<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Geetha+sambasivam</id>
		<title>மரபு விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Geetha+sambasivam"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Geetha_sambasivam"/>
		<updated>2026-09-05T05:13:13Z</updated>
		<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>விநாயக சதுர்த்திக்கான கொழுக்கட்டை வகைகள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
				<updated>2010-09-13T13:10:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha sambasivam: புதிய பக்கம்: விநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம்.  முதல் முற…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;விநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் முறை உருண்டை கொழுக்கட்டை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு கிண்ணம் அரிசி மாவு, ஒரு கிண்ணம் தூளாக்கிய வெல்லம், தேங்காய்க் கீறல்கள், ஏலக்காய், நீர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு அரிசி மாவும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் பச்சரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமாவது ஊறிய பிறகு நீரை வடித்துவிட்டுப் பின் மிக்சியில் மாவாக்கவும். மாவைச் சூடு வர வெறும் வாணலியில்/கடாயில் வறுத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின் ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கிண்ணம் நீரைச் சுட வைக்கவும். நீர் கொதித்து வரும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நீரில் கரையும்போது தேங்காய்க்கீறல்களைச் சேர்த்துவிட்டு, அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். நன்கு கிளறவும். மாவு நன்கு வேக வேண்டும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடிக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு இட்லிப் பானையில் நீர் ஊற்றி, இட்லித் தட்டில் அல்லது ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது இலை/துணி போட்டுப் பிடித்த உருண்டைகளை வைத்துப் பத்து நிமிடம் வேக வைக்கவும். பின் வெளியே எடுக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாய் இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்று சொல்வதுண்டு. பெரும்பாலும் விநாயகருக்கு வேண்டிக்கொண்டு நினைத்த காரியம் பூர்த்தியானால் இந்தப் பிடி கொழுக்கட்டை செய்து விநியோகம் பண்ணிப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்துப் பூரணக் கொழுக்கட்டை. பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள். இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு. &amp;lt;br&amp;gt;முதலில் பூரணங்கள் செய்யும் முறை:&lt;br /&gt;
&lt;br /&gt;
தேங்காய்ப் பூரணம்: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும். நீர் சேர்க்கவேண்டாம். வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது. வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும். நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எள் பூரணம்: ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள். &amp;lt;br&amp;gt;கறுப்பு எள் ஐம்பது கிராம். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள். ஏலக்காய், &amp;lt;br&amp;gt;எள்ளைக் களைந்து கல்லரித்துக்கொண்டு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். வெடிக்கும் வரை வறுக்கவேண்டும். பின் பொடித்த வெல்லம், ஏலக்காயோடு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி பண்ணிக்கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உளுந்தம் பூரணம்:&amp;lt;br&amp;gt;உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், தாளிக்க கடுகு, உ.புருப்பு, கருகப்பிலை, விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி.&lt;br /&gt;
&lt;br /&gt;
உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது. அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும். குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும். பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும். விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு. இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம். தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது. ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டுத் தேவையான நீரை மட்டும் கொஞ்சமாய் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது. நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும். மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும். நீர் நன்கு கொதிக்கவேண்டும். இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும். மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்யவும். தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும். இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும். இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும். ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம். கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும். அப்போது எடுத்துவிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்துப் பால் கொழுக்கட்டை&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கும் அரிசி தேவை. வெல்லம், தேங்காய் பெரிதாக ஒன்று. ஏலக்காய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி 250 கிராம். பாகு வெல்லம் 300/400 கிராம், தேங்காய் பெரிதாக ஒன்று, ஏலக்காய். