<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5</id>
		<title>வீர தேவதை - நாகாம்பாள் 5 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5&amp;action=history"/>
		<updated>2026-08-26T03:11:50Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5&amp;diff=2718&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;வீர தேவதை - நாகாம்பாள் 5&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5&amp;diff=2718&amp;oldid=prev"/>
				<updated>2010-10-02T06:26:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5&quot; title=&quot;வீர தேவதை - நாகாம்பாள் 5&quot;&gt;வீர தேவதை - நாகாம்பாள் 5&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;06:26, 2 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5&amp;diff=2717&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: -திவாகர்  ----    இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுமுன், நான் இரண…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_5&amp;diff=2717&amp;oldid=prev"/>
				<updated>2010-10-02T06:26:08Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: -திவாகர்  ----    இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுமுன், நான் இரண…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;-திவாகர்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுமுன், நான் இரண்டு வகைப்பட்ட&amp;lt;br&amp;gt;கருத்துக்களைக் காண நேரிட்டது. அவைகளை ஆராய்ந்து ஏறத்தாழ ஒரு நீதிபதி&amp;lt;br&amp;gt;பாணியில் யார் உண்மையான நாயகன் என்று தேர்ந்தெடுக்கவேண்டி வந்தது. இது&amp;lt;br&amp;gt;மிகக் கஷ்டமான விஷயம்தான். ஆனால் இறுதி முடிவுகள் ஒருவரைக் காட்டுக்கு&amp;lt;br&amp;gt;திருப்பின, இன்னொருவரை கோயில் தெய்வமாக்கின என்ற உண்மை நிலவரம் இங்கே&amp;lt;br&amp;gt;முக்கிய கட்டமாக எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த முழுக்&amp;lt;br&amp;gt;கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
தாஸரிகள் மிக வேகமாக ஊர் ஊராக சென்று பரப்பிய ’பல்நாடு வீரசரித்திர’ வை&amp;lt;br&amp;gt;அப்படியே எடுத்துகொண்டால் பிரும்மண்ணா நாயுடுதான் நாயகன். அவன்&amp;lt;br&amp;gt;அதிபுத்திசாலியானாலும், அத்தனை வகையான ஜாதிகளையும் ஒன்று சேர்த்து&amp;lt;br&amp;gt;சமபந்தி போஜனம் செய்வித்த நாயகன். தாழ்த்தப்பட்ட ஜாதிகளை ஒன்று&amp;lt;br&amp;gt;சேர்த்தவன் என்ற பெயர் இன்றளவும் அவன் ஒருவனுக்கே உண்டு. நான்காம்&amp;lt;br&amp;gt;வர்ணத்துக்கும் கீழ்ப்பட்டவரை சமமாக பாவித்தவன் என்ற பெயர் பெற்றவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஒரு