<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%3A_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D</id>
		<title>தியாகராய நகர்: வைராக்கியம் விளையும் ஊர் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%3A_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-07-01T02:50:35Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7610&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;தியாகராய நகர்: வைராக்கியம் விளையும் ஊர்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7610&amp;oldid=prev"/>
				<updated>2011-07-28T16:39:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D&quot; title=&quot;தியாகராய நகர்: வைராக்கியம் விளையும் ஊர்&quot;&gt;தியாகராய நகர்: வைராக்கியம் விளையும் ஊர்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;16:39, 28 ஜூலை 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7609&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: &amp;nbsp;நன்றி நம்சென்னையும், அசோகமிதரனும்  http://nammachennai.in/article.aspx?issue=May-2011&amp;amp;catego…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7609&amp;oldid=prev"/>
				<updated>2011-07-28T16:39:22Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  நன்றி நம்சென்னையும், அசோகமிதரனும்  http://nammachennai.in/article.aspx?issue=May-2011&amp;amp;catego…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;நன்றி நம்சென்னையும், அசோகமிதரனும்&lt;br /&gt;
&lt;br /&gt;
http://nammachennai.in/article.aspx?issue=May-2011&amp;amp;amp;category=Oru%20Parvaiyil%20Chennai%20Nagaram&amp;amp;amp;article=20110531025637&lt;br /&gt;
&lt;br /&gt;
மின் தமிழ் பகிர்வு: விஜயராகவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தியாகராய நகர்: வைராக்கியம் விளையும் ஊர்&amp;lt;br&amp;gt;அசோகமித்திரன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தி. நகரில் என் வாசம் தொடங்கிய 1948ஆம் ஆண்டில் தண்ணீர் முதல் விறகு வரை&amp;lt;br&amp;gt;கடும் பற்றாக்குறை. விறகுக்கு ரேஷன் கார்டு இருந்தது. காபிக் கொட்டைக்கு&amp;lt;br&amp;gt;ஒரு ரேஷன் கார்டு. அரிசி. சர்க்கரை பற்றிக் கேட்க வேண்டியதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ரங்கநாதன் தெருவில் 9 எண்ணிட்ட வீட்டில் இருந்தேன். குடி தண்ணீர் அடுத்த&amp;lt;br&amp;gt;தெருவிலிருந்தது. குளிப்பது அரை கிலோ மீட்டர் தள்ளி தாமோதர ரெட்டித்&amp;lt;br&amp;gt;தெருவில் இருந்த ஓர் உறவினர் வீட்டில். அது நரி உலவும் இடம் என்று&amp;lt;br&amp;gt;சொல்வார்கள். பிசாசுகளும் உலவலாம். அன்று தாமோதர ரெட்டித் தெருவிலிருந்து&amp;lt;br&amp;gt;கண்ணாம்பேட்டை மயானத்தில் சடலங்களைப் பார்க்கலாம். அவை வேகும் மணத்தைச்&amp;lt;br&amp;gt;சுவாசிக்கலாம். ஐந்தே ஆண்டுகளில் நானே தாமோதர ரெட்டித் தெருவாசியாகி&amp;lt;br&amp;gt;விட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவ விஷ்ணு ஆலயம் ஒரு கிராமாந்தரக் கோயில் போல இருந்தது. அதன்&amp;lt;br&amp;gt;எதிரில்தான் தி.