<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18</id>
		<title>அபிராமி அந்தாதி விளக்கவுரை 18 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18&amp;action=history"/>
		<updated>2026-07-20T08:18:01Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18&amp;diff=5331&amp;oldid=prev</id>
		<title>09:12, 22 மார்ச் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18&amp;diff=5331&amp;oldid=prev"/>
				<updated>2011-03-22T09:12:56Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18&amp;amp;diff=5331&amp;amp;oldid=5307&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18&amp;diff=5307&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: பாடல் அறுபத்து மூன்று&lt;br&gt;தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செ…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_18&amp;diff=5307&amp;oldid=prev"/>
				<updated>2011-03-20T13:39:51Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: பாடல் அறுபத்து மூன்று&amp;lt;br&amp;gt;தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செ…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;பாடல் அறுபத்து மூன்று&amp;lt;br&amp;gt;தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக்&amp;lt;br&amp;gt;கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்&amp;lt;br&amp;gt;ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்&amp;lt;br&amp;gt;வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : நற்கதிக்குச் செல்லவேண்டிய இடத்திற்கு நாம் தேறிச்&amp;lt;br&amp;gt;சென்றடைவதற்குரிய வழியைக் காட்டுபவள் அன்னை அபிராமியே ஆகும். ஆறு&amp;lt;br&amp;gt;சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் இவளே என்று அறிந்திருந்தும், வேறு&amp;lt;br&amp;gt;சமயங்கள் உண்டு என்று கொண்டாடும் வீணர்களின் செயலானது ஒரு மலையை சிறு&amp;lt;br&amp;gt;தடியினைக் கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலைப் போன்றதாகும்..&amp;lt;br&amp;gt;சமயச் சண்டைகள் அக்காலத்திலேயே மிகவும் பயங்கரமானதாக&amp;lt;br&amp;gt;நடைபெற்றிருக்கின்றன.. பெரும்பாலும், சமண சமயத்திற்கும், சைவ&amp;lt;br&amp;gt;சமயத்திற்கும் இடையேயான பூசல்கள், சைவத்திற்கும், வைணவத்திற்கும்&amp;lt;br&amp;gt;இடையேயான பூசல்கள் என சமயப் பூசல் தொடர்ந்து&amp;lt;br&amp;gt;கொண்டேயிருந்திருக்கின்றன... இந்து சமயத்தை நெறிப்படுத்திய ஆதி சங்கரர்&amp;lt;br&amp;gt;ஆறு வகையான வழிமுறைகளை முறைப்படுத்தினார், அவை, சக்தியை முதன்மைப்&amp;lt;br&amp;gt;படுத்தும் சாக்தம், சிவபெருமானை முதன்மைப் படுத்தும் சைவம், திருமாலை&amp;lt;br&amp;gt;முதன்மைப் படுத்தும் வைணவம், கணபதியை முதன்மைப் படுத்தும் காணபத்யம்,&amp;lt;br&amp;gt;முருகனை முதன்மைப் படுத்தும் கௌமாரம், சூரியனை முதன்மைப் படுத்தும்&amp;lt;br&amp;gt;சௌரம். அபிராமிப் பட்டர் இவ்வாறு சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள்&amp;lt;br&amp;gt;அன்னை அபிராமியே எனக் குறிப்பிடுகின்றார்.