<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20</id>
		<title>அபிராமி அந்தாதி விளக்கவுரை 20 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20&amp;action=history"/>
		<updated>2026-05-26T01:24:25Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20&amp;diff=5574&amp;oldid=prev</id>
		<title>09:53, 1 ஏப்ரல் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20&amp;diff=5574&amp;oldid=prev"/>
				<updated>2011-04-01T09:53:25Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20&amp;amp;diff=5574&amp;amp;oldid=5542&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20&amp;diff=5542&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: பாடல் எழுபத்தொன்று&lt;br&gt;அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைக…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_20&amp;diff=5542&amp;oldid=prev"/>
				<updated>2011-03-31T13:14:01Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: பாடல் எழுபத்தொன்று&amp;lt;br&amp;gt;அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைக…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;பாடல் எழுபத்தொன்று&amp;lt;br&amp;gt;அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்&amp;lt;br&amp;gt;பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்&amp;lt;br&amp;gt;குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க&amp;lt;br&amp;gt;இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : தன் அழகுக்கு ஒப்புமையாக யாருமே இல்லாதவள் அன்னை அபிராமி.&amp;lt;br&amp;gt;அருமையான வேதங்கள் எப்போதும் பழகிக் கொண்டிருப்பதால் சிவந்த&amp;lt;br&amp;gt;திருவடித்தாமரைகளையுடையவள். குளிர்ச்சியான இளம்பிறையைத் தன் திருமுடியிலே&amp;lt;br&amp;gt;அணிந்த பச்சை நிறங்கொண்ட கோமளவல்லியான அன்னை உனக்குக் கொம்பு போல்&amp;lt;br&amp;gt;துணையாக இருக்க, மனமே நீ எதையும் இழந்து ஏக்கம் கொள்ள வேண்டாம்.&amp;lt;br&amp;gt;உனக்கென்ன குறையுண்டு?&amp;lt;br&amp;gt;அருமையான பாடல். மனக்குறையைத் தீர்க்கும் அருமருந்தான பாடல். அன்னை&amp;lt;br&amp;gt;அபிராமி அருகிருக்க ஏன் அழுகிறாய் நெஞ்சே... மனமே உனக்கென்ன&amp;lt;br&amp;gt;குறையுண்டு...? என மனத்தினை அமைதி செய்யும் அருமையான பாடல் இது...&amp;lt;br&amp;gt;&amp;quot;அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி&amp;quot; தன்னுடைய பேரழகுக்கு இணையாக ஒப்புமை&amp;lt;br&amp;gt;கூறும்படி இவ்வுலகில் யாருமில்லாத தன்னிகரற்ற அழகுடைய அன்னை அபிராமி...&amp;lt;br&amp;gt;அன்னையின் பேரழகுக்கு யாரையாவது ஒப்புமை சொல்ல இயலுமா? அவளின் அழகு ஈடு&amp;lt;br&amp;gt;இணையில்லாதது.. &amp;quot;அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்&amp;quot; அருமையான&amp;lt;br&amp;gt;வேதங்கள் பழகுவதால் சிவந்த திருவடித் தாமரைகளையுடையவள்.. வேதங்களைத் தனது&amp;lt;br&amp;gt;சிலம்பாக அணிந்தவள் என முன்னர் குறிப்பிட்ட அபிராமிப் பட்டர் இவ்விடத்து&amp;lt;br&amp;gt;அவை எப்போது அவளின் திருவடிகளை ஒன்றியே இருப்பதால், அன்னையின்&amp;lt;br&amp;gt;திருப்பாதங்கள் சிவந்தன