<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>இலக்கிய உத்திகள் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-08-10T21:51:02Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=730&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;இலக்கிய உத்திகள்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=730&amp;oldid=prev"/>
				<updated>2010-01-08T14:53:42Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&quot; title=&quot;இலக்கிய உத்திகள்&quot;&gt;இலக்கிய உத்திகள்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;14:53, 8 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=729&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: கட்டுரையாளர்: இடைமருதூர் கி.மஞ்சுளா  நன்றி:- தினமணி - தொகுத்து…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=729&amp;oldid=prev"/>
				<updated>2010-01-08T14:53:12Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: கட்டுரையாளர்: இடைமருதூர் கி.மஞ்சுளா  நன்றி:- தினமணி - தொகுத்து…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;கட்டுரையாளர்: இடைமருதூர் கி.மஞ்சுளா&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி - தொகுத்து அனுப்பியவர்: டாக்டர். கண்ணன் நடராசன் &lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, &lt;br /&gt;
&lt;br /&gt;
*உள்ளுறை உவமை&lt;br /&gt;
*இறைச்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை இரண்டையும் &amp;quot;குறிப்புப் பொருள் உத்தி&amp;quot; எனவும் அழைப்பர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது - உள்ளுறை உத்தியாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை &amp;quot;உள்ளுறை உவமை&amp;quot; என்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளுறை உவமைக்கு நாற்கவிராச நம்பி தரும் இலக்கணம் பின்வருமாறு:-&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆராய்ந்தறியும் பகுதியினையுடைத்தாய்ப் புள்ளொடும் &amp;lt;br&amp;gt;விலங்கொடும் பிறவொடும் தோன்றும் உள்ளுறை உவமை&amp;quot; (ஒழிபியல் - 28)&lt;br /&gt;
&lt;br /&gt;
அவற்றுள், &amp;quot;உள்ளுறையுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடு புலப்படும்&amp;quot; (ஒழி - 29),&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இதற்கு எடுத்துக்காட்டுப் பாடலாக அமைவது,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இழை விளையாடும் இளமுலை சாயற்கு இடைந்தமஞ்ஞை&amp;lt;br&amp;gt;கழை விளையாடும் கடிப்புனம் காத்தும் கலையகலாது&amp;lt;br&amp;gt;உழை விளையாடும் உயர் சிலம்பா! இன்னும் உன் பொருட்டால்&amp;lt;br&amp;gt;மழை விளையாடும் மதிற்றஞ்சை வாணன் மலையத்திலே&amp;lt;br&amp;gt;&amp;quot;மானைப் பிரியாது கழை விளையாடும்&amp;quot;.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பதனால், நீயும் தலைவியைப் பிரியாது விளையாட வேண்டும் என்ற பொருள் உள்ளுறை உவமம், &amp;lt;br&amp;gt;விலங்கொடு தோன்றிப் புலப்படுமாறு அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்&amp;lt;br&amp;gt;தன்வயின் வருதலும் வகுத்த பண்பே&amp;quot;. (பொரு - 48)&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று கூறியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்புப் பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென&amp;lt;br&amp;gt;கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே&amp;quot;. (பொரு - 47)&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று கூறியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
*உடனுறை உள்ளுறை&lt;br /&gt;
*சுட்டு உள்ளுறை&lt;br /&gt;
*சிறப்பு உள்ளுறை&lt;br /&gt;
*உவம உள்ளுறை&lt;br /&gt;
*நகை உள்ளுறை&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், &lt;br /&gt;
&lt;br /&gt;
உவம உள்ளுறையைப் பற்றியும் (தொல்.அகத்.49,51) &lt;br /&gt;
&lt;br /&gt;
சிறப்பு உள்ளுறையைப் பற்றியும் (தொல்.பொரு - 50) &lt;br /&gt;
&lt;br /&gt;
சில கருத்துக் கூறி விளக்கியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வகை உள்ளுறைகளில் உவம உள்ளுறை நீங்கலாக, மற்றவை சங்க இலக்கியங்களுக்கு உரை வகுத்த உரையாசிரியர்களால் பாடல் உரையில் பொதுவாக விளக்கிக் காட்டப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நற்றிணைக்கு உரைவகுத்த பின்னத்தூர் நாராயணசாமியும், உவம உள்ளுறை என்பதையும் &amp;lt;br&amp;gt;(இறைச்சி என்ற பெயரில்) வேறு உள்ளுறையையும் மட்டும் கூறிச் சென்றுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில், நற்றிணையில் ஐவகை உள்ளுறைகளும் பொருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உவம உள்ளுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு:-&lt;br /&gt;
&lt;br /&gt;
தலைவனைத் தோழி வரைவு கடாவுகிறாள் (களவில் தோழி - தலைவனிடம் தலைவியை மணந்து &amp;lt;br&amp;gt;கொள்ளும்படி வேண்டுதல்). &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கொல்லவல்ல ஆண்புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பனின் சொற்களை மெய்யெனத் தேறி, யாம் நடுஇரவிலும்&amp;amp;nbsp;உறங்கப்பெறாது, எமது நலத்தை இழந்துவிட்டோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பழி தூற்றும் ஊர், அலர் கூறும் பெண்களின் அம்பல் மொழியை மெய்யென நம்பி, மேன்மையிலாத் தீய சொற்களைப் பொதித்த ஒலியை உடையதாகத் தான் இழந்தது என்ன?