விஷயம் அவன் செய்த அத்தனை அரசியல் சதிகளையும் (அவன் சொந்த&amp;lt;br&amp;gt;நாட்டு அரசனையே விஷம் வைத்துக் கொன்றதைச் சேர்த்து) தூக்கிச் சாப்பிட்டு&amp;lt;br&amp;gt;விடுகிறது என்பது இன்றைய நோக்கில் பார்க்கும்போது புரிகிறது. ஆனால் இது&amp;lt;br&amp;gt;துரியோதனனுக்குக் கூட பொருந்தும். தன்னளவில் உபயோகப்படும்போது,&amp;lt;br&amp;gt;பாண்டவர்களால் சூதபுத்திரன் என்று ஒதுக்கப்பட்ட கர்ணன், துரியோதனனால்&amp;lt;br&amp;gt;அரவணைக்கப்பட்டு அவனுக்கு சிறந்த தோழனாகிறான். ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதிகளை&amp;lt;br&amp;gt;அரவணைத்துச் சென்றதால் ஒருவனின் மற்ற தீயசெயல்கள் மறக்கடிக்கப்படவேண்டும்&amp;lt;br&amp;gt;என்பது என்ன நியதி எனக் கேள்வி எழுகிறது. தாஸரிகளுக்குப் பிடித்த&amp;lt;br&amp;gt;மகாபாரதக் கதை இவனுக்கென ஏற்றாற்போல திருத்தப்படுகிறது. இவன்&amp;lt;br&amp;gt;ஸ்ரீகிருஷ்ணன் என்பதால், இவன் எதிரியான நாகாம்பா துரோகியாக&amp;lt;br&amp;gt;வர்ணிக்கப்படுகிறாள். நாகாம்பா அரசியலில் ஈடுபட்டு அவன் வாழ்க்கையைக்&amp;lt;br&amp;gt;கெடுத்ததால் கிடைத்த பழியை அவள் ஏற்றுக்கொண்டாள் என்றே சொல்லலாம்.&amp;lt;br&amp;gt;ஆனாலும் அவன் அரசியல் தந்திரங்களுக்கு நேர் சமமாக அவளும் சிந்தித்ததால்&amp;lt;br&amp;gt;தாஸரிகளால் அவள் ஒதுக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையாகப் படுகிறது.&amp;lt;br&amp;gt;தாஸரி கதைகளில் பல்வேறுபட்ட நிலைகளில் இந்தக் கதை திரிக்கப்படுகிறது,&amp;lt;br&amp;gt;மகாபாரதம் போல பிரும்மண்ணா நாயுடுவும் ஏழு ஆண்டுகளுக்கு காட்டில் மறைந்து&amp;lt;br&amp;gt;வாழும் நிலை ஏற்பட்டதாக தாஸரிகளின் ஒரு பகுதியினர் பாடுகிறார்கள். இரண்டு&amp;lt;br&amp;gt;மாதமோ, ஏழு வருடங்களோ, எப்படியோ நடந்து விட்ட அந்த பல்நாட்டி&amp;lt;br&amp;gt;யுத்தத்துக்கு வருவோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
மாச்சர்லா பக்கத்தில் காரம்புடி என்றொரு ஊர். இப்போது குக்கிராமம்.&amp;lt;br&amp;gt;முந்தைய நாளில், அதுவும் இந்த நிகழ்ச்சி நடக்கின்ற வேளையில் வெட்டவெளிப்&amp;lt;br&amp;gt;பொட்டல் காடு. மகாபாரத யுத்தத்தில் குருக்‌ஷேத்திரம் எப்படி&amp;lt;br&amp;gt;தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அப்படியே காரம்புடி என்ற ஊரையே இந்தக் கடைசிப்&amp;lt;br&amp;gt;போருக்காக தேர்வு செய்த பெருமை கூட பிரும்மண்ணா நாயுடுவுக்குப் போய்ச்&amp;lt;br&amp;gt;சேரும். மகாபாரதக் கதை மக்களிடையே மிகப் பரவலாகப் பேசப்பட்டிருந்தது&amp;lt;br&amp;gt;என்பது மிக நிதர்சனமாக தெரிந்தாலும், அந்த மகாபாரதப் போரை பாண்டவருக்காக&amp;lt;br&amp;gt;முன்னிருந்து நடத்திக் கொடுத்து வெற்றியையும் பெற்றுத் தந்த&amp;lt;br&amp;gt;ஸ்ரீகிருஷ்ணனாக