அழிவிலுண்மை பூரண காண்டம்
நான்காம் அதிகாரம்: பயனியல்
படலம் ஒன்பது: ஏரணவியல்
முனைவர் கி. லோகநாதன்(உலகன்) 1997
சூத்திரம் 27: மெய்யியம்
இனி மேலே இயலியநூலியம் வி¡¢த்தபோதும், அதனையடுத்து ஏரணவுறுப்பியம் வி¡¢த்த போதும் ஆங்கு நின்று நிலவி அத்துறைகட்கு இன்றியமையாத ஒன்றாக நின்றது "உண்மை" என்ற கருத்தாகும். உண்மையை தவிர்த்து பிறவற்றை காணத் தராதநெறி இயலிய நூனெறி எனப்பட்டது. ஏரணசிந்தனை நியதிகள் இதுவெனவும், அதன் உறுப்புக்கள் இதுவெனவும் வரைந்து நிறுத்துதற்கு ஏதுவாக அமைந்திருந்ததும் உண்மை எனும் கோட்பாடே. .உண்மை என்றால் யாது எனுமோர் தெளிவினை அவாவியே இத்துறைகள் விளக்கப்பட்டன. மேலும் ஏரணவியலாகிய சைவ நையாயிகத்தில் உண்மை எனும் உணர்விற்கு காரணமாய் நிற்பது ஆன்ம சிற்சத்தியே ஆகவே அதுதான் அளவை பிறவல்ல எனும் கருத்தும் இங்கு இன்னும் நுட்பமாக ஆராயப்பட்டு விளக்கமுறும் என்பதையும் முற்கூட்டியே சொல்லிவிடவேண்டும். மறைவுபோக்கி இன்னும் மிகத் தெளிவாக தொல்காப்பிய மரபியலிலும் சிவஞானபோதத்திலும் இருக்கின்ற கோட்பாடு விசா¡¢க்கப்பட்டு தெளிவாக்கப்படும் என்பதாம்.
இறைவன்காட்ட, காட்டியவாறே ஒருவன் காணும்போதே, சிற்சத்திப் பதிவின் வழி இறைவனே உண்மை யாதென்று உணர்த்துகின்றான் என்பதே மெய்கண்டார் இது தொடர்பாக கொண்ட கருத்தாகும் என்பது விளக்கப்பட்டு ஆகவே போதத்தில் விளங்குவது நையாயிகம் அல்ல மாறாக தொல்காப்பிய மரபியலில் விளக்கப்படும் ஏரணவியலே என்றும் நிலைநாட்டப்படும் இங்கு. இதுவே சித்தாந்தமாக, அதுவே பொருந்துவது என்பதும் நிறுத்தப்படும் என்றது.
சூத்திரம் 27: மெய்யியம்
பல்லோ ரொத்திடப் பகர்ந்திடா தெதுவும்
மெய்யெனக் கொளவரா விருப்பின் கற்பனை
பொய்யென வுமாகும், புரிந்துகொள் வழியில்லை
உண்மையெனு முணர்வின் உறுதிவிளை யாதலின்
இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின் உண்மையென யாது நிற்கின்றதோ அது பலரால் ஒத்திடும் பண்பிற்று எனவும் ஆகவே யாது இவ்வாறு இயலாதிருக்கின்றதோ அதுவெல்லாம் ஆன்மக் கற்பிதங்கள் என்பதோடு பொய் எனவும் பகர்ந்திட வரும் என்பதை விளக்குதல் கருதியதாம்.. மேலும் யாது உண்மையாய் நிற்கின்றதோ, அது அழியாது நிற்கின்ற சிறப்பின் அகத்தில் ஒர் உறுதி உணர்வினை தந்துகொண்டே நின்று விழாது பற்றப்படுவதாய் நிற்குமென்றும் உணர்த்துதல் நுதலிற்று என்பதாம். உண்மை என்பது அனைவருக்கும் பொதுவாக நிற்குமொன்று என்பதொடு, யாண்டும் அழியாது நிற்கும் தகைமைத்து என்பதுமாம்.
முதலாம் படிமெய்.
மேற்கோள்: நையாயிகர் கூற்றுப்படி பிரமைகளாகிய உண்மையறிவுகளையேத் தரும் பிரமாகரணங்களென எக்கரணங்களும் இல்லையென்றது.
ஏது: இப்பண்பிற்று எனக்காட்டப்படும் எல்லா அளவைகளும் உண்மைதான் யாதெனும் அறிவை அகப்படுத்தியே நிற்பதின்.
எ.கா.3.1.1.
உண்மை அறிவுகளையேத் தரும் பிராமணங்களாக, அளவைகளாக சிலர் பிரத்தியக்கத்தைத் தர, வேறு சிலர்
அதனோடு அனுமானத்தையும் தர, இன்னும் சிலர் அவற்றோடு ஆகமத்தையும் சேர்த்து அளவைகள் ஒன்றெனவும்,
இரண்டெனவும், மூன்றனெவும் கூறிச் செல்வர். இன்னும் சிலரோ இவற்றின் பகுதியாகவும் வேறாகவும் அருத்தாபத்தி, ஐதீகம், உபமானம், அனுபலத்தி என்றும் இன்னும் பலவாறும் அளவைகளை வி¡¢த்துக்கொண்டே செல்வர். இவை அனைத்தும் பிரமாகரணங்களாக ஆகவே பிரமாணங்களாக கொளப்படுவதின், ஒர் சூத்திரத்தின் பொருளை இவ்வகைபிரமாணங்களின் வழி எழுந்தது என்று விளக்கிவிடின், உடன்பாடு உறுதியாகப் பிறக்கும் என்ற நம்பிக்கையில் தர்க்கம் செல்ல, உள்ளொளி பெருக்கி உணரவைத்தல், தான் கண்டதை பிறருங் காணவைத்தல் எனும் வகையில் இத்தர்க்கங்கள் இல்லாது போக, இவை காண்டிகை உரைகள் அல்லவென்பது. மேலும் இவை பிரமாகரணங்கள் எனும்போது, உண்மையறிவு என்றவொன்று உண்டென்று மேற்கொண்டே இவர்கள் வாதங்கள் செய்வதின், இவை காண்டிகை உரை அன்றாயிற்று என்பதாம்.
எ.கா.3.1.2.
காட்சியுணர்வாகிய பிரத்தியக்கத்தை அவை தோன்றும் வாயில் கருதி வாயிற்காட்சி, மானதக்காட்சி,
தன்வேதனைக் காட்சி என்றும், மலங்களை வாட்டி ஞானத்திருட்டியில் எழு விஞ்ஞானக்காட்சி, சிவஞானக்காட்சி
என்னும் வகுக்கப்படும். காட்சிகள் இத்தன்மைற்று, இவ்வாறு இவ்வாறு அவை எழும், இவ்வாறு இவ்வாறு அவை
வகுக்கப்படும் என்பது உடன்பாட்டிற்கு¡¢யதே எனினும், ஐயத்திற்கிடமான ஒர் கருத்து இத்தகைய ஒர் காட்சியின்
வழியாக பெறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக உண்மையென்று உடன்படவாராதென்பது. காணப்படுவது
அனைத்தும் இரட்டுருவின் நூற்களென, அவற்றிற்கு புறவுருவென்றும் புதையுருவென்றும் இருவகை உருவுகள் சமகாலியங்களாக (simultaneous) நிற்க, இவ்வகைக் காட்சிகளின் வழியாக யாவை உண்டென அறியப்படுகின்றதோ அவை அனைத்தும் முற்றாகத் தெளியப்பட்ட வொன்றாக எழுவதில்லை என்பது. ஆயினும் உண்டு எனும் உண்மையை அறியத்தருவதின், பிறரால் அது உடன்படக்கூடியவொன்றாகவும் இருப்பதின், "உண்மை என்றால் இது" எனுமோர் கோட்பாட்டை உட்கொண்டே இக்கொள்கை செல்கின்றது என்பது. உட்கொண்ட கோட்பாடு யாதெனின் "ஐயமும் தி¡¢பும் மருட்கையும் போக்கி யாது காண்பதற்கு வருகின்றதோ, அது உண்மை" என்பதேயாம்.
எ.கா.3.1.3.
