<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-08-22T05:29:51Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=942&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=942&amp;oldid=prev"/>
				<updated>2010-01-23T16:18:42Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்&quot;&gt;இலக்கியத்தின் திறவுகோல் இலக்கணம்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;16:18, 23 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=941&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: கட்டுரையாளர்:ஆதீனப் புலவர் மு.சிவசந்திரன்  ----    தமிழ்மொழியின…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=941&amp;oldid=prev"/>
				<updated>2010-01-23T16:18:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: கட்டுரையாளர்:ஆதீனப் புலவர் மு.சிவசந்திரன்  ----    தமிழ்மொழியின…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;கட்டுரையாளர்:ஆதீனப் புலவர் மு.சிவசந்திரன்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும், படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இலக்கியம்&amp;quot;, அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், &amp;quot;இலக்கணம்&amp;quot;, அதனைப் பார்ப்பதற்கு கதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்&amp;quot; என்பது திருக்குறள், கடவுள் வாழ்த்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நிலமிசை நீடுவாழ்வோர் யார் என்றால், இறைவனின் மாட்சிமை பொருந்திய திருவடியை இடைவிடாது நினைப்பவர்தான் என்பது இதன் கருத்து. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் இரண்டு சொற்கள் பூட்டுகள் போல் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று, &amp;quot;ஏகினான்&amp;quot; என்பது&amp;lt;br&amp;gt;மற்றொன்று &amp;quot;சேர்ந்தார்&amp;quot; என்பது.இவ்விரண்டிலும் என்ன சிக்கல்கள் உள்ளன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனைப் பற்றிய சொல்லின்கண் இறந்தகாலக் குறிப்பு வரக்கூடாது.ஏனெனில், அவர் நேற்றும் இன்றும் நாளையும் இருப்பவர்; முக்காலத்திலும் இருப்பவர்.முக்காலங்களிலும் இருக்கும் ஒரு பொருளை நிகழ்காலச் சொல்லில் தான் கூற வேண்டும் என்பது இலக்கணம்.எப்படியெனில், &amp;quot;இமயமலை நிற்கிறது&amp;quot;, &amp;quot;கங்கை நதி ஓடுகிறது&amp;quot; என்று கூற வேண்டும்.இமயமலை நின்றது என்றோ, நிற்கும் என்றோ கூறக்கூடாது.ஏனெனில், &amp;quot;நின்றது&amp;quot; என்றால் இன்றில்லை என்றாகிவிடும் &amp;quot;நிற்கும்&amp;quot; என்றால், நேற்று இல்லை என்றாகிவிடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் சிந்திக்கும்போது, இமயமலை நேற்றும் இன்றும் நாளையும் இருக்கும் பொருள் என்று கூற வேண்டுமானால், இமயமலை நிற்கிறது&amp;quot; என்று கூறவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதே போலத்தான் கங்கை நதிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கை &amp;lt;br&amp;gt;எம்முறைச் சொல்லும் காலத்து&amp;lt;br&amp;gt;மெய்ந்நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றார் தொல்காப்பியர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கருத்தை,&lt;br /&gt;
&lt;br /&gt;
