சித்தர்கள் வழியில் கோம்பைச் சித்தர் 2

மரபு விக்கி இருந்து

(சித்தர்கள் வழியில் 2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சித்தர் வழியில்…கோம்பைச் சித்தர்.

Imagesகுண்டலினி.jpg

சித்தர்களின் கண்டுபிடிப்பில் மனித உடலின் நாடிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது. நமது உடலில் மொத்தம் 72 ஆயிரம் நாடிகள் இருப்பதாகச் சித்தர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இரத்த ஓட்டத்தைப் பொறுத்து நாடிகள் விரியும், சுருங்கும். உணர்வுகளைப் பொறுத்து நாடிகளின் துடிப்பு சீராகும்; சீர் கெடும் என்பதால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறியுள்ளார்கள். நோயாளியின் கையைப் பற்றிவுடன் அவருக்குள் இருக்கும் நோயின் தன்மை,நோய் குணமாகுமா? ஆகாதா? அவரது ஆயுள் எவ்வளவு? என்பதைத் துல்லியமாகக் கண்டு அறிந்து விடுவார்கள்.ஒருவருக்கு வாத நாடி அளவு மீறினால் ஓராண்டில் இரண்டு நாட்கள் படுத்து மரணமடைவார் என்றும், பித்தநாடி அளவு மீறினால் ஆறு மாதத்தில் அவருக்கு மரணம் நிச்சியம் என்றும் கண்டறிந்து சொல்லி விடுவார்கள்.அவர்கள் சொன்ன பத்து நாடிகள் பிரதானமாக இருக்கிறது.



அவை: இடகலை,பிங்கலை, சுழுமுனை, கண்டம், அட்சி, காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி குரு என்ற நாடிகளாகும். இந்தப் பத்து நாடிகளில் இடகலை, பிங்கலை,சுழுமுனை நாடிகளும் மிகவும் முக்கியமானவை.சுழுமுனை என்பது இடது மூக்கின் வழியாகவும், வலது மூக்கின் வழியாகவும் உள்ளே செல்லும் நாடிகள் கூடும் இடத்திற்கு சுழுமுனை என்று பெயர். இது புருவத்தின் மத்தியில் உள்ளது. ஒருநாளைக்கு மனிதன் 21,600 முறை சுவாசிக்கிறான்.அப்படி ஒரு முறை சுவாசிக்கும் போது பன்னிரண்டு அங்கு்லம் நீளமுள்ள மூச்சு விரயமாகிறது என்று கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். 21,600 லிருந்து அளவு குறையக் குறைய அவனுடைய வாழ்வு மேலும், மேலும் நீளும் என்ற

இரகசியத்தை சொல்லி அதற்கான வாசியோகப் பயிற்சியைக் கண்டறிந்து கூறியுள்ளார்கள். பிராணாயாமம், யோக பயிற்சியை நாமும் கடைப்

பிடித்தால் நோயின்றி நலமுடன் வாழ்நாள் இறுதிவரை வாழமுடியும். ஆனால், இந்த அவசர, கதியான உலகில் அது இயலுமா? இயலும்.


பொறுமையாக, ஆர்வத்துடன், முழு ஈடுபாடுடன் முயன்றால் எதுவும் முடியும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் வடசேரி, தாழக்குடி, ஈத்தாமொழி போன்ற இடங்களில் வாழ்ந்து பல சித்தாடல்களையும், பல அற்புதங்களையும் நிகழ்த்திய ’’கோம்பைச் சித்தர்’’,

மதுரை இருக்கும் கோம்பை கிராமத்தில் பிறந்ததால் ’’கோம்பைச் சித்தர்’’ என்று அழைக்கப்பட்டார்.இவரது தந்தை சமதளவாய் பெரும் செல்வந்தர். ஜமீன்தாரக இருந்தவர். அவரது செல்ல மகனாகப் பிறந்த சித்தருக்கு ‘’வேல்தளவாய்” என்று பெரிட்டார். வேல்தளவாய் வளர ஆரம்பித்து எட்டு வயதாகும் போது ஒருநாள் அந்தப் பேரதிசயம் நடந்தது. விடியகாலை வழக்கம் போல் கண் விழிக்க, அவருக்கு எதிரே பளீரென ஒரு மின்னல் ஒளி தோன்றியது.அந்த ஒளியின் தீட்சணயத்தில் கண்களைச் சுருக்கி விரித்தபோது எதிரே… ஜோதி பிழம்பாக இறைவன் காட்சியளித்தார்.



