<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81</id>
		<title>ஒலிகளாலான உலகு - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81&amp;action=history"/>
		<updated>2026-07-25T05:36:08Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81&amp;diff=4915&amp;oldid=prev</id>
		<title>Coralsri.blogspot.com: புதிய பக்கம்: &amp;nbsp;  '''ஒலிகளாலான உலகு'''  &lt;br&gt;  பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்த…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81&amp;diff=4915&amp;oldid=prev"/>
				<updated>2011-02-23T09:42:29Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:    &amp;#039;&amp;#039;&amp;#039;ஒலிகளாலான உலகு&amp;#039;&amp;#039;&amp;#039;  &amp;lt;br&amp;gt;  பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்த…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஒலிகளாலான உலகு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டு சின்னச் சின்ன பதில்கள்&amp;amp;nbsp;அளிக்கக்கூடிய அளவில் மட்டும் தான் செம்மொழிகளுள் ஒன்றான சீனமொழி&amp;amp;nbsp;எனக்குத் தெரியும். காதுகளைத் தீட்டிக் கொண்டு பொது இடங்களில்&amp;amp;nbsp;கேட்பதனாலும் அறிந்த நண்பர்கள் பேசும் போது வாய் பார்த்திருப்பதனாலும்&amp;amp;nbsp;தான் அது கூடச் சாத்தியமானது என்று சொல்ல வேண்டும். சீனக் கவிதைகளின்&amp;amp;nbsp;ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசித்த எனக்கு மூலத்தில் சொல்லப் பட்டிருப்பதை&amp;amp;nbsp;வாசிக்கவும் அறியவும் இயல்பாகவே மிகுந்த ஆவல் எழுந்தது. ஆனால், பேச்சு&amp;amp;nbsp;மொழியை அதுவும் ஆரம்ப கட்டம் வரை மட்டுமே பயின்றிருந்தேன். அதன் மூலம்&amp;lt;br&amp;gt;உச்சரிப்புகள் முறையாக எப்படியெப்படி இருத்தல் வேண்டும் என்று மட்டுமே&amp;amp;nbsp;அறிய முடிந்தது. இன்னும் ஐந்து பேரைக் கூட்டிக் கொண்டு வா, அடுத்து&amp;amp;nbsp;intermiate levelலில் சேர்த்துக் கொள்வேன் என்றார் அந்த ஆசிரியர். அது&amp;amp;nbsp;என்னால் முடியாமல் போனதால் அத்தோடு என்னுடைய பேச்சு மொழி வகுப்பு நின்று&amp;amp;nbsp;போனது. சீனமொழி சீனர்களுக்கே கற்பதற்கு சிரமமாக இருந்து வருகிறது.&amp;amp;nbsp;சீனாவில் பேசுவதற்கும் சிங்கப்பூரில் பேசுவதற்கும் மொழியில் மிகப் பெரிய&amp;amp;nbsp;வேறுபாடும் நிலவுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீனமொழியானது பல்வேறு ஒலிகளால் ஆனது. அம்மொழியில் சொற்களே இல்லை. சீனச்&amp;amp;nbsp;சித்திர எழுத்தின் ஒவ்வொரு கீற்றும் ஒரு ஒலியைக் குறிக்கும். ஒலிகளின்&amp;amp;nbsp;இணைப்பே வெவ்வேறு பொருள்களைக் கொடுக்கும். ச்ஸ¤ என்ற ஒலி இலக்கம் 4 கைக்&amp;amp;nbsp;குறிக்கும் அதே ஒலி நுட்ப வேறுபாட்டுடன் ஒலிக்கும் போது சாவைக்&amp;amp;nbsp;குறிக்கிறது. ப்பா எனும் ஒலி இலக்கம் 8 யும் அதே ஒலி நுண்ணிய&amp;amp;nbsp;வேறுபாட்டுடன் ஒலிக்கும் போது செல்வம்/ ஐஸ்வரியம் ஆகியவற்றைக்&amp;amp;nbsp;குறிப்பதாகும். அதனால் தான், சீ£னர்களுக்கு விருப்பமான இலக்கமாக 8டும்&amp;amp;nbsp;அவர்கள் வெறுக்கும் இலக்கமாக 4கும் விளங்குகிறது. தமிழில் குறில் நெடில்&amp;amp;nbsp;என்று இரு தொனிகள் இருப்பது போல சீனத்தில் ஒவ்வொரு ஒலிக்கும் குறைந்தது 4&amp;lt;br&amp;gt;தொனிகள் உண்டு. மா என்பது அம்மா, குதிரை, தூசு, கைகால் மரத்துப் போதல்&amp;amp;nbsp;ஆகிய நான்கு பொருள்களைக் கொடுக்கும் வகையில் நான்கு தொனிகளில் ஒலிக்கப்படுகின்றது. இலக்கணம் என்று பெரிதாக இம்மொழியில் கிடையாது சிற்சில எளிய&amp;amp;nbsp;விதிமுறைகளைத் தவிர. இறந்த கால நிகழ்கால வேறுபாடுகளைக் காட்டும்&amp;amp;nbsp;சொற்களும் இல்லை. ஒரே விதமான வினைச் சொற்கள் மட்டும் தான் என்ற நிலையில்&amp;lt;br&amp;gt;‘ஏற்கனவே’ என்பது போன்ற சொல்லைச் சேர்த்தே இறந்த காலத்தை அவர்கள்&amp;amp;nbsp;குறிக்கிறார்கள். இதனால் தான், பெரும்பான்மையினமான சீனர்கள் ஆங்கிலத்தில்&amp;amp;nbsp;I came, I went, I ate போன்ற இறந்த காலங்களை I come already, I go&amp;amp;nbsp;already, I eat already என்று பேசிப்பேசி அது மற்ற இனத்தினரிடையேயும்&amp;amp;nbsp;பரவியிருப்பதை நீங்கள் சிங்கப்பூர் வந்தால் கவனிக்கலாம். தமது மொழியில்&amp;amp;nbsp;உள்ளதைப் போலவே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடு நிலவுதல்&amp;amp;nbsp;வேண்டும் என்று சீனர்கள் நினைப்பதும் இதற்கொரு முக்கிய காரணம். அதே போல&amp;lt;br&amp;gt;ஒருமை பன்மைக்கும் சீனமொழியில் விகுதிகள் எதுவுமே கிடையாது. நீ என்றால்&amp;amp;nbsp;தமிழில் நீ என்றே பொருள். நீ மன் என்றால் பன்மை. வோ என்றால் நான். வோ மன்&amp;amp;nbsp;என்றால் நாங்கள். பழந்தமிழில் ஒருவரை மரியாதையுடன் நின் என்று குறிப்பதை&amp;amp;nbsp;நாம் அறிவோம் அல்லவா? சீனத்திலும் நின் என்றே formal லாகச் சொல்வார்கள்.&amp;amp;nbsp;சீனத்திற்கும் தமிழுக்கும் சின்னச் சின்ன ஒற்றுமைகள் நிலவுவது போல நான்&amp;lt;br&amp;gt;உணர்ந்ததுண்டு. இது தனியானதொரு ஆராய்ச்சிக்குரியது. விநோதங்கள்&amp;lt;br&amp;gt;பலவற்றைக் கொண்டிருக்கும் சீன மொழி குறித்து இது போல நிறைய சொல்லிக்&amp;amp;nbsp;கொண்டே போகலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாசிக்கவென்று ஏராளமான நூல்களை&amp;lt;br&amp;gt;நூலகத்திலிருந்தும், சீன நண்பர்களிடமிருந்தும் இரவல் பெற்று உதிரியாகச்&amp;amp;nbsp;சேகரித்து உருவான நூல் இது. சீன நண்பர்களில் பலரும், “ஆங்கில&amp;amp;nbsp;மொழிபெயர்ப்பில் சீனக் கவிதையா?”, என்று விநோதமாகத் தான் என்னைப்&amp;amp;nbsp;பார்த்தார்கள். “நாங்களே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் புரிஞ்சிப்போம்,&amp;amp;nbsp;இதுல சைனீஸ் பொயட்ரிய இங்லீஷ்லயெல்லாம் படிக்கிறதாவது? அத உங்க மொழியில&amp;lt;br&amp;gt;கொண்டு போறதுன்னா,.. அதெல்லாம் சரிப்படுமா? ஆமா, எதுக்கு உனக்கு இந்த&amp;amp;nbsp;வேலையெல்லாம்?”, என்றெல்லாம் விதவிதமாகக் கேட்டனர். எனக்குப் பயனுள்ள&amp;amp;nbsp;வகையில் நுட்பமாக வேறெதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. சீனக்கவிதைகளின் மேல் எனக்கிருந்த ஈர்ப்பு மட்டும் குறையவில்லை. 