<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆண்மையின் அடையாளம் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-07-24T05:28:26Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7528&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;ஆண்மையின் அடையாளம்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7528&amp;oldid=prev"/>
				<updated>2011-07-24T14:43:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;ஆண்மையின் அடையாளம்&quot;&gt;ஆண்மையின் அடையாளம்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;14:43, 24 ஜூலை 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7527&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: முனைவர் சுந்தர ஆவுடையப்பன்&lt;br&gt;  ----  ஆண்கள் தலையிலும், முகத்திலு…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=7527&amp;oldid=prev"/>
				<updated>2011-07-24T14:43:35Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: முனைவர் சுந்தர ஆவுடையப்பன்&amp;lt;br&amp;gt;  ----  ஆண்கள் தலையிலும், முகத்திலு…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;முனைவர் சுந்தர ஆவுடையப்பன்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆண்கள் தலையிலும், முகத்திலும் முடிவளர்த்துக் கொள்வதையும் மழித்துக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் செய்தி சங்க காலந்தொட்டே இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மழித்தலும் நீட்டலும் வேண்டா'' எனத் திருவள்ளுவர் கூறியுள்ளதிலிருந்து இதனை அறியலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நீண்ட தலைமுடியையும், நீண்ட தாடியையும் வைத்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் தவசீலர்களாகவே இருந்து வருகின்றனர், இருந்தாலும் உலகியல் வாழ்வில் உள்ளவர்களும் தாடி வைத்திருந்த செய்தியை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தாடியைச் சங்க இலக்கியம் &amp;quot;அணல்&amp;quot; என்று கூறுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று தாடி வைத்துக்கொள்வதை சோகத்தின் அடையாளமாகச் சிலர் வெளிப்படுத்துகின்றனர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிலருக்கு அது சிந்தனையின் அடையாளம். சிலர், அழகின் அடையாளமாகக் கொண்டிருக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்க காலத்தில் &amp;quot;தாடி&amp;quot; ஆண்மையின் அடையாளமாக இருந்த செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அடிபுனை தொடுகழல் மைஅணற் காளைக்கு என் &amp;lt;br&amp;gt; தொடி கழித்திடல் யான் யாய் அஞ்சுவலே!'' &amp;lt;br&amp;gt; (புறநா - 83) &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;காலில் செறிந்த வீரக் கழலை உடையவன்; மை போன்ற கரிய தாடியை உடையவன்; அத்தகையவனுக்காக என் கை வளையல் கழன்று போகின்றனவே!&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
எனப் பெருநற்கிள்ளியைப் புகழ்ந்து தம் காதலை நக்கண்ணையார் எனும் புலவர் வெளிப்படுத்திப் பாடியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;புலம் புக்கனனே! புல் அணற்காளை'' &amp;lt;br&amp;gt; (புறநா - 28) &lt;br /&gt;
&lt;br /&gt;
எனும் புறநானூற்றுப் பாடலில் ஒரு வீரனுக்குப் புற்களைப்போல முகத்தில் தாடி மண்டிக்கிடந்த செய்தியை அறிய முடிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சில சங்கப் பாடல்களில் உடன்போக்கில் செல்லும் தலைவனைக் குறிக்கும்போது அவனை,&lt;br /&gt;
&lt;br /&gt;
- &amp;quot;மைஅணல் காளை&amp;quot; - &amp;quot;கருமையான தாடியை உடைய இளைஞன்&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று அடையாளப்படுத்திப் பாடியுள்ளதை அறியமுடிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
- &amp;quot;மதி உடம்படுத்த மை அணற் காளை'' என அகநானூறும் (221)&amp;lt;br&amp;gt;- &amp;quot;மை அணற் காளையொடு பைய இயலி'' என ஐங்குறுநூறும் (389) &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;..... ..... இன்றே &amp;lt;br&amp;gt;மை அணற் காளை பொய் புகலா &amp;lt;br&amp;gt;அருஞ்சுரம் இறந்தனள் என்ப'' &amp;lt;br&amp;gt; (நற்.179) &lt;br /&gt;
&lt;br /&gt;
