<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88</id>
		<title>தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 5 புன்னைக்காயல் மருத்துவமனை - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88&amp;action=history"/>
		<updated>2026-06-15T13:54:59Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=11489&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: &amp;nbsp;'''புன்னைக்காயல் மருத்துவமனை'''   '''அருட்திரு வெனான்சியுஸ்'''   '…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88&amp;diff=11489&amp;oldid=prev"/>
				<updated>2012-08-04T11:16:09Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  &amp;#039;&amp;#039;&amp;#039;புன்னைக்காயல் மருத்துவமனை&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;அருட்திரு வெனான்சியுஸ்&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;'''புன்னைக்காயல் மருத்துவமனை'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அருட்திரு வெனான்சியுஸ்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''வரலாற்று ஆய்வாளர், தூத்துக்குடி மறை மாவட்டம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புன்னைக்காயல் என்னும் தென் தமிழகக் கடற்கரை ஊர் தமிழக மக்கள் அனைவரின்&amp;amp;nbsp;உள்ளங்களிலும் என்றும் நிலைத்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க&amp;amp;nbsp;ஊர். தமிழகத்தில் முதல் தமிழ்க் கல்லூரியும் (கி.பி. 1567) முதல் தமிழ்&amp;amp;nbsp;அச்சுக்கூடமும் (கி.பி. 1578) முதல் வேதியர் பயிற்சி நிலையமும் (கி.பி.1550) தோன்றியது இவ்வூரில் தான். அனைத்திற்கும் மேலாகத் தமிழகத்திலேயே&amp;amp;nbsp;மருத்துவப் பணிக்கென்று முதல் மருத்துவமனையை உருவாக்கியதே&amp;amp;nbsp;புன்னைக்காயல்தான்! அந்த வகையில் புன்னைக்காயலின் புகழ் தமிழகத்தில்&amp;amp;nbsp;மங்கி மறையாமல் என்றும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகத்தின் முதல் மருத்துவ மனையை உருவாக்கித் தென்னிந்தியா முழுமைக்கும்&amp;amp;nbsp;மருத்துவப் பணிக்கு வழிகாட்டிய இப்புகழ்மிக்கப் புன்னைக்காயலில் தற்போது&amp;amp;nbsp;தமிழக முன்னணித் தொழிலதிபர் திரு A.ராஜா பிஞ்ஞேயிர அவர்கள் பெருந்தொகை&amp;amp;nbsp;செலவு செய்து கட்டியெழுப்பியுள்ள புதிய மருத்துவ மனையைத் தூத்துக்குடி&amp;amp;nbsp;முன்னாள் ஆயர் அருட்பெருந்தகை M.அம்புரோஸ் அவர்கள் திறந்து&amp;amp;nbsp;வைத்துள்ளார்கள். புன்னைக்காயலில் ஏறக்குறைய 455 ஆண்டுகளுக்கு முன்னால்&amp;amp;nbsp;சிறப்புடன் பணியாற்றி வந்த அந்தப் பழைய முதல் மருத்துவமனையை நம்&amp;amp;nbsp;நினைவுக்குக் கொண்டு வருவோம். இப்பழைய மருத்துவமனையின் தோற்றம்,&amp;amp;nbsp;சிறப்பு, பணிகள் ஆகியவற்றை வரலாற்று ஆதாரங்களுடன் ஆராய்வதே&amp;amp;nbsp;இக்கட்டுரையின் நோக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தோற்றம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
