்றும் ஒரே சமயத்தில் வேகமாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் சாட்டிங் போனால் சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். அதனால் இப்போ உங்களை நான் சென்னை ஆன் லயன் சாட்டிங் அறைக்குக் கூட்டிப் போகப் போறேன். அங்கே வர்ரவங்ககிட்டே நீங்க அரட்டை அடிக்கணும். நான் சொல்லச் சொல்ல நீங்க டைப் செய்யுங்க “ மனத்தில் ஒரே பரபரப்பு. ஆர்வத்தை உண்டுபண்னிவிட்டான் அடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.  
  
<br>“பாட்டி, இங்கே உங்க சொந்தப் பெயரை சொல்லக் கூடாது, அதுக்கு தனியே பேர் வைக்கணும்” இது ராஜா ;“நமோசா” இது நயினா ;
+
<br>“பாட்டி, இங்கே உங்க சொந்தப் பெயரை சொல்லக் கூடாது, அதுக்கு தனியே பேர் வைக்கணும்” இது ராஜா&nbsp;;“நமோசா” இது நயினா&nbsp;;  
  
 +
<br>
  
 
+
“அதென்ன நமோசா, சமோசா மாதிரி. பேரு நல்லா இல்லே” இது நான்&nbsp;;  
“அதென்ன நமோசா, சமோசா மாதிரி. பேரு நல்லா இல்லே” இது நான் ;
+
  
 
<br>“பாட்டி, பேரு புதுமையா இருக்கணும், உடனே பசங்க குதி போட்டுக் கிட்டு பேச வருவாங்க. ஊர் கேட்டா ஜப்பான், இங்கே காலேஜ்லே படிக்க வந்திருப்பதா சொல்லுங்க” என்று அப்பாஸ் கூறிவரும் பொழுதே, நவாஸ் “ வயசு கேட்டா 19 ன்னு சொல்லணும்” என்றான்;  
 
<br>“பாட்டி, பேரு புதுமையா இருக்கணும், உடனே பசங்க குதி போட்டுக் கிட்டு பேச வருவாங்க. ஊர் கேட்டா ஜப்பான், இங்கே காலேஜ்லே படிக்க வந்திருப்பதா சொல்லுங்க” என்று அப்பாஸ் கூறிவரும் பொழுதே, நவாஸ் “ வயசு கேட்டா 19 ன்னு சொல்லணும்” என்றான்;  
வரிசை 217: வரிசை 227:
 
<br>அடப்பாவிங்களா, 67 வயது பெண்மணியை 19 வயதுன்னு சொல்ல ணுமாம். என்ன போலித்தனம். “பொய் சொல்ல முடியாது” என்று கத்தினேன். எல்லோரும் சிரித்தார்கள்.  
 
<br>அடப்பாவிங்களா, 67 வயது பெண்மணியை 19 வயதுன்னு சொல்ல ணுமாம். என்ன போலித்தனம். “பொய் சொல்ல முடியாது” என்று கத்தினேன். எல்லோரும் சிரித்தார்கள்.  
  
<br>“பாட்டி, உங்க வயசைச் சொன்னா ஒரு பயலும் பேச வரமாட்டான். சும்மா வேடிக்கைக்குத்தானே. அப்போத்தான் உங்களுக்கு ஸ்பீடு வரும் “என்று நிதானமாகச் சொன்னான் ஈசா ;எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜா, “பாட்டி, நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க. அது போல நீங்க அனுப்பறது ஒரு பாத்திரம்னு நினங்க. பேசும் பொழுதுமட்டும் ஜாக்கிரதையாகப் பேசுங்க. வாலுங்க, நீங்க சமாளிச்சுடுவீங்க. நான் தான் பக்கத்தில் இருக்கேனே. நான் சொல்றதை நீங்க அடிச்சா போதும் “ என்று சொல்லி தைரியம் ஊட்டினான் .அப்பொழுது சென்னை ஆன் லயன் சாட்டிங் பிரபலம். மெயில் ஐ டி கொடுக்க வேண்டாம். பெயர்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மைக் கூப்பிடறவங்ககிட்டே நாம் பேசலாம். என் கணிணி பயணம் ஆரம்பித்தது; முதன் முதலில் சென்னை ஆன் லயனில்தான் முதலில் பேச ஆரம்பித்தவன் பெயர் வம்ஸி. பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம். வயது 21. முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தயக்கம் விலகியது. உரையாடல் வேடிக்கையாக இருந்ததே தவிர விரசமாக இல்லை. விலாசம் கேட்டான் ராஜா சொல்லச் சொல்லத் நானே டைப் செய்து கொண்டிருந்தேன். “ விலாசம் இப்போ கொடுக்க மாட்டேன். கொஞ்ச நாளாகட்டும் “ என்று சொன்னேன். இன்னும் சிலர் கூப்பிட்டாலும் பதில் கூறமுடிய வில்லை. என்னால் ஒருவனுக்கே பதில் அடிக்க நேரம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த ஒற்றைவிரல் நாட்டியம் தான் இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் சொன்னது சரிதான். பயிற்சிக்கு எனக்கு சாட்டிங் உதவி செய்தது .அடுத்த நாளும் பயிற்சி தொடர்ந்தது. இரண்டாம் நாள் இன்னொரு புது நண்பன் பெயர் ஜான். பள்ளிப் படிப்பை முடித்துப் பின் அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை பார்த்துக் கொண்டே. எம். சி. ஏ வரை அஞ்சல் வழிக்கல்வி மூலம் படித்து ஒரு தொழிலையும் அமைத்துக் கொண்டு மென்பொருள் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தான். உழைப்பால் உயர்ந்தவன் வயது 27. அவனை எனக்கு மிகவும் பிடித்தது. மூன்றாம் நாள் யாரும் வரும் முன்னர் நானே கணிணி முன் உட்கார்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் இரு புதிய நண்பர்கள். அன்றும் வம்ஸியும் ஜானும் வந்திருந்தனர். எல்லோரும் தொலைபேசி எண் கேட்டார்கள் . நான் தயங்காமல் கொடுத்துவிட்டேன். நான் உட்கார்ந்திருக்கும் பொழுதே மாடி வீட்டுப் பசங்க வந்து விட்டார்கள் நான் நடந்ததைக் கூறவும் பதறி விட்டார்கள். “பாட்டி, தப்பு செய்துட்டீங்க. பசங்க வீட்டூக்கு வந்துடுவாங்க” .
+
<br>“பாட்டி, உங்க வயசைச் சொன்னா ஒரு பயலும் பேச வரமாட்டான். சும்மா வேடிக்கைக்குத்தானே. அப்போத்தான் உங்களுக்கு ஸ்பீடு வரும் “என்று நிதானமாகச் சொன்னான் ஈசா&nbsp;;எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜா, “பாட்டி, நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க. அது போல நீங்க அனுப்பறது ஒரு பாத்திரம்னு நினங்க. பேசும் பொழுதுமட்டும் ஜாக்கிரதையாகப் பேசுங்க. வாலுங்க, நீங்க சமாளிச்சுடுவீங்க. நான் தான் பக்கத்தில் இருக்கேனே. நான் சொல்றதை நீங்க அடிச்சா போதும் “ என்று சொல்லி தைரியம் ஊட்டினான் .அப்பொழுது சென்னை ஆன் லயன் சாட்டிங் பிரபலம். மெயில் ஐ டி கொடுக்க வேண்டாம். பெயர்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மைக் கூப்பிடறவங்ககிட்டே நாம் பேசலாம். என் கணிணி பயணம் ஆரம்பித்தது; முதன் முதலில் சென்னை ஆன் லயனில்தான் முதலில் பேச ஆரம்பித்தவன் பெயர் வம்ஸி. பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம். வயது 21. முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தயக்கம் விலகியது. உரையாடல் வேடிக்கையாக இருந்ததே தவிர விரசமாக இல்லை. விலாசம் கேட்டான் ராஜா சொல்லச் சொல்லத் நானே டைப் செய்து கொண்டிருந்தேன். “ விலாசம் இப்போ கொடுக்க மாட்டேன். கொஞ்ச நாளாகட்டும் “ என்று சொன்னேன். இன்னும் சிலர் கூப்பிட்டாலும் பதில் கூறமுடிய வில்லை. என்னால் ஒருவனுக்கே பதில் அடிக்க நேரம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த ஒற்றைவிரல் நாட்டியம் தான் இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் சொன்னது சரிதான். பயிற்சிக்கு எனக்கு சாட்டிங் உதவி செய்தது .அடுத்த நாளும் பயிற்சி தொடர்ந்தது. இரண்டாம் நாள் இன்னொரு புது நண்பன் பெயர் ஜான். பள்ளிப் படிப்பை முடித்துப் பின் அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை பார்த்துக் கொண்டே. எம். சி. ஏ வரை அஞ்சல் வழிக்கல்வி மூலம் படித்து ஒரு தொழிலையும் அமைத்துக் கொண்டு மென்பொருள் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தான். உழைப்பால் உயர்ந்தவன் வயது 27. அவனை எனக்கு மிகவும் பிடித்தது. மூன்றாம் நாள் யாரும் வரும் முன்னர் நானே கணிணி முன் உட்கார்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் இரு புதிய நண்பர்கள். அன்றும் வம்ஸியும் ஜானும் வந்திருந்தனர். எல்லோரும் தொலைபேசி எண் கேட்டார்கள் . நான் தயங்காமல் கொடுத்துவிட்டேன். நான் உட்கார்ந்திருக்கும் பொழுதே மாடி வீட்டுப் பசங்க வந்து விட்டார்கள் நான் நடந்ததைக் கூறவும் பதறி விட்டார்கள். “பாட்டி, தப்பு செய்துட்டீங்க. பசங்க வீட்டூக்கு வந்துடுவாங்க” .  
  
<br>“வரட்டுமே, வந்தா, பேத்தி வெளியே போயிருக்கான்னு சொல்லிட்டுப் போறேன். எத்தனை நாள் வருவான். போரடித்து வருவதை அவனே நிறுத்தி விடுவான் “ என்று நான் கூறவும் “ பாட்டி விளஞ்ச பாட்டி “ என்று கூறிச் சிரித்தார்கள். ஆனால் நடந்தது வேறு. வம்சிதான் முதலில் கூப்பிட்டான். பேச ஆரம்பித்து, அதிக நேரம் இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். கடைசியில் நான் யார் என்பதைக் கூறினேன். அவன் சொன்ன பதில் எனக்குத்தான் வியப்பை அளித்தது. என் குரலால், நான் சிறு பெண் இல்லை என்பதை யூகித்து விட்டான். ஆனால் பேச்சு சுவாரஸ்யமக இருந்ததால் தொடர்ந்து பேசியிருக்கின்றான் . “அம்மா, நீங்கள் செய்தது சரி. வயதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் பேச ஆரம்பித்திருக்க மாட்டேன். சாட்லே வர்ரவங்க கெட்டவங்க இல்லே. பொழுது போகணும். சில சமயம் நல்ல பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனாலும் இப்போ உங்க கிட்டே பேசினேனே, அவ்வளவு நேரம் பேசி இருக்க மாட்டேன். எத்தனை விஷயம் பேசினோம். உங்க வீட்டுக்கு வருவேன். சொல்லிட்டு வர மாட்டேன். திடீர்னு வருவேன் ‘ என்றான்.. அடுத்துப் பேசியவன் ஜான். அவனும் உண்மை தெரிந்து அதிர்ந்து போகவில்லை. அன்றே வீட்டிற்கு வந்தான். வம்சி சொன்னது போல் திடீரென்று ஒரு நாள் வந்து, “ அம்மா , ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. பசிக்குது. “குழந்தையாய் கேட்கவும் உருகிப் போனேன். இன்றும் அவன் என் செல்லக் குழந்தையாக இருக்கின்றான் .
+
<br>“வரட்டுமே, வந்தா, பேத்தி வெளியே போயிருக்கான்னு சொல்லிட்டுப் போறேன். எத்தனை நாள் வருவான். போரடித்து வருவதை அவனே நிறுத்தி விடுவான் “ என்று நான் கூறவும் “ பாட்டி விளஞ்ச பாட்டி “ என்று கூறிச் சிரித்தார்கள். ஆனால் நடந்தது வேறு. வம்சிதான் முதலில் கூப்பிட்டான். பேச ஆரம்பித்து, அதிக நேரம் இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். கடைசியில் நான் யார் என்பதைக் கூறினேன். அவன் சொன்ன பதில் எனக்குத்தான் வியப்பை அளித்தது. என் குரலால், நான் சிறு பெண் இல்லை என்பதை யூகித்து விட்டான். ஆனால் பேச்சு சுவாரஸ்யமக இருந்ததால் தொடர்ந்து பேசியிருக்கின்றான் . “அம்மா, நீங்கள் செய்தது சரி. வயதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் பேச ஆரம்பித்திருக்க மாட்டேன். சாட்லே வர்ரவங்க கெட்டவங்க இல்லே. பொழுது போகணும். சில சமயம் நல்ல பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனாலும் இப்போ உங்க கிட்டே பேசினேனே, அவ்வளவு நேரம் பேசி இருக்க மாட்டேன். எத்தனை விஷயம் பேசினோம். உங்க வீட்டுக்கு வருவேன். சொல்லிட்டு வர மாட்டேன். திடீர்னு வருவேன் ‘ என்றான்.. அடுத்துப் பேசியவன் ஜான். அவனும் உண்மை தெரிந்து அதிர்ந்து போகவில்லை. அன்றே வீட்டிற்கு வந்தான். வம்சி சொன்னது போல் திடீரென்று ஒரு நாள் வந்து, “ அம்மா , ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. பசிக்குது. “குழந்தையாய் கேட்கவும் உருகிப் போனேன். இன்றும் அவன் என் செல்லக் குழந்தையாக இருக்கின்றான் .  
  
 
<br>சாட்டிங் மூலம் ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் 27. மாடி வீட்டுப் பையன்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 32 ஆயிற்று. இவர்களை ஒன்றுபடுத்த ஒரு புதிய திட்டம் தோன்றியது.  
 
<br>சாட்டிங் மூலம் ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் 27. மாடி வீட்டுப் பையன்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 32 ஆயிற்று. இவர்களை ஒன்றுபடுத்த ஒரு புதிய திட்டம் தோன்றியது.  
  
