<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%21_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._%28%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9%29</id>
		<title>சீனா! சில நாள் குறிப்புகள்... (பகுதி - 9) - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%21_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._%28%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9%29"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9)&amp;action=history"/>
		<updated>2026-06-22T07:41:27Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9)&amp;diff=8808&amp;oldid=prev</id>
		<title>11:08, 17 நவம்பர் 2011 இல் Coralsri.blogspot.com</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9)&amp;diff=8808&amp;oldid=prev"/>
				<updated>2011-11-17T11:08:04Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9)&amp;amp;diff=8808&amp;amp;oldid=8805&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9)&amp;diff=8805&amp;oldid=prev</id>
		<title>Coralsri.blogspot.com: புதிய பக்கம்: '''நா.கண்ணன்&amp;nbsp;'''   '''9. சீனா - தமிழ் உறவு வளர வேண்டும்!'''    60 களில் தமி…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..._(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_-_9)&amp;diff=8805&amp;oldid=prev"/>
				<updated>2011-11-17T10:53:31Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;நா.கண்ணன் &amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;9. சீனா - தமிழ் உறவு வளர வேண்டும்!&amp;#039;&amp;#039;&amp;#039;    60 களில் தமி…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''நா.கண்ணன்&amp;amp;nbsp;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''9. சீனா - தமிழ் உறவு வளர வேண்டும்!'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
60 களில் தமிழகத்தில் வாழ்ந்தவனாக இருந்தால் சீனா பற்றிய நல்ல அபிப்பிராயம் இருந்திருக்க வாய்ப்பில்லை! ஏனெனில் வெள்ளந்தியாக நேரு சீனா போய் பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்து வாங்கிவிட்டு வந்த ஜோரில் சீனா இந்தியாவைத் தாக்கி லடாக்கைப் பிடுங்கிவிட்டது! பின் திபெத்தின் புத்த குரு பீடத்தில் போய் கொலைகள் செய்து திபெத்தைக் கைப்பற்றி தலாய்லாமாவை இந்தியப் பெருநாட்டில் ’தஞ்ச அரசு’ வைக்க வைத்துவிட்டது! செஞ்சீன இராணுவம் உண்மையான சீன அரசு ஒன்றை தாய்வானுக்கு விரட்டிவிட்டது! மா சே துங் ’கலாச்சார புரட்சி’ என்ற பேரில் தம் மக்களையே கொன்று குவித்து...&amp;amp;nbsp;ம்ம்...உலகம் முழுமைக்கும் அந்தக் காலக்கட்டம் சரியில்லாத ஒன்று!!