<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%28%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>இராமகிரி என வழங்கும் காரிக்கரை ஓர் தேவார(வைப்பு)த்தலம் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%28%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0(%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-05-27T14:17:25Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0(%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=11690&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: &amp;nbsp;நூ.த.லோகசுந்தர முதலி-மயிலை&lt;br&gt; &lt;br&gt;1350 ஆண்டுகளுக்கு முன் அப்பரடி…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0(%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=11690&amp;oldid=prev"/>
				<updated>2012-09-08T19:05:22Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  நூ.த.லோகசுந்தர முதலி-மயிலை&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1350 ஆண்டுகளுக்கு முன் அப்பரடி…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;நூ.த.லோகசுந்தர முதலி-மயிலை&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1350 ஆண்டுகளுக்கு முன் அப்பரடிகள், ஞானசம்பந்தர், சுந்தரர் எனும் அருட்பெரியோரால் தோற்று&amp;lt;br&amp;gt;விக்கப்பட்டதும் வரலாற்றாளரால் *இறைவழிபாட்டியக்கம்*என குறிக்கப்படுவதும் தமிழக சமூதாய&amp;lt;br&amp;gt;மறுமலர்ச்சியின் கருவியாக விளங்கியதும் அப்பெருந்தகைகள் இயற்றி அருளிய இசைத் தமிழ்&amp;lt;br&amp;gt;பாடல்களே ஆகும். அவை 10-11 நூற்றாண்டுகளில் சீர்மையுடன் தொகுக்ககப்பட்டு 'தேவாரம்'&amp;lt;br&amp;gt;(தே=இறைமை, வாரம்=இசை அமைந்த பாடல்) என்னும் பெயருடன் புதிய பண்ணடைவுகளுடன்&amp;lt;br&amp;gt;ஏற்றம் பெற்று திகழ்வதை நாம் நன்கே அறிவோம். அத்தொன்மை தாங்கும் பாடல்களில் காட்டப்&amp;lt;br&amp;gt;பெற்ற இறைவழிபாட்டுக் கருத்துக்கள், குறிக்கப்பெறும் பேறுபெற்ற வழிபாட்டுத் தலங்கள் பின்&amp;lt;br&amp;gt;வந்தோரால் நேர்த்தியுடன் பேணப்பட்டு அவ்வியக்க மையமாகவே இன்றுவரை தொடர்ந்து திகழ்ந்து&amp;lt;br&amp;gt;வருகின்றன.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;அவ்வகை பாடல்கள் யாப்பினில் பொதுவாக பத்து பத்து (பதிகம்)என இசைத்தமிழ் பாடல்கள்வழி ஓர்&amp;lt;br&amp;gt;தலத்தினை போற்றும் குறுநூலாக வைக்கப்பட்டுள்ளமைக் காணலாம். தொகுக்கப்பட்டு பண் அடைவு&amp;lt;br&amp;gt;பெறும் காலகட்டத்தில் கிடைத்தவை எட்டாயிரம்+ (8274) ஆகும். இவைகளில் குறிக்கப் பட்ட பழமை&amp;lt;br&amp;gt;வாய்ந்த தலங்கள் 275. இவைகளுக்கு குறைந்தது ஓர் பதிகமாவது கிடைத்துள்ளது. ஓர் தலம் தனக்கு&amp;lt;br&amp;gt;என முழு பதிகம் கிடைக்காமல் ஆனால் அக்காலத்தே வழிபாட்டினில் இருந்துள்ள நூற்றுக்கணக்கான&amp;lt;br&amp;gt;கோயில்கள் சிவனுறையும் தலமாக மற்ற தலப்பாடல்கள் ஊடே குறிக்கவும் பட்டுள்ளன. தம் பெயரிலேயே&amp;lt;br&amp;gt;பதிகம் பெற்றவை 'பாடல் பெற்றவை' எனவும் பதிகம் ஏதும் கிடைக்காது குறிக்கப்படும் பேறு மட்டும்&amp;lt;br&amp;gt;பெற்றவை 'வைப்புத்தலம்' எனவும் விளிப்பது சைவமரபு. இவ்வேறு பாடின்றி இருவகையும் ஒன்றாகவே&amp;lt;br&amp;gt;கருதப்பட்டு மங்கலத் தலங்கள் (108) எனக்கொள்வது வைணவ திவ்யப் பிரபந்த மரபு.