 +
<br>
 +
 +
= பகுதி 17 =
 +
 +
புனிதவதி இளங்கோவன் அண்ணியாக இருந்தவர், தோழியானார் .நாங்கள் கருத்துக்களில் ஒன்றுபடுவதும் உண்டு, சிலவற்றில் மாறுபடுவதும் உண்டு. அது எங்கள் நட்பைப் பாதித்தது இல்லை.
 +
 +
<br>இளைஞர்களுக்காக நான் நினைத்த திட்டத்தைக் கூறவும் மகிழ்ச்சி யுடன் ஆதரித்தார். அதுமட்டுமன்று, ஒத்துழைப்பும் தருவதாகச் சொன்னார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்தே திட்டமிட்டோம். மாதம் ஒரு முறை நடக்கும் கூட்டங்களுக்கும் வந்திருந்து அவர்களே முன்னிருந்து நடத்திக் கொடுத்தார்கள் ஜூலை மாதம் 17ல் கணிணி யைத் தொட்டேன். ஒருமாதத்தில் அரட்டையில் நண்பர்கள் சேர்ந்து விட்டனர். எனவே முதல் ஒன்றுகூடும் கூட்டம் ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகியது.
 +
 +
<br>முதல் கூட்டத்தின் சிறப்புவிருந்தினர் அஸ்வத்தாமா என்ற குமணன். இவர் வர்த்தக ஒலிபரப்பின் மூலம் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். சென்னை வானொலியில் செய்திப் பிரிவில் வேலை பார்த்தவர். பின்னால் சொந்தத் தொழிலில் இறங்கி விட்டார். இவர் பெயரைச் சொல்லவும் இளைஞர்கள் உற்சாகமாகி விட்டனர். சொற்பொழிவு கிடையாது. கலந்துரையாடல். விருப்பம் போல் கேள்விகள் கேட்கலாம். அந்தக் கலந்துரையாடல் சுவாரஸ்யமான தாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. புனிதம்தான் பேச்சில் கலந்து கொண்டார் .
 +
 +
<br>அடுத்த கூட்டத்தில் தம்பதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இரு தலைமுறைகளின் கலந்துரையாடல்.இரு தரப்பும் மனம்விட்டுப் பேசினர் ; மூன்றாவதில் இளவயதுப் பெண்கள் வந்தனர். விவாதங்கள் சூடாக இருந்தன. புனிதம் நடுவராக இருந்து வழி நடத்தினார்கள் <br>நான்காவது சிறப்பு விருந்தினராக சோதிட அறிஞர் திரு ஏ.வி. சுந்தரம் அவர்கள் வந்திருந்தார். ஐ.ஐ.டி யில் வேலைபார்த்துக் கொண்டி ருந்தாலும் சோதிடத்தை விஞ்ஞானம் என்ற கருத்தில் ஆய்வு செய்தவர். இளைஞர்களில் பல மதத்தினர், கடவுள் மறுப்பு கருத்துக் கொண்டவரும் இருந்தனர். அன்றைய விவாதம் மிகவும் அருமையாக இருந்தது.
 +
 +
<br>ஐந்தாம் சந்திப்பு யாராலும் மறக்க முடியாதது. புத்தாண்டு கொண்டாட புதிய வழி. யாஹூ சாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் உலக அளவில் சேர்ந்து விட்டனர். அவர்கள் வெளி நாட்டில் இருந்தனர் அவர்களுக்கு நான் 19 வயதுப் பெண். 2001 டிசம்பர் இரவு 11 மணிக்கு சாட்டில் அவர்கள் வர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். சென்னை வாசிகளுக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. என் வயதைக் கூறக்கூடாது என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். என் உறவினர்கள், சில குடும்ப நண்பர்கள் குடும்பமாக வந்திருந்தனர். அன்று உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.
 +
 +
<br>சரியாக இரவு 11 மணிக்கு யாஹூ அரட்டை அறைக்கு நுழைந்தோம். வம்ஸி தான் பொறுப்பு. என்னை விசாரிக்கவும் அவன் சொன்ன பதில் இப்பொழுதும் நினைக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கின்றது <br>“மச்சி, அவ என் தங்கச்சிதான். ஒரே வெட்கம் இங்கே பக்கத்தில் குந்திகிட்டு வேடிக்கை பாக்கறா. நீ நல்லா பாடுவியாமே. பாடு. உன் பாட்டைக் கேட்க ஓடோடி வந்துருக்கோம் ஏமாத்தாதே மச்சி”
 +
 +
<br>வம்ஸியின் பேச்சில் மயங்கிப் பாட ஆரம்பித்து விட்டான். அவ்வளவுதான் ஒவ்வொருவராகப் பாட ஆரம்பித்தனர், புனிதமும் பாடினார்கள். அரட்டைக்கு வந்தவர்களும் உற்சாகமாகப் பாடினர். வம்ஸி தன் நண்பர்களுடன் கானா பாட்டு பாடினான். புது வருடம் பிறக்கும் பொழுது உலக அளவில் வாழ்த்துத் தெரிவித்து கொண்டு கத்தினோம். இன்றும் யாரும் அந்த சம்பவத்தை மறக்க வில்லை; மனத்தில் பதிந்த ஓர் அற்புதமான நிகழ்வு.
 +
 +
<br>ஆறாவது கூட்டத்திற்கு பல துறைகளிலிருந்து அழைக்கப்பட்டு வந்திருந்தனர். மறைந்த திருமதி சத்தியவாணிமுத்துவின் மகள் சித்ரா அரசியல் சார்பில் வந்திருந்தார். மேடைப் பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கட்சியில் மகளிர் அணியில் இருப்பவர். வந்திருந்த அனைவரும் ஏதாவது பணியிலோ அல்லது சொந்தத் தொழிலோ செய்பவர்கள். அன்று நடந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. ஜான், மாத்யூ இருவரைத் தவிர யாரும் இன்னும் பணியில் சேராதவர்கள்.
 +
 +
<br>ஏழாவது கூட்டம் சோகமானது. காரணம் அதுவே அவர்களுக்குக் கடைசிக் கூட்டம். நான் மார்ச் மாதம் அமெரிக்கா புறப்பட்டுவிட்டேன் இளைஞர்கள் பழக்கம் வெறும் சந்திப்புதானா? இல்லவே இல்லை. பதவி ஓய்வு பெற்றபின் வெளி உலகத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டிய நிலை. மாறியிருக்கும் காலத்தை எனக்குக் காட்டியவர்கள் இவர்கள். அதிர்ச்சிகளும் அதிசயங்களும் உணர்ந்தேன். அவர்களும் பாசத்துடன் அம்மா வென்றோ ஆன்டி என்று அழைத்த்னர். பலர் தங்கள் பிரச்சனைகளைக் கூறினர்; முடிந்தமட்டும் தீர்த்து வைத்தேன். இவர்களில் சிலர் அவ்வப்பொழுது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்வர்.
 +
 +
<br>ராஜா என்றோ வருபவன் இல்லை. வீட்டின் மாடியில் குடியிருப்பவன். ஆசானாய் வந்தவன் நண்பனா னான். பல நாட்கலில் இரவு 12 மணி வரை பேசிக் கொண்டி ருப்போம். நிறைய தமிழ்க் கதைகள் படிப்பான். நல்ல சிந்தனை. எங்களுடைய அலசல்கள் பல கோணங் களில் இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் ஈஸா முதலில் என்னைப் பார்த்துவிட்டுத்தான் தன் அறைக்குச் செல்வான். என் முகம் வாடியிருந்தால் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டே செல்வான்.
 +
 +
<br>ஷேக் கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் ஆனாலும் பாசமுள்ளவன். ஒருநாள் திடீரென்று ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தான். திறந்து பார்த்தால் இரண்டு உளுந்து வடை. அவன் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கவும் என் நினைவு வந்ததாம். அதனால் வாங்கி வந்தானாம் .இவர்களில் நயினாதான் வித்தியாசமானவன். அறையைச் சுத்தமாக வைக்கும் வேலைகளை இவன்தான் செய்வான். இன்னும் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. ஆனால் தினமும் காலையில் குளித்துவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் சென்று விடுவான்.
 +
 +
 +
 +
ஒரு நாள் அவனை “எங்கே காலையில் தினமும் போகின்றாய்? ” என்று கேட்டேன். அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன் ; “பாட்டி, தினமும் புரசவாக்கம் பஸ் ஸ்டாண்டிற்குத்தான் போறேன். காலேஜுக்கு அப்பொதான் பொண்ணுங்க வந்து பஸ் ஏறுவாங்க. அவங்கள வேடிக்கை பாக்கத்தான் போறேன் “ நான் சிரித்து கொண்டேன். என் வயதில் மற்றவர்கள் என்ன சொல்லுவர் ? “ஏண்டா ஒழுங்கா வேலை தேடத் தெரியல்லே. இப்படி பொண்ணுங்க பின்னாலே சுத்தினா உருப்புடுவியா? “ இந்த வயது ரசிக்கும் வயது. எதை எதை எப்போ, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை பெரியவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய காலம்.
 +
 +
<br>நான் மட்டுமல்ல, புனிதமும் மாடிவீட்டுப் பையன்க ளுடன் ஒன்றிப் பழகினார்கள். அந்த அறை சரியான பிரம்மச்சாரி அறை. அங்கே அவர்கள் சி.டி வாங்கி கம்ப்யூட்டரில் போட்டு சினிமாப் பார்ப்பார்கள். சில சமயம் நாங்கள் இருவரும் அங்கு போய் அந்தக் குப்பை மேட்டில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கின்றோம். <br>ராஜா எனக்கு எழுதிய கடிதத்தில் என்னைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்து எழுதியிருந்தான். ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கு காட்ட விரும்புகின்றேன் -
 +
 +
<br>“நான் எழுத அமர்ந்துவிட்டேன். .. என்ன எழுதுவது.. ? இதயம் ஆராய்கிறது. முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும். இப்போது நான் யார்? ஒரு பாசமிகு பாட்டிக்குப் பேரனா ? ஓர் எழுத்தா ளரின் வாசகனா? விமர்சகனா? ஒரு அறிவுத் தோழியின் தோழனா ? இல்லை ஓர் அறிவுபூர்வ அப்பாவிக்கு ஆலோசகனா ? இல்லை ஒரு மாணவியின் ஆசிரியனா? இல்லை, ஓர் ஆசிரியையின் மாணவனா? முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும்! எப்படி இது சாத்தியம் ? இரு உயிர்களுக்கு மத்தியில் இத்தனை உறவுகளுக்கு எப்படி சாத்தியம்? முடிந்ததே , அப்படி இருக்க முடிந்ததே ஒரு பாட்டியாக, ஓர் இலக்கியவாதியாக, விமர்சகராக, மாணவியாக, ஆசிரியராக, ஆலோசகராக, அப்பாவியாக ஒரு பாட்டி. .. , அதிலும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மூதாட்டி என் வாழ்க்கைப்பயணத்தில் வருவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் வந்தார். அப்படி ஒரு பெண் அத்தனை உறவுகளையும் சுமந்து கொண்டு என் வாழ்வில் வந்தார் “ பாட்டிக்குப் பேரன் எழுதிய கடிதம்.
 +
 +
<br>தலைமுறை இடைவெளி எங்களிடையே நாங்கள் உணரவில்லை. இன்றும் அவன் என் பேரன், என் தோழன், என் ஆசான். ஈசனுக்கு குருவாய் அமரும் சண்முகன் நம் வாழ்க்கையிலும் உண்டு. மாடிவீட்டுப் பையன்கள் அனைவரும் இப்பொழுது துபாயில் வேலை பார்க்கின்றனர். என் ஆசான் என்று குறிப்பிட்ட ராஜாகான் தான் இன்று கீழை ராசா என்ற புனை பெயரில் துபாய் தமிழர்கள் மத்தியில், தமிழ் இலக்கியக் கூட்டங்களில் கவிதை பாடிக்கொண்டு, கதை பேசிக் கொண்டு வலம் வருவதோடு, தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சாருகேசி என்ற வலைப்பூவையும் எழுதி வருகின்றான். நட்புக்கு ஓர் இலக்கணம். சிறந்த சிந்தனையாளன். அண்ணாச்சியின் அன்புத் தம்பி.
 +
 +
<br>என் நினைவில்லத்தில் மணியனும் சாவியும் இருப்பது போல்தான் பெரிய கருப்பனும், ராஜாவும் இருக்கின் றார்கள். அது சாதனையாளர் இல்லம் அன்று; ஓர் அன்புக்குடில்.
 +
 +
<br>
  
 +
<br>
  
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 18:37, 27 பெப்ரவரி 2010 (UTC)
+
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 18:37, 27 பெப்ரவரி 2010 (UTC)  
  
 
[[Category:எழுத்தாளர்கள்]]
 
[[Category:எழுத்தாளர்கள்]]

13:37, 28 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்

இக்கட்டுரைகள் சீதாலட்சுமி அவர்களால் மின்தமிழ் மடலாடல் குழுவில் எழுதப்பட்டவை.

சீதாலட்சுமி: மின்னஞ்சல்:


பொருளடக்கம்

பகுதி 10

அம்மாவின் அறிவுரைகளில் சில -“பணி செய்யும் பொழுது எளிய உடைகளுடன் இருப்பது நல்லது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தோற்றம் இருக்கக் கூடாது. கிராமத்தினரின் மதிப்பையும் நம்பிக்கையும் பெறும் வண்ணம் அவர்களுடன் பழக வேண்டும்.சாதி, மதம். அரசியல் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். குடும்பங்களுடன் ஒன்றிப் பழகினால் ,நாம் சொல்லுவதைக் கேட்க ஆரம்பிப்பார்கள். சின்னச் சின்ன பிரச்சனைளை முடிந்த மட்டும் தீர்க்க வேண்டும். பணிப் பட்டியலில் இல்லையே என்று எண்ணக் கூடாது. சமுதா யத்திற்கு நல்லது என்று நினைப்பதைச் செய்வது முக்கிய கடமையாக எண்ண வேண்டும். தன்னிடம் இருப்பதையும் கொடுத்து செய்யும் சேவையே சமுதாயப் பணி. அப்படியிருக்க சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவர்களின் கடமை இரட்டிப்பாகின்றது. முதலில் ஒவ்வொருவரும் இதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். சமூக சேவை புனிதமான பணி.” இதயத்தில் பதிவு செய்து கொண்டேன்.


சுதந்திரப்போராட்டத்தின் பொழுது மக்களிடையே ஒரு வேகம் இருந்தது. பெண்களும் நிறைய பங்கு கொண்டனர். அந்த வேகத்துடன் மகளிர் நலப்பணிகளும் ஆரம்பமாயின. துர்க்கா பாய் தேஷ்முக்கின் சாதனைகள் வரலாற்றில் ஆழப்பதிந்தி ருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் பொழுது போர் வீரர்களுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பொருட்கள் சேகரிக்கப் பட்டு அனுப்பப்பட்டன. அதனை வெற்றியுடன் செய்த திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் ஆரம்பித்ததுதான் மகளிர்நலத் துறை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி , அம்புஜம்மாள், மஞ்சுபாஷிணி அவர்கள், கிளப்வாலா ஜாதவ் அவர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருமதி. சரோஜினி வரதப்பன் இன்னும் பல பெண்கள் சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள்.


எத்தனை பேர்கள் இருந்தாலும் காந்திஜியின் வார்தாவைத் தமிழகத்தில் அமைத்த திருமதி சவுந்திரராஜன் அவர்களின் சேவை ஒரு வகையில் சிறப்பு பெற்றிருக்கின்றது. கிராமங்களில் மனம் ஒன்றிப் பணியாற்ற ஊழியர்களை உருவாக்கிய இல்லம் காந்திகிராமம்.


அந்தக்காலத்தின் காந்தீய உணர்வை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன் காந்திக் கட்சி என்றுதான் நினைப்பேன். கதர்த்துணி அணிந்தவர் யாராவது குடிப்பதைப் பார்த்தால் சண்டைக்குப் போய் விடுவேன். “கதர்த் துணியைக் கழற்று. அதைப் போட்டுக் கொண்டு அயோக்கியத்தனம் செய்யாதே “ என்று கத்துவேன். அது சீருடையன்று.


பெரும் தலைவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு அவர் வழி நடக்கின்றோம் என்று கூறிக்கொண்டு சுய நலத்துடனும், சுரண்டலும் செய்து கொண்டு இருப்பவரைப் பார்க்கும் பொழுது இந்த வயதிலும் அன்று கண்ணகிக்கு இருந்த சக்தி வரக்கூடாதா என்று துடிப்பேன்.

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கிலோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

அன்றே முழக்கமிட்டான் பாரதி. இன்றையச் சூழலில் சுயநலத்துடன் அலைவோரைப் பார்க்கும் பொழுது “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று சேர்ந்து பொங்குவோமா? சாதியை ஒழிப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான சாதிகளும் அதனால் சண்டைகளும் தோன்றி சமுதாயம் அமைதியை இழக்க ஆரம்பித்துவிட்டதே! இதற்குப் பொறுப்பானவர்களை என்னவென்று அழைப்பது?


ஆங்கிலேயன் நம்மை அடிமைப் படுத்தி நாட்டைச் சுரண்டி னான். ஆனால் சில நன்மைகளும் ஏற்பட்டன என்பதை மறுப்பதிற்கில்லை. துண்டு துண்டாக இருந்து, நமக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை மாற்றி ஒன்றுபடுத்தி ஓர் இந்தியாவை உருவாக்கிக் கொடுத்தானே! அன்னியன் செய்த நன்மையை இப்பொழுது அழிக்க ஆரம்பித்திருக் கின்றோம்.

”கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? ” - இதுவும் பாரதி பாடியதே!


