<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21</id>
		<title>தீபாவளிப்பலகாரங்கள்- பாரம்பரியம்! - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;action=history"/>
		<updated>2026-05-27T03:33:32Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;diff=8426&amp;oldid=prev</id>
		<title>20:07, 23 அக்டோபர் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;diff=8426&amp;oldid=prev"/>
				<updated>2011-10-23T20:07:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;amp;diff=8426&amp;amp;oldid=8425&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;diff=8425&amp;oldid=prev</id>
		<title>20:05, 23 அக்டோபர் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;diff=8425&amp;oldid=prev"/>
				<updated>2011-10-23T20:05:05Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;amp;diff=8425&amp;amp;oldid=8422&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;diff=8422&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: தீபாவளிப் பலகாரங்கள்: பாரம்பரிய முறை  &lt;br&gt;தேன்குழல்:   தேவையான ப…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D!&amp;diff=8422&amp;oldid=prev"/>
				<updated>2011-10-23T19:50:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: தீபாவளிப் பலகாரங்கள்: பாரம்பரிய முறை  &amp;lt;br&amp;gt;தேன்குழல்:   தேவையான ப…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;தீபாவளிப் பலகாரங்கள்: பாரம்பரிய முறை&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தேன்குழல்: &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவையான பொருட்கள்: அரிசி மாவு இரண்டு கிண்ணம், வறுத்து அரைத்த உளுத்தமாவு கால் கிண்ணம், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் 50 கிராம், ஜீரகம் ஒரு டேபிள் ஸ்பூன், கலக்க நீர். பொரிக்க ஏதேனும் சமையல் எண்ணெய் விருப்பம் போல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி மாவு, உளுத்தம்மாவு, உப்பு, ஜீரகம் சேர்த்துக்கலந்து கொண்டு வெண்ணெயையும் போடவும். வெண்ணெய் மாவோடு நன்கு கலந்த பின்பு தேவையான நீர் விட்டுப் பிசையவும். மாவு சப்பாத்திமாவுப் பதத்தில் இருக்க வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் வைத்துத் தேன்குழல் பிழியும் நாழியில் பிளைனாக இருக்கும் அச்சைப் போட்டு உள்ளே ஒரு உருண்டை மாவைப் போட்டு எண்ணெய் காய்ந்ததும் பிழியவும். இரண்டு அல்லது மூன்று தேன்குழல்கள் வரை ஒரு ஈட்டிற்குப் போடலாம். அவை நன்கு வேக அடிக்கடி திருப்பி விடவும். இரண்டு பக்கம் பொன்னிறமாக வந்ததும் வெளியே எடுத்து எண்ணெயை வடிகட்டிப் போடவும். அனைத்தும் பொரித்து முடித்ததும், காற்றுப் புகாத டப்பாவில் அடைத்துப் பயன்படுத்தவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;முள்ளுத் தேன்குழல்: அரிசி இரண்டு பங்கு என்றால் கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு இரண்டும் சேர்ந்து ஒரு பங்கு எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் சூடு வரும்படி வறுக்கவும் ஆற வைத்து மெஷினில் கொடுத்து மாவாக்கவும். இந்த மாவிற்கு ஐம்பது கிராம் வெண்ணெய், உப்பு, பிசைய நீர் மட்டும் போதுமானது. இதற்கு