<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_5</id>
		<title>ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 5 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_5"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_5&amp;action=history"/>
		<updated>2026-05-26T09:35:40Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_5&amp;diff=12036&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: &amp;nbsp;மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை ச…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_5&amp;diff=12036&amp;oldid=prev"/>
				<updated>2013-01-06T14:34:59Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை ச…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை சுந்தர பாண்டியனால் சகிக்க முடியவில்லை. இருவருக்கும் சண்டை மூண்டது. வீர பாண்டியனுக்கோ படைபலம் இருந்தது. சுந்தரபாண்டியன் செய்வது என்னவெனத் தெரியாமல் தவித்தான். அப்போது அவன் செய்த மாபெரும் தவறு தான் தென்னாட்டுக் கோயில்களுக்குப் பல வருடங்கள் பிரச்னைகள் ஏற்படக் காரணம் ஆயிற்று. ஆம்; நாடாளும் ஆசையில் தன் பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி சுல்தானின் உதவியைக் கோரினான் சுந்தரபாண்டியன். வயதில் சுந்தரபாண்டியன் இளையவன் ஆனால் அவனே பட்டமகிஷிக்குப் பிறந்த பட்டத்து இளவரசன். வீர பாண்டியனோ வயதில் முதிர்ந்தவன் ஆனால் அவன் ஆசைநாயகியின் மகன். குலசேகரோ வீரபாண்டியனை ஆட்சி செய்ய வைத்துவிட்டுச் சென்று விட்டான். பாண்டிய நாடு இரண்டு பட்டது. உள்நாட்டுச் சண்டைகள் ஏற்பட்டன. இந்தச் சண்டைகள் குறித்த மேலதிகத் தகவல்கள் தேடினேன். மீண்டும் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்தான். அவனால் சிறைப்பிடிக்கப்பட்ட, சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம் செய்யப் பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தான். பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே தெற்கு நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச் சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான். மாலிக்காபூரின் பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான். வீர பாண்டியன் போசளரின் கண்ணனூர்க் கொப்பம் செல்ல அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர் முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டு வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர் தில்லைப் பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான். ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே மீண்டும் மதுரை நோக்கித் திரும்பினான். திரும்பும் வழியில் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான். அவன் தாக்கிய கோயில்களில் ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும், நுழைந்துவிட்டான் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப் பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய மணவாளரும், உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச் சென்றன. ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான். இத்துடன் தன் வெறி அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச் சென்றான். பாண்டிய நாடு பெரும் செல்வ வளத்தோடு இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றான். தான் அழைத்த சுல்தான் படையினால் தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு வருவதைத் தெரிந்து கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு ஓடி விட்டான். (அப்போது பத்மநாப சுவாமி கோயிலில் அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது கிடைத்திருப்பதாக ஒரு கூற்று. அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர். ஆனால் நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.) பாண்டியனும் கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத் தீக்கிரையாக்கியதோடு மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான். சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு நேரிடவே அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து ராமேசுவரம் ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள் பொருட்களைக் கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த பொருட்களுடன் 512 யானைகள், 5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா வைரங்கள், முத்துக்கள், மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக் காணிக்கையாக எடுத்துச் சென்றான். கூடவே நம் அழகிய மணவாளரும் சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள் செய்து புதுப்பித்துவிடலாம். ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள் நடப்பது எங்கே? என்ன செய்வது? ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில் எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி இருந்தாள். அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை. அரங்கனைக் காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள். வழியெங்கும் விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள். விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது. தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும் வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள் அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன் பேசுவது போல் தோன்றியது அவளுக்கு. அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.&amp;lt;br&amp;gt;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுரதானிக்கு அந்த அழகிய விக்ரஹம் மிகவும் பிடித்துப்போய்விடவே, அதனுடனேயே தூங்கி, விளையாடி, உணவு உண்டு என ஒரு நிமிடமும் அதை விட்டு அகலாமலே இருந்து வந்தாள். இங்கே கரம்பனூரில் இருந்த நம் நாட்டியப் பெண்மணிக்கோ அரங்கனைத் தொடர்ந்து சென்றதில் அவன் எங்கே போயிருக்கிறான் என்பதைக்கண்டு பிடிக்க முடிந்தது. கடும் முயற்சிகள் எடுத்து அந்தப் புரத்துக்குள் நுழைந்து அரங்கனைச் சீராட்டிப் பாராட்டும் சுரதானியையும் பார்த்துவிட்டாள். அவளிடமிருந்து அரங்கனை எப்படி மீட்பது? ஆனால் அவன் திரும்ப அரங்கம் வரும் வழியென்ன?? எதுவும் புரியவில்லை அவளுக்கு. திரும்ப ஸ்ரீரங்கம் சென்றால் தவிர எதுவும் இயலாது எனப் புரிந்தது அவளுக்கு. ஆகவே மீண்டும் எப்படியோ அந்தப்புரத்திலிருந்து வெளி வந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து விட்டாள். “பின் சென்ற வல்லி” என்னும் பெயரால் அழைக்கப்படும் அவள், கோயிலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரங்கனின் இருப்பிடத்தைத் தெரிவித்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவரும் கலந்து ஆலோசித்தனர். அரங்கனை எவ்வாறேனும் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. சும்மாப் போய்க் கேட்டால் சுல்தான் கொடுக்க மாட்டான். ஆகவே அவனை எவ்வாறேனும் கவர்ந்து அவன் மனதை மாற்ற வேண்டும். அதனால் நன்றாய் ஆடிப் பாடக் கூடியவர்களாக சுமார் அறுபது பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்குப் “பின் சென்ற வல்லி “வழிகாட்ட அனைவரும் தில்லி போய்ச் சேர்ந்தனர். பெரிய கோஷ்டியாக வாத்திய முழக்கங்களுடன் தெற்கே இருந்து ஒரு நடனகோஷ்டி வந்திருப்பதை அறிந்த சுல்தான் தன் அவைக்கு அவர்களை வரவழைத்தான். அவர்கள் எதிர்பார்த்ததும் இது தானே! மன்னன் சபையில் ஆடிப் பாடி அவன் மனம் மகிழும் வண்ணம் அவன் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்தனர். மன்னன் உண்மையாகவே அவர்கள் திறமையில் மனம் மகிழ்ந்தான். ஆகவே அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக அறிவித்தான். ஆஹா, இது, இது தானே அவர்கள் எதிர்பார்த்ததும். அவர்கள் தங்களுக்கு வேறெதுவும் வேண்டாம் எனவும், அழகிய மணவாளரைத் திரும்பக் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்தனர். சுல்தான் அவர் இங்கிருந்தால் தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள் எனக் கூற, அவர்களோ அந்தப்புரத்தில் இளவரசியோடு இருப்பதைக் கூறினார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவரையும் விசாரித்த சுல்தான், தன் மகளிடமிருந்து அந்த விக்ரஹத்தைப் பிரிப்பது கஷ்டம் என உணர்ந்தவனாக அவளைத் தூங்க வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டான். அவளோ விஷயம் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டு தூங்க மறுத்தாள். இந்த நடன கோஷ்டியே பல்வேறுவிதமான தாலாட்டுக்களையும் பாடி அவளைத் தூங்க வைத்தது. அவள் நன்றாய்த் தூங்கியதும் அழகிய