கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 016மரபு விக்கி இருந்து(கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 16 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]
கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.
கல்வெட்டு – 1
கல்வெட்டின் பாடம் :
குறிப்புகள்:
குமுதகம் – கோயில் விமானத்தின் அடித்தளப்பகுதியில் ஒன்று. குமுதம்
என்பது பொதுவாக வழங்கும் பெயர்.
சந்தி - பூசை வேளை
நாழி = 1 படி
குறுணி = 8 நாழி
கல்வெட்டு – 2
கல்வெட்டின் பாடம் :
குறிப்புகள் :
பெருமாள் – அரசன்
உரிமையார் – அரசனுக்கு உரிமையானவர் (இங்கே படை வீரர்கள்
ஆகலாம்).
திருவாயல்(திருவாயில்), முகவணை, உத்திரம், நிலைக்கால் – கட்டிட
உறுப்புகள்.
கல்வெட்டு – 3
கல்வெட்டின் பாடம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவ
2. ற்கு யாண்டு பதிநஞ்சாவது எதிர் எதிர்
3. ரைவழினாட்டுக் கோடிக்காரைத்
4. (தொ)ழு முதலிகளில் சோழன் கூத்தனான
5. ராசேந்திர இருங்கோளனேன் பெருமா
6. டுகக்கொத்துக்கு நாயக்கமாரில் தொ
குறிப்பு :
கரைவழி நாட்டுக் கோடிகாரைத்தொழு என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.
முதலி – தலைவன்; அரச அதிகாரி.
கொத்து – வேலையாள் அல்லது ஊழியர் தொகுதி. இங்கே குரிப்பிடப்
படுவது பெருமாள் வடுகக் கொத்து என்பவர்.
(பெருமாள் – அரசன்)
குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
து.சுந்தரம் |