தாஸ்ர்கள் மத்தியில் பேர் பெற்றிருந்த பிரும்மண்ணா இந்தப்&amp;lt;br&amp;gt;போரில் சகுனியாகப் பெயர் பெற்ற நாகாம்பாவின் சொல்படி கேட்டு ஆடும்&amp;lt;br&amp;gt;துரியோதனான நலகாமன் கொல்லப்பட்டு அங்கே அந்த அரசாட்சியில் தர்மத்தின்&amp;lt;br&amp;gt;(இங்கே தர்மம் என்றால் பிரும்மண்ணா’வின் வேதம்தான்) சொல்படி கேட்கும்&amp;lt;br&amp;gt;நலகாமனின் மாற்றாந்தாய் மகனும், தம்பியுமான மலிதேவா அமர்த்தப்படுவான்&amp;lt;br&amp;gt;என்றும் தாஸர்களால் பாடப்பட்டு செய்தி நாடெங்கும் பரப்பப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாபாரதப் போர் என்று ஒருபக்கத்து வர்க்கத்தினரால் முடிவு செய்யப்பட்டது&amp;lt;br&amp;gt;என்றாலும், அந்தப் போரில் யார் வெற்றி பெற்றாலும் போரில் இறப்பவர்&amp;lt;br&amp;gt;அனைவரும் குர்ஜாரா (மாச்சர்லா) தேசத்து மக்களே என்பதில் நாகாம்பா&amp;lt;br&amp;gt;அனைவருக்கும் தெரியப்படுத்தினாள். அதே சமயத்தில் தான் ஏன் போருக்கு&amp;lt;br&amp;gt;செல்வதாக ஒப்புக்கொண்டேன் என்பதையும், இந்தப் போரில் முடிந்தவரை&amp;lt;br&amp;gt;நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் எதிரிகளை மட்டுமே அழிக்கத் தான்&amp;lt;br&amp;gt;பாடுபடுவதாக மக்கள் மத்தியில் சென்று அனைவருக்கும் எடுத்துரைத்தாள்&amp;lt;br&amp;gt;நாகாம்பா. தங்களின் வில்படை வெற்றி பெற்று நாடெங்கிலும் வில்கொடி&amp;lt;br&amp;gt;உற்சாகமாகப் பறக்க விடப்படும் என்றும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை&amp;lt;br&amp;gt;அளித்தாள். பிரும்மண்ணா சார்பில் வந்த தூதுவர்கள் போரை எப்படி நடத்துவது&amp;lt;br&amp;gt;என்ற முறையையும் பிரும்மண்ணா வகுத்துத் தந்திருப்பதாக சொன்னபோது கூட&amp;lt;br&amp;gt;உற்சாகமாக ஒப்புக் கொண்டாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
காரெம்புடி போரைப் பற்றிய அதிக விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.&amp;lt;br&amp;gt;குருக்‌ஷேத்திர அளவுக்கு இந்தப் போர் நடக்கவில்லை. வில்லேந்திய&amp;lt;br&amp;gt;வீரப்பெண்மணியாக போரில் நாகாம்பா ஒரு பக்கத்துக்கு தலைமை தாங்கியதாகவும்,&amp;lt;br&amp;gt;பிரும்மண்ணா ஈட்டி ஏந்திய கையோடு தலைமை தாங்கி தன் வீரர்களை ஒழுங்கு&amp;lt;br&amp;gt;படுத்தி போர் செய்ததாகவும்தான் சரித்திரம் சொல்கிறது, இரண்டு நாட்கள்&amp;lt;br&amp;gt;போரில் நாகாம்பா வெற்றி பெற்று பிரும்மண்ணாவை இந்தப் பக்கமே வராதபடி ஓடச்&amp;lt;br&amp;gt;செய்தாள் என்றுதான் குறிப்புகள் சொல்கின்றன. பிரும்மண்ணாவின் மகனான&amp;lt;br&amp;gt;பாலச்சந்திரன் போரில் மரணமடைந்ததால் பிரும்மண்ணா தளர்ச்சியுற்றான் என்று&amp;lt;br&amp;gt;சில குறிப்புகள் கொடுத்தாலும், அந்த