<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884</id>
		<title>அபிராமி அந்தாதி விளக்கவுரை4 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;action=history"/>
		<updated>2026-07-25T20:09:09Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;diff=4866&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: அபிராமி அந்தாதி விளக்கவுரை 5, அபிராமி அந்தாதி விளக்கவுரை4 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்ட</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;diff=4866&amp;oldid=prev"/>
				<updated>2011-02-20T08:36:15Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;a href=&quot;/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_5&quot; title=&quot;அபிராமி அந்தாதி விளக்கவுரை 5&quot;&gt;அபிராமி அந்தாதி விளக்கவுரை 5&lt;/a&gt;, &lt;a href=&quot;/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&quot; title=&quot;அபிராமி அந்தாதி விளக்கவுரை4&quot;&gt;அபிராமி அந்தாதி விளக்கவுரை4&lt;/a&gt; என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்ட&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;08:36, 20 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;diff=4842&amp;oldid=prev</id>
		<title>10:11, 17 பெப்ரவரி 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;diff=4842&amp;oldid=prev"/>
				<updated>2011-02-17T10:11:42Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;amp;diff=4842&amp;amp;oldid=4820&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;diff=4820&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: பாடல் பதின்மூன்று&lt;br&gt;*  பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%884&amp;diff=4820&amp;oldid=prev"/>
				<updated>2011-02-15T11:45:35Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: பாடல் பதின்மூன்று&amp;lt;br&amp;gt;*  பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;பாடல் பதின்மூன்று&amp;lt;br&amp;gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்&lt;br /&gt;
&lt;br /&gt;
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே&lt;br /&gt;
&lt;br /&gt;
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த அபிராமித்தாயே... !&amp;lt;br&amp;gt;அப்பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த வண்ணம் காத்து வருபவளே... பின் அவற்றை&amp;lt;br&amp;gt;உன்னுள் மறைத்துக் கொண்டவளே... நீலநிறங்கொண்ட கழுத்தினையுடைய சிவனுக்கும்&amp;lt;br&amp;gt;மூத்தவளே... என்றென்றும் இளமையாகக் காட்சியளிக்கும் கண்ணனுக்கும்&amp;lt;br&amp;gt;இளையவளே.. மாபெரும்&amp;lt;br&amp;gt;தவம் செய்பவளே... உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவது முடியுமா????