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு ஒரு சிட்டிகை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசியை நன்கு ஊற வைக்கவேண்டும். ஊறிய அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும். பெரிய தேங்காயை எடுத்து உடைத்துத் துருவிப் பாலை எடுக்கவும். முதல் பாலைத் தனியாக வைக்கவும். அடுத்த இரண்டு முறை எடுக்கப் படும் தேங்காய்ப் பாலை ஒன்றாக வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெண்கல உருளி/கடாயில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து ஒரு முட்டை நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். நீர் கொதித்து வரும்போது அரைத்த மாவைப்போட்டுக் கிளறவும். நன்கு பந்து போல் மாவு வரும்வரை கிளறவும். ஆற வைத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு இருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது இன்னொரு உருளி/கடாயில் கொஞ்சம் போல் நீர் விட்டு வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து வரும்போது இரண்டாம் முறை, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடவும். முதலில் போட்டவை வெந்து மேலே மிதந்து வரும்போது அடுத்த முறை போடலாம். இப்படி எல்லாவற்றையும் போட்டதும், சிறிது நேரம் சேர்ந்து கொதிக்கவிடவும். பின் கீழே இறக்கி ஆற வைத்து முதல் தேங்காய்ப் பாலையும் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும்..&lt;br /&gt;
&lt;br /&gt;
சிலருக்கு இந்த உருண்டைகளை நேரே தேங்காய்ப்பாலில் போடும்போது அவை கரைந்துவிடுமோ என யோசிப்பார்கள். அவர்கள் உருட்டி வைத்ததும் உருண்டைகளை இட்லிப் பானையில் வேகவிட்டு வைத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பால், வெல்லத்தோடு சேர்ந்து நன்கு கொதிக்கும்போது கொழுக்கட்டை உருண்டைகளைச் சேர்க்கலாம். இம்முறையில் உருண்டைகள் உடையாது. &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ரவையில் செய்யும் நெய்க்கொழுக்கட்டை:&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக இதை கணபதி ஹோமத்துக்கோ, அல்லது நவகிரஹ ஹோமம் போன்றவை செய்யும் முன்னர் செய்யப் படும் கணபதி ஹோமத்துக்கோ தான் முதல்நாளே செய்து வைத்துக்கொள்வது வழக்கம். இன்றைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவங்க ஓரளவு நம் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடும்போது பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யமுடியாமல் திண்டாடுகிறார்கள். அவங்க விநாயக சதுர்த்திக்கு இந்த ரவைக் கொழுக்கட்டையைச் செய்து கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் விநாயக சதுர்த்திக்கு முன்னர் வரும் ஏதாவது விடுமுறை நாளில் இதைச் செய்து (ருசி பார்க்காமல்) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று நிவேதனத்துக்குப் பயன் படுத்தலாம். இதுவும் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் இருக்கும். இதற்குத் தேவையான பொருட்கள் பார்ப்போமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
பூரணம் செய்ய: ஒரு சின்னக் கிண்ணம் தேங்காய் துருவல், 1/2 கிண்ணம் வெல்லம் தூளாக்கியது, ஏலக்காய்ப் பொடி.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல் மாவிற்கு: சன்னமான நைஸ் ரவை ஒரு கிண்ணம். ஒரு சிட்டிகை உப்பு, பிசைய அரைக்கிண்ணம் பால். (காய்ச்சாத பாலும் பயன்படுத்தலாம்.) பிசையும்போது தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய். பொரிக்கவும் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் முன் கூறியபடி தேங்காய்ப் பூரணம் வெல்லத்தூள் சேர்த்துச் செய்து ஏலப் பொடி சேர்த்து ஆற வைக்கவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரவையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாலும் ரவையும் ஊறிக்கொண்டு கெட்டியாக ஆகி இருக்கும். இப்போது அதைக் கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை நன்கு பிசையவும். அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் சப்பாத்திக்கல்லில் இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு மெலிதான சப்பாத்தியாக இடவும். ஒரு வட்டமான மூடியால் இட்ட சப்பாத்தியில் கத்திரித்து எடுக்கவும். சிறு சிறு வட்டமானக் குட்டிக் குட்டிச் சப்பாத்திகள் நாலைந்து கிடைக்கும். இவற்றில் செய்து வைத்த பூரணத்தை நிரப்பிக் கொழுக்கட்டைக்கு மூடுவது போல் மூடவும். இம்மாதிரி எல்லா மாவையும் பூரணம் நிரப்பிச் செய்து கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் (சூடானதும்) அடுப்பைச் சிறிதாக எரிய விட்டுச் செய்து வைத்த கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொன் நிறமாகப் பொரியும் போது எடுத்துவிடலாம். மேலே கரகரப்போடும் உள்ளே பூரணத்தின் மிருதுவோடும் சாப்பிடச் சுவையாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காரக் கொழுக்கட்டை&amp;lt;br&amp;gt;தேவையான பொருட்கள்: இரண்டு கிண்ணம் ஊற வைத்துச் சன்னமாக ரவை போல் மிக்சியில் உடைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாவற்றையும் நீரில் ஊற வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடித் தேங்காய் துருவல். தாளிக்க எண்ணெய், பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு சிறு துண்டு, கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு. நீர் வேக வைக்கத் தேவையான அளவு. உப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் மிக்சியில் ஊற வைத்த பருப்பு வகைகளையும் மிளகாய்வற்றல், தேங்காய்துருவலஓடு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.