மணவாளரைத் தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கிப் பறந்தனர். ஆனால் சுரதானியோ! மிகவும் மோசமான நிலையில் ஆழ்ந்தாள். மறுநாள் காலை எழுந்து பார்த்தால் அவள் நேசித்த அழகிய மணவாளரைக் காணவில்லை. மனம் வருந்தி எழுந்து குளிக்காமல், உணவு உண்ணாமல், உடைமாற்றாமல் அழுது கொண்டே இருந்தாள். சுல்தானுக்கு மகளின் மோசமான நிலை தெரிவிக்கப் பட்டது. தன் மகளைப் பல விதங்களிலும் தேற்றிப் பார்த்தான். அவளோ மனம் மாறுவதாக இல்லை. அந்த அழகிய மணவாளரையே தான் மணந்து கொள்ளப் போவதாக வேறு சொல்லிவிட்டாள். தன்னையும் அவரோடு அனுப்பி வைக்குமாறு வேண்டினாள். அவளின் அவல நிலையைப் பொறுக்க முடியாத சுல்தான், சில வீரர்களின் பாதுகாப்போடு தன் மகளையும் அழகிய மணவாளரைப்பின் தொடர்ந்து செல்லும்படி ஆணையிட்டான். முன்னால் சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தங்களை சுல்தானின் ஆட்கள் பின் தொடர்வது தெரிந்து போய்விட்டது. ஒரு சிலர் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு வழியிலேயே மறைந்தனர். மற்றவர் ஸ்ரீரங்கம் அடைந்தனர். சுரதானியும் பின் தொடர்ந்தாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதானியோ அங்கே கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்றாள். அவளுடன் வந்த வீரர்கள் தாங்கள் சென்று விசாரித்து வருவதாகக் கூறிச் செல்லக் கோயில் வாசலிலேயே காத்திருந்தாள் சுரதானி. அங்கே அழகிய மணவாளர் இல்லை என்னும் செய்தியைக் கொண்டு வந்தனர் வீரர்கள். அவ்வளவு தான். அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்த சுரதானியின் உயிரும் அக்கணமே பிரிந்தது. அவளுடைய உடல் மட்டும் அங்கே கிடந்ததே தவிர உயிர் அரங்கனுடன் இரண்டறக்கலந்தது. அவளையும் ஒரு நாச்சியாராக அன்று முதல் மக்கள் வழிபட ஆரம்பித்தனர். முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார் சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது. ஒரு ஓவியம் மட்டுமே இருக்கும். தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார். இப்போ அரங்கன் கதி என்னனு பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வழியிலே மறைந்தவர்கள் அரங்கன் விக்ரஹத்தைத் திருப்பதியிலே மறைத்து வைத்ததாகவும், பின்னால் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியில் திரும்ப ஸ்ரீரங்கம் வந்ததாகவும் பாரதீய வித்யாபவன் வெளியீடான புத்தகங்கள் இரண்டிலும் காணப் படுகிறது. இந்தச் சமயத்திலே தான் அரங்கனைத் திருப்பதியில் மறைத்து வைத்ததாகச் சிலர் சொல்கின்றனர். அப்படி மறைத்து வைக்கப்பட்ட அரங்கனைத் தான் அறுபது ஆண்டுகள் கழித்து மீட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால் ஆதாரபூர்வமான தகவல்களோ மாலிக்காபூருடன் சென்ற அரங்கன் திரும்பி வந்து விட்டதாகவும், அதன் பின்னர் வந்த உல்லூகான் படையெடுப்புச் சமயத்திலே தான் அரங்கன் பல ஊர்களுக்கும் சென்று ஒளிந்திருந்ததாகவும், அதன் பின்னர் கடைசியில் திருப்பதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர். வேதாந்த தேசிகர் ஆலோசனையின் பேரில் பிள்ளை உலகாரியர் தென்னாட்டுக்கு எடுத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர். இதற்கான கல்வெட்டுக்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் இருப்பதாகவும், அவை மறைக்கப்பட்டு வேறு சில அறிவிப்புப் பலகைகள் வைக்கப் பட்டிருப்பதாகவும் அறிகிறோம். இது கோயிலொழுகிலும் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இப்போதைக்கு மாலிக்காபூரைப் பார்த்துக் கொண்டோம். மற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றாய் வரப் போகிறோம். அதுக்கு முதலில் நாம் ஆதிநாயகப் பெருமான் கோயிலுக்குப் போகவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''மேற்கண்ட தகவல்கள் உதவி: திரு ஹரிகி ஸ்கான் செய்து அளித்த பாரதீய வித்யாபவன் வெளியீடான ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் திரு தாஸ் அவர்களால் எழுதப் பட்டது மற்றும் திரு தவே அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் ஸ்கான் செய்யப் பட்ட பக்கங்கள். '''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 14:34, 6 ஜனவரி 2013 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:ஆலயங்கள்]][[Category:வரலாறு]][[Category:நாடுகள்,_நகரங்கள்]][[Category:தமிழகம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>