மகன் போரில் கொல்லப்படவில்லை,&amp;lt;br&amp;gt;தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தகறாறு ஒன்றினால் மரணமடைந்ததாக வேறு சில&amp;lt;br&amp;gt;குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இந்த பாலசந்திரன் தாஸரிகள் கதையில்&amp;lt;br&amp;gt;அபிமன்யுக்கு நிகராக வர்ணிக்கப்படுகிறான். அதே சமயத்தில் யுத்த களத்தில்&amp;lt;br&amp;gt;நாகாம்பாவின் வீரத்தனம் பிரும்மண்ணாவைத் திருத்தியதாகவும், தோல்வியை&amp;lt;br&amp;gt;ஒப்புக்கொண்டு அவன் காட்டுக்குள் திரும்பி தவநிலை ஏற்றுக் கொண்டதாகவும்&amp;lt;br&amp;gt;வேறு சில குறிப்புகள் சொல்கின்றன. வில்வீரர்கள் சர் சர்ரென அம்புகளை&amp;lt;br&amp;gt;வீசும்போது ஈட்டி வீரர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று பொதுவாக சில&amp;lt;br&amp;gt;குறிப்புகள் சொல்கின்றன. பிரும்மண்ணாவின் ஆதரவு பெற்ற மகன் மலிதேவா&amp;lt;br&amp;gt;சிறைப் பிடிக்கப்பட்டு தேசத் துரோகம் குற்றத்துக்காக, தன் சொந்த அண்ணனால்&amp;lt;br&amp;gt;தண்டிக்கப்பட்டான், என்றுதான் குறிப்புகள் சொல்கின்றனவே தவிர அது என்ன&amp;lt;br&amp;gt;தண்டனை என்று தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
மொத்தத்தில் வீரதேவதை கடைசிவரை தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை மௌனமாகவே&amp;lt;br&amp;gt;தாங்கிக் கொண்டு, அந்தப் பொறுமை எனும் பெரும் ஆயுதத்தால்தான்&amp;lt;br&amp;gt;காரெம்புடியில் யுத்தத்தில் வெற்றி பெற்றாள் என்று சொல்லப்படுகிறது.&amp;lt;br&amp;gt;யுத்தத்தைக் கூடிய வரை தடுக்க முயன்றதாகவும், உண்மையில் இவள்தான்&amp;lt;br&amp;gt;ஸ்ரீகிருஷ்ணன் தங்கையான மாயாவிஷ்ணுவாக வந்திருந்து கௌரவர்களாக மாறி&amp;lt;br&amp;gt;துரோகம் செய்த பிரும்மண்ணாவின் படைகளை வென்றாள் என ’வீர காவியம்’ எனும்&amp;lt;br&amp;gt;தெலுங்குப் பாடல் தொகுப்பு விரிவாகக் கூறுகிறது. தாஸர்களோ மனம் ஒடிந்த&amp;lt;br&amp;gt;நிலையில் பல்நாட்டிலிருந்து பாரிப்போனார்கள் (ஓடிப்போனதை ‘பாரிப் போவது&amp;lt;br&amp;gt;என்று சொல்வார்கள்) ஆனால் சென்ற் இடங்களிலெல்லாம் தம் குருவின் புகழை&amp;lt;br&amp;gt;பரப்ப மட்டும் தவறுவதில்லை. மகாபாரதப் போருக்கு நிகராகப் பேசப்பட்ட&amp;lt;br&amp;gt;காரெம்புடிப் போரை ‘பல்நாட்டி யுத்தம்’ என்ற பெயரில் தாஸர்களில் சிலர்&amp;lt;br&amp;gt;தெலுங்கு வீர வசன நாடகமாக தொகுத்ததோடு, அதனைத் தம் பிற்காலச்&amp;lt;br&amp;gt;சமுதாயத்தினர் பலரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாகப்&amp;lt;br&amp;gt;பாதுகாத்துவந்தனர் என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