&amp;lt;br&amp;gt;இப்போது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, ப.மிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளிக்கவும். பெருங்காயத் தூளும் சேர்க்கவும். பின்னர் மூன்று கப் நீரை ஊற்றவும். இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு உப்புச் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது அரிசி ரவையைப் போட்டுக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடித்து, இட்லிப் பானையில் வேகவிடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha sambasivam|Geetha sambasivam]] 13:10, 13 செப்டெம்பர் 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சமையல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>கோகுலாஷ்டமி சிறப்புப் பலகாரங்கள்/பட்சணங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
				<updated>2010-09-13T13:04:20Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha sambasivam: புதிய பக்கம்: == தட்டை செய்முறை. ==  பொதுவாகத் தட்டையாக இருப்பதால் தட்டை என்ற…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;== தட்டை செய்முறை. ==&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாகத் தட்டையாக இருப்பதால் தட்டை என்றழைக்கப்படும் இதைத் தஞ்சை ஜில்லாவில் தட்டைச் சீடை என்றும், சேலம் பக்கம் தட்டு வடை என்றும் சொல்லப் படுவதுண்டு. செய்முறைகளும் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறினாலும் பொதுவாகத் தேவைப்படுவது அரிசி மாவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டு கப் அரிசி மாவு, (அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற வைத்துப் பின் வெளியில்மெஷினில் கொடுத்தோ அல்லது, வீட்டிலேயே மிக்சியிலேயோ அரைத்துச் சலித்து வைத்துக்கொள்ளவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உளுந்து மாவு: உளுந்தை வெறும் சட்டியில் சிவப்பாக வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு கப் அரிசி மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு போதும். உளுந்து மாவு அதிகம் போனால் தட்டை கரகரப்பு இருக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொட்டுக்கடலை மாவு: இது போட்டால் தான் தட்டை கரகரப்பு இருக்கும். சிலர் போடாமலும் செய்கின்றனர். பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன். பொட்டுக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உப்பு: தேவையான அளவு&lt;br /&gt;
&lt;br /&gt;
தேங்காய்: பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் ஊற வைத்து நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மிளகாய்ப் பொடி அல்லது மிளகாய் வற்றலை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொண்டது அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெருங்காயப் பொடி : ஒரு டீஸ்பூன்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீர் மாவு பிசையத் தேவையான அளவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெண்ணெய் அல்லது நெய், ஒரு டேபிள் ஸ்பூன். இத்தோடு எள் , வேர்க்கடலைப்பருப்பு எல்லாம் சேர்ப்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொரிக்க எண்ணெய் கால் கிலோ வானும் தேவைப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெண்ணெயோ நெய்யோ சேர்க்காதவர்கள் பிடிக்காதவர்கள், சமையல் எண்ணெயையே கொஞ்சம் காய வைத்து மாவில் விட்டுக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி மாவு, உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவை ஒன்றாய்ச் சேர்த்து உப்புக் கலந்து, காரப்பொடி அல்லது மிளகாய் விழுது, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். வெண்ணெய் அல்லது நெய்யைச் சேர்த்து மீண்டும் கலக்கவும். எண்ணெய் சேர்ப்பவர்கள் வாணலியில் எண்ணெய் புகை வரும் வரை காய வைத்து மாவில் கொட்டிக் கலக்கவும். இப்போது தேவையான அளவுக்கு நீரைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். பிசைந்த மாவைச் சிறு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சற்று நேரம் வைத்திருந்து விட்டுப் பின் அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெயை ஊற்றிக் காய வைக்கவும். எண்ணெய் காய்ந்து புகை வரும்போது அடுப்பைத் தணித்துவிட்டு, பிசைந்து வைத்த மாவில் உருண்டைகளாகச் செய்து வைத்திருப்பதை, ஒரு துணி அல்லது பேப்பரில் தட்டையாக வட்டமாகத் தட்ட வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்குக் கொஞ்சம் எண்ணெய் தொட்டுக்கொள்ளவும். தட்டின தட்டையை ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காயந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். ஒரே சமயத்தில் நாலைந்து தட்டைகளைப் போட்டுப் பொரிக்கலாம். முன் கூட்டியே தட்டி வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் கரகரப்பு மாறாதிருக்கும்படி காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் ஆனாலும் கெடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கை முறுக்கு.jpg&lt;br /&gt;
&lt;br /&gt;
