<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88</id>
		<title>சிவத்தம்பி என்கிற ஆளுமை - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&amp;action=history"/>
		<updated>2026-07-11T13:14:07Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&amp;diff=7361&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;சிவத்தம்பி என்கிற ஆளுமை&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&amp;diff=7361&amp;oldid=prev"/>
				<updated>2011-07-10T08:18:46Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&quot; title=&quot;சிவத்தம்பி என்கிற ஆளுமை&quot;&gt;சிவத்தம்பி என்கிற ஆளுமை&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;08:18, 10 ஜூலை 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&amp;diff=7360&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: &amp;nbsp;அ. மார்க்ஸ்  ----    Saturday, 09 July 2011 07:02 Hits: 51 .  &lt;br&gt;  பேராசிரியர் கார்த்திகேசு…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&amp;diff=7360&amp;oldid=prev"/>
				<updated>2011-07-10T08:17:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  அ. மார்க்ஸ்  ----    Saturday, 09 July 2011 07:02 Hits: 51 .  &amp;lt;br&amp;gt;  பேராசிரியர் கார்த்திகேசு…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;அ. மார்க்ஸ்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Saturday, 09 July 2011 07:02 Hits: 51 .&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மரணம் உலகெங்கிலுமுள்ள&amp;amp;nbsp;தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தை&amp;lt;br&amp;gt;ஏற்படுத்தியுள்ளது.ஈழத்திலும்&amp;amp;nbsp;இலங்கையிலும் அவர் எந்த அளவு அறியப்பட்டிருந்தாரோ அதற்குச் சற்றும்&amp;amp;nbsp;குறையாத அளவிற்குத் தமிழகத்திலும் அறியப்பட்டிருந்தார்,&amp;amp;nbsp;மதிக்கப்பட்டிருந்தார்.தமிழகத்தின் உயராய்வு நிறுவனங்களோடும்&amp;amp;nbsp;பல்கலைக்கழகங்களோடும் இறுதிவரை அவருக்குத் தொடர்பு இருந்து&amp;amp;nbsp;வந்தது.வருகைப் பேராசிரியராக அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார்.அவரது&amp;amp;nbsp;உரைகளையும் ஆலோசனைகளையும் கேட்கும் வாய்ப்பு மாணவர்களுக்கும்&amp;amp;nbsp;ஆய்வாளர்களுக்கும் தொடர்ந்து இருந்து வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் எழுத வந்த&amp;lt;br&amp;gt;என்னையொத்த அன்றைய இளைஞர்களுக்கு ஈழத்து அறிஞர்கள் மிகப் பெரிய&amp;lt;br&amp;gt;ஆதர்சங்களாகவும் உந்து சக்திகளாகவும் விளங்கினர்.குறிப்பாகக் கலாநிதிகள்&amp;lt;br&amp;gt;கைலாசபதி,சிவத்தம்பி ஆகிய இருவரையும் சொல்ல வேண்டும்.அன்று பெரிய அளவில்&amp;lt;br&amp;gt;இடதுசாரிச் சிந்தனையுடையவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஜோர்ஜ் தாம்சனின்&amp;lt;br&amp;gt;நேரடி மாணவர்களாகிய இவ்விருவரும் மார்க்சியர்களால் மட்டுமன்றிப்&amp;lt;br&amp;gt;பல்கலைக்கழக மட்டங்களிலும் பெரிதும் மதிக்கப்பட்டனர்.