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சென்னை மாநகரிலிருந்து நாகலாபுரம் வழி திருப்பதிக்கும் காளத்திக்கும் செல்லும் பெருஞ்சாலை&amp;lt;br&amp;gt;வழியிலேயே தமிழக வடஎல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மேற்கு 15 கிமீ தொலைவினில், தற்கால&amp;lt;br&amp;gt;ஆந்திர மாநிலத்தில் உள்ள 'நகரி-புத்தூர்' மலைத் தொடர்களின் கீழ்பால் அமைந்துள்ள, கிழக்கு முக&amp;lt;br&amp;gt;சோமஸ்கந்த மூர்த்தம் போன்று காணும் 2500 அடிவரை உயரும் 3 சிகரங்கள் கொண்ட மலையின்&amp;lt;br&amp;gt;தெற்கு அடிவாரத்தே அமைந்த ஓர் சிற்றூர் 'இராமகிரி'ஆகும். பெயருக்கேற்ப மிகவும் இரம்மியமாக&amp;lt;br&amp;gt;செந்நெல்லும் கரும்பும் விளையும் வயல்கள் சூழ்ந்த புலத்தில் தொல்லியல் துறையினரால் பழமைக்&amp;lt;br&amp;gt;காக பாதுகாக் கப்பட்ட ஓர் வரலாற்றுச் சின்னமாக அறிவித்த விளம்பரம் காட்ட, *வாலீசுவரர் * கோயில்&amp;lt;br&amp;gt;எனும் பெயர் தாங்கும் கோயிலைத்தான் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் தன்&amp;lt;br&amp;gt;இடையாற்றுத் தொகை பதிகத்தில் பல்வேறு சிவனுறை தலங்களை தொகுத்துப் பாடுங்கால்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்&amp;lt;br&amp;gt; விடங்களூர் திருவெண்ணி அண்ணாமலை வெய்ய&amp;lt;br&amp;gt; படங்கள் ஊர்கின்ற பாம்(பு) அரையான் பரஞ்சோதி&amp;lt;br&amp;gt; இடம்கொள் ஊர் எய்தமான் இடையாறு இடைமருதே 7.31.3&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எனக்குறித்துச் போற்றியுள்ளார். அப்பெருந்தகையின் காலத்திற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக சூரிய&amp;lt;br&amp;gt;வெப்பத்தினாலும் பனியினாலும் மழையினாலும் காற்றினாலும் அரிப்புண்டு உடைந்து சிதைந்த மலைக்&amp;lt;br&amp;gt;குன்றுகளின் பாறைகள் சிறிய சிறிய பரலாக அவற்றின் காலடியில் வீழ்ந்து அவை மேலும் மேலும் ஓடும்&amp;lt;br&amp;gt;மழை நீரால் ஊர்ந்து கடமாக நகர்ந்து நிற்கும் (&amp;quot;கடங்கள் ஊர்&amp;quot;) பூகோள இயல்பையே தன் பாடல்களில்&amp;lt;br&amp;gt;ஆவணப்படுத்தியள்ளார். இன்று அவ்வூர் அப்பாடல் படியே ஓர் குன்றுத் தொடரின் காலடி அருகே குன்றின்&amp;lt;br&amp;gt;அடிவாரத்திலும் மலையிலிருந்து பெருகும் நீரோட்டம் மேற்கே பிச்சாத்தூர் அணைக்குபின் கலந்து தென்&amp;lt;br&amp;gt;முகமாகத் திரும்பும் ஆரணிஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சேக்கிழார் பெருந்தகை தன் திருத்தொணடர் புராணத்தில் திருநாவுக்கரசு நாயனாரின் வடநாடு நோக்கிய&amp;lt;br&amp;gt;வழிபாட்டு செலவு பற்றி விளக்குங்கால் திருவாலங்காடு வணங்கிய பின் காளத்திமலை நோக்கிச் செல்ல&amp;lt;br&amp;gt;வழியில் உள்ள திருக்காரிக்கரை பணிந்து போற்றினார் என்பார்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; ''திருஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச்சிறப்பின்&amp;lt;br&amp;gt; ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்குதமிழ்ப்&amp;lt;br&amp;gt; பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியும்&amp;lt;br&amp;gt; மருஆர்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார் 1612&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; பல்பதியும் நெடும்கிரியும் படர்வனமும் சென்(று)அடைவார்&amp;lt;br&amp;gt; செல்கதி முன்அளிப்பார்தம் **திருக்காரிக்கரை** பணிந்து&amp;lt;br&amp;gt; தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின் உம்பர்குழாம்&amp;lt;br&amp;gt; மல்கு திருக்காளத்தி மாமலை வந்து எய்தினார் 1613''&amp;lt;br&amp;gt;மேலும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