முறுக்கு: கை முறுக்கையே அநேகமாய் முறுக்கு என்று சொல்வோம். சிலர் அச்சில் பிழியும் தேன்குழலைச் சொன்னாலும் பொதுவாய் முறுக்கு என்றால் கையால் சுற்றுவதே! இதற்குத் தேவையான பொருட்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி மாவு: 2 கப், வறுத்த உளுத்தமாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணை, கலக்க நீர் தேவையான அளவு. பொரித்து எடுக்கச் சமையல் எண்ணெய்.&amp;lt;br&amp;gt;முறுக்குச் சுற்றும் வட்டமான தட்டு, அல்லது நீரில் நனைத்துப் பிழிந்த வெள்ளைத் துணி அல்லது தினசரி செய்தித் தாள்(இதில் அச்சுக்களின் ஈயம் கலக்குமோனு சந்தேகம் எனக்கு இருப்பதால் துணி அல்லது வட்டத்தட்டையே பயன்படுத்துவேன்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயப்பொடியைச் சேர்க்கவும். உப்புத் தூளாக இருந்தால் பரவாயில்லை. கல் உப்புத் தான் பயன்படுத்துபவர்கள் தேவையான உப்பை நீரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொஞ்சம் சூடு செய்துவிட்டு அந்த உப்புக் கரைசலை ஊற்றிக்கொள்ளலாம். பொதுவாகப் பழங்காலத்தில் உப்புக் கரைசலை ஊற்றியே செய்யப் பட்டது. இன்றைய நாட்களில் தூள் உப்புக் கிடைப்பதால் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாவு மேற்சொன்ன பொருட்களோடு நன்கு கலந்ததும், சீரகத்தையும், வெண்ணெயையும் சேர்க்கவும். நீர் சேர்க்காமல் சற்று நேரம் வெண்ணெய் நன்கு கலக்கும்வரை மாவைப் பிசையவும். மாவில் வெண்ணெய் நன்கு கலந்ததும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயைச் சுட வைக்கவும். எண்ணெய் நன்கு சூடு ஏறி அதில் இருந்து ஆவி வரும்போது நினைவாக அடுப்பைச் சிறிதாக எரியவிடவேண்டும். எண்ணெய் சூடு ஏறுவதற்குள்ளாக முறுக்குத் தட்டிலோ, துணியிலோ கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு, பின்னர் கை கொண்ட மட்டும் மாவை எடுத்து முறுக்கிச் சுற்றிக்கொண்டே வரவேண்டும். இரண்டு சுற்று, நாலு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்றுத்தான் பொதுவாகச் சுற்றுவார்கள் என்றாலும் இரண்டு சுற்றே போதுமானது. ஐந்து, ஏழு எல்லாம் கல்யாணங்கள் போன்ற பெரிய அளவில் செய்யப் படும் விசேஷங்களில் பயன்படும். சுற்றிய முறுக்கைப் பின்னல் கலையாமல் ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போடவும். ஒரு சமயத்தில் நாலைந்து முறுக்குகள் வரை போடலாம். ஐந்து, ஏழு சுற்று முறுக்கென்றால் ஒரே முறுக்குத் தான் போடமுடியும். முறுக்கு நன்றாகச் சிவக்கும் வரை பொரிக்கவும். நன்கு சிவந்து எண்ணெயில் மேலே மிதந்து வரும். பொரியும்போது வரும் சப்தமும் அடங்கிவிடும். அப்போது முறுக்குகளை வெளியே எடுக்கவும். ஒரு தகர டப்பாவில் அல்லது நமுத்துப் போகாவண்ணம் வேறு ஏதானும் டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாது. கையால் உடைத்தால் முறுக்குச் சுற்றுக்களின் உள்ளே குழல் போல் ஓட்டை தெரியும். அப்படி இருந்தால் முறுக்கு நல்ல பதத்தில் வந்திருக்கிறது என்று பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து உப்புச் சீடை:&lt;br /&gt;
&lt;br /&gt;
உப்புச் சீடை.jpg&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கும் தேவையான பொருட்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
2கப் அரிசிமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த உளுத்த மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது, விருப்பமிருந்தால் எள் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கலாம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நீர் தேவையான அளவு. பொரிக்க சமையல் எண்ணெய்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி மாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயத் தூள், எள், தேங்காய்க் கீறியது, ஊறிய கடலைப்பருப்பை ஒன்றாய்ச் சேர்க்கவும். சற்று நேரம் எல்லாம் ஒன்றாய்க்கலக்கும்வரை கலந்துவிட்டுப் பின் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், கொஞ்சமாய் நீரை விட்டுப் பிசையவும். இது உருட்டினால் உருண்டையகாவும், உதிர்த்தால் உதிராகவும் வரவேண்டும். அப்படிப் பிசைந்தால் போதுமானது. ரொம்ப நீரைச் சேர்த்துச் சப்பாத்தி மாவு போலெல்லாம் பிசையவேண்டாம். இப்போது அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கவும். அதற்குள் ஒரு பேப்பரில் அல்லது துணியில் பிசைந்த மாவைக் கையால் உருட்டிப் போடவும். உருண்டை ரொம்பவும் உருண்டையாக அழகாயெல்லாம் வரவேண்டாம். சும்மாப் பிடிச்சுப் போட்டால் போதுமானது. பொதுவாக உப்புச் சீடையை எண்ணெயில் போட்டால் வெடிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சமையலறையே ரணகளமாகக் காட்சி அளிக்கும். அதற்குக் காரணம் சேர்க்கும் உப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்க் கீறல் போன்றவற்றைச் சரியாகக்கவனிக்காமல் சேர்ப்பதே. உப்பை நீரில் கரைத்தே உப்புச் சீடைக்குச் சேர்க்கவேண்டும். அடுத்துக் கடலைப்பருப்பில் ஒரு தோல் கூட இருக்கவேண்டாம், கல் இருந்தாலும் வெடிக்கும். அதையும் கவனித்துச் சேர்க்கவேண்டும். தேங்காய்க் கீறலில் தேங்காயின் ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதையும் மீறிச் சீடை வெடித்தால் உருண்டையைச் சரியாகப்பிடிக்காமல் ரொம்பவே கையால் வழவழவென்று செய்ததால் இருக்கும். ஆகவே மேலே கொஞ்சம் கரடு, முரடாக இருந்தால் தப்பில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
உருட்டிய சீடைகளை எண்ணெயில் போட்டுவிட்டு (நினைவாக அடுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கவும்) ஒரு மூடியால் அதை மூடிவிடவேண்டும். நூற்றுக்கு நூறு சதம் வெடிக்காது. பின்பு தட்டை எடுத்துவிட்டுச் சீடைகளைத் திருப்பிப் போடவும். நன்கு வெந்து சத்தம் அடங்கி மேலே மிதந்து வந்ததும், எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சீடைகள் நன்கு வெந்திருந்தால் கலகலவென்ற சப்தம் வரும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