326&amp;amp;nbsp;பக்கங்களைக் கொண்ட ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’ எனும் சீனக்கவிதைகளின்&amp;amp;nbsp;தொகுப்பானது வரலாறு, சமூகம், இலக்கியம், கலாசாரம் போன்ற ஒன்றுக்கு&amp;amp;nbsp;மேற்பட்ட கோணங்களில் அணுகக் கூடிய ஆதிகாலந்தொட்டு தற்கால நவீன கவிதைகள்&amp;amp;nbsp;வரையிலான கவிதைகளைக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மொழிபெயர்ப்பானது எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தன் கவிதையில்&amp;amp;nbsp;மறைந்த ஹீப்ரு கவிஞர் யெஹ¤தா அமிசாய் அழகாகவும் எளிமையாகவும் சொல்வார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''மொழிபெயர்ப்பின் போது&amp;lt;br&amp;gt;ஒரு மனிதனிடமிருந்து&amp;lt;br&amp;gt;அவன் சொற்களை&amp;lt;br&amp;gt;மௌனமாக நாம்&amp;lt;br&amp;gt;மாற்றுகிறோம்&amp;lt;br&amp;gt;இன்னொரு மனிதனுக்கு.&amp;lt;br&amp;gt;ஒரு நாவிலிருந்து&amp;lt;br&amp;gt;வேறிரு உதடுகளுக்கு.&amp;lt;br&amp;gt;நம்மை அறியாமல்&amp;lt;br&amp;gt;அப்போது&amp;lt;br&amp;gt;நடந்து கொள்கிறோம்&amp;lt;br&amp;gt;ஒரு தந்தையைப் போல்,&amp;lt;br&amp;gt;இறந்து போன தனது தந்தையின்&amp;lt;br&amp;gt;உருவ ஒற்றுமைகளைத்&amp;lt;br&amp;gt;தன் மகனுக்குக் கொடுத்து விட்டு&amp;lt;br&amp;gt;இருவரைப் போலவும்'''&amp;lt;br&amp;gt;'''தோற்றமளிக்காத&amp;lt;br&amp;gt;வேறொரு தந்தையைப் போல்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாகவே, பழமை கெடாமல் கொடுக்க நினைத்து உணர்வின் தீவிரத்தைச் சொல்லத்&amp;amp;nbsp;தவறும் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் நவீன வடிவத்தில் கொடுக்கப்படும்&amp;amp;nbsp;கவிஞனின் உணர்வுகளே தற்காலத்தில் அதிகமும் விரும்பப் படுகின்றன்றன.&amp;amp;nbsp;மொழிபெயர்க்கப்பட்ட பிறகும் சீனக்கவிதைகள் கவித்துவக் கூறுகளுடன் பல&amp;amp;nbsp;வேளைகளில் அமைந்து விடுகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த சீனமொழி&amp;amp;nbsp;இன்றில்லை. முன்பெப்போதும் விட சமீப காலங்கள் அம்மொழி அதிக &amp;amp;nbsp;சீர்திருத்தங்களைக் கண்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீனமொழி வல்லுனர்களில் ஓரளவுக்கு ஆங்கிலப் புலமையுடையோரைக் காண்பதரிது.&amp;amp;nbsp;அதிருஷ்டவசமாக, கல்வியமைச்சில் பணியாற்றவென்று சீனாவிலிருந்து வந்திருந்த&amp;amp;nbsp;சீனமொழி ஆசிரியை ஒருவர் அடுத்த தொகைவீட்டில் அப்போது வசிப்பது நண்பர்ஒருவர் மூலம் தெரிய வந்தது. அவரை நானாக வலியச் சென்று பேசி&amp;amp;nbsp;நட்பேற்படுத்திக் கொண்டேன். மொழிபெயர்த்தவற்றைச் சரி பார்க்கவென்று போன&amp;lt;br&amp;gt;போது ஆங்கில மொழியாக்கத்தை சீன மொழி மூலத்துடன் ஒப்பிட்டு ஆங்காங்கே&amp;amp;nbsp;ஓரிரு சொற்களைத் திருத்தியும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆங்கில மொழியாக்கம்&amp;amp;nbsp;என்றும் இனங்கண்டு சொன்னார். நவீன கவிதைகள் சீனாவுக்கு வெளியில் வாழும்&amp;amp;nbsp;சீனர்களாலும் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் பட்டுள்ளன.