<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25</id>
		<title>அபிராமி அந்தாதி விளக்கவுரை 25 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25&amp;action=history"/>
		<updated>2026-07-23T00:36:45Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25&amp;diff=5696&amp;oldid=prev</id>
		<title>15:32, 2 ஏப்ரல் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25&amp;diff=5696&amp;oldid=prev"/>
				<updated>2011-04-02T15:32:21Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25&amp;amp;diff=5696&amp;amp;oldid=5682&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25&amp;diff=5682&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: பாடல் தொண்ணூற்று ஒன்று&lt;br&gt;மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிச…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_25&amp;diff=5682&amp;oldid=prev"/>
				<updated>2011-04-02T09:21:26Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: பாடல் தொண்ணூற்று ஒன்று&amp;lt;br&amp;gt;மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிச…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;பாடல் தொண்ணூற்று ஒன்று&amp;lt;br&amp;gt;மெல்லிய நுண் இடை மின்னனையாளை விரிசடையோன்&amp;lt;br&amp;gt;புல்லிய மென்முலைப் பொன்னனையாளை புகழ்ந்து மறை&amp;lt;br&amp;gt;சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு&amp;lt;br&amp;gt;பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : மெல்லிய நுண்ணிய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளும், விரிந்த&amp;lt;br&amp;gt;சடைகளைக் கொண்ட சிவபெருமானோடு இணைந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட&amp;lt;br&amp;gt;பொன்னைப் போன்றவளுமாகிய அன்னை அபிராமியைப் புகழ்ந்து வேதங்கள் சொல்லிய&amp;lt;br&amp;gt;படி அவளைத் தொழும் அடியார்களைத் தொழுபவர்களுக்கு, பல்வேறு இசைக்கருவிகள்&amp;lt;br&amp;gt;இசை முழங்க, வெண்யானையான ஐராவதத்தின் மேலேறி உர்வலம் வரும் இந்திர பதவி&amp;lt;br&amp;gt;வந்து சேரும்..&amp;lt;br&amp;gt;ஆண்டவனுக்கு சேவை செய்வதை விட அவன் அடியார்க்கு செய்யும் சேவையையே அவன்&amp;lt;br&amp;gt;பெரிதும் மதிக்கின்றான். அதையேதான் அபிராமிப் பட்டர் இங்கு&amp;lt;br&amp;gt;உரைக்கின்றான்... அன்னையின் அடியார்களைத் தொழுது அவர்கட்கு தொண்டு&amp;lt;br&amp;gt;செய்வோருக்கு இந்திர பதவியே கிட்டும் என்று குறிப்பிடுகின்றார்.&amp;lt;br&amp;gt;&amp;quot;மெல்லிய நுண் இடை மின்னனையாளை &amp;quot; மெல்லிய நுண்ணிய இடையினை உடைய மின்னலைப்&amp;lt;br&amp;gt;போன்றவளை... &amp;quot;விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன்னனையாளை &amp;quot; விரிந்த&amp;lt;br&amp;gt;சடைகளைக் கொண்ட சிவபெருமான் புணர்ந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட&amp;lt;br&amp;gt;பொன்னைப் போன்றவளை, அன்னை