வெல்லச் சீடை:&lt;br /&gt;
&lt;br /&gt;
வெல்லச் சீடை.jpg&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிசி மாவு இரண்டு கப், வறுத்த உளுத்த மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் நாலைந்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். நல்ல பாகு வெல்லம் தூளாக்கியது இரண்டு கப், வெல்லம் பாகு வைக்க நீர் அரை கிண்ணம். தொட்டுக்கொள்ள நெய், பொரிக்க சமையல் எண்ணெய்/நெய்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடாய் அல்லது வெங்கல உருளியில் அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாகு கொதிக்கும் போது வேறொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக்கொண்டு காய்ந்த பாகில் ஒரு துளி விட்டுப்பார்த்தால் அது நீரில் கரையாமல் கையால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அந்தப் பதம் வந்ததும், தேங்காய்க் கீறல்களைச் சேர்த்துவிட்டு, பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் விட்டுக் கலக்கவும். மாவு பாகில் நன்கு கலந்து விட்டது என்று நமக்கே புரியும், அந்த நேரம் வரைக்கும் பாகைச் சேர்க்கலாம். பாகு போதும் என்ற அளவு கலந்ததும், மாவில் வறுத்த உளுத்த மாவையும் எள்ளையும் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கரண்டியால் நன்கு கலக்கவும். சற்று நேரம் ஆறவிடவும். பின்பு மாவை எடுத்துக் கையால் உருட்டிப் பார்க்கவும். உருண்டைகளாய் வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை ஒன்றிரண்டாய்ப் போட்டுச் சிறு தீயில் பொரிக்கவும். மேலே சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும். ஆறிய பின்பு சாப்பிட்டுப் பார்த்தால் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்போடும் இருக்கும். பல நாட்கள் கெடாது. இரண்டு மாதம் கூட இருக்கும். பாகும் நன்றாக அமைந்து நெய்யிலும் பொரித்தால் மாதங்கள் ஆக, ஆக சுவை கூடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha sambasivam|Geetha sambasivam]] 13:04, 13 செப்டெம்பர் 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சமையல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>மாவிந்த புராணம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2010-09-03T08:44:36Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha sambasivam: புதிய பக்கம்: '''உ.வே.சா.நினைவு மஞ்சரி பாகம் 1'''  '''''மாவிந்த புராணம்'''''  சென்னையி…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''உ.வே.சா.நினைவு மஞ்சரி பாகம் 1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''''மாவிந்த புராணம்'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து வைத்துப்பாதுகாக்கும் அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைக்கு, இராசதானிக் கலாசாலையில் வடமொழிப் பேராசிரியராக இருந்த ராவ்பகதூர் ம.ரங்காசாரியார் அதிபராக இருந்தார். நான் சென்னப்பட்டணத்துக்கு வேலையாக வந்த ஆரம்பத்தில் புதிதாக எழுதப் பெற்று வந்த அப்புத்தகசாலைத் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகளின் விரிவான அட்டவணையை அவர் என்னிடம் காட்டினார். அந்தப் புத்தகசாலை பெரும்பொருள் செலவிட்டு அமைக்கப் பெற்றது. பலர் அதில் வேலையில் அமர்ந்து உழைத்து வந்தார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றிலுள்ள ஏட்டுச் சுவடிகளும் அதில் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தகசாலைத் தலைவர் அப்புத்தக அட்டவணையை என்னிடம் கொடுத்து, &amp;quot;எங்கள் புத்தகசாலையில் இந்த அட்டவணையைத் தொகுத்து எழுதி யிருக்கிறோம். இதைக் கவனித்து ஏதாவது திருத்தம் செய்யவேண்டுமானால் செய்து கொடுத்தால் அனுகூலமாக இருக்கும்&amp;quot; என்றார். அந்த அட்டவணையில் பல தமிழ்நூல்களின் பெயர்கள் காணப்பட்டன். அப்பெயர்களிலே சில சில பிழைகளும் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏட்டுச் சுவடிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடைய எனக்கு அக்கனவான் அளித்த வேலை கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல் இருந்தது. அப்புத்தகசாலையில் இன்ன இன்ன சுவடிகள் உள்ளனவென்பது தெரிந்து எனக்கு ஏதேனும் உதவுமானால் பார்த்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆதலால் அந்த அட்டவணையை ஆவலோடு பார்த்தேன். பல பிரபந்தங்கள், புராணங்கள், இலக்கணங்கள், சாஸ்திரங்கள், வைத்தியம், சோதிடம் முதலிய பலவகை நூல்களின் பெயர்களை அதிற் கண்டேன். சங்க நூல்கள் அதிகமாக இல்லாவிடினும் பிற்காலத்து நூல்கள் பல இருந்தன. அச்சிட்ட புத்தகங்களாக இருந்தாலும் ஏட்டுச் சுவடிகளின் உதவியால் பல அரிய திருத்தங்கள் கிடைக்கும். ஆதலால் ஏட்டுச் சுவடிகளை நான் எங்கேனும் காணும்போது, &amp;quot;இவை அச்சிடப் பட்டவை&amp;quot; என்று நினைத்து அலட்சியமாக இருப்பதில்லை. அச்சுப் பிரதிகளில் பலகாலமாகத் தீராமல் இருந்த சந்தேகங்கள் ஏடுகளிலே கண்ட பாடபேதங்களினால் தெளிவாகியதுண்டு. ஆதலின் மேலே கூறிய புத்தகசாலையிலுள்ள சுவடிகளை இயன்றவரையில் மிகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று கருதினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தக அட்டவணையைக் கூர்ந்து பார்த்து வந்தேன். புராண வரிசையிலே மாவிந்த புராணம் என்று ஒரு பெயரைக் கண்டேன். அப்பெயரை அதற்கு முன் நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. தருமபுத்திரரது பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள வரலாறுகளைக் கூறுவதாகிய மாவிந்தமென்ற ஒரு நூல் உண்டு. அது மிகவும் எளிய நடையிலே அமைந்தது. அதுவாக இருக்கலாமென்று முதலில் எண்ணினேன். அப்பால், 'மாவிந்த புராணமென்று இருப்பதனால் அந்த நூல் ஒரு ஸ்தல புராணமாக இருக்குமோ' என்ற ஐயம் எனக்கு உண்டாயிறு. மாவிந்தமென்ற ஸ்தலம் எங்கே உள்ளதென்று யோசித்தேன். அப்படி ஒரு ஸ்தலம் இருப்பதாக எனது ஞாபகத்துக்கே வரவில்லை. தேவியை விந்தாசனி என்று கூறுவதுண்டு. விந்தகிரியில் எழுந்தருளியிருக்கும் தேவியின் புகழைக் கூறும் புராணமாக இருக்கலாமோ என்று கருதினேன். வேறு சமயத்தாருக்குரிய நூலாக இருக்குமோ என்ற ஐயமும் இடையே எழுந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வசவபுராணம், சாந்திபுராணம்முதலிய வேறு மதநூல்களின் பெயர்கள் அப்போது என் ஞாபகத்திற்கு வந்தன. 