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இப்போதுள்ள சீனா “அந்தச் சீனா”வா? என்றால், ‘இல்லை’ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. சீனா போன்ற ஒரு பெரும் நாடு திருந்தி உலகப்பொதுவழியில் நடக்க வேண்டுமெனில் இவையெல்லாம் நடந்தாக வேண்டும் போலுள்ளது. மா சே துங் வருவதற்கு முன் ஜப்பானிடமிருந்து செமத்தியாக அடி வாங்கியிருந்தது சீனா. அக்காலத்திய சீன அரசர்கள் பலமற்றவர்களாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்தனர். கார்ல் மார்க்சின் மார்க்சீயம் புரட்சியாளர்கள் எல்லோர் வாயிலும் மந்திரமாக ஒலித்த நேரம். சீனாவைத் திருத்த கம்யூனிச அருவாளை எடுத்தார் மா சே துங். அதுவரை இருந்த சமூக நிலைப்பாட்டைப் புரட்டிப் போட்டார். அடிமட்டத்தில் இருந்த சூத்திரனை, அதாவது தொழிலாளியை, விவசாயியை மேலே தூக்கி வைத்தார், அடுத்து சின்னப் பண்ணைகள், பெரிய பண்ணைகள். மா சே துங்கின் தத்துவத்தில் சதுர் வர்ணம் உண்டு. :-) (சாட்சி அவர்கள் கொடி) [In the original description of the flag by Zeng, the larger star symbolizes the Communist Party of China, and the four smaller stars that surround the big star symbolize the four social classes (the working class, the peasantry, the urban petty bourgeoisie and the national bourgeoisie) of Chinese people mentioned in Mao's &amp;quot;On the People's Democratic Dictatorship&amp;quot; - Wikipedia]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றும் அவர் வணங்கப்படுவதற்குக் காரணம், அவர் கல்வியைப் பொதுமைப்படுத்தினார். இந்தியாவில் நிகழ்ந்த அதே கதை அங்கும். அதற்கு முன் கற்றோர் (பிராமணர்) வசமே கல்வி இருந்தது. விவசாயி சீன மொழி பேசுவானே தவிர எழுத முடியாது! ஏனெனில் அவனுக்கு அக்கல்வி வழங்கப்படவில்லை. எனவே எல்லோருக்கும் கல்வியைப் பொதுமைப்படுத்தினார். அடுத்து கற்றோர் வசமிருந்த குழப்பமான பண்டைய சீன எழுத்துமுறையை சீர்மை செய்து எளிமைப்படுத்தினார். பூர்ஷ்வாக்கள் அனைவருக்கும் ‘ஆப்பு’ வைத்தார். ‘கடைசி அரசன்’ எனும் ஆங்கிலப் படத்தில், செஞ்சீனப் புரட்சி வந்து அரசனை சமூகப் பட்டறையில் போட்டு அடிமட்ட வாழ்வு என்றால் என்னவென்று படிக்க வைக்கும் முன் அவனுக்கு ‘குண்டி கழுவக்கூடத்தெரியாது’. ஆம்! அதற்குக் கூட ஆட்கள் இருந்திருக்கிறார்கள்!. அப்படி இருந்த ஒரு சீர்கெட்ட சமுதாயத்தை அடித்துத் திருத்தினார் மா சே துங். பேராசிரியர் சுட்டியபடி, இன்னொரு பெரிய கம்யூனிச வெற்றி, பெண் விடுதலை என்பது! அடிமட்டத்தில் கிடந்த பெண்ணிற்கு சம உரிமையை கம்யூனிசச் சீனா வழங்கியது. இன்று சீனப் பெண் விடுதலை பெற்ற பெண்ணாக இருக்கிறாள். கல்வியில் விடுதலை, பொருளாதாரத்தில் விடுதலை, தன் உடல் சார்ந்த தளைகளிலிருந்து விடுதலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த கடைசிப் பாயிண்டு கொஞ்சம் சுவாரசியமானது. பெண்ணியம் என்பதில் ஆண் மொழி, பெண் மொழி என்று பேசுகிறார்கள். தமிழ் மொழியே ஆணாதிக்க சார்புடைய மொழி. அது போல் மரபு என்பதும் ஒருவர் அறியாமல் சில ஆளுமைகளை முன்வைக்கக்கூடியது. அதில் உடை என்பது முக்கியம். நன்றாக இழுத்துப் போர்த்தி சேலை அணிவதும், குர்கா போட்டுக்கொள்வதும் ஏறக்குறைய ஒன்று. பண்டைய