அதிர்ந்த நிலையில் வேல்தளவாய் கரம் கூப்ப, இறையனார் “ நீ இந்த ஜமீன் மாளிகையில் வாழப் பிறந்தவனல்ல உன்னுடைய இடமும் இதுவல்ல, நீ பல உயிர்களுக்கு வழிகாட்டப் பிறந்தவன்” என்று கூறி மறைந்தார். அந்த நொடியிலிருந்து வேல்தளவாய்க்கு ஏதோ மாற்றம் தம்முள் நிகழ்ந்தது. தன் பெற்றோரிடம் நடந்த நிகழ்வுகளை கூறியபோது அவர்கள் நம்பவில்லை. எதோ சிறுவன் கூறுகிறான் என்று எண்ணினார்கள். ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்த, நிகழப்போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே துல்லியமாக கூறியபோது,  வேல்தளவாய்க்குள்ளேஇருந்த அற்புத மகிமை தெரியவந்தது.திடீரென ஒருநால் அதிகாலை அங்கிருந்து புறப்பட்ட வேல்தளவாய் தமிழகத்தின் பல இடங்களுக்கும் கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். அப்போது தன்னையறிந்து தன்னிடம் அணுகி தங்களின் குறைகளை, பிரச்சனைகளை கூறியவர்களுக்கு அப்பிரச்சனை தீர்த்து ஆசியும் கூறி நன்மையளித்தார். இப்படி பலவிடங்களுக்குச் சென்று கொண்டிருந்த சித்தர் குமரி மாவட்டம் வடசேரிக்கு வந்த விபரத்தை, ஒரு அற்புதமான நிகழ்ச்சி அந்த கிராமத்து பெரியவர் கூறுகிறார்.


அவர் இங்கே வருவதற்கு இரண்டு பேர்கள் காரணம். அவர்கள் வடசேரி, கழுகுமலைச் சந்தைக்குப் போய் மாடு வாங்கி வந்து கொண்டு  இருக்கும்போது, வழியில் பரட்டைத்தலையுடன், ஒட்டிய வயிறுமாக ஒரு கோவணத்தாண்டி நின்று கொண்டு இருந்ததைப் பார்த்திருக்காங்க. அவரு இவங்களையே உற்று உற்றுப் பார்க்க நம்மகிட்டே அவரு ஏதோ எதிர்ப்பாக்கிறாருன்னு தெரிஞ்சிக்கிட்டு கையிலிருந்த
சாப்பாடு பொட்டலத்தை அவருகிட்டே தந்திருக்காங்க. உடனே அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் பாவம் கோவணத்தோட இருக்காருன்னு

சந்தையில புதுசா வாங்கிட்டு வந்த சட்டையை அவர்கிட்டே கொடுத்திருக்காரு. ’’கோம்பைச் சித்தர்’’ மறுக்காம சாப்பாட்டையும் சட்டையையும்
வாங்கிக்கிட்டிருக்காரு. உடனே அவங்க மாட்டை ஓட்டிக்கிட்டுக் கிளம்ப, பின்னாடியே கோம்பைச் சித்தர் வந்திருக்காரு. திரும்பிப் பார்த்த அவங்க சாப்பாடும், சட்டையும் கொடுத்தாலே நம்மக்கூடயே வர ஆரம்பிச்சிட்டாருன்னு யோசிச்சுக்கிட்டே நடந்திருக்காங்க.


கொஞ்ச தூரத்தல ரோட்டோரமா ஏற்றம் இறைச்சிக்கிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு இங்க தண்ணீர் இருக்குது,நாம இங்கேயே சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு போகலாம்ன்னு முடிவெடுத்து அங்கேயே சாப்பிட்டு விட்டு, சற்று தலை சாச்சி படுத்திருகாங்க.
படுத்துத் தூங்கி எழுந்து பார்த்தா…., வடசேரி கிராமத்து முகப்புல இருக்கிற ஒரு மரத்துக்கு அடியில் தூங்கிக்கிட்டு இருக்கிறது தெரிஞ்சிருக்கு.