'சரி, அந்தப் புத்தகத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்யவேண்டும்' என்று உறுதி செய்து கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு இருந்த ஆவலினால் விரைவில் அந்தப் புத்தகசாலைக்குச் சென்றேன். அங்கே சுவடிகளைப் பலர் பார்த்துப் படிப்பதற்கும் குறிப்பெடுத்துக்கொள்வதற்கும் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற்குரிய வேலைக்காரர்களும் இருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மாவிந்த புராணத்திற்குரிய எண்ணைக் கூறி அதை வருவிக்கும்படி அங்கிருந்த அதிகாரியிடம் சொன்னேன். அவர் ஒரு வேலைக்காரனை அனுப்பினார். அவன் தன் வழக்கப்படியே அடிமேல் அடி வைத்து அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வரச் சென்றான். எனக்கிருந்த மனோவேகத்தை அவன் கண்டானா? அவன் பால் எனக்கு அப்போது மிக்க கோபம் உண்டாயிற்று, என் செய்வது! 'புத்தகம் வராமலா போய்விடும்?? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?' என்று சமாதானம் செய்து கொண்டு பொறுத்திருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வேலைக்காரன் கால்மணிநேரம் கழித்து ஒரு சுவடியைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தான். அதில் முற்பகுதியில் சில ஏடுகள் இல்லை. பிரித்தவுடன் முதலில் இருந்த ஏட்டைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய ஆத்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. 'மலை கல்லி எலி பிடித்தது' போல இருந்தது. நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். 'இதற்குத் தானா இவ்வளவு ஆவலோடு ஓடி வந்தோம்!' என்று என் செயலை நானே இகழ்ந்து கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இந்த அட்டவணையைத் தொகுத்த புத்திசாலி யாரோ?&amp;quot; என்று அந்த அதிகாரியை வினவினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எங்கள் புத்தகசாலைப் பண்டிதர்&amp;quot; என்றார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;பண்டிதரா?&amp;quot; என்று நான் வியப்போடு கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம்.&amp;quot; என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அவரை நான் பார்க்கலாமோ?&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆகா! தடையின்றிப் பார்க்கலாம்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் சொல்லியனுப்பவே பண்டிதர் வந்தார். வரும்போதே அவர் எதையும் லக்ஷியம் செய்யாத இயல்புடையவரென்று தெரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இந்த அட்டவணையை எழுதியது தாங்களோ?&amp;quot; என்று அவரைக் கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம். பின் வேறு யார் எழுதுவார்கள்? நான் தான் ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிரமப் பட்டுக் குறித்தேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அப்படியா! இதில் மாவிந்த புராணம் என்று ஒரு புத்தகத்தின் பெயர் இருக்கிறதே; அந்தப் பெயரை நீங்கள் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எல்லாம் அந்த அட்டவணையிலேயே தெளிவாக இருக்கும். புத்தகம் தானே சொல்லுமே. அதைப் பார்த்தால் எல்லாம் தெரியும்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அட்டவணையைப் பார்த்துத் தான் புத்தகத்தைத் தேடினேன். இதோ இருக்கிறது அந்தச் சுவடி. இதன் பெயர் மாவிந்த புராணமென்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். &amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம். நான் தான் நன்றாக ஆராய்ந்து ஊகித்துக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அவருடைய இயல்பைக் கண்டு சிரிப்பு ஒரு பக்கமும் கோபம் ஒரு பக்கமும் வந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எதைக் கொண்டு ஆராய்ந்தீர்கள்&amp;quot;? என்று மீண்டும் வினவினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இங்கே கொடுங்கள் அதை. நான் சொல்லுகிறேன்.&amp;quot; என்று பண்டிதர் அந்தச் சுவடியை என் கையிலிருந்து வாங்கிக் கொண்டார். அதில் உள்ள செய்யுளை அவர் படித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;quot;மாவிந்த மென்னும் வளநகர் கூற லுற்றாம்&amp;quot;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ற பகுதி முதலில் இருந்தது. அதைப் படித்துக் காட்டி, &amp;quot;இந்தப் பாட்டைப் பாருங்கள். இதைல் மாவிந்த மென்னும் பெயர் தெளிவாக இருக்கிறதே. இது தெரியவில்லையா? இந்தப் பெயரே இது மாவிந்த மென்னும் ஸ்தலத்தின் புராணமென்பதை விளக்கவில்லையா? முதற் பக்கத்திலேயே இந்த அடையாளம் இருக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்காமல் என்னைக் கேட்கிறீர்களே&amp;quot; என்று அவர் கூறினார்; முன்பிருந்ததை விட அப்போது அவர் தொனி மிகவும் கம்பீரமாக இருந்தது. என் அறியாமையால் நான் விஷயத்தைத் தெரிந்து கொள்ளவில்லையென்பது அவர் எண்ணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் பேசப் பேச எனக்குச் சிரிப்போ தாங்க முடியவில்லை. &amp;quot;நீங்கள் நைடதம் படித்ததுண்டா?