சீரகம் தேவையில்லை. சிலர் எள் சேர்ப்பார்கள். அதுவிருப்பம் போல் சேர்க்கலாம். சேர்க்காமலும் செய்யலாம். மாவை நன்கு பிசைந்து கொண்டு அடுப்பில் எண்ணெய் வைத்து முள் இருக்கும்படி நக்ஷத்திரக் குறி போட்ட அச்சைப் போட்டுப் பிழியவும். இதையும் ஒரு ஈட்டிற்கு இரண்டு அல்லது மூன்று போடலாம். நன்கு சிவக்க வெந்ததும் வெளியே எடுத்து வைக்கவும். முன்போல் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடாத் தேன்குழல் அல்லது ரிப்பன் பக்கோடா: இதற்கு அரிசிமாவு, உளுத்தமாவு, கடலை மாவு மூன்றும் தேவை. மூன்று கிண்ணம் அரிசிமாவு எனில் ஒரு கிண்ணம் கடலை மாவு, கால் கிண்ணம் வறுத்து அரைத்த உளுத்தமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். வெண்ணெய் ஐம்பது கிராம். இதற்குக் காரம் போடவேண்டும். ஆகையால் மிளகாய் வற்றல் ஐந்து அல்லது ஆறை நீரில் ஊற வைத்து நன்கு மசிய அரைத்துக்கொள்ளவும். அல்லது மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன், பெருங்காயப்பவுடர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசிமாவு, உளுத்தமாவு, கடலைமாவு, வெண்ணெய், உப்புச் சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்ததும், அரைத்த மிளகாய் விழுது அல்லது மிளகாய்த் தூள் சேர்த்துப் பெருங்காயப் பொடியும் சேர்த்துக் கொண்டு நீர் விட்டுப் பிசையவும். நன்கு பிசைந்ததும். நாடா மாதிரியாக இருக்கும் அச்சில் போட்டுப் பிழியவும். நீளச் செவ்வக வடிவத்தில் அச்சில் சிறியதாக வெட்டி இருக்கும். சிலவற்றில் இதிலும் முள் மாதிரி இருக்கும். உங்கள் விருப்பம் போல் போட்டுப் பிழிந்து எடுக்கவும். எண்ணெயில் போட்டு நன்கு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;காராச்சேவு: அரிசி மாவு, கடலைமாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் அல்லது மிளகாய் விழுது, வெண்ணெய். பிசைய நீர். தேய்க்கும் தட்டு, பொரிக்க எண்ணெய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காராச்சேவுத் தட்டு பூந்திக்கரண்டி மாதிரியே ஆனால் சதுர வடிவில் இருக்கும். சுற்றிலும் மரத்தில் பதிக்கப்பட்டு நீண்ட பிடியோடு இருக்கும். தட்டு படம் போடும் வசதி இங்கே இல்லை. தட்டை அலம்பி அதிலுள்ள ஓட்டைகளில் அடைப்பு இல்லாமல் நன்கு காயவைத்துத் துடைத்துக்கொண்டு எண்ணெய் தடவி வைக்கவும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது மாவுகளை ஒன்றாய்க் கலந்து கொண்டு உப்பு, மிளகாய்த் தூள் அல்லது விழுது, பெருங்காயம் சேர்த்து வெண்ணெய் போட்டுப் பிசையவும். பின்னர் தேவையான அளவு நீர் விட்டுக் கொஞ்சம் கெட்டியாகவே பிசையவும். கடாயில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், தட்டை அதில் மேலே வைத்துக்கொண்டு மாவை உருட்டிக்கொண்டு தட்டில் வைத்துக் காரட் துருவுவது போல் தேய்க்கவும். கீழே காய்ந்த எண்ணெய் கொள்ளும் மட்டும் தேய்த்ததும், அடியில் ஒட்டிக்கொண்டிருப்பவையை ஒரு சூடான தோசைத்திருப்பி போன்ற கரண்டியால் தட்டினால் அவையும் எண்ணெயில் விழுந்துவிடும். பின்னர் அனைத்தும் நன்கு வேகும்வரை திருப்பிக் கொடுக்கவும். வெந்ததும் தட்டில் எடுத்து வைத்து எண்ணெயை வடிக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இனிப்புக் காராச் சேவு: அதே மாதிரி அரிசிமாவு, கடலைமாவு எடுத்துக்கொள்ளவும். உப்பு அரை டீஸ்பூன் போதும். வெண்ணெய் ஐம்பது கிராம். பிசைய நீர். பாகு வைக்க சர்க்கரை கால் கிலோ, ஏலக்காய்ப் பொடி தேவைப்பட்டால் அரை டீஸ்பூன். பொரிக்க எண்ணெய். &lt;br /&gt;
