<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057</id>
		<title>நினைவுகளின் சுவட்டில் - 057 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;action=history"/>
		<updated>2026-06-20T07:04:09Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;diff=11217&amp;oldid=prev</id>
		<title>Na.Kannan: நினைவுகளின் சுவட்டில் - 57, நினைவுகளின் சுவட்டில் - 057 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;diff=11217&amp;oldid=prev"/>
				<updated>2012-07-14T11:47:50Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;a href=&quot;/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_57&quot; class=&quot;mw-redirect&quot; title=&quot;நினைவுகளின் சுவட்டில் - 57&quot;&gt;நினைவுகளின் சுவட்டில் - 57&lt;/a&gt;, &lt;a href=&quot;/index.php/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&quot; title=&quot;நினைவுகளின் சுவட்டில் - 057&quot;&gt;நினைவுகளின் சுவட்டில் - 057&lt;/a&gt; என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;11:47, 14 ஜூலை 2012 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Na.Kannan</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;diff=9167&amp;oldid=prev</id>
		<title>20:31, 8 ஜனவரி 2012 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;diff=9167&amp;oldid=prev"/>
				<updated>2012-01-08T20:31:36Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;amp;diff=9167&amp;amp;oldid=4403&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;diff=4403&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: எனது ஹிராகுட் நாட்கள் - 6  ----    செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில …</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_057&amp;diff=4403&amp;oldid=prev"/>
				<updated>2011-01-23T09:45:45Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: எனது ஹிராகுட் நாட்கள் - 6  ----    செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில …&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;எனது ஹிராகுட் நாட்கள் - 6&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லஸ்வாமி மூலம் எனக்கு ஆங்கில பத்திரிகைகள் படிக்கும் பழ்க்கம் ஏறப்ட்டது என்றேன். அதைத் தொடங்கி வைத்தது, அவர் தொடர்ந்து வரவழைத்துப் படித்து வந்த ப்ளிட்ஸ் என்ற வாராந்திர ஏடு, அதை ஆங்கிலத்தில் படிக்கத் தூண்டியதே அதில் வரும் பரபரப்பான செய்திகள் தான். அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது, நானாவதி வழ்க்கு. நானாவதி கடற்படையில் வேலை பார்த்த அதிகாரி. கடறபடை என்றால் தாம்பத்ய வாழ்க்கை கொஞ்சம் சிரமம தரும் விஷயம் தான். நானாவதியின் மனைவிக்கும் அஹூஜா என்ற பஞ்சாபிக்கும் நட்பு ஏற்பட்டு, அது நானாவதிக்குத் தெரிந்து, நானாவதி அஹுஜாவைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக வழ்க்கு. ரொம்ப காலம் நடந்தது. நம்மூரில் கிட்ட்த்தட்ட அந்த சமயத்தில் ஆளவந்தார் கொலை வழக்கு