இனி தார்க்கிகர் கூறும் அனுமானமாவது, "மலையில் புகை, யாங்குப் புகையோ ஆங்கு நெருப்பு, ஆகவே மலையில் நெருப்பு" என்றவாறு காட்சிக்குப் புலனாகுவதைக் கொண்டு, காட்சிக்குப் புலனாகவொன்றை, உடனிகழ்ச்சி எனும் வழி அந்நுவயம் வெதிரேகம் என்றுங்காட்டி, உண்மையென்று சாதிக்க முயல்வதாகும். சாதிக்கக் காரணமாக நிற்பது ஏதெனப்பட, அந்நுயம் வெதிரேகம் என்பவற்றின்வழி உடனிகழ்ச்சி நிறுத்தப்படுவது உதாரணமாக, சாதிக்கப்படுவது இங்கு மேற்கோளாக நவிலப்படுகின்றது. இனி வெளிப்பட்டும் அனைவராலும் உடன்பட்டு நிற்கின்ற ஓர் உண்மையிலிருந்தே பி¡¢தோர் உண்மை இவ்வகை அனுமானங்களால் பெறப்படுகின்றது என்பதின், உண்மையென்றால் இஃதெனும் அறிவு உட்கொண்ட வொன்றாகவே இங்கும் இருக்கின்றது என்பதாம். உண்மையாகிய புறவுருவிலிருந்து சமகாலியமாகவும் நிமித்தகாரணமாகவும் நிற்கும் புதையுருவினைக் காண்பதே ஏரணவியலின் அனுமானித்தலென, இங்கும் உண்மையைப் பற்றின கோட்பாடு ஏற்கனவே உண்டென்பது.
எ.கா.3.1.4.
ஆகமங்களை பிரமாணங்களாகக் கொள்வதும், இதனைப் போன்றே என்றது. காண்பதெலாம் நூலென, புறவுருக்
கண்டு புதையுரு தெளிந்து செய்நூல்களாக ஆக்கிக்கொண்டே ஆழ ஆழச் செல்ல, தூரநூலென்றும்
தூரதூரநூலென்றும் முடிவில் இரட்டுருவற்ற ஞால்வேதம் வருமென்றுங் கண்டோம். இங்கு தூரதூர நூற்களே ஆகமங்கள், சுருதிகள், வேதங்கள், புராணங்கள் எனப்படுவதாம். கடப்புருகாண் திறத்து ஞானதிருட்டியின் காணவருபவையாக இந்த ஆகமாதிகள் கிடக்க, அவை காட்டும் உலகும் பொருட்களும் அத்தகைய காட்சிகட்கு வருவதின் மாத்திரையான் உண்டென உடன்பட வைத்தலின், ஆங்கு இவ்வாறு காணவருவதின் உண்மையே, பொய்யல என்ற கருத்தும் உட்கொளப்பட்டே நிற்பதின், இங்கும் உண்மை இதுவெனும் ஒர் கோட்பாடு உண்டென்பது. எது ஞானதிருட்டிக்கு உளதாய் காணவருகின்றதோ, அது உண்மையே பொய்யல என்பதே இங்கும் உட்கொண்டு உபகா¢க்கப்படும் உண்மையைப் பற்றி அறிவு என்பதாம்.
எ.கா.3.1.5.
இனி உவமானமாவது உள்ளுறை உவமம், ஏனை உவமமென இருவகைத்தாகி பொருளுணர்வு தேற்றி நிற்குமென்பது. இவற்றை உள்ளுறை உவமம் தவிர்த்த பிற, அறிந்து உண்மையென்று கொண்ட ஒன்றோடு அறியாப் பிறிதினை ஒப்பிட்டு ஒன்றினை உண்மையென உணர்த்த எழுவதின், அறிந்திருப்பது உண்மையே என்று இங்கு உட்கொள்ளல் நடக்கின்றதாம். இனி உள்ளுறை உவமம் (metaphor) என்பது ஞானதிருட்டியின் காணவரும் ஒன்றை, அதற்கிடமாக பொறிலியப்பார்வை வரும் ஒன்றின்மேல் ஏற்றி உள் உறைவதாகக் கூறப்படுவதின், பொறிலியப்பார்வைக்கு வருவது உண்மையே என்று உட்கொளப்படுகின்றது என்பதாம். உண்மையென்று உடன்பட்ட ஒன்றினைப் புறவுருவாகக் கண்டு, அதனின் புதையுருவாக,
உள்ளே உறைவதாக யாது உணர்த்துகின்றதோ அதுவே உள்ளுறை உவமமாக வெளிப்படுவதின், உண்மை யாதென்றத் தெளிவு ஏற்கனவே உண்டென்பதாம். உண்மையாக நிற்குமொன்றினுள் உண்மையாகத் திகழுமொன்றினை உணர்த்தும் போதே உள்ளுறை உவமங்கள் எழுவதின், உண்மை யாதெனும் தெளிவினை அகப்படுத்தியே இதுவும் செல்கின்றது என்பதாம்.
எ.கா.3.1.6.
இனி ஒன்றினை மொழிய, ஆங்காகும் சொற்றொடர்கள், வாக்கியங்கள், சொற்கள் என்பவற்றால் உணர்த்தப்படும்
சொல்லெச்சம், பொருளெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்பனபோன்ற எச்சங்களை (implications)
வெளிப்படுத்திச் சொல்வதே அருத்தாபத்தியென, அவ்வினைக்குக் கலனாக முதலாக நிற்பது உண்மை அல்லாவிடில், இவ்வாறான அருத்தாபத்தியின் இயம்பப்படுவதும் உண்மை அல்லாதுபோக, அதுவுமோர் ஏரணச்செய்கை ஆகாதுபோம் என்றவாறு. "மயில் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது", "ஆகவே மயில் உண்டு" எனும்போது முன்னது உண்மை யென்றே கொளப்பட்டு, அதனின் அனுமானிக்கப்படுவது உண்மையாகின்றது. "சோழன் வென்றான்" "ஆகவே பாண்டியன் தோற்றான்" எனும் பொழுதும் "சோழன் வென்றான்" என்பது உண்மையாக இருக்கத்தான், "பாண்டியன் தோற்றான்" என்றது உண்மையென உடன்பட முடியும் என்பதைக் காண்க. இவ்வாறே ஏனைய பிரமாணங்களையும் கண்டு கொள்க.
இரண்டாம் படிமெய்.
மேற்கோள்: இனி மறுத்து மறுத்து எறிந்தும் மா¢யாவகை ஒளிர்ந்து உறுத்தி நிற்பதே உண்மை என்றது.
ஏது: எழக்கூடிய ஞானங்களை தி¡¢பென, மித்தையென, ஆரோபிதமென, அத்தியாசமென, கற்பிதமென உணர்ந்து கழித்திட உதவுவது சாட்சாத்காரத்தின் உண்மையெனும் அறிவேயாம் என்பதின்.
எ.கா.3.2.1.
எல்லா ஞானங்களும் காண்டல் வழியாகப் பெறப்படுவது என்பதின், காண்பானாக ஞாதுருவும் காட்சிப்படுவதாக
ஒர் நேயமும் உண்டென்பதோடு, அந்த நேயம் இரட்டுருவின் நூலுமாகும். ஆகவே உண்டெனும் உணர்வினை எழுப்பவும்,உட்கிடக்கையாக ஒர் ஞானத்தினை அகத்தில் கொண்டிருப்பதாகவும் நேயமாகிய அந்நூல் விளக்கும் என்பது.எழுகின்ற ஞானம் தானே உதியாது, காண்பானாகிய ஞாதிரு பல உத்திகளைப் பெய்யவே தான் எழும்.
இவ்வாறான உத்திகள் பிழையுற்றதெனின் தி¡¢பாதிகள் போன்ற பிறழ்ச்சி ஞானங்கள் எழும். இனி தற்போதம்
போன்ற அகச்சேட்டைகளை அடக்கி, நேயப்பொருள் தன்னை எவ்வாறு காட்டுகின்றதோ அவ்வாறேக் காணும்பொழுதுஎழக்கூடிய அறிவுகள் நிருவிகற்பத்து ஆதிசித்தாகி பிறகு சவிகற்பத்து அந்தசித்தாக மலர்வதின், அதுபொழுது ஐயமும் மருட்கையும் தி¡¢பும் எழாதுபோதலின், அவ்வறிவு இப்பண்பின் உண்மை என்று உணர்த்தப்படுகின்றதாம். இதுவே அப்பொருளின் சாட்சாத்கார அறிவு என்பதுமாம்.