நம்மை நாம் நமக்காக ஆண்டு கொண்டிருக்கின்றோம். ஒரு வினாடி யாவது மனச்சாட்சியுடன் இருந்து பார்ப்போமே! நம்மால் முடியாது. அந்த ஒரு வினாடியிலும் குறுக்கு வழியில் ஆதாயம் தேடிப் போகும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது மனம். வரலாற்றை என்ன தான் நாம் மாற்றி எழுதினாலும் உண்மை சாகாது. ஒரு நாள் விழித்தெழுந்து கைகொட்டிச் சிரிக்கும். “அப்பொழுது நான் இருக்க மாட்டேன்” என்கின்றாயா ? நம் சந்ததிகளுக்கு இந்த அவமானத்தையா சேர்த்து வைப்பது? காலம்தான் பதில் சொல்ல முடியும்.நான் குறிப்பிட்டு யாரையும் குறை கூறவில்லை. தவறு செய்கின்றவன் மறைத்துச் செய்யவில்லை. எல்லோருக்கும் தெரிந்தே செய்கின்றான்.


பாரதியின் எட்டயபுரம் என்னை வளர்த்தது. காந்திகிராமம் எனக்குப் பயிற்சி கொடுத்தது. அதுதான் இக்காலத்துக்குப் பொருந்தாமல் புலம்புகின்றேன். பணிக்களத்தில் வேகத்தை விட விவேகம் வேண்டும்.


சம்பளம் வாங்கிக் கொண்டு பணி செய்கின்றவர்களும் ஆத்மார்த்தமாக உழைக்கின்றோம் என்று கூற முடியாது. ஆட்சி பீடத்திலிலிருந்து அடியில் இருக்கும் மனிதன் வரை வேகமாக மாறிக் கொண்டு வருகின்றோம். அந்த மாற்றம், வாழும் முறைகளையே ஆட்டம் காண வைக்கின்றதே! நம்மை நமக்கு உணர்த்த நம்மில் சிலராவது முயல வேண்டும். நான் எழுதுவது சிறு தொண்டு.


கிடைத்த பயிற்சிகள், அறிவுரைகள் இவைகளுடன் களத்தில் இறங்கினேன். வாடிப்பட்டி வாழ்க்கை வசந்தகாலம் என்றால் அது மிகையாகாது. அங்கு செல்லும் முன் திண்டுக்கல்லில் நான்கு மாதங்கள் பணியாற்ற நேர்ந்தது. அங்கு சென்றவுடன் எனக்குப் பிடித்தமான பணி கிடைத்தது.


திருச்சி வானொலி நிலையத்தார் திண்டுக்கல் வந்து நேரடியாக ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய இருந்தார்கள். அதன் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. கிராமீயக் கலைஞர்களை திண்டுக்கல் வரவழைத்து மேடையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொது மக்கள் பார்வையாளர்கள். புதியவள் என்று தயங்காமல் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு செய்தேன். கிராமம் கிராமமாகச் சென்று கலைஞர் களைச் சந்தித்து, அங்கேயே அவர்களை பாடச் சொல்லி ஆடச் சொல்லி, சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு திரையரங்கிலுள்ள மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தினோம். எல்லோராலும் பாராட்டப்பட்டதுடன் எனக்கு வானொலி அறிமுகமும் கிடைத்தது. அத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் நிறையக் கற்க முடிந்தது..பஞ்சம்பட்டி கிராமம் மறக்க முடியாது. அங்குதான் நிறையப் பாடல்கள் கற்றுக் கொண்டேன். திண்டுக்கல்லிடம் விடை பெற்றேன்.


வாடிப்பட்டி

ஐந்தாண்டுகளில் நான் முற்றிலும் மாறினேன். வாழ்க்கை அரங்கத்தில் எனக்குப் பல வேடங்கள் கிடைத்தன. எனக்கு ஏணிப்படியைத் தந்தது அந்த கிராமம். போராட்டங்கள் கூட இனித்தன. சுவையான அனுபவங்கள். இலக்கியத்தரம் வாய்ந்த நட்புகள். என் திறமைகளை எனக்கே எடுத்துக் காட்டியது அந்த சின்ன கிராமம்.


பணிக்கால அனுபவங்களை எழுதும் பொழுது என் நினை வலைகள் முன்னும் பின்னும் போய்வரும். சில செய்திகளை உடனுக்குடன் சொல்லுவது அந்த செய்திகளின் வலுவைக் கூட்டும்.. அக்காலத்தில் அரசு இயந்திரம் சுழன்ற விதம் கூறும் பொழுது அது அறிக்கை யாகத்தான் இருக்கும். சில செய்தி களைச் சுட்டிக் காட்டும் பொழுது அந்த வரிகளை மேலும் ஒரு முறை படித்து அதற்குள் புதைந்திருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.


வாடிப்பட்டியில் பணியில் சேர்ந்தேன். என்னுடைய பணிப்பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர். கூப்பிடுகின்ற வர்கள் எஸ். இ. ஓ அம்மா என்று அழைப்பார்கள். ஏற்கனவே கூறியிருந்தபடி சமூகக் கல்வி பொறுப்பில் முக்கியமாக விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஓர் ஆண் அமைப்பாளர் பதவி உண்டு. ஆனால் சில மாதங்கள் அது வெற்றிடமாக இருந்தது. அதன்பின் அந்த இடத்திற்கு வந்தவர் பெயர் ருத்ரதுளசிதாஸ். இளம்பாரதி என்ற புனைபெயரும் உண்டு. பிற்காலத்தில் சாகித்ய அக்காடமி விருது முதல் பல விருதுகள் வாங்கியவர். 47 புத்தகங்களுக்குச் சொந்தமானவர். அவர் வேலைக்கு வந்த பொழுது சாந்தமான நல்ல பிள்ளை. நான்தான் சுட்டிப் பெண்.


பகுதி 11

1957 - சுதந்திரம் பெற்று பத்தாண்டுகள் கழிந்து விட்டன. எப்படி
இருக்கின்றோம்? ஊன்றிப் பார்க்க வேண்டியது நம் வரலாறு.
.
பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் 32 வட்டாரங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் வாடிப்பட்டி வட்டாரம். மதுரையிலிருந்து 16 மைல் (அப்பொழுது மைல்கள் என்றுதான் கூறுவோம்) தூரத்தில் மதுரை திண்டுக்கல் பாதையில் அமைந்திருந்தது. ஊழியர்களின் அமைப்பு முன் சொன்னதே தான். நான் வேலையில் சேர்ந்த பொழுது சமூகக் கல்வி அமைப்பாளர் (ஆண்) பதவி காலியாக இருந்தது. இரு பொறுப்புகளும் நானே பார்த்தேன். என் அணுகுமுறையைப் பார்க்கலாம். ஒரு மாலைப் பொழுதில் ஒரு கிராமம் சென்றேன். அதுதான் முதலில் செல்லும் நாள். எனக்கு யாரையும் தெரியாது. வயலிலிருந்து இன்னும் பலர் திரும்பவில்லை. நடமாடிக் கொண்டிருந்த சிலர் என்னை வியப்புடன் பார்த்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அப்பொழுதுதான் பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்தார்கள். அம்மா வந்து சமைக்க வேண்டும். இரவில்தான் சுடுசோறு கிடைக்கும். எனவே குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே போய்க் குழந்தைகளுடன் பேச்சுக் கொடுத்தேன். சீக்கிரம் நண்பர்களாகி விட்டனர். அங்கே இருந்த ஒரு மரத்தையொட்டி மேடொன்று இருந்தது. அதில் போய் உட்கார்ந்து கொண்டு கதைபேச ஆரம்பித்தேன். புதியவளின் வருகை, வந்தவுடன் சிறு பிள்ளைகளுடன் பழகுவதைப் பார்க்கவும் பிள்ளை பிடிப்பவளோ என்ற சந்தேகம் வந்திருக்கலாம். அவர்கள் முகபாவம் சரியில்லை.. அவர்களில் ஒருவர் அருகில் வந்து “நீங்க யாரும்மா?” என்று கேட்டார். “நான் உங்க ஊர் எஸ்.இ.ஓ அம்மா‘ (Social Education Organiser) என்று சொல்லி அலுவலகம் பற்றியும் கூறவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். இப்பொழுது பிள்ளைகளைப் பாடச் சொன்னேன். பாடினார்கள். என்னைப் பார்த்து “டீச்சர் நீங்களும் ஒரு பாட்டு பாடுங்களேன் “ என்று கேட்டார்கள். இந்தக் கேள்விக்காகத்தான் காத்திருந்தேன். தயங்காமல் “முருகா நீ வர வேண்டும் “ என்ற பாட்டைப் பாடினேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. இன்னொரு பாட்டையும் பாடினேன். பாட்டை நிறுத்தி அவ்வூர் பிரச்சனைகளை யதார்த்தமாகக் கேட்பது போல் பேச்சைத் தொடங்கினேன் .இருட்ட ஆரம்பித்தது. யாரோ ஒருவர் ஹரிக்கேன் லைட் கொண்டு வந்து வைத்தார். மின் இணைப்பு இன்னும் அவர்கள் ஊருக்கு வர வில்லை.


வேலைகளிலிருந்து பெண்களும் ஆண்களும் திரும்ப ஆரம்பித்தனர். பெண்மணிகள் சமைக்கப் போனதால் ஆண்கள் தான் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். சில பிரச்சனைகளின் தீர்வுக்கு வழிமுறைகள் கூறினேன். சிறுவர்கள் வீட்டிற்குப் போக ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சில பெண்கள் வந்தனர். பெண்களிடம் அவர்கள் குடும்பங் களைப் பற்றியும் , ஊரில் இருக்கும் வசதிகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். ஒருத்தி என்னிடம் அவர்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தாள்.. உடனே, “ எங்க வீடுகள்ளே சாப்பிடுவீங்களா? என்ற ஒரு கேள்வியும் கேட்டாள். “யார் வீட்டிலும் நான் சாப்பிடுவேன். கவிச்சை மட்டும் சாப்பிட மாட்டேன்” என்றேன். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. இன்னொருத்தி “எங்க வீட்லே காய்கறிச் சமையல்தான் எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க “ என்று அழைத்தாள். விருந்தோம்பல் பண்பு இன்னும் போகவில்லை. ஆனால் சாதிஉணர்வு மட்டும் வேரூன்றி இருந்தது. அதனை யொட்டிய பயமும் தெரிந்தது.அய்யாவை நினைத்துக் கொண்டேன். பல வீடுகளுக்குச் சென்று சில நிமிடங்கள் இருந்து பேசினேன். எல்லோருக்கும் சந்தோஷம். கடைசியில் சாப்பிடக் கூப்பிட்டவள் வீட்டிற்குச் சென்றேன். ஒரு தட்டைக் கழுவி எடுத்து வந்தவள் தயங்கி, “ அம்மா, இலை இல்லை. எங்க தட்லே சாப்பிடுவீங்களா? நல்லா கழுவிட்டேன் “ என்று அவள் கூறவும் என் மனம் வாடியது. ஏ சமுதாயமே, என்ன கொடுமை. மனிதன் பிறக்கும் பொழுது சாதி இல்லையே, இந்தக் கொடுமை எப்பொழுது, எப்படி நேர்ந்தது?


மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதமே கிடையாத பொழுது சாதி மட்டும் எப்படி வரும்?
“ நான் சாப்பிடுவேன். எனக்கு சாதி கிடையாதும்மா ?” என்றேன். முகம் மலர்ந்து உணவு படைத்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் சில பெண்கள் வந்தார்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன். இருட்டிவிட்டதால் பஸ்ஸில் ஏற்றி விட ஊர்க்காரர்கள் சிலர் வந்தனர். இன்றைய சம்பவம் காட்டிய செய்தியைப் பார்ப்போம். சுதந்திரம் வந்து பத்தாண்டுகள் கழித்தும் மின் இணைப்பு இல்லாத கிராமங்களா, அப்படியென்றால் வளர்ச்சிப் பணிகள் சரியாக நடைபெற வில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். விளக்கம் கூற வேண்டியது என் கடமை. சுதந்திரம் கிடைத்து ஆட்சியில் உட்கார்ந்தவர்கள் சுதந்திரத் திற்காகப் போரடியவர்கள். கிடைத்த சுதந்திரத்தைப் பாதுக்காக்க வேண்டுமென்ற அக்கறையுடன் என்னென்ன அடிப்படை தேவைகள் எதுவோ அவைகளில் கவனம் செலுத்தினார்கள். மதிப்பிற்குரிய டாக்டர். அம்பேத்கார் அவர்கள் சட்டங்கள் எழுதினார். அவர் யார்? ஒரு தலித். அந்த அறிவுஜீவியின் படைப்புதான் இன்றும் நாட்டில் இருக்கின்றது. சட்டங்கள் தீட்டிய பின்னர் வளர்ச்சித் திட்டங்களில்தான் கவனம் செலுத்தினர். அணைகள், பாதைகள், மருத்துவ மையங்கள், பள்ளிகள் போன்றவை கட்டப்பட்டன. தேவைகள் அதிகம் . மக்கள் கூட்டமும் அதிகம். ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலை என்பார் முன்னால் ஜனாதிபதி, அந்த நாள் தமிழ்நாடு தொழில் அமைச்சர் திரு வெங்கட் ராமன் அவர்கள். மின்னிணைப்பும் கொடுத்துக்கொண்டு வந்தனர். ஆனால் தன்னிறைவு பெறவில்லை. மின்னுற்பத்தி போதவில்லை. இன்றும் அதில் கஷ்டப்படுகின்றோம். ஒரு பக்கம் மின் உற்பத்தி அதிகப்படுத்தும் முயற்சி, இன்னொரு பக்கம் தேவைகள் அதைவிட வேகமாக வளர்கின்றது. ஆக. அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை யளிக்கப் பட்டது.மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்தவர்கள் நதிகளைத் தேசிய உடமையாக்கி யிருந்தால் இன்று தமிழகம் தண்ணீருக்காக அல்லல்பட வேண்டியிருந்திருக்காது. மனிதன் ஒரு பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் சுலபத்தில் மாற்றமாட்டான். முடியாது. விவசாயம் மிகவும் இன்றியமையாதது. உற்பத்தியை அதிகப் படுத்த, நாற்று நடுவது முதற்கொண்டு ஜப்பானீய முறை என்ற புதிய உத்திகள், புதிய உரங்கள் அரசு பரிந்துரைத்தன. மாடுகள், கோழிகளில் உயர் சாதி கொடுத்து கலப்பினம் உருவாக்க உதவி செய்தனர். கூட்டுறவு முறையின் முக்கியத்துவத்தை உணரச் செய்து அதன் மூலம் ஒருங்கிணந்த பல திட்டங்கள் உருவாக்க முனைந்தனர். இவைகளில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட பயிற்சி முகாம்கள் மூன்று நாள்கள், ஐந்து நாள்கள் நடந்தன. அதிகாரி முதல் எல்லோரும் வந்து பயிற்சி கொடுக்க வேண்டும். சிலர் கிராமத்திலேயே தங்க வேண்டும். வசதிகளை எண்ணித் தயங்க முடியாது. பள்ளியின் தரையில் அல்லது பெஞ்சுகளில் படுத்துக்கொள்வோம். ஒரே அறையில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் என்று தங்குவோம். முக்கியமான ஒரு தகவலை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். அன்று பாதை போட வேண்டுமென்றால், பள்ளிக் கட்டடம் கட்டவேண்டுமென்றால் அரசு பாதிப்பணம் தான் கொடுக்கும். மீதிப் பாதிக்கு அந்த ஊர்மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.என்ன அருமையான விதிகள் இருந்தன! இதனால் இருந்த பயன்களைப் பார்ப்போம். அன்று இலவசங்களைத் தேடவில்லை. கூலிவேலைக்கு மக்களே வேலை செய்யலாம் இதற்குப் பெயர் ‘சிரமதானம்”.மண் சுமக்க, கல் சுமக்க எல்லோரும் வருவார்கள். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை கலந்து கொண்டு மண் சுமப்பார்கள். அங்கே சாதி, மதம், மொழி, அந்தஸ்து எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லோரும் ஓரினம். ஒன்றாக உழைத்தோம். அய்யா பெரியாரின் முழக்கம் அங்கும் உண்டு.