பர்டன் ஸ்டெயின் எனும் ஆங்கில ஆய்வாளர், தெலுங்கு பாஷையை முதன் முதலில்&amp;lt;br&amp;gt;அறிமுகப்படுத்தியதே இந்த ‘பல்நாட்டி வீரசரித்ரா’ தான் என்று எழுதுகிறார்.&amp;lt;br&amp;gt;13 ஆம் நூற்றாண்டிம் இறுதிப்பகுதியில் இந்த நாடகம் வசன பாணியில் எழுதி&amp;lt;br&amp;gt;தாஸர்களின் சந்ததிகளால் பாடப்பட்டதாக அவர் தகவல் தருகிறார். வீரகாவியம்&amp;lt;br&amp;gt;என்ற பெயரில் பண்டித தெலுங்கு பாஷையில் காகிதீயப் புலவர்களால்&amp;lt;br&amp;gt;எழுதப்பட்டதாக வரலாறு சொல்கிறது, பண்டிதர்களால் எழுதப்பட்டதால் இது&amp;lt;br&amp;gt;காவியம் எனப் பேசப்பட்டது. இந்தக் காவியத்தின் காட்சிகளை ஓவியம் போல&amp;lt;br&amp;gt;படைத்து வாரங்கல் அரண்மனைச் சுவர்களில் நாகாம்பா புலியை அடக்குவது&amp;lt;br&amp;gt;போலவும் வில்லேந்தி போர் புரிந்து பிரும்மண்ணாவின் வீரர்களை அடக்குவது&amp;lt;br&amp;gt;போலவும் பல காட்சிகள் இருந்ததாக சரித்திரத் தகவல்கள் காகதீயர் ஆட்சி யில்&amp;lt;br&amp;gt;கிடைக்கின்றது. இந்த பல்நாட்டி கதையை பின்னாளில் பண்டித தெலுங்கில்&amp;lt;br&amp;gt;ஸ்ரீநாத பட்டர் எனும் புலவர் (16ஆம் நூற்றாண்டு) காவியமாக படைத்தார்.&amp;lt;br&amp;gt;இந்தக் காவியத்திலும் நாகாம்பாவுக்கு நல்ல பெயர் உண்டுதான். ஆனால் இந்தக்&amp;lt;br&amp;gt;காவியம் தாஸர்களின் பாடல்களை அடித்தளம் கொண்டதால் பிரும்மண்ணா&amp;lt;br&amp;gt;நாயுடுவுக்கு சிறப்பு இடம் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
முத்தாய்ப்பாக சில வார்த்தைகள். என்னதான் பிரும்மண்ணா தன்னை ஸ்ரீகிருஷ்ணா&amp;lt;br&amp;gt;எனக் கூறிக்கொண்டாலும் அவனால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மைதான்.&amp;lt;br&amp;gt;நாகாம்பா எனும் வீரப்பெண்ணின் முன்னால், அவளால் கடைசியில்&amp;lt;br&amp;gt;தோற்கடிக்கப்பட்டது கூட வாஸ்தவம்தான் என இரு தரப்பினருமே ஒப்புக்&amp;lt;br&amp;gt;கொள்கின்றனர். தாஸர்கள் மட்டுமே ’பல்நாட்டி வீர சரித்திரத்தில்’&amp;lt;br&amp;gt;நாகாம்பாவைக் கடைசி வரை எதிரியாகவே வர்ணித்தாலும் வீரகாவியம் முதற்கொண்டு&amp;lt;br&amp;gt;சரித்திரக் குறிப்புகள் அனைத்தும் குர்ஜாரா என்கிற பல்நாடு அரசியல்&amp;lt;br&amp;gt;வாழ்க்கையில் வீர தேவதையாக நாகாம்பா பரிணிமித்தாள் என்றே சொல்கின்றன.&amp;lt;br&amp;gt;இதனை 1947 இல் திரைப்படமாக எல்.வி.பிரசாத் எடுத்தார். அதில் நாகாம்பா&amp;lt;br&amp;gt;பாத்திரத்தில் சிறப்பாக கண்ணாம்பா நடித்து பெரும் புகழ் பெற்றார். இதே&amp;lt;br&amp;gt;படத்தை மறுபடியும் 1966 இல் எடுத்தனர். இதில் நாகாம்பா பாத்திரத்தை&amp;lt;br&amp;gt;பானுமதி விரும்பிச் செய்ததாகவும், என்.டி.ராமாராவ் பிரும்மண்ணா நாயுடு&amp;lt;br&amp;gt;பாத்திரத்தில் செய்ததாகவும் தகவல்கள் உண்டு. நாகாம்பா எனும் வீரப்பெண்ணாக&amp;lt;br&amp;gt;நடித்த பானுமதியின் ஒரு சின்ன வீடியோ காட்சி.