போர்த்துக்கீஸியரின் ஆதரவின் கீழ் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் மத்திய&amp;amp;nbsp;காலத்தில் இந்தியாவின் தென்பகுதிகளில் கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பி&amp;amp;nbsp;வந்த யேசு சபையினரின் அரிய முயற்சியினால் பல அற நிலையங்களும்,&amp;amp;nbsp;அறிவாலயங்களும் இந்தியாவில் உருவாகின. இருப்பினும் அக்காலத்தில் இந்தியா&amp;amp;nbsp;முழுவதுமே இரண்டு பெரிய மருத்துவ மனைகளே இயங்கி வந்தன. ஒன்று&amp;amp;nbsp;சால்செட்டிலும், மற்றொன்று புன்னைக்காயலிலும் நிறுவப் பட்டிருந்தன. (1)&amp;amp;nbsp;அந்த வகையில் புன்னைக்காயல் மருத்துவமனை தமிழ்நாட்டில் உருவான முதல்&amp;amp;nbsp;மருத்துவமனை என்பதில் ஐயமில்லை. புனித சவேரியாருக்குப் பின்&amp;amp;nbsp;முத்துக்குளித்துறைப் பகுதியின் தலைமைக் குருவாகப் பணியாற்றி வந்த யேசு&amp;amp;nbsp;சபைக் குரு ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவரே இம்முதல் மருத்துவமனையை 1550-ஆம்&amp;amp;nbsp;ஆண்டு புன்னைக்காயலில் நிறுவினார். இது பற்றி அவர் உரோமையிலுள்ள&amp;amp;nbsp;யேசுசபைத் தலைவர் இல்லத்திற்கு 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய&amp;amp;nbsp;மடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;முத்துக்குளித்துறையிலும், உள்நாட்டுப் பகுதியிலும் பிணியுற்ற&amp;amp;nbsp;ஏழைமக்களின் நலனுக்காக அண்மையில் புன்னைக்காயலில் புதிதாக ஒரு&amp;amp;nbsp;மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். இந்த மருத்துவமனையானது, இந்நாட்டிலேயே&amp;amp;nbsp;மிகவும் வியக்கத்தக்கப் புதுமையான ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட ஒன்றை&amp;amp;nbsp;இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை....... இம்மருத்துவமனையானது நமது (யேசு சபை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;br&amp;gt;(2) &amp;amp;nbsp;இம்மருத்துவ மனையில் சாதிமத வேறுபாடின்றி எல்லாப் பிணியுற்ற மக்களும்&amp;amp;nbsp;அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இங்கு விளங்கிய கிறிஸ்தவப் பிறரன்பு&amp;amp;nbsp;பிறமத மக்களை மிகவும் கவர்ந்தது. &amp;quot;இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும்&amp;amp;nbsp;புதிய அனுபவம்! அதனால் கிறிஸ்தவத் திருமறையை அவர்கள் தங்களின் தாய் எனக்கருதினர். பலர் தங்களின் மரணப்படுக்கையில் திருநீராட்டுப் பெற்று&amp;amp;nbsp;இறந்தனர்.&amp;quot;(3)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்காலத்தில் முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியத் தளபதியாகப்&amp;amp;nbsp;பணியாற்றி வந்த மனுவேல் ரொட்ரீகஸ் குட்டினோ என்பவர் புன்னைக்காயல்&amp;amp;nbsp;மருத்துவமனையைத் தனது சொந்த வீடாகவே கருதி அங்கேயே அவர் வாழ்ந்து&amp;amp;nbsp;வந்தார். அங்கிருந்த பிணியாளர்களையும் அவர் தனது சொந்தக் குடும்பத்தின்&amp;amp;nbsp;உறுப்பினர்களாகவே மதித்துப் பேணினார். ஏழைப் பிணியாளர்கள் மீது அவர்&amp;amp;nbsp;காட்டிய இரக்கமும், அன்பும் இன்னும் பல அதிகாரிகளையும்&amp;amp;nbsp;இம்மருத்துவமனையில் சேவை செய்யும்படித் தூண்டியது. (4)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''மருத்துவர்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புன்னைக்காயல் மருத்துவமனையில் முதல் தலைமை மருத்துவராக&amp;amp;nbsp;முத்துக்குளித்துறையைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வந்தார். இவரைப் பற்றி&amp;amp;nbsp;சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி யேசுசபைத்&amp;amp;nbsp;தலைமை இல்லத்திற்கு எழுதியதாவது:- &amp;amp;nbsp;&amp;quot;இம்மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே &amp;amp;nbsp;பணியாற்றி வருகிறார். இவர் முன்னர் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு &amp;amp;nbsp;மறைக்கல்வி போதித்தவர். சிறந்த பக்திமான். இவரும் இவரது மனைவியும்&amp;lt;br&amp;gt;ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய சீலர்கள். இறைவனின் அருளால் இவர்களுக்கு ஒரு &amp;amp;nbsp;மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு, இருவருமே இப்போது பிரம்மச்சாரிகளாகக்&amp;amp;nbsp;கற்பு வாழ்க்கையை மேற்கொண்டு தங்களை இறைவன் சேவைக்கே&amp;amp;nbsp;அர்ப்பணித்துவிட்டனர். இறைவன் அவர்களை எந்நாளும் ஆசீர்வதிக்கட்டும்!