எழுதியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்
துவரம்பருப்பு இரண்டு மேஜைக்கரண்டி, மிளகாய் வற்றல் நான்கு அல்லது ஐந்து, உப்பு, பெருங்காயம் அனைத்தையும் கொஞ்சமாய் எண்ணெய் விட்டு வறுத்துப் புளி சேர்த்து அரைக்கவும். சிலர் இதோடு கொஞ்சமாய்த் தேங்காய்த் துருவலும் வைப்பார்கள். தேங்காய்த் துருவல் வைத்தால் துவரம்பருப்பு அளவைக்குறைக்கவும். இதுக்கும் தொட்டுக்கொள்ள மோர்க்குழம்பு அல்லது மோர்க்கூட்டு நல்ல காம்பினேஷன். வெள்ளரிக்காய், வாழைத்தண்டுப் பச்சடி போன்றவையும் நன்றாக இருக்கும்.