<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27</id>
		<title>அபிராமி அந்தாதி விளக்கவுரை 27 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;action=history"/>
		<updated>2026-06-12T09:54:43Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;diff=5698&amp;oldid=prev</id>
		<title>15:59, 2 ஏப்ரல் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;diff=5698&amp;oldid=prev"/>
				<updated>2011-04-02T15:59:10Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;amp;diff=5698&amp;amp;oldid=5694&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;diff=5694&amp;oldid=prev</id>
		<title>14:51, 2 ஏப்ரல் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;diff=5694&amp;oldid=prev"/>
				<updated>2011-04-02T14:51:27Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;amp;diff=5694&amp;amp;oldid=5684&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;diff=5684&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: பாடல் தொண்ணூற்று எட்டு&lt;br&gt;தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்க…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_27&amp;diff=5684&amp;oldid=prev"/>
				<updated>2011-04-02T09:26:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: பாடல் தொண்ணூற்று எட்டு&amp;lt;br&amp;gt;தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்க…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;பாடல் தொண்ணூற்று எட்டு&amp;lt;br&amp;gt;தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு&amp;lt;br&amp;gt;கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே&amp;lt;br&amp;gt;மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்&amp;lt;br&amp;gt;பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : உண்மை நிறைந்த நெஞ்சத்தைத் தவிர்த்து ஒரு போதும் வஞ்சகரின்&amp;lt;br&amp;gt;பொய் நெஞ்சில் புகுதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி&amp;lt;br&amp;gt;அன்னையே... உனது திருவடித் தாமரைகளைத் தனது தலைமேல் அணிகலனாகச் சூட்டிய&amp;lt;br&amp;gt;சங்கரனாரின் கையிலிருந்த அக்கினிச் சட்டியும், தலைமேலிருந்த கங்கையும்&amp;lt;br&amp;gt;எங்கே மறைந்தன?&amp;lt;br&amp;gt;அன்னையை மணம் முடிக்க சங்கரனார் வருகின்றார்.. எந்நேரமும் சுடலையில்&amp;lt;br&amp;gt;தியானத்தில் மூழ்கியிருக்கையில் அவர் பெருஞ்சடையில் கங்கையானவள் ஒட்டிக்&amp;lt;br&amp;gt;கொண்டாள். அவரது கையிலோ அவரது கோபத்தையொத்த அக்கினிச் சட்டி... அன்னையின்&amp;lt;br&amp;gt;திருப்பாதங்களைத் தனது சிரசில் சூடி அவளையே மணம் முடிக்க வேண்டி&amp;lt;br&amp;gt;வருகின்றார்.. காண்போர் என்ன பகர்வர்? இவனா மணம் முடிக்கச் செல்லும்&amp;lt;br&amp;gt;மணமகன்.? இதென்ன தவக்கோலம்? சுடலைக் கோலம்? என எள்ளி நகையாட மாட்டார்களா?&amp;lt;br&amp;gt;எனவே தனது தவக்கோலத்தை மறைத்து இராச அலங்காரத்தில் வருகின்றார்...