<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88</id>
		<title>சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;action=history"/>
		<updated>2026-07-26T23:59:37Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=2318&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=2318&amp;oldid=prev"/>
				<updated>2010-07-09T11:47:39Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&quot; title=&quot;சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை&quot;&gt;சங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;11:47, 9 ஜூலை 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=2317&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: '''ஆ.திருஆரூரன்'''  ----    பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற …</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=2317&amp;oldid=prev"/>
				<updated>2010-07-09T11:47:20Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;ஆ.திருஆரூரன்&amp;#039;&amp;#039;&amp;#039;  ----    பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற …&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''ஆ.திருஆரூரன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டைத் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்ற காலங்களில் பெருநில வேந்தர்களும், குறுநில மன்னர்களும் மண்ணாசை காரணமாகவோ, பெண்ணாசை காரணமாகவோ தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதுபோல வேதாயாதிகள் (உடன் பிறந்தோர்) ஒருவரை ஒருவர் நாடாளும் உரிமைக்காகப் போராடிய வரலாறுகளும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கு எடுத்துக் காட்டாக புறநானூற்றுப் பாடல்களுள் ஒன்றை இங்கு காண்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணன் தம்பிகளான சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் சோழ நாட்டின் இருவேறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தபோதிலும் அவ்வப்போது தங்களுக்குள் தொடர்ந்து போர்புரிந்து வந்துள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த நெடுங்கிள்ளி, அண்ணன் நலங்கிள்ளியுடன் நடந்த போரில் தோற்று உறையூரில் வந்து தங்குகிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதை அறிந்த நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிடுகிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
சோழன் குடியைச் சேர்ந்த இருவரும் தம்முள் பகைகொண்டு மாறிமாறிப் போர் செய்துகொண்டு இருப்பதைக் கண்டு நெஞ்சம் பதைத்த கோவூர்கிழார் என்னும் புலவர், இருவரையும் &amp;quot;சந்து செய்யும்&amp;quot; (சமாதானம்) பொருட்டுப் பாடியுள்ள ஒரு பாடல் இங்கு நினைவு கூரத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நலங்கிள்ளி! உன்னால் எதிர்க்கப்படுபவன் பனம்பூ மாலையைச் சூடிய சேரனும் அல்லன். &lt;br /&gt;
&lt;br /&gt;
வேப்பம்பூ மாலையைச் சூடிய பாண்டியனும் அல்லன். &lt;br /&gt;
&lt;br /&gt;
உன்னுடைய மாலையும் ஆத்திப்பூமாலை. உன்னோடு போர் செய்பவன் அணிந்துள்ள மாலையும் ஆத்திப்பூ மாலையே! &lt;br /&gt;
&lt;br /&gt;
இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ உமது சோழர் குடியே! &lt;br /&gt;
&lt;br /&gt;
உங்கள் இருவருக்கும் நடைபெறும் போரில் இருவரும் வெற்றி பெறுவது என்பது இயற்கையில் நடக்கக்கூடிய செயலன்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால், உம்முடைய செயல் சோழர் குடிக்குத் தகுதியுடைய செயல் அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்கள் இருவரும் உங்களுக்குள் நிகழ்த்தும் இப்போரைக் கண்ணுறும் உம்மையொத்த அரசர்களுக்கு (சேர, பாண்டியர்க்கு) உடல் குலுங்கும்படியான (உடல் பூரிக்கும்படியான) நகைப்பை உண்டாக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, உங்களுக்குள் நிகழும் இப்போரை உடனடியாக நிறுத்துங்கள்'' &lt;br /&gt;
&lt;br /&gt;
என்று அறிவுரை கூறும் வகையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பாடல் இதுதான்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்&amp;lt;br&amp;gt;கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்&amp;lt;br&amp;gt;நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே, நின்னொடு&amp;lt;br&amp;gt;பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே&amp;lt;br&amp;gt;ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே&amp;lt;br&amp;gt;இருவீர் வேறல் இயற்கையும் அன்றே - அதனால்&amp;lt;br&amp;gt;குடிப்பொருளன்று நும் செய்தி கொடித்தேர்&amp;lt;br&amp;gt;நும்மோரன்ன வேந்தர்க்கு&amp;lt;br&amp;gt;மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே''. (புறம் - 45)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சங்க_இலக்கியம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 11:47, 9 ஜூலை 2010 (UTC)&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>