தமிழகம் அப்படி இல்லை. உடல் ரீதியான உள அழுத்தம் அதிகம் இருந்திருக்கவில்லை. பின் செமத்திய, ஆபிரஹாமிய கலாச்சாரத் தாக்கத்தில் இந்தியா உடல் சார்ந்த சமூக அழுதத்தை முன்வைக்கிறது. சீனா, கொரியா, ஜப்பான் இந்த நாடுகளில் பெண்கள் உடல் மீதான சமூகக் கவனம் ஒரு காலக்கட்டத்தில் கட்டுடைக்கப்படுகிறது. உதாரணமாக, இன்று கூட தமிழகத்தில் பேண்ட் போட்டுக்கொண்டாலோ, மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டாலோ ஒரு பெண் மீதான ‘தமிழ்’ அடையாளம் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. ‘இவளென்ன தமிழ்ப் பெண்ணா? வெட்கம் கெட்டவள்!’ எனும் முத்திரை குத்தப்படுகிறது (சல்வார் உடை வந்து தமிழகத்தின் உடல் சார்ந்த இறுக்கத்தை தளர்த்தி இருக்கிறது). இது எப்படி எனக்கு உதித்தது என்றால், மதுரைப் பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் எங்கள் வீட்டிற்கு அருகில் எலிசபெத் பானு எனும் பிரெஞ்ச்சுப் பெண். மிக நல்ல பெண். எனக்கு கல்யாணம் ஆகியிருந்த தருணம். எனக்கொரு உலகப் பார்வையை அளித்ததில் எலிசபெத்திற்கும் பங்குண்டு. ஒருமுறை மிகக்கோபமாக இருந்தாள். ஏனென்று கேட்டோம். ‘பின்ன என்ன? நான் சேலை கட்டிக்கொண்டு போவதைப் பார்த்து எல்லாத் தமிழ் ஆண்களும் - இப்பத்தான் நீ நல்ல பெண்!’ என்கிறார்கள். நான் ஸ்கர்டு போட்டுக்கொண்டால் கெட்ட பெண்ணா? கற்பு என்பது உளம் சார்ந்ததா? உடை சார்ந்ததா?’ என்று கேட்டாள். எங்களுக்குப் பதில் தெரியவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''''மலைப்பயணத்தில் கண்ட தெருவோர மலர்!'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;செஞ்சீன இராணுவம் என்பது ஒரு எதிர்வினை. அது சீனாவை உயர்த்தியும் இருக்கிறது, அதே நேரத்தில் சீனா பற்றிய உலக அபிப்பிராயத்தை (இமேஜ்) கெடுத்தும் வைத்திருக்கிறது. சீனாவின் பிரச்சனைகள் எல்லாம் போய்விடவில்லை. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் சீனா மாறி இருக்கிறது. பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட்டு கம்யூனிசத்தின் குரங்குப்பிடி தளர்த்தப்பட்டிருக்கிறது. இப்போதைய சீனப் பொருளாதாரத்தை, State playing the Capitalism என்கிறார்கள். அதாவது கம்யூனிஸ்டு பார்ட்டி முதலாளி விளையாட்டை விளையாடுகிறது என்பது பொருள். இதில் ரஷ்யா கோட்டை விட்டுவிட்டது. அதில் சீனர்கள் கெட்டி. கம்யூனிசத்தையும் விடவில்லை, கேபிடலிஸத்தையும் விடவில்லை!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாற்றம் நிகழ்ந்ததற்குக் காரணம் சீனர்கள் தொன்று தொட்டு பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து அந்தந்த நாட்டின் உண்மையான பிரஜைகளாக இருந்து வளர்ந்து இருக்கிறார்கள் என்பது! நல்ல உதாரணம் மலேசியா, சிங்கப்பூர். அங்குள்ள சீனர்கள் சீன மரபை விடவில்லை, சீனக் கல்வியை விடவில்லை. ஆனால் நல்ல மலேசியர்களாக, நல்ல சிங்கப்பூர்காரராக வாழ்ந்து காட்டியுள்ளனர். அவர்களது பொருளாதார வளம் வாழ்ந்த நாட்டிற்கே போனது. ஆனால் பர்மா, மலேசியாவில் வாழ்ந்த