&amp;lt;br&amp;gt;அவர்தம் கையில் நெருப்புச் சட்டியிருந்தால் அழகிய பூங்குயில் போன்ற&amp;lt;br&amp;gt;அன்னைக்குத் தகுமா? எனவே அதை எங்கேயோ மறைத்து விட்டார்... தனது&amp;lt;br&amp;gt;சடைமுடிமேல் கங்கையிருந்தால் அன்னை பொறுப்பாளா? இவள் எனக்குச்&amp;lt;br&amp;gt;சக்களத்தியா? என்று சங்கரனாரிடம் சண்டை பிடிப்பாளில்லையா? அதற்காக&amp;lt;br&amp;gt;கங்காதேவியையும் எங்கேயோ மறைத்து விட்டார்.. இப்போது அழகிய அரசகோலத்தில்&amp;lt;br&amp;gt;அன்னையை மணம் முடிக்க வந்து கொண்டிருக்கின்றார்... பட்டருக்கு&amp;lt;br&amp;gt;இக்காட்சித் தென்படுகின்றது.. என்னடா இது இவர் கையில் ஓர் அக்கினிச்&amp;lt;br&amp;gt;சட்டியைக் கண்டோமே? இவர் சடையில் கங்கை குடிகொண்டிருந்தாளே...? எங்கே&amp;lt;br&amp;gt;போயின அவை? என் அன்னையை நீ உன் தலையில் சூடிக்கொண்டதால் அவை எங்கே&amp;lt;br&amp;gt;மறைந்து போயினவோ?? என சங்கரனாரிடம் கேட்கின்றார்... நீ இப்படிச்&amp;lt;br&amp;gt;செய்கின்றாயே... என் அன்னையோ உண்மை பேசுவோர் நெஞ்சத்துள் மட்டுமே&amp;lt;br&amp;gt;குடிபுகுவாளேயன்றி ஒருபோதும் பொய்யுரைக்கும் வஞ்சசர் நெஞ்சத்தில்&amp;lt;br&amp;gt;குடிபுகுவதே இல்லையே... உன்னை எப்படியடா தன் கணவனாக ஏற்றாள்? என ஈசனைக்&amp;lt;br&amp;gt;கிண்டலடிக்கின்றார்...அகிலத்தைப் படைத்த ஆதிபராசக்தியே ஆனாலும்&amp;lt;br&amp;gt;அவளுக்கும் பெண்ணுக்குரிய குணங்கள் இருப்பதாலேயே நீ இப்படிச்&amp;lt;br&amp;gt;செய்கின்றாயோ? எனவும் வினவுகின்றார். அன்னையிடமும் நீ உண்மை பேசுவோரை&amp;lt;br&amp;gt;விடுத்து, வஞ்சகர்களின் பொய் பேசும் நெஞ்சத்தில் குடியிருப்பதில்லையே...&amp;lt;br&amp;gt;உன்னை ஏய்க்கும் பொருட்டு சங்கரனார் வேடமிட்டு வந்திருக்கின்றானே... இவனை&amp;lt;br&amp;gt;நீ எப்படி ஏற்றாய்? அன்னையிடமும் கேள்விக்கணையைத் தொடுக்கின்றார்.&amp;lt;br&amp;gt;&amp;quot;மெய் வந்த நெஞ்சின் அல்லால் &amp;quot; உண்மை பேசுவோர் நெஞ்சத்தைத் தவிர்த்து&amp;lt;br&amp;gt;&amp;quot;ஒருகாலும்&amp;quot; ஒருபோதும் &amp;quot;விரகர் தங்கள்&amp;quot; வஞ்சகர்களின் &amp;quot;பொய் வந்த நெஞ்சில்&amp;lt;br&amp;gt;புகல் அறியா மடப் பூங்குயிலே&amp;quot; பொய் பேசும் நெஞ்சத்தில் புகுவதற்கறியாத&amp;lt;br&amp;gt;அழகிய பூங்கியிலே... எங்கள் அபிராமி அன்னையே... &amp;quot;தை வந்து நின் அடித்&amp;lt;br&amp;gt;தாமரை சூடிய சங்கரற்கு&amp;quot; உன் திருவடித் தாமரைகளைத் தனது சிரசின் மேல்&amp;lt;br&amp;gt;அணிகலனாக சூடிய சங்கரனாரின் &amp;quot;கை வந்த தீயும் &amp;quot; கையிலிருந்த அக்கினிச்&amp;lt;br&amp;gt;சட்டியும் &amp;quot;தலை வந்த ஆறும்&amp;quot; சடைமேலிருந்த கங்கை நதியும் &amp;quot;கரந்ததெங்கே?&amp;quot;&amp;lt;br&amp;gt;எங்கே மறைந்து போயின? அன்னை உன்னைக் கோபித்துக் கொள்வாளென்று எங்கே&amp;lt;br&amp;gt;மறைத்து விட்டு வநதீர் சங்கரனாரே..? உம் கோலம் எல்லோருக்கும்&amp;lt;br&amp;gt;தெரியுமய்யா... எங்கள் தாயை நீர் எப்போதும் ஏமாற்ற இயலாதய்யா....&amp;lt;br&amp;gt;தொடரும் இறுதி இரு பாடல்களின் விளக்கமும், அபிராமி அந்தாதி நூற்பயனின்&amp;lt;br&amp;gt;விளக்கமும் நாளைய மடலில்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் தொண்ணூற்றொன்பது&amp;lt;br&amp;gt;குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்&amp;lt;br&amp;gt;மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த&amp;lt;br&amp;gt;வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்&amp;lt;br&amp;gt;கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே&amp;lt;br&amp;gt;விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான்&amp;lt;br&amp;gt;மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ&amp;lt;br&amp;gt;கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய&amp;lt;br&amp;gt;மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய&amp;lt;br&amp;gt;தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய்..