நகர் பஸ் நிலையம். தடத்தில் ஓடும் பஸ்கள் நிறுத்தி&amp;lt;br&amp;gt;வைக்கப்பட்டிருக்கும். மின்சார இரயில் போக முடியாத இடங்களுக்குத்தான்&amp;lt;br&amp;gt;அன்று பஸ்ஸில் போவோம். இரயிலில் கட்டணம் குறைவு. பயணமும் விரைவாக&amp;lt;br&amp;gt;இருக்கும் ரங்கநாதன் தெருவில் மூன்றே கடைகள்: கும்பகோணம் பாத்திரக்கடை,&amp;lt;br&amp;gt;கல்யாண் ஸ்டோர்ஸ், 9ஆம் எண் வீட்டையொட்டி ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை.&amp;lt;br&amp;gt;ரங்கநாதன் தெருவில் நுழையும்போது இரயில் ஒலி கேட்டால் ஓடிப் போய்ப்&amp;lt;br&amp;gt;பிடித்துவிடலாம். தெருவில் எந்த இடைஞ்சலும் இருக்காது. பயணச் சீட்டு&amp;lt;br&amp;gt;வாங்குமிடத்திலேயே மாடிப்படி. இப்போது ரங்கநாதன் தெருவைக் கடந்து&amp;lt;br&amp;gt;முடிப்பதற்குப் பத்து நிமிடங்களாவது வேண்டும். பயணச் சீட்டு வாங்கப்&amp;lt;br&amp;gt;பத்திலிருந்து முப்பது நிமிடம் வரை. அப்புறம் சுமார் பத்துக் கடைகளையும்&amp;lt;br&amp;gt;ஒரு நடைபாதைப் பிள்ளையார் கோயிலையும் கடந்து ஏதோ மூலையில் உள்ள&amp;lt;br&amp;gt;மாடிப்படியை அடைய இன்னொரு பத்து நிமிடம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது பஸ் நிலையம் உள்ள இடத்தில் அப்போது ஒரு பெரிய குட்டையிருந்தது.&amp;lt;br&amp;gt;அதில் ஆமையிருந்ததாகக் கூடச் சொல்வார்கள். நான் நிறைய எருமை மாடுகளைப்&amp;lt;br&amp;gt;பார்த்திருக்கிறேன். குட்டையில் தண்ணீர் வற்றியிருக்கும் காலத்தில்&amp;lt;br&amp;gt;எப்போதாவது பொதுக்கூட்டம் நடக்கும். ராஜாஜி, அண்ணா, செங்கல்வராயன்,&amp;lt;br&amp;gt;ம.பொ.சி., முத்துராமலிங்கத் தேவர், சின்ன அண்ணாமலை ஆகியோரின் உரைகளை நான்&amp;lt;br&amp;gt;அங்குதான் கேட்டிருக்கிறேன். 1960 அளவில் சுவாமி சின்மயாநந்தா அங்கு கீதை&amp;lt;br&amp;gt;வேள்வி என்று இருபத்தொரு நாட்கள் உரை நிகழ்த்தினார். “என்னமாக ஆங்கிலம்&amp;lt;br&amp;gt;பேசுகிறார்!” என்று கூச்சப்பட்டுக்கொண்டதும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றே நல்லி கடை உண்டு. நகைக் கடைகளில் மூன்று. டி.பி. ஜுவல்லரி,&amp;lt;br&amp;gt;ராமநாதன் கடை, ராமசந்திரா ஐயர் கடை. காய்கறி வாங்க பாண்டி பஜார்&amp;lt;br&amp;gt;பின்னாலிருந்த மார்க்கெட் செல்ல வேண்டும். இல்லாது போனால் இரயில் பாதை&amp;lt;br&amp;gt;தாண்டி மேற்கு மாம்பலம் போக வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போதுள்ள மாட்லி சாலையும் துரைசாமி சாலையும் அப்போதும் மேற்கு&amp;lt;br&amp;gt;மாம்பலத்தைத் தி. நகருடன் இணைக்கும் பாதைகள். இரண்டுக்கும் இரயில்வே கேட்&amp;lt;br&amp;gt;இருந்தது. நன்றாக இழுத்து மூடும் கேட். ஆதலால் ஒரு முறை கேட்டை&amp;lt;br&amp;gt;மூடிவிட்டால் யாரும் சந்து அல்லது இடுக்கில் புகந்து இரயில் பாதையைக்&amp;lt;br&amp;gt;கடந்து செல்ல முடியாது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் தூக்கி&amp;lt;br&amp;gt;இறக்கும் ‘காண்ட்டிலீவர்’ கேட் போட்டார்கள். அப்போதிலிருந்து மாதத்திற்கு&amp;lt;br&amp;gt;இரண்டு நரபலியாவது அந்த கேட்டுகள் கேட்டு வாங்கிப் பெறுகின்றன.