&amp;lt;br&amp;gt;ஒரே காலகட்டத்தில், ஒரே பழங்கவிதை வகையில் எண்ணற்ற கவிஞர்கள்&amp;amp;nbsp;இருந்திருக்கிறார்கள் என்பதால் தேர்ந்தெடுப்பதும் தொகுப்பதும்&amp;amp;nbsp;மொழிபெயர்ப்பதும் மிகமிகக் கடினம் என்பதை சீக்கிரமே அறிந்தேன்.&amp;amp;nbsp;நூற்றுக்கணக்கில் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு வகைக்கும்&amp;amp;nbsp;ஆயிரமாயிரமாக இருந்தால் எப்படித் தான் தேர்ந்தெடுப்பது? நூலுக்கென்று&amp;amp;nbsp;சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. கடலிலிருந்து&amp;amp;nbsp;ஒரு சிறுதுளி நீர் போல ஒரு சிறுஅறிமுகமாக மட்டுமே கொடுக்க முடியும்&amp;amp;nbsp;என்பதும் புரிந்தது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தனி நூலாகக் கூடிய&amp;amp;nbsp;அளவில் சீனக்கவிதையுலகு வான்வெளியென விரிந்து பரந்து இருக்கிறது.&amp;amp;nbsp;எங்குதொடங்கி எங்கு முடிக்கவென்று பல கட்டங்களில் நான் குழம்பியதுண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய எழுத்தாளரான விக்ரம் சேத் உள்ளிட்ட பலர் சீனக் கவிதைகளை&amp;lt;br&amp;gt;ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒரே சீனக்கவிதை பத்து பேரால்&amp;amp;nbsp;ஆங்கிலத்துக்கு பத்து விதமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறான இரண்டு&amp;amp;nbsp;கவிதைகள் தமிழுக்கு அப்படியே வரும் போது வாசிப்பவர்களுக்கும் சீன&amp;amp;nbsp;மொழியின் வளமை புரியும் என்று கருதி அதற்கென்றே சில பக்கங்களை&amp;amp;nbsp;ஒதுக்கியிருந்தேன். அந்தப் பகுதிகளை ரசித்த பலரும் என்னுடன் தம்&amp;amp;nbsp;கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நூலுக்காக உழைத்த&amp;amp;nbsp;காலங்களில் கற்றவை நிறைய. இன்னும் கற்பதற்கு நிறைய இருக்கிறதென்றும்&amp;amp;nbsp;அறிந்தேன். தமிழில் மொழிபெயர்ப்புத் துறையானது பலஅடுக்குகளில் நிறைய&amp;lt;br&amp;gt;அலசவும் ஆராயவும் வேண்டிய துறையாகவே தொடர்ந்து இருந்து வருவதால்&amp;amp;nbsp;மொழிபெயர்ப்பு அறிவைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியதாகவே&amp;amp;nbsp;இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்புகள் குறித்து சிலவற்றை&amp;lt;br&amp;gt;மட்டும் மிகச் சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன். சிங்கப்பூரில் தமிழும்&amp;lt;br&amp;gt;ஓர் அதிகாரத்துவ மொழி என்பதால் தென்கிழக்காசியத் தொகுப்புகளில்&amp;lt;br&amp;gt;தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் ஆங்கில, சீன, மலாய் மொழிகளிலிருந்து&amp;amp;nbsp;தமிழுக்கும் என்று மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. சில மேலை&amp;amp;nbsp;நாடகங்கள் மொழியாக்கங்களாகவும் தழுவல்களாகவும் உள்ளூரில் தமிழ் மொழியில்&amp;amp;nbsp;நூலாக்கம் கண்டுள்ளன. செ.