அபிராமியை... &amp;quot;புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம்&amp;lt;br&amp;gt;தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு&amp;quot; புகழ்ந்து வேதங்கள் சொல்லும் வழியில்&amp;lt;br&amp;gt;அவளை வழிபடும் அடியார்களை வழிபடுவோர்க்கு... அதாவது&amp;lt;br&amp;gt;அடியார்க்கடியார்க்கு.... &amp;quot;பல்லியம் ஆர்த்தெழ &amp;quot; பல்வேறு இசைக்கருவிகள்&amp;lt;br&amp;gt;இசை முழங்க... &amp;quot;வெண்பகடு ஊரும் பதம் தருமே&amp;quot; வெண்யானையான ஐராவதத்தில்&amp;lt;br&amp;gt;ஊர்வலம் செல்லும் இந்திர பதவி வந்து சேரும்... அதை அன்னையே தருவாள்...&amp;lt;br&amp;gt;ஆகையால்தான் குருபக்தி அவசியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி&amp;lt;br&amp;gt;வைத்தார்கள்... சாயாண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா&amp;lt;br&amp;gt;அவர்கள் சொல்வார்கள்.. &amp;quot;ஈசனுக்குக் கோபம் வந்தால் நீ குருதேவரிடம்&amp;lt;br&amp;gt;அடைக்கலம் புகலாம். ஈசனது கோபத்தைத் தடுக்கும் ஆற்றல் குருவுக்கு&amp;lt;br&amp;gt;உண்டு... ஆனால் குருவுக்குக் கோபம் வந்தால் அதை அந்த ஈசனாலும் தடுக்க&amp;lt;br&amp;gt;இயலாது&amp;quot; என்று... ஆகவே அன்னையின் அடியார்களை வழிபடுவோருக்கு அன்னை அந்த&amp;lt;br&amp;gt;இந்திர பதவியைத் தருவாள்....&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் தொண்ணூற்று இரண்டு&amp;lt;br&amp;gt;பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்&amp;lt;br&amp;gt;இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்&amp;lt;br&amp;gt;மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்&amp;lt;br&amp;gt;முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே&amp;lt;br&amp;gt;விளக்கம் : மும்மூர்த்திகள் முதலான தேவர்கள் யாவரும் போற்றும் புன்னகை&amp;lt;br&amp;gt;நிறைந்தவளே... அபிராமி அன்னையே... உனது சொற்களிலே உருகி உன் திருவடிகளிலே&amp;lt;br&amp;gt;மனம் ஒன்றி உனக்கு அன்பனாக வாழ்வதற்காக என்னை உன் அடியாக்கிக் கொண்டாய்..&amp;lt;br&amp;gt;நான் இனி வேறு எந்த ஒரு மதத்தைக் கண்டும் மதி மயங்க மாட்டேன்.&amp;lt;br&amp;gt;அம்மதத்தைச் சார்ந்தவர் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்...&amp;lt;br&amp;gt;அழகிய சொல் &amp;quot;முகிழ் நகை&amp;quot;. தமிழில் இச்சொல் வழக்கில் இல்லாவிட்டாலும்,&amp;lt;br&amp;gt;கன்னடத்தில் &amp;quot;முகிழ் நகை&amp;quot; எனும் சொல் வழக்கில் உள்ளது... எங்கள்&amp;lt;br&amp;gt;குருதேவர் தியானத்தில் எங்களை அழைத்துச் செல்லும் போது &amp;quot;முகதல்லி முகிழ்&amp;lt;br&amp;gt;நகையிரலி&amp;quot; என்று சொல்வது அப்படியே நினைவுக்கு வருகின்றது. அன்னையை அழகிய&amp;lt;br&amp;gt;புன்னகையே என வர்ணிக்கும் அபிராமிப் பட்டரின் வார்த்தைகள் நம் முகத்தில்&amp;lt;br&amp;gt;புன்னகையை வரவழைக்கின்றன...