எ.கா.3.2.2.
உள்ளத்தை உள்ளவாக் காண்பதின் இவ்வுண்மையெனும் உணர்வு எழுகின்றதின், காண்பானின் கற்பிதங்கள் அல்ல,
மருட்கை, பிராந்திவிகாரம் போன்றவையும் அல்லவென்பதின், பிறரால் மறுத்து மறுத்து எறியப்பட்டதாயினும்,
மா¢யாவகை தான் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் என்றவாறு. தி¡¢பாதி ஞானங்கள் ஒருசிலரால் ஒருகாலத்தில் ஒர்
சூழலில் உடன்படல் தருமெனினும் யாண்டும் இல்லை என்பது. ஒரு வகை உத்திகள் பெய்துக் காண அவ்வாறுத்
தோன்ற, உண்மையல்லா ஞானங்கள் பிறவகை உத்திகள் வழி பார்க்கும்போது எழாது விழும் என்றவாறு. இவ்வாறு
பல்வேறு உத்திகள் வழி ஞானம் தேற்றும்பொழுது தான் தோன்றப் பிற அழிந்து விழுவதாய், பொய்யென மாய்வதாய்
யாது இருக்கின்றதோ, தன்னை இவ்வாறு வீழ்த்தும் பிற ஞானங்கள் எதற்கு இல்லையோ அதுவே மெய்மை பயக்கும் ஞானம் என்றது.
எ.கா.3.2.3.
இனி இவ்வாறு எழும் சவிகற்ப உணர்வுகளும் சொற்படுத்தபடுமாற்றல், கற்பிதங்களே ஆகவே பொருளின்
சாட்சாத்கார உணர்வு அன்று எனின், அற்றன்று என்பதாம். கற்பிதத்தின் காணல் வேறு, கற்பிதம் விட்டு தெற்றென
ஓர் பொருளை சவிகற்பவுணர்விற்றாய் காண்பது வேறு. காட்சிக்கு இலக்காகும் ஒர் பொருளை நூலெனக்
காணாது ஆகவே அதற்கு புறவுருவென்றும் புதையுருவென்றும் இருவுருக்கள் சமகாலியங்களாக இருப்பதை உதாசீனம்செய்து, வெறும் தூண்டியாகவேக் காணும்பொழுது (pure stimulus) கற்பிதங்களாகப் பல படைத்தே அது
இவ்வியல்பிற்று என்று கற்பனையின் சொல்லாக்கப் படும் . இனி இவ்வாறன்றி நூலென பிழையாது கண்டு
புறவுருக்களைக் கொண்டு நிமித்தகாரணமாக நிற்கும் புதையுருக்களைக் கண்டு நேயத்தை விட்டகலாது அதனின்றேஅதனை தென்றென அறிவது கற்பித்து அறிவது அல்லவென்பதின், அதுவே சாட்சாத்கார உணர்வு என்பதாம்.பொருளினின்று விட்டகல்வதாகிய அகக்கரணச்செய்திகள் கற்பிதங்களாக, இவ்வாறு விட்டகலாது பொருட்களையேதெற்றென அறித்தரும் மெய்க்காண்டல் கற்பிதங்கள் அற்றது என்பதாம்.
எ.கா.3.2.4.
இனி இவ்வாறு தி¡¢பாதிகள் இல்லாது சவிகற்பவுணர்வாகவே உணரப்படும் அனைத்தும் காலவுணர்வோடு
வருவதின், அசத்தறிவே ஆதலின் பொய்யே எனின், அதுவும் ஏற்புடைத்தன்று என்பது. அசத்து இருவகைத்து.
ஓர் பொருளை நூலாக ஆகவே இரட்டுருவினதாகக் காணாது, ஒர் தூண்டியாகவேக் கண்டு பிறகு பலவாறு பலவாறு தன் அகச்சூழலிற்கேற்ற வகையில் கற்பித்து ஒன்றாகக் காணும்போது எழுகின்ற ஞானம், எப்பொழுது அவன் அந்நேயத்தை நூலாகக் காணத்தொடங்குகின்றானோ, அப்பொழுது பட்டுவிழும் என்பது. ஒர் கயிற்றினை அரவமாகக் காண்பானொருவன், கயிறெனவேக் காணும் போது அரவஞானம் விழுந்து மாயமாகின்றது. கயிற்றை கயிறெனக் காணுவது அதனை ஓர் நூலென இரட்டுருவினதாகக் காண்பதாகும். இனி கயிற்றை கயிறெனக் காண்பான், அதனை இருத்தி இன்னும் இன்னும் விசா¡¢த்து அதனின் புதையுருக்களைக் கண்டுக் கண்டு அறிவினை வளர்த்துக் கொண்டே செல்லும் போது முன்பிருந்த ஞானம் வளர்ந்து வேறொரு வடிவினைப் பெற்றிருக்கும். இவ்வாறு மாறிக்கொண்டே வரும் இவ்வறிவுகள்தான் ஏரணவியலில் அசத்தறிவுகள் எனப்படும். இவை பொய்யல மெய்யே. ஆயினும் முடிந்தவொன்றல்ல, தெள்ளறிவின் எல்லையல்ல, இன்னும் இன்னும் தெளிவு வந்துகொண்டே இருக்கும் என்ற குறிப்பு இருப்பதின் இது அசத்து எனப்படும் என்பது.
எ.கா.3.2.5.
இனி இரட்டுருவற்ற ஞால்வேதவுணர்வின்போதே, அந்நியமின்றிய உணர்வின் சிவஞானமே பிரகாசித்து நிற்கும்
அதுபொழுது சுத்த சைதன்யமாகவே ஆன்மா விளங்குவதின், அதுபொழுது இச்சொரூபத்திற்குப் புறம்பாகிய எல்லா
ஞானங்களும் நின்று நிலவாது போதலின், சவிகற்பவுணர்விற்றாய் கிளவியாக்கப்படுவதாய் வரும் அனைத்தும் பொய்யே எனின், இதுவும் ஏற்புடைத்து அன்று என்பது. மாய்ந்து இல்லாது போவதும், உடங்கியந்து உருமாறி நிற்பதும் இல்லாத வகையில், பிரகாசமாய் நிற்றலும் அப்பிரகாசமாய் நிற்றலும் என்பதாக அறிவு இருவகையில் நிற்கும். சிவஞானம் பிரகாசித்து நிற்க, அதுபொழுது ஏனைய ஞானங்கள் அப்பிரகாசமாய் நிற்கும், ஒன்று முன்புலனாக ஏனைய பின்புலனாகுமென்பது. இங்கு சிவஞானம் பின்புலனாக ஏனைய ஞானங்கள் முன்புபோல் முன்புலனாகி பிரகாசிக்கத் தொடங்கும் என்பதின் அவை கற்பிதங்களாக விழுந்து அழிந்தவை அன்றாம். ஆகவே அசத்தறிவாகிய போதிலும் கிளக்கவரும் சவிகற்பவுணர்வுகள் பொய்யன்று மெய்யே என்பது.
எ.கா.3.2.6.
இனி இன்னும் ஒரே படித்தாக, காலவுணர்வு கழன்றபொழுதே அறியவரும் ஞானமாக சிவஞானம் நிற்பதின், அது
மெய்யென்றும் பொய்யென்றும் கூறவாராது போக, மெய்யென அல்லையென கொளக்கூடியதாக நிற்பது
சவிகற்பவுணர்வுகளின் அசத்தறிவுகளே என்றது. காணப்படும் நேயப்பொருளில் உள்ளதையும் அல்லாததையும்
கிளக்கும் பண்பு அசத்தறிவுகட்கே உண்டென, உள்ளதை உள்ளவாப் பகர, உண்மையென்றும் அதற்கு புறம்பாக
இருக்கும்போது பொய்யென்றும் நிறுத்தப்படுமாம். உண்மையென்று அசத்தறிவுகளே அகத்தே இருத்தப்பட்டு, ஏனைய பிற இத்தகைய அசத்தறிவுகளோடு சேர்த்தி இருத்தி அகத்திருள் கடியப்படும் என்பது. பொய்யெனக் கண்டது அகத்திருளை அறியாமையை போக்குதற்கு உதவாது போக, மெய்யெனப்படுவது உதவும் என்பது. இவையே மேற்கோள்களாக கொளப்பட்டு ஞானத் தெளிவுகளாக, மாணறிவுகளாக அகத்திருத்தப்படும் என்றவாறு. பொய்யை பொய்யெனக் காட்டி வாழ்த்திடும் பெற்றிமையே மெய்யினை மெய்யென உணரத்தந்து நிற்கும் என்பது.