&amp;lt;br&amp;gt;&amp;quot;தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் &amp;quot;&amp;lt;br&amp;gt;நற்கதிக்குச் சென்றடைவதற்கு, தேறுவதற்குரிய நெறிமுறைகளைத் தருபவள் அன்னை&amp;lt;br&amp;gt;அபிராமியே.... &amp;quot;சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்&amp;quot;&amp;lt;br&amp;gt;அவளால் நெறிப்படுத்தப் பட்ட ஆறு சமயங்களுக்குத் தலைவியாய் இவளே இருப்பதை&amp;lt;br&amp;gt;அறிந்திருந்தும்... “வேறும் சமயம் உண்டு என்று” வேறு சமயங்கள் உண்டு..&amp;lt;br&amp;gt;அவையே உயர்ந்தது என்று ..”கொண்டாடிய வீணருக்கே..” கொண்டாடும் வீணர்களின்&amp;lt;br&amp;gt;செயலானது... “குன்றில் கொட்டும் தறி குறிக்கும்” மலையை சிறு தடியைக்&amp;lt;br&amp;gt;கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலுக்கு ஒப்பானதாகும்..&amp;lt;br&amp;gt;இன்றைக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரக்கூடிய மோசமான நிகழ்வு இதுதான்..&amp;lt;br&amp;gt;கல்லையும் மண்ணையும் கடவுளென்று வணங்காதீர்கள்.. எங்களிடம் வாருங்கள்..&amp;lt;br&amp;gt;உண்மையான கடவுளைக்காட்டுகிறேன் என்று பேசி மதமாற்றத்தை ஏற்படுத்தும்&amp;lt;br&amp;gt;முயற்சி பெரும்பாலும் நடந்து வருகின்றது.. அந்தக் காலத்திலேயும் இதைப்&amp;lt;br&amp;gt;போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. அதைத்தான் அபிராமிப் பட்டர்..&amp;lt;br&amp;gt;எங்கள் அன்னை வழிப்படுத்திய சமயங்கள் ஆறு... அவை ஆறுக்கும் தலைவி இவளே...&amp;lt;br&amp;gt;இதை விடுத்து வேறு சமயங்களைப் பரப்ப நினைக்கும் அறிவிலிகளே... உங்களால்&amp;lt;br&amp;gt;அது முடியாது... உங்கள் செயல் முட்டாள்த்தனமானது.. மலையை சிறுதடியைக்&amp;lt;br&amp;gt;கொண்டு தகர்க்க நினைக்கும் செயலைப் போன்றது.. எனவே அம்முட்டாள்த்தனத்தை&amp;lt;br&amp;gt;விட்டொழியுங்கள்.. என்கிறார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் அறுபத்து நான்கு&amp;lt;br&amp;gt;வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு&amp;lt;br&amp;gt;பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்&amp;lt;br&amp;gt;பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்&amp;lt;br&amp;gt;காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே&amp;lt;br&amp;gt;விளக்கம் : வீணாகப் பலிகளை வாங்கும் மற்ற தெய்வங்களிடம் சென்று&amp;lt;br&amp;gt;அவர்களிடம் அன்பு செய்ய மாட்டேன்.. உன்னிடம் மட்டுமே அன்பு செய்வேன்.&amp;lt;br&amp;gt;உன்னைப் புகழும் புகழ்ச்சியைத் தவிர வேறு யாரையும் புகழ மாட்டேன்..&amp;lt;br&amp;gt;மண்ணிலும், விண்ணிலும், நான்கு திசைகளிலும், எல்லாவிடத்திலும் உனது&amp;lt;br&amp;gt;திருமேனி பிரகாசத்தையன்றி வேறெதுவும் பார்க்க மாட்டேன்..&amp;lt;br&amp;gt;கடந்த பாடலில் வேறு சமயங்கள் உயர்ந்தவை எனப்பேசும் வீணர்களின் செயலைப்&amp;lt;br&amp;gt;பற்றி விமர்சித்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், மற்ற தெய்வங்களின்&amp;lt;br&amp;gt;செயல்களைப் பற்றிப் பேசுகிறார்.. தேவையான நற்பலன்களை அளிக்க இயலாத&amp;lt;br&amp;gt;தெய்வத்திற்கு செய்யப்படும் பூசனைகள், பலிகள் அனைத்தும் வீணே...&amp;lt;br&amp;gt;அதைத்தான் வீணே பலிகவர் தெய்வம் எனக் குறிப்பிடுகின்றார்.