&amp;lt;br&amp;gt;&amp;quot;முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே&amp;quot; மும்மூர்த்திகள்&amp;lt;br&amp;gt;முதலிய தேவர்கள் அனைவரும் போற்றும் அழகிய புன்னகையே... &amp;quot;பதத்தே உருகி &amp;quot;&amp;lt;br&amp;gt;உன் சொற்களிலே உருகி... &amp;quot; நின் பாதத்திலே மனம் பற்றி &amp;quot; உன்&amp;lt;br&amp;gt;திருவடிகளிலேயே என் மனத்தை நிலை நிறுத்தி... :&amp;quot;உந்தன் இதத்தே ஒழுக அடிமை&amp;lt;br&amp;gt;கொண்டாய் &amp;quot; உன் இஷ்டப்படி வாழ்வதற்காக... உனக்கு அன்பனாய் வாழ்வதற்காக&amp;lt;br&amp;gt;என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய்... &amp;quot;இனி யான் ஒருவர் மதத்தே மதி&amp;lt;br&amp;gt;மயங்கேன் &amp;quot; இனிமேல் நான் எந்த ஒரு மதத்திலும் மதி மயங்க மாட்டேன்...&amp;lt;br&amp;gt;&amp;quot;அவர் போன வழியும் செல்லேன்&amp;quot; அம்மதத்தார் சென்ற வழியிலும் செல்ல&amp;lt;br&amp;gt;மாட்டேன்....&amp;lt;br&amp;gt;அன்னை அபிராமி மதம் இருக்க அடுத்த மதம் நமக்கெதற்கு.... &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் தொண்ணூற்று மூன்று&amp;lt;br&amp;gt;நகையே இது இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு&amp;lt;br&amp;gt;முகையே முகிழ் முலை மானே முதுகண் முடிவுயில் அந்த&amp;lt;br&amp;gt;வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும் நாம்&amp;lt;br&amp;gt;மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : இந்த அகிலத்தையெல்லாம் பெற்றெடுத்த அன்னை அபிராமியின்&amp;lt;br&amp;gt;திருமுலைகள் மொட்டினைப் போன்றுள்ளதென்றும் அவளது திருக்கண்கள் மான்களைப்&amp;lt;br&amp;gt;போன்றுள்ளதென்றும் புகழ்வது நகைப்புக்குரிய செயல்.. எல்லையில்லாத&amp;lt;br&amp;gt;வடிவையுடைய அபிராமியை மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகள் என்று&amp;lt;br&amp;gt;விளிப்பதும் வம்பே. இவளது தகைமைகளை நாம் நாடிச் சென்று அறிய&amp;lt;br&amp;gt;விரும்புவதும் மிகையான செயல்களே...&amp;lt;br&amp;gt;குருடர்கள் ஆனையைத் தடவிக் கண்ட கதைதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு&amp;lt;br&amp;gt;வருகின்றது... தான் அன்னையைத் துதித்துப் பாடிய பாடல்கள், அவளை வர்ணித்த&amp;lt;br&amp;gt;வர்ணனைகள் இவையெல்லாம் நகைப்புக்குரியன என்றும், தகாதன என்றும் அவள்&amp;lt;br&amp;gt;குணங்களை அறிய முற்படுவது மானுடரின் சக்திக்கு மிகையான செயல் என்றும்&amp;lt;br&amp;gt;குறிப்பிடுவது நம்மை விழியுயர்த்த வைக்கின்றது.. ஒரு கோயிலைக் கட்டி&amp;lt;br&amp;gt;அதனுள் ஒரு விக்கிரகத்தை வைத்து அதுதான் அன்னை அபிராமி என்று வழிபடுவதும்&amp;lt;br&amp;gt;கூட ஒருவகையில் நகைப்புக்குரிய செயல்தான். ஏனெனில் அவள் முடிவற்ற&amp;lt;br&amp;gt;வடிவுடையவள்.. அப்படியாயின் கோவிலகள் எதற்கு?? வழிபாட்டு முறைகள்&amp;lt;br&amp;gt;எதற்கு??? இவை அன்னையைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்தவும், அவளே&amp;lt;br&amp;gt;நம்மைப் படைத்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவும்தான்... ஆலயங்கள் மனித&amp;lt;br&amp;gt;மனங்களை நெறிப்படுத்தவும், மனித சிந்தனைகளை ஒரே நேர்க்கோட்டில் கொணரவுமே&amp;lt;br&amp;gt;கட்டப்பட்டன... ஆனால் அன்னையானவளோ இவற்றையெல்லாம் தாண்டி நிற்பவள்..