முக்காலத்தினும் ஒத்தியல் பொருளைச்&amp;lt;br&amp;gt;செப்புவர் நிகழுங் காலத்தானே.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனால்தான் மாணிக்கவாசகர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எங்கள் பாண்டிப்பிரான் மூலபண்டாரம்&amp;lt;br&amp;gt;வழங்குகின்றான் வந்து முந்துமினே.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று &amp;quot;வழங்குகின்றான்&amp;quot; என நிகழ்காலத்தில் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய அழுத்தமான இலக்கணங்கள் இருக்கும்போது, திருவள்ளுவர், &amp;quot;மலர்மிசை ஏகுகிறான்&amp;quot; என்று கூறாமல், &amp;quot;ஏகினான்&amp;quot; என்று இறந்த காலத்தில் கூறியது பொருந்துமா?என்பதே இங்குள்ள சிக்கல்; அதாவது பூட்டு. இதனைப் பரிமேலழகர் அழகான ஒரு சாவியை,திறவுகோலைத் தந்து விளக்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்று காலத்திலும் நிகழும் பொருளை நிகழ்காலத்தில்தான் கூறவேண்டும் என்று கூறிய தொல்காப்பியர், இன்னொரு நூற்பாவில், எப்பொழுதோ, விரைவு காரணமாகவோ, உறுதி காரணமாகவோ நிகழ்காலச் சொல்லையும் எதிர்காலச் சொல்லையும் இறந்த காலத்தில் கூறலாம் என்று வழுவமைதியும் கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படி என்றால், ஒரு நண்பன், வீட்டுவாசலில் வந்து நின்றுகொண்டு, &amp;quot;என்னப்பா! இன்னும் புறப்படவில்லையா?&amp;quot; &amp;lt;br&amp;gt;என்று கேட்கிறான். அப்போது, உள்ளே இருக்கும் அவனது நண்பன், &amp;quot;இதோ வந்துவிட்டேன்&amp;quot; என்று கூறினான். இவன் வரப்போகிறவன்; எனினும் வந்துவிட்டேன் என்று இறந்தகாலத்தில் கூறலாமா என்றால்,&amp;amp;nbsp; இங்கு விரைவும் உறுதிப்பாடும் தொனிக்க அவ்வாறு அவன் கூறியதை இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் வாழ்க்கையில் நேரத்திற்கு ஏற்ப பேசும் சொற்களுக்குக் கூட, அது தவறாகும் என்றாலும், &amp;quot;சரி என்று ஏற்றுக்கொள்ளலாம்&amp;quot;என்று இலக்கணம் அமைதி கூறுகிறது.இதனை &amp;quot;வழுவமைதி&amp;quot; என்பர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு, சொற்களின் இலக்கணத்தை விட வாழ்க்கையின் போக்கும் நோக்கும் தான் அவசியமானது என்று இலக்கணம் ஏற்றுக்கொள்கிறது.இதற்குரிய நூற்பா,&lt;br /&gt;
&lt;br /&gt;
வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்&amp;lt;br&amp;gt;ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி&amp;lt;br&amp;gt;இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்&amp;lt;br&amp;gt;விரைந்த பொருள் என்மனார் புலவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது தொல்காப்பியம் வினையியல் நூற்பா. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு வாராக்காலம் என்பது எதிர்காலம்.நிகழுங்காலம் என்பது நிகழ்காலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவன், நம்பொருட்டு அழைத்த குரலுக்கும் அன்புக்கும் ஏற்ப ஓடோடி வருவான் என்னும் விரைவுப் பொருளில் தான் திருவள்ளுவர், &amp;quot;ஏகுகிறான்&amp;quot; என்று நிகழ்காலத்தில் கூறவேண்டிய சொல்லை &amp;quot;ஏகினான்&amp;quot; என இறந்த காலத்தில் கூறினார் என்று &amp;lt;br&amp;gt;பரிமேலழகர் விளக்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வுரைப்பகுதி வருமாறு:-&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின், &amp;quot;ஏகினான்&amp;quot; என இறந்த காலத்தால் கூறினார். என்னை? வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர் என்பது ஒத்ததாகலின்&amp;quot; என்பது அது.