என நற்றிணைப் பாடலும் சுட்டுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தலைவியின் வீட்டார், திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாதபோது, தலைவன், தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போக்குச் செல்வது சங்ககால மரபு. அவ்வாறு அவர்கள் உடன்போக்குச் செல்லும்வழி கடுமையான பாலை நிலமாகவே இருக்கும். தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன், கரிய தாடியை வைத்திருந்தான் என்று குறிக்கப்பெறுகிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உடன்போக்குச் செல்வதற்குச் துணிச்சல் வேண்டும். அதே நேரத்தில் தலைவியின் வருத்தத்தையும் தன் வருத்தத்தோடு இணைத்துக் கொள்ளும் பக்குவமும், வலி ஏற்கும் உடலும் வேண்டும். எனவே, வருத்தம் தோய்ந்த துணிச்சல் உள்ளத்தின் அடையாளமாகத் தாடி இங்கே தலைவனுக்குப் பொருந்தியிருக்கிறது எனலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அணல்&amp;quot; என்பது தாடி என்றால், &amp;quot;மை அணல்&amp;quot; என்பது மைபோன்ற கருத்த தாடி என்று பொருள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மை அணல்&amp;quot; என்று வருகிற இடங்களில் எல்லாம், குறிக்கப்பெறும் தலைவன், இளமையும் ஆண்மையும் பொருந்தியவன் என்பதை உணரமுடிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நற்றிணையில் ஒரு தலைவியின் தந்தை பற்றிய குறிப்பில், &amp;quot;அவன் மை போன்ற கருந்தாடி உடையவன்&amp;quot;,என்று சுட்டப்படுகிறான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மை அணல் எருத்தின் முன்பின் தடக்கை &amp;lt;br&amp;gt; வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் &amp;lt;br&amp;gt; தந்தை தண் ஊர் இதுவே''. &amp;lt;br&amp;gt; (நற் - 198) &lt;br /&gt;
&lt;br /&gt;
தலைவி, &amp;quot;இது என் ஊர்&amp;quot; என்று குறிப்பிடாமல், &amp;quot;வீரம் பொருந்திய தனது தந்தையின் ஊர்&amp;quot; என்று குறிப்பிடுகிறாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே கருந்தாடி ஆண்மை, வீரம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக அமைகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்காலத்தில், தாடி வைப்போர் அதை அதிகம் வைக்காமல், கத்தரிக்கோலால் அளவுபடுத்தி வெட்டி, அழகுசெய்து கொள்வார்கள். இப்படிப்பட்ட தாடி அழகு முறைமை சங்க காலத்திலும் இருந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் &amp;lt;br&amp;gt; செவி இறந்து தாழ்தரும் கவுளன்''. &amp;lt;br&amp;gt; (புறநா. 257) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வீரன் குச்சுப்புல் போன்ற குறுந்தாடி வைத்திருந்ததையும் அவனது தலைமுடி காதுகளை மறைத்து வளர்ந்திருந்ததையும் இந்தப் பாடல் குறிக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சங்க இலக்கியம் &amp;quot;அணல்&amp;quot; என்ற சொல்லால் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல், &lt;br /&gt;
&lt;br /&gt;
*கோழி, &lt;br /&gt;
*சேவல், &lt;br /&gt;
*ஓந்தி, &lt;br /&gt;
*குரங்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
- &amp;quot;உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல்'' என்று நற்றிணை (181) கரிய மோவாயை உடைய குருவியின் சேவலையும், &amp;lt;br&amp;gt;- &amp;quot;மனைஉறை கோழி அணல் தாழ்வு அன்ன&amp;quot; என்று அகநானூறு (187) கோழியின் தாழ் மயிரையும், &amp;lt;br&amp;gt;- &amp;quot;வைவால் ஓதி மை அணல்&amp;quot; என்று அகநானூறு (125) ஓந்தியின் தாடியையும் குறிப்பிடுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
நற்றிணை (22) குறிப்பிடும் மந்தியின் செயல் காட்சி நகைப்புக்குரியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தினைப்புனத்தில் தினைக் கதிர்களைப் பறித்துக்கொண்டு, கடுவன் எனப்படும் ஆண் குரங்கோடு மலையேறிய மந்தி எனப்படும் பெண்குரங்கு தினைக் கதிர்களை நிமிண்டி, அலை அலையாய் இருந்த தாடியை உடைய கன்னம் (வாய்) நிறைய அமுக்கிக் கொள்கிறதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இக்காட்சி நோன்பிருக்கும் தவசீலர்கள் தாடியோடு காட்சியளிப்பதற்கு இணையாக இருக்கிறதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அணல் தரும் குறிப்புகள், உயிரினங்களுக்குத் தரும் அடையாளங்கள் ஏராளம் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சங்க_இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>