என்று குறிப்பிடுகின்றார். &amp;quot;பனிமாமதியின் குழவித்&amp;lt;br&amp;gt;திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க &amp;quot;குளிர்ச்சியான இளம் பிறையைத் தன்&amp;lt;br&amp;gt;திருமுடியிலே அணிந்த பச்சை வண்ணக் கோமளவல்லி எனும் கொம்பு போன்ற&amp;lt;br&amp;gt;துணையிருக்க.. இளம் நிலவை இத்தனை அழகாக யாரேனும் பாடியுள்ளனரா என்பது&amp;lt;br&amp;gt;ஐயமே... &amp;quot;பனிமாமதியின் குழவி&amp;quot; குளிர்ச்சியான பெரு நிலவின் குழந்தை எனும்&amp;lt;br&amp;gt;பொருள் பொருள் படுகின்றது. அன்னையின் திருமுடியில் காணும் பிறை நிலவு&amp;lt;br&amp;gt;அபிராமிப் பட்டருக்கு பெருநிலவின் குழந்தை எனத் தோன்றுகிறது.. அதைத்தான்&amp;lt;br&amp;gt;இவ்வண்ணம் உரைக்கின்றார். &amp;quot;இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் &amp;quot; இழந்து&amp;lt;br&amp;gt;இழந்து வருத்தமுறும் என் மனமே... ஏக்கம் கொள்ளாதே... மனத்தின் இயல்பு&amp;lt;br&amp;gt;இது.. சிறுவயது தொடங்கி மரணமடையும்வரை மனமானது இழந்தவற்றிற்கெல்லாம்&amp;lt;br&amp;gt;ஏக்கம் கொண்டு அழுகின்றது. ஏ மனமே... நீ ஏன் அழுகின்றாய்...&amp;lt;br&amp;gt;எல்லாவற்றையும் நீ இழந்தாலும், உன்னைத் தாங்க கொம்பு போன்ற துணையாக அன்னை&amp;lt;br&amp;gt;அபிராமி இருக்கின்றாள்.. ஏக்கம் கொள்ளாதே... &amp;quot;உனக்கு என் குறையே&amp;quot; உனக்கு&amp;lt;br&amp;gt;என்ன குறையுண்டு? உன்னைத் தாங்கும் கொம்பாக அன்னை அபிராமியிருக்க&amp;lt;br&amp;gt;உனக்கென்ன குறையுண்டு என் மனமே... நீ கலங்காதிரு.... இளம் கொடி பற்றிப்&amp;lt;br&amp;gt;படரக் கொம்பொன்று அவசியம். கொம்பில்லையெனில் அக்கொடியின் நிலை&amp;lt;br&amp;gt;பரிதாபமே... மனமே...நீ பற்றிப் படர உனக்கு அபிராமி எனும் கொம்பு உன்&amp;lt;br&amp;gt;அருகேயுள்ளது. பற்றிக் கொள்.. நீ இழந்த எதை எண்ணியும் வருந்தாதே..&amp;lt;br&amp;gt;அழாதே.. உனக்கெந்த குறையும் இல்லை...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் எழுபத்திரண்டு&amp;lt;br&amp;gt;என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்&amp;lt;br&amp;gt;நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்&amp;lt;br&amp;gt;மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்&amp;lt;br&amp;gt;தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றும் மின்னலை விட மெலிந்த&amp;lt;br&amp;gt;சிறந்த இடையையுடைய மென்மையான அன்னை அபிராமியே... தன் குறைகள் எல்லாம்&amp;lt;br&amp;gt;தீர்வதற்காக எங்கள் ஐயன் சங்கரனார் தன் திருமுடி மீது வைந்த உந்தன்&amp;lt;br&amp;gt;திருவடித் தாமரைகளையே நானும் எனது குறைகள் எல்லாம் தீர்ந்து போகும் படி&amp;lt;br&amp;gt;நின்று வணங்கிப் போற்றுகின்றேன். இனிமேலும் எனக்கு ஒரு பிறவி வந்தால் அது&amp;lt;br&amp;gt;உன் குறையே... வேறு யார் குறையுமல்ல...&amp;lt;br&amp;gt;அன்னை மேல் எவ்வளவு உரிமை கொண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பார்.?&amp;lt;br&amp;gt;உன்னை.. உன் திருவடித் தாமரைகளை நான் போற்றி வணங்குவதால் இனி எனக்குப்&amp;lt;br&amp;gt;பிறவி இல்லை... மீண்டும் நான் பிறந்தால், அது உன் குற்றம்தான்... வேறு&amp;lt;br&amp;gt;யாருடைய குற்றமுமல்ல என அன்னை மேல் தான் கொண்டிருக்கும் உரிமையைப்&amp;lt;br&amp;gt;பறைசாற்றுகிறார்.