வினோபாஜி - கருணையே கடவுள்!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

  • வினோபாஜி - கருணையே கடவுள்!


                                                                                       
Tblanmegamideanews 75962466002.jpg


ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே கருணை உணர்வு இருக்கிறது. ஆனால், அதனை வெளிப்படுத்துவதில் தான் வித்தியாசப்படுகின்றனர். கருணை என்பது பேராற்றல் வாய்ந்த ஒரு குணமாகும். அதில் அச்சம் என்பதற்கே இடமில்லை. துணிந்து செயல்படும் திறனுள்ளவர்கள் நிச்சயம் கருணை உள்ளவர்களாகவே இருப்பர். கடவுள் எங்கெங்கு இருக்கிறாரோ, அங்கெல்லாம் கருணையும் இருக்கிறது.


 தயவு, கருணை இவ்விரண்டும் வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒன்றுபோல தோன்றினாலும், உண்மையில் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. கடவுளை உணர்ந்து, அவரிடம் தம்மை அர்ப்பணித்தவர்களிடம் இயல்பாகவே கருணை கொண்ட மனம் இருக்கும். அவரை அறியாதவர்களிடம் தயவு செய்யும் குணம் இருக்கும். யாரும் கட்டாயப்படுத்தாதபோது, தானாகவே வெளிப் படுவது கருணை. நிர்ப்பந்தங்களால் வெளிப்படும் குணம் தயவு. ஆகவே, மனதில் கருணையுடையவர்களாக இருப்பதே சிறந்தது.










பவள சங்கரி திருநாவுக்கரசு

தேதி - 09/04/2011.

நன்றி - தின மலர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2011, 03:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,217 முறைகள் அணுகப்பட்டது.