நடந்தது போல. கடைசியில் என்ன ஆயிற்று என்பது மறந்துவிட்டது. நானாவதி கொலைக்குற்றம் சாட்டப் பட்டிருந்தாலும், எல்லோருடைய அனுதாபமும், சொலப்போனால் கடற்படையின் அனுதாபமும் ஆதரவும் நானாவதிக்குத் தான் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கிடையில் அப்பாவிடமிருந்து தான் என்று நினைக்கிறேன். என் தங்கை பாப்பா என்று நாங்க்ள் செல்லமாக அழைக்கும் சகுந்தலாவுக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருப்பதாகவும், அத்திம்பேர் வைத்தியநாதன தான் மாப்பிள்ளை என்றும் நான் இப்போது தான் வேலையில் சேர்ந்திருப்பதாலும், ரொம்பவும் தூரத்திலிருப்பதாலும் நான் கல்யாணத்துக்கு வரமுடியாவிட்டால் ஒருத்தரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், ஆகையால் சிரமப்படுத்திக்கொள்ளவேண்டாம் என்றும் எழுதியிருந்தார். என் பாணாதுரை ஸ்கூல் நண்பனும் கவிஞனுமான ஷண்முகமும் நானும் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தோம். ஊரை விட்டு வந்த பின் கடித்ங்கள் மூலம் நடபு தொடர்ந்த்து ஷண்முகத்தோடு மாத்திரம் தான். அவனுக்கு என் தங்கையின் கல்யாணம் நிச்சயம் செய்திருப்பதாகவும் ஆனால் நான் ஊருக்கு வர இயலாது என்றும் எழுதியிருந்தேன். நான் ஏதும் எழுதியிராவிட்டாலும், ஷண்முகம் “நம் குடும்ப விவகாரங்களில் இடை புகுந்து எதையும் தீர்மானிக்கும் அபிப்ராயம் சொல்லும் வயதிலோ நிலையிலோ நாம் இல்லை” என்று எழுதியிருந்தது நினைவில் இருக்கிறது. நான் ஏதும் சொல்லாமல் இருந்தது காரணத்தோடு தான் என்று அவன் நினைத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டேன். . &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நாட்களில் தான் ஒரு நாள் யோகி சுத்தான்ந்த பாரதியார் ஹிராகுட் வந்திருந்தார். எதற்காக் வந்தார், எங்கு போகும் வழியில் வந்தார், யார் அழைத்து வந்தார் என்பதெல்லாம் மறந்து விட்டது. பள்ளியின் இறுதி இரண்டு வருடங்களில், யோகி சுத்தான்ந்த பாரதி நான் மிகவும் விரும்பிப் படித்தவராகி, அவருடைய புத்தகங்கள் நிறையவே படித்திருந்தேன். தமிழ் பற்றியும் தமிழ் சரித்திரம் பற்றியும் அவர் மிகுந்த உணர்ச்சி பொங்க் எழுதுவார். அவருடைய ஏழை படும்பாடு என்ற தலைப்பில் விக்டர் ஹுயூகோவின் லா மிஸரப்ளா என்ற் நாவலை மொழிபெயர்த்திருந்ததையும் படித்திருந்தேன். அத்தோடு பாடப்புத்தகத்தில் பாரத சக்தி மகா காவ்யம் என்ற அவரது பெரிய க்விதை நூலிலிருந்து ஒரு பகுதி எங்கள் தமிழ் பாடப்புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. அது ஒன்றும் புரியாவிட்டாலும், அவரது மற்ற புத்த்கங்களின் பாதிப்பில் அந்த காவியம் மிகப் பெரிய சமாசாரமாக இருக்கவேண்டும், பின்னர் வயதும் அறிவும் வளர்ந்த பின் தான் அதெல்லாம் புரியும் என்று நான் எண்ணிக் கொள்வேன். ஆகவே இதெல்லாம் என் நினைவின் பின்ன்ணியில் இருக்க அவரைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் போனேன். யாரோ ஒருவர் வீட்டில் தான் ஒரு சிறிய கூட்டத்தில் அவரோடு கலந்துரையாடல் நடந்தது. அவர் தான் பேசிக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் எல்லோரும் அவரை ஒரு துறவியாகத் தான் பார்த்ததாகத் தெரிந்த்து. யாருக்கும் அவர் ஒரு க்விஞர் என்றோ, பல