தமிழர்கள் இந்தியாவைத்தான் ‘தாய் நாடு’ என்றனர். இது பொது சமூக நீரோட்டத்தில் தமிழர்களை அந்நியப்படுத்திவிட்டதாக வரலாறு சுட்டுகிறது. இப்படிக் குடியரசிற்கு மாறிய மலேசிய, சிங்கப்பூர், ஹாங்காங், தைவான் சீன அரசுகள், செஞ்சீன அரசிற்கு மெல்ல, மெல்ல பாடம் நடத்தின. எறும்பூரக்கல்லும் தேயும்தானே! சீனா மாறி இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீனா மீது எனக்கு பாசம் தோன்றியது எப்போது என்றால், கொரியாவில், ஆசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் மையத்தை நான் கையாளத்தொடங்கிய போதுதான். ஒருமுறை மூன்று ஆய்வாளர்களை அழைத்திருந்தோம். ஒருவர் செஞ்சீனப் பேரரசு, ஒருவர் ஆங்கில ஹாங்காங் (அப்போதைய), இன்னொருவர் தைவான் (இக்கூட்டமைப்பு தாய்வானை தனி அரசாகக் காணாமல் ஆசிய பொருளாதாரமாகவே காண்கிறது). இம்மூவரும், நானும் மாலை உணவு அருந்துகிறோம். செஞ்சீனருக்கு தைவான் மீது கோபம். நீங்கள் சீனர்கள்தானே? எப்படி உங்களால் ஜப்பானுடன் எத்தயக்கமுமின்றி உறவு கொள்ள முடிகிறது (ஜப்பான் செய்த கொடுமைகள் பற்றி முன்பு எழுதியுள்ளேன்)? என்பது அவரது கோபத்திற்குக் காரணம். தைவான்காரர், நாங்கள்தான் உண்மையான சீனக் குடியரசு. நீங்கள் இருப்பது ஒரு சர்வாதிகார அமைப்பின் கீழே! என்பது அவர்வாதம். ஹாங்க்ச் சீனர், செஞ்சீன அரசு ஏன் இன்னும் ‘கட்டுபட்டியாக, காலமுரணாக’ இருக்கிறது என்று புகார் செய்தார். இந்தச் சண்டைக்கு நடுவர் நான். வேடிக்கையாக இருந்தது. அரசியல் ரீதியாக வேறுபட்ட மூன்று சீன அரசுகளின் பிரதிநிதிகள் சண்டை போடுவதை ஒரு இந்தியன் சமாதானப்படுத்துவது!!&lt;br /&gt;
&lt;br /&gt;
சீன மொழி தொன்மையானது. சீனமொழி சீனாவிற்கு மட்டும் அரசு மொழியன்று. ஒரு காலக்கட்டத்தில் சீனா, வியட்நாம், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் அனைத்திலும் சீனமொழியே அரசு மொழியாக இருந்தது. இன்று ஜப்பான் மட்டுமே இன்னும் சீன மொழி பாவிப்பை தக்க வைத்துள்ளது. சீனா ஒரு பெரிய கலாச்சாரம். அதன் ஆளுமையிலிருந்து எந்த ஆசியநாடும் தப்பவில்லை, இந்தியாவையும் சேர்த்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
குடியரசுகள் மேன்மைக்கு வந்துவிட்ட இக்காலக்கட்டத்தில் அந்தந்த நாட்டுக்குடிகள் என்ன நினைக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஒரு சாதாரணச் சீனக்குடிமகன் இந்தியாவை வெறுக்கிறான. பதில் அழுத்தமான ‘இல்லை’ . இந்தியாவை மதிக்கிறானா? ‘ஆம்’ என்பதே உண்மை! பின் ஏன் பழைய பகைமை? இந்தியச் சீன உறவு படு வேகமாக வளர்ந்து வருவதே உண்மை. நான் சமீபத்தில் ஷாங்காய் போயிருந்த போது ஒரு விமானம் முழுக்க இந்தியக்குடிகள் சுற்றுலாவிற்கு சீனா வந்து சேர்ந்ததைக் கண்டேன். ஷங்காய் அருகே உள்ள மருத்துவக் கல்லூரியில் பாதிக்கு மேல் இந்திய மாணவிகள். ஏன்? பின்ன இந்தியாவில் ஒரு சீட்டுக்கு 30 லட்சம் லஞ்சம் கேட்டால், அதற்கு சீனா போய் படிப்பதே தேவலை என்று குழந்தைகளை பெற்றோர் சீனாவிற்கு அனுப்பிவிடுகின்றனர். இதுவொரு புதிய strategy! சீனாவில் ஆங்கிலக்கல்வியில் மருத்துவப் பயிற்சி! இந்தியா