&amp;lt;br&amp;gt;http://www.youtube.com/watch?v=qFnCE4qJ0i&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதாரணமாக கடந்த ஆயிரம் ஆண்டு பாரத வரலாற்றில் சில வீரப்பெண்மணிகள்&amp;lt;br&amp;gt;வரலாறு மட்டும் நிலைத்து நின்று விட்டது. தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா,&amp;lt;br&amp;gt;வேலு நாச்சியார், வடநாட்டில் ராணி ஜான்ஸி லட்சுமி, ஆந்திராவில்&amp;lt;br&amp;gt;(வாரங்கல்) காகதீய ருத்ரம்மா போன்றோர் ராணிகளின் வம்சத்தில் வந்து&amp;lt;br&amp;gt;சிறப்பு பெற்றனர். ஆனால் ராணிகளின் வம்சம் இல்லாத பட்சத்தில் ஒரு ராணி&amp;lt;br&amp;gt;போல செயல்பட்டு, பெண்கள் குலத்துக்கே மங்காத புகழைப் பெற்றுத் தந்து வீர&amp;lt;br&amp;gt;தேவதையானவள் நாகாம்பா ஒருத்திதான். அதனால்தான் காலம் அவளை மட்டும்&amp;lt;br&amp;gt;மறக்காமல் செய்வதற்கு அவளை ஒரு தேவதையாக்கி, ஒரு சில ஊர்களில் அவளுக்கென&amp;lt;br&amp;gt;கோயிலும் அமைத்து இந்த மண் உள்ளளவும் மக்கள் மனதில் இடம் பெற வைத்தது&amp;lt;br&amp;gt;போலும். அவள் இருந்த போதும் தம்மை நம்பிய மக்களைப் பாதுகாத்தாள். அவள்&amp;lt;br&amp;gt;இறந்த பின்னும் அவளை தேவதையாக நம்பி வழிபடுகின்ற மக்களையும் தன் ஆத்ம&amp;lt;br&amp;gt;சக்தியால் பாதுகாத்து வருகிறாள். பெண்ணாய்ப் பிறந்து பெண்ணாய் வாழ்ந்து,&amp;lt;br&amp;gt;ஆண்களுக்கு சமமாக அரசியல் செய்து, ஆண்களின் அடக்குமுறைக்கும், அவர்தம்&amp;lt;br&amp;gt;பழிச்சொல்லுக்கும் அஞ்சாமல் கடைசிவரை போராடினாலும், பெண்ணுக்கே உரிய&amp;lt;br&amp;gt;கருணை என்ற உத்தம குணத்தைக் கடைசிவரைப் பெற்று, பெண்களுக்கு காலா&amp;lt;br&amp;gt;காலத்துக்கும் பெருமை சேர்த்த அந்த வீரதேவதைக்கு நம் தலை தாழ்ந்த&amp;lt;br&amp;gt;வணக்கங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கட்டுரைக்கான முக்கிய தகவல்கள் பெறப்பட்ட புத்தகங்கள்:&amp;lt;br&amp;gt;1. பல்நாட்டி வீர சரித்திர மற்றும் வீரகாவியம்&amp;lt;br&amp;gt;2. பி.எஸ்,என். ராவ் எழுதிய Social Movements of Medieval Andhra&amp;lt;br&amp;gt;3. Narasaraopet Inscriptions of SII&amp;lt;br&amp;gt;4. Epigraphical reports 402 of 1912&amp;lt;br&amp;gt;5. Thurston E, Caste and Tribes of Southern India&amp;lt;br&amp;gt;6. Ramaraju B’s Telugu Gnanapadha Geya Sahithyamu&amp;lt;br&amp;gt;7. Art and Culture of Marginalised Nomadic Tribes in AP by P. Sadanandan&amp;lt;br&amp;gt;8. N. Venkatramanayya’s History of Andhra Pradesh (Chalukyas and Kakatiyas)&amp;lt;br&amp;gt;9. Miscellaneous sources from various types of Articles.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:வரலாறு]][[Category:பெண்ணியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>