மொழிகள் கற்றவர் என்பதோ, நிறைய புத்தகங்களும், பாடல்களும் இயற்றிய்வர் என்றோ தெரிந்திருந்ததாகத் தோன்றவில்லை. யோகியாரும் அன்று அவரது அன்றாட பொழுது எப்படிக் கழிகிறது, என்ன சாப்பிடுகிறார், சாப்பாட்டில் அவர் கடைப்பிடிக்கும் நியமஙக்ள் என்ன எனப்தைப் பற்றியே பேசினார். கீரை வகைகள் எவ்வளவு ஆரோக்கியமானது, அவை எப்படி பக்குவப் படுத்தப்படுத்தி உண்ணவேண்டும் என்பது பற்றியே பேசினார். அவர் தன்னைப் பற்றிய ஏதும் பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வில்லை. அந்த சூழலில், அவர் மிக அடக்கமாக, மிக ஆதுரத்துடன், ஏதோ ஒரு வயதான பெரியவர் தன்னைச் சுற்றி எல்லோரையும் உடகார வைத்து உபதேசம் செய்வது போன்று தான் இருந்தது. அப்போது அவர் புதுச் சேரியில் தனியாக ஒர் ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டிருந்தார் என்று நினைவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அந்த காலகட்டத்தில் அவர் என்னைப் பொருத்த வரையில் ஒரு தீவிர விழிப்புணர்வை, பெரும்பாதிப்பை ஒவ்வொரு வாசகர் மனத்தில் எழுப்பிய மனிதராகத் தெரிந்தார். நான் படித்தறிந்த சுத்தானந்த பாரதி என மனத்தில் எழுப்பியிருந்த படித்துக்கும். இப்போது துறவியாக உணவுக்கட்டுப்பாட்டையும் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சுத்தானந்த பாரதி தரும் பிம்பமும் வேறாக இருந்த போதிலும் மனதில் முன்னர் பதிந்திருந்த பிம்பம் இப்போது காணும் சுத்தான்ந்த பாரதியை மிகுந்த் மரியாதையுடனும் விய்ப்புடனும் பார்க்கச் செய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம் முடிந்தது. ஆதலால் நான் கிடைக்கும் பதினாறு நாட்களோ என்னவோ விடுமுறையில் ஊர் போகவேண்டும் என்று எண்ணம் இருந்தால் போய்விட்டு வரலாம் என்று ராஜா சொன்னார். சரி போய்விட்டு வரலாமே என்று தோன்றியது. இரண்டு வழி இருக்குடா. ஒண்ணு இங்கேயிருந்து பஸ்ஸில் கட்டக் வரை போகலாம். கட்டக்கிலிருந்து கல்கத்தா-மெட்ராஸ் மெயிலில் போகலாம். இல்லை யென்றால், டாடா நகருக்குப் போகிறமாதிரி, சம்பல்பூர் வரை பஸ், பின்ன்ர் அங்கிருந்து ஜர்ஸகுட்டா வரை பாஸஞ்சர் வண்டி, ஜர்ஸகுடாவிலிருந்து பம்பாய் மெயில் பிடித்து நாக்பூர் போகணும், அங்கேயிருந்து தில்லி-மெட்ராஸ் போகும் க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் பிடித்து மெடராஸ் போகலாம். என்னவோ மெட்ராஸ் போகிறவர்கள் இந்த வழியில் தான் போகிறார்கள். நாக்பூர் போய்ச் சேர்ந்ததும் உனக்கு நிறைய நேரம் கிடைக்கும். டவுனுக்குள் போனால், நம்ம் ஊர சாப்பாடு கிடைக்கும். மெட்ராஸ் ஹோட்டல் ஒண்ணு அங்கே இருக்கு. அத்தோட நாக்பூர் ஸ்டேஷனிலேயே ஒரு போகி மெட்ராஸ் போறவங்களுக்குன்னு ரெடியா இருக்கும். அதிலே போய் உட்கார்ந்துட்டா, போறும். தில்லிலேர்ந்து க்ராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரெஸ் வந்ததும் அதிலே இந்த போகியைச் சேர்த்து விடுவான். நீ நாக்பூர் போன உடனே அந்த போகிலே இடம்பிடிச்சுடு. சௌகரியம ஒரு தொந்திரவு இல்லாம் போகலாம்.” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக அவர் எனக்கு வழி சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நான் ஜர்ச்ஸகுடாவில் காலை ஐந்து மணிக்கு கண் விழித்து வண்டியிலிருந்து இறங்க வேண்டியவன் நன்றாகத் தூங்கிவிட்டு பிலாஸ்பூர் வரை போனதை அவர் மறக்கவில்லை என்பது தெரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எங்கள் ஊரிலிருந்து ஹிராகுட்டுக்கு வந்திருந்த கற்பரக்ஷையும் தன் பாட்டி கும்பகோணத்தில் ரெட்டிராயர் குளம் மேற்குத்தெருவில் இருப்பதாகவும், அவளைப் போய்ப் பார்த்து பேத்தியை ஹிராகுட்டில் பார்த்தேன் சௌக்கியமாக இருக்கிறாள் என்று சொல்லிட்டு வரணும் என்று மறுபடியும் நினைவு படுத்தினாள். உடையாளூர்லேர்ந்து ஐந்து ஆறு மைல் இதுக்காக் நடந்து போகணுமேடா, போவியா, இல்லே சும்மா தலையாட்டறயா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். ”கும்பகோண்த்துக்கு நினைச்சா போய் வரரது தான். இதில் ஒண்ணும் கஷ்டமில்லை,” என்று அவளை ஆசுவாசப்படுத்தினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கிடையில் கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பாக ராஜா வந்தார். ”டேய் சாமா, ஜியாலஜிஸ்ட் கிருஷ்ணஸ்வாமி இருக்காரே அவரோட பேசீண்டு இருந்தேன். அவர் சொன்னார் அவர் மனைவியும் குழந்தைகளும் சீர்காழிக்குப் போகணுமாம். சாமிநாதனோட் அனுப்பினால் அவன் பாத்துப்பானா? நான் இப்போ போகமுடியாது. அவளைத் தனியாத்தான் அனுப்பணும். தனியாவே போறேன்கறாள். இப்பத்தான் சாமிநாதன் போறானே, அவ்னோ அனுப்பினா என்ன? கேட்டுச் சொல்லுன்னு சொன்னார். என்ன சொல்றே. ஒருத்தருக்கு உதவியா இருக்குமேடா” என்றார். என்க்கு அதில் சந்தோஷம் தான். கூட தெரிந்தவர்கள் இருந்தால் பேச்சுத்துணை இருக்குமே. சரி, என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ண்ஸ்வாமி, ரெசிடெண்ட் ஜியாலெஜிஸ்டாக இருந்தார். மூபபது முப்பத்தைந்து வயது இருக்கும். இளம் மனைவி. ஒன்றோ இரண்டோ குழ்ந்தைகள். ஞாபகமில்லை. ஜியாலெஜிஸ்ட் என்ற காரணத்தினால் மட்டுமல்ல. அவர் பெயர் ஹிராகுட்டில் எங்களுக்கு பழக்கமானது, ஏன் பிரஸித்தமானது என்று கூட சொல்லலாம். வேறு காரணத்திற்காக. அவர் அண்ணா வி.எஸ். அண்ணாசாமி என்று நினைவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வி.எஸ்.அண்ணாசாமி சீர்காழி வாசி. வக்கீலாகவோ என்னவோ தொழில் செய்து வந்தார் என்று சொல்லப்பட்ட நினைவு. அவர் பிரஸ்தாபிக்கப்படும் காரணம், அவருக்கு சமீபத்தில் டெர்பி லாட்டரியில் ஆறு லட்சம் பரிசு வந்ததாக கிருஷ்ணசாமிக்கு நெருங்கிய வட்டத்தில் பேசப்பட்டு அது என் காதிலும் விழுந்திருந்தது. டெர்பி என்பது இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் நடக்குமிடம். நம்மூர் கிண்டி மாதிரி. அவர் சீர்காழியில் இருந்து ‘காண்டு எப்படி டெர்பி லாட்டரியில் கலந்து கொள்ள முடியும், எந்த குதிரை ஓடுகிறது என்று கண்டு, ஜாக்கி யார் என்று கண்டு, பந்தயம் எப்படிக் கட்டுவார் என்பது தெரியவில்லை. யாரும் கேட்கவுமில்லை. ஆறு லட்சம் விழுந்தது என்பதே பெரிய செய்தியாக பரபரப்பு மிக்கதாக இருந்தது. அது மட்டுமில்லை. ஆறு லட்சம் என்பது ஆறு லட்சம் ரூபாயா இல்லை ஆறு லட்சம் பவுண்டா என்பதும் தெரியவில்லை. யாரும் கேட்கவும் இல்லை. ஆறு லட்சமே ரூபாயாக இருந்தாலே கேட்பவரை வாய் பிளக்க வைக்கும் தொகை தான். பவுண்டாக இருந்தால் யாருக்கும் புரியாதோ எனற காரணத்தால் பரிசுத் தொகையை ரூபாய்க் கணக்கில் மாற்றி