மூன்றாம் படிமெய்.
மேற்கோள்: உடன்படாதோரையும் உடன்பட்டு நிற்கச் செய்யும் வன்மை உண்மைக்கே உண்டென்பது.
ஏது: எல்லார் அகத்தும் உண்மையையேக் காணவேண்டும் எனும் வேட்கை இயல்பாகவே உண்டென்பதினும், உண்மையெனப்படுவது அனைவருக்கும் பொதுவானவொன்றாய் பொதுவியத்தோடு திகழ்வது என்பதினும்.
எ.கா.3.3.1.
எல்லா மாந்தர்களும் ஏதாவதோர் வகையில் காண்டல் செய்வதினாலேயே உணர்வு பெற்று அதனின் அடிப்படையாகப் பற்பல செயல்களைச் செய்கின்றனர். இவ்வாறு காண்பதனைத்தும் நூற்களாகவே அறிவில் திகழ, அவை இருட்டுருவில் புறவுருவினைக் காட்டி புதையுருவுண்டென நிறுத்துவதின், அதனை அறியாது திகைக்கும் மாந்தர் அதற்கு மூலமாக தன்னகத்தே அறியாமை இருள் செறிந்திருப்பதையும் உணர்ந்தவர்களாக எழுகின்றனர். அறியாமை இருள் அகத்திருந்தும் அதனை உணராதிருந்து அதுபொழுதுதான் உணர்தலின், அதனை நீக்குவான் வேண்டி பல உத்திகளைப் பெய்து அதனைப் போக்கவும் விழைவர் என்பதாம். இஃது எதனாலோவெனின், எல்லா மாந்தர் அகத்தும் முன்னறிவாக சிவஞானஞ் திகழ்வதின், அதனை மகிழும்போது எவ்வித அஞ்ஞானவிருளும் அகத்திராது என்றும் உணர்ந்திருப்பதினாலேயே என்பது. எல்லா ஆன்மாக்களும் இதனின் சதசத்து எனப்படும். அசத்தறிவுகளாகப் பலமகிழும் அதேபொழுது இதற்கு வேறாக சத்தறிவு உண்டெனும் உணர்வோடு திகழ்வதின் இவ்வாறு. சத்தறிவாவது ஆன்மாவின் அகத்தே சிவஞானமே ஞானமாக பிரகாசமாக சுடரும் போது எழுகின்ற அறிவாகும்.
எ.கா.3.3.2.
சிவஞானத்தைப் பற்றிய முன்னுணர்வு எல்லார் அகத்திலும் ஏற்கனவே இருக்க, தெளிவாகும் அறிவெலாம்
சிவஞானமோ அல்லையோவென சீர்தூக்கிப் பார்க்கும் இயல்பும் அனைவருக்கும் உண்டென்பது. இதுவே மெய்யென்று தேர்ந்து அகத்திருத்துவதற்கும் பொய்யென்று முடித்து விலக்குதற்கும் ஏதுவாக அமைகின்றது. யாது சிவஞானப்பிரகாசத்தோடு ஒத்து நிற்கின்றதோ அது மெய்யெனப்பட, பிற அல்லதாகி வீழ்கின்றது. இவ்வாறு கண்டித நிலையில் காணப்படும் சிவஞானத் தெளிவுகள், காலவுணர்வுடன் வருவதின், அசத்தறிவு எனவும் பட்டு, சிவஞானமே ஞானமாக பிரகாசிக்கும்போது எழுகின்ற சத்தறிவினின்று வேறுபடுத்தப்படுகின்றது என்றவாறு. சிவஞானத்திற்குவிரோதமாக அல்லாத சுட்டுணர்வு அசத்தறிவு எனப்பட, சிவஞானமே ஞானமாக சுடர்கின்றபோது எழுகின்றசுட்டிகந்த அறிவு சத்தறிவு என்பதாம்.
எ.கா.3.3.3.
இவ்வியல்பு எல்லா மாந்தர்களுக்கும் இயல்பாகவே உ¡¢யதென்பதின், எல்லார் அகத்தின் சிவஞான முன்னுணர்வு
உண்டென்பதின், அதுவே மெய்யென்று ஒன்றினைக் கொள்ளத் தருவதின், அனைவர் உள்ளத்தும் மெய்யென்பதின்
இலக்கணம், மெய்யென்றால் யாது என்பதைப் பற்றிய அறிவு பேதமற்ற நிலையில் உண்டென்பது. மெய்யின்
இலக்கணம் அனைவருக்கும் பொதுவாயவொன்று, எல்லா பேதங்களையும் கடந்து நிற்கும் ஒன்று என்பதாம்.
இதனால் தாம்தாம் தோற்றுவிக்கும் கற்பிதக் கருக்களாலேயே உடன்படாமை நிலவுமென, யாங்கு இவ்வாறான
கற்பிதங்களைப்போக்கி, உள்ளதை உள்ளவாக்காணும் திறனுண்டோ ஆங்கெலாம் உண்மைக்கு உடன்படும் திறனும்
உண்டென்பது.
எ.கா.3.3.4.
அநாதியே அகத்துச் சுடர்ந்துகொண்டிருக்கும் சிவஞானத்தைப் பற்றிய முன்னுணர்வே, தோன்றும் அறிவுகளையெல்லாம் மெய்யென்றும் பொய்யென்றும் விவேகித்தற்குக் காரணமாக இருக்க, தற்போத செருக்கின் இவ்வாறு இயங்காது, உண்மையென்று ஒன்றினை நிறுத்தக்கூடிய அளவைகள் இதுவே எனக் கொண்டு ஒருவன் வாதிக்க, இத்தகைய அளவைகள் அனைத்தும் கற்பிதங்களேயென, அவற்றிற்கு அனைவராலும் ஓம்பக்கூடிய பொதுவியம் இன்றென்பது. இதனின் உண்மையாக உடன்பட்டு ஒத்துப்போதல் நடவாதுபோம். உடன்பட்டாராகப் பலர் எழுந்தபோதிலும், ஒரேவகையான மயக்கத்தின் காரணமாக இவ்வுடன்பாடு என்பதின், நின்று நிலவாது காலம் வரும்போது விழும் என்றவாறு. தற்போதச் செருக்கின் கற்பிதங்களாக எவை எவை எழுகின்றனவோ, உண்மையென நின்றபோதிலும் அகத்தே சிவஞானம் பிரகாசமாக நிற்கத்தொடங்க அவை பேய்த்தேர் போல இல்லாது போம் என்றவாறு.
எ.கா.3.3.5.
இனி அநந்நியப்பார்வையின் போது பிரகாசமாய் நிற்கும் சிவஞானம் அனைவருக்கும் பொதுவாகிய நிலையில் அதன் ஆன்மவுணர்வாகிய சத்தறிவு அனைவராலும் உடன்படக்கூடுவதே ஆயினும் அநந்நியப்பார்வையின் எழுவதென்பதின் ஒத்திட்டு உடன்படவைக்கும் பொதுவியங்கள் இல்லையெனின், இக்கூற்று பொருந்துவதில்லை என்பதாம். அந்நியப்பார்வைக்கு இலக்காகும் அனைத்தும் அயலதாய் ஆங்கே இருப்பதாய் நிற்பதின், அனைவருக்கும் காணவரும் ஒன்றேயாம். இவ்வாறு இருப்பினும் காட்சிகள் வெற்வேறாகவே நிற்கும் போது ஒத்தக் காட்சி உதியாதெனின், அதுவும் ஏற்புடைத்தன்று. எங்கே ஓர் பொருள் தன்னையே தன்னுள்ளிருந்து எவ்வாறு காட்டியருள்கின்றதோ அவ்வாறே அகத்தெழு எல்லாவித கற்பிதங்களையும் போக்கிக் காணும்பொழுது, காட்சிகளும் ஒன்றாகி அதனின் ஒத்துப்போய் உடன்படலும் மெய்யாகும் என்றவாறு.