&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த பாடலில் ஏழுலகையும் பெற்றெடுத்தவளே என்று அபிராமியன்னையை விளிக்கும்&amp;lt;br&amp;gt;அபிராமிப் பட்டர் இப்பாடலில் புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே...&amp;lt;br&amp;gt;என்று விளிப்பது சற்றே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.. நமது சிற்றறிவுக்குத்&amp;lt;br&amp;gt;தோன்றிய சிறு விளக்கத்தை இவ்விடத்துத்தந்துள்ளேன்... அன்பர் மோகனரங்கம் போன்ற&amp;lt;br&amp;gt;பெரியோர் இது தவறெனில் திருத்தி, சரியான கருத்தைப் பதிவிடுக (&amp;lt;br&amp;gt;வலைப்பதிவிலும்தான்...) நாம் சிறுவயதில் பள்ளியில் பயிலும் நேரத்தில் கதை சொன்ன&amp;lt;br&amp;gt;பெரியோர்களெல்லாம் ஏழு என்ற எண்ணைக் கணக்கில் கொண்டனர். ஏழு கடல், ஏழு மலை...&amp;lt;br&amp;gt;என்றெல்லாம் இளவரசியைத் தேடும் கதைகள் அவை... அவை போல் அச்சமயத்தில் மாந்தர்&amp;lt;br&amp;gt;வாழும் பூவுலகம் ஏழு என்ற கணக்கு வழக்கில் வழக்கில் இருந்தது.. மேலும் அமரலோகம்&amp;lt;br&amp;gt;ஏழு என்ற கணக்கும் வழக்கில் இருந்திருக்கலாம் என்பது நமது கணிப்பு... எனவேதான்&amp;lt;br&amp;gt;மாந்தர் வாழும் ஏழுலகையும் படைத்தவளே என்று கடந்த பாடலில் குறிப்பிடும் பட்டர்...&amp;lt;br&amp;gt;இவ்விடத்து மாந்தர் வாழும் பூலோகம் ஏழு, அமரர் வாழும் தேவலோகம் ஏழு என்று கருதி&amp;lt;br&amp;gt;புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று பாடியிருக்கலாம்... இது&amp;lt;br&amp;gt;எமது ஒரு கணிப்புதானேயன்றி, இதைத்தாண்டி விளக்கமளித்திட தேர்ந்த வேத ஞானம்&amp;lt;br&amp;gt;எமக்கு இல்லை... அறிந்தோர் பெரியோர் அறிவித்தால் அறிந்து கொள்வோம்.... (&amp;lt;br&amp;gt;ஈரேழுலகும் எனக்குறவாக... கந்தர் சஷ்டி கவசம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
பூத்தவண்ணம் காத்தவளே... ஈரேழு பதினான்குலகையும் எங்ஙனம் பெற்றெடுத்தாயோ...&amp;lt;br&amp;gt;அவ்வண்ணவமே காப்பவளே.... முன்னர் ஒரு பாடலில் குறிப்பிட்டது போல் உலகைக்காக்க&amp;lt;br&amp;gt;நஞ்சுண்டு, தமது கழுத்து நீல நிறமானதால், திருநீலகண்டர் எனப் பெயர் பெற்ற&amp;lt;br&amp;gt;சிவபெருமானுக்கும் மூத்தவளே.... அவ்விடத்துச் சொல்ல மறந்ததொரு செய்தியை (?)&amp;lt;br&amp;gt;இவ்விடத்துத் தருகிறேன்... கல்லூரி பயிலும்போது மொழிப்பாடத்தில் கோளறு&amp;lt;br&amp;gt;திருப்பதிகத்தின் &amp;quot;வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்..&amp;quot; எனும் பாடல் இருந்தது...&amp;lt;br&amp;gt;இதற்கு விளக்கமளிக்கும்போது எமது தமிழாசிரியர் திரு. பெரியநாயகம் ஜெயராஜ் ஒரு&amp;lt;br&amp;gt;தமாசான செய்தியைக் கூறினார். வேடிக்கைக்காக மட்டுமே.. சிவனையும் சக்தியையும்&amp;lt;br&amp;gt;இன்றைய தம்பதியருக்கு ஒப்பிட்டுக் கூறினார் ஒரு முறை சிவனுக்கும் சக்திக்கும்&amp;lt;br&amp;gt;ஏதோ கருத்து வேறுபாடு... அவ்வமயம் சிவனை சக்தி துரத்தி கொண்டு வர (அதே சமயம்&amp;lt;br&amp;gt;அங்கே பாற்கடலைக் கடைந்த விடம் துரத்திவர அமரர்களும் அசுரர்களும் சிவலோகத்தை&amp;lt;br&amp;gt;நோக்கி ஓடி வர... ) அவ்விடத்து வந்த நஞ்சைக் கையால் அள்ளி சக்தியின்&amp;lt;br&amp;gt;தொல்லையிலிருந்து மீண்டு விடலாம் என்று குடித்து விட்டார். நின்று விட்டார்.