&amp;lt;br&amp;gt;&amp;quot;இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்&amp;quot;&amp;lt;br&amp;gt;நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றுகின்ற மின்னலையும் குறைசொல்லும்படி&amp;lt;br&amp;gt;மெலிந்த சிறந்த இடையினைக் கொண்ட மென்மையான அன்னை அபிராமி.. மின்னல் தனது&amp;lt;br&amp;gt;ஒளியின் தன்மையில் வலிமை பெற்றிருந்தாலும், அதை நாம் நோக்கும் போது அது&amp;lt;br&amp;gt;மிகவும் மெலிந்தது என்பதை அறிகின்றோம். எனவேதான் முன்னர் ஒருமுறை&amp;lt;br&amp;gt;மின்னலையொத்த இடையையுடையவளே எனப் பாடினார் அபிராமிப் பட்டர். நம்&amp;lt;br&amp;gt;கவிஞர்கள் பலரும், பெண்ணின் இடையை மின்னலுக்கு ஒப்பிட்டுப்&amp;lt;br&amp;gt;பாடியிருக்கின்றனர். ஆனால் இப்பாடலில், அம்மின்னலைக் குறை சொல்லும்படி&amp;lt;br&amp;gt;இன்னும் மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையானவள் என்று அம்மையைப்&amp;lt;br&amp;gt;பாடுகின்றார் அபிராமிப் பட்டர். &amp;quot;தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த&amp;lt;br&amp;gt;தாமரையே &amp;quot; தனது குறைகள் எல்லாம் தீர்ந்து போக எங்கள் தலைவனான சிவபெருமான்&amp;lt;br&amp;gt;தனது சடைமுடி மேல் வைத்த உனது திருவடித் தாமரைகளையே... &amp;quot;என் குறை தீர&amp;lt;br&amp;gt;நின்று ஏத்துகின்றேன் &amp;quot; நானும் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போகும்படி&amp;lt;br&amp;gt;நின்று வணங்கிப் போற்றுகின்றேன்.. &amp;quot;இனி யான் பிறக்கின்&amp;quot; இனிமேலும் நான்&amp;lt;br&amp;gt;பிறந்தால்... எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால்... &amp;quot;நின் குறையே அன்றி&amp;lt;br&amp;gt;யார் குறை காண்&amp;quot; அது உனது குறையே அன்றி வேறு யாருடைய குறை? இப்பிறவியில்&amp;lt;br&amp;gt;எனது குறைகளெல்லாம் தீர்ந்து போக உனது திருவடித் தாமரைகளை வணங்கிப்&amp;lt;br&amp;gt;போற்றுகின்றேன்.. உன்னை வணங்குவதால் எனக்கு மீண்டும் பிறவி உண்டாகாது..&amp;lt;br&amp;gt;நான் மீண்டும் பிறந்தால் அது வேறு யாருடைய குற்றமுமல்ல... உன்னுடைய&amp;lt;br&amp;gt;குற்றம்தான்.. அன்னையே.. என் குறைகளெல்லாம் தீர்த்து என் பிறவியை&amp;lt;br&amp;gt;அறுத்துவிடு.. மீண்டும் என்னை பிறவாமல் செய்து விடு.... &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் எழுபத்து மூன்று&amp;lt;br&amp;gt;தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு&amp;lt;br&amp;gt;யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த&amp;lt;br&amp;gt;சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை&amp;lt;br&amp;gt;நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : அபிராமி அன்னையே.. நீ அணியும் மாலை கடம்ப மலர்களால் ஆனது.&amp;lt;br&amp;gt;உனது படைகளோ ஐவகை மலரம்புகள். உனது வில் கரும்பு வில். வைரவர் உன்னை&amp;lt;br&amp;gt;வணங்கும் நேரம் நள்ளிரவு. நீ எனக்கென்று வைத்திருக்கின்ற செல்வங்களாவன..&amp;lt;br&amp;gt;உனது திருவடித் தாமரைகள், செம்மையான உனது நான்கு திருக்கரங்கள்,&amp;lt;br&amp;gt;ஒளிபொருந்திய செம்மையான தாயே உன் திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்,&amp;lt;br&amp;gt;இவற்றோடு உனது மூன்று திருக்கண்கள்.