எ.கா.3.3.6.
இனி ஒத்தக்காட்சியின், உண்மையெனும் உணர்வின் ஒத்துப்போய் உடன்படல் எல்லார் அகத்தும் உண்டெனின்,
ஒத்துப்போகாது உடன்படாது பகைமை பாராட்டி போராடலும் உலகில் ஏன் காணப்படுகின்றதெனின், அகத்து அன்றே நிற்கும் சிவஞானம் சுடரவொட்டாது தகைக்கும் மாலச்சத்திகள் இருப்பதால் என்றறிக. சுட்டுணர்வாக நிற்கின்ற ஆன்மவறிவை விசாலமாக்கி வி¡¢த்து நுணுக்கி பரமாக்கும் சிவஞான ஈர்ப்பிற்கு ஏதுவாக, இவ்வறிவை இன்னும் இன்னும் குறுகியதாக்கி சிற்றினதாக்கி சிறைபடுத்தி சிதைத்து அழித்து இல்லாது போக்கும் சத்திகளும் அநாதியே ஆன்மாக்களின் உள்ளத்தில் இருக்கின்றது. எங்கே சிவஞானத்தின் முன்னறிவு இவ்வாறான மாலச்சத்தியில் மறைப்புண்டு போகின்றதோ, அதுபொழுது தற்போதச் சேட்டைகளும் அதன்வழி கற்பித அளவைகளும் பிறவும் எழுந்து பகைமை வளர்த்து போராட்டத்தை மிகுக்கும் என்றவாறு. சிவஞானமுன்னுணர்வு தலைப்பட, உண்மைக்குத் தலைவணங்கிச் செல்லும் மதுகையும் உடன் வரும்.
நான்காம் படிமெய்.
மேற்கோள்: இனி யாங்கு உண்மையெனும் உணர்வோ, ஆங்கு சிற்சத்திப் பதிவு உண்டென்பது.
ஏது: அகத்திருக்கும் தி¡¢புவுணர்வுகள், ஐயப்பாடுகள், மித்யாதி ஞானங்கள் போக்கப்பட்டு தெள்ளறிவின் பிரகாச ஞானம் சுடர்ந்தொ¢தலின்.
எ.கா.3.4.1.
சிற்சத்தி என்பது அருளொளியாகும். அகத்து அஞ்ஞானயிருளை புறத்திருளைப் போக்கும் பகலவனென
போக்குதலின், அது ஒளியெனப்பட்டது. பற்பல உத்திகள் பெய்து பிறகு ஒதுங்கி சாட்சிமாத்திரையாய் செய்தித்துவம் கழன்று நிற்க, தானே வெடிப்பதின் அருளெனப்பட்டது. சித்தெனினும் ஞானவொளி எனினும் ஒன்றே. இவ்வாறு அகத்து கிடக்கும் தி¡¢புணர்வுகளும், ஐயப்பாடுகளும், பிற பிற மதிமயக்கங்களும் தெளிவற்ற நிலையில் ஆன்மாவை வீழ்த்த, அதனின்று விடுபடும் வகையான் ஆன்மா பற்பல நூலுத்திகளைப் பெய்து முயல, அதுபொழுது தகுந்த உத்திகளைப் பெய்திருப்பின் இச்சிற்சத்தி அகத்தெழுந்து மயக்கங்களையும், தி¡¢புகளையும், ஐயப்பாடுகளையும் நீக்கி தெற்றென இஃது இதுவே என்றவாறு ஒருபொருள் ஒற்றுமைக்கொளத் தந்து நிற்கும். இத்தகைய மாணறிவின் ஞானப்பிரகாசமே சிவஞானப்பிரகாசத்தோடு விரோதமின்றி நிற்பதின், உண்மை எனும் உணர்வையும் தேற்றி வைக்கும் என்பது.
எ.கா.3.4.2.
இதனின் ஓர் அறிவு சித்தாந்தமாக எழுந்து சுடர்தலின், அதனின் அளப்பா¢ய ஒர் உறுதியும் பிறக்கும் என்பது.
இதுவே உண்மை இதற்கு முன்பிருந்ததும் இதற்குப் புறம்பானதும் உண்மையல்ல என்றவாறு இந்த ஞானப்பிரகாசம்
அகத்தே உணர்த்தி நிற்பதின், இவ்வாறான மனவுறுதி பிறக்கும் . துணிந்து "இது இற்று" என்றவாறு
பிறருக்கும் உணர்த்தி தெளிய படுத்தும் திறனை இதுவே நல்கும் என்றவாறு . எங்கே ஐயப்பாடோ, மயக்கமோ
அதனின் எழு கலக்கமோ, ஆங்கே இதுவே சித்தாந்தம் என்ற துணிபு இல்லையென்பதின், பிறருக்கு அதனை
உணர்த்தும் தறுகண்மையும் எழாதுபோம். சித்தாந்தத் துணிவு சிற்சத்திப்பதிவினால் எழுவதென்பது.
அகத்து மலமாசுக்கள் கண்டிக்கப்பட்டு நீக்கப்பட, இச்சித்தாந்தத் துணிபு பிறக்கின்றது, அளப்பரிய மனவுறுதியையும் தறுகண்மையையும் உடன் வருகின்றது.
எ.கா.3.4.3.
இனி இதனின் ஒன்றினைப் பிழையற பு¡¢ந்துகொள்ளல் மெய்யாகுமென்றது. எங்கே நேயப்பொருளொன்று நூலாக
எழுந்து புறவுருவோடு சமகாலிக புதையுருவினையும் காட்டி நிற்கின்றதோ, அதனைப்பு¡¢ந்துகொள்ளல் என்பது
நிமித்தகாரணப் புதையுருவை பிழையறக்கண்டு, புறவுருவின் திறத்தினை அறிந்து மகிழ்வதாகும். அதுபொழுது
அதனைப்பற்றிய அறியாமை ஓர் சிறை நீங்கலின், அதனைப் பு¡¢ந்துகொண்டோம் என்ற உணர்வும் உதிக்கின்றது.
கருவாக மறைந்து நின்ற நிமித்தகாரணப் புதையுருவை சிற்சத்திப்பதிவே உள்ளொளிப் பெருக்கி உணரத் தருதலின், இத்தகைய நூலுத்திகளின் போது மெய்யாகும் சிற்சத்திப் பதிவு பு¡¢ந்துகொண்டு சிறப்பதற்கு ஏதுவாக
நிற்கின்றதென்பதாம். பு¡¢வு அல்லது தொ¢வு என்பது ஒன்றின் மறைப்புக்களைப் போக்கி தெற்றென அறிதலால் வரும் உணர்வாகும்.
எ.கா.3.4.4.
இனி இதனின் இவ்வாறான சிற்சத்திப் பதிவுகள், அகத்தில் முன்னுணர்வாகவே சுடர்ந்து கொண்டிருக்கும்
சிவஞானத்தை இன்னும் இன்னும் சுடரச்செய்து, அதனின் பக்குவத்தில் உயரவும் படுத்தும் என்றவாறு. என்றுமே ஒரேபடித்தாக, அன்றே சுடர்ந்து கொண்டிருப்பதாகிய சிவஞானம் ஓர் ஆன்மாவின் அகத்து மேகமூட்டங்களால்
தகைக்கப்பட்ட பகலவனைப் போன்று, சுடர்ந்தும் சுடராதே கிடக்கும். அதுபொழுது சிற்சத்திப் பதிவுகள் மெய்யாக
சிறிது சிறிதாக இந்த மேகமூட்டங்களைப் போன்ற மலமாசுக்களை அகற்ற, சிவஞானம் அகத்தே இன்னும் இன்னும் தெளிவாகச் சுடரத் தொடங்கும். ஒர் ஆன்மாவின் பக்குவமும், அகத்து சிவஞானப்பிரகாசம் எந்த அளவிற்கு தெளிந்து சுடர்கின்றதோ, அதனை ஒட்டியே அமைவதென்பதின், இப்பிரகாசம் கூடிவர, அதனின் பக்குவமும் கூடிவரும். அழுக்குப்படிந்த ஓர் படிகத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தமாக்கிட, அது விழும் கதிர்களை இன்னும் சிறப்பாக உமிழ்வது போன்று, இதுவென்க. ஆன்மாவெனும் படிகத்தை சுத்தஞ்செய்யும் சவர்க்காரம் இந்த சிற்சத்திப் பதிவே என்பது. அதனின் ஆன்மாக்களின் பக்குவ முதிர்ச்சிக்கு ஏதுவாயது இதுவே என்றது.
