<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81</id>
		<title>அந்தத் தொடிசு - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81&amp;action=history"/>
		<updated>2026-06-09T12:53:21Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81&amp;diff=8401&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: '''7. அந்தத் தொடிசு'''   '''உ.வே.சா.நினைவு மஞ்சரி'''   '''முதல்பாகம்'''   கும…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81&amp;diff=8401&amp;oldid=prev"/>
				<updated>2011-10-20T19:42:14Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;7. அந்தத் தொடிசு&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;உ.வே.சா.நினைவு மஞ்சரி&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;முதல்பாகம்&amp;#039;&amp;#039;&amp;#039;   கும…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''7. அந்தத் தொடிசு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''உ.வே.சா.நினைவு மஞ்சரி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முதல்பாகம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கும்பகோணம் காலேஜில் நான் வேலை பார்த்து வந்தபோது, கடைசியாக 1894-ஆம் வருஷம் முதல் காவிரியாற்றின் ஓரத்தில் சகாஜி நாயகர் தெருவில் உள்ள என் சொந்த வீட்டில் வசித்து வந்தேன். அப்போது ஒருநாள் என் புத்தக ஆராய்ச்சி வேலைக்கு உதவியாக இருந்த ஒரு நண்பரும் நானும் என் ஜாகையிலிருந்து தெருவழியாக மேற்கே சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே பெரிய இரட்டை மாட்டு வண்டி யொன்று வந்தது. அவ்வண்டி எங்கள் அருகே வந்ததும், &amp;quot;நிறுத்து; நிறுத்து&amp;quot; என்று வண்டிக்காரனுக்கு உள்ளேயிருந்தவர் உத்தரவு செய்தார். வண்டி நின்றது. அதிலிருந்து ஒரு கனவான் கீழே குதித்தார். அவர் எங்களைக் கண்டு தான் இறங்கினாரென்று தெரிந்து கொண்டு நாங்களும் நின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் ஒரு பெரிய கனவான். அறுபது பிராயத்திற்கு மேற்பட்டவர். நன்றாக உண்டு உடுத்து வாழவேண்டுமென்பது அவருடைய கொள்கை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்கனவானை நான் கண்டவுடன், &amp;quot;வாருங்கள், வாருங்கள், &amp;quot; என்று சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் எங்களருகே வந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எங்கே, உங்களை இப்பொழுது காணமுடியவில்லையே. உங்களை நான் பார்த்து நாலு வருஷங்களுக்கு மேலே இருக்கும்&amp;quot; என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம்! அதெல்லாம் இருக்கட்டும்; இப்பொழுது அந்தத் &amp;quot;'''''தொடிசு'''''&amp;quot; இருக்கிறதா? விட்டுவிட்டீர்களா?&amp;quot; என்று அவர் என்னைக் கேட்டார். என் பக்கத்தில் இருந்தவர் திகைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் சிரித்துக்கொண்டே, &amp;quot; நீங்கள் சொன்னதை நான் கேளாமல் இருப்பேனா? என்னுடைய சந்தோஷத்தையும் செளக்கியத்தையும் கெடுத்துக் கொள்வேனா?&amp;quot; என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நான் சொன்னதைக் கேட்பீர்களென்று தான் சொன்னேன். சந்தோஷம். இப்போதாவது நல்லதற்காக நான் சொன்னேனென்று தெரிந்து கொண்டீர்களே! அதுவே போதும். உங்கள் தேகம் இப்போது கொஞ்சம் மினுமினுப்பாக இருக்கிறது. அதிலிருந்தே அந்தத் தொடிசை விட்டிருப்பீர்களென்று ஊகித்தேன். உங்கள் முகமும் தெளிவாக இருக்கிறது. என்றார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;உங்களுடைய அன்பையும் அனுகூல வார்த்தைகளையும் நான் மறக்கமாட்டேன்.&amp;quot; என்று நான் சொன்னேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உடனே அவருக்கு அதிக மகிழ்ச்சியுண்டாயிற்று. தம்முடைய வார்த்தையை நான் கேட்டுப் பயனடைந்தேனென்று அவர் எண்ணிக்கொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நான் உங்களை விட மிகவும் பெரியவன். தியாகராச செட்டியார் கூட இப்போது இல்லை. உங்களுக்குச் சொல்கிறவர்களும் இல்லை. நீங்கள் இப்போது இருக்கிறபடி முன்பே இருந்தால் இன்னும் செளக்கியமாக இருக்கலாம், அனாவசியமாக உடம்பைக் கெடுத்துக் கொண்டீர்கள்.