&amp;lt;br&amp;gt;கற்பனையுள்ளவர்கள் அங்கு இறந்தோர் ஆவிகளைப் பார்க்கலாம். ‘கூ, சிக்கு&amp;lt;br&amp;gt;சிக்கு’ என்று அந்த நாள் குழந்தைகள்போல ஆவிகள் இரயில் விளையாட்டு&amp;lt;br&amp;gt;விளையாடிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நாளில் தி. நகருக்கு இரண்டே டாக்டர்கள். ஒருவர் அகஸ்தியர் கோயில்&amp;lt;br&amp;gt;தெருவிலிருந்த சாரி. இன்னொருவர் உஸ்மான் சாலையில் இருந்த சாரி. இருவரும்&amp;lt;br&amp;gt;தி.நகர் வாசிகளின் உடல் நலனை நன்கு கவனித்துக்கொண்டார்கள். கார்ப்பரேஷன்&amp;lt;br&amp;gt;டாக்டர் ஒருவரும் உண்டு. அடிப்பட்டது என்று உடலின் எந்தப் பாகத்தைக்&amp;lt;br&amp;gt;காட்டினாலும் ஊதா நிறத்தில் ஒரு மருந்தைப் பூசுவார். காயம் ஆறினாலும்&amp;lt;br&amp;gt;அந்த நிறம் இலேசில் மாறாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சினிமா நட்சத்திரங்கள் வசிக்கும் பூமி என்று தி. நகருக்கு அபத்தமான பெயர்&amp;lt;br&amp;gt;உண்டு. எனக்குத் தெரிந்து மூன்று நட்சத்திரங்கள் இருந்தார்கள். டி.ஆர்.&amp;lt;br&amp;gt;ராஜகுமாரி வீடு கோடம்பாக்கம் எல்லையில் இருக்கும். என்.எஸ். கிருஷ்ணன்&amp;lt;br&amp;gt;மற்றும் புஷப்வல்லி வீடுகள் தேனாம்பேட்டை எல்லைக்கருகே இருக்கும். இருந்த&amp;lt;br&amp;gt;ஒரு சினிமாக் கொட்டகை ராஜகுமாரி தியேட்டர். ஆரம்பத்தில் இந்திப்&amp;lt;br&amp;gt;படங்கள்தான் அங்கு காட்டப்பட்டன. பின்னர் தமிழ்ப் படங்களும்&amp;lt;br&amp;gt;திரையிட்டப்பட்டன. அதுவே ஆங்கிலம், தெலுங்கு என்று போய்க் கடைசியில்&amp;lt;br&amp;gt;கொட்டகையே காணாமல் போய்விட்டது. ஆனால் வெகு நாட்களுக்கு அங்கு பஸ்&amp;lt;br&amp;gt;நிறுத்தும் இடத்திற்கு ராஜகுமாரி என்றுதான் பெயர். திராவிடக் கட்சிகள்&amp;lt;br&amp;gt;ஆட்சியில் அது ‘பவர் ஹவுஸ்’ என்று அறியப்பட்டது. இப்போது பல்லுப்&amp;lt;br&amp;gt;போனவர்களுக்குக்கூட ராஜகுமாரி பற்றிய நினைவு இருக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது சேரிகள் என்று உருவாகவில்லை. கண்ணம்மாப் பேட்டையில் நிறையக்&amp;lt;br&amp;gt;குடிசைகள் இருந்தன. ஹபிபுல்லா சாலைப் பகுதியில் ஒரு குடிசைப் பகுதி&amp;lt;br&amp;gt;இருந்தது. தேனாம்பேட்டை திறந்த சாக்கடைப் பகுதியில் ஒரு விஸ்தாரமான&amp;lt;br&amp;gt;குடிசைப் பகுதி. குடிசை மாற்று வாரியம் இப்போது அங்கெல்லாம் அடுக்குமாடி&amp;lt;br&amp;gt;வீடுகள் கட்டியிருக்கிறது. தி. நகர்ப் பகுதியின் வேட்பாளர்களின்&amp;lt;br&amp;gt;தலைவிதியை இப்பகுதிகள் நிர்ணயிக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமாரான பணக்காரர்கள், நடுத்தர மக்கள் வசிக்கும் இடமாக இருந்த தி. நகர்&amp;lt;br&amp;gt;இப்போது நடுத்தர மக்கள், ஏழைகள், பரம ஏழைகள் இருக்குமிடமாகப் பரிணாமம்&amp;lt;br&amp;gt;பெற்றுவிட்டது. இப்போது இங்கே டஜன் கணக்கில் இருக்கும் நகைக் கடைகளில்&amp;lt;br&amp;gt;உள்ளூர்வாசிகள் வியாபாரம் மிகச் சிறிய பங்குதான். அதே போல இன்று&amp;lt;br&amp;gt;ரங்கநாதன் தெருவில் நிறைந்து கிடக்கும் பனியன், பெண்கள் உள்ளாடை,&amp;lt;br&amp;gt;‘ஹெட்பாண்ட்’ வியாபாரிகளுக்கும் பிழைப்பு நகரத்தின் இதர பகுதிகளிலிருந்து&amp;lt;br&amp;gt;வந்து குவியும் நபர்களிடமிருந்துதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றிருந்த தி.