&amp;lt;br&amp;gt;அன்னை கொண்டுள்ள வில், அம்புகள், அவள் அணியும் மாலை, வைரவநாதர் அவளை&amp;lt;br&amp;gt;வணங்கும் நேரம் இவையெல்லாம் அன்னையே உன் பெருமைகள்.. எனக்கென்று நீ&amp;lt;br&amp;gt;தந்துள்ள செல்வம்.. நீதான்.. நீயே பெரும் செல்வம்... என அபிராமிப் பட்டர்&amp;lt;br&amp;gt;உரைப்பது சிறப்பு. குழந்தைப் பேற்றை வேண்டுவோர் இத்திருப்பாடலைத் தினமும்&amp;lt;br&amp;gt;பாட வேண்டும் எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.&amp;lt;br&amp;gt;&amp;quot;தாமம் கடம்பு&amp;quot; அன்னையே நீ அணிந்துள்ள மாலையானது கடம்ப மாலை.. &amp;quot;படை பஞ்ச&amp;lt;br&amp;gt;பாணம்&amp;quot; உனது படைகளோ ஐவகை மலரம்புகள்... &amp;quot;தனுக்கரும்பு&amp;quot; உனது வில்லோ&amp;lt;br&amp;gt;கரும்பு வில். &amp;quot;யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது&amp;quot; வைரவர் உன்னை வணங்கும்&amp;lt;br&amp;gt;நேரமானது நள்ளிரவு... சிவாலயங்களை இரவில் காக்க வேண்டிய பொறுப்பு&amp;lt;br&amp;gt;வைரவரிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே வைரவர் அன்னையை வணங்கும் நேரம்&amp;lt;br&amp;gt;நள்ளிரவே.. &amp;quot;எமக்கு என்று வைத்த சேமம்&amp;quot; இத்தனை பெருமைகளையுடைய அன்னையே..&amp;lt;br&amp;gt;நீ எமக்கென்று வைத்துள்ள செல்வங்களாவன... &amp;quot;திருவடி&amp;quot; உனது திருவடிகள்...&amp;lt;br&amp;gt;&amp;quot;செங்கைகள் நான்கு&amp;quot; அபயந்தந்து வரமளிக்கும் உனது செம்மையான நான்கு&amp;lt;br&amp;gt;திருக்கரங்கள்...&amp;quot;ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை &amp;quot; ஒளிபொருந்திய,&amp;lt;br&amp;gt;செம்மையான அம்மையே... உனது திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்..&amp;lt;br&amp;gt;&amp;quot;ஒன்றோடு இரண்டு நயனங்களே&amp;quot; உனது மூன்று திருக்கண்கள்.. இவையே நீ&amp;lt;br&amp;gt;எமக்களித்த செல்வங்களாகும்...&amp;lt;br&amp;gt;உனது பெருமைகள் நீ கடம்ப மாலை அணிந்து, பஞ்ச பாணங்களை படைகளாகக் கொண்டு,&amp;lt;br&amp;gt;கரும்பு வில்லையேந்தியிருப்பது.. அகிலத்தைக் காக்கும் உந்தன் ஆலயத்தைக்&amp;lt;br&amp;gt;காக்கும் வைரவர் உன்னை வணங்கும் நேரமோ நள்ளிரவு... எனக்கு நீ அளித்த&amp;lt;br&amp;gt;செல்வமோ... நீதான்... நீயே என் செல்வம்.... என் சேமம்.... உன்&amp;lt;br&amp;gt;திருவடிகள், உனது திருக்கரங்கள், உன் திருநாமம், உன் திருக்கண்கள்..&amp;lt;br&amp;gt;அபிராமியே... காத்தருள்வாய்....&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் எழுபத்து நான்கு&amp;lt;br&amp;gt;நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்&amp;lt;br&amp;gt;அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்&amp;lt;br&amp;gt;பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்&amp;lt;br&amp;gt;சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : மூன்று கண்களையுடைய சிவபெருமானும், வேதங்களும், திருமாலும்,&amp;lt;br&amp;gt;பிரம்மனும் போற்றி வணங்கும் அபிராமி அன்னையின் திருவடிகளையே தங்கள் பயன்&amp;lt;br&amp;gt;என்று கொண்டவர்கள், தேவமகளிர் ஆடிப்பாட, பொற்கட்டிலுடைய பொற்காட்டில்&amp;lt;br&amp;gt;தங்கி மகிழும் பயனை விரும்புவரோ?