திருஞானசம்பந்தரின் தொண்டைநாட்டு வழிபாட்டு செலவு பற்றி பேசுங்கால் அருட்செல்வர் கண்ணப்ப&amp;lt;br&amp;gt;நாயனாரை நினைந்து காளத்திமலை நோக்கி வழிபாடு செய்ய செல்லுங்கால் &amp;lt;br&amp;gt; .......... .......... .......... .......... &amp;lt;br&amp;gt; பிஞ்ஞகர் வெண்பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள்&amp;lt;br&amp;gt; பணிந்து அணைவார் பெருகும் அன்பால்&amp;lt;br&amp;gt; காளத்தி மலை முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர்&amp;lt;br&amp;gt; ஆட்டும் முதல்வேடர் கண்ணப்ப நாயனாரை&amp;lt;br&amp;gt; உன்னி ஒளிர்காளத்தி மலை வணங்க உற்ற பெரு&amp;lt;br&amp;gt; வேட்கைஉடன் உவந்து சென்றார் 2911&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; ''மிக்கபெரும் காதலுடன் தொண்டர் சூழ&amp;lt;br&amp;gt; மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்&amp;lt;br&amp;gt; தொக்க பெருவன் புலக்கான் அடைந்து&amp;lt;br&amp;gt; போகிச் சூலகபாலக் கரத்துச் சுடரும் மேனி&amp;lt;br&amp;gt; முக்கண் முதல்தலைவன் இடம்ஆகி&amp;lt;br&amp;gt; முகில் நெருங்கும் **காரிகரை** முன்னர் சென்று&amp;lt;br&amp;gt; புக்(கு)இறைஞ்சி போற்(றி)இசைத்து அப்பதியில் வைகிப்&amp;lt;br&amp;gt; பூதியரோ(டு)உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் 2912&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; இறைவர் **திருக்காரிகரை** இறைஞ்சி அப்பால்&amp;lt;br&amp;gt; எண்இல் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்&amp;lt;br&amp;gt; நிறைஅருவி நிரைபலவாய் மணியும்பொன்னும்&amp;lt;br&amp;gt; நிறைதுவலை புடைசிதறி நிகழ்பலவாகி .......... 2913''&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;நீண்டு உயர்ந்த 'நகரி-புத்தூர்' மலைத் தொடர்களின் முன் உள்ள ஒரு சிறு குன்றின் அடியில் நீர் நிறைந்து&amp;lt;br&amp;gt;வழியும் எழில்மிகு வெண்தாமரைகள் பூக்கும் குளங்களுடன் கற்பணியினால் அமைந்த கருவரையும்&amp;lt;br&amp;gt;*மரகதாம்பிகை* திருமுன்னும் பழமை சாற்றும் வேலைப்பாடுகள் அற்று உருண்ட வடிவின தூண்கள்&amp;lt;br&amp;gt;தாங்கி நாற்புறமும் சூழும் அகன்ற சுற்று மண்டபங்கள் உடைய கோயிலாக இன்றைய காரிக்கரை&amp;lt;br&amp;gt;தேவாரத்தலம் காண்கின்றது. சிறிதே தொடங்கப்பட்ட நிலையில் காணும் திறந்த வெளிச்சுற்று கோபுரம்&amp;lt;br&amp;gt;சில நூற்றாண்டு முன் பணி தொடங்கி நின்றுபோன நிலையிலும் திருக்குளத்திற்கு வடமேற்காக சிதைந்த&amp;lt;br&amp;gt;கற்பணிகள் ஊடேகலந்த சிலநூற்றாண்டு பழமையான வழிபாடற்ற சிறு கோயிலும் உள்ளன. உள்நுழை&amp;lt;br&amp;gt;வாயில் மண்டப மேல்முகப்பினில் 12 ஜோதிர் லிங்கம் மற்றும் பஞ்ச பூததலங்களை காட்டுவனவாகவும்&amp;lt;br&amp;gt;தலப்பெருமான் *வாலீசுவரர்* என்பதால் இராமாயண வாலி தன் வாலால் திருமேனியை சுற்றும் கோலம்&amp;lt;br&amp;gt;என்பன சுதையில் ஆன பெருங்கூடு/திருவாசி போன்ற அமைப்புடன் கட்டிய வரிசையும் உள்ளன.