பா.பன்னீர்செல்வம், பி.கிருஷ்ணன் போன்ற சிலர்&amp;amp;nbsp;மொழியாக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கனகலதா, இளங்கோவன் போன்றவர்களின்&amp;lt;br&amp;gt;சில கவிதைகளும் வேறு சிலரது சிறுகதைகளும் ஆங்கிலத்திற்குச் சென்றுள்ளன.&amp;lt;br&amp;gt;அது மட்டுமின்றி, தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’&amp;lt;br&amp;gt;இயக்கத்தின் சிறுநூல்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மரகதம்’ என்ற&amp;lt;br&amp;gt;தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்ட சில சீனக்கதைகள், voices என்ற இதழ்&amp;amp;nbsp;மற்றும் முன்பே நின்றுவிட்ட ‘சிங்கா’ என்ற இதழ் ஆகியவையும்&amp;lt;br&amp;gt;மொழிபெயர்ப்புக்கான தளங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்லினப்&amp;lt;br&amp;gt;பண்பாட்டைக் கொண்டுள்ள சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் துறையானது மேலும்&amp;amp;nbsp;தீவிரமாகவும் முனைப்பாகவும் வளர வேண்டிய நிலையில் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
படைப்பிலக்கியம் செய்ய முடியாத பல பண்பாட்டுப்பரிவர்த்தனைகளைச் செய்ய&amp;amp;nbsp;வல்லது மொழிபெயர்ப்பிலக்கியம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால், பிற&amp;amp;nbsp;இலக்கியங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் அதே வேளையில் தமிழிலக்கியத்தை&amp;amp;nbsp;திசையெட்டும் கொண்டு சேர்த்தல் முன்பெப்போதும் விட சுருங்கி வரும் இன்றைய&amp;amp;nbsp;உலகில் மிக இன்றியமையாததாகிறது என்பதே என்னுடைய கருத்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறுதியாக, மாண்புமிகு நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் அவர்கள், இலக்கியப்&amp;lt;br&amp;gt;புரவலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள், நூலைப்&amp;lt;br&amp;gt;பதிப்பித்த உயிர்மை பாதிப்பாசிரியர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்&amp;lt;br&amp;gt;எஸ்.ராமகிருஷ்ணன், திசையெட்டும் இதழாசிரியர் குறிஞ்சிவேலன், டாக்டர்.ஏ.நடராஜன், விருது தேர்வுக் குழுவினர், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும்&amp;amp;nbsp;அவையோர் அனைவருக்கும் இங்கே விருது பெற்ற நண்பர்கள் ஒவ்வொருவர்&amp;amp;nbsp;சார்பிலும் உள்ளார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
10-08-09 அன்று சென்னையில் திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருது&amp;amp;nbsp;வழங்கும் விழாவில் ஆற்றிய உரை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஜெயந்தி சங்கர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தேதி - பிப்ரவரி - 20 - 2011.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:பகுப்பு_-_சிங்கப்பூர்.]]&lt;/div&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	</feed>