<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஏகபாதமும், மாலைமாற்றும் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-06-30T06:14:05Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7768&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;ஏகபாதமும், மாலைமாற்றும்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7768&amp;oldid=prev"/>
				<updated>2011-08-06T19:49:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;ஏகபாதமும், மாலைமாற்றும்&quot;&gt;ஏகபாதமும், மாலைமாற்றும்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;19:49, 6 ஆகஸ்ட் 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7767&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: &amp;nbsp;இடைமருதூர் கி.மஞ்சுளா  ----    - அறம்&lt;br&gt;- பொருள்&lt;br&gt;- இன்பம்&lt;br&gt;- வீடு   ஆ…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7767&amp;oldid=prev"/>
				<updated>2011-08-06T19:49:23Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  இடைமருதூர் கி.மஞ்சுளா  ----    - அறம்&amp;lt;br&amp;gt;- பொருள்&amp;lt;br&amp;gt;- இன்பம்&amp;lt;br&amp;gt;- வீடு   ஆ…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;இடைமருதூர் கி.மஞ்சுளா&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
- அறம்&amp;lt;br&amp;gt;- பொருள்&amp;lt;br&amp;gt;- இன்பம்&amp;lt;br&amp;gt;- வீடு &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகிய நான்மறைக் கருத்துகளே சைவத் திருமுறைகளாக வெளிப்பட்டுள்ளன என்பதை, &amp;quot;நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்'' (1-75-11) என்று திருஞானசம்பந்தப் பெருமானே அருளிச் செய்துள்ள திருப்பாட்டால் அறிந்துகொள்ள முடிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படியெனில், &amp;quot;தாம் திருவாய் மலர்ந்து அருளிய சொற்கள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்கே அன்றி வேறில்லை&amp;quot; என்பதை, &amp;quot;திருஇலம்பையங்கோட்டூர்&amp;quot; பதிகத்தில் &amp;quot;எனதுரை தனதுரையாக'' என்று பதிகம் முழுவதும் கூறியுள்ளதில் இருந்து தெளிவாகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்குகளில் நின்று தான் கூறவேண்டுவனவற்றை எல்லாம் ஞானக்குழந்தையின் திருவாக்கின் மூலம் கூறியருளியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
எனவேதான் சிவஞான சுவாமிகள், இதை &amp;quot;தேசிகன் வாக்கு&amp;quot; என்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும், இவை தமிழ்மொழிக்கு இனிமை பயப்பன என்பதும், இத்திருமுறைகளின் துணைகொண்டு தமிழர்கள் பெறற்கரிய பெரும் பேற்றினை எய்துவர் என்பதும் தெளிவாகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவாரம், திருவாசகம் ஆகியவை நம்முடைய மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) போக்கும் அருமருந்தாகவும், மந்திரமாகவும் திகழ்கின்றன என்பதை, &lt;br /&gt;
&lt;br /&gt;
- ஞானசம்பந்தர் (3-92-1)&amp;lt;br&amp;gt;- அப்பரடிகள் (6-65-5)&amp;lt;br&amp;gt;- சுந்தரமூர்த்தி சுவாமிகள் (7-57-10)&amp;lt;br&amp;gt;- மணிவாசகப் பெருந்தகை (619) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகிய நாலவர் பெருமக்களும் அருளியுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
மந்திரம் என்ற சொல்லுக்கு - (மன்-நினைப்பது; திரம்-காப்பது) நினைப்பவரைக் காப்பது என்று பொருள். &lt;br /&gt;
&lt;br /&gt;
மருந்து என்பது உடல் மற்றும் உயிர் நோயையும் போக்கவல்லது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவாகமங்களின் சாரமே சைவத் திருமுறைகள் என்பது முடிந்த முடிவு. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்த தேவாரத்தில் உள்ள திருக்கடைக்காப்பில் அரிய பல செய்திகள் அடங்கியுள்ளன என்பதை முன்பே ஒருமுறை கண்டோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் அருளிச்செய்துள்ள பதிகங்கள் தனிச்சிறப்பு பெற்றதற்குக் காரணம், &lt;br /&gt;
&lt;br /&gt;
- ஏகபாதம்&amp;lt;br&amp;gt;- திருஎழுகூற்றிருக்கை&amp;lt;br&amp;gt;- மாலைமாற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகிய புதிய யாப்பு வகைகளை இவரே முதன் முதலாகக் கையாண்டுள்ளதுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
