<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF</id>
		<title>&quot;கோதையர் திலகம்&quot; வை.மு.கோதைநாயகி - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;action=history"/>
		<updated>2026-07-19T15:58:00Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=2354&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;&quot;கோதையர் திலகம்&quot; வை.மு.கோதைநாயகி&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=2354&amp;oldid=prev"/>
				<updated>2010-07-20T17:51:32Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&quot; title=&quot;&amp;quot;கோதையர் திலகம்&amp;quot; வை.மு.கோதைநாயகி&quot;&gt;&amp;quot;கோதையர் திலகம்&amp;quot; வை.மு.கோதைநாயகி&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;17:51, 20 ஜூலை 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=2353&amp;oldid=prev</id>
		<title>17:50, 20 ஜூலை 2010 இல் Ksubashini</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=2353&amp;oldid=prev"/>
				<updated>2010-07-20T17:50:58Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;amp;diff=2353&amp;amp;oldid=2351&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=2351&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: '''கலைமாமணி விக்கிரமன்'''  ----    &quot;ஆணாதிக்கம்&quot; என்ற குற்றச்சாட்டு இ…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%22%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22_%E0%AE%B5%E0%AF%88.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=2351&amp;oldid=prev"/>
				<updated>2010-07-20T17:45:27Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;கலைமாமணி விக்கிரமன்&amp;#039;&amp;#039;&amp;#039;  ----    &amp;quot;ஆணாதிக்கம்&amp;quot; என்ற குற்றச்சாட்டு இ…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''கலைமாமணி விக்கிரமன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆணாதிக்கம்&amp;quot; என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண்களிடம்தான் அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புதுமைப் பெண்ணாய் உருவெடுத்த வை.மு.கோதைநாயகி அம்மாள், என்.எஸ்.வேங்கடாச்சாரியார் - பட்டம்மாள் தம்பதிக்கு 1901ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயர் வைத்தமாநிதி.முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊர். வைத்தமாநிதி, முடும்பை என்ற இவற்றின் முதல் எழுத்துகளைச் சேர்த்து வை.மு. என்ற எழுத்துகள் அமைந்தன. வை.மு.கோ.வுக்கு அவர் மாமியார்தான் தெலுங்கு மொழியை முதன் முதலில் கற்றுத் தந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளி, கல்லூரி செல்லாமலேயே கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளப் பெரிதும் ஆதரவு தந்தவர்கள் அவரது கணவரும் மாமியாரும்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கற்பதை எளிதாகப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் ஆற்றல் இயற்கையிலேயே அமையப்பெற்ற கோதைநாயகி அம்மாள், தன் தோழி பட்டம்மாள் உதவியுடனும், கணவர் ஆதரவுடனும் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தன் சிறிய தகப்பனார், திருத்தேரி இராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வை.மு.கோவின் வெற்றிக்கு அவர் செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதிதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பால்ய விவாகச் சட்டம் தடைசெய்யப்படாத காலத்தில், பார்த்தசாரதிக்கும் வை.மு.கோதைநாயகி அம்மாளுக்கும் 1907ஆம் ஆண்டு (அம்மையாருக்கு ஐந்தரை வயது, கணவருக்கு ஒன்பது வயது) திருமணம் நடைபெற்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமணத்தின்போது வை.மு.கோ.பள்ளி சென்று படித்தவரில்லை.பார்த்தசாரதி, வை.மு.கோ.வைக் கல்வி கற்கச் செய்தார்.&amp;amp;nbsp;சுருக்கெழுத்துத் தேர்வில் முதல் மாணவராகத் தேர்வு பெற்றதற்காகக் கிடைத்த தங்கப் பேனாவை, தன் துணைவி கோதைநாயகிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.&amp;amp;nbsp;ஆனால் அந்தப் பேனா தொலைந்துவிட்டது.&amp;amp;nbsp;அதனால் அம்மையாரின் ஆறாத துக்கத்தைக் கண்ட பார்த்தசாரதி, ஆறுதல் கூறித் தேற்றினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின.&amp;amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுற்றுப்புறக் குழந்தைகளின் வற்புறுத்தலுக்காக புதிய புதிய கதைகள் சொல்வதற்காக &amp;quot;இட்டுக்கட்டி&amp;quot;க் கதை சொல்லும் கட்டாயம் ஏற்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்காகக் கற்பனை செய்யும்போது நாவல் எழுதும் ஆர்வம் பிறந்தது.அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் தமிழில் புதினங்கள் மிகக் குறைவு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வெளி வந்தவையும் துப்பறியும் நாவல்கள்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட &amp;quot;மனோரஞ்சனி&amp;quot; என்ற மாத இதழைத் தொடங்கினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வை.மு.கோ.வின் படைப்புகளை வெளியிடவும் &amp;quot;மனோரஞ்சனி&amp;quot; இதழ் போல் மாத இதழ் ஒன்றைத் தொடங்க யோசனை கூறினார் வடுவூரார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த யோசனையைச் செயலாக்க இதழ் ஒன்று தொடங்கும் ஆர்வம் அம்மையாருக்கு ஏற்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்த நேரத்தில் வெளிவராமல் நின்று போயிருந்த &amp;quot;ஜகன்மோகினி&amp;quot; என்ற இதழை விலைக்கு வாங்கி 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கோதைநாயகி அம்மாளின் முதல் நாவலான &amp;quot;வைதேகி&amp;quot; எழுத்துப் பிரதியை, பிழைதிருத்தித் தருவதாகக் கூறி வாங்கினார் வடுவூரார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஜகன்மோகினி&amp;quot; இதழ் வெளிவரத் தொடங்கியவுடன் வடுவூராரின் &amp;quot;மனோரஞ்சனி&amp;quot; துவண்டு விட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் பொறாமை கொண்ட வடுவூரார் அம்மையாரைப் பலவாறாகப் பயமுறுத்தி, நான்தான் வை.