&amp;lt;br&amp;gt;அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில்&amp;lt;br&amp;gt;காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில்&amp;lt;br&amp;gt;மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும்&amp;lt;br&amp;gt;விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக&amp;lt;br&amp;gt;அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.&amp;lt;br&amp;gt;சிறு வயதில் கற்ற ஓர் பாட்ல் நினைவுக்கு வருகின்றது. &amp;quot;அழகிய மயிலே&amp;lt;br&amp;gt;அபிராமி... அஞ்சுக மொழியே அபிராமி... ஆதிக்கடவூர் அபிராமி... ஆனந்த வடிவே&amp;lt;br&amp;gt;அபிராமி&amp;quot; என்று தொடரும் அப்பாடல்... மதுரை மாநகரில் இன்னிசை பாடும்&amp;lt;br&amp;gt;குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும்&amp;lt;br&amp;gt;காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய&amp;lt;br&amp;gt;வடிவில் தென்படுகின்றாள் அல்லவா?&amp;lt;br&amp;gt;&amp;quot;அன்று&amp;quot; &amp;quot;கயிலாயருக்கு&amp;quot; &amp;quot;இமவான் அளித்த கனங்குழையே&amp;quot; முன்பொருநாள்&amp;lt;br&amp;gt;கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த&amp;lt;br&amp;gt;பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே... &amp;quot;கடம்பாடவியிடை &amp;quot;&amp;lt;br&amp;gt;&amp;quot;குயிலாய் இருக்கும்&amp;quot; கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்...&amp;lt;br&amp;gt;&amp;quot;இமயாசலத்திடை&amp;quot; &amp;quot;கோலவியன் மயிலாய் இருக்கும்&amp;quot; இமயத்தில் அழகிய மயிலாய்&amp;lt;br&amp;gt;இருக்கின்றாய். &amp;quot;விசும்பில்&amp;quot; &amp;quot;வந்து உதித்த வெயிலாய் இருக்கும்&amp;quot; விரிந்த&amp;lt;br&amp;gt;ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் &amp;quot;கமலத்தின் மீது&amp;lt;br&amp;gt;அன்னமாம்&amp;quot; அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் நூறு&amp;lt;br&amp;gt;குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி&amp;lt;br&amp;gt;கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்&amp;lt;br&amp;gt;விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்&amp;lt;br&amp;gt;உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே&amp;lt;br&amp;gt;விளக்கம் : காதில் அணிந்துள்ள குண்டலங்களைத்த் தொடும்படியாகவுள்ள கொன்றை&amp;lt;br&amp;gt;மலரால் தொடுத்த மாலையை அணிந்து அம்மலர்களால் மணம் வீசும்&amp;lt;br&amp;gt;திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே. கழையை ஒத்த நின் அழகிய&amp;lt;br&amp;gt;நெடுந்தோள்களும், உன் கரும்பு வில்லும், இன்பப் போருக்குத் தேவையான&amp;lt;br&amp;gt;திறனுடைய தேன் நிறைந்த ஐந்து மலர்க் கணைகளும், வெண்ணிறப் புன்னகையும்,&amp;lt;br&amp;gt;மானையொத்த விழிகளும் என் நெஞ்சத்தில் எப்போதும் இருக்கின்றன...&amp;lt;br&amp;gt;உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அந்தாதியை உதிக்கின்றவே என அழகுற&amp;lt;br&amp;gt;நிறைவு செய்தார் அபிராமிப் பட்டர். அன்னையின் திருவுரு எப்போதும் என்&amp;lt;br&amp;gt;நெஞ்சத்தில் உதித்துக் கொண்டே இருக்கும். அவளை எப்போதும் நான் தொழுது&amp;lt;br&amp;gt;கொண்டே இருப்பேன். இதை விடுத்து எனக்கு வேறு எதுவும் இல்லை என்பது&amp;lt;br&amp;gt;பட்டரின் கொள்கை...