&amp;quot; என்று சொல்லி அவர் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரைக் கண்டது முதலே எனக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. அவர் போனபிறகும் சிரித்துக்கொண்டே சென்றேன். எங்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு என்னுடன் வந்த நண்பருக்கு விஷயம் ஒன்றும் விளங்கவில்லை. '''''&amp;quot;அந்தத் தொடிசு'''''&amp;quot; என்று அக்கனவான் குறித்த விஷயம் இன்னதென்று அவருக்குப் புலப்படவில்லை. என்னைக் கேட்கவும் அவருக்குத் துணிவில்லை. அடிக்கடி ஒரு சந்தேகக்குறிப்போடு என் முகத்தைப் பார்த்துக்கொண்டே உடன் வந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரை நான் கவனித்தேன். அவருடைய மனக்குழப்பத்தை அவருடைய முகக்குறிப்பினால் அறிந்து கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எங்கள் சம்பாஷணை இன்ன விஷயத்தைப் பற்றியது என்று உங்களுக்கு விளங்கவில்லையே?&amp;quot; என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;விளங்கவில்லை; அதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்&amp;quot; என்றார் அவர். நான் அவர் சந்தேகத்தைத் தெளிவிக்கத் தொடங்கினேன்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இந்தக் கனவானை உங்களுக்குத் தெரிந்திருக்கும், இவர் தியாகராச செட்டியாருக்கு மிகவும் பழக்கமானவர். நான் திருவாவடுதுறை மடத்தில் இருந்த காலமுதலே இவரை அறிவேன். தியாகராச செட்டியாரைப் பார்க்க வரும்போதெல்லாம் இவரைப் பார்த்திருக்கிறேன். இந்த ஊர்க்காலேஜுக்கு நான் வேலையாக வந்தபிறகு தியாகராச செட்டியார் ஜாகைக்கு ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில் நான் போய்வருவேன். அக்காலங்களிலும் பலமுறை இவரைப் பார்த்துப் பேசிப்பழகியிருக்கிறேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இவர் பெரிய பணக்காரர். ஆனால் பிறருக்குப் பொருளுதவி செய்வது அனாவசியமென்னும் அபிப்பிராயமுடையவர். 'நாம் எதற்காகப் பணம் சேர்க்கவேண்டும்? நன்றாகச் சாப்பிட வேண்டும். திருப்தியாக ஆடையாபரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். நம்முடைய சுகத்தில் சிறிதும் குறையாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்' என்று அடிக்கடி சொல்லுவார். இவருடைய தூய உடையும் பட்டு உருமாலையும் வயிரக்கடுக்கனும் மோதிரங்களும் இவர் ஒரு சுகபுருஷரென்பதைக் காட்டுகின்றனவல்லவா?&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;தியாகராச செட்டியார் அடிக்கடி ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பார்; அல்லது யாருக்காவது பாடம் சொல்லுவார். அவர் அப்படிச் செய்வதைக் காணும்போது இந்தக் கனவானுக்கு மிகுந்த கோபம் உண்டாகும். 'இப்படியெல்லாம் உடம்பை வீணாகக் கெடுத்துக்கொள்ளக் கூடாது! இராத்திரி கண்விழித்துப் படிப்பதனால் யாருக்குப் பயன்? எதற்காக வாசிக்கிறோம்? தேக அசெளக்கியத்தை உண்டுபண்ணிக்கொள்ளவா படிக்கிறோம்? எல்லாவற்றைக் காட்டிலும் தேக செளக்கியந்தான் முக்கியம். சுவரை வைத்துக்கொண்டல்லவா சித்திரம் எழுதவேண்டும்?' என்பார். இராத்திரி வேளைகளில் தியாகராச செட்டியார் கையில் புத்தகத்தை இவர் கண்டுவிட்டாற்போதும்; உடனே உபதேசம் செய்யத் தொடங்கிவிடுவார். சில சமயங்களில் அவர் கையிலிருந்து புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கி வைப்பார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இவர் சில சமயங்களில் கச்சேரிக்கு ஏதாவதொரு வழக்கின் சம்பந்தமாக வருவார். அப்போதெல்லாம் அருகிலுள்ள எங்கள் வீட்டுக்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டுப் போவார்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அச்சயமங்களில் இவர் தம்முடைய பெருமையையே அதிகம் சொல்லுவார். தியாகராச செட்டியாருடைய நன்மைக்குத் தாமே பல வழிகளில் காரணமென்று கூறுவார். அவரிடம் சொல்லி எனக்கு வேலை பண்ணி வைத்ததாகவும் சில சமயங்களில் உரைப்பார். இவர் கூறுவது ஒன்றையும் நான் மறுப்பதில்லை. மறுப்பதில் பயனில்லை யென்று சிரித்துக்கொண்டே கேட்டு வருவேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஒருநாள் பகல் ஒருமணிக்கு இவர் கச்சேரியிலிருந்து வந்தார். நான் காலேஜிலிருந்து வீட்டிற்கு வந்தேன். இடையே ஒருமணி நேரம் ஓய்வு இருப்பதால் அந்த வேளையில் ஏதாவது ஏட்டுச்சுவடியைப் பார்ப்பது வழக்கம். அந்தக் காலத்தில் நான் சிலப்பதிகாரத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். இந்தக் கனவான் வந்தபொழுது நான் சிலப்பதிகார ஏட்டுப் பிரதியையும் கையெழுத்துப் பிரதியையும் வைத்துத் தனியே ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன். இவர் வந்தது கூட எனக்குத் தெரியாது. அவ்வளவு மன ஒருமையோடு அதில் நாட்டம் செலுத்தியிருந்தேன். 'ஐயா, கீழே வையுங்கள்' என்று அதிகாரக் குறிப்போடு ஒரு குரல் கேட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். இந்தக் கனவான் நின்றார். 'நான் வந்ததைக் கூடப் பாராமல் அந்தப் புஸ்தகத்தை அவ்வளவு அழுத்தமாகக் கவனிக்கிறீர்களே. நல்ல காரியம் செய்தீர்கள்! நீங்கள் நல்ல வழக்கங்களை உடையவர்கள். சிறு பிராயம். இப்போதே இந்த மாதிரியான காரியங்கள் செய்யத் தொடங்கிவிட்டீர்களே! உங்கள் உடம்பு எதற்காகும்? இங்கே பாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு வேலையாக வேண்டும், செளக்கியமாக இருக்க வேண்டுமென்று செட்டியாரிடம் சொல்லி வேலை பண்ணிவைத்தேன். நீங்கள் செட்டியாரைப் போல் பைத்தியக்காரராக இருக்கமாட்டீர்களென்று நம்பினேன். நான் அவரிடம் அடிக்கடி இம்மாதிரியான காரியங்களையெல்லாம் செய்யக்கூடாதென்று சொல்லி வந்தேன். அதை நீங்களும் கவனித்திருக்கலாம். ஆனாலும் நான் சொன்னதை அவர் கேட்கவில்லை. அதனால்தான் சீக்கிரம் இறந்துபோய்விட்டார். புஸ்தகத் தொல்லையை விட்டுச் சுகமாக இருக்கலாம். அப்படி இருந்திருந்தால் இன்னும் பலகாலம் அவர் ஜீவித்திருக்கலாம். அவ்வளவுதான் அவர் கொடுத்து வைத்தது. என்ன புஸ்தகம் வேண்டியிருக்கிறது! இவைகளை யெலலம் எடுத்து அப்படியே காவிரியாற்றில் போட்டுவிடவேண்டுமென்ற ஆத்திரம் எனக்கு உண்டாகிறது' என்றார்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நான் ஒன்றும் பேசாமல் சிரித்துக்கொண்டே அந்தச் சுவடிகளையெல்லாம் கட்டி உள்ளே வைத்துவிட்டேன். இவர் என்மேல் கொண்ட அளவற்ற ஆதரவினால் தம்முடைய ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முற்பட்டால் என்ன செய்வதென்ற பயம் என் உள்ளத்துள் உண்டாயிற்று. 'இந்தப் புத்தகங்களை யெல்லாம் கட்டிப் போட்டுவிடுங்கள். நான் சொல்வதைக் கேளாவிட்டால் எனக்குக் கோபம் வந்துவிடும். உங்கள் முகத்திற்கூட விழிக்கமாட்டேன், உங்களுக்குச் சொல்லும் உரிமை எனக்கு உண்டு. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்று இவர் இரக்கமும் அதிகாரமும் கலந்த தொனியில் பேசினார். 'உங்கள் அன்பு எனக்குத் தெரியாதா? செட்டியார் காலமுதல் உங்களைத் தெரியுமே? உங்கள் விருப்பத்தை நான் அறிந்து கொன்டேன். எனக்கு நல்லது இன்னதென்றுதானே நீங்கள் சொல்லுகிறீர்கள்? எனக்கு எது நல்லதோ அதைச் செய்வது என் கடமை' என்று சொன்னேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;என்னுடைய வார்த்தைகளின் உட்கருத்தை இவர் உணரவில்லை. தமக்கு அனுகூலமாகவே நான் பேசியதாக அநினைத்துக்கொண்டு திருப்தியோடு விடைபெற்று இவர் போய்விட்டார்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அதுமுதல் இவர் வந்தால் என்னை இப்படி விசாரிப்பது வழக்கம். நான் ஒருவாறு பதிலளிப்பேன். இவர் வரும்போது இவர் கண்ணிலே புத்தகங்கள் படாதவாறு ஒளித்து வைத்துவிடுவேன். நான்கு வருஷங்களாக இவர் கச்சேரிக்கு வருவதில்லை. அதனால் நானும் பார்க்க நேரவில்லை. இப்போதுதான் பார்ததேன். புத்தகப்படிப்பைத்தான் இவர் ''''''அந்தத் தொடிசு''''''என்று குறிப்பிட்டார்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வரலாற்றைக் கேட்டவுடன் நண்பர் நகைத்தார். &amp;quot;அட பாவி! இதையா சொன்னான்? நான் என்னவெல்லாமோ யோசனை செய்தேனே! அப்போது ஒன்றும் விளங்கவில்லை. இப்பொழுதுதான் விளங்கியது என்றார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 19:42, 20 அக்டோபர் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:உ.வே.சா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>