<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17</id>
		<title>அபிராமி அந்தாதி விளக்கவுரை 17 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17&amp;action=history"/>
		<updated>2026-08-15T07:34:48Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17&amp;diff=5319&amp;oldid=prev</id>
		<title>10:13, 21 மார்ச் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17&amp;diff=5319&amp;oldid=prev"/>
				<updated>2011-03-21T10:13:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17&amp;amp;diff=5319&amp;amp;oldid=5306&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17&amp;diff=5306&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: . தமிழகத்தில் ஞானாதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்ட ஒரே&lt;br&gt;திர…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_17&amp;diff=5306&amp;oldid=prev"/>
				<updated>2011-03-20T13:32:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: . தமிழகத்தில் ஞானாதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்ட ஒரே&amp;lt;br&amp;gt;திர…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;. தமிழகத்தில் ஞானாதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்ட ஒரே&amp;lt;br&amp;gt;திருத்தலம்.. தஞ்சை பெரிய கோவிலுக்கும் மூத்த ஆலயம். ஆலயத்தைப் பற்றி&amp;lt;br&amp;gt;மேலும் சில குறிப்புகளைத் தந்துவிடுகின்றேன்.. இவ்வாலயத்தில் தென்படும்&amp;lt;br&amp;gt;கல்வெட்டுக்கள் 36. படிக்கப்பட்டவை 17 மட்டுமே.. மற்றவை யாராலும்&amp;lt;br&amp;gt;புரிந்து கொண்டு படித்தறியப்படவில்லை. அரசாங்கமும் அதற்குரிய முயற்சியினை&amp;lt;br&amp;gt;மேற்கொள்ளவில்லை. இந்த பூமி வந்தோர்க்கெல்லாம் ஞானத்தை அள்ளி&amp;lt;br&amp;gt;வழங்குவதால் ஞானாதீஸ்வரர் என்றழைக்ப்பட்டார். ஞானத்திற்கு ஆதியான ஈசுவரன்&amp;lt;br&amp;gt;எனும் பொருள் படும் பெயர் அது. அருணகிரி நாதரின் திருப்புகழில்&amp;lt;br&amp;gt;போற்றப்படும் முருகன் சன்னிதிகளில் &amp;quot;வயிரவி வனம்&amp;quot; என்று குறிப்பிடப்படும்&amp;lt;br&amp;gt;திருத்தலம் இவ்வைரவமே ஆகும்.. மழவச் சிற்றரசர்கள் இவ்வாலயத்திற்கு 26&amp;lt;br&amp;gt;உற்சவத் திருமேனிகளை வழங்கியிருக்கின்றனர். ஆயினும் பல்வேறு திருட்டு&amp;lt;br&amp;gt;சம்பவங்களால் காணாமல் போய் 1951ல் 16 உற்சவத் திருமேனிகள் மட்டுமே&amp;lt;br&amp;gt;இருந்திருக்கின்றன. பின்னர் 1969ல் 3 சிலைகள் காணாமல் போய் இருக்கின்றன.