&amp;lt;br&amp;gt;&amp;quot;இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்&amp;quot;&amp;lt;br&amp;gt;என்று அரங்கனைப் பாடிய ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது..&amp;lt;br&amp;gt;பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும், வேதங்களும்&amp;lt;br&amp;gt;போற்றி வணங்கக்கூடிய அன்னையபிராமியின் திருவடிகளைப் பற்றினோர்க்கு எல்லா&amp;lt;br&amp;gt;செல்வங்களும் கிட்டும். ஆயினும் அவர்களுக்கு அச்செல்வங்கள் எல்லாம் ஒரு&amp;lt;br&amp;gt;பொருட்டே அல்ல... அவர்கள் அவற்றை விரும்புவதும் இல்லை...&amp;lt;br&amp;gt;&amp;quot;நயனங்கள் மூன்றுடை நாதனும் &amp;quot; மூன்று கண்களையுடைய சிவபெருமானும்,&amp;lt;br&amp;gt;&amp;quot;வேதமும்&amp;quot; நால்வகை வேதங்களும், &amp;quot;நாரணனும்&amp;quot; நாராயணனும், &amp;quot;அயனும்&amp;quot;&amp;lt;br&amp;gt;பிரம்மனும் &amp;quot;பரவும்&amp;quot; வணங்கிப் போற்றும் &amp;quot;அபிராமவல்லி அடியிணையைப்&amp;quot;&amp;lt;br&amp;gt;அபிராமி அன்னையின் திருவடிகளை... &amp;quot;பயன் என்று கொண்டவர்&amp;quot; தங்களின் பயன்&amp;lt;br&amp;gt;என்று கொண்ட அடியவர்கள் &amp;quot;பாவையர் ஆடவும் பாடவும்&amp;quot; மகளிர் ஆடிடவும்,&amp;lt;br&amp;gt;பாடிடவும், &amp;quot;பொன் சயனம் பொருந்தும் &amp;quot; பொன்னாலான கட்டிலினையுடைய&amp;lt;br&amp;gt;&amp;quot;தமனியக் காவினில்&amp;quot; பொற்காட்டினில், இந்திரலோகத்தில்.... &amp;quot;தங்குவரே?&amp;quot;&amp;lt;br&amp;gt;தங்கி இன்புறும் மகிழ்ச்சியினை விரும்புவார்களோ???&amp;lt;br&amp;gt;மானுட மனமானது சிற்றின்பத்தை நாடுகின்றது.. இந்திரலோகம் என்பது&amp;lt;br&amp;gt;சிற்றின்பத்தின் கனவு.. பொன் நிறைந்த காட்டினில், பொன்னாலான படுக்கையில்&amp;lt;br&amp;gt;படுத்திருக்கும் வேளையில், தேவ மகளிர் வந்து ஆடிப்பாடி நம்மை&amp;lt;br&amp;gt;மகிழ்விக்கும் ஒரு நிகழ்வு என்பது சிற்றின்பத்தை நாடும் மனது&amp;lt;br&amp;gt;வேண்டுவது... ஆனால் அதுவோ நிலையான இன்பம்? அன்னை அபிராமியின் திருவடிகளை&amp;lt;br&amp;gt;அபயம் எனப் பற்றி, அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பைப் பெற்று அவள்&amp;lt;br&amp;gt;அடியாராகும் இன்பமே பேரின்பம்.. அதுவே நிலையானது.. ஆகவேதான் உலகம்&amp;lt;br&amp;gt;போற்றும் நால்வகை வேதங்களும் அவள் திருவடிகளே சரணமென்று பாடுகின்றன..&amp;lt;br&amp;gt;படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைப் புரியும்&amp;lt;br&amp;gt;மும்மூர்த்திகளும் அவள் திருவடிகளையே போற்றிப் பாடுகின்றனர்.. மனமே...&amp;lt;br&amp;gt;நீயும் அவள் திருவடிகளையே பற்று.. அவளே அபயம் என்பதை உணர்... அவளையே&amp;lt;br&amp;gt;சரணடை... அவளே உன்னைக் காப்பாள்.. உன்னைத் தன் அன்பர்க் கூட்டத்தில்&amp;lt;br&amp;gt;ஒருவனாக ஆக்கி பேரின்ப வாழ்வுதனை உனக்களிப்பாள்... அபிராமியின்&amp;lt;br&amp;gt;திருவடியிணைகளே சரணம்........ &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 13:14, 31 மார்ச் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சாக்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>