&amp;lt;br&amp;gt;இதையறியாத அன்னையோ... சிவனை மாய்த்துவிட அவர் கழுத்தை நெறித்தாள்... இதனால்தான்&amp;lt;br&amp;gt;அந்த நஞ்சு அவ்விடத்து நின்று சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற அழகியதொரு&amp;lt;br&amp;gt;பெயரைப் பெற்றுத் தந்தது....விடமும் ஒழிந்தது. அனைவரும் காப்பாற்றப் பட்டனர்...&amp;lt;br&amp;gt;சக்தியும் சிவனும் சிரித்து மகிழ்ந்தனர்... என்று குறிப்பிட்டார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக அப்படிப்பட்ட சிவனுக்கும் மூத்தவள் என் அபிராமி அன்னை என்று பாடுகிறார்&amp;lt;br&amp;gt;அபிராமிப் பட்டர் (பலமுறைக் குறிப்பிட்ட செய்திதான்... அன்னை சக்தியே&amp;lt;br&amp;gt;அகிலத்தைப் படைத்தாள்.. அவளே ஆதிசக்தி என்பது சக்தி வழிபாடு செய்வோரின் கருத்து&amp;lt;br&amp;gt;).&amp;lt;br&amp;gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே... *இவ்விடத்துப் பாருங்கள்... என்றும்&amp;lt;br&amp;gt;ஆனந்தமளிக்கும் திருநாமத்தைக் கொண்ட கண்ணபிரானை நினைவூட்டுகிறார். ஊழிக்காலத்து&amp;lt;br&amp;gt;உலகம் அழியும் வேளையில் கண்ணபிரான் சிறு குழந்தையாக ஆலிலையில் மிதந்து வருவார்&amp;lt;br&amp;gt;என்பது வைணவர்களின் நம்பிக்கை... எனவே என்றென்றும் இளமையாகத் தோற்றமளிக்கும்&amp;lt;br&amp;gt;முகுந்தனுக்கு மலைமகள் தங்கைமுறையாவாள்... எனவேதான் என்றும் மூப்பெய்தாத&amp;lt;br&amp;gt;முகுந்தனுக்கு இளையவளே... என்று விளிக்கின்றார்...&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்விடத்தும் ஒரு முரண்பாடு... சிவனுக்கு மூத்தவளாம், முகுந்தனுக்கு இளையவளாம்...&amp;lt;br&amp;gt;எப்படி இது திண்ணம்?? என்று வினவுவோர் உண்டு... ...என்று வினவுவோர் உண்டு... மீண்டும் பழைய பல்லவிதான்...&amp;lt;br&amp;gt;ஆதிசக்தியே அகிலத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள்.&amp;lt;br&amp;gt;அவர்களுக்குத் துணையாகத் தாமே முப்பெருந்தேவியராக உருவெடுத்தாள்...&amp;lt;br&amp;gt;புரிந்ததல்லவா???&lt;br /&gt;
&lt;br /&gt;
மாத்தவளே... மா தவம் புரிபவளே.... மாபெரும் தவ வலிமை கொண்ட என் அபிராமி&amp;lt;br&amp;gt;அன்னையே....&amp;lt;br&amp;gt;உனைவிடுத்து வேறொரு தெய்வத்தை நான் வணங்க முடியுமா??? உன்னை மட்டும்தான் வணங்க&amp;lt;br&amp;gt;இயலும் என்று இப்பாடலை முடிக்கிறார் அபிராமிப் பட்டர்...&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் பதினான்கு&amp;lt;br&amp;gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே&lt;br /&gt;
&lt;br /&gt;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே&amp;lt;br&amp;gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