&amp;lt;br&amp;gt;&amp;quot;குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி&amp;quot; காதில் அணிந்துள்ள&amp;lt;br&amp;gt;குண்டலங்களைத் தொடும்படியான கொன்றை மாலையை அணிந்து அக்கொன்றை மலர்களால்&amp;lt;br&amp;gt;மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே... தடித்ததொரு&amp;lt;br&amp;gt;கொன்றை மாலையை அன்னை அணிந்திருப்பதாக அபிராமிப் பட்டர்&amp;lt;br&amp;gt;குறிப்பிடுகின்றார். அதன் பருமனால் அது அவள் காதில் அணிந்த குண்டலத்தைத்&amp;lt;br&amp;gt;தொட்டுக் கொண்டிருக்கின்றது. அவளது மார்பகங்கள் கொன்றை மாலையைச்&amp;lt;br&amp;gt;சுமப்பதால், கொன்றை மலரின் மணம் அவளது திருமுலைகளில் வீசுகின்றது...&amp;lt;br&amp;gt;இவ்வரிகளை இன்னொரு நோக்கிலும் பொருள் கொள்ளலாம். கொன்றை மலரினை தன்&amp;lt;br&amp;gt;சடையில் அணிந்த சிவபெருமான் அழகிய குண்டலங்களை அணிந்த அன்னை அபிராமியைத்&amp;lt;br&amp;gt;தழுவும்போது அக்கொன்றை மலர்கள் இருவர் நடுவிலும் வீழும்போது அது&amp;lt;br&amp;gt;அன்னையின் மார்பில் பட்டு அதனால் அது கொன்றை மலரின் மணம் வீசுகின்றது&amp;lt;br&amp;gt;என்றும் பொருள் பகர்வோர் உண்டு. &amp;quot;கழையைப் பொருத திருநெடுந்தோளும் &amp;quot;&amp;lt;br&amp;gt;கழையை ஒத்த உனது நெடுந்தோள்களும்... கழை என்பது மூங்கிலைக் குறிக்கும்.&amp;lt;br&amp;gt;இது கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ள சொல். &amp;quot;கருப்பு வில்லும்&amp;quot; உனது&amp;lt;br&amp;gt;திருக்கரத்தில் நீ ஏந்திய கரும்பு வில்லும், &amp;quot;விழையப் பொரு திறல் வேரி&amp;lt;br&amp;gt;அம்பாணமும் &amp;quot; இன்பப் போருக்குத் தேவையான திறன் கொண்ட தேன் நிறைந்த ஐந்து&amp;lt;br&amp;gt;மலர்க்கணைகளும், &amp;quot;வெண் நகையும்&amp;quot; வெண்ணிற உன் புன்னகையும்... முத்து போன்ற&amp;lt;br&amp;gt;உன் பற்கள் உன் புன்னகையால் வெளி தோன்றுவதால் உன் புன்னகை வெண்ணிறமெனத்&amp;lt;br&amp;gt;தோன்றுகின்றது... &amp;quot;உழையைப் பொரு கண்ணும் &amp;quot; மருளும் மானையொத்த உன்&amp;lt;br&amp;gt;திருவிழிகளும், &amp;quot;நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே&amp;quot; எனது நெஞ்சில்&amp;lt;br&amp;gt;எப்போதும் நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொரு காலையும் கதிரவன் எங்ஙனம்&amp;lt;br&amp;gt;புதிதாய்த் தோன்றுகின்றானோ, அது போல் உன் திருவுருவும் என் நெஞ்சத்து&amp;lt;br&amp;gt;எப்போதும் புதிதாய் உள்ளது... அன்னையே நீ என் நெஞ்சத்தை விட்டு&amp;lt;br&amp;gt;நீங்குவதில்லை... உன்னை நான் என்றும் மறப்பதில்லை...&amp;lt;br&amp;gt;அம்மா. அபிராமியே... அபிராமிப் பட்டரின் நெஞ்சத்தில் நிலையாகக் குடிகொண்ட&amp;lt;br&amp;gt;நீ எங்கள் நெஞ்சத்திலும் வந்து எங்களை அருளாட்சி செய்தருள்வாயாக...&lt;br /&gt;
&lt;br /&gt;
நூற்பயன்&amp;lt;br&amp;gt;ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்&amp;lt;br&amp;gt;பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்&amp;lt;br&amp;gt;காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை&amp;lt;br&amp;gt;சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம்&amp;lt;br&amp;gt;பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை, ஐவகை&amp;lt;br&amp;gt;மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன்&amp;lt;br&amp;gt;திருக்கரங்களில் ஏந்தியவளை, முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும்&amp;lt;br&amp;gt;இல்லை....&lt;br /&gt;