எ.கா.3.4.5.
இனி இவ்வாறான சிற்சத்திப் பதிவின் அகத்திருள் நீங்கிட, அதுபொழுது மெய்யானக் கற்றல் நடைபெறுகின்றது
என்பதுமாம். ஒர் கற்பிதத்திலிருந்து இன்னொரு கற்பிதத்திற்குச் செல்வது, மயக்கத்திற் பட்டு இன்னும் இன்னும்
மயங்கியேச் செல்வதாகும். கற்பிதங்கள் அனைத்தும் சிவஞான முன்னுணர்வினை புதைத்து தற்போதசேட்டைகளின்
ஆவதென்பதின், உள்ளத்தை உள்ளவாக் காணுந் திறத்தோடு செல்லாத ஆன்மவினைகளாம். ஆகவே ஐயந்தி¡¢பு
மித்தையாதி போன்ற பிழையறிவுகளை நீக்காது, ஆகவே அகத்தே சிவஞானம் இன்னும் இன்னும் சுடரச்செய்யாது
போகலின், கற்பித சஞ்சாரமே தவிற கற்றல் அன்று என்பதாம். கற்பித சஞ்சாரங்கள் சித்தமாயைகளில் வீழ்த்தி
வீழ்த்தி தெளிவுக் காணாவகையில் படுத்தி, ஒருவனை வேதாந்தியாக்கி உலகே மாயை என்று எண்ணச் செய்து,
உலகத்தொடக்கின்மேல் ஓர் அச்சத்தைக் கொண்டுவரும். இத்தகைய கற்பிதங்களைக் போக்க, உள்ளதை உள்ளவாக்கண்டு ஆதிசித்தாகத் தோன்றுவனவற்றை அந்தசித்தாகக் கண்டு கற்று தெளிந்து செல்வோன் இதனின் சித்தாந்தியாகி சிவஞானத்தின்பால் ஊய்வன் என்பது.
எ.கா.3.4.6.
மெய்யினை மெய்யெனக் காண்பதற்கும் பொய்யினை பொய்யெனக் கண்டு கடிதற்கும் இச்சிற்சத்தி பதிவே காரணமாக இருப்பதின், இதுவே உண்மை யாதென்று உணர்த்தும் சிவமானம் என்பது. அகத்து ஓரளவேச் சுடரும் சிவஞானம் இன்னும் இன்னும் சுடர்ந்து அகத்தை சிவமாக்க உதவுதலினும், மேலும் உண்மை யாதென்று உணர்த்தியே செல்வதினும் இஃது சிவமானம் எனப்படுகின்றது. இச்சிவமானம் எல்லார் அகத்தும் ஏற்கனவே உண்டு, கற்று அறியவேண்டும் ஒன்றல்ல. இச்சிவமானத்தை நிறுத்துவதாக எவ்வாகமும் எச்சுருதியும் எஞ் ஞானியும் இல்லை. அற்ப ஆசைகளில் வீழ்ந்து கண்களை அங்குமிங்கும் அலையவிட்டு தி¡¢தலின், அகத்தே இருந்தும் இஃது அறியப்படாத வொன்றாகக் கிடக்கின்றது. இவ்வாறானப் போக்கைத் தடுத்து தனது செயல்களை அதற்கு அடிப்படையாக நிற்கின்ற தனது அறிவுகளையே கண்டு நூலாக்கி புறவுருக்களோடு வரும் புதையுருக்களைக் காண, சிவமானத்தின் உண்மை தொ¢யவரும். அதனின் பிற மானங்கள் எல்லாம் அவமானங்களாக கருதப்பட்டு தொலைக்கப்படும் என்றவாறு.
ஐந்தாம் படிமெய்
மேற்கோள்: காணப்படுவதெல்லாம் காட்டப்படுவதாக, எவ்வாறு காட்டப்படுகின்றதோ அவ்வாறே பிழையின்றி
காணுகையிற்றான் உண்மை எனும் உணர்வு உதிக்கும் என்பது.
ஏது: தற்போதம் போக்கி சிவபோதத்திற்கு ஆளாகும்போதே, உண்மை என்ற உணர்வு உதிப்பதின்.
எ.கா.3.5.1
ஐம்பொறிகள் இருந்தாலும், அவற்றை உடம்பின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் பல்வேறு விடயங்கள் தாக்கினாலும், அவற்றில் சிலவற்றையாவது பற்றி "இது இன்னது" என்றவாறு காணல், முனைப்பில்லாதபோது மெய்யாகாது போகின்றது. புறத்திலே ஐம்புலன்களால் உணரவரும் வகையில் ஒர் பொருளை நிறுத்துவதும், அத்தோடு அமையாது பல்வேறு முனைப்புகளை அகத்தேப் படர வைத்து அப்பொருளைப் பற்றி அதுவேத் தானாக நிற்குமாறு படுத்தி அதனின் அப்பொருளைக் காணுமாறு செய்வது ஆன்மாக்கள் செய்யும் அபுத்திபூர்வவினைகள் என்பதின், இத்தகையப் பொருட்களெல்லாம் காட்டப்படுவனவாயிற்று. சாக்கிராவத்தையில் ஒர் ஆன்மாவை இருத்துவதும் அதுபொழுது அகத்தே பல ஊக்கங்களைத் தந்து ஐம்பொறிகட்குப்படும் பொருட்களைப் பற்றிச் சார்ந்து அதுவேத் தானாகி நிற்குமாறு பதிய வைத்து அதனின் அப்பொருளை முனைப்பிற்கின்ற ஊக்கத்திற்கு ஏற்ப காணத்தருவது அபுத்திப்பூர்வ வினைகளால் ஆகுவதின், இவ்வாறு இவ்வவத்தையில் காணப்படுவதெல்லாம் காட்டப்படுவதேயாயிற்று.
எ.கா.3.5.2.
இனி இவ்வாறான காண்டல் வினைகள் சேடிக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருப்பது சிவஞான முன்னுணர்வும், அந்த சிவஞானத்தை இன்னும் சிறப்பாக அகத்துச் சுடரவிடவேண்டும் எனும் இயல்பானவோர் வேட்கையுமாக,சிவபோதத்தின் காரணமாகவே இவ்வாறு ஆன்மாக்களைக் காணப்படுத்துவதாகும். அதனின் காட்டிற்றை காட்டியவாக் காண, இச்சிவஞானத்தோடு விரோதிப்பது அல்லவென்பதின், உண்மை எனும் உணர்வு உதிக்கும். இதற்கும் புறம்பாக தனது பார்வை இவ்வாறு அபுத்திபூர்வமாக சேடிக்கப்படுவதை உணராதும், உணர்ந்தும் அதனை அனுமதியாதும் தற்போத சேட்டைகட்கு ஆளாகி, கற்பிதங்களாக பற்பல படைத்து உண்டென உணர்த்தப்பட்ட வொன்றை "இஃது இன்னது" என்றவாறு விகற்பித்து கண்டு மகிழ்வர் என்பது. இவ்வாறு செய்ய, காட்டியவாக் காணாது தனது விருப்பின் பற்பல படைத்துப் படைத்துக் காண்பதின், பொருளுண்மை அறியவாராது போம் என்றவாறு. கற்பிதங்கள் அனைத்தும் கற்பனைகளே என்ன, ஒர் பொருளின் சாட்சாத்காரமாகிய இயல்பினை காணத்தராது வேறொன்றாகவேக் கண்டு மகிழத் தரும் என்பது.
எ.கா.3.5.3.