&amp;quot; என்று கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நைடதம் படிக்காமலா இருப்பேன்? நான் ஒரு பெரிய வித்துவானுடைய மருமகன்&amp;quot; என்று அவர் சிறிது சினக்குறிப்போடு சொன்னார். உடனே பக்கதில் நின்ற வேலைக்காரன் ஒருவனை அழைத்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அப்பா, இந்தப் புஸ்தகசாலையில் நைடத மென்ற புஸ்தகத்தின் அச்சுப் பிரதியிருந்தால் எடுத்துக் கொண்டு வா&amp;quot; என்றேன். அவன் அதைக் கொணர்ந்தான். அதைப் பிரித்து நாட்டுப் படலத்தின் இறுதியிலுள்ள மேற்கூறிய செய்யுளைக் காட்டினேன். பண்டிதர் அதைப் பார்த்தார்;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
''''கொல்லுலை வேற்க ணல்லார் கொழுநரோ டூடி நீத்த&amp;lt;br&amp;gt;வில்லுமிழ் கலன்கள் யாவு மிளிர்சுட ரெறிக்கு மாற்றால்&amp;lt;br&amp;gt;எல்லியும் பகலுந் தோன்றா திமையவ ருலக மேய்க்கும்&amp;lt;br&amp;gt;மல்லன் மா விந்த மென்னும் வளநகர் கூற லுற்றாம்.&amp;quot;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது அச்செய்யுள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நீங்கள் நைடதத்தைச் சரியாகப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இந்தச் சுவடியைக் கொஞ்சம் பின்னாலே புரட்டிப் பார்த்திருந்தால் உங்களுக்கே இது நளன் கதையென்று தெரிந்திருக்கும். போனது போகட்டும். நான் ஏமாற்றம் அடைந்த மாதிரி மற்றவர்கள் ஏமாறாதபடி இந்தச் சுவடியின் பெயரை இனிமேல் நைடதமென்று மாற்றிவிடுங்கள்.&amp;quot; என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;படித்ததெல்லாம் ஞாபகத்திலே இருக்கிறதா? ஆயிரத்திலே ஒன்று தவறாவது வழக்கந்தான்&amp;quot; என்ற முணுமுணுப்போடு அப்பண்டிதர் வேறிடஞ் சென்று விட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பால் நான் ராவ்பகதூர் ரங்காசாரியாரவர்களிடம் சென்று புத்தக அட்டவணையை முதலிலிருந்து நன்றாகப் பரிசோதித்தே வெளியிடவேண்டுமென்று தெரிவித்தேன். அங்ஙனமே வேறொரு தக்க பண்டிதரைக் கொண்டு முழுவதையும் பரிசீலனை செய்வித்து அட்டவணையை வெளியிட்டார்கள்.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha sambasivam|Geetha sambasivam]] 08:44, 3 செப்டெம்பர் 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:உ.வே.சா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%89.%E0%AE%B5%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1</id>
		<title>உ.வே.சா. நினைவு மஞ்சரி பாகம் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%89.%E0%AE%B5%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_1"/>
				<updated>2010-09-03T08:37:37Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha sambasivam: புதிய பக்கம்: '''உ.வே.சா.நினைவு மஞ்சரி பாகம் 1'''   '''''மாவிந்த புராணம்'''''  ''  சென்னைய…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''உ.வே.சா.நினைவு மஞ்சரி பாகம் 1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''''மாவிந்த புராணம்'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
''&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னையில் ஏட்டுச் சுவடிகளைத் தொகுத்து வைத்துப்பாதுகாக்கும் அரசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலைக்கு, இராசதானிக் கலாசாலையில் வடமொழிப் பேராசிரியராக இருந்த ராவ்பகதூர் ம.ரங்காசாரியார் அதிபராக இருந்தார். நான் சென்னப்பட்டணத்துக்கு வேலையாக வந்த ஆரம்பத்தில் புதிதாக எழுதப் பெற்று வந்த அப்புத்தகசாலைத் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகளின் விரிவான அட்டவணையை அவர் என்னிடம் காட்டினார். அந்தப் புத்தகசாலை பெரும்பொருள் செலவிட்டு அமைக்கப் பெற்றது. பலர் அதில் வேலையில் அமர்ந்து உழைத்து வந்தார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றிலுள்ள ஏட்டுச் சுவடிகளும் அதில் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தகசாலைத் தலைவர் அப்புத்தக அட்டவணையை என்னிடம் கொடுத்து, &amp;quot;எங்கள் புத்தகசாலையில் இந்த அட்டவணையைத் தொகுத்து எழுதி யிருக்கிறோம். இதைக் கவனித்து ஏதாவது திருத்தம் செய்யவேண்டுமானால் செய்து கொடுத்தால் அனுகூலமாக இருக்கும்&amp;quot; என்றார். அந்த அட்டவணையில் பல தமிழ்நூல்களின் பெயர்கள் காணப்பட்டன். அப்பெயர்களிலே சில சில பிழைகளும் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏட்டுச் சுவடிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடைய எனக்கு அக்கனவான் அளித்த வேலை கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல் இருந்தது. அப்புத்தகசாலையில் இன்ன இன்ன சுவடிகள் உள்ளனவென்பது தெரிந்து எனக்கு ஏதேனும் உதவுமானால் பார்த்துப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது என் எண்ணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆதலால் அந்த அட்டவணையை ஆவலோடு பார்த்தேன். பல பிரபந்தங்கள், புராணங்கள், இலக்கணங்கள், சாஸ்திரங்கள், வைத்தியம், சோதிடம் முதலிய பலவகை நூல்களின் பெயர்களை அதிற் கண்டேன். சங்க நூல்கள் அதிகமாக இல்லாவிடினும் பிற்காலத்து நூல்கள் பல இருந்தன. அச்சிட்ட புத்தகங்களாக இருந்தாலும் ஏட்டுச் சுவடிகளின் உதவியால் பல அரிய திருத்தங்கள் கிடைக்கும். ஆதலால் ஏட்டுச் சுவடிகளை