&lt;br /&gt;
மாவைக் கலந்து கொண்டு உப்புச் சேர்த்து வெண்ணெய் போட்டுப் பிசையவும். நன்கு பிசைந்ததும் அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்துக் காராச்சேவுத் தட்டில் போட்டுத் தேய்த்து அனைத்தையும் பிழிந்து எடுக்கவும். பின்னர் இன்னொரு வாணலியில் கால்கிலோ சர்க்கரை வைத்துத் தேவையான நீர் விட்டு நல்ல கெட்டிப் பாகாக வைக்கவும். பாகு நன்கு காய்ந்து இரட்டைக்கம்பிப் பதம் வந்ததும் எண்ணெயில் பொரித்து எடுத்த சேவைப்போட்டுக் கிளறவும். தேவையானால் ஏலப்பொடி சேர்க்கவும். நன்கு சர்க்கரைப் பாகில் கலந்ததும் ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். பின்பு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;மனோஹரம்; தேவையான பொருட்கள்:&amp;lt;br&amp;gt;அரிசி, உ.பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, பாகு வெல்லம் கால் கிலோ, தேங்காய் கீறுபோட்டு வைத்துக்கொள்ளவேண்டும் இது ஒரு கிண்ணம், ஏலப்பொடி, வெண்ணெய், பொரிக்க எண்ணெய், தேவையான நீர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இதை இருவிதமாய்ப் பண்ணுவார்கள். ஒரு சிலர் முதலில் சொன்ன உளுத்தமாவு போட்ட தேன்குழல் செய்து கொண்டுஅதிலே செய்வார்கள். தென் மாவட்டங்களில் முக்கியமாய் மதுரை, திருநெல்வேலிப்பக்கம் செய்முறை மாறுபடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேவையான பொருட்கள்; அரிசிமாவு இரண்டு கிண்ணம் , ஒரு கிண்ணம் கடலை மாவு. ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு மாவு.வறுத்த உளுத்தமாவு கால் கிண்ணம் அல்லது அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்றவை சேர்த்து அரைத்த மாவு இரண்டு கிண்ணம். உப்பு அரை டீஸ்பூன். வெண்ணெய் சேர்த்து நீர் விட்டுப் பிசையவும். பின்னர் தேன்குழல் அச்சைப் போல் மூன்று பங்கு பெரியதாக துவாரம் இருக்கும் அச்சில் போட்டுப் பிழியவேண்டும். வேகும்போதே கிளறிக் கொடுத்தால் அனைத்தும் துண்டுகளாகி நன்கு வேகும். உள்ளே குழல் ஓடிக்கொண்டிருக்கும். மாவைப் பிசைந்து வெளியே அதிக நேரம் வைக்காமல் ஒரு ஈடு பிசைந்து பிழிந்ததும் அடுத்த ஈடு பிசையவேண்டும். எல்லாம் ஒரே மாதிரியான சுவையில் வேகும். அனைத்தும் வெந்து எடுத்ததும் ஒரு தட்டில் கொட்டிக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேறொரு கடாய் அல்லது வெண்கல உருளியில் வெல்லத்தைப் பொடி செய்து நீரில் கரைத்து அழுக்கு நீக்கிப் போட்டுக் கொதிக்க விடவேண்டும். பாகு நன்கு கொதித்து ஒரு கிண்ணம் நீரில் போட்டுப் பார்த்தால் உருட்டும் பதம் வர வேண்டும். அப்படி வந்ததும் தேங்காய்க் கீற்றுகளையும், ஏலப்பொடியையும் சேர்த்துக் கிளறிவிட்டுத் தட்டில் கொட்டி இருக்கும் தேன்குழலில் கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுக் கலக்க வேண்டும். பின்னர் இவற்றை உருண்டைகளாக உருட்டலாம். அல்லது பருப்புத் தேங்காய்க் கூட்டில் அடைக்கலாம். அப்படியேயும் வைத்துச் சாப்பிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 19:50, 23 அக்டோபர் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:நளபாகம்]][[Category:பாரம்பரிய_உணவுகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>