&amp;lt;br&amp;gt;இருக்கும் இடத்திலிருந்து &amp;quot;அபிராமி&amp;quot; என்றழைத்தால், ஓடிவந்து கருணை&amp;lt;br&amp;gt;செய்யும் அன்னை எளியவள்... இவள் எளியவள் என்றெண்ணி இவளை நான் அறிந்து&amp;lt;br&amp;gt;கொண்டேன்.. என்று பெருமை பேசும் மூடருக்கு அவள் பெரியவள்.. அகிலமே&amp;lt;br&amp;gt;அன்னையாக இருக்கையில் அங்கென்றும், இங்கென்றும் அவளைத் தேடி, அவள் அழகை&amp;lt;br&amp;gt;மற்றவற்றோடு ஒப்பிட்டு வர்ணித்தல் அபிராமிப் பட்டருக்கு நகைப்பை&amp;lt;br&amp;gt;ஏற்படுத்துகின்றது... உலகைப் பெற்றெடுத்தவளை, இவள் மலையரசன் பெற்றெடுத்த&amp;lt;br&amp;gt;மலைமகள் என விளிப்பது தகாத செயல்.. அது வம்புக்குரிய செயல் என்று&amp;lt;br&amp;gt;பகர்கின்றார்.&amp;lt;br&amp;gt;பெரியோர் ஒருவரது உரையில் கேட்டது. இராமனைப் பற்றி அவர் உரைத்ததன்&amp;lt;br&amp;gt;சாரத்தை இவ்விடத்துப் பதிவுசெய்கின்றேன்.. &amp;quot;எந்த இடத்தில் பெருமையும்,&amp;lt;br&amp;gt;எளிமையும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இறைவன்.. இறைவன் பெருமை&amp;lt;br&amp;gt;நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அதே சமயம் நாம் அழைத்தால் வந்து அருள்&amp;lt;br&amp;gt;செய்யும் எளியவனாகவும் இருக்கின்றான்.. உலகத்து வழக்கில் பெருமை&amp;lt;br&amp;gt;இருக்குமிடத்தில் எளிமை இல்லை... எளிமை இருக்கும் இடத்தில் பெருமை&amp;lt;br&amp;gt;இல்லை... இந்த தேசத்து உயர் பதவியில் இருப்பவர் பெருமை பெற்றவர்.. ஆனால்&amp;lt;br&amp;gt;அவரை நம்மால் அவ்வளவு எளிதில் சந்திக்க இயலுமா? இயலாது. எனவே பெருமை&amp;lt;br&amp;gt;இருக்கும் இடத்தில் எளிமை இல்லை... தெருவோரம் குப்பை&amp;lt;br&amp;gt;நிறைந்திருக்கின்றது. எளிதில் நெருங்கி விட எளிமையாக இருக்கின்றது என்று&amp;lt;br&amp;gt;அதனைப் பெருமை கொண்டாட இயலுமா? எனவே எளிமை இருக்குமிடத்தில் பெருமை&amp;lt;br&amp;gt;இல்லை... ஆனால் இறைவனின் திருவடிகளோ மிகப் பெருமை வாய்ந்தது... அதே சமயம்&amp;lt;br&amp;gt;நமக்கருள் செய்யும் வகையில் அத்தனை எளிமையானது... &amp;quot; இது அந்த பெரியவர்&amp;lt;br&amp;gt;இராமனின் பெருமையையும் எளிமையையும் பற்றி உரைத்தது... அதையே இவ்விடத்து&amp;lt;br&amp;gt;நினைவு கூர்கின்றேன்... அன்னையானவளை நாம் எளிமையான சொற்கள் கொண்டு வர்ணணை&amp;lt;br&amp;gt;செய்கின்றோம்.. அது நகைப்புக்குரிய செயல்...ஆனால் அதையே ஏன் பட்டரும்&amp;lt;br&amp;gt;செய்தார்... ? அன்னை அத்தனை எளிமையானவளாக அவருக்குக்&amp;lt;br&amp;gt;காட்சியளித்ததால்தான். அவள் மலையரசனுக்கு மகளாகப் பிறந்தது தன் எளிமையை&amp;lt;br&amp;gt;உலகிற்கு உணர்த்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல...&amp;lt;br&amp;gt;&amp;quot;இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு&amp;quot; இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்த&amp;lt;br&amp;gt;தலைவிக்கு.. அபிராமிக்கு.... &amp;quot;முகையே முகிழ் முலை &amp;quot; அரும்பும் மொட்டினைப்&amp;lt;br&amp;gt;போன்ற முலைகள் உள்ளன என்பதும்... &amp;quot;மானே முதுகண் &amp;quot; மருளும் மானைப் போன்ற&amp;lt;br&amp;gt;விழிகள் உள்ளன என்பதும் &amp;quot;நகையே இது&amp;quot; நகைப்புக்குரிய செயலே இது..