நான் எங்கேனும் காணும்போது, &amp;quot;இவை அச்சிடப் பட்டவை&amp;quot; என்று நினைத்து அலட்சியமாக இருப்பதில்லை. அச்சுப் பிரதிகளில் பலகாலமாகத் தீராமல் இருந்த சந்தேகங்கள் ஏடுகளிலே கண்ட பாடபேதங்களினால் தெளிவாகியதுண்டு. ஆதலின் மேலே கூறிய புத்தகசாலையிலுள்ள சுவடிகளை இயன்றவரையில் மிகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று கருதினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புத்தக அட்டவணையைக் கூர்ந்து பார்த்து வந்தேன். புராண வரிசையிலே மாவிந்த புராணம் என்று ஒரு பெயரைக் கண்டேன். அப்பெயரை அதற்கு முன் நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. தருமபுத்திரரது பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள வரலாறுகளைக் கூறுவதாகிய மாவிந்தமென்ற ஒரு நூல் உண்டு. அது மிகவும் எளிய நடையிலே அமைந்தது. அதுவாக இருக்கலாமென்று முதலில் எண்ணினேன். அப்பால், 'மாவிந்த புராணமென்று இருப்பதனால் அந்த நூல் ஒரு ஸ்தல புராணமாக இருக்குமோ' என்ற ஐயம் எனக்கு உண்டாயிறு. மாவிந்தமென்ற ஸ்தலம் எங்கே உள்ளதென்று யோசித்தேன். அப்படி ஒரு ஸ்தலம் இருப்பதாக எனது ஞாபகத்துக்கே வரவில்லை. தேவியை விந்தாசனி என்று கூறுவதுண்டு. விந்தகிரியில் எழுந்தருளியிருக்கும் தேவியின் புகழைக் கூறும் புராணமாக இருக்கலாமோ என்று கருதினேன். வேறு சமயத்தாருக்குரிய நூலாக இருக்குமோ என்ற ஐயமும் இடையே எழுந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வசவபுராணம், சாந்திபுராணம்முதலிய வேறு மதநூல்களின் பெயர்கள் அப்போது என் ஞாபகத்திற்கு வந்தன. 'சரி, அந்தப் புத்தகத்தைப் பார்த்து ஆராய்ச்சி செய்யவேண்டும்' என்று உறுதி செய்து கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு இருந்த ஆவலினால் விரைவில் அந்தப் புத்தகசாலைக்குச் சென்றேன். அங்கே சுவடிகளைப் பலர் பார்த்துப் படிப்பதற்கும் குறிப்பெடுத்துக்கொள்வதற்கும் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொடுப்பதற்குரிய வேலைக்காரர்களும் இருப்பார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மாவிந்த புராணத்திற்குரிய எண்ணைக் கூறி அதை வருவிக்கும்படி அங்கிருந்த அதிகாரியிடம் சொன்னேன். அவர் ஒரு வேலைக்காரனை அனுப்பினார். அவன் தன் வழக்கப்படியே அடிமேல் அடி வைத்து அந்தப் புத்தகத்தைத் தேடி எடுத்து வரச் சென்றான். எனக்கிருந்த மனோவேகத்தை அவன் கண்டானா? அவன் பால் எனக்கு அப்போது மிக்க கோபம் உண்டாயிற்று, என் செய்வது! 'புத்தகம் வராமலா போய்விடும்?? ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?' என்று சமாதானம் செய்து கொண்டு பொறுத்திருந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வேலைக்காரன் கால்மணிநேரம் கழித்து ஒரு சுவடியைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தான். அதில் முற்பகுதியில் சில ஏடுகள் இல்லை. பிரித்தவுடன் முதலில் இருந்த ஏட்டைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய ஆத்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. 'மலை கல்லி எலி பிடித்தது' போல இருந்தது. நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். 'இதற்குத் தானா இவ்வளவு ஆவலோடு ஓடி வந்தோம்!' என்று என் செயலை நானே இகழ்ந்து கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இந்த அட்டவணையைத் தொகுத்த புத்திசாலி யாரோ?&amp;quot; என்று அந்த அதிகாரியை வினவினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எங்கள் புத்தகசாலைப் பண்டிதர்&amp;quot; என்றார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;பண்டிதரா?&amp;quot; என்று நான் வியப்போடு கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம்.&amp;quot; என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அவரை நான் பார்க்கலாமோ?&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆகா! தடையின்றிப் பார்க்கலாம்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் சொல்லியனுப்பவே பண்டிதர் வந்தார். வரும்போதே அவர் எதையும் லக்ஷியம் செய்யாத இயல்புடையவரென்று தெரிந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இந்த அட்டவணையை எழுதியது தாங்களோ?&amp;quot; என்று அவரைக் கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம். பின் வேறு யார் எழுதுவார்கள்? நான் தான் ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிரமப் பட்டுக் குறித்தேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அப்படியா! இதில் மாவிந்த புராணம் என்று ஒரு புத்தகத்தின் பெயர் இருக்கிறதே; அந்தப் பெயரை நீங்கள் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எல்லாம் அந்த அட்டவணையிலேயே தெளிவாக இருக்கும். புத்தகம் தானே சொல்லுமே. அதைப் பார்த்தால் எல்லாம் தெரியும்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அட்டவணையைப் பார்த்துத் தான் புத்தகத்தைத் தேடினேன். இதோ இருக்கிறது அந்தச் சுவடி. இதன் பெயர் மாவிந்த புராணமென்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். &amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஆமாம். நான் தான் நன்றாக ஆராய்ந்து ஊகித்துக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறேன்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அவருடைய இயல்பைக் கண்டு சிரிப்பு ஒரு பக்கமும் கோபம் ஒரு பக்கமும் வந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எதைக் கொண்டு ஆராய்ந்தீர்கள்&amp;quot;? என்று மீண்டும் வினவினேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இங