மு.கோவுக்காக &amp;quot;வைதேகி&amp;quot; நாவலை எழுதுகிறேன். அவருக்கு எழுத வராது. இனி நான் தொடர்ந்து எழுதித் தரமாட்டேன் என்று ஓர் அறிக்கையையும் &amp;quot;மனோரஞ்சனி&amp;quot; இதழில் வெளியிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசகர்களிடையே இந்த அவதூறு செய்தி பரவியது. குழப்பம் ஏற்பட்டது என்றாலும் வாசகர்கள் வடுவூரார் கூற்றை நம்பவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்மையாரும் அஞ்சவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் நினைவாற்றல் சக்தி கொண்டு &amp;quot;வைதேகி&amp;quot;யைத் தொடர்ந்து எழுதி வெளியிட்டதால் வடுவூரார் கூற்று பொய்யானது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஜகன்மோகினி&amp;quot;யின் புகழ் மேலும் ஓங்கியது.&amp;amp;nbsp;வை.மு.கோ.வின் எழுத்தாற்றல் தமிழ் வாசகர்களிடையே பரவியது. அதனால் அம்மையார், ஜகன்மோகினியில் பல்வேறு பகுதிகளையும் மற்ற இதழ்கள் போல் வெளியிடலானார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டார்.&amp;amp;nbsp; விற்பனை கூடியது.&amp;amp;nbsp; 1937ஆம் ஆண்டு சொந்த அச்சகம் உருவானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்திரிகையாளராக, நாவலாசிரியராக மட்டுமிருந்த வை.மு.கோ.வுக்கு அன்னி பெசன்ட் அம்மையார் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாள் நட்பு ஏற்பட்டது.&amp;amp;nbsp; தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு மகாத்மா காந்தி வருகை தந்தார்.&amp;amp;nbsp; வை.மு.கோ., காந்தியைச் சந்தித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.&amp;amp;nbsp; பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அதுமுதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார்.&amp;amp;nbsp; மங்கல நாணைத் தவிர ஆடம்பரமான அணிகலன்களைத் தவிர்த்து, வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதையும் இறுதி வரையில் கடைப்பிடித்தார்.&amp;amp;nbsp; பின்பு அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1931 மகாத்மா கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார்.&amp;amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் அம்மையாரும் கைது செய்யப்பட்டார்.&amp;amp;nbsp; ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.&amp;amp;nbsp; அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கபட்டது. சிறையில் இருந்த &amp;quot;ஜகன்மோகினி&amp;quot;யை அவர் கணவர் பார்த்தசாரதி வெளியிட்டு வந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்திரிகைக்குக் கதை இல்லையே என்று கணவர் கவலைப்படாமல் இருக்க, சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் நாவல் எழுதி அனுப்பினார்.&amp;amp;nbsp; அவ்வாறு எழுதப்பட்ட நாவல்தான் &amp;quot;உத்தமசீலன்&amp;quot;.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது உலகப்போரின் போது யுத்த பீதி காரணமாக மக்களை நகரை விட்டு வெளியேறப் பிரசாரம் செய்தபோது &amp;quot;ஜகன்மோகினி&amp;quot; அச்சகத்தோடு சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு அருகேயிருந்த சிங்கபெருமாள் கோயில் எனப்படும் சிற்றூரில் குடியேறினார்.&amp;amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஜகன்மோகினி வெற்றிக்கு அதில் சித்திரம் வரைந்த சாமுவேல் என்ற ஓவியர் இறுதிவரை ஜகன்மோகினி சிறப்பாக வெளிவர உறுதுணையாக இருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே &amp;quot;ஜகன்மோகினி&amp;quot; அலுவலகத்தையும் அச்சகத்தையும் அம்மையார் கொண்டு வந்தார். வை.மு.கோ. தன் வாழ்நாளில் 115 நாவல்களை எழுதியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விதவை பிரச்னை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் துயரம், கைம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் முதலிய பெண்களின் அவலங்களைச் சித்திரித்து அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான வழிவகைகளையும் தெரிவித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய விடுதலைக்கு முன்பு தேசிய நோக்குடன் எழுதப்பட்ட நாவல் வரிசையில் வை.மு.கோ. நாவல்களைத் திறனாய்வாளர்கள் இணைக்காதது சரியான திறனாய்வாகாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் நாவல் இலக்கியத்தில் வை.மு.கோ. அம்மையார் அழியா இடம் பெற்றவர் என்பதே உண்மை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாகவி பாரதியாரின் பாராட்டைப் பெற்றது அம்மையார் செய்த பெரும்பேறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வை.மு.கோ. இனிய குரலில் பாடுவதை மெய்மறந்து பாரதியார் இரசித்ததாகக் கூறுவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வை.மு.கோ.வின் நாவல்களில்,&lt;br /&gt;
&lt;br /&gt;
*அநாதைப்பெண்&lt;br /&gt;
*தியாகக்கொடி&lt;br /&gt;
*இராஜ்மோகன்&lt;br /&gt;
*நளினசேகரன்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகிய நாவல்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கணவன் - மனைவி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய கோதையர் திலகம் வை.மு.கோ. 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி இயற்கை எய்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 17:45, 20 ஜூலை 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:பெண்ணியம் ]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>