திருஏகபாதம்:- ஏகபாதம் என்பது, ஏகம் - ஒன்று; பாதம் - அடி. ஏகபாதம் - ஓர் அடி. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஓரடியே அடுத்தடுத்த அடிகளில் பொருள் வேறுபடுமாறு நான்கு முறை மடித்து மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப்பதால் &amp;quot;ஏகபாதம்&amp;quot; எனப் பெயர் பெற்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பன்னிரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் உள்ள தனிச்சிறப்பு, சீர்காழித் திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவதுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் உள்ள ஐந்தாவது பதிகத்தை மட்டும் காண்போம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;சுடர்மணி இமம் ஆளி கைத்தோணி புரத்து அவன்; &amp;lt;br&amp;gt; சுடர்மணி மாளி கைத்தோள் ணிபுரத்தவன்; &amp;lt;br&amp;gt; சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்; &amp;lt;br&amp;gt; சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்'' &lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் அடி:- சுடுகின்ற இடமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக்கொண்டு, முப்புரங்களையும் எரித்துத் தும்பை மாலையை அணிந்தவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுடர்மணி - சூடாமணி; இமம் - ஈமம்; ஆளி - ஆள்பவன்; கைத்தோணி - தும்பை மாலையை அணிந்தவன்; புரத்தவன் - முப்புரம் எரித்தவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது அடி:- என் உச்சியில் சூடாமணியாய்த் திகழ்பவன்; என்மேல் அன்பு என்னும் மயக்கத்தை உடையவன்; துதிக்கையை உடைய யானையை உருவழித்தவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுடர்மணி - சூடாமணி; மாளி - மாலி - மயக்கம்; கைத்தோள் - தோலை உரித்துத் துதிக்கையை உடைய யானையை; ணிபுரத்தவன் - வடிவழித்தவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாம் அடி:- சூரியனது களங்கத்தைப் போக்கிய கடலைப்போன்ற பிறவியைப் போக்கும் பொருட்டுத் தெப்பமாக உதவும் பிரணவ மந்திரத்தை, ஆன்மாக்களின் செவியில் போதித்தவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுடர் - சூரியன்; மணி - கழுவி; மாளி - கெட்டவன்; கைத்தோணி - தெப்பம்; புரந்தவன் - உபதேசிப்பவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
நான்காம் அடி:- இவனே நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஆவான். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுடர் - விளக்கம்; மணி - நவரத்தினம்; மாளி(கை) - மாளிகை சூழ்ந்த; தோணிபுரம் - திருத்தோணிபுரம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு, ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மாலைமாற்று:- இது மாலையின் நுனியை மாற்றிப் பிடிப்பதுபோல அமைந்திருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது, ஒரு பாடலின் முதல் வரியைத் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படித்துக்கொண்டே வந்து, பின்பு அதையே இறுதியிலிருந்து தொடக்கம் வரை மாற்றிப் படித்துவந்தால், அந்த அமைப்பு இரண்டாவது வரியில் இருப்பதைக் காணலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவும் சித்திரக்கவி வகையைச் சேர்ந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு ஒரு மாலையின் நுனியும், இறுதியும் மாறி, மாறி அமைந்திருப்பதால், இது &amp;quot;மாலைமாற்றுப் பதிகம்&amp;quot; எனப் பெயர் பெற்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பதிகத்தில் பதினொரு பாடல்கள் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;யாமாமா நீ யாமாமா, யாழீ காமா காணாகா &amp;lt;br&amp;gt; காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா &amp;lt;br&amp;gt; யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மா, யாவீ, காமா, காண் நாகா &amp;lt;br&amp;gt; காணா காமா, காழீயா, மா, மாயா நீ மா மாயா'' (பா.1) &lt;br /&gt;
&lt;br /&gt;
யாம் ஆமா? - சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள் கடவுள் என்பது பொருந்துமா? நீ ஆம் ஆம்! - நீ ஒருவனே கடவுள் என்பதே பொருந்தும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவே பொருந்தும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மா யாழீ - பெரிய வீணையை வாசிப்பவனே, காமா - அனைவராலும் விரும்பப்படுபவனே, காண் நாகா - யாரும் காணத்தக்கவாறு பாம்புகளை அணிந்திருப்பவனே, காணா காமா - யாரும் காண முடியாதபடி மன்மதனை அழித்தவனே, காழீயா - சீர்காழி எனும் திருத்தலத்தில் உறைபவனே, மா மாயா - திருமகளின் கணவனாகிய திருமாலாகவும் வருபவனே, நீ மா மாயா - கொடிய மாயை என்னும் மயக்கத்திலிருந்து உயிர்களாகிய எங்களை நீ காத்து அருள்வாயாக! &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அடுத்தடுத்த பாடல் இதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாடலின் மூலம், கடவுளும் உயிரும் ஒன்று என்று கூறும் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துக் கூறியுள்ள ஞானசம்பந்தர், உயிர்கள் என்றும் கடவுளின் முழுமுதல் தன்மையைப் பெறமுடியாது என்னும் சைவசித்தாந்தப் பேருண்மையையும் தெளிவுபடுத்தியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலிலிருந்து முடிவு வரையிலும், முடிவிலிருந்து முதல் வரையிலும் எப்படி மாற்றிப் பார்த்தாலும், ஒரே தன்மையில் இருக்கும் இந்த மாலைமாற்றுப் பதிகத்தில், இறைவனும் (சிவனும்) உயிர்களும் (சீவனும்) பல்வேறு தன்மையினர் என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியுள்ளதைப் படித்துத் (முழுவதையும்) தெளிவது சாலச்சிறந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 19:49, 6 ஆகஸ்ட் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>