காங்கிரஸ் கட்சி, திராவிடக்கட்சி, திராவிட முன்னேற்றக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இருந்தன. ஆனால் பொதுப்பணி யில் அந்தப் பிரிவினைகள் பாதிப்பை உண்டாக்கவில்லை. எல்லோருக்கும் தங்கள் ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இருந்த ஒருமித்த உணர்வு அன்று நல்ல காரியங்களின் பொழுதும் இருந்தது. ஊர் நன்மைக்கு வசூல் செய்யும் பணத்தில் கையாடல் செய்யாத பண்பு இருந்தது. ஏன் இப்பொழுதும் எல்லைப்புறச் சண்டைகள் யுத்தமாக மாறும் பொழுதும் ஒன்றுபடுகின்றோம். மற்ற நேரங்களில் முரண்பாடுகள். சுதந்திரப் போராட்டத்தின் பொழுது எப்படித் தங்களிடம் இருப்பதைப் பொது நன்மைக்காகக் கொடுத்தார்களோ அதே போல் திராவிடக் கட்சிகள் வளர்ந்த பொழுதும் தங்களிடம் இருக்கும் பாத்திர பண்டங்களைக் கூட அடகு வைத்துச்சோறு போட்ட குடும்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். முதலில் அடிமைத்தனம் போக்கத் துடித்தோம். அடுத்து சாதி என்ற கொடுமையிலிருந்து விடுபடும் எழுச்சியில் ஒன்றுபடும் உண்மையை உணர முடிந்தது. அய்யா அவர்களோ அல்லது அறிஞர் அண்ணா அவர்களோ ஊருக்கு வந்தால் கூட்டம் வரும் அப்பொழுது வருகின்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இல்லாதவர்களும் வள்ளல்களானார்கள். அரசியலில் வசைபாடுதலை நிறுத்த முடியாது. குறை கூறாமலும் இருக்க முடியாது. அதுதான் அரசியல். ஆனால் ஒரு கட்சி, கட்ட ஆரம்பித்த கட்டடம் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவும் அது பூர்த்தி செய்யபடாமல் நிறுத்தப்பட்டு மொட்டை கோபுரமாக நிற்கின்றதே, அவைகள் அவலச் சின்னமாகத் தெரியவில்லையா?


இது ஓர் உதாரணம்தான். எல்லா இடங்களிலும் இப்படி என்று கூறவில்லை. இதே போல பல திட்டங்கள் குறைப்பிரசவமாகி விடுகின்றன. மக்களின் வரிப்பணம் போவதுடன் மக்களுக்குத் தேவை யானதும் கிடைக்காமல் போய்விடுகின்றதே, இதை அரசியல் வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்குக் கட்சி கிடையாது. கூடாது. யார் திட்டம் போட்டாலும் அக்கறையுடன் செய்து முடிக்க வேண்டியவர்கள். வளர்ச்சிப் பணிகள் ஏதாவது காரணங்களால் முடங்கும் பொழுது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அரசுப் பணியாளர்கள் அரசியல்வாதி களாகக் கூடாது. எந்த அரசு வரினும் அவர்கள் போடும் திட்டங்களை நிறைவேற்று வதுதான் அவர்கள் கடமை. மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மனப் புழுக்கம் அதிகமாகி யாரை வெறுக்கின் றோமோ அந்த வெறுப்பு ஆழமாக மனத்தில் பதிந்து விடுகின்றது.நல்லவர்கள் வெறுப்பைத் தேக்கிப் பேசாமல் ஒதுங்கக் கூடாது. சமுதாயம் நன்றக இருக்க, நடுநிலையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். பயமோ தயக்கமோ கூடாது. எப்படி? அவர்கள் தான் ஒருமித்துக் கூடி வழி காண வேண்டும். நடக்கும் தவறுகளுக்கு எல்லோருக்கும் பங்குண்டு. அரசு, அரசியல், மக்கள் மூவரும் இணைந்ததுதான் சமுதாயம் சுதந்திரம் கிடைத்தவுடன் பணிகளை அக்கறையுடனும் , பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் தான் ஆரம்பித்தோம். ஆனால் நாளாக நாளாக எல்லாம் தேய்வு நிலை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டன. இத்தனை சூழ்நிலையிலும்.


சிலவற்றில் வளர்ச்சிகள் இருக்கின்றன. நம்மிடையே நம் முன்னோர்கள் விதைத்த , வளர்த்த சில திறமைகள் , குணங்கள் இன்னும் துணைபுரிகின்றன. என்று முற்றிலும் அவைகளையும் நாம் அழிக்கின்றோமோ அன்று நாம் நாமாக இருக்க மாட்டோம். இந்த வேதனையைக் கண்ணீருடன் சொல்லுகின்றேன் ”வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ? ”


பகுதி 12

வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் பகுதி எழில் நிறைந்த பகுதி. பச்சைப் பசேலென்று வயல் வெளிகள். காற்றிலே சிலிர்க்கும் நெற்பயிர் நம் மனத்தை வருடி அங்கே உட்காரச் சொல்லும். வரப்புகளில் உட்கார்ந்து அவற்றுடன் பேசுவேன். பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். அக்கரையில் தென்கரை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்று நம்மை வரவேற்கும். இந்த வேலை கிடைத்ததில் நான் அதிருஷ்டசாலி. என் ரசனைகளுக்கேற்ற பணி. என் திறமைகள் அனைத்தும் பயன்படுத்த முடிந்த அற்புதமான பணி. ஒவ்வொரு வருக்கும் தன் வேலையில் திருப்தி இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பணிகளும் சிறக்க முடியும். சிலருக்குத்தான் விரும்பியவை கிடைக்கும்.


வயலில் புது முறை நடவு. ஜப்பானிய முறை நடவு. முதல் நாளே சோழவந்தான் சென்று கிராம நல ஊழியர் முத்தையா வீட்டில் தங்கினேன். அதிகாலையில் நானும் அவரும் புறப்பட்டு வயலுக்குச் சென்றோம். நான் வயலில் இறங்க வேண்டும். இந்த சேலைக் கட்டில் இறங்கி வேலை செய்ய முடியாது. இதனை அறிந்து மாற்றுடை எடுத்து வந்திருந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தின் பின் சென்று சேலைக் கட்டை மாற்றிக் கொண்டேன். கிராமத்துப் பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்பொழுது அவர்களில் நான் ஒருத்தி.


வயலில் இறங்கும் பொழுது கொஞ்சம் கஷ்டம். பிடித்து இறக்கி விட்டனர். ஏற்கனவே கிராம நல ஊழியர் இன்னொரு பக்கம் இருந்தார். நாங்கள் நாத்தை எடுத்து வரிசையாக நட ஆரம்பித்தோம். எங்களைப் பார்த்து மற்றவர்களும் செய்தனர். இரு வரிசை முடியவும் நான் மேலே வந்து விட்டேன். மற்றவர்களுக்கு இப்பொழுது சுலபமாக நட முடிந்தது.


அவர்களை நடவுப் பாட்டுப் பாடச் சொன்னேன். அவர்கள் பாடிக் கொண்டே அசைந்து அசைந்து நாற்று நடுவதும் எனக்கு நாட்டியமாகப் பட்டது. நாட்டுப்புறப் பாடல்கள் எத்தனை வகைகள்! வேலையின் கடினம் தெரியாமல் இருக்க ஏற்றப்பாட்டு முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பாட்டு. மனிதன் இசையுடன் இசைந்து வாழ்ந்திருக்கின்றான். ஆனால் இப்பொழுது அந்த இசை எங்கே? பாட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டது. தாலாட்டை நாம் ரசிப்போம். தாலாட்டை விட ஒப்பாரிப் பாட்டு மிகவும் அருமை. தாலாட்டில் வம்சத்தின் பெருமைகளும், பிள்ளைமேல் கொண்ட ஆசையும் வரும். ஒப்பாரியில் இவைகளும் வரும். அத்துடன் வயிற்றெரிச்சல் முதல் எண்ணுகின்ற எல்லாம் கொட்டலாம். நான் பார்த்த பணியில் ஒவ்வொரு வினாடியும் உயிரும் உணர்வும் கலந்து வாழ்ந்தேன். அங்கிருந்து நானும் முத்தையாவும் புறப்பட்டு புதிதாகக் கட்டி முடித்திருந்த ஹரிஜன காலனிக்குச் சென்றோம். ஹரிஜனங் களுக்குப் புதிய குடியிருப்பு வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வந்த திட்டம். பல திட்டங்கள் சிறந்த நோக்கத் துடன் தீட்டப்படும். எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் காலங்களில் சில புதிய திட்டங்கள் வரும். ஆனால் நடை முறைப்படுத்தும் பொழுது சில குறைகள் நேர்ந்து விடுகின்றன. அவைகளில் சில பார்ப்போம். நம் குறைகளைப் பற்றிப் பேசுவதில் தவறில்லை. அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாமே.


அன்று ஹரிஜன காலனி கட்டும் பொழுது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த புறம்போக்கு நிலங்களில் கட்டடங்கள் அமைந்தன. இருக்க இடம் கொடுக்கும் நோக்கமாக அப்பொழுது இருந்தது. ஆனாலும் அவர்களை சமுதாயத்தை விட்டு நாமும் தள்ளியே வைத்தோம். ஊருக்குள் அவ்வளவு பெரிய இடம் இருக்காது, அல்லது ஊரார் விரும்பார். இப்பொழுது சமத்துவபுரம் வீடுகள் வருகின்றன. எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த மட்டில் அற்புதமான திட்டம். இதில் அக்கறை குறைந்தால் நோக்கம் சிதறிவிடும். உயர் ஜாதியுடன் பல ஜாதி மக்களும் கலந்து வாழும் திட்டம். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் சேர்ந்து வாழும் இடம். சாதி காழ்ப் புணர்ச்சி மாற வாய்ப்புள்ள திட்டம். ஆனால் சில ஜாதிகளில் குடி வராமல் இருந்தாலோ, அல்லது இடம் மாறிச் சென்றாலோ பின்னர் இஷ்டம் போல் குடிவைக்க ஆரம்பித்து விட்டால் நோக்கம் சிதறி விடும்.


கட்சி எதுவாயினும் அவரவர் காலத்தில் நல்ல நோக்கத்துடன் சில திட்டங்கள் ஆரம்பிக்கின்றார்கள். அவைகளை அரசுப் பணியாளர்களும் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். அவ்வப்பொழுது ஆய்வு செய்து குறைகளை நீக்க வேண்டும். சத்திரத்து சமையல்காரர்கள் போல் ஆகிவிடக் கூடாது. நாட்டுப்பற்று எல்லாத் தரப்பினர் களிடமும் குறைந்து வருவதை மறுக்க முடியாது. அரசியல் வாதிகளையே குறை கூறிக் கொண்டிருக்கின்றோம். சுயநலமும் சுரண்டலும் எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் எல்லோரும் சேர்ந்துதான் வீழ்ந்து மடிவோம்.


இன்னொரு உதாரணமும் காட்டுகின்றேன். சென்னையில் குடிசைகளை நீக்கி கட்டடங்கள் கட்டி குடியிருப்பு செய்கின்றோம். கொத்தவால் சாவடியிலும், கப்பல்களிலும் கூலி வேலை செய்வோரை ஆதம்பாக்கம் போன்ற தூரத்தில் குடியிருப்பு வைத்தால் அவர்கள் தொழில்கள் செய்ய முடியாது. குற்றங்கள் மலியும். எனவே புதுக் குடியிருப்பு களை ஏற்படுத்தும் பொழுதும் கவனம் தேவை.


பயணத்துடன் ஆங்காங்கே இது போன்று கொஞ்சம் மாறிச் செல்ல வேண்டியிருக்கின்றது. உடனுக்குடன் ஒத்த விஷயங்களைப் பேசினால் தான் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும். நான் கதை சொல்ல வில்லை. ஒரு ஊரில் ராஜா இருந்தார் என்று ஆரம்பித்து கல்யாணம், பிள்ளைப் பேறு என்று வரிசையாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், இது சமுதாய வரலாறு. குறைகளைக் காட்டி, முடிந்த மட்டும் சில ஆலோசனை களையும் அவ்வப்பொழுது சொன்னால் பலன் கிடைக்கும். குறை கூறுதல் எளிது. ஒருவர்மேல் ஒருவர் குற்றம் கூறுவது சுலபம். ஆனால் இது கூட்டுப் பொறுப்பு. அரசியல்வாதிகள் திட்டம் தீட்டு கின்றனர். அரசுப் பணியா ளர்கள் செயல்படுத்த ஆவன செய்கின்றனர். ஆனால் களப்பணி செய்வது யார் ? மக்கள், காண்டிராக்டர்கள். தவறு காணும் பொழுது மக்கள் உடனுக்குடன் கேட்க வேண்டும். இதைப் படிக்கவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கின்றது. நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள் என்றுதானே. நம் சக்தி நமக்குத் தெரிய வில்லை.நமக்குள் ஒற்றுமையில்லை. சின்ன ஆதாயம் கிடைத்தால் நாம் பிரிந்து விடுகின்றோம். தப்பு இல்லையா? அதனால்தான் கூறுகின்றேன். நடக்கும் தவறுகளுக்கும் எல்லோரும் பொறுப்பு. வாய்பேசாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் பொறுப்புண்டு. யாரும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கக் கூடாது.


பயணம் தொடருவோமா?


அன்று மாலை மகளிர் மன்றம் சென்றேன். ஏதோ அதற்குத் தனிக்கட்டடம் என்றோ, பெரிதாகக் கூட்டம் என்றோ இல்லை. ஒரு வீட்டில் கூடிப் பேசுவோம். அந்த மகளிர் மன்றத்தில் எல்லோரும் ஏதோ கூலி வேலை செய்கின்றவர்கள். நான் சென்றால் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சி. பல பிரச்சனை களைக் கொண்டு வருவார்கள். கூலி வாங்கும் இடத்தில் பிரச்சனைகள். என்னிடம் சொன்னால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பேன். குடும்பச் சண்டை என்றால் புருஷன் ,பொண்டாட்டியை கூட்டி வைத்துப் பேசுவேன். ஒரு வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டுப் பக்கம் போடும் சண்டையும் வரும். நோய்கள் பற்றியும் வரும். வாரம் ஒரு முறை தவறாது அங்கு போவது என்று வைத்துக் கொண்டிருந்தேன். அர்த்தமற்று பக்கத்து வீட்டுக்காரியுடன் போடும் சண்டை களுக்கு பஞ்சாயத்து வைப்பது ஒவ்வொரு வாரமும் நடக்கும். வாழ்க்கையில்தான் எத்தனை கோணங்கள் ? எல்லாம் படிப்பினைகள் மேலக்கால் கிராமம் போக வேண்டிய வேலை வந்தது. அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு முனியம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவ்வூர் போனால் மதியச்சாப்பாடு அங்கேதான். அன்று போனபொழுது அவள் வீட்டில் புதிய இளைஞன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் யார் என்று விசாரித்தேன்“என் மவன் பெரிய கருப்பன்”
“இதுவரை பார்த்ததில்லையே!” ”ஆமாம், அவன் ஜெயிலுக்குப் போய்ட்டு இப்போத்தான் வந்தான். ஆறு மாசமா ஜெயில்லேதான் இருந்தான் “ .


எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் முனியம்மாள் சாதாரணமாகச் சொன்னாள். வாடிக்கையாகிப் போன ஒரு விஷயம்போல் பேசினாள். இதுவரை தன் மகனைப்பற்றி எதுவும் சொன்னதில்லை.
“ஏன் ஏதாவது திருடினானா ? “ “இல்லேம்மா, எங்க எசமான் ஒருத்தரை வெட்டச் சொன்னாரு. இவனும் போய் வெட்டினான். சாட்சி சரியில்லைனு விட்டுட்டாங்க”
நான் பேச முடியாமல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். முதல் அனுபவம். அதைப்பார்த்து அவளே தொடர்ந்து பேசினாள் “எங்க ஊர்ப்பக்கம் இது சாதாரணம். எங்க முதலாளிங்க என்ன சொன்னாலும் செய்வோம். சாப்பாட்டுக்கு அய்யா ஒரு குறவும் வைக்கமாட்டாருங்க,
எங்களுக்கு எல்லாம் எங்க எஜமான்தான்.”