நகர் பூங்காக்கள் அனைத்தும் இன்றும் இருக்கின்றன. பனகல்&amp;lt;br&amp;gt;பூங்காவில் அந்த நாட்களில் மாலை நேரத்தில் ரேடியோ ஒலிக்கும். மாலை ஐந்தரை&amp;lt;br&amp;gt;தொடங்கி இரவு எட்டு மணிவரை. அந்த நாளில் மிகச் சில வீடுகளில்தான் ரேடியோ&amp;lt;br&amp;gt;உண்டு. இந்த நிலைமையை மாற்றியதற்கு வி.ஜி.பி. என்றதொரு தவணை முறை வசூல்&amp;lt;br&amp;gt;நிறுவனம் பெரிய காரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தி. நகர் வாழ்க்கை பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். அதிகம் தப்புத்&amp;lt;br&amp;gt;தண்டாவுக்குப் போகாதவர்கள் என்று பெயர் உண்டு. ஆனால் இப்போது இங்கே கொலை,&amp;lt;br&amp;gt;கொள்ளை, வழிப்பறி என எல்லா ஆண்-பெண் குற்றங்களும் நிகழ்ந்து விட்டன.&amp;lt;br&amp;gt;பேட்டை ரவுடிகள் கொலையுண்டு பிண ஊர்வலம் கண்ணம்மாப் பேட்டை திசை&amp;lt;br&amp;gt;வரும்போது கடைகளை எல்லாம் தற்காப்புக்காக அடைத்துவிட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தி. நகர் சோஷியல் கிளப் என்பது அன்று அதன் காண்டீனுக்குப் பிரசித்தமானது.&amp;lt;br&amp;gt;அங்கு தஞ்சாவூர் டிகிரி காபி கிடைக்கும். நான்கணா, அதாவது இருபத்தைந்து&amp;lt;br&amp;gt;காசுக்குக் கள்ளிச் சொட்டுப் போல ஒரு தம்ளர் காபி. ஆயிரத்துத்&amp;lt;br&amp;gt;தொள்ளாயிரத்து எழுபதுகளில் பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற சிற்றுண்டிச்&amp;lt;br&amp;gt;சாலை அதன் தக்காளிச் சட்னிக்காகப் பெரும் புகழ் பெற்றது. நாகர்கோயில்&amp;lt;br&amp;gt;சுந்தர ராமசாமிவரை அதன் மணம் வீசியிருந்தது. இப்போது சரவண பவன் எல்லாப்&amp;lt;br&amp;gt;பேட்டைகளின் எல்லாச் சிற்றுண்டிச் சாலைகளையும் பின் தள்ளிவிட்டது. ஒரே&amp;lt;br&amp;gt;மாதிரி சாம்பார், ஒரே மாதிரி சாம்பார், ஒரே மாதிரி குளோரின் மணமுள்ள குடி&amp;lt;br&amp;gt;தண்ணீர். குறை கூற முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஜார்ஜ் டவுன்வாசிகளுக்கு&amp;lt;br&amp;gt;எப்படியோ அவாகள் பேட்டை மீது தனிப் பாசம் அவர்களையுமறியாமல்&amp;lt;br&amp;gt;வளர்ந்துவிடுகிறது. கபாலீசுவர் பார்த்தசாரதிப் பெருமாள் கருணையினால்&amp;lt;br&amp;gt;போலும். சந்தர்ப்பம் கிடைத்தால் தி. நகர்வாசிகள் வீடு மாறி&amp;lt;br&amp;gt;விடுகிறார்கள். நங்கநல்லூர், குரோம்பேட்டை, தாம்பரம்,&amp;lt;br&amp;gt;பெருங்களத்தூர்வரைகூடச் சென்று ஒரு சின்ன வீடு கட்டிக்கொண்டு&amp;lt;br&amp;gt;போய்விடுகிறார்கள். அவர்கள் தி.நகருக்காக ஏங்கி நான் கண்டதில்லை. அந்த&amp;lt;br&amp;gt;விதத்தில் தி. நகர் வைராக்கியம் விளையும் பூமி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:நாடுகள்,_நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>