&amp;quot; (நற்றி - 36) என்பது பாடலின் கருத்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கொல்லவல்ல ஆண் புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே, பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பன்&amp;quot; என்பது குறிப்புப் பொருளை உள்ளடக்கி உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இஃது உவம வகையால், கொடுமை நிறைந்த தலைவியின் தமர் (உறவினர்) தலைவியை நாடிவரும் இடத்திலே தலைவி புலம்புமாறு தலைவனுக்குத் துன்பம் இழைப்பர் - என்று குறிப்புப் பொருளைத் தோற்றுவித்தலின் உள்ளுறை உவமம் ஆயிற்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வகையில் மேலும் சில இடங்களைச் சுட்டலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இறைச்சி:-'''&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைச்சி என்ற கோட்பாட்டினைத் தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வடமொழியில் உள்ள &amp;quot;தொனி&amp;quot; - கோட்பாடுடன் இதனை இணைத்துப் பார்க்கும் போக்கு &amp;lt;br&amp;gt;தமிழறிஞர்களிடம் காணப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதை உணர்த்த, வோறொரு பொருள் &amp;lt;br&amp;gt;வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இறைச்சி தானே உரிப்புறத் ததுவே&amp;quot;. (தொல்.1175)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களின் காதல் ஒழுக்கங்கள் உரி; பிற உயிர்களின் காதல் செயல்கள் உரிப்புறத்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, இறைச்சி என்பது உரிப்புறத்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது எந்த ஒரு குறிப்புப் பொருளையும் சுட்டித் தன்னுள்ளே வேறொரு பொருள் தருவது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கியங்களில் பாடப்படும் இறைச்சியின் பொருளுக்கும், விலங்கினம் - பறவையினம் &amp;lt;br&amp;gt;போன்ற கருப்பொருளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுவது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உயிரினங்களின் அன்புச் செயல்களை மிகுவிப்பன &amp;quot;இறைச்சி&amp;quot; என்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வம் முதலாகிய கருப்பொருளின் கண்ணே பிறப்பதே இறைச்சிப் பொருள் என்பது &amp;lt;br&amp;gt;அகப்பொருள் வரையறை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கருப்பொருட் பிறக்கும்&amp;lt;br&amp;gt;இறைச்சிப் பொருளே&amp;quot;. (ஒழி - 31)&lt;br /&gt;
&lt;br /&gt;
கருப்பொருளின் வகைகளாக அகப்பொருள் பதினான்கு வகைகளைக் குறிப்பிடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
*ஆரணங்கு (தெய்வம்)&lt;br /&gt;
*உயர்ந்தோர்&lt;br /&gt;
*தாழ்ந்தோர் (அல்லாதோர்)&lt;br /&gt;
*புள்&lt;br /&gt;
*விலங்கு&lt;br /&gt;
*ஊர்&lt;br /&gt;
*நீர்&lt;br /&gt;
*பூ&lt;br /&gt;
*உணவு&lt;br /&gt;
*பறவை&lt;br /&gt;
*யாழ்&lt;br /&gt;
*பண்&lt;br /&gt;
*தொழில்&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக் கருவீரெழுவதைத் தாகும் (அகத் - 19). &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்து திணைகளுக்கு உரிய கருப்பொருள் இவையிவை என பொருள் தெளிவாகக் கூறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வழியிடைக் காணப்படும் இயற்கையையும் அவற்றின் அன்புணர்வைத் தூண்டும் காட்சிகளையும், காதல் செய்திகளையும் குறிப்பது; சிறப்பான ஒருவகை உணர்வை அடிப்படையாகக் கொண்ட&amp;amp;nbsp; குறிப்புணர்வு என்றும் இறைச்சியைக் கூறுவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதை ஆய்வு நோக்கில், &lt;br /&gt;
&lt;br /&gt;
#கருப்பொருள் இறைச்சி&lt;br /&gt;
#தெரிபொருள் இறைச்சி&lt;br /&gt;
#குறிப்புப்பொருள் இறைச்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
என மூன்று வகையாகப் பிரிக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அது &lt;br /&gt;
&lt;br /&gt;
*அன்பு&lt;br /&gt;
*காதல்&lt;br /&gt;
*அருள்&lt;br /&gt;
*மனிதநேயம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகியவற்றுக்குத் தூண்டுதலாக அமையும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதனின் உள்ளுணர்வாகிய காதலைத் தூண்டும் புறச்சூழல்களே இறைச்சி என்றும் கூறப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தெரிபொருள் இறைச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு:- &lt;br /&gt;
&lt;br /&gt;
தெரிபொருள் இறைச்சியில் கருப்பொருள்களின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;விருந்தெவன் செய்கோ தோழி சாரல்&amp;lt;br&amp;gt;அரும்பர மலர்ந்த கருங்கால் வேங்கைச்&amp;lt;br&amp;gt;சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு&amp;lt;br&amp;gt;உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும்&amp;lt;br&amp;gt;பெருங்கல் நாடன் ..... ..........................&amp;quot; (நற் - 112)&lt;br /&gt;
&lt;br /&gt;
வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்ததும், அவன் வராதது கண்டு ஆற்றாமையில் வாடிய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் மலைநாடன் உன் தலைவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, அவன் உனது பசப்பு வருந்திக் கெட, உனக்கு உண்டான காமநோயைப் போக்கி உன்னைவிட்டு அகலாமல் இருப்பான்&amp;quot; என்பது குறிப்பு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கருப்பொருளாகிய களிற்று யானையின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்பட்டதால் இது இறைச்சிப் பொருளானது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நற்றிணையில் மட்டுமே 165 பாடல்கள் இறைச்சிப் பொருளில் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும் தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற, &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;உள்ளுறை உவமை&amp;quot; மற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இறைச்சி&amp;quot;யை &lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கிய உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலையைக் &amp;lt;br&amp;gt;கடைபிடித்துள்ளனர் என்றே கூறத்தோன்றுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>