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இந்நாள் தமிழகத்தில் பல கோயில்களில் காணும் மூலமூர்த்தியை விட பரிவார மூர்த்திகளின்&amp;lt;br&amp;gt;சுற்றுக் கோயில்கள் மக்களால் பெரிதும் பேற்றப் பெற்று வருவதைப்போல் இங்கும் *பைரவர்*&amp;lt;br&amp;gt;கோயில் பிரபல்யமான வழிபாட்டினில் இருக்கின்றது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;குன்றின் மேல் 260 படிகள் உயரத்தில் முருகப் பெருமானுக்கு ஓர் சிறு புதுக் கோயிலும் உள்ளது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;புகைப்படக் கொத்து மேற்குறித்தவற்றை எல்லாம் சீராகவே விளக்கும் என அமைகின்றேன்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;வழியில் உள்ள சுருட்டபள்ளியையும் வழிபட்டதால் அதன் படங்களையும் உடன் வைக்கின்றேன்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இது ஓர் பழமையான தேவார வைப்புத்தலம் என மக்கள் அறிந்து வழிபட விளம்பரம் செய்யப்பட&amp;lt;br&amp;gt;வேண்டும். சென்னை பெருநகருக்கு அருகுள்ளதாலும் ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள&amp;lt;br&amp;gt;சுருட்டபள்ளி சிவத்தலத்தையும், மக்களுக்கு நன்கு அறிமுகமான ஆகாயக்கோனை அருவி,&amp;lt;br&amp;gt;பிச்சாட்டூர் அணை முதலிய எழில்மிகு இயற்கை காட்சிகள் காணவும் இணைத்து விடுமுறைநாள்&amp;lt;br&amp;gt;சுற்றுலா திட்டமாக அமைய ஆவன செய்யப்படுங்கால் இத்தலம் பெருமையும் சீர்மையும்&amp;lt;br&amp;gt;சேர்ந்து மிளிரும்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;நகரி-புத்தூர் பகுதி அருகேயே பறவைவழி ஒரு சில கிமீ தொலைவில் அமைந்த 'புண்ணியம்',&amp;lt;br&amp;gt;'நெதியம்','காளிங்கம்' என மேலும் சில தேவார வைப்புத்தலப் பெயருடைய திருவூர்களை&amp;lt;br&amp;gt;அடுத்த கோயில் வழிபாட்டு சுற்றுலாவில் தேடிக்காண இருக்கின்றேன்.&amp;lt;br&amp;gt; &amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;amp;gt;&amp;amp;lt;&amp;lt;br&amp;gt;பி.கு *வாலீசுவரம்*&amp;lt;br&amp;gt;தமிழகத்தில் உள்ள *வாலீசுவரம்* என்னும் விளிப்பெயர் தாங்கும் கோயில்களில் இராமாயண&amp;lt;br&amp;gt;வாலி வழிபட்டதாகவே தல புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. இக்கருத்து இராமயணத்திற்கு&amp;lt;br&amp;gt;மக்களுடன் இணைந்த நீங்காத தொடர்பினை பயன் கொள்ள எழுந்த மாற்றாகும். ஆனால் வாலி&amp;lt;br&amp;gt;எனும் சொல் பலராமனைக் குறிக்கும். வால்=வெள்ளை சிலப்பதிகாரத்தில் வெள்ளைக்கும்&amp;lt;br&amp;gt;(பலராமருக்கும்) அயிராவதத்திற்கும் கோட்டம் இருந்தது குறிக்கப்பட்டுள்ளது. திருமால்&amp;lt;br&amp;gt;சிவபெருமானை வழிபாடு செய்பவன் எனக்காட்ட எழுந்ததே இராமேசுவரம், பரசுராமேசுவரம்,&amp;lt;br&amp;gt;கச்சபேசுவரம், முண்டீச்சரம் (முண்டி= பிச்சை ஏற்றுண்ணும் பார்ப்பனன்=வாமனன்) எனும்&amp;lt;br&amp;gt;கோயில்கள் அதுபோன்று பலராமனால் வழிபடப்படுபவர் எனும் பொருளில் எழுந்தது வாலீசுவரம்.&amp;lt;br&amp;gt;சிவபெருமான் ஆமை ஓடு அணிந்தவன், கொக்கின் இறகும், பன்றியின் கொம்பும் பூண்பவன்&amp;lt;br&amp;gt;என்பதெல்லாம் திருமால் அவதாரங்களை காட்டு பவையே. சரபமூர்த்தமும் நரசிங்க அவதாரத்&amp;lt;br&amp;gt;திற்காக எழுந்ததே.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 19:05, 8 செப்டெம்பர் 2012 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:ஆலயங்கள்]][[Category:தமிழகம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>