&amp;lt;br&amp;gt;&amp;quot;முடிவுயில் &amp;quot; எல்லையில்லாத வடிவுடையவளை... எங்கள் அபிராமியை...&amp;quot;மலைமகள்&amp;quot;&amp;lt;br&amp;gt;&amp;quot;பிறவியும்&amp;quot; &amp;quot;என்பதும்&amp;quot; &amp;quot;அந்த வகையே&amp;quot; &amp;quot;வம்பே&amp;quot; மலையரசன் பெற்றெடுத்த&amp;lt;br&amp;gt;மகளல்லவா என்று மலைமகள் என்று விளிப்பதும் அதைப் போன்ற நகைப்புரிய&amp;lt;br&amp;gt;செயலே... மேலும் அது வம்புக்குரிய செயல்.... ஏனெனில் இந்த அகிலத்தைப்&amp;lt;br&amp;gt;பெற்றெடுத்தவளும் அவளே.... அவளை இன்னொரு மானுடனுக்குப் பிறந்தவள் என்பது&amp;lt;br&amp;gt;வம்புக்குரிய செயலல்லவா?? &amp;quot;நாம்&amp;quot; &amp;quot;இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே&amp;quot;&amp;lt;br&amp;gt;&amp;quot;மிகையே&amp;quot; எளியோர்களாகிய நாம் இவளது அருங்குணங்களையும், பெருமைகளையும்&amp;lt;br&amp;gt;நாடி விரும்பி அறிந்து கொள்ள முயல்வதும் மிகையான செயலே... ஏனெனில்&amp;lt;br&amp;gt;நம்மால் அது இயலாது.. இவள் இத்தன்மையள் என்றுரைத்தால், இன்னோரிடத்து அவள்&amp;lt;br&amp;gt;வேறு தன்மையளாய் நிற்கின்றாள்... ஓ அதுவே அவளது தன்மை என அவ்வழி&amp;lt;br&amp;gt;சென்றால், பிறிதோரிடத்தில் அவள் இன்னொரு தன்மையளாய் நிற்கின்றாள்.. ஆக&amp;lt;br&amp;gt;அவளை,.. அவளது தன்மைகளை வரையறுக்க இயலாது.. அவளை நம்மால் அறிந்து&amp;lt;br&amp;gt;கொள்ளவும் இயலாது...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் தொண்ணூற்று நான்கு&amp;lt;br&amp;gt;விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்&amp;lt;br&amp;gt;அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து&amp;lt;br&amp;gt;கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்&amp;lt;br&amp;gt;தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் கண்களெல்லாம்&amp;lt;br&amp;gt;கண்ணீர் மல்கி, உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, சுய&amp;lt;br&amp;gt;அறிவினை இழந்து, தேனுண்ட வண்டைப் போல் களித்து, சொற்கள் தடுமாறி இப்படிச்&amp;lt;br&amp;gt;சொல்லப்பட்ட செயல்கள் எல்லாம் கொண்ட பித்தரைப் போல் ஆவார்கள் என்றால்&amp;lt;br&amp;gt;அன்னை அபிராமியை வழிபடும் சமயம் நல்லதே....&amp;lt;br&amp;gt;அன்னையை முழுமனதோடு எண்ணி வழிபடும் பக்தர்கள் ஆலயம் சென்று அவளைக்&amp;lt;br&amp;gt;காணும்போது இது போன்ற செயல்களைச் செய்வது இயற்கையானதுதான்... குலசேகரன்&amp;lt;br&amp;gt;பட்டினத்தில் கோயில் கொண்டுள்ள முத்தாரம்மனைக் காணச் செல்லும் போதெல்லாம்&amp;lt;br&amp;gt;நானும் இது போன்ற செய்கைகளுக்குள்ளாகின்றேன்.. காரணம் புரிவதில்லை..