<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%22%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%22_%28%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%29_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81</id>
		<title>&quot;க்வாசீர்-அல்-க்வாதிம்&quot; (எகிப்து) கிடைத்த பானை ஓடு - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%22%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%22_%28%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%29_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%22_(%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81&amp;action=history"/>
		<updated>2026-07-08T17:26:05Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%22_(%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81&amp;diff=6189&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: &amp;nbsp;தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூலாக மட்டுமல்ல, தமிழர்களின…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%22_(%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81&amp;diff=6189&amp;oldid=prev"/>
				<updated>2011-04-16T12:03:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூலாக மட்டுமல்ல, தமிழர்களின…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூலாக மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்று நூலாகவும் திகழ்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ள பனம்பாரனாரின் பாயிரம் முதற்கொண்டு, ஈற்று மரபியல் வரை ஒவ்வொரு நூற்பாவும், சங்க மக்களின் வாழ்வியல் நடப்புகளிலிருந்தே எடுத்து, வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உலக மொழிகளின் எந்த இலக்கணமும் தொல்காப்பியம் போல் பகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறியதில்லை என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகில் எகிப்து, பாரசீகம், கிரேக்கம் ஆகிய நாடுகளே நாகரிகத்தில் பழமைமிக்கவை எனக் கருதிவரும் இந்நேரத்தில், தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்த செய்திகள் நாளும் நாளும் வெளிப்பட்டு, ஆய்வாளர்களை வியப்பின் விளிம்பில் நிறுத்தி வைக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியர் காலத்தில் (இடைச்சங்க காலத்தில்) வழக்காற்றில் பயின்றதோர் அளவைச் சொல் &amp;quot;க்வாசீர்-அல்-க்வாதிம்&amp;quot; (எகிப்து) என்ற இடத்தில் கிடைத்த பானை ஓட்டில், தமிழ் - பிராமி எழுத்தில் கடந்த ஆண்டு கிடைத்திருப்பது ஆய்வாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தச் சொல்லைப் &amp;quot;பானை உரி&amp;quot; என்று ஆய்வாளர்கள் படித்துள்ளனர்.அப்பானையில் எழுதியிருக்கும் எழுத்துகள் மட்பானையின் வெளிப்புறத்தில் இரு பக்கமும் எழுதப்பட்டிருக்கும் &amp;quot;பானை உரி&amp;quot; என்ற இந்தத் தமிழ்ப் பிராமி எழுத்துக்கு விளக்கம் தருமிடத்து, &amp;quot;உறியில் தொங்கவிடப் பட்டிருக்கும் வகைப் பானை'' என்று ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நடன காசிநாதன் இக்கருத்தை மறுத்து, &amp;quot;பேச்சு வழக்கில் உறிப்பானை என்றுதான் சொல்வார்களே தவிர, &amp;quot;பானை உறி&amp;quot; என்று சொல்லமாட்டார்கள்'' என்று மேற்சொன்ன கருத்துக்கு மறுப்புக் கூறி, அவ்வெழுத்துகளைப் &amp;quot;பனை ஓரி&amp;quot; என்று படித்து, அதற்குப் &amp;quot;பனந்தாரை அணிந்திருந்த ஓரி எனும் அரசன் பெயரைக் குறிக்கிறது&amp;quot; என்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், இவை எல்லாவற்றையும்விட முனைவர் அமுதன் என்பவர் குறிப்பிடும் கருத்துப் பொருத்தமுடையதாய் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் கூறியுள்ளதாவது:- &lt;br /&gt;
&lt;br /&gt;
எகிப்தில் கிடைத்த இந்த தமிழ் - பிராமி எழுத்துகளையுடைய இப்பானை ஓட்டில், உணரப்பட வேண்டியது பானையின் எதிரெதிர் இரு புறங்களிலும் &amp;quot;பானை உறி&amp;quot; என்று பொறிக்கப்பட்டிருப்பதுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;உரி&amp;quot; (அது பானையைக் குறிப்பது) என்ற சொல், தமிழில் தொல்காப்பியத்தில் &amp;quot;முகத்தல் அளவை&amp;quot;ப் பொருளில் வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;உரி வரு காலை, நாழிக் கிளவிஇறுதி இகரம் மெய்யொடும் கெடுமேடகாரம் ஒற்றும் ஆவயினான''. (தொல். உயிர் மயங்கியல்:- நூற் - 38)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நாழி என்பது ஒருபடியையும், உரி என்பது அரைப்படியையும் குறிக்கும். அரைப்படி பானை என்பது இப்பானை எழுத்தின் பொருளாகும். எனவே, இது அரைப்படியை அளக்கும் பானையாகும்'' என்ற இக்கருத்தே ஏற்புடையதாகத் தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும், &amp;quot;கணன்&amp;quot; என்ற தமிழ் பிராமியை உடைய மட்கலமும் &amp;quot;சாத்தன்&amp;quot; என்ற பெயர் பொறித்த மட்கலமும் எகிப்தில் உள்ள &amp;quot;பெரினிகா&amp;quot; என்னும் இடத்தில் 1950களிலேயே கண்டுபிடித்துள்ளதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரோமானியர்களோடும், எகிப்தியர்களோடும் செங்கடல் வழியாகத் தமிழர்கள் கொண்டிருந்த வணிக உறவை சங்க இலக்கியங்களைக் கொண்டே உலகுக்குச் சொல்லிவந்த இவ்வேளையில், எகிப்து &amp;quot;க்வாசீர்-அல்-க்வாதிமில்&amp;quot; கிடைக்கப்பட்டுள்ள இப்பானை ஓடு, சில சங்க இலக்கிய வழக்குக்கு உண்மை வடிவம் கொடுத்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டைத் தமிழர்களின் உயர்ந்த வாழ்வியல் முறைமையும், உலகோருடன் அவர்கள் கடல் கடந்து வைத்திருந்த வணிக உறவும் வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் எழுத மறந்திருந்தாலும் - மறைத்திருந்தாலும் சமீப காலமாக தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டுவரும் மண்ணில் புதையுண்ட ஆதாரங்கள் உலகின் பல வரலாற்று ஆய்வாளர்களையும் தமிழர்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அ.வெண்ணிலா இராஜேஷ்&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:அகழ்வாராய்ச்சி]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>