முன்னதாக இங்கிருந்த&amp;lt;br&amp;gt;மர்க்சியத் திறனாய்வாளர்கள் மத்தியில் ஆய்வு சார்ந்த கறார்த்தன்மை&amp;lt;br&amp;gt;கூடியிருக்கவில்லை.பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்கள் மத்தியில்&amp;lt;br&amp;gt;மார்க்சியம் உள்ளிட்ட நவீன சிந்தனைகளின் பயன்கள்&amp;lt;br&amp;gt;உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.இந்நிலையில் இலக்கியங்களின் சமூக வேர்களைத்&amp;lt;br&amp;gt;துலாவி அடையாளங் காட்டக் கூடிய வல்லமை வாய்ந்த கருவியாகிய மார்க்சிய&amp;lt;br&amp;gt;அணுகல் முறையைக் கைக்கொண்டிருந்த இவர்கள் இறுக்கமான ஆய்வு நெறிமுறைகளுடன்&amp;lt;br&amp;gt;பண்டைய இலக்கியங்களை மட்டுமன்றி நவீன இலக்கியங்களையும் அணுகி&amp;lt;br&amp;gt;வெளிக்கொணர்ந்த பல்வேறு முடிவுகளும் பாய்ச்சிய வெளிச்சங்களும்&amp;lt;br&amp;gt;எல்லோரையும் பிரமிக்க வைத்தன.இவர்களோடு அன்று தமிழகத்திலிருந்த மார்க்சிய&amp;lt;br&amp;gt;ஆய்வாளர் பேராசிரியர் நா.வானமாமலை அவர்களையும் சொல்ல வேண்டும்.இம்மூவரின்&amp;lt;br&amp;gt;பங்களிப்புகளுடனும் இவர்களால் உந்தப்பட்டவர்களின் கொடைகளுடனும் ஒரு&amp;lt;br&amp;gt;பத்தாண்டுகாலம் மார்க்சிய ஆய்வுமுறை தமிழ் ஆய்வுலகில் கோலோச்சியிருந்தது&amp;lt;br&amp;gt;என்றால் மிகையாகாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;வெகுவிரைவில் பேராசிரியர்கள் கைலாசபதியும் வானமாமலையும் அகால&amp;lt;br&amp;gt;மரணமுற்றதைத் தொடர்ந்து சிவத்தம்பி அவர்களின் முக்கியத்துவம் ஈடு&amp;lt;br&amp;gt;இணையற்றதாயிற்று.சிவத்தம்பி அவர்களுடன் நெருங்கிப் பழகும் பெருவாய்ப்புப்&amp;lt;br&amp;gt;பெற்றவர்களில் நானும் ஒருவன்.எண்பதுகளின் மத்தியில் தஞ்சைத் தமிழ்ப்&amp;lt;br&amp;gt;பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக ஆறு மாத காலம் அவர் வந்து&amp;lt;br&amp;gt;தங்கியிருந்தபோது கிட்டத்தட்ட ஒரு குருகுல வாசம்போல அவருடன் இருந்து&amp;lt;br&amp;gt;பலவற்றையும் கற்றுக் கொள்ளும் பேறு எனக்கும் பொ.வேல்சாமிக்கும்&amp;lt;br&amp;gt;கிட்டியது.&amp;quot;பாரதி மறைவு முதல் மகாகவி வரை'எனும் முழு நூலையும் அவருடன்&amp;lt;br&amp;gt;இணைந்து எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.அனேகமாக அப்படியான ஒரு&amp;lt;br&amp;gt;இணை ஆசிரிய வாய்ப்புக் கிட்டியது எனக்கு மட்டும்தான் என்றே நினைக்கிறேன்.&amp;lt;br&amp;gt;பேராசிரியரிடம் நாங்கள் மார்க்சியத்தையும் ஆய்வு நுணுக்கங்களையும்&amp;lt;br&amp;gt;நூலெழுதும் திறனையும் மட்டுமல்லாது பல நல்ல மனிதப் பண்புகளையும்&amp;lt;br&amp;gt;கற்றுக்கொண்டோம்.எந்நேரமும் எந்த ஐயத்தையும் யார் வந்து கேட்டாலும்&amp;lt;br&amp;gt;எத்தனை வேலையிருந்த போதிலும் அவற்றை ஒத்தி வைத்துவிட்டு அவர்களுடன்&amp;lt;br&amp;gt;பேசித் தீர்த்து வைப்பார்.இலங்கையிலிருந்து ஒரு பேராசிரியர்,மார்க்சியச்&amp;lt;br&amp;gt;சிந்தனையாளர் வந்துள்ளார் என அறிந்து கிராமப் புறங்களிலிருந்து கட்சி&amp;lt;br&amp;gt;ஊழியர்களெல்லாம் கூட அவரைச் சந்திக்க வருவார்கள்.எல்லோரிடமும் அலுத்துக்&amp;lt;br&amp;gt;கொள்ளாமல் பேசுவார்.