&amp;lt;br&amp;gt;“வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று “ தனக்கு பலி கொடுப்பவனின்&amp;lt;br&amp;gt;தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் வீணாக பலிகளை வாங்கும் சிறு&amp;lt;br&amp;gt;தெய்வங்களிடம் சென்று “மிக்க அன்பு பூணேன் “ அவர்கள் மேல் அன்பு பூண&amp;lt;br&amp;gt;மாட்டேன்.. எனக்குத் தேவையானவற்றைத் தருவதற்குரிய சக்தியில்லாத வேறு&amp;lt;br&amp;gt;தெய்வங்களிடத்து நான் ஏன் அன்பு பூணவேண்டும். நான் அதைச் செய்ய&amp;lt;br&amp;gt;மாட்டேன்.. ஏனெனில் “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் “ நான் உன்மேல் அன்பு&amp;lt;br&amp;gt;பூண்டு கொண்டேன்.. எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் அன்பு அன்னையே...&amp;lt;br&amp;gt;அபிராமியே... உன்மேல் மட்டுமே அன்பு பூண்டிருக்கின்றேன்.. “நின்&amp;lt;br&amp;gt;புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும்” எப்போதும் உன்னைப் புகழ்வதைத்&amp;lt;br&amp;gt;தவிர வேறெதுவும் செய்ய மாட்டேன்.. வேறு யாரையும் புகழ மாட்டேன்..&amp;lt;br&amp;gt;“திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே”&amp;lt;br&amp;gt;மண்ணுலகிலும் சரி..விண்ணுலகிலும் சரி.. நான்கு திசைகளிலும் சரி...&amp;lt;br&amp;gt;எல்லாவிடத்திலும் சரி. உனது திருமேனிப் பிரகாசத்தையன்றி வேறெதுவும் காண&amp;lt;br&amp;gt;மாட்டேன்... “எங்கெங்கு நோக்கினும் சக்தியடா” எனும் முண்டாசுக் கவிஞனின்&amp;lt;br&amp;gt;வரிகள் நினைவுக்கு வருகின்றன... அன்னையின் திருமேனிப் பிரகாசமே&amp;lt;br&amp;gt;எல்லாவிடத்திலும் தனக்குத் தென்படுவதாக உரைக்கும் அபிராமிப் பட்டரின்&amp;lt;br&amp;gt;இப்பாடல் நம் பக்தியின் பலத்தை அதிகரிக்கும்... பாடிப் பாருங்கள்.&amp;lt;br&amp;gt;பக்தியில் இன்புறுங்கள்...&amp;lt;br&amp;gt;மீண்டும் சந்திப்போம்..&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் அறுபத்தைந்து..&amp;lt;br&amp;gt;ககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்&amp;lt;br&amp;gt;தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்&amp;lt;br&amp;gt;முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்&amp;lt;br&amp;gt;மகனும் உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட பெருவெளியும் காணும்படி&amp;lt;br&amp;gt;மன்மதனின் தேகத்தை தகனம் செய்த தவத்திற்சிறந்த சிவபெருமானுக்கு, நீண்ட&amp;lt;br&amp;gt;வலிய திருக்கரங்கள் பன்னிரண்டும், செம்மையான திருமுகங்கள் ஆறும் கொண்ட&amp;lt;br&amp;gt;சிறந்த அறிவுடைய திருமகனான முருகன் மகனாகப் பிறக்கும் சக்தியைக்&amp;lt;br&amp;gt;கொடுத்தது அபிராமி அன்னையே உன் வல்லமை அல்லவா?&amp;lt;br&amp;gt;காமதேவன் மன்மதனை ஐயன் தம் நெற்றிக்கண் திறந்தெரித்த திறமும், அத்திறம்&amp;lt;br&amp;gt;அம்மையிடம் தோற்றுப் போன விதமும் மீண்டும் மீண்டும் அபிராமிப் பட்டரால்&amp;lt;br&amp;gt;பாடப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வாழும் கலை ஆழ்நிலைத்&amp;lt;br&amp;gt;தியானப் பயிற்சி முகாமுக்குச் சென்றிருந்தபோது குருதேவர் கூறிய சில&amp;lt;br&amp;gt;செய்திகள் இதற்குப் பொருந்துகின்றன. நம் உடலின் சக்திச் சக்கரங்களைப்&amp;lt;br&amp;gt;பற்றி விளக்கும் போது சொன்ன சில செய்திகளின் சாராம்சம் இது.. ஒவ்வொரு&amp;lt;br&amp;gt;சக்கரத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை விளக்கிய அவர் ஒன்றிருந்தால்&amp;lt;br&amp;gt;மற்றொன்றில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். காமம் இருக்கும் இடத்தில்&amp;lt;br&amp;gt;ஆக்க சக்தி இருப்பதில்லை.. ஆக்க சக்தி இருக்குமிடத்தில் காமம்&amp;lt;br&amp;gt;இருப்பதில்லை. இது ஸ்வாதிஷ்டனா சக்கரத்தின் இருபக்கங்கள் என்பதைத்&amp;lt;br&amp;gt;தெளிவுபடுத்தினார்.