&amp;lt;br&amp;gt;பின்னர் 1984ல் களவாடப்பட்ட 9 சிலைகளில் தூக்கிச் செல்ல இயலாத அளவுக்குக்&amp;lt;br&amp;gt;கனமான 4 சிலைகள் கோயிலுக்கு அருகில் புதைக்கப் பட்டு இருந்தது&amp;lt;br&amp;gt;கண்டுபிடிக்கப் பட்டு மீட்கப் பட்டன. பின்னர் 1994ல் மேலும் 2 சிலைகள்&amp;lt;br&amp;gt;மீட்கப் பட்டன. தற்போது 10 உற்சவத் திருமேனிகள் மட்டுமே உள்ளன..&amp;lt;br&amp;gt;ஆலயத்தின் மொத்த சொத்துக்களின் மதிப்பு என்ன என்பது யாருக்குமே&amp;lt;br&amp;gt;தெரியவில்லை. ஒரு கல்வெட்டில் சங்கலாரப்பன் என்பவர் அன்னைக்கு&amp;lt;br&amp;gt;நவரத்தினங்கள் பதித்த 79 ஆபரணங்கள் வழங்கிய செய்தி உள்ளது. ஆனால்&amp;lt;br&amp;gt;அவ்வாபரணங்கள் இப்போது எவ்விடம் உள்ளது என்பதே தெரியவில்லை. அந்நியர்&amp;lt;br&amp;gt;படையெடுப்பால் அவை களவாடப் பட்டனவா அல்லது கொள்ளையருக்கு அஞ்சி ஆலயத்தில்&amp;lt;br&amp;gt;எங்காவது புதைக்கப் பட்டதா என்பது தெரியவில்லை.&amp;lt;br&amp;gt;ஒரு கல்வெட்டு செய்தி இவ்வாறு தெரிவிக்கின்றது.&amp;lt;br&amp;gt;&amp;quot;பூமாது விரும்பிப் புகழ&amp;lt;br&amp;gt;மயிலிறகுடந்தையுக தானினிது உயர&amp;lt;br&amp;gt;தாரறிவுந் தழைத்திட கயலிணையிட்ட கல்லடியில்&amp;lt;br&amp;gt;ஆலய தனமும் ஆபரணங்களும் அடங்குக...&amp;quot; இதன் செய்தி யாராலும் புரிந்து கொள்ள&amp;lt;br&amp;gt;இயலவில்லை.. எனவே அச்செய்தியின் படி ஆலயத்தில் எங்காவது மறைக்கப்&amp;lt;br&amp;gt;பட்டிருக்கலாம் என்ற ஐயமும் உள்ளது.. 1961 அரசாங்க ஆவணத்தின் படி&amp;lt;br&amp;gt;ஞானாதீஸ்வரருக்குச் சொந்தமாக 1 ஏக்கர் 84 செண்ட் நஞ்சை, 50 ஏக்கர் 35&amp;lt;br&amp;gt;செண்ட் புஞ்சை, 45 செண்ட் தென்னந்தோப்பு, ஒரு நந்தவனம், ஒரு வீடு ஆகியவை&amp;lt;br&amp;gt;இருப்பதாகத் தெரிவிக்கின்றது. ஆனால் அவை தற்சமயம் யாரால் அனுபவிக்கப்&amp;lt;br&amp;gt;பட்டு வருகின்றது என்பதும் தெரியவில்லை.. சிவனடியார்களின்... அன்னை&amp;lt;br&amp;gt;சிவகாமியின் அன்பர்களின் பெருமுயற்சியால் 07.12.1994 அன்று ஆலயத்துக்குக்&amp;lt;br&amp;gt;கும்பாபிடேகம் நடந்தது.. ஆலயம் புனரமைக்கப் பட்டது.. அதன்பின்னரே&amp;lt;br&amp;gt;ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை ஆரம்பமானது..&amp;lt;br&amp;gt;அனைவரும் வைரவம் சென்று அன்னை சிவகாமியையும் ஐயன் ஞானாதீஸ்வரரையும்&amp;lt;br&amp;gt;வழிபட்டு வளம் பெறுவோம்.. &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குள்ள சிவகாமி&amp;lt;br&amp;gt;அன்னையின் திருமேனி மிகவும் பழமையாகி விட்டதால் அதன் மூக்கின் ஒருபுறம்&amp;lt;br&amp;gt;சிறிதளவு தேய்ந்து விட்டது.. இதனால் அத்திருமேனியை மாற்றிவிட முயற்சி&amp;lt;br&amp;gt;மேற்கொள்ளப் பட்டது. அன்றைய தினமே அன்னை சிவகாமி ஆலய குருக்களின் கனவில்&amp;lt;br&amp;gt;தோன்றி &amp;quot;உன் தாய் வயதாகி விட்டாள் என்பதற்காக தாயை நீ மாற்றிவிடுவாயா?