இது எப்படி? சில மைல் தூரத்திலிருக்கிற கழுகுமலையில் படுத்து தூங்கினவங்க…தூங்கி எழும்போது வடசேரியில எழுந்திரிக்கிறோம்ன்னு ஆச்சர்யமாகப் பார்த்திருக்காங்க. இது கோம்பைச் சித்தர் சித்தாடலால் என்பதை உணர்ந்தார்கள். அவரது தீட்சண்ய மிக்க கண்களின்

ஒளியை உணர்ந்த கொண்ட இருவரும், சித்தரை வணங்கி, “ஐயா நீங்கள் எங்கள் ஊரில் வாழ்ந்தால் அது எங்கள் பாக்கியம்” என்று கேட்க அவரும் சம்மதித்து, அவரக்ளுடைய வீடுகளில் ஒருவரது விட்டின் திண்ணையில் வசிக்க ஆரம்பித்தார்…., என்கிறார் அந்த முதிய பெரியவர்.


அவர் அங்கே வந்ததும் அவருடைய அற்புதங்களும்,மகிமையும் முதலில் அக்கிராம மக்களுக்குப் புரியவில்லையாம்.ஏதோ ஒரு பித்தனைப் பார்ப்பத்து போல்தான் பார்ப்பார்களாம். அதற்கு காரணம், ஒரு சிறிய கோவணத்துடன் கைகளில் குப்பைக் கூளமும், எச்சில் இலையுமாக சித்தர்
நடமாடிக் கொண்டிருந்ததுதானாம். ஆனால், அவர் திடீர் திடீரன ஒரு இடத்திலிருந்து மறைந்து மற்றொரு இடத்தில் தோன்றுவதும்,

ஒரே சமயத்தில் பலவிடத்தில் தோன்றுவதும், ஒரே சமயத்தில் பலவிடங்களில் காட்சி தருவதுமாக பல சித்தாடல்கள் புரிய  ஆரம்பித்திருக்கிறது. அதன் பிறகே அவரிடம் அருள்வேண்டி பலர் காத்திருக்க ஆரம்பித்தனர். ஒருநாள் திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது எச்சில் இலையும் குப்பை கூளமாக இருக்கும் கோம்பைச் சித்தர் மன்னர் முன்னே வந்தால், அவர் முகம் சுளிப்பார் என்று சித்தரை வடசேரி சந்தையிலிருந்து போலீசார் பிடித்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.


ஆனால், என்ன ஆச்சரியம்! மன்னர் அந்த நகருக்கு வந்தபோது திடீரென சித்தர் அவர் முன்னே தோன்றினார். ”நாம் அடைத்து வைத்தவர் எப்படி இங்கே வந்தார்?” என்று சித்தரை ஆச்சரியத்துடன் பார்க்க.., சித்தர் மன்னரை நெருங்க, அவரது கண்களை ஆழமாகப் பார்த்தார். அடுத்த நொடி மன்னர் தன்னையும் அறியாது சித்தர் முன்னே மண்டியிட்டு சுரங்களைக் கூப்பி வணங்க ஆரம்பித்தார்.சித்தர் அவரது நெற்றியில் விரல் பதித்து ஆசீர்வதித்து விட்டுச் சொன்னார். “ மன்னரே…, இன்று நீ என்னைப் பார்க்க வேண்டும் என்பது விதி. இதனால் உனது முற்பிறவி சாபம

விலக வேண்டும் என்பது விதித்த விதி. இன்றோடு உன் பிரச்ச்னைகள் தீர்ந்தது. போய் வா..” என்று சொல்ல மன்னர் கோம்பைச் சித்தரின் கரங்களைப் பற்றித் தனது கண்களில் ஒற்றி சித்தருக்குப் தன்னிடமிருந்த புதிய ஆடையை போர்த்தினார். அடுத்த வினாடி அந்த புத்தாடையை தூக்கி எறிந்துவிட்டு மாயமாய் மறைந்து போனார் “



அன்றிருந்து சித்தரின் மகிமை எல்லா ஊர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. அவரைத் தேடி வந்து தங்களின் தீராத நோய்களைத் தீர்த்து வைத்தார்.


ஒருநாள் அவர் சந்தையில் குப்பைக் கூளங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் போது கணேசன் எனும் 38 வயது இளைஞர் அவரின் முன் வந்து நின்றான். ஒரு நொடியில் அந்த இளைஞன் முகத்தைக் கவனித்த சித்தர் அடுத்த நொடி அவனுக்குள்ளிருக்கும் பிரச்சனையை உணர்ந்து