இனி சொப்பனாவத்தைகளின் போது பொறிபுலன்களை பயன்படுத்தாது வேறொரு நிலையில் காணப்படும் கனவுகளும், காட்டப்படுவதேயாம். தன்நினைப்பு இழந்து புத்திபூர்வமாகவும் அபுத்திப்பூர்வமாகவும் கனவுகள்காண்பது இல்லையென, கனவுகள் உதிப்பதின் மேலும் அதன் பண்பிலும் ஆன்மாவிற்கு எவ்வித ஆட்சியும்இல்லாதுபோக, இது காட்டப்படுவதேயாம். இனி இங்கு கனவுகளை காட்டியவாறு காண்பதாவது, குறிமொழியாகபுதையுருவில் மறைஞானம் ஒன்று உணர்த்தப்பட, கண்ட கனவை நினைவில் இருத்தி அகத்தியக் கலையில் பெயர்த்து இன்னபொருள் இக்கனவு உணர்த்துகின்றது என்று பெயர்த்து அறிவதாகும் (interpretation). இவ்வாறு பெயர்க்காது, பறப்பது போல் வர அவ்வாறே தன்னால் செய்யமுடியும் என்று பகர்தலும், விருட்சமொன்று பேயாக, பேய்கள் உண்டென நம்புவதும், ஒர் பெண் பாம்பாக தி¡¢ய இதுவெல்லாம் சித்து விளையாட்டுக்கள், திப்பியங்கள் என்று நம்பி மதமாச்சா¢யத்தின் (magic) விழலும், காட்டியது காட்டியவாறு காண்பதல்ல என்பது. கனவினைக் கண்டு அதனை நடிக்க முயல்தல் பிழையென, அதனை அகத்தியக்கலையின் பெயர்ந்து அறிதலே உண்மையைக் காணும் வழியாகும். அகத்தியக்கலையாவது ஒர் சின்னமாக, புராணவுருவினதாக, ஒர் சித்துவிளையாட்டாக காண்பிக்கப்படுவதைப் பெயர்த்து பொறிலியப்பார்வைக்கு வரும் உலகநிகழ்ச்சிகளோடு பொருந்தி பொருள்நிலைத் தெளிவதாகும்.
எ.கா.3.5.4.
இனி சுழுத்தி அவத்தையாவது, சுழிமுனை நாடிச்செலவினர் செல்லும் கனவுகட்கும் இன்னும் ஆழமான
ஞானதிருட்டியில் மந்திரவுலகின் புராணவுருக்களையேக் கண்டு பற்பல திருவிளையாடல்களை
சித்துவிளையாடல்களை புராணநாடகங்களாகக் காண்பதாகும். தெய்வவடிவங்கள் இவ்வகை அவத்தைகளிலேயே நிதர்சனமாகக் காணவரும். இனி இவ்வகை காட்சிகளும் கனவுகள் போன்றவொன்றாக காட்டப் படவே ஆன்மாக்களால் காணப்படுவதின், இவற்றையும் காண்கின்றபோது பொறிலியக்காட்சிகளோடு வேறுபடுத்தி, அகத்தியக்கலையின் உத்திகட் பெய்து பெயர்த்தே உண்மைகளை அறியவேண்டும் என்பது. சிவபெருமானாக இறைவன் தோன்றி சங்காரத்தாண்டவமாடி முப்புரஞ் செற்றனன் என்று காட்சியில் அகப்பட்டவாறே கண்டு அதற்குமேற் செல்லாது நிற்பின், அது காட்டப்படுவதை காட்டியவாக் காணல் அல்ல. அதனைப் பெயர்த்து இப்புராணக்கருத்தாகிய முப்புரம் என்பது உண்மையில் மும்மலக்கா¡¢யம், அதனைத் தான் இறைவன் பல்வேறு தீக்கைகள் வழி அழித்துக்கொண்டிருக்கின்றான் என்று அகத்தியக் கலையின் பெயர்ந்து பு¡¢ந்துகொள்வதே இங்கு காட்டியவாக் காணலாகும்.
எ.கா.3.5.5.
இனி து¡¢யாவத்தையின் போது, பேரொளி இரவிமதி வடிவில் அருட்பிரகாசப் பெருஞ்சோதி வடிவ தா¢சனங்கிட்ட,
அதனைக் கண்டு இதுவே இறைவனது தற்சொரூபம், ஆக இறைவன் உண்மையில் பரப்பிரமம், ஒளி வடிவினன் ஆகவே புராணவடிவங்களில் பல தெய்வங்களாக வருவதெல்லாம் பொய் என்று துணிந்து வேதாந்தம் பகர்தலும்
காட்டப்படுவதை காட்டியவாக் காண்பதல்ல என்றவாறு. சொப்பனாவத்தையிலும் சுழுத்தி அவத்தையிலும் பல்வேறு
புராணவுருக்களில் தன்னைக் காட்டியருளும் அதே இறைவன், இங்கு அவற்றையெலாங் கடந்த ஒளிவடிவில்
காட்டியருள்வது, மதப்பற்றுக்களை தீய்த்து ஆன்மாக்களை சமயாதீத நிலைக்கு உயர்த்தலே என்ன, அவ்வாறே
இத்து¡¢யக்காட்சிகளை உணர்ந்து தெளிவதே காட்டப்படுவதை காட்டியவாக் காணல் என்பது.
எ.கா.3.5.6.
இனி இவ்வாறு சாக்கிராவத்தைகளில் மறையாகக் கிடப்பதையும், சொப்பனாவத்தைகள் போன்ற பிற அவத்தைகளில் வருவனவற்றை அகத்தியக்கலை பயின்று பெயர்த்துத் தெளிதலே அவற்றைப் பு¡¢ந்துகொள்ளல் என்பதாக, அதுபொழுதே இன்னும் இன்னும் அகத்தே கிடக்கும் அறியாமை கெடுக்கப்பட்டு, அறிவு இன்னும் இன்னு பிரகாசித்து சுடருமாறு செய்யப்படும் என்பது. இவ்வாறு பல்வேறு அவத்தைகளின் வழி காணவருபவற்றை பிழையற உணர்ந்து தெளிதலின் வருவதே, மெய்கண்டார் போற்றும் இலாடத்தே ஐந்து அவத்தை எய்தலாகும்.இலாடத்தானமாவது தெள்ளத்தெளிந்த அறிவின் இடமாகும், சிவஞானம் அகத்தே சுடரும் இடமாகும். இவ்வாறு
செல்லச்செல்ல முடிவில் து¡¢யாதீத அவத்தை மெய்யாகி, அதனின் அநந்நியமாக எதனையும் பெயர்க்காது அறிந்து மகிழும் திறன் வந்தமையும் என்பது. இதுவே இதனின் முடிவான அவத்தை என்பதின், முத்தி அனுபவமும் இதுவே யாயிற்று. காட்டல், காணல், காட்டியவாக் காணல் என்பதெல்லாம் விழ, காட்டலும் காணலும் ஒன்றேயாகிநிற்குமிடம் இதுவே என்பது.
ஆறாம் படிமெய்.
மேற்கோள்: மெய்யுணர்வின் மூலமாகிய சிற்சத்திப் பதிவே, உண்மையான காயகற்பமாகிய சிவஞானகற்பம் என்பது.
ஏது: ஐந்தவத்தைகளில் எவ்வித அவத்தையின் போதும் மெய்யென்ற உணர்வு தலைப்படும் போதெல்லாம்
அது சுத்தாவவத்தையாகவேத் திகழ்தலின்.
எ.கா.3.6.1.
சாக்கிராதி பஞ்சவவத்தைகளில், கீழாலவத்தைகளும் மேலாலவத்தைகளும் உண்டு. எங்கே இருக்கின்ற மயக்கமும்மலைவும் கலக்கமும் நீங்காது அதிகமாகிக்கொண்டு செல்கின்றதோ அவை அதனின் கீழாலவத்தைகள் எனப்பட,இவற்றிற்கு எதிராகிய பிற அவத்தைகள், இத்தகைய மாலங்களைப் போக்குவதால் எழுபவை, மேலாலவத்தைகள்எனப்படும். அகச்சுத்தத்தைத் தருவனவாக இந்த மேலாலவத்தைகள் திகழ, அவை சுத்தாவத்தைகள் எனவும் படும்.இதனின் கீழாலாலவத்தைகள் அசுத்தாவத்தைகள் என்பதாம். அகத்துச் செறி மலவாதிகளை நீக்கக்கூடியதுஉண்மையென்ற உணர்வேயாக, இத்தகைய சுத்தாவத்தைகள் அனைத்தும் மெய்யுணர்வுகளை மூலமாகக் கொண்டனவாம். மெய்யுணர்வின் எழு ஞானப்பிரகாசமே, அவ்வவத்தைகளை சுத்தாவத்தை யாக்குகின்றது என்பதாம்.