&amp;quot;&amp;lt;br&amp;gt;என்று கேட்டாளாம். எனவே அந்த முடிவு கைவிடப்பட்டது.. இன்றும் சற்று உற்று&amp;lt;br&amp;gt;கவனித்தால் அன்னையின் திருமேனியில் அந்த பழைமையான அழகினைக் காணலாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் அறுபத்தொன்று&amp;lt;br&amp;gt;நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து&amp;lt;br&amp;gt;நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்&amp;lt;br&amp;gt;பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்&amp;lt;br&amp;gt;தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : அபிராமி அன்னையே... மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே..&amp;lt;br&amp;gt;சிவந்த விழிகளையுடைய திருமாலின் அன்புத் தங்கையே... நாயைப் போன்ற கீழோனான&amp;lt;br&amp;gt;என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி, விரும்பி இவ்விடம் வந்து, நீயே&amp;lt;br&amp;gt;நினைவில்லாது என்னை ஆண்டு கொண்டாய். உன்னை உள்ளபடியே அறிந்துகொள்ளும்&amp;lt;br&amp;gt;ஞானத்தையும் எனக்குத் தந்தருளினாய்.. இதற்கு நான் என்ன பேறு பெற்றேன்..&lt;br /&gt;
&lt;br /&gt;
மணிவாசகப் பெருமான் தனது திருவாசகத்தில் குறிப்பிடும் அடிகள் நினைவுக்கு&amp;lt;br&amp;gt;வந்தன.. &amp;quot;நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான&amp;lt;br&amp;gt;தத்துவனே&amp;quot;..அதன்பொருள்தான் இப்பாடலில் மறைந்திருப்பதாக உணர்ந்தேன்.&amp;lt;br&amp;gt;தெருக்கோடியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு நாய் குட்டிகளை&amp;lt;br&amp;gt;ஈன்றிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.. நாம் அவ்விடம் போய்&amp;lt;br&amp;gt;வரும்போது, &amp;quot;நம் வீட்டு நாய்க்குட்டி எவ்வளவு அழகாக இருக்கின்றது...&amp;lt;br&amp;gt;ஆனால் இந்த நாய்க்குட்டி எவ்வளவு அசிங்கமாக இருக்கின்றது&amp;quot; என்று&amp;lt;br&amp;gt;எண்ணுவோம்.. அந்நாய்க்குட்டி நம் காலைச் சுற்றி வந்தால் &amp;quot;தூரப்போ நாயே&amp;quot;&amp;lt;br&amp;gt;என விரட்டுவோம். மாநகராட்சிக்கு அலைபேசியில் தகவல் தந்து&amp;lt;br&amp;gt;அந்நாய்க்குடும்பத்தை இல்லாதபடி செய்து விடுவோம்.. மாநகராட்சி வண்டி&amp;lt;br&amp;gt;வந்து அந்நாய்க்குட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியைக் கண்டு அந்த&amp;lt;br&amp;gt;தாய் நாய் சும்மா இருக்குமா? நாம் நமக்கென்ன என்று இருப்போம். அல்லது&amp;lt;br&amp;gt;தெரு சுத்தமாகிறதே என்று மகிழ்வோம்.. ஆனால் அந்த தாய் நாய்.??&amp;lt;br&amp;gt;குரைக்காதா?? விரட்டாதா?? நாயாக இருப்பினும் அதற்கும் ஒரு தாய்&amp;lt;br&amp;gt;உண்டல்லவா? அத்தாயின் அன்பு தன் குட்டி நாய்மீது குறைவதுண்டோ? இன்னொரு&amp;lt;br&amp;gt;உதாரணம்.. தெருவிலே பிச்சை எடுக்கின்ற அழுக்கு உடைகளை அணிந்த சிறு&amp;lt;br&amp;gt;குழந்தைகளைக் காணுங்கள். நம் மகிழ்வுந்தை நோக்கி அவர் வரும் வேளை, நாம்&amp;lt;br&amp;gt;அவர்களை விரட்டி விடுவோம்.. ஆனால் அவர்களின் தாய் அவர்களை வெறுப்பதுண்டோ?