மாணவர்களை அனுப்புகிறது! இந்தியா விழித்துக்கொள்ள வேண்டும். இப்படி லஞ்சமும், திறமைக்கு மதிப்பில்லாத ஒரு கல்வி முறை இந்தியாவில் இருந்தால் பிற நாடுகளே பயன்பெறுகின்றன. பொதுவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளே இந்திய மூளைத்தரவு செய்து கொண்டிருந்தன. இப்போது ஜெர்மனி வந்து இந்திய மாணவர்களைக் கவரத்தொடங்கியுள்ளது! ஆக லஞ்ச ஊழலால், இறையாண்மைத்திறமின்மையால் மூளைப்பெயர்வு வேகமாக நடக்கிறது. நாம் இன்னும் ஆரியர், திராவிடர், இட ஒதுக்கீடு, சீட்டுக்கு இவ்வளவு காசு என்று அல்பமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். வரும் சந்ததியினர் இந்தியாவை மதிக்காமல் வெளியேறினால் குமுறாதீர்கள். மா சே துங் போல நம்மை மாற்ற ஒரு ஆள் இல்லாமல் போய்விட்டாரே என்று வருந்துங்கள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஜனவரியில் சென்னை வந்த போது நிறையச் சீன வியாபாரிகள் என்னுடன் கூட வந்தனர். அவர்களை வாழ்த்துக்கூறி வரவேற்றேன். ஏனெனில் அவர்களுக்கு பெரிய தத்துவப் பொக்கிஷத்தை முன்பு வழங்கியது இந்தியா! இன்று சீனர்கள் திறமையானவர்களாக இருக்கிறார்கள் எனில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று அன்று நம்மவர் அவர்களுடன் உறவு கொண்டதினால்தான். அன்றைய உறவை நாம் மீட்டெடுக்கலாம். காலம் தாழ்ந்துவிடவில்லை. ஏன் சொல்கிறேன் எனில், சீனக்கொரியப் பெண்கள் என்னிடம் வட, தென்கொரியப் பிரிவு பற்றிப் புலம்பியபோது கேட்டேன், ‘நீங்கள் உண்மையிலேயே இரண்டு கொரியாவும் சேர வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா?’ ‘ஆம்’ என்று பதில் வந்தது. நான் சொன்னேன், உங்கள் நம்பிக்கையின் மீது முதலில் நம்பிக்கை வையுங்கள். பேரரசுகள் அடக்கி வைக்கலாம். ஆனால் மக்கள் மனதில் மாற்றம் நிகழ்ந்துவிட்டால் ஒரு காலக்கட்டத்தில் அரசுகள் மக்கள் விருப்பதிற்கு அடிபணியத்தான் வேண்டும்! நல்ல உதாரணம் கிழக்கு, மேற்கு ஜெர்மனி இணைந்தது!&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்லினக்கூட்டினால் மலர்ந்திருக்கும் சீனர்கள் பிறப்பிலேயே திறமையானவர்களாக இருக்கிறார்கள். யான்பியன் பல்கலைக் கழகத்தில் நான் போன ஒரு நாளில் பெரிய மாற்றத்தை உருவாக்கினேன். அன்று மாலை எல்லோரும் ஆங்கிலத்தில் பேசினர். கடைசி வரை என்னுடன் இருந்த என் துணைப்பெண்கள் மிக நன்றாகவே ஆங்கிலம் தொடர்ந்து பேசினர். மலைப்பயணத்தில் இரண்டு சீனப்பெண்கள் என்னிடம் சரளமான ஜெர்மன் பேசி அசத்தினர். அதனால்தான் சொல்கிறேன் இந்தியாவும், சீனாவும் கைகோர்க்க வேண்டுமென்று. இந்திய இளைஞர்கள் மேல் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது. அவர்கள் திறமைசாலிகள். எனவேதான் திறமை, திறமையுடன் கை கோர்க்க வேண்டும் என்கிறேன். நாம் இது நிகழுமென்று நம்புவோம் :-)&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 10:53, 17 நவம்பர் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எழுத்தாளர்கள்]][[Category:நா.கண்ணன்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	</feed>