நினைந்த வடிவோடு விரைந்து சேருவான் என்பதில் இரண்டு செய்திகளைக் கூறினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விரைவாக வருவான் என்பது மட்டுமல்ல, எந்த உருவில் நினைக்கிறோமோ அந்த உருவில் வருவான் என்பதால், இங்கு சமயக் காழ்ப்பிற்கு இடமில்லை என்றும் கூறினார். இந்த இலக்கணம் ஒரு மாண்புடைச் சாவி தானே! இன்னொன்று, &amp;quot;சேர்ந்தார்&amp;quot; என்பது. சேர்தல் என்பது இடத்தால் சேர்தலா? இதயத்தால் சேர்தலா? என்பது கேள்வி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்&amp;quot; என்பதில் சேர்தல் என்பது, இதயத்தால் சேர்தலைக் குறிக்கிறது. எண்ணத்தால், பக்தியால், உணர்வினால் சேர்தல் என்பது இதற்குப் பொருள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது சாதகம்,பயிற்சி. இப்பயிற்சியை இடைவிடாது மேற்கொள்வார் அதாவது,&amp;amp;nbsp; தியானித்துக் கொண்டு இருப்பவர் நிலமிசை நீடு இனிது வாழ்வார் என்பதே பொருள். இதற்கு இலக்கணம் இடம் தருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தில், &amp;quot;வேற்றுமை மயங்கியல்&amp;quot; என்ற இயலில், &amp;quot;இரண்டாம் வேற்றுமை உருபு வரும்போது அந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை உருபும் வரலாம்&amp;quot; என்று ஒன்றோடு ஒன்று கூடிவரும் இலக்கணம் கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மயக்கம் என்றால், &amp;quot;கூடுதல்&amp;quot; என்பது பொருள். வேற்றுமை மயக்கம் என்றால், பொருள் நிலைக்கு ஏற்ப உருபுகள் ஒன்றோடு ஒன்று கூடி வரும் என்பது பொருள். எடுத்துக்காட்டாக, அரசனைச் சார்ந்தார், அரசர்கண் சார்ந்தார் என்பதில், அரசரைச் சார்ந்தார் என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபு &amp;quot;ஐ&amp;quot;யும், அரசர்கண் சார்ந்தார் என்பதில் ஏழாம் வேற்றுமை உருபு &amp;quot;கண்&amp;quot;னும் அமைந்து பொருள் தருகின்றன. இதனை விளக்க வந்த தொல்காப்பியர், இவ்வாறு இரண்டு உருபுகள் இயைந்து பொருள் தருவது எப்போது என்றால், &amp;quot;கருமம் அல்லாச் சார்புப் பொருள்&amp;quot; வரும் பொழுது மட்டுமே என்று கூறியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கருமம் அல்லாச் சார்பு என்றால் செயல்; தூணைச் சார்ந்தான் என்றால், அங்கு உடம்பினால் சார்தல் என்னும் செயல் நம் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அரசனைச் சார்ந்தான் என்றால், உடம்பினால் சார்தல் கிடையாது. அரசனை உள்ளத்தால் சார்ந்து நிற்கிறான் என்பதே பொருள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு செயல் என்னும் &amp;quot;கருமம்&amp;quot; இல்லை. சிந்தனை என்னும் எண்ணம் உண்டு. இதுவே கருமமல்லாச் சார்பு என்றார் தொல்காப்பியர். மாணடி சேர்ந்தார் என்பதில் உள்ள &amp;quot;சேர்தல்&amp;quot; என்பது இடத்தால் சார்தல் இல்லை.&amp;amp;nbsp; இதயத்தால் சார்தல் ஆகிய கருமமல்லாச் சார்பு எனப் பொருள்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே தான், இங்கு சேர்தல் என்பது இடைவிடாது நினைத்தலை உணத்தியது என்கிறார் உரையாசிரியர். இவ்வாறு, தெரிந்த குறளாக இருந்தாலும் தெரியாத சில நுட்பங்கள் பொருந்தி உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் சில தடைகளுக்குச் சரியான விடைகளால் தெளிவுகொள்ளவும் &amp;lt;span id=&amp;quot;fck_dom_range_temp_1264263491328_159&amp;quot; /&amp;gt;இலக்கணம் என்னும் திறவுகோல் என்றும் உதவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:இலக்கணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>