&amp;lt;br&amp;gt;நீ குளிக்கவில்லை.. அழுக்குப் பிள்ளை அருகே வராதே ! எனத் தடுப்பதுண்டோ?&amp;lt;br&amp;gt;இல்லையல்லவா?? ஆனால் இறைவன் அத்தாயை விட சிறந்த குணம் படைத்தவன். தாயின்&amp;lt;br&amp;gt;அன்பைவிட இறையன்பு உயர்ந்தது... அன்னை அபிராமியானவள் அபிராமிப் பட்டரை&amp;lt;br&amp;gt;ஏன் தேடி வந்தாள்? அவர் மீது அவள் கொண்ட அன்பினாலேயே...&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;தாயே&amp;quot; அபிராமி அன்னையே... &amp;quot;மலைமகளே&amp;quot; மலையரசன் இமவான் பெற்றெடுத்த&amp;lt;br&amp;gt;மலைமகளே... &amp;quot;செங்கண்மால் திருத்தங்கச்சியே&amp;quot; சிவந்த கண்களையுடைய&amp;lt;br&amp;gt;திருமாலின் தங்கையே...&amp;quot;பவள வாய் கமலச் செங்கண்&amp;quot; என்னும் ஆழ்வார்ப்&amp;lt;br&amp;gt;பாசுரம் நினைவுக்கு வந்தது... தங்கையை தங்கச்சி என்று சொல்லலாம். அதென்ன&amp;lt;br&amp;gt;திருத் தங்கச்சி..?? ஆதிபராசக்தியாக திருமாலைப் படைத்த தேவிதான் மலைமகளாக&amp;lt;br&amp;gt;அவதரித்து ஈசனை மணந்து கொண்டபோது திருமாலின் தங்கையாகின்றாள்.&amp;lt;br&amp;gt;அச்சமயத்தில் அவளுக்குரிய மதிப்பை ஏற்றியுரைக்க &amp;quot;திருத்தங்கச்சி&amp;quot; என&amp;lt;br&amp;gt;அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். மேலும் மற்ற தங்கையரிடமிருந்து&amp;lt;br&amp;gt;நாராயணனின் தங்கை வேறுபட்டவள். உயர்ந்தவள் என்று குறிப்பதற்காகவும்&amp;lt;br&amp;gt;இவ்வண்ணம் உரைத்தார். &amp;quot;நாயேனையும் இங்கு ஒரு பொருளாக &amp;quot; நாயைப் போன்ற&amp;lt;br&amp;gt;கேவலமான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி... இந்த காலத்தில் நாயையெல்லாம்&amp;lt;br&amp;gt;கேவலம் என்று எண்ணுதல் தவறு என்று நினைக்கின்றேன் (தெருநாய்களைத் தவிர..&amp;lt;br&amp;gt;ஆனால் அவைதான் அன்பு மிக்கவை).. நம் கிராமத்தில் ஆடுகள் நிறைய&amp;lt;br&amp;gt;வைத்திருப்போர் அவ்வாடுகளை மந்தையாக மேய்ப்பதற்கு அழைத்துச்&amp;lt;br&amp;gt;செல்வதுண்டு.. ஆனால் ஒரேயொரு ஆடு வைத்திருப்போர், அதை ஒரு கயிற்றால்&amp;lt;br&amp;gt;கட்டி அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, மேய்ப்பதற்கு அழைத்துச்&amp;lt;br&amp;gt;செல்வார்கள்.. பெருநகரில் அதிகாலை, சங்கிலியால் நாயைப் பிடித்துக் கொண்டு&amp;lt;br&amp;gt;நடைபயிற்சி மேற்கொள்ளும் அன்பர்களைக் கண்டால் எனக்கு, கிராமத்துக்&amp;lt;br&amp;gt;காட்சிகளே நினைவுக்கு வரும்.. &amp;quot;ஏன் நாயை மேய்க்கிறாங்க...?