எல்லோரிடமிருந்தும் அறிந்து கொள்ள அவருக்கும்&amp;lt;br&amp;gt;செய்திகள் இருக்கும்.முகந்தெரியாத ஒருவர் வந்து தன் நூலுக்கு முன்னுரை&amp;lt;br&amp;gt;கேட்டால் முகங்கோணாமல் எழுதித் தருவார்.நூலின் தரம் பற்றிக்&amp;lt;br&amp;gt;கவலைப்படமாட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;கரவெட்டியில் பிறந்து வல்வெட்டித்துறையில் மணம்முடித்து வாழ்ந்து&amp;lt;br&amp;gt;கொழும்பில் மடிய நேர்ந்த பேராசிரியர் மரபுகளோடு இறுக்கமான தொடர்பைப்&amp;lt;br&amp;gt;பேணியவர்.சைவ மரபு சார்ந்த குடும்பமொன்றில் பிறந்தவராகிய அவர் எந்த&amp;lt;br&amp;gt;அளவுக்கு மார்க்சியராக இருந்தாரோ அந்த அளவிற்கு இந்த மரபை&amp;lt;br&amp;gt;நேசிப்பவராகவும் இருந்தார்.தஞ்சையிலிருந்து புறப்படு முன்னர் இங்குள்ள&amp;lt;br&amp;gt;சைவத் திருத்தலங்களுக்கெல்லாம் சென்றுவர விரும்பினார்.அழைத்துச்&amp;lt;br&amp;gt;சென்றோம்.அது வெறுமனே பழங் கோயில்களை ஆர்வம் கருதிப் பார்த்து வரும்&amp;lt;br&amp;gt;பயணமாக மட்டும் அமையவில்லை.மரபின் மீதிருந்த இந்தப் பற்றும் பண்டைய&amp;lt;br&amp;gt;இலக்கியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமையும் மரபு வழிபட்ட&amp;lt;br&amp;gt;தமிழறிஞர்கள் மத்தியிலும் அவருக்குச் செல்வாக்கையும் மரியாதையையும்&amp;lt;br&amp;gt;ஈட்டித் தந்தது.ஒரே நேரத்தில் மார்க்சியர்கள் மத்தியிலும் மரபிறுக்கம்&amp;lt;br&amp;gt;மிகுந்தவர்கள் மத்தியிலும் திருஉருவாக ஏற்றுக் கொள்ளக் கூடியவராக அவர்&amp;lt;br&amp;gt;இருந்தது அவரை அறிந்தவர்களுக்கு வியப்பான செய்தியல்ல.&amp;lt;br&amp;gt;தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்&amp;lt;br&amp;gt;வீழ்ச்சியை ஒட்டி அறியப்பட்ட மார்க்சியத்திற்கு ஏற்பட்ட சரிவு&amp;lt;br&amp;gt;எல்லோரையும் போல அவரையும் நிலைகுலைய வைத்தது.இந்தப் பிரச்சினையின் ஆழ்&amp;lt;br&amp;gt;அகலங்களுக்குள் அவர் செல்லவில்லையாயினும் சோஷலிச&amp;lt;br&amp;gt;யதார்த்தவாதம்,பிரதிபலிப்புக் கொள்கை,அடித்தளமேற்கட்டுமான உருவகம் ஆகியவை&amp;lt;br&amp;gt;குறித்த வரட்டுத்தனமான அணுகல்முறைகளை மார்க்சியத்தின் பெயரால் தூக்கிப்&amp;lt;br&amp;gt;பிடித்து வந்தது குறித்துச் சுய விமர்சனம் செய்துகொள்ள&amp;lt;br&amp;gt;வேண்டியதாயிற்று.பக்தி இயக்கத்தின் எழுச்சியையும் சமணபௌத்த மதங்களின்&amp;lt;br&amp;gt;வீழ்ச்சியையும் வணிக வர்க்கத்தை வீழ்த்தி நிலவுடைமை வர்க்கம் வெற்றிபெற்ற&amp;lt;br&amp;gt;வரலாறாகக் கட்டமைத்து வந்த கோட்பாட்டையும் கைவிடுவதாக அவர் அறிவிக்க&amp;lt;br&amp;gt;வேண்டியநிலையும் ஏற்பட்டது.இப்படியாகக் கைலாசபதியும் சிவத்தம்பியும்&amp;lt;br&amp;gt;அடித்தள மேற்கட்டுமான அணுகல்முறையினூடாகக் கட்டமைத்த இந்தக் கோட்பாடும்&amp;lt;br&amp;gt;இன்று ஆய்வுலகில் கைவிடப்பட்ட ஒன்றாயிற்று.இவர்கள் கட்டமைத்த அளவிற்கு&amp;lt;br&amp;gt;சங்கம் மற்றும் சங்கமருவிய காலங்களில் வலுவான வணிகவர்க்கமொன்று&amp;lt;br&amp;gt;உருப்பெற்றிருக்கவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தொண்ணூறுகளுக்குப்பின் இங்கே அமைப்பியல்,பின் அமைப்பியல்,பின் நவீனநிலைச்&amp;lt;br&amp;gt;சிந்தனைகள்,போஸ்ட் மார்க்சியம் முதலான சிந்தனைகள் மேலுக்கு வந்து&amp;lt;br&amp;gt;ஆய்வுலகை நிரப்பியபோது சிவத்தம்பி அவர்கள் திகைத்து&amp;lt;br&amp;gt;நிற்கவேண்டியதாயிற்று.