&amp;quot;(5)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சில வேளைகளில் யேசு சபைச் சகோதரர்கள் ஒரு சிலரும் இம்மருத்துவமனையில் பணி&amp;amp;nbsp;புரிந்தனர். விசுவாச வாழ்விலும், பிறர் பணியிலும் ஆர்வமிக்கக்&amp;amp;nbsp;கிறிஸ்தவர்களுக்காக சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1572-ஆம் ஆண்டில்&amp;amp;nbsp;புன்னைக்காயலில் ஏற்படுத்தியிருந்த 'பிறரன்புச் சபை&amp;quot; (Confraternity of&amp;amp;nbsp;Charity)எனும் பக்திச் சபையிலிருந்து வாரந்தோறும் இரு ஊழியர்கள்&amp;amp;nbsp;இம்மருத்துவமனையில் பிணியாளர்களுக்குச் சேவை செய்தனர். ஞாயிற்றுக்கிழமை&amp;amp;nbsp;தோறும் நடைபெறும் &amp;quot;பிறரன்புச் சபை&amp;quot; வாரக் கூட்டத்தில், அந்த வாரம்&amp;amp;nbsp;முழுவதும் மருத்துவமனையில் பணி செய்வதற்கென இருவர் நியமிக்கப் படுவர்.&amp;amp;nbsp;(6). இவர்கள் பிணியாளர்களை அன்புடன் பராமரித்ததோடு, மரணப்&amp;amp;nbsp;படுக்கையிலிருந்தவர்களையும் தேற்றி, அவர்கள் நல்ல மரணமடையும்படி உதவினர்.&amp;lt;br&amp;gt; மேலும் ஏழைப் பிணியாளர்களுக்கு உணவும் குளிர்காலத்தில் உடையும் இலவசமாக&amp;amp;nbsp;வழங்கினர். (7)&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புன்னைக்காயல் மருத்துவமனையில் கிறிஸ்தவர் மட்டுமின்றி, பிறமத மக்களும்&amp;amp;nbsp;சிகிச்சையோடு இலவச உணவும், உடையும் பெற்று வந்ததினால் அதன் பொருளாதாரம்&amp;amp;nbsp;பின் தங்கிய நிலையிலிருந்தது. இதற்காக வாரந்தோறும் அந்தப் பகுதியிலுள்ள&amp;lt;br&amp;gt;கிறிஸ்தவ ஊர்களின் மக்களிடமிருந்து இம்மருத்துவமனையின் செலவுக்காக&amp;amp;nbsp;நன்கொடை வசூலிக்கப்பட்டது. (8) முத்துக்குளி நடக்கும் காலங்களில்&amp;amp;nbsp;கிறிஸ்தவர்கள் புன்னைக்காயல் மருத்துவமனைக்குப் பெருந்தொகையை&amp;amp;nbsp;நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். 1560- ஆம் ஆண்டு முத்துக்குளிப்பின்&amp;amp;nbsp;போது மட்டும் பெருமளவு நன்கொடை வழங்கினர். முத்துக்குளிப்புக்&amp;amp;nbsp;காலங்களில் பொதுமக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராள மனதுடன் நன்கொடை&amp;amp;nbsp;வழங்கினர். (9). மேலும் முத்துக்குளித் துறைப் பகுதி வாழ் கிறிஸ்தவ&amp;lt;br&amp;gt;மக்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்களுக்கு விதிக்கப்படும்&amp;amp;nbsp;அபராதப் பணமும் புன்னைக்காயல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி&amp;amp;nbsp;போர்த்துக்கீஸியத் தளபதி ஏற்பாடு செய்திருந்தார். இது பற்றி வேம்பாறு&amp;amp;nbsp;ஊரைச் சேர்ந்த தியோகு டி மஸ்கித்தா என்பவர் 1583- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்&amp;amp;nbsp;தூத்துக்குடியில் கூறிய சாட்சியமாவது:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஹென்றி குருக்கள் புன்னைக்காயலில்&amp;amp;nbsp;மருத்துவமனையொன்று நடத்தி வருகிறார். இம்மருத்துவமனையின் செலவுகள்&amp;amp;nbsp;மக்கள் வழங்கும் தர்மத்தைக் கொண்டும், முத்துக்குளியின்போது கிறிஸ்தவ&amp;amp;nbsp;மக்கள் வழங்கும் நன்கொடை கொண்டும், குற்றங்கள் புரிந்த கிறிஸ்தவர்களுக்கு&amp;amp;nbsp;இக்குருக்கள் விதிக்கும் அபராதப் பணமும் கொண்டு நடத்தி வருகின்றனர். &amp;quot;&amp;amp;nbsp;(11)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