&amp;lt;br&amp;gt;அதற்குரிய காரணம் அன்னை மேல் நாம் கொண்டுள்ள அதீத அன்பே... சொல்லொண்ணா&amp;lt;br&amp;gt;ஆனந்தம் அதிகமாகி அவளையே நேரில் கண்டது போன்ற உணர்வு மேலோங்கும்போது விழி&amp;lt;br&amp;gt;தானே நீரைச் சொரிகின்றது... மெய்யோ மயிர்சிலிர்த்து ஆடுகின்றது... சுய&amp;lt;br&amp;gt;அறிவு அற்றுப்போகின்றது... தேனுண்ட வண்டைப் போல் மனம் ஆனந்த&amp;lt;br&amp;gt;நடனமாடுகின்றது... இவற்றையெல்லாம் காண்போர் இவனென்ன பைத்தியக்காரனைப்&amp;lt;br&amp;gt;போல் செயல்படுகின்றானே என இகழ்ந்துரைக்கின்றனர். அபிராமிப் பட்டரை&amp;lt;br&amp;gt;அப்படித்தான் பித்தனென்றனர்.. ஆனால் பட்டரோ இப்பித்த நிலையை அபிராமி&amp;lt;br&amp;gt;சமயம் எனக்குத் தருமானால் அது நல்ல சமயமே... என்றுரைக்கின்றார்...&amp;lt;br&amp;gt;கிறித்தவ நண்பர்களும் இதைப் படித்து வருகின்றீர்கள்... இந்துக்களின்&amp;lt;br&amp;gt;ஆலயங்களில் தன்னை மறந்து ஆடும் பக்தர்களைப் பேய் பிடித்து ஆடுகின்றான்&amp;lt;br&amp;gt;எனக் கிண்டல் செய்கின்றார்கள்... ஆனால் இதையேதான் &amp;quot;பரிசுத்த ஆவி&amp;quot;&amp;lt;br&amp;gt;நிறைந்து ஆடுவதாக அவர்களும் அனுபவிக்கின்றனர்.. ஆக ஆழ்ந்த இறையனுபவம்&amp;lt;br&amp;gt;இதைப் போன்ற செயல்களைத் தருவதாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது தன்னை&amp;lt;br&amp;gt;மறந்த ஆனந்த நிலை என்பது அனுபவிக்காதோருக்குப் புரியாது...&amp;lt;br&amp;gt;&amp;quot;விரும்பித் தொழும் அடியார்&amp;quot; அன்னை அபிராமியை விரும்பித் தொழுகின்ற&amp;lt;br&amp;gt;அடியவர்கள் &amp;quot;விழி நீர் மல்கி&amp;quot; கண்களில் கண்ணீர் வழிந்தோட &amp;quot;மெய் புளகம்&amp;lt;br&amp;gt;அரும்பித்&amp;quot; உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து... (இதைத்தான் கிராமத்தில்&amp;lt;br&amp;gt;&amp;quot;புல்லரிப்பது&amp;quot; என்பார்கள்). &amp;quot;ததும்பிய ஆனந்தம் ஆகி&amp;quot; ஆனந்தம் ததும்பி&amp;lt;br&amp;gt;&amp;quot;அறிவு இழந்து&amp;quot; தங்கள் சுய அறிவினை இழந்து &amp;quot;கரும்பின் களித்து&amp;quot; தேனுண்ட&amp;lt;br&amp;gt;வண்டினைப் போல் களித்து &amp;quot;மொழி தடுமாறி&amp;quot; சொற்கள் தடுமாறி &amp;quot;முன் சொன்ன&amp;lt;br&amp;gt;எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்&amp;quot; இவ்வாறு சொன்ன செய்கைகளை எல்லாம்&amp;lt;br&amp;gt;செய்யும் பித்தர்கள் ஆவர் என்றால்.... உலகத்தோரின் பார்வையில்&amp;lt;br&amp;gt;பைத்தியக்காரனைப் போல் ஆவார்கள் என்றால் &amp;quot;அபிராமி சமயம் நன்றே&amp;quot; அபிராமியை&amp;lt;br&amp;gt;வழிபடுவதற்கு வழிகாட்டும் இந்த அபிராமியின் சமயம் மிகவும் நல்லதே..&amp;lt;br&amp;gt;உயர்ந்ததே....&amp;lt;br&amp;gt;இந்த பாடலைப் பாடும்போதே அந்தப் பரவச நிலை ஏற்படுகின்றது... கண்கள் மூடி&amp;lt;br&amp;gt;அபிராமியை மட்டுமே மனத்தில் எண்ணி அவள் திருவுருவை மனத்தில் நிறுத்தி ஒரு&amp;lt;br&amp;gt;நொடி இருந்தால் போதும் .. நம் கண்கள் பனிக்கும்... இதயம் இனிக்கும் &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:21, 2 ஏப்ரல் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சாக்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>