&amp;quot; என்று&amp;lt;br&amp;gt;வியப்பேன். மேலும் நமக்கு வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்&amp;lt;br&amp;gt;கொடுக்கக் கூட பணம் இருக்காது.. ஆனால், அவர்கள் நாயை மகிழ்வுந்தில்&amp;lt;br&amp;gt;மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்... சரி.. இந்த இடத்தில் நாம&amp;lt;br&amp;gt;பழையகாலத்தில் நாய்களுக்கு இருந்த நிலையை மனத்தில் கொள்வோம்.. &amp;quot;நயந்து&amp;lt;br&amp;gt;வந்து&amp;quot; விரும்பி இங்கே வந்து &amp;quot;நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் &amp;quot; நீயே&amp;lt;br&amp;gt;நினைவில்லாது தன்னை மறந்து என்னை ஆண்டு கொண்டாய்...அதுதான் அபிராமிப்&amp;lt;br&amp;gt;பட்டர் பெற்ற பேறு &amp;quot;பேயேன்&amp;quot; பேயேனாகிய எனக்கு ... இந்த வழக்குச் சொல்&amp;lt;br&amp;gt;கிராமத்து மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.. யாரையாவது&amp;lt;br&amp;gt;திட்டும்போது &amp;quot;அட பேயா&amp;quot; எனத் திட்டுவதுண்டு.. எங்காவது ஏமாந்து வந்து&amp;lt;br&amp;gt;நின்றால், &amp;quot; நீ பேயன் தான..&amp;quot; என்று சொல்லும் வழக்கும் உண்டல்லவா? பேயேன்&amp;lt;br&amp;gt;என்றால் அறிவில்லாதவன்... பேயைப் போன்றவன்... என்று பொருள் கொள்க..&amp;lt;br&amp;gt;&amp;quot;நின்னை உள்ள வண்ணம்&amp;quot; உன்னை உள்ளபடியே....&amp;quot;அறியும் அறிவு தந்தாய் &amp;quot;&amp;lt;br&amp;gt;அறிந்து கொள்ளும் அறிவினை எனக்குத் தந்தருளினாய்.. &amp;quot;என்ன பேறு பெற்றேன்&amp;quot;&amp;lt;br&amp;gt;இதனைப் பெறுவதற்கு நான் என்ன பேறு பெற்றேனோ...?&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் அறுபத்திரண்டு&amp;lt;br&amp;gt;தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத&amp;lt;br&amp;gt;வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்&amp;lt;br&amp;gt;கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்&amp;lt;br&amp;gt;செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை அழித்து, மதங்கொண்டு&amp;lt;br&amp;gt;சிவந்த கண்களையுடைய யானையின் தோலை தன் மேனியில் போர்த்திய சிவபெருமானின்&amp;lt;br&amp;gt;திருமேனியை அடைய, உன் திருமுலைகளை அம்பாகக் கொண்டு குறிவைத்த நாயகியே...&amp;lt;br&amp;gt;பொன்னைப் போன்ற சிவந்த திருக்கரங்களில், கரும்பு வில்லையும்,&amp;lt;br&amp;gt;மலரம்புகளையும் கொண்ட உனது திருக்கோலம் எப்போதும் என் சிந்தையில்&amp;lt;br&amp;gt;நிற்கின்றது...&amp;lt;br&amp;gt;அபிராமிப் பட்டர் அடிக்கடி ஈசனை அம்மையானவள் தோற்கடித்த விதத்தைப்&amp;lt;br&amp;gt;பாடுகின்றார்.. யாராலும் வெல்லப்படாதவனாலும் (மன்மதனாலும்) கூட&amp;lt;br&amp;gt;வெல்லமுடியாத ஈசனை உன் திருமுலைகளால் வெற்றி கொண்ட அன்னையே .. எனப்&amp;lt;br&amp;gt;பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அன்னையின் கொங்கைகளை அம்புக்கு&amp;lt;br&amp;gt;ஒப்பிடுகின்றார்.. ஈசன் பொன் நிறைந்த மேருமலையை வில்லாக வளைத்தான்..