&amp;lt;br&amp;gt;காமனின் தேகத்தை அழித்த ஐயனால் ஓர் அறிவுள்ள, அழகிய திருக்குமரனைப்&amp;lt;br&amp;gt;பெற்றெடுக்க இயன்றது. காமனை அழித்த அதே நெற்றி நெருப்பே குமரன்&amp;lt;br&amp;gt;பிறப்புக்கும் காரணமாய் அமைந்தது.. நம் மனத்தில் இருக்கும் காம இச்சைகளை,&amp;lt;br&amp;gt;மன்மதக் கணைகளை நாம் விலக்கும் போது அவ்விடத்தில், அறிவு ஒளிபெற்ற கந்தன்&amp;lt;br&amp;gt;பிறக்கின்றான். காமன் இடத்தைக் கந்தன் நிரப்புகின்றான்.. காமம்&amp;lt;br&amp;gt;முற்றிலும் குடிகொண்டிருந்தால், கந்தன் பிறப்பதில்லை. இப்பாடலின் மூலம்&amp;lt;br&amp;gt;நாம் பெறவேண்டிய கருத்து இதுதான். உலகம் மன்மதனுக்கு அடிபணிகின்றது..&amp;lt;br&amp;gt;எனவேதான் யாராலும் வெல்லப்படாத தன்மை அவனுக்குக் கிட்டியது... ஆயினும்&amp;lt;br&amp;gt;அவன் ஈசனிடம் தோற்றான். தோற்றவன் அம்மை மூலம் அவ்வீசனையும் வென்றான்..&amp;lt;br&amp;gt;அது அம்மையின் சக்தி...&amp;lt;br&amp;gt;&amp;quot;ககனமும் வானும் புவனமும் காண &amp;quot; மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட&amp;lt;br&amp;gt;உலகமும் காணும்படி...&amp;lt;br&amp;gt;ககனம் எனும் பதத்தைப் பற்றி கடந்த பதிவில் நாம் விளக்கவில்லை..&amp;lt;br&amp;gt;இப்பதமானது சித்தர்களின் உலகத்தைக் குறிக்கின்றது. அவர்கள் மண்ணுலகிலும்&amp;lt;br&amp;gt;இருப்பதில்லை.. விண்ணுலகிலும் இருப்பதில்லை. இடையில் அவர்களுக்கென்று ஒரு&amp;lt;br&amp;gt;உலகம் உள்ளது. மண்ணுலகில் வாழ்வோருக்கும், விண்ணுலகின் அமரர்களுக்கும்&amp;lt;br&amp;gt;ஒரு பாலமாக இவர்கள் செயல்படுகின்றனர். ஆகவே அனைவரும், அண்டசராசரத்தில்&amp;lt;br&amp;gt;உள்ள அத்தனை ஜீவராசிகளும் காணும்படி... &amp;quot; விற்காமன் அங்கம் தகனம் முன்&amp;lt;br&amp;gt;செய்த தவப்பெருமாற்கு &amp;quot; கரும்பினாலான வில்லையுடைய காமனின் உடலை அன்று&amp;lt;br&amp;gt;தனது நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த, தவத்திற்சிறந்த ஈசனுக்கு...&amp;lt;br&amp;gt;&amp;quot;முந்நான்கு&amp;quot; &amp;quot;தடக்கையும்&amp;quot; நீண்ட வலிய பன்னிரு திருக்கரங்களும்,&amp;lt;br&amp;gt;&amp;quot;இருமூன்று&amp;quot; &amp;quot;செம்முகனும்&amp;quot; ஆறு அழகிய சிவந்த திருமுகங்களும், &amp;quot;எனத்&amp;lt;br&amp;gt;தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது &amp;quot; கொண்ட பெருமைகளையுடைய அறிவில்&amp;lt;br&amp;gt;முதிர்ந்த சிறந்த மகனான முருகன் மகனாகப் பிறந்தது &amp;quot;வல்லி நீ செய்த&amp;lt;br&amp;gt;வல்லபமே&amp;quot; &amp;quot;அன்றோ&amp;quot; அபிராமியே... அன்னையே.... உனது வல்லமையால் அன்றோ....?&amp;lt;br&amp;gt;அழகிய திருக்குமரன் ஈசனுக்கு மகனாகப் பிறந்தது அம்மையின் வல்லமை என்பதை&amp;lt;br&amp;gt;அழகுற விளக்கும் பாடல் இது...