இதுதான் கொத்தடிமை வந்த வழி;இவர்கள் ஹரிஜனங்களில் ஒரு பிரிவினர். முனியம்மா மகனை எழுப்பினாள். அவனும் தள்ளாடிக் கொண்டே எழுந்திருந்தான். குடித்துவிட்டுப் படுத்திருந்திருக்கின்றான். முனூ முணுத்துக் கொண்டே எழுந்தவன் ஒரு புதியவளைக் கண்டதும் விழித்தான். முனியம்மாதான் பேசினாள் “கருப்பா, கடைக்குப் போய் ரெண்டு வடை வாங்கிட்டு வாடா . அவங்க சாப்பிடணும்” .“ஹூம்” கொட்டிவிட்டு வீட்டுக்குப் பின்னால் சென்றான். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தை முகம். இவன் அம்பு. எய்கின்றவன் எவனோ!? கொலைகாரனாக்கப் பட்டவன். அவன் தொழில் அது. இந்தப் பெரிய கருப்பன் என் வாழ்க்கையில் இன்றியமையாதவனாகப் போகின்றான் என்பது அப்பொழுது நான் உணரவில்லை.என் நினைவில்லத்தில் முக்கியமானவர்களுடன் இவன்இருக்கின்றான். இன்றும் எனக்குள் வாழ்கின்றவனை உங்களுக்கு இப்படி அறிமுகப்படுத்த நேர்ந்ததே என்று வருந்துகின்றேன்.


கருப்பன் வடை வாங்கி வந்ததும், சாப்பிடும் பொழுது அவனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன்,. அவ்வளவுதான். “அக்கா,” என்று கூப்பிட்டான். ஏனோ அவன் மீது ஒரு பாசம் பிறந்தது. சில உணர்வுகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. வயதில் மூத்தவன். ஆனால் எனக்கு அவன் தம்பி. இனி அவன் என்னைத் தொடர்ந்து சில காலம் வருபவன்; அப்பொழுது நீங்களும் அவனைப் புரிந்து கொள்வீர்கள் .


வாடிப்பட்டியில் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். என் தோழி சரோஜா வந்தாள். அவள் முகத்தில் கலவரம். ஏதோ சொல்லத் துடிக்கின்றாள். ஆனால் தயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள். “என்ன சரோ, சொல்ல நினைப்பதைச் சொல்லு. எதுவானாலும் சொல்லு” சரோ மெதுவாகச் சொன்னாள். செய்திகளைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். அவளுக்கோ அதிர்ச்சி. அவள் சொன்னது. என்னைப் பற்றியது. பெரிதாக இரு வதந்திகள். அசிங்கமாகப் பேச ஆரம்பித்திருக் கின்றார்கள். அதைச் சொல்லத்தான் அவள் தயங்கி இருந்திருக்கின்றாள். செய்தி கேட்டால் நான், பயப்படுவேன், அழுவேன் என்று நினைத்திருக்கின்றாள். நானோ சிரித்தேன். ”திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் ”
எனக்குள் பாரதி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் !


பகுதி 13

விரியும் அறிவுநிலை நாட்டுவீர் -அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -நல்ல
தீரப் பெருந்தொழில் பூட்டுவீர் வீட்டுப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டால் வீரப் பெண்ணாகி விட முடியுமோ? பாரதி உள்ளுக்குள் வாழ்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றான், அவன் இன்னும் சொல்லுகின்றான் -பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

அவன் தாலாட்டில் வளர்ந்தவள் நான். பாவம் இந்த மக்கள்! புதிதாகக் கண்டால் மிரளுகின்றார்கள்.


வதந்தி! அது தீயெனப் பரவும். கிசு கிசுவிற்குத் தனிச் சுவை. அதிலும் அடுத்தவனைபற்றி கேள்விப்படும் பொழுது ஓர் உற்சாகம்! வம்பு பேசுகின்றவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தமும் சீராகுமாம்.. ஆனால் அவர்கள் பேசும் வம்புத் தீ அடுத்தவர்க்குப் பாதிப்பை, அவமானத்தை உண்டு பண்ணுகின்றதே! விஷயத்திற்கு வருகின்றேன். என்னைப்பற்றி இரு செய்திகள் கிளப்பிய புகைச்சல் !என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சில ஆண்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போய் விட்டேன். ஒரு பெண் இப்படி கண்ட ஆண் பக்கத்தில் உட்கர்ந்து சினிமா பார்க்கலாமா?
52 ஆண்டுகளுக்கு முன்னால் சமுதாயத்தின் பார்வை.


5400 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!? அக்கினிப் பிரவேசத்தின் பொழுது ராமனின் நெருப்பு வார்த்தைகள் எனக்கு சீற்றத்தைக் கொடுத்தன. இராவணனின் பார்வை பட்டதாலே சீதையின் பத்தினித் தனம் போய்விட்டதா என்று எழுதியவள்தான் நான்.இன்றைய சூழல் எப்படி மாறிவிட்டது? இந்த மாற்றம் தோன்ற எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கின்றன!. ஆனால் இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம் வேலைக்குச் செல்லும் பொழுது சில நேரங் களில் ஜீப்பில் செல்வோம். அதிகாரி முன்னால் உட்கார்ந்திருப்பார். பின்னால் ஆறு பேர் அமர்ந்திருப்போம். உடல் படுகிறதே என்று சொல்ல முடியாது. பிற ஆடவர்களுடன் வெளிச்செல்வது சமுதாயத்தால் அன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தது பார்ப்போம் இன்னொரு செய்தி வித்தியாசமானது. ஒரு ஆண்பிள்ளையை நான் அடித்துவிட்டேன். சினிமாவிற்கு நான் தனியாகச் சென்றிருந்தேன். அந்த நாளில் அதிகமாக சினிமா பார்ப்பேன். நான் வளர்ந்தது சினிமாக் கொட்டகையைச் சேர்ந்த கடைக்கருகில்தான். ஆரம்ப காலத்தில் பி. யூ. சின்னப்பா பிடிக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு சண்டை போடும் நாயகர்களைப் பிடிக்கும்.


எ,.ஜி.ஆர், அவர்கள், இப்பொழுது ரஜினி அவர்கள் எல்லோரும் சண்டை நாயகர்கள். . சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ என் சீட்டில் கால் வைத்து சேட்டை செய்வது போல் இருந்தது. பின் திரும்பி முறைத்தேன். மீண்டும் தொடல். வளையலில் கோர்த்திருந்த பின்னை எடுத்துக் குத்தினேன். கால்களை இழுத்துக் கொண்டான். ஆனால் மீண்டும் அதே சேட்டை செய்யவும் என் பொறுமை போய் விட்டது. எழுந்து திரும்பி நின்று அவனை ஓங்கி அடித்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் உடனே என்னை சமாதானப்படுத்தி உட்கார வைத்தனர். அடிபட்டவன் எழுந்து போய்விட்டான். இதுதான் நடந்தது. நான் தனியாகப் போனது முதல் குற்றம். அடுத்து ஓர் ஆண்பிள்ளையைத் தொட்டு அடித்தது இரண்டாம் குற்றம்.நான் அடக்கமில்லதவள்; கெட்டவள். இதுதான் வதந்தி. நான் பேசாமல் விட்டிருக்கலாம். வதந்தியை ஆரம்பித்தவள் நல்லவள் இல்லை. இது போன்று சிலரைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் எந்தப் பெண்ணா வது வதந்தியின் சூட்டைத் தாங்காது தன் உயிரை முடித்துக் கொள்ள நேரலாம். இவள் அடக்கப் பட வேண்டும். அதற்கு நான் தான் லாயக்கு. என் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாதையாகத்தான் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்கப் போகவேண்டும். அவள் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டேன். நான் கூப்பிடவும் சிரித்துக்கொண்டே அருகில் வந்தாள். உட்காரச் சொல்லி, அரட்டை அடித்தேன். திடீரென்று வதந்தி பற்றி கேட்டேன். அவளைக் குறை கூறாமல் கேட்டதால் அவள் நல்லவள் போல் மற்றவர்கள் பேசுவதாகக் கூறினாள். நானும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விடைபோல மெதுவாகப் பேசினேன் .பேசப் பேச அவள் முகம் மாறியது.

“சினிமாக் கொட்டகையிலே என்ன செய்ய முடியும் ? (அந்தக்காலத்தில் இக்கால லீலைகள் கிடையாது.) நம்மூர் வாய்க்கால்கரைகளுக்குக் காலையில் மூணு மணிக்கே போறாங்களே. அங்கே போற சில பொம்புள்ளங்க எதுக்குப் போறாங்கண்னு தெரியும். ஒரு நாள் டார்ச், காமிராவுடே வருவேன்னு சொல்லு. படம் புடிச்சு ஊருக்குக் காட்டுவேன். அவங்களும் சினிமாக் கொட்டகைக்கு ஆட்களை அனுப்பட்டும் நான் என்ன செய்யறேன்னு படம் பிடிக்கட்டும். ரெண்டையும் ஊர்லே காட்டலாம். நான் சும்மா சொல்ல மாட்டேன். மானத்தை வாங்கிருவேன். வாயப் பொத்திகிட்டு இனிமேலாவது இருக்கச் சொல்லு. இன்னொருதரம் பேசினதாக் கேட்டேன்னா நான் சொன்னபடி செய்வேன்” அவள் பதறிவிட்டாள்.


அவளுடைய கள்ள உறவு வாழ்க்கை அது. அவளைப் போல் சிலர் இத்தகைய வாழ்க்கை நடத்துவது கேள்விப் பட்டிருக்கின்றேன். இவளும் வம்பு பேசுகின்றவளா என்று தோன்றுகிறதோ? பெண்களைச் சந்தித்தால் வம்பு பேசும் பொழுது கேட்க வேண்டிய நிலை. பிறகுதான் புத்தி சொல்ல முடியும்.. முகம் செத்து எழுந்தவள் ” இனிமேல் அவுங்க பேசாம நான் பாத்துக்கறேன். கோவப் படாதீங்க “ என்று சொல்லி விட்டுப் போனாள்; இனி பயப்படுவாள். சரோஜா அழகான பெண். இளம் விதவை. பத்தாவது வரை படித்தவள். அவர்கள் குடும்பங்களில் இது அதிகமான படிப்பு. அவளுடைய ஊர் ராஜபாளையம். வாடிப்பட்டியில் திருமணம். பதினெட்டில் கல்யாணம், இருபத்தைந்தில் கணவரைப் பறி கொடுத்தாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். எல்லாம் வார இதழ் மாத இதழ். நான் பக்கத்தில் குடி வரவும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய நாத்தனார் கோமதி மகளிர் மன்றம் கன்வீனர். நான் வருவதற்கு முன் ஆரம்பித்த மகளிர் மன்றங்கள். அங்கும் பெரிய கூட்டங்கள் நடக்காது. வதந்தி வரவும் அவள்தான் பயந்தாள். அவள் கணவர் வீட்டார் என் வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை போட்டு விடுவார்களோ என்று அஞ்சினாள். அவளுக்காகவும்தான் நான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது. கூட்டுக் குடும்ப அமைப்பு இருந்த காலம். எப்படி, எதற்காக கூட்டுக் குடும்பம் வந்தது என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சமுதாயம், குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றிய காலம். தொழிகள் பயிலக் கல்லூரிகள் கிடையா. தலைமுறை தலைமுறை யாகத் தொழில் செய்வார்கள் ;அவர்களுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே சாதிப் பெயராகவும் ஆகியிருக்கின்றது. சில நேரங்களில் தொழில் மாறும் பொழுது பெயரும் மாறும்.எனவே வீட்டுத் தலைமைக்குக்கீழ் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அப்பனுக்குப் பின் பிள்ளை தொழிலை எடுத்துக் கொள்வான். இப்பொழுதும் சில இடங்களில் சில குடும்பங்கள் பரம்பரைத் தொழில் என்று தொடர்ந்து செய்வதைப் பார்க்கலாம் .சொத்தும் குடும்பப் பெயரில் இருக்கும். பெரியவர்களை சிறியவர்கள் பாதுகாப்பார்கள். எனவே பிள்ளைகளைச் சார்ந்து நிற்கும் நிலை. பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் கூட்டுக் குடும்பம் வசதியாக இருந்தது. .அந்த நாட்களில் கணவன் ,மனைவி என்று அவர்களுக்குத் தனி அறை கிடையாது. கணவன் மனைவியின் கலப்பு எப்பொழுது என்று கூட மற்றவர்களுக்குத் தெரியாது. அபூர்வமானது இந்த சங்கமம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் கூடினால் இத்தகைய பிள்ளை பிறக்கும் என்ற சாஸ்திரத்தை நம்பினர்.

அதற்கும் முன்னால் குழந்தை பிறப்பிற்காக மட்டுமே கூடுதல் என்றும் சொல்லி வந்தனர். சொல்லப் போனால் என் காலத்தில் கூட அப்பா, அம்மாவிற்குள் இப்படி உறவு இருக்கும், குழந்தை பிறக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே இத்தகைய குடும்ப வாழ்க்கையால் கூட்டுக் குடும்பம் அமைந்ததில் சோதனை வந்ததில்லை. இப்பொழுது நிலை என்ன? வெவ்வேறு படிப்பு. வெவ்வேறு தொழில்கள். தொழிலுக்காக ஊர்விட்டு ஊர் மாற்றம். ஊடகங்களின் வருகையால் மன மாற்றங்கள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இல்லத்தின் மாற்றம். கூட்டுக் குடும்பம் சலசலக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுப் பெண் பேச ஆரம்பித்துவிட்டாள். அடங்கிப் போகும் குணமும் மாற ஆரம்பித்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் சண்டைகள். பொருளாதார நெருக்கடி., கணவன், மனைவி சேர்ந்து படுக்கும் பழக்கம்., எனவே இடம் பற்றாமை. பல காரணங்கள் இன்று சோதிக்க ஆரம்பித்துவிட்டன . பாசத்திலே, பழமையின் பழக்கத்திலே தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் இருப்பதைச் செலவழித்து விட்டுத் திணரும் பெரியவர்கள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிள்ளைகளைத் திட்டுவது முறையன்று. இது காலத்தின் மாற்றம், கூட்டுக் குடும்ப அமைப்பு ஆட்டம் கண்டு விட்டது. இனி என்ன செய்யப் போகின்றோம்? இன்றைய தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கின்றோம். இது நம் இயலாமை. இந்த மாற்றங்கள் முதியோரை மிகவும் பாதிக்கின்றது. வருங்காலம் எப்படி இருக்கும்? இனி என்ன செய்யப் போகின்றோம்? புலம்பிக் கொண்டிருப்பதால் பிரச்சனை தீரப் போவதில்லை. சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம் .


பன்னாட்டுத் தொழிற்சங்கம் ஒன்றில் மகளிர் நலக்குழு உறுப்பினராக நான்காண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைபற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சுவிட்ஸர் லாண்ட்டில் உள்ள ஜெனிவாவிற்குச் சென்றிருந்தேன். எங்கள் தலைவி


ஆன்பார்வொர்டு அவர்கள் ஒன்று கூறினார் – “இந்திய கலாசாரத்தில் எங்களைப் பிரமிக்க வைத்தது உங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அது இப்பொழுது உடைந்துவிட்டது வருத்தத்திற்குரியது “ மறுக்க முடியாத உண்மை. கூடு கலைந்தது மட்டுமன்றி குடும்பத்தின் அஸ்திவாரமும் பலஹீனமாகிக் கொண்டு வருகின்றது. இன்று மயக்க நிலையில் இருக்கின்றோம். மனம்விட்டுப் பேசுவோம்.


பகுதி 14

அந்தக்காலத்தில் பெண் படிப்பதும் , படித்தபின் பணி செய்வதும் அதிலும் இது போன்று பயணங்களுடன் கூடிய பணி செய்வதும் மிக மிகக் கடினம். வன விலங்குகள் நிறைந்த கானகத்தில் வரும் உலாப் போன்றது. என்னுடன் மேரி, ஜெம்மா என்ற இரு கிராம சேவிகாக்கள். இருவரும் காதலில் சிக்கினார்கள். உடன் வேலை பார்ப்பவர் களுடன் தான். தங்கி இருப்பதோ தனிமையில். மனத்தை மட்டும் இழக்கவில்லை; தம்மையும் இழந்துவிட்டார்கள்.ஒரு சம்பவம் கூற விரும்புகின்றேன்.