&lt;br /&gt;
அபிராமி அந்தாதி நூலைத் தினமும் ஓதுவதால் கிட்டும் பலனை இப்பாடல்&amp;lt;br&amp;gt;மொழிகின்றது... அன்னையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்குமில்லை...&amp;lt;br&amp;gt;விளைவதெல்லாம் நன்மையே... ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக பலன்&amp;lt;br&amp;gt;சொல்வார்கள்... அனைத்தும் அறியேன்.. அறிந்தவற்றை அப்பாடல்களிலேயே&amp;lt;br&amp;gt;குறிப்பிட்டுள்ளேன். அறிந்தவர்கள் நமக்குரைத்தால் மகிழ்வேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எங்கள்&amp;quot; &amp;quot;ஆத்தாளை&amp;quot; எங்கள் அன்னையை &amp;quot;அபிராம வல்லியை&amp;quot; அபிராமியை&amp;lt;br&amp;gt;&amp;quot;அண்டமெல்லாம் பூத்தாளை&amp;quot; இந்த அண்ட சராசரங்களைப் பெற்றெடுத்தவளை....&amp;lt;br&amp;gt;&amp;quot;மாதுளம் பூ நிறத்தாளை&amp;quot; மாதுளம் பூவின் நிறங்கொண்டவளை... &amp;quot;புவி அடங்கக்&amp;lt;br&amp;gt;காத்தாளை&amp;quot; இப்பூமியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து காப்பவளை..&amp;lt;br&amp;gt;&amp;quot;ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை &amp;quot; தனது&amp;lt;br&amp;gt;திருக்கரங்களில் ஐந்துவகை மலர்க்கணைகளையும், பாசத்தையும்,&amp;lt;br&amp;gt;அங்குசத்தையும், கரும்பு வில்லையும் ஏந்தியவளை.. &amp;quot;முக்கண்ணியை&amp;quot; மூன்று&amp;lt;br&amp;gt;நயனங்கள் கொண்டவளை... &amp;quot;தொழுவார்க்கு&amp;quot; தொழுதிடும் அடியவர்களுக்கு.. &amp;quot;ஒரு&amp;lt;br&amp;gt;தீங்கில்லையே&amp;quot; எந்த ஒரு தீங்கும் இல்லவே இல்லை... அவர்கட்கு&amp;lt;br&amp;gt;விளைவதெல்லாம் நன்மையே என்னும் உறுதியோடு தனது அபிராமி அந்தாதியை நிறைவு&amp;lt;br&amp;gt;செய்கின்றார் அபிராமிப் பட்டர்...&amp;lt;br&amp;gt;அண்டமெல்லாம் படைத்து அதனைக் காத்து, தீயனவற்றை அழிக்கும் மூன்று&amp;lt;br&amp;gt;நயனங்கள் படைத்த எல்லாம் வல்ல அன்னை அபிராமியே நம் அனைவருக்கும் வரும்&amp;lt;br&amp;gt;தீங்கினை விலக்கிக் காத்திடட்டும். எங்களைக் கடைக் கண் கொண்டு பார்&amp;lt;br&amp;gt;தாயே..... உன் திருவடி இணைகளே சரணம்... சரணம்......&amp;lt;br&amp;gt;இவ்வுரைகளை எழுதப் பணித்த ஐயா தமிழன் வேணு அவர்களுக்கும், ஐம்பது&amp;lt;br&amp;gt;நாட்களும் பொறுமை காத்து இதை ஓதிய அன்பு உள்ளங்களுக்கும், ஊக்கமளித்த&amp;lt;br&amp;gt;நல்லுங்களுக்கும், இதனை மின் நூலாகத் தொகுத்துத் தருவதற்காக&amp;lt;br&amp;gt;இசைந்திருக்கும் திரு. பிரசாத் வேணுகோபால் அவர்களுக்கும் இதனைத்&amp;lt;br&amp;gt;தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் கூகிள் தமிழ்க்குழும&amp;lt;br&amp;gt;நிர்வாகிகளுக்கும் (தமிழ்த் தென்றல், தமிழ் உலகம், தமிழ்ப் பிரவாகம்,&amp;lt;br&amp;gt;தமிழ் ஒளி மற்றும் மின் தமிழ்) அடியேனின் சிரந்தாழ்ந்த நன்றிகளைத்&amp;lt;br&amp;gt;தெரிவித்துக் கொள்கின்றேன்... அன்னையின் ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்..&amp;lt;br&amp;gt;நன்றி.. வணக்கம்.. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:26, 2 ஏப்ரல் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>