&amp;lt;br&amp;gt;முப்புரங்களை அழித்தான்.. மதங்கொண்ட யானையின் தோலையுரித்து தன்&amp;lt;br&amp;gt;ஆடையாக்கிக் கொண்டான்.. நீ என்ன செய்தாய்.. அவனை எதிர்த்து இரு அம்புகளை&amp;lt;br&amp;gt;விட்டாய்.. அவை... உன் கொங்கைகள்... அவனும் வீழ்ந்தான்.. அவனது இடப்பாகம்&amp;lt;br&amp;gt;நீ குடியேறிவிட்டாய்.. என்று பாடுகின்றார்... அன்னையின் வெற்றி, ஈசனது&amp;lt;br&amp;gt;வெற்றியை ஒன்றுமில்லாதது ஆக்கி விடுகின்றதே என வியக்கின்றார்..&amp;lt;br&amp;gt;(இன்னிக்கு நாட்டுல பலபேர் நிலை அதானே அப்படின்னு சிலர் முணுமுணுப்பது&amp;lt;br&amp;gt;கேட்கின்றது)&amp;lt;br&amp;gt;&amp;quot;தங்கச் சிலை கொண்டு தான் அவர் முப்புரம் சாய்த்து&amp;quot; பொன்மலையாம்&amp;lt;br&amp;gt;மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்து, &amp;quot;மத வெங்கண் கரி உரி&amp;lt;br&amp;gt;போர்த்த செஞ்சேவகன் &amp;quot; மதம் நிறைந்த, வெம்மையான கண்களைக் கொண்ட யானையின்&amp;lt;br&amp;gt;தோலை தன் மேனியின் மீது போர்த்திய செஞ்சேவகனான ஈசன் &amp;quot;மெய்யடையக்&amp;quot;&amp;lt;br&amp;gt;திருமேனியையடைய.. அவனது திருமேனியின் இடப்பாகத்தை அடைய... &amp;quot;கொங்கைக்&amp;lt;br&amp;gt;குரும்பைக் குறியிட்ட நாயகி&amp;quot; கொங்கையெனும் அம்பினைக் கொண்டு குறிவைத்த&amp;lt;br&amp;gt;நாயகியே... அபிராமி அன்னையே... ஆதிபராசக்தியே... &amp;quot;கோகனகச் செங்கைக்&amp;lt;br&amp;gt;கரும்பும் மலரும் &amp;quot; சிறந்த பொன்னையொத்த உனது சிவந்த திருக்கரங்களில் நீ&amp;lt;br&amp;gt;ஏந்திய கரும்பு வில்லும், மலர் அம்புகளும்.. &amp;quot;எப்போதும் என் சிந்தையதே&amp;quot;&amp;lt;br&amp;gt;எச்சமயமும் என் சிந்தையில் நீங்காதிருக்கின்றன....&amp;lt;br&amp;gt;அன்னையை உன் உருவம் என் சிந்தையில் நீங்காது எனக் குறிப்பிடுகின்றார்.&amp;lt;br&amp;gt;ஏன் கரும்பு வில்லையும், மலரம்புகளையும் குறிப்பிடவேண்டும்..? ஏற்கெனவே&amp;lt;br&amp;gt;சொன்னது போல், என் மனமென்னும் கரும்பை நீ வில்லாகக் கொள்... என்&amp;lt;br&amp;gt;இந்திரியங்களை உன் கணைகளாகக் கொள்...அப்படி உன்னைக் காணும்&amp;lt;br&amp;gt;திருக்கோலம்தான் நான் என்றென்றும் சிந்தையில் கொண்டிருக்கும்&amp;lt;br&amp;gt;திருக்கோலம். என் மனமும் உன் கையில்.. என் இந்திரியங்களும், அவற்றின்&amp;lt;br&amp;gt;இச்சைகளும் உன் கையில்... அபிராமி... நீயே வழி நடத்து....&amp;lt;br&amp;gt;தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 13:32, 20 மார்ச் 2011 (UTC)&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சாக்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>