போர்த்துக்கீசியப் போர் வீரர்கள் இந்தியாவின் வெப்பத்தன்மையாலும்,&amp;amp;nbsp;நலக்குறைவுள்ள உணவினாலும் பாதிக்கப்பட்டு அடிக்கடி நோயில் விழுந்தனர்.&amp;amp;nbsp;பிணியுற்ற அவர்கள் தகுந்த உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் மேலும்&amp;amp;nbsp;குறைந்த வருமானமுடைய அவர்கள் வறுமைக்குப் பலியாகித் தவித்தனர். இவ்வெளிய&amp;amp;nbsp;போர்த்துக்கீஸிய வீரர்கள் புன்னைக்காயலின் பொது மருத்துவமனையில் சிகிச்சை&amp;amp;nbsp;பெற்று வந்தனர். பின்னர் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் பிணியுற்றப்&amp;amp;nbsp;போர்த்துக்கீசிய வீரர்களுக்கெனப் புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையை அவர்&amp;amp;nbsp;இருந்த ஆலயத்துக்கருகிலேயே 1551-ஆம் ஆண்டு நிறுவினார்.&amp;amp;nbsp;இம்மருத்துவமனையின் கட்டிடச் செலவினைப் போர்த்துக்கல் நாட்டு மன்னரே&amp;amp;nbsp;ஏற்றுக் கொண்டார். (12) இப்போர்த்துக்கீசிய மருத்துவமனையின் நிரந்தரப்&amp;amp;nbsp;பொருளாதாரத்துக்கென்று, முத்துக்குளித்துறைத் தளபதி மனுவேல் குட்டினோ&amp;amp;nbsp;செய்த விண்ணப்பத்திற்கிணங்க, கோவை மேலாணையாளர் (Viceroy) ஆண்டுதோறும்&amp;amp;nbsp;100 ஸ்குடி என்னும் தொகை அனுப்பி வைத்தார்.(13)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''மருத்துவமனையின் மறைவு:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுமக்களுக்காகவும் போர்த்துக்கீஸியருக்காகவும் புன்னைக்காயலில்&amp;amp;nbsp;ஏற்படுத்தப்பட்ட இவ்விரு முதல் மருத்துவமனைகளும் 1553-ஆம் ஆண்டு ஏப்ரல்&amp;amp;nbsp;மாதத்தில் எதிரிகள் (வடுகர்கள்) புன்னைக்காயல் மீது நடத்திய&amp;amp;nbsp;படையெடுப்பின் போது நெருப்புக்கு இரையாகி அழிந்து போயின என்று சுவாமி&amp;amp;nbsp;ஹென்றி ஹென்றிக்கஸ் புனித இஞ்ஞாசியருக்கு எழுதியுள்ள மடலிலிருந்து&amp;amp;nbsp;அறிகிறோம்.. (14) அதன் பிறகு யேசு சபைக் குருக்கள் மக்கள் தாராளமுடன்&amp;amp;nbsp;வழங்கிய நன்கொடையைக் கண்டு மீண்டும் ஒரு மருத்துவமனையைப் புன்னைக்காயலில்&amp;amp;nbsp;எழுப்பினார். இம்மருத்துவமனையில் மருத்துவர்களாகப்&amp;amp;nbsp;பணியாற்றியவர்களுக்குக் கிறிஸ்தவ மக்கள் வழங்கிய தர்மப் பணத்திலிருந்தே&amp;amp;nbsp;சம்பளம் வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையானது 1590-ஆம் ஆண்டு வரை&amp;lt;br&amp;gt;இயங்கி வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. (15)&amp;amp;nbsp;முத்துக்குளித் துறையில் 1579-ஆம் ஆண்டு வரை யேசு சபையின் தலைமை இல்லமாக&amp;amp;nbsp;விளங்கிய புன்னைக்காயலின் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து யேசு சபையினர்&amp;amp;nbsp;தங்களின் தலைமை இல்லத்தைத் தூத்துக்குடிக்கு மாற்றிவிட்டனர். அது முதல்&amp;amp;nbsp;புன்னைக்காயல் மருத்துவமனையும் தனது பழைய மாண்பினை இழந்து விட்டது. (16).