எ.கா.3.6.2.
இனி சிற்சத்தி பதிவினாலேயே மெய்யென்றவுணர்வும் அதனோடு தி¡¢பாதிகளைப் போக்கிய தெளிவின் வரும் உறுதியும்சம்பவிக்க, அகத்தே அறியாமை இருளைக் கடியும் உள்ளொளியாகிய சிவப்பிரகாசம் கூடி நிற்கும் என்பது.இவ்வாறான சிவப்பிரகாசம், மெய்யுணர்வுகளை இன்னும் இன்னும் பெற்றுக்கொண்டேச் செல்ல, கூடிக்கொண்டேச் செல்லும் என்பதின், உள்ளத்திலே ஓர் தேசிகம் வந்தெய்தி, அது உடம்பிலும் விகசித்து அவ்வான்மாவை ஓர் தேசிகனாக்குவிக்கும் என்பது. இத்தகைய தேசிகத் திருவினர் அகத்தே மலைவுகளையும் மயக்கங்களையும் தி¡¢புகளையும் மித்தைகளையும், ஐயங்களையும் போக்கி தெள்ளறிவின் வரும் திருவொடு, மலர்ச்சியும், மகிழ்ச்சியும் அமைதியும் பொறையும் விளங்கும் என்பது. மூல ஐயப்பாடுகளை நீக்கியத் திறத்தின், அவற்றைப் பழுதற போக்கியத் திறத்தின் முனைப்பெலாங் கெடுத்தவர்களாக ஆகவே நிறைமதியினராகத் திகழ்வர் என்பது.
எ.கா.3.6.3.
இனி அகத்துச் செறி துன்னிருளை நீக்கும் வகையானே எல்லா முனைப்புக்களும் ஆகவே முயற்சிகளும்
பிறக்கின்றனவென்பதின், மெய்யுணர்வுகளையே தலைப்பட்டு தலைப்பட்டு இவ்வறியாமை துன்னிருளை திறன் பட
நீக்கி மூல ஐயப்பாடுகளை கெடுத்து நிற்போர், பற்பல மனவுலைச்சல்கட்கு காரணமாக நிற்கும் முயற்சிகளும்
கழன்றவர்களாக, முனைப்புக்களும் கெட்டவர்களாகத் திகழ்வர் என்பது. பேராசைகளின், சுயநலப் போக்கின் எழும்
மனவுலைச்சல்கள் அற்று பொறையொடும் நிதானத்தோடும் இருக்கும் நிலையே இங்கு மனநலம் எனப்பட்டது.
பேராசைகள் விளங்க அதனின் குரோதங் கொலை களவு கழிகாமம் போன்ற இழிகுணங்களே சித்தபிரமை, பிராந்திபோன்ற மனநோய்கட்கு காரணமாகத் திகழ்கின்றன. மெய்யுணர்வினை நெடுகத் தலைப்பட்டு இத்தகைய
பேராசைகளைக் கெடுத்து நிற்கின்ற நிலையில், இத்தகைய இழிகுணங்களும் அவற்றோடு வரும் மனநோய்களும்
இராதென்பது.
எ.கா.3.6.4.
இனி மேலே வி¡¢க்கப்பட்ட கீழாலவத்தைகள் அகத்துச் செறி மலமாசுக்களை நீக்காது இன்னும் இன்னும்அதிகா¢த்துக்கொண்டேச் செல்வதின், இருந்த ஞானத்தெளிவுகளும் இல்லாது போதலின், அவை உண்மையில்மரணத்திற்கு இட்டுச் செல்லும் மரணாவத்தைகளே என்பது. மெய்யுணர்வு தலைபடுதல் இல்லாது போக,இம்மரணாவத்தைகள் மனநோய்களென உடல்நோய்களென வெளிப்பட்டு உளச்சிதைவினையும் உடற்சிதைவினையும் கொண்டு வந்து மரணத்திற்கே இட்டும் செல்லும் என்றவாறு. இனி இதனின் மெய்யுணர்வின் எழும் சுத்தாவத்தைகள், இந்தக் கீழாலவத்தைகள் சம்பவியாது போக்கி மேலாலவத்தைகளே சம்பவிக்குமாறு செய்தலின், அம்மெய்யுணர்விற்குக் காரணமாகிய சிற்சத்திப் பதிவு, மனநலத்தையும் உடல்நலத்தையும் தரும் ஞானகற்பம் என்றது. இத்தகைய சிற்சத்தி பதிவுகள் அனைத்தும் சிவஞானத்தை இன்னும் இன்னும் அகத்தே பிரகாசிக்கத் தருதலின், அவை சிவஞானகற்பம் எனப்பட்டது. இங்கு சிற்சத்தி, மருந்து போல் திகழ்தலின் அது கற்பம் எனப்பட்டது.
எ.கா.3.6.5.
இனி சிவஞானகற்பமாக விளங்கும் இச்சிற்சத்தி, இதனின் மறலியை விரட்டும் அமிர்தமாக, நரைதீரைமூப்புஇவற்றைத் துரத்தும் வழலையாக, மனமலர்ச்சி உடல்மலர்ச்சி ஆகியவற்றைத் தரும் அமு¡¢யாக, சிவகங்கையாகவெல்லாம் உணரப்படுதலின், இதுவே குண்டலினி சத்தியும் என்பது. காமப்புணர்ச்சியின் வழியும் பிற வழிகளிலும்ஈட்டப்படும் குண்டலினி, உண்மையையே அறியவேண்டும் என்று மெய்யறிவாய்வில் விழுந்து கடினமாக உழைப்பாருக்கு, மடைமாற்றம் உற்று மேற்கண்ட பல்வேறு வடிவங்கள் எய்தும் என்றது. மெய்யுணர்வு தலைப்பட விழையாருக்குச் சுரக்கும் குண்டலினி சத்தி மாயாமயக்குகளில் மனச்சஞ்சலங்களில் மதமாச்சா¢யங்களில் கெட்டழிந்து இல்லாது போம் என்றவாறு.
எ.கா.3.6.6.
காமக்கலவியின் ஈட்டப்படுவது காமப்பாலென, மெய்ஞானவேட்கையின் அதனை சிற்சத்தியாக மாற்றி ஞானத்தெளிவுகள் பெற்று மகிழ்வது கானற்பால் உண்பதாயிற்று. இக்கானற்பாலே ஞானப்பால் என்பதுமாம். இவைபெற்று மகிழ்வது கானற்பால் உண்பதாயிற்று. இவை இரண்டுமே சுரக்கும் குண்டலினியின் இருவேறு வடிவங்கள். மெய்ஞானவேட்கை, உண்மையையே கண்டுக் கண்டுத் தெளியவேண்டும் எனும் அவ்வேட்கை, காமப்பாலைக் கானற்பாலாக்கி உண்ணத் தருவதின், படிப்படியாக காமவேட்கையையும் போக்கும் என்பது. ஞானம்சிவஞானமேயாகச் சுடர, கானற்பால் உண்பதும் வேண்டாவாக, காமப்பால் ஈட்டுவதும் ஆகவே காமவேட்கையாற்படுவதும் இல்லாதுபோம் என்றவாறு. காமவேட்கை அற பிற எல்லா வேட்கைகளும் அறும் என்பதின், சிற்சத்தி எனப்படும் இச்சத்தி விடுதி தரும் ஒர் சத்தியும் என்றது. பற்றற்றப் பற்றே பற்றாக பற்றி நிற்கும் மெய்த்துறவினைத் தருவதாகவும் இதுவே அமைகின்றது என்பதாம்.
சூத்திரம் 27: மெய்யியம் முற்றும்
அழிவிலுண்மை முற்றும்