மார்க்சியர்கள் சிலரது தூண்டுதலின் விளைவாக இந்தப்&amp;lt;br&amp;gt;புதிய சிந்தனைகளுக்குப் பதிலிறுக்கும் முகமாக அவர் அளித்த சில&amp;lt;br&amp;gt;பேட்டிகளும் எழுதிய சில கட்டுரைகளும் அவரது மரியாதையை அதிகரிப்பதற்குப்&amp;lt;br&amp;gt;பதிலாகக் குறைக்கவே செய்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அவர் பெரும் உளமற்றும் உடல்&amp;lt;br&amp;gt;நலிவுகளுக்கு ஆளாகியிருந்ததை நாம் அறிவோம்.எனினும் சக்கர நாற்காலியின்&amp;lt;br&amp;gt;துணையின்றி வாழ இயலாதபோதும் கூட அவர் தனது கல்விப் பயணங்களை நிறுத்திக்&amp;lt;br&amp;gt;கொண்டதில்லை.பிறர் உதவியின்றிப் படிக்க இயலாத நிலையிலும் கூட அவர்&amp;lt;br&amp;gt;கருத்தரங்கங்களில் உரையாற்றுவதை நிறுத்தவில்லை.ஆனாலும் அவரது இந்த உடல்&amp;lt;br&amp;gt;நலிவுகள் அவரது சிந்தனை வெளிப்பாடுகளையும் பாதிக்கவே செய்தன.கடந்த&amp;lt;br&amp;gt;பத்தாண்டுகளில் அவரிடமிருந்து காத்திரமான வெளிப்பாடுகள் ஏதுமில்லை.&amp;lt;br&amp;gt;ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவாளராக அவர் இருந்தபோதிலும்&amp;lt;br&amp;gt;என்னாளும் அரசைப் பகைத்துக்கொள்ளும் அளவிற்கு நிலைப்பாடுகளை&amp;lt;br&amp;gt;எடுத்ததில்லை.எல்லாவற்றிற்கும் மேலாக சென்ற ஆண்டு கருணாநிதி தன்&amp;lt;br&amp;gt;முகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்திய செம்மொழி மாநாட்டில் அவர்&amp;lt;br&amp;gt;பங்கு பெற்றது பலரது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் காரணமாகியது.&amp;lt;br&amp;gt;சிவத்தம்பி என்கிற அறிஞர்,சிந்தனையாளர்,பேராசிரியர் வாழ நேர்ந்த காலமும்&amp;lt;br&amp;gt;களமும் மிகுந்த சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த ஒன்று.ஆனால் இதுபோன்ற&amp;lt;br&amp;gt;அவலச் சூழல்களில் வாழ நேர்ந்த கொடுமை உலகில் எண்ணற்ற பல அறிவு&amp;lt;br&amp;gt;ஜீவிகளுக்கும் வாய்த்திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இத்தகைய நிலையை அவர்களெல்லாம் எப்படி எதிர்கொண்டார்கள்?சிவத்தம்பி எப்படி&amp;lt;br&amp;gt;எதிர்கொண்டார்?சிவத்தம்பி குறித்த மதிப்பீடுகளைச் செய்யும்போது இந்தக்&amp;lt;br&amp;gt;கேள்வி நம்முன் எழுவது தவிர்க்க இயலாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;திருமணமான என் மகளை வாழ்த்த சக்கர நாற்காலியில் வந்திருந்து மாடிமீது ஏற&amp;lt;br&amp;gt;இயலாது மணமக்களைக் கீழே இறக்கி வாழ்த்திச் சென்றதையும் சென்ற ஆண்டு நான்&amp;lt;br&amp;gt;கொழும்பு வந்திருந்தபோது என்னை அருகழைத்துத் தொட்டுத் தடவி விசாரித்து&amp;lt;br&amp;gt;வாழ்த்தியதையும் நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 08:17, 10 ஜூலை 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தமிழ்_சாதனையாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>