விளக்கம் : எங்கள் பிராட்டியான அபிராமி அன்னையே... என்றும் உன்னை வணங்கும்&amp;lt;br&amp;gt;தேவர்கள், அரக்கர்கள் . உன்னை என்றும் தியானத்தில் கொண்டு திசைகொரு முகம்&amp;lt;br&amp;gt;கொண்டிருக்கும் பிரம்மன், நாராயணன், உன்னைத் தன் அன்பால் பந்தமெனக் கொண்ட&amp;lt;br&amp;gt;என்றும் அழிவில்லாத பரமானந்தரான பரமசிவன் இவர்களெல்லாம் தவமிருப்பது உன்னைத்&amp;lt;br&amp;gt;தரிசனம் செய்வதற்காகத்தான். உன் கருணையைப் பெறுவதற்காகத்தான்... ஆனால் இவர்கள்&amp;lt;br&amp;gt;எல்லாரையும் விட்டுவிட்டு இந்த பூவுலகில் உன்னை வணங்கித் தரிசனம்&amp;lt;br&amp;gt;செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னையே.. அபிராமித்தாயே... பார்... அமரர் அனைவரும் உன் கருணையைப் பெற்வதற்காக&amp;lt;br&amp;gt;உன்னை எண்ணித் தவமியற்றுகின்றனர். அவர்களைப் போலத்தான் அசுரகுலத்துதித்தோரும்&amp;lt;br&amp;gt;உன் கருணைக்காகக் காத்திருக்கின்றனர். சிந்திப்பவர் நற்றிசை முகர்...&amp;lt;br&amp;gt;என்றென்றும் உன்னை எண்ணியே தியானம் செய்யும் நல்திசை முகர்... நான்கு&amp;lt;br&amp;gt;திசைகளுக்கும் ஓரொரு முகமாகக் கொண்ட நான்முகர் பிரம்மரும் உன் கருணைக்காகத்தான்&amp;lt;br&amp;gt;காத்திருக்கின்றார்... காத்தற்கடவுளான அத்திருமாலும் காத்திருப்பது உனது&amp;lt;br&amp;gt;அருளுக்காகத்தான். தனது அன்பால் உன்னைப் பந்திப்பவர்... கட்டிப் போடுபவர்...&amp;lt;br&amp;gt;என்றும் அழியாப் பரமானந்தரான பரமசிவனும் உன்னருளைப் பெறக் காத்துக்&amp;lt;br&amp;gt;கிடக்கின்றார்.. ஆனால் இவர்களையெல்லாம் விட இந்தப் பாரில் உன்னைச்&amp;lt;br&amp;gt;சந்திப்பவர்க்கு - உன்னைத் தரிசனம் செய்வோருக்கு...வணங்குவோருக்கு.... எளிதாம்&amp;lt;br&amp;gt;எம்பிராட்டி நின் தண்ணளியே... மிக எளிதாக உன் கருணை கிடைக்கின்றது எங்கள்&amp;lt;br&amp;gt;பிராட்டியான அபிராமியே....&lt;br /&gt;
&lt;br /&gt;
காணுங்கள்.. யாருக்குமே கிடைத்திடாத அருமையான தேவியின் கருணை இவ்வுலகில் பிறந்த&amp;lt;br&amp;gt;மாந்தருக்குக் கிடைப்பதை எண்ணி அபிராமிப்பட்டர் வியப்பதை....! அதுதான் அபிராமி&amp;lt;br&amp;gt;அன்னையின் பெருங்கருணை... அவள் அருளைப் பெறுவதற்கு மந்திரங்கள் செபிக்க&amp;lt;br&amp;gt;வேண்டாம்... மறைகள் ஓத வேண்டாம்... விரதங்கள் காக்க வேண்டாம்... அன்னையின்&amp;lt;br&amp;gt;திருநாமத்தையே மனத்தில் தியானித்து அவளது உருவைத் தரிசித்தாலே போதுமானது..&amp;lt;br&amp;gt;அவளது கருணை மிக எளிதில் நமக்குக் கிடைத்துவிடும்... இது அபிராமிப் பட்டரின்&amp;lt;br&amp;gt;வாக்கு... நாமும் நம் மனத்தில் இவ்வழகிய நவராத்திரி நாட்களில், அன்னையைத்&amp;lt;br&amp;gt;தியானித்து அபிராமி அந்தாதியைப் பாடி அவள் அருளைப் பெறுவோமாக...&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்... நன்றி...&amp;lt;br&amp;gt;தங்களது மேலான கருத்துக்களைப் பின்னூட்டம் இடுங்கள்... எங்கேனும் நமது&amp;lt;br&amp;gt;விளக்கத்தில் தவறு இருப்பின், தயவுசெய்து தெரியப் படுத்துங்கள்..&amp;lt;br&amp;gt;திருத்திக்கொள்ளலாம். நன்றி... &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 11:45, 15 பெப்ரவரி 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சாக்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>