கொண்டார். சுவாச பிரச்சனையாலும், ஆஸ்துமா நோயாலும் பல ஆண்டுகள் அவதிப்படுவதை அறிந்து, தன் கையிலிருந்த குப்பை கூளங்களைக் கீழே போட்டு எரிக்க ஆரம்பித்தார். சட்டென அந்த இளைஞன் பக்கம் திரும்பி “ இந்தப் புகையை ஆழமாக உள்ளே இழு, உன் ஆஸ்துமா நோய் குணமாகிவிடும்” என்றார். ஏற்கனவே மூச்சடைப்பால் தடுமாறியவன் புகையை மெல்ல. உள்ளிழுக்க ஆரம்பித்தான். அந்த புகையை நான்கு நிமிடங்கள் உள்ளிழுக்க அவனது தொண்டை, மூக்கு,மார்பு யாவும் தொந்தரவின்றி எளிதாக மூச்சுவிட முடிந்தது. அன்றிலிருந்து அவனது வயது காலம் வரை ஆஸ்துமா நோய் இன்றி வாழ்ந்தான்.



அதேபோல் தென்காசியைச் சேர்ந்த துறவி ஒருவருக்கு நீண்ட காலமாக இருந்த குன்ம நோயை சித்தர் சிறிதளவு மணலை எடுத்து அவரின் வயிற்றில் தேய்த்து குணப்படுத்திய அதிசயம் நிகழ்ந்தது.வடசேரியைச் சேர்ந்த நாகமணி என்னும் பெண்ணுக்கு பல வருடங்கள் கண் பார்வையற்ற நிலையில் இருந்தார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் சென்றும் குணமாகாத நிலையில் அவர் கோம்பைச் சித்தரை நாடி வர,தனது விரலால் அப்பெண்ணின் கண்களில் ஓரத்தில் ஏதோ எழுதி நான்கு துளிகள் துளசிச்சாற்றை விட்டார். அடுத்த நான்கு நாட்களில் அப்பெண்ணின் கண்பார்வை திரும்பவும் வந்தது.அதேபோல், பண்டரிபுரத்தில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணின் மூக்கில் சிறிதளவு பச்சிலை சாற்றை விட்டு உயிர் பிழைக்க வைத்தார்.வடசேரியில் இது போன்ற எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திய கோம்பைச் சித்தர்’ திடீரென அங்கிருந்து புறப்பட்டு தாழக்குடிக்குச் சென்றார்.அங்கேயும் பல நோயாளிகளைக் குணப்படுத்தியும்,

பில்லி சூன்யங்களை தீர்த்தும் வைத்தார்.ஒருநாள பக்தர் ஒருவரின் பிரச்சனையைத் தனது ஆன்ம சக்தியால் உணர்ந்து அவருக்கு தீர்வளித்துக்

கொண்டிருந்தபோது, திடீரென சித்தரின் உடல் வெட்டியது போல் துள்ளியெழுந்தார். உடனிருந்தவர்கள் அதிர்ந்து கோம்பைச் சித்தரைப் பார்க்க, அவர் தான் அணிந்திருந்த கோவணத்தின் ஒரு பகுதியைப் பிடித்து ஏதோ முணுமுணுத்தவாறு, ப்பூ… என ஊதினார்.அருகே இருந்த ஒருவர், சித்தரய்யா என்னாச்சு? என்று கேட்க, சித்தர் ஒரு நொடி கூர்மையாக வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.


“ மதுரை மீனாட்சியம்மன் சேலையில் தீப்பற்றி விட்டது. அதை அணைத்தேன்” என்றார்.கோம்பைச் சித்தர்’ சொன்னது போலவே, அதே நேரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மனின் சேலை தீப்பிடித்துள்ளது.சிலகாலம் தாழக்குடியில் வாழ்ந்து பல அற்புதங்களை கோம்பைச் சித்தர் அங்கிருந்து புறப்பட்டு ஈத்தாமொழி கடற்கரையோரத்தில் தந்து இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அங்கே தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கடற்கரையோரமாக நடந்து சென்று தனது வலது கால் பெருவிரலால் நான்கு அடி ஆழத்திலேயே தோன்றி ஜீவ ஊற்றை உண்டாக்கினார். இன்றும் அது வற்றாத நீரூற்றாக கோம்பைச் சித்தரின் அருளாசித் தீர்த்தமாக இருக்கிறது.* இன்றும் ஈத்தாமொழி கடற்கரையிலுள்ள கோம்பைச் சித்தரின் சமாதி இருக்கிறது





[நன்றி:-- சித்தர் பூமி]



--
எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை


--Geetha Sambasivam 04:37, 31 ஜனவரி 2011 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2011, 08:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,032 முறைகள் அணுகப்பட்டது.