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் அறுபத்தாறு&amp;lt;br&amp;gt;வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்&amp;lt;br&amp;gt;பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு&amp;lt;br&amp;gt;வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த&amp;lt;br&amp;gt;சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : பசும்பொன்னாலான மேருமலையை வில்லாக வளைத்த ஈசனுடன்&amp;lt;br&amp;gt;வீற்றிருக்கும் அபிராமி அன்னையே... நான் அருஞ்செயல்கள் செய்யும் வல்லமை&amp;lt;br&amp;gt;ஒன்றும் இல்லாதாவன். மிகவும் சிறியவன். நின் மலர்த்திருவடிகளை விடுத்து&amp;lt;br&amp;gt;வேறொன்றின் மீதும் பற்றில்லாதவன். தீவினைகள் புரிபவனாகிய நான் பாடுகின்ற&amp;lt;br&amp;gt;பாடல்கள் குற்றமுடையதாக இருப்பினும் அவை உன் திருநாமங்களைப் போற்றும்&amp;lt;br&amp;gt;துதிப் பாடல்கள் என நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்..&amp;lt;br&amp;gt;அபிராமி அந்தாதி எனும் களஞ்சியத்தை நமக்களித்த அபிராமிப் பட்டர் தம்&amp;lt;br&amp;gt;பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிடுவது நமது அகங்காரத்தின் மீது&amp;lt;br&amp;gt;சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போன்றுள்ளது. பாடல்கள் பாடி அம்மையை நேரில்&amp;lt;br&amp;gt;வரச்செய்யும் வல்லமை படைத்த அவர் தான் வல்லமை ஒன்றும் அறிந்ததே இல்லை&amp;lt;br&amp;gt;என்கிறார். பக்தியிற் சிறந்த பெரியார் (இவ்விடத்துப் பெரியவர் எனப்&amp;lt;br&amp;gt;பொருள் கொள்க...), தம்மை சிறியவன் என்கிறார்.. ஆயினும் அன்னை மேல் கொண்ட&amp;lt;br&amp;gt;பக்தியை உரைக்கையில் மட்டும் உண்மையை உரைக்கின்றார். உனது திருப்பாதங்களை&amp;lt;br&amp;gt;விடுத்து வேறெந்த பொருள்மீதும் பற்றில்லை என்கிறார். தன் பாடல்கள்&amp;lt;br&amp;gt;குற்றம் நிறைந்தவை எனக்குறிப்பிட்டவர் அவை அன்னையைத் துதி செய்யும்&amp;lt;br&amp;gt;தோத்திரப் பாடல்கள் எனக் குறிப்பிடுகின்றார். &amp;quot;பசும் பொற்பொருப்பு&amp;lt;br&amp;gt;வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் &amp;quot; பசும்பொன்னாலான மேரு மலையை வில்லாக&amp;lt;br&amp;gt;வளைத்த ஈசனோடு வீற்றிருக்கும் அபிராமி அன்னையே.. &amp;quot;வல்லபம் ஒன்றறியேன் &amp;quot;&amp;lt;br&amp;gt;அருஞ்செயல்கள் புரியும் வல்லமைகள் ஒன்றும் அறியாதவன். &amp;quot;சிறியேன்&amp;quot;&amp;lt;br&amp;gt;சிறியவன்.&amp;quot; நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் &amp;quot; செம்மையான&amp;lt;br&amp;gt;உனது மலரடிகளை விடுத்து வேறெந்த பற்றுமில்லாதவன். &amp;quot;வினையேன்&amp;quot; தீவினைகள்&amp;lt;br&amp;gt;பல புரிந்தவனாகிய நான் &amp;quot;தொடுத்த சொல்&amp;quot; தொடுத்துத் தரும்&amp;lt;br&amp;gt;இப்பாமாலை..&amp;quot;அவமாயினும்&amp;quot; குற்றம் நிறைந்ததாயினும், &amp;quot; நின் திருநாமங்கள்&amp;lt;br&amp;gt;தோத்திரமே&amp;quot; அவை உனது திருப்பெயர்களை துதிசெய்யும் பாடல்களே... எனவே நீ&amp;lt;br&amp;gt;அவற்றை வெறுக்காது, தள்ளாது ஏற்றுக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 13:39, 20 மார்ச் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சாக்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>