&amp;amp;nbsp;அடிக்கடிப் புன்னைக்காயல் மீது மதுரை நாயக்கனின் வடுகர் படையினர்&amp;amp;nbsp;நடத்தியத் தாக்குதலின் போது இம்மருத்துவமனையும் வலிமை இழந்து படிப்படியாக&amp;amp;nbsp;மறைந்திருக்க வேண்டும் என நம்பலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பிற மருத்துவ மனைகள்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புன்னைக்காயல் மருத்துவமனையினால் மக்களுக்கும், கிறிஸ்தவ மறைக்கும்&amp;amp;nbsp;விளைந்த ஏராளமான நன்மைகளைப் பார்த்துவிட்டு முத்துக்குளித்துறையின் மற்ற&amp;amp;nbsp;முக்கிய ஊர்களிலும் மருத்துவமனைகள் அமைப்பதற்குச் சுவாமி ஹென்றி&amp;amp;nbsp;ஹென்றிக்கஸ் அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி 1566-ஆம்&amp;amp;nbsp;ஆண்டு சில பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனைகளின்&amp;amp;nbsp;நிர்வாகப் பொறுப்பினை கிறிஸ்தவ மக்களிடமே அவர் ஒப்படைத்தார். மேலும்&amp;amp;nbsp;மருத்துவர்களாகவும் இப்பகுதியில் வாழும் மக்களையே நியமித்தார். ஒவ்வொரு&amp;amp;nbsp;கிறிஸ்தவ ஊரிலுமுள்ள பொதுமக்களிடமிருந்து உணவும், உடையும்&amp;amp;nbsp;தர்மமாகப்பெற்று இம்மருத்துவமனைகளிலுள்ள ஏழைப் பிணியாளர்களுக்கு இலவசமாக&amp;amp;nbsp;வழங்க ஏற்பாடு செய்தார். தூத்துக்குடியில் கிறிஸ்தவத் தனவந்தர் ஒருவர்&amp;amp;nbsp;தனது சொந்த செலவிலேயே பெரிய மருத்துவமனையொன்றை நிறுவினார்.&amp;amp;nbsp;முத்துக்குளிப்பு நடக்கும்போதெல்லாம் தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவ மக்கள்&amp;amp;nbsp;இம்மருத்துவமனைக்குத் தாராளமுடன் பொருளுதவி வழங்கினர் (17). தூத்துக்குடி&amp;amp;nbsp;மருத்துவமனையானது 1603-ஆம் ஆண்டு கயத்தாறு மன்னனும், மதுரை நாயகனும்&amp;amp;nbsp;சேர்ந்து தூத்துக்குடியின் மீது நடத்திய தாக்குதலின் போது நெருப்புக்கு&amp;amp;nbsp;இறையாகி அழிந்தது. (18)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;1572-ஆம் ஆண்டின் யேசு சபைக் கணக்குப்படி, முத்துக்குளித்துறையில்&amp;amp;nbsp;மொத்தம் 27 கிறிஸ்தவ ஊர்களும், 20 கோயில்களும், 7 மருத்துவமனைகளும்&amp;amp;nbsp;இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட ஊர்களில் இயங்கி வந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''1. மணப்பாடு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;2. வீரபாண்டியன்பட்டணம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;3. புன்னைக்காயல்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;4. தூத்துக்குடி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;5. வைப்பாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;6. மன்னார்&amp;amp;nbsp;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னாரில் போர்த்துக்கீஸியருக்கும் பொதுமக்களுக்கும் என்று இரு&amp;amp;nbsp;மருத்துவமனைகள் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளிலும் மிகப் பெரியதும், &amp;amp;nbsp;சிறப்பு மிக்கதும் புன்னைக்காயல் மருத்துவமனையே! (19) &amp;amp;nbsp;தமிழ்நாட்டின் மருத்துவப் பணிக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும்&amp;amp;nbsp;விளங்கி, கிறிஸ்தவப் பிறரன்பை சாதிமத வேறுபாடின்றி தமிழக மக்கள்&amp;amp;nbsp;அனைவருக்கும் வழங்கி வந்த புன்னைக்காயலைத் தமிழக மக்கள் எளிதில்&amp;amp;nbsp;மறந்துவிட முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''(நன்றி:ஞானதூதன் 1977)'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 11:16, 4 ஆகஸ்ட் 2012 (UTC)'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சமூகங்கள்]][[Category:கிறிஸ்துவம்]][[Category:பரதவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>