சொல்லப்பட்டதோ என்னவோ. எதாக இருந்தாலும் அது ஹிராகுட் வாசிகளுக்கு மிகப் பெரும் தொகை. ஒருத்தர் ஆயுசில் சேர்க்க முடியாத தொகை. சில மாதங்கள் முன் தான் கல்கத்தாவில் தொடங்கப்பட்டிருந்த ஹிந்துஸ்தான் நிறுவனம் தயாரிக்கும் அம்பாஸடார் கார் ரூ 10,000 க்கு வரப்போவதாக விளம்பரங்கள் வரத்தொடங்கியிருந்தது. பெட்ரோல் விலை காலனுக்கு (லிட்டருக்கு இல்லை, காலனுக்கு) ரூ மூன்று தான். ஆக, அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை வைத்துக்‘காண்டு என்ன செய்வது என்று திகைப்பு ஏற்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அந்த நாட்களில் இவையெல்லாம் எனக்கு மிக ஆச்சரியத்தைத் தந்த விஷயங்கள். என் முன்னால் ஒரு புதிய உலகமே விசித்திரமான செய்திகளுடனும் அனுபவங்களுடனும் விரிந்தது. அதனால் சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னதாக வி.எஸ். கிருஷ்ணசாமிக்கு நான் அவருடைய குடும்பத்தை அழைத்துச் செல்கிறேன் என்ற தகவலைச் சொல்லவேண்டும் என்று ராஜாவுடன் அவர் வீட்டுக்குப் போனேன். கிருஷ்ணசாமியிடம் ராஜா சொன்னார். என்னையும் அறிமுகப் படுத்தினார். கிருஷ்ணசாமிக்கு சந்தோஷம் தான். அவர் மனைவி குழந்தையோடு பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். &amp;quot;நேரே முதல் நாள் ராத்திரியே இங்கே வந்துவிடு சாமான்களை எடுத்துக்கொண்டு. காலையில் நாலு மணிக்கு எழுந்து ஜெர்சகுடாவுக்கு ஜிப்பில் போகலாம். ஐந்து மணிக்கு பம்பாய் மெயில் ஜெர்ஸகுடா வரும். அது பத்து பதினைந்து நிமிஷம் முன்னாலேயே போய்விடலாம். முதல் நாள் ராத்திரி போய் அங்கே படுத்திருக்கெல்லாம் வேண்டாம். குழந்தையை வைத்துக்கொண்டு சிரமமாக இருக்கும்&amp;quot; என்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சரி என்று முதல் நாள் ராத்திரி சாப்பாட்டுக்குப் பின் ஒன்பது மணி அளவில் ஒரு பையில் (ஆமாம் பையில் தான்) துணிமணிகளை வைத்துக்கொண்டு போய்ச் சேர்ந்தேன். ஷோல்டர் பேக் எல்லாம் இன்னும் புழக்கத்தில் வரவில்லை. அந்தக் காலத்தில் புழங்கின தகரப் பெட்டியெல்லாம் வீண் சுமை. &amp;quot;என்ன இது இவ்வளவு தானா?&amp;quot; என்று அவர் ஆச்சரியத்துடன் கேட்டார். சாப்பாடெல்லாம் முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு வந்ததும் அவர் என்னை ஒரு மாதிரியாகத் தான் பார்த்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னதாகத் தீர்மானித்திருந்தபடியே கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்துவிட்டதால், ஜெர்ஸகுடா வுக்கு ரயில் வருவதற்கு அரை மணி முன்னதாகவே போய்ச் சேர்ந்துவிட்டோம். கிருஷ்ணசாமியும் உடன் வந்திருந்தார். வண்டியில் நாங்கள் இடம் பிடித்து சௌகர்யமாக உட்கார்ந்து கொண்டுவிட்டோம். மூன் றாம் வகுப்பில் அதுவும் தனியாக நீண்ட தூர பிரயாணம் என்பது அவர்களுக்கு இது தான் முதல் தடவை என்பது தெரிந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வெங்கட் சாமிநாதன்&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 09:45, 23 ஜனவரி 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எழுத்தாளர்கள்]][[Category:வெங்கட்_சாமிநாதன்_பக்கங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>