மேரிக்கும் அவள் காதலன் சபாபதிக்கும் சண்டை வர ஆரம்பித்தது. மாதாந்திரக் கூட்டம் வந்த மேரி ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டு இடையிலேயே சென்று விட்டாள். அந்தக் கடிதம் கிழே விழுந்து இன்னொருவன் கையில் மாட்டியது. “உங்களை நம்பி ஏமாந்து விட்டேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள். இனி உயிருடன் இருக்கப் போவதில்லை.தூக்குப் போட்டு சாகப்போகின்றேன் “ இதுதான் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.


கடிதத்தை எடுத்தவன் பயந்து போய் அதனை எங்கள் அதிகாரியிடம் கொடுத்துவிட்டான். அவரும் பதறிப்போய் என்னைக் கூப்பிட்டு, “உடனே போங்கம்மா.எதாவது செய்யற துக்குள்ளே போய்க் காப்பாத் துங்க” என்று பதட்டத்துடன் சொன்னார். “ஸார், ஒண்ணும் ஆகாது. கடிதத்தை சபாபதி படிச்சுட்டான். கடிதம் கசங்கி இருக்கு பாருங்க. கோபத்தில் கசக்கிச் சுருட்டி எறிஞ்சிருக்கான். சீக்கிரம் கூட்டத்தை முடியுங்க. இவன் நேரே அவகிட்டே தான் போவான். அவளும் இவன் வருவான்னு காத்துக்கிட்டு இருப்பா. சரியாய்டும்.”


அதிகாரிக்குப் பூரண திருப்தி வரவில்லை. எனினும் சீக்கிரம் கூட்டத்தை முடித்துவிட்டார். சபாபதி விரைந்து வெளியில் செல்வதைப் பார்த்தேன் கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


மறுநாள் காலையில் சபாபதியும் மேரியும் என் வீட்டிற்கு வந்தனர். வந்தவுடன் சபாபதி வாயில் கதவைச் சாத்தினான். என்னைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான். நான்தான் அந்தக் கடிதத்தை எடுத்து அதிகாரி யிடம் கொடுத்து அவன் மானத்தை வாங்கி விட்டேனாம். நிறுத்தாமல் சத்தம் போட்டுத் திட்டிக் கொண்டி ருந்தான். என் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்கள். சட்டென்று இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்து விட்டான். மேரி உடனே பாய்ந்து அவனைக் கட்டிப் பிடித்து நிறுத்தினாள். அவள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் எனக்குக் கத்திக் குத்து விழுந்திருக்கும். நான் பயப்பட வில்லை. அவர்களை உட்கார வைத்துப் பேசினேன். மேரியின் காதலைக் கூறி சபாபதியை அவளைச் சீக்கிரம் மணந்து கொள்ளும்படி புத்திமதி கூறினேன். இதுபோன்ற தாக்குதல்கள் என் வாழ்க்கையில் பல கண்டிருக்கின்றேன். போராளி போராட அஞ்சலாமா?


சபாபதி விரும்பினாலும் அவனால் மேரியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. இருவரும் சாதியும் மதமும் வேறு. சமூகத்தை மீறும் துணிச்சல் அன்று கிடையாது. செய்தி பரவி விட்ட காரணத்தால் சபாபதிக்குச் சொந்தத்தில் திருமணம் செய்துவைத்து விட்டார்கள். ஏற்கனவே மேரியைக் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த் தத்தைப் புரிந்து கொள்ள வைத்திருந்தேன். எனவே அவள் தற்கொலை செய்து கொள்ள வில்லை. ஜெம்மாவின் காதலும் தோல்வியில் முடிந்தது. இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர். இப்படி எத்தனை எத்தனை பெண்கள் என் துறையில் அன்று இருந்தார்கள் !


நாங்கள் மூவரும் எவ்வளவு சந்தோஷமாகப் பணி செய்து வந்தோம். தீபாவளி வந்தால் முதல் நாளே என் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதிகாலையில் எழுந்திருந்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிடவுடன் மதுரைக்குப் பறந்து விடுவோம். காலைக் காட்சியிலிருந்து தொடர்ந்து நான்கு காட்சிகள் சினிமா பார்ப்போம். இரவுக் காட்சி முடியவும் மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து உட்கார்ந்து கொள்வோம். காலையில் 4 மணி பஸ்ஸில் வாடிப்பட்டி திரும்புவோம்.


உற்சாகமான வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.


எங்கள் பணியைப் பார்வையிட வரும் மேலதிகாரிகளில் சில மனித மிருகங்களும் இருப்பர். அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும் உண்டு. சிலர் தங்கள் கற்பை இழந்து கதறியதும் உண்டு. பெண்கள் நலம் காக்க வந்த பெண்களே தங்கள் பெண்மையை இழக்கும் பரிதாப நிலை அன்றிருந்தது. இன்று நாகரிகம் என்ற போர்வையில் பெண்மையின் சூதாட்டம் நடக்கின்றது.


பெண்கள் நலனையே நினைத்து வந்ததால் குடும்பத்தின் ஒரு பாகமான ஆண்மீது ஏனோ மனத்தில் கோபம் இருந்துவந்தது. இப்பொழுதும் கூட இருக்கின்றது. ஆனால் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுது இன்னொரு அனுபவம் கிடைத்தது. அப்பொழுது முதல் கொஞ்சம் என் பார்வை நடுநிலைப் பக்கம் போக ஆரம்பித்தது. அதுவரை பெண் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தவள் குடும்பம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன். பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமுதாயம். எனவே என் அக்கறை சமுதாய நலத்தின்மேல் செல்ல ஆரம்பித்தது.


எனக்கு மாதவி என்று ஒரு தோழி. மதுரையில் அறிமுகமானோம். ரயில்வே ஆஸ்பத்திரியில் நர்ஸாகப் பணியாற்றி வந்தாள் அவள் வீடு சென்ற பொழுது எனக்கு அறிமுகமானவர் ரத்தினம். அவர் அப்பொழுது ஈரோட்டில் நல்ல பதவியில் இருந்தார். ஏற்கனவே மணமானவர். அவரிடம் டைப்பிஸ்டாக வேலை பார்த்தது மாதவியின் அக்கா. ஏழைக் குடும்பம். தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தி ருக்கின்றாள். ரத்தினத்திற்கு மாதவியிடம் ஈர்ப்புத் தோன்றியது. அவள் வீட்டார் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை அடிக்கடி வீட்டிற்குக் கூப்பிட ஆரம்பித்திருக்கின்றனர். அவர் பணக்காரர்; அந்தக் குடும்பத்திற்காக நிறையச் செலவழித்தார்.


மாதவியுடன் உறவு நெருக்கமானது. அவர்கள் வீட்டினரும் அதனை ஆதரித்தார்கள். அவளை நர்ஸுக்குப் படிக்க வைத்தார். இப்பொழுது வேலையும் கிடைத்துவிட்டது. மனைவியின் அனுமதியுடன் அவளை மணக்க இருந்தார். மாதவியும் அவள் வீட்டாரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டதுதான்.


ஆனால் மதுரையில் புது சிநேகிதன் மாதவிக்குக் கிடைத்துவிட்டான். எனவே ரத்தினத்தை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் விபரம் கேள்விப் பட்டவுடன் ரத்தினம் வாடிப்பட்டிக்கு வந்தார். என்னை அவசரமாக மதுரைக்குக் கூப்பிட்டார். விபரம் சொல்லவில்லை. மாதவி வீடு பூட்டிக் கிடந்தது. தான் வந்திருப்பதைக் கூறாமல் மாதவி வேலை பார்க்குமிடம் சென்று சாவி வாங்கி வரச் சொன்னார். நான் தனியே சென்று சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தேன். கட்டிலில் அவள் துணியும் இன்னொரு ஆடவன் துணியும் கிடந்தன. மேலும் இன்னொரு ஆடவனின் வருகைக்கு நிறைய சாதனங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்த ரத்தினம் ’ஓ’ வென்று அழ ஆரம்பித்தார். பல ஆண்டுகள் பந்தம்.


மாதவி வரவும் சண்டை பெரிதானது. அவளைக் கொன்றுவிட முயற்சி செய்தார். எப்படியோ தடுத்தேன். மாதவியின் இரட்டை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. போலித்தனம் எனக்குப் பிடிக்காது. ரத்தினத்திடம் நேரிடையாகத் தெரிவித்து விட்டு அவள் இன்னொருவருடன் நேசம் வைத்துக் கொண்டி ருந்தாலும் பரவாயில்லை. மன்னித்து விடலாம். அன்று அவள் கொடூரமாகப் பேசியதிலிருந்து, ஒரு பெண் பணத்திற்காக எப்படியெல்லாம் பேயாக மாறுகின்றாள் என்பதைக் கண்முன்னால் பார்த்தேன்.


இப்பொழுது எனக்கிருந்த அவசரப் பணி கொலையைத் தடுக்க வேண்டும். ரத்தினத்தை அங்கிருந்து கூட்டிச் சென்று விட வேண்டும். எப்படியோ முயன்று வெளியில் கூட்டி வந்து விட்டேன். அவரை மதுரையில் விட்டு வாடிப்பட்டிக்குத் திரும்ப மனமில்லை. ஏற்கனவே அவர் தவறு செய்தவர். ஒரு குடும்பம் இருக்க இன்னொரு குடும்பம் அமைக்க நினைத்தது சரியன்று. இப்பொழுது கொலை செய்து குற்றவாளியானால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே பாதிக்கப் பட்டு விடும்.அவரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடிய வில்லை. எப்படியோ முயன்று அவரை அவர் ஊர் பஸ்ஸில் ஏற்றிவிடும் வரை உடன் இருந்தேன்.


பல கொலைகள் திடீரென்று ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்வது. கொஞ்சம் தாமதித்தால் உணர்ச்சிகள் அடங்கும் பொழுது கொலை வெறியும் அடங்கி விடுகின்றது. ரத்தினமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைய ஆரம்பித்தார். ரத்தினமும் மாதவியும் இருவருமே தவறு செய்தவர்கள். வீட்டுப் பெண்ணைப் பழக விட்டு ஆதாயம் தேடிய மாதவி குடும்பத்தைப்பற்றி என்ன சொல்வது ?


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம். அதன் பாதிப்பு அதிகமா னால் பழியை யார் மீது, எதன் மீது போடுவது என்று மனம் அலைபாயும்.
எதிர்பார்க்காத சூழலால் எனக்கு வந்துவிட்ட பொறுப்பு. ஒரு மனிதனின் சோதனைக் காலத்தில் அன்புடன் வழி நடத்த உறவுகள், நட்புகள் தேவை. ரத்தினத்தின் நட்பு ஒரு தொடர்கதை. அவரை அழிவிலிருந்து மீட்டுவிட்டேன் என்று அடிக்கடி கூறுவார். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், இழப்புகளின் பொழுது நல்ல நண்பராக இருந்தார். ஆம், அவர் இப்பொழுது இல்லை. இந்த சம்பவத்திற்குப் பின் இரு பக்கமும் பிரச்சனைகளைப் பார்த்தேன்.


அக்காலத்தில் நான் உணர்ந்தது பெரிதும் பாதிக்கப்பட் டிருப்பவள் பெண் என்பதுதான். இருப்பினும் நான் அவசர முடிவு எடுக்கமாட்டேன். என் வேகத்தில் கொஞ்சம் விவேகம் கலந்தது. பள்ளிப் படிப்பைவிட அனுப வங்கள் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் நிறைய. நாம் தான் புரிந்து தெளிவடைய வேண்டும். என் பணிக்காலத்தில் இளைஞர் களையும் சமுதாயப் பணிக்குப் பயிற்றுவித்தது வாடிப் பட்டியில்தான். இளைஞர் என்று கூறும் பொழுது இப்பொழுது நான் இருக்கும் 75ஐ நினைத்து விடாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது 21 .


பகுதி 15

வாடிப்பட்டி வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைக் கற்பித்தது. என் திறமைகள் வளரக் காரணமாயிருந்த அனுபவங்கள் என்னிடம் ஓர் பக்குவத்தையும் ஏற்படுத்தியது; யாரும் கற்றுத்தரவில்லை. தானாகவே அமைந்தது. ஒரு குழந்தை முதலில் தவழும், பின் எழுந்திருக்க முயலும், கீழே விழுந்து, எழுந்து நிற்கப் பயிலும். ஓடுவதும் அப்படியே. விழும் பொழுது அழும். ஓடி இலக்கை அடைந்துவிட்டால் சிரிக்கும். அப்படித்தான் நானும் சூழ்நிலையால் உருவாக்கப் பட்டவள்.

வாடிப்பட்டி வட்டாரத்தில் கருப்பட்டி கிராமம் . புதிய அனுபவங்களின் தொடக்க பூமி. அவ்வூரில்தான் நான் முதலில் நடனம் ஆடியது. என் நாடக அரங்கேற்றமும் அங்குதான். முதன் முதலில் அந்த ஊருக்கு பஸ்ஸில் போய் இறங்கினேன். தனியாகப் போயிருந்தேன்; கீழே இறங்கவும் சுற்றிப் பார்த்தேன். அருகில் ஒரு பெட்டிக்கடை. அங்கே நான்கு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்; நான் இறங்கவும் முதலில் வியப்புடன் பார்த்தனர். பின்னால் ஏதோ பேசிச் சிரித்தார்கள்.

அவர்களைச் சில வினாடிகள்தான் பார்த்தேன். உடனே அவர்களை நோக்கி நடந்தேன். சிரித்தவர்கள் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக் கருகில் சென்று ஒரு சிறு தாளை நீட்டி, “இந்த விலாசத் திற்குப் போக வேண்டும் வீடு எங்கே இருக்கின்றது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.நால்வரில் ஒருவன், “டேய் மணி, இது உங்கள் வீட்டு விலாசம்டா” என்றான். உடனே மணி அதனை வாங்கிப் பார்த்து “இவங்க எங்க அம்மாதான், வாங்க கூட்டிகிட்டுப் போறேன் “என்று சொன்னான். மற்றவர்களிடம் “போய் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மணியுடன் புறப்பட்டேன். அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கலாம். நடந்து போகும் பொழுதே அவர்கள் நால்வரின் விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.


பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளிப் படிப்பு முடிந்தபின் ஊரிலேயே இருந்து தந்தைக்கு உதவிகள் செய்து வந்தனர். குடும்பத்தில் பெரியவர்கள் இருந்ததால் இவர்களுக்கு வேலைச் சுமை குறைவு . கூப்பிட்ட குரலுக்குப் பிள்ளை. வேலை இல்லாத நேரங்களில் நண்பர்கள் கூடிப் பேசுவார்கள். மணியின் வீடும் வந்து விட்டது. மணியின் தாயார் செல்லம்மாள், மாதர் சங்கத்தின் தலைவி. வீட்டுக்குள் நுழைந்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் முகமலர்ந்த வரவேற்பு கிடைத்தது. உடனே மணியை நோக்கி அவன் அம்மா, ‘டேய், போய் செண்பகம் அக்காவைக் கூட்டியா “ என்று சொல்லவும் மணி புறப்பட்டுவிட்டான். செண்பகம் மாதர் சங்கத்தின் கன்வீனர். அந்த கிராமம் கொஞ்ச வசதியான ஊர். ஓரளவு படித்தவர்களும் இருந்தனர். வெளியூருக்குப் போய், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பையன்களும் உண்டு. ஆனால் பெண்கள் யாரும் ஊரை விட்டுப் போய்ப் படிக்க ஆரம்பிக்கவில்லை.


செண்பகம் வந்துவிட்டாள்; நான் அவளுடன் வீடுகள் பார்வையிடப் புறப்பட்டேன். சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்து மணியிடம், “மணி, உன் சினேகிதப் பசங்களை 2 மணிக்குக் கூட்டிட்டு வரியா?”என்று கேட்டேன். முதலில் அவன் விழித்தான். “கொஞ்சம் பேசணும், உங்க ஊர்லே உங்களை மாதிரிப் பசங்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக் கலாம்னு நினைக்கறேன். அது சம்பந்தமா பேசணும்” என்று நான் கூறவும் அவன் முகம் மலர்ந்து “சரி “என்று கூறினான். பின் செல்லம்மா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு முன் வாசல்லே உட்கார்ந்து நாங்க பேசலாமா?” என்று கேட்டேன். உடனே அவர்களும் “எங்க ஊருக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. தாராளமா கூட்டி வச்சுப் பேசுங்க. சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு அலையறா னுங்க. ஏதாவது வேலை கொடுங்கண்னு” ஆலோசனயும் கூறினாள் செல்லம்மா .


என் பணிப்பட்டியலில் இது கிடையாது. இதை நினைத்து அந்த ஊருக்கு வரவில்லை. திடீரென்று தோன்றியது சொன்னேன். அவ்வளவுதான் செண்பகத்துடன் சில வீடுகளுக்குச் சென்று பெண்மணிகளைச் சந்தித்து வழக்கம் போல் பேசிவிட்டு செல்லம்மா வீட்டிற்குத் திரும்பும் பொழுது மணி ஒன்றாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு மணியின் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். இதற்கிடையில் செல்லம்மாவிடம் ஊர் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.


இளைஞர்களின் மனப்போக்கைப் புரிந்துகொண்டு அவர்களின் மனித சக்தியை எப்படி சமுதாய நலனுக்குப் பயன்படுத்த முடியும் என்று கற்றுக் கொடுத்தது கருப்பட்டி கிராமம்.


மணியின் நண்பர்கள் வந்தார்கள். அவர்களின் பெயர்கள் செல்வன், ராமன், பெருமாள். முதலில் சாதாரணமாக அரட்டையடித்தேன். பேசப் பேசத் தயக்கம் போய் அவர்களும் சரளமாகப் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது கிரிக்கெட் வளராத காலம். விளையாட்டுகள் பற்றிப் பேசும் பொழுது ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சினிமா பற்றிப் பேச ஆரம்பிக்கவும், உற்சாகமாக உரையாடினர். அவர்களையே கிராமத்திற்கு என்னென்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டச் சொன்னேன்.


கிராமங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் வரும். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜி நாள், பாரதி நினைவு நாள் என்று பல முக்கியமான தினங்கள் வரும். எனவே அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று கூறினேன். குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம், அவர்களையும் சிறு கலை நிகழ்ச்ச்களில் பங்கு பெறச் செய்யலாம் . பேச்சுப் போட்டிகள் நடத்தி சிந்தனா சக்தியை வளர்க்கலாம் என்றெல்லாம் சொன்னபொழுது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். அப்படியே அவர்களை சமுதாயப் பணிக்குக் கொண்டு வந்து விடலாம். வெட்டிப் பேச்சில் மனித சக்தி வீணாவதை நான் விரும்பவில்லை. உழைக்கும் மனிதனுக்குக் களைப்பை நீக்கும் வடிகால் கூத்து. உலகில் எல்லாப் பகுதி மக்களும் வரவேற்கும் கலை கூத்து. சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கூத்தின் வாயிலாக எளிதில் வெளிப்படுத்த முடியும்.


எப்படி இளைஞர்களுடன் என்னால் இவ்வளவு எளிதாகப் பழக முடிந்தது ? என்னைப் போன்ற பலரை உருவாக்கிய பெருமை என் ஆசிரியர் கே. பி. எஸ் நாரயணன் அவர்களையே சாரும். நான் படித்தது ஆணும் பெண்னும் சேர்ந்து படிக்கும் பள்ளிக் கூடம். அதுவும் ஒரு சின்ன கிராமத்தில் இருந்த பள்ளிக்கூடம். என் வகுப்பில் நான் ஒருத்தி தான் பெண். என் வகுப்பு மாணவர்களுடன் தயங்காமல் பழகுவேன். சந்தேகம்வரின் வகுப்பறையில் பையனின் அருகில் சென்று கேட்டுக் கொள்வேன். கேலி, கிண்டல் கிடையாது. 65 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு சின்ன கிராமத்தில் ஆண், பெண் பள்ளிக்கூடத்தில் எத்தகைய ஆரோக்கியமான சூழல். பெருமையெல்லாம் ஆசிரியர்களுக்கே உரியது.
ஆசிரியர் - மாணவர் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதற்கு அஸ்திவாரமாக ஆகும் காலம் கல்விப் பருவம். காலச் சுழற்சியில் அடிபட்ட உறவுகளில் ஆசிரியர்- மாணவர் உறவும் ஒன்று .


இளைஞர்களின் சங்கங்கள் என்று கருப்பட்டி, மட்டப்பாறை இரு இடங்களில்தான் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற வேண்டிய ருத்ர துளசிதாஸ் அப்பொழுதுதான் பணியில் சேர்ந்தார். இனி அவர் அப்பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். .என்னுடய மேடைப் பேச்சு, பாட்டு, நாடகம் இவைகளால் இளைஞர்களின் பற்றும் கிடைத்தது. மட்டப்பாறையில் எனக்கு வர இருந்த சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்த இளைஞர்கள் கூட்டம். இசையும் கூத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.


காலம் எவ்வளவு மாறிவிட்டது ! எழுதும் பொழுதே இக்கால நினைவுகள் வந்து மோதுகின்றன ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்.


காலம் மாறியிருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு, மனித சக்தியை ஒருங்கிணைத்து ஆக்க பூர்வமான பல காரியங்கள் செய்ய இயலும். ஆனால் மனிதன் சுயநலப்பேயிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றான். பொருளாசைப்படுகின்றவன் மட்டுமல்ல, நமக்கு எதுக்கு வம்பு என்று தன் அமைதிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஒதுங்கின்றவனும் சுயநலக் காரன்தான். ஒவ்வொருவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும். முடிந்த ஏதோ இன்று இரண்டாவது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.


இப்போது எனக்குள்ள வயதைப் பார்த்து, சிலர் என்னிடம் “ உங்களுக்கு இக்கால இளஞர்கள்பற்றித் தெரியாது” என்று கூறுகின்றார்கள். சமூக நலப் பணியில் ஓய்வுக்கு வயது கிடையாது என்பது போல் நல்லது செய்ய நினைப்ப வர்களுக்கு எப்படி சாதி, மதம், மொழி, நாடு என்று கிடையாதோ எல்லா வயதினர்க்கும், ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் செய்ய வேண்டும். சுவையான அனுபவம் ஒன்றைக் கூறப்போகின்றேன் -
இக்கால அனுபவம்., இக்கால இளைஞர்களுடன் என் தொடர்பு, உங்களை ரசிக்க வைக்கும் காட்சிகள் காணலாம். நான் கணிணி எப்படி கற்றுக் கொண்டேன் என்பதைச் சொன்னாலே போதும். என் இளைஞர் படை உலகம் முழுதும் இருக்கின் றார்கள். பெரியவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னுடன் அன்புடனும், அக்கறையுடனும் ஏன், ஜாலியாகவும் பழகுவது இளைஞர்கள்தான். கொஞ்ச நேரம் கிராமத்திலிருந்து சென்னை நகர் போகலாம்.



பகுதி 16

பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருந்தால் பித்துப் பிடித்துவிடும். கொஞ்சம் இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இளைஞர்கள் பற்றி, அதுவும் தற்காலச்சூழலில் அவர்களைக் காணலாம். சங்கிலிப் பிணைப்பைப்போல் சம்பவங்கள் இணைந்துவிடும். சிறிது நேரம் நினைவுகள் இளமை ஊஞ்சலில் ஆடட்டுமே! வேடிக்கை பார்க்கலாம். அதிலும் செய்திகள் இல்லாமலா போய்விடும்! பரபரப்பாக இருந்த வாழ்க்கை பணியில் ஓய்வு பெறவும் சில ஆண்டுகளில் மூட்டுவலியால் வீட்டில் முடங்கி விட்டேன். 2001 ஆண்டு ஜுலை மாதம் மகன் அமெரிக்காவிலிருந்து வரும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் எடுத்து வந்தான் ; “அம்மா, உங்களுக்ககத்தான் கொண்டு வந்திருக்கேன். தென்காசி போய்ட்டு வர 10 நாட்களாகும். அதற்குள் கொஞ்சமாவது நீங்க படிச்சிருக்கணும். இல்லேன்னா யாருக்காவது கொடுத்து டுவேன்” என்று கூறிவிட்டு எங்கள் வீட்டு காம்பவுண்டில் பின்னால் மாடியில் குடியிருக்கும் பையன்களைக் கூப்பிட்டு “ராஜா, என் அம்மாவுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி சொல்லிக் கொடுங்கள் “ என்றான். மாடிவீட்டுப் பையன்கள் என் பேத்தியின் நண்பர்கள். உடனே கற்பனையில் போய்விட வேண்டாம். பேத்திக்கு மூன்று வயது. வெளியில் போய்விடக் கூடாது என்று காம்பவுண்டு கதவுகளை பூட்டி இருப்போம். இவளோ மாடிக்குப் போய் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அதனால் இப்பொழுது அவர்களுக்கும் நான் பாட்டி. இதுவரை யாரும் என்னிடம் பேசியதில்லை. இனிமேல் பேசியே ஆக வேண்டும் .


நால்வரும் பொறியியல் வல்லுனர்கள். கீழைக்கரை கல்லூரியில் படித்தவர்கள். ராஜாகான், ஈசா, நயினா, ஷேக், இவர்களுடன் வெளியில் தங்கி முதுகலைப் படிப்பு படிக்கும் அப்பாஸும் அடிக்கடி வந்து தங்குவான். மாடியில் அரட்டைச் சத்தம் கேட்கும். மற்றபடி இருப்பதே தெரியாமல் அடக்கமாக இருப்பவர்கள் .அன்று இரவு ஏழுமணிக்கு ஐவரும் வந்து விட்டார்கள். நான் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தேன். ராஜா என் பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் மற்றவர்களும் நாற்காலி, ஸ்டூல் என்று எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள் எனக்கு இத்தனை வாத்தியார்களா?


67 வயது சின்னப் பெண்ணிற்கு 25 வயது கிழ வாத்தியார். சே! எப்பொழுதும் இப்படித்தான். 17 வயதில் படித்த கல்லூரி புனித மேரிகல்லூரி. சன்னியாசிகளுடன் தங்கினேன். 40 வயதில் ராணிமேரி கல்லூரி. சின்னச் சின்னப் பெண்களுடன் வயதானவள் நான். என் ராசி அப்படி. ராஜா என் முகத்தைப் பார்த்து, “என்ன பாட்டி யோசனை? பயமா? சீக்கிரம் நீங்க கத்துக்கலாம் “ என்றான். பாவிங்களா, பாட்டின்னு கூப்பிட்டுகிட்டு பாடம் சொல்லிக் கொடுக்க வந்தீங்களா?


கணிணிபற்றி ஒவ்வொன்றாக ராஜா சொல்ல ஆரம்பிக்கவும் பயம் வர ஆரம்பித்தது. தொல்காப்பியம் மனப்பாடம் செய்ய வேண்டி வந்த பொழுது படிப்பதையே நிறுத்திவிடலாம் என்று நினைத்தவள். கணிணியும் வேண்டாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் எண்ணங்களைப் புரிந்து கொண்டவன் போல், “பயப்படாதீங்க, ஆரம்பத்திலே அப்படித்தான் தோணும். அப்புறம் பாருங்க, நீங்க கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்க மாட்டீங்க “ என்றான் ராஜா. பாவி எந்த நேரத்தில் சொன்னானோ , இப்பொழுது அப்படித்தான் எப்பொழுதும் கணிணியுடன் உட்கார்ந்தி ருக்கின்றேன். அடுத்து ஒரு பெயர் வைக்க வேண்டுமாம். மெயில் ஐடியாம் . எனக்குப் பிடித்தமானவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு பெயர் சொன்னேன் ( மன்னிக்கவும் . பெயர் சொல்ல மாட்டேன் ). பாஸ்வொர்ட் என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். Messenger என்று ஒன்றாம் அதனையும் ஏற்படுத்தினான் .“பாட்டி , இதில் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெயரைப் பதிந்தால் அரட்டையடிக்கலாம் “ என்று சொல்லவும் ஒரே குஷி. தனிமை பறந்துவிடும். அடுத்து அவன் சொன்னதுதான் என்னுடைய புது பந்தம். “பாட்டி, உங்களுக்கு, keyboard, mouse கணிணியில் கவனம், மூன்றும் ஒரே சமயத்தில் வேகமாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் சாட்டிங் போனால் சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். அதனால் இப்போ உங்களை நான் சென்னை ஆன் லயன் சாட்டிங் அறைக்குக் கூட்டிப் போகப் போறேன். அங்கே வர்ரவங்ககிட்டே நீங்க அரட்டை அடிக்கணும். நான் சொல்லச் சொல்ல நீங்க டைப் செய்யுங்க “ மனத்தில் ஒரே பரபரப்பு. ஆர்வத்தை உண்டுபண்னிவிட்டான் அடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.


“பாட்டி, இங்கே உங்க சொந்தப் பெயரை சொல்லக் கூடாது, அதுக்கு தனியே பேர் வைக்கணும்” இது ராஜா ;“நமோசா” இது நயினா ;


“அதென்ன நமோசா, சமோசா மாதிரி. பேரு நல்லா இல்லே” இது நான் ;


“பாட்டி, பேரு புதுமையா இருக்கணும், உடனே பசங்க குதி போட்டுக் கிட்டு பேச வருவாங்க. ஊர் கேட்டா ஜப்பான், இங்கே காலேஜ்லே படிக்க வந்திருப்பதா சொல்லுங்க” என்று அப்பாஸ் கூறிவரும் பொழுதே, நவாஸ் “ வயசு கேட்டா 19 ன்னு சொல்லணும்” என்றான்;


அடப்பாவிங்களா, 67 வயது பெண்மணியை 19 வயதுன்னு சொல்ல ணுமாம். என்ன போலித்தனம். “பொய் சொல்ல முடியாது” என்று கத்தினேன். எல்லோரும் சிரித்தார்கள்.


“பாட்டி, உங்க வயசைச் சொன்னா ஒரு பயலும் பேச வரமாட்டான். சும்மா வேடிக்கைக்குத்தானே. அப்போத்தான் உங்களுக்கு ஸ்பீடு வரும் “என்று நிதானமாகச் சொன்னான் ஈசா ;எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜா, “பாட்டி, நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க. அது போல நீங்க அனுப்பறது ஒரு பாத்திரம்னு நினங்க. பேசும் பொழுதுமட்டும் ஜாக்கிரதையாகப் பேசுங்க. வாலுங்க, நீங்க சமாளிச்சுடுவீங்க. நான் தான் பக்கத்தில் இருக்கேனே. நான் சொல்றதை நீங்க அடிச்சா போதும் “ என்று சொல்லி தைரியம் ஊட்டினான் .அப்பொழுது சென்னை ஆன் லயன் சாட்டிங் பிரபலம். மெயில் ஐ டி கொடுக்க வேண்டாம். பெயர்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மைக் கூப்பிடறவங்ககிட்டே நாம் பேசலாம். என் கணிணி பயணம் ஆரம்பித்தது; முதன் முதலில் சென்னை ஆன் லயனில்தான் முதலில் பேச ஆரம்பித்தவன் பெயர் வம்ஸி. பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம். வயது 21. முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத் தயக்கம் விலகியது. உரையாடல் வேடிக்கையாக இருந்ததே தவிர விரசமாக இல்லை. விலாசம் கேட்டான் ராஜா சொல்லச் சொல்லத் நானே டைப் செய்து கொண்டிருந்தேன். “ விலாசம் இப்போ கொடுக்க மாட்டேன். கொஞ்ச நாளாகட்டும் “ என்று சொன்னேன். இன்னும் சிலர் கூப்பிட்டாலும் பதில் கூறமுடிய வில்லை. என்னால் ஒருவனுக்கே பதில் அடிக்க நேரம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த ஒற்றைவிரல் நாட்டியம் தான் இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் சொன்னது சரிதான். பயிற்சிக்கு எனக்கு சாட்டிங் உதவி செய்தது .அடுத்த நாளும் பயிற்சி தொடர்ந்தது. இரண்டாம் நாள் இன்னொரு புது நண்பன் பெயர் ஜான். பள்ளிப் படிப்பை முடித்துப் பின் அலுவலகத்தில் ஒரு சாதாரண வேலை பார்த்துக் கொண்டே. எம். சி. ஏ வரை அஞ்சல் வழிக்கல்வி மூலம் படித்து ஒரு தொழிலையும் அமைத்துக் கொண்டு மென்பொருள் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தான். உழைப்பால் உயர்ந்தவன் வயது 27. அவனை எனக்கு மிகவும் பிடித்தது. மூன்றாம் நாள் யாரும் வரும் முன்னர் நானே கணிணி முன் உட்கார்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் இரு புதிய நண்பர்கள். அன்றும் வம்ஸியும் ஜானும் வந்திருந்தனர். எல்லோரும் தொலைபேசி எண் கேட்டார்கள் . நான் தயங்காமல் கொடுத்துவிட்டேன். நான் உட்கார்ந்திருக்கும் பொழுதே மாடி வீட்டுப் பசங்க வந்து விட்டார்கள் நான் நடந்ததைக் கூறவும் பதறி விட்டார்கள். “பாட்டி, தப்பு செய்துட்டீங்க. பசங்க வீட்டூக்கு வந்துடுவாங்க” .


“வரட்டுமே, வந்தா, பேத்தி வெளியே போயிருக்கான்னு சொல்லிட்டுப் போறேன். எத்தனை நாள் வருவான். போரடித்து வருவதை அவனே நிறுத்தி விடுவான் “ என்று நான் கூறவும் “ பாட்டி விளஞ்ச பாட்டி “ என்று கூறிச் சிரித்தார்கள். ஆனால் நடந்தது வேறு. வம்சிதான் முதலில் கூப்பிட்டான். பேச ஆரம்பித்து, அதிக நேரம் இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். கடைசியில் நான் யார் என்பதைக் கூறினேன். அவன் சொன்ன பதில் எனக்குத்தான் வியப்பை அளித்தது. என் குரலால், நான் சிறு பெண் இல்லை என்பதை யூகித்து விட்டான். ஆனால் பேச்சு சுவாரஸ்யமக இருந்ததால் தொடர்ந்து பேசியிருக்கின்றான் . “அம்மா, நீங்கள் செய்தது சரி. வயதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் பேச ஆரம்பித்திருக்க மாட்டேன். சாட்லே வர்ரவங்க கெட்டவங்க இல்லே. பொழுது போகணும். சில சமயம் நல்ல பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனாலும் இப்போ உங்க கிட்டே பேசினேனே, அவ்வளவு நேரம் பேசி இருக்க மாட்டேன். எத்தனை விஷயம் பேசினோம். உங்க வீட்டுக்கு வருவேன். சொல்லிட்டு வர மாட்டேன். திடீர்னு வருவேன் ‘ என்றான்.. அடுத்துப் பேசியவன் ஜான். அவனும் உண்மை தெரிந்து அதிர்ந்து போகவில்லை. அன்றே வீட்டிற்கு வந்தான். வம்சி சொன்னது போல் திடீரென்று ஒரு நாள் வந்து, “ அம்மா , ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. பசிக்குது. “குழந்தையாய் கேட்கவும் உருகிப் போனேன். இன்றும் அவன் என் செல்லக் குழந்தையாக இருக்கின்றான் .


சாட்டிங் மூலம் ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் 27. மாடி வீட்டுப் பையன்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 32 ஆயிற்று. இவர்களை ஒன்றுபடுத்த ஒரு புதிய திட்டம் தோன்றியது.


பகுதி 17

புனிதவதி இளங்கோவன் அண்ணியாக இருந்தவர், தோழியானார் .நாங்கள் கருத்துக்களில் ஒன்றுபடுவதும் உண்டு, சிலவற்றில் மாறுபடுவதும் உண்டு. அது எங்கள் நட்பைப் பாதித்தது இல்லை.


இளைஞர்களுக்காக நான் நினைத்த திட்டத்தைக் கூறவும் மகிழ்ச்சி யுடன் ஆதரித்தார். அதுமட்டுமன்று, ஒத்துழைப்பும் தருவதாகச் சொன்னார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்தே திட்டமிட்டோம். மாதம் ஒரு முறை நடக்கும் கூட்டங்களுக்கும் வந்திருந்து அவர்களே முன்னிருந்து நடத்திக் கொடுத்தார்கள் ஜூலை மாதம் 17ல் கணிணி யைத் தொட்டேன். ஒருமாதத்தில் அரட்டையில் நண்பர்கள் சேர்ந்து விட்டனர். எனவே முதல் ஒன்றுகூடும் கூட்டம் ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகியது.


முதல் கூட்டத்தின் சிறப்புவிருந்தினர் அஸ்வத்தாமா என்ற குமணன். இவர் வர்த்தக ஒலிபரப்பின் மூலம் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். சென்னை வானொலியில் செய்திப் பிரிவில் வேலை பார்த்தவர். பின்னால் சொந்தத் தொழிலில் இறங்கி விட்டார். இவர் பெயரைச் சொல்லவும் இளைஞர்கள் உற்சாகமாகி விட்டனர். சொற்பொழிவு கிடையாது. கலந்துரையாடல். விருப்பம் போல் கேள்விகள் கேட்கலாம். அந்தக் கலந்துரையாடல் சுவாரஸ்யமான தாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. புனிதம்தான் பேச்சில் கலந்து கொண்டார் .


அடுத்த கூட்டத்தில் தம்பதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இரு தலைமுறைகளின் கலந்துரையாடல்.இரு தரப்பும் மனம்விட்டுப் பேசினர் ; மூன்றாவதில் இளவயதுப் பெண்கள் வந்தனர். விவாதங்கள் சூடாக இருந்தன. புனிதம் நடுவராக இருந்து வழி நடத்தினார்கள்
நான்காவது சிறப்பு விருந்தினராக சோதிட அறிஞர் திரு ஏ.வி. சுந்தரம் அவர்கள் வந்திருந்தார். ஐ.ஐ.டி யில் வேலைபார்த்துக் கொண்டி ருந்தாலும் சோதிடத்தை விஞ்ஞானம் என்ற கருத்தில் ஆய்வு செய்தவர். இளைஞர்களில் பல மதத்தினர், கடவுள் மறுப்பு கருத்துக் கொண்டவரும் இருந்தனர். அன்றைய விவாதம் மிகவும் அருமையாக இருந்தது.


ஐந்தாம் சந்திப்பு யாராலும் மறக்க முடியாதது. புத்தாண்டு கொண்டாட புதிய வழி. யாஹூ சாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் உலக அளவில் சேர்ந்து விட்டனர். அவர்கள் வெளி நாட்டில் இருந்தனர் அவர்களுக்கு நான் 19 வயதுப் பெண். 2001 டிசம்பர் இரவு 11 மணிக்கு சாட்டில் அவர்கள் வர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். சென்னை வாசிகளுக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. என் வயதைக் கூறக்கூடாது என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். என் உறவினர்கள், சில குடும்ப நண்பர்கள் குடும்பமாக வந்திருந்தனர். அன்று உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.


சரியாக இரவு 11 மணிக்கு யாஹூ அரட்டை அறைக்கு நுழைந்தோம். வம்ஸி தான் பொறுப்பு. என்னை விசாரிக்கவும் அவன் சொன்ன பதில் இப்பொழுதும் நினைக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கின்றது
“மச்சி, அவ என் தங்கச்சிதான். ஒரே வெட்கம் இங்கே பக்கத்தில் குந்திகிட்டு வேடிக்கை பாக்கறா. நீ நல்லா பாடுவியாமே. பாடு. உன் பாட்டைக் கேட்க ஓடோடி வந்துருக்கோம் ஏமாத்தாதே மச்சி”


வம்ஸியின் பேச்சில் மயங்கிப் பாட ஆரம்பித்து விட்டான். அவ்வளவுதான் ஒவ்வொருவராகப் பாட ஆரம்பித்தனர், புனிதமும் பாடினார்கள். அரட்டைக்கு வந்தவர்களும் உற்சாகமாகப் பாடினர். வம்ஸி தன் நண்பர்களுடன் கானா பாட்டு பாடினான். புது வருடம் பிறக்கும் பொழுது உலக அளவில் வாழ்த்துத் தெரிவித்து கொண்டு கத்தினோம். இன்றும் யாரும் அந்த சம்பவத்தை மறக்க வில்லை; மனத்தில் பதிந்த ஓர் அற்புதமான நிகழ்வு.


ஆறாவது கூட்டத்திற்கு பல துறைகளிலிருந்து அழைக்கப்பட்டு வந்திருந்தனர். மறைந்த திருமதி சத்தியவாணிமுத்துவின் மகள் சித்ரா அரசியல் சார்பில் வந்திருந்தார். மேடைப் பேச்சாளர். திராவிட முன்னேற்றக் கட்சியில் மகளிர் அணியில் இருப்பவர். வந்திருந்த அனைவரும் ஏதாவது பணியிலோ அல்லது சொந்தத் தொழிலோ செய்பவர்கள். அன்று நடந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. ஜான், மாத்யூ இருவரைத் தவிர யாரும் இன்னும் பணியில் சேராதவர்கள்.


ஏழாவது கூட்டம் சோகமானது. காரணம் அதுவே அவர்களுக்குக் கடைசிக் கூட்டம். நான் மார்ச் மாதம் அமெரிக்கா புறப்பட்டுவிட்டேன் இளைஞர்கள் பழக்கம் வெறும் சந்திப்புதானா? இல்லவே இல்லை. பதவி ஓய்வு பெற்றபின் வெளி உலகத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டிய நிலை. மாறியிருக்கும் காலத்தை எனக்குக் காட்டியவர்கள் இவர்கள். அதிர்ச்சிகளும் அதிசயங்களும் உணர்ந்தேன். அவர்களும் பாசத்துடன் அம்மா வென்றோ ஆன்டி என்று அழைத்த்னர். பலர் தங்கள் பிரச்சனைகளைக் கூறினர்; முடிந்தமட்டும் தீர்த்து வைத்தேன். இவர்களில் சிலர் அவ்வப்பொழுது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்வர்.


ராஜா என்றோ வருபவன் இல்லை. வீட்டின் மாடியில் குடியிருப்பவன். ஆசானாய் வந்தவன் நண்பனா னான். பல நாட்கலில் இரவு 12 மணி வரை பேசிக் கொண்டி ருப்போம். நிறைய தமிழ்க் கதைகள் படிப்பான். நல்ல சிந்தனை. எங்களுடைய அலசல்கள் பல கோணங் களில் இருக்கும். வேலையிலிருந்து திரும்பும் ஈஸா முதலில் என்னைப் பார்த்துவிட்டுத்தான் தன் அறைக்குச் செல்வான். என் முகம் வாடியிருந்தால் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டே செல்வான்.


ஷேக் கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் ஆனாலும் பாசமுள்ளவன். ஒருநாள் திடீரென்று ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தான். திறந்து பார்த்தால் இரண்டு உளுந்து வடை. அவன் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கவும் என் நினைவு வந்ததாம். அதனால் வாங்கி வந்தானாம் .இவர்களில் நயினாதான் வித்தியாசமானவன். அறையைச் சுத்தமாக வைக்கும் வேலைகளை இவன்தான் செய்வான். இன்னும் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. ஆனால் தினமும் காலையில் குளித்துவிட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் சென்று விடுவான்.


ஒரு நாள் அவனை “எங்கே காலையில் தினமும் போகின்றாய்? ” என்று கேட்டேன். அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன் ; “பாட்டி, தினமும் புரசவாக்கம் பஸ் ஸ்டாண்டிற்குத்தான் போறேன். காலேஜுக்கு அப்பொதான் பொண்ணுங்க வந்து பஸ் ஏறுவாங்க. அவங்கள வேடிக்கை பாக்கத்தான் போறேன் “ நான் சிரித்து கொண்டேன். என் வயதில் மற்றவர்கள் என்ன சொல்லுவர் ? “ஏண்டா ஒழுங்கா வேலை தேடத் தெரியல்லே. இப்படி பொண்ணுங்க பின்னாலே சுத்தினா உருப்புடுவியா? “ இந்த வயது ரசிக்கும் வயது. எதை எதை எப்போ, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை பெரியவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய காலம்.


நான் மட்டுமல்ல, புனிதமும் மாடிவீட்டுப் பையன்க ளுடன் ஒன்றிப் பழகினார்கள். அந்த அறை சரியான பிரம்மச்சாரி அறை. அங்கே அவர்கள் சி.டி வாங்கி கம்ப்யூட்டரில் போட்டு சினிமாப் பார்ப்பார்கள். சில சமயம் நாங்கள் இருவரும் அங்கு போய் அந்தக் குப்பை மேட்டில் உட்கார்ந்து படம் பார்த்திருக்கின்றோம்.
ராஜா எனக்கு எழுதிய கடிதத்தில் என்னைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்து எழுதியிருந்தான். ஒரு சிறிய பகுதியை மட்டும் இங்கு காட்ட விரும்புகின்றேன் -


“நான் எழுத அமர்ந்துவிட்டேன். .. என்ன எழுதுவது.. ? இதயம் ஆராய்கிறது. முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும். இப்போது நான் யார்? ஒரு பாசமிகு பாட்டிக்குப் பேரனா ? ஓர் எழுத்தா ளரின் வாசகனா? விமர்சகனா? ஒரு அறிவுத் தோழியின் தோழனா ? இல்லை ஓர் அறிவுபூர்வ அப்பாவிக்கு ஆலோசகனா ? இல்லை ஒரு மாணவியின் ஆசிரியனா? இல்லை, ஓர் ஆசிரியையின் மாணவனா? முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும்! எப்படி இது சாத்தியம் ? இரு உயிர்களுக்கு மத்தியில் இத்தனை உறவுகளுக்கு எப்படி சாத்தியம்? முடிந்ததே , அப்படி இருக்க முடிந்ததே ஒரு பாட்டியாக, ஓர் இலக்கியவாதியாக, விமர்சகராக, மாணவியாக, ஆசிரியராக, ஆலோசகராக, அப்பாவியாக ஒரு பாட்டி. .. , அதிலும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மூதாட்டி என் வாழ்க்கைப்பயணத்தில் வருவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் வந்தார். அப்படி ஒரு பெண் அத்தனை உறவுகளையும் சுமந்து கொண்டு என் வாழ்வில் வந்தார் “ பாட்டிக்குப் பேரன் எழுதிய கடிதம்.


தலைமுறை இடைவெளி எங்களிடையே நாங்கள் உணரவில்லை. இன்றும் அவன் என் பேரன், என் தோழன், என் ஆசான். ஈசனுக்கு குருவாய் அமரும் சண்முகன் நம் வாழ்க்கையிலும் உண்டு. மாடிவீட்டுப் பையன்கள் அனைவரும் இப்பொழுது துபாயில் வேலை பார்க்கின்றனர். என் ஆசான் என்று குறிப்பிட்ட ராஜாகான் தான் இன்று கீழை ராசா என்ற புனை பெயரில் துபாய் தமிழர்கள் மத்தியில், தமிழ் இலக்கியக் கூட்டங்களில் கவிதை பாடிக்கொண்டு, கதை பேசிக் கொண்டு வலம் வருவதோடு, தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சாருகேசி என்ற வலைப்பூவையும் எழுதி வருகின்றான். நட்புக்கு ஓர் இலக்கணம். சிறந்த சிந்தனையாளன். அண்ணாச்சியின் அன்புத் தம்பி.


என் நினைவில்லத்தில் மணியனும் சாவியும் இருப்பது போல்தான் பெரிய கருப்பனும், ராஜாவும் இருக்கின் றார்கள். அது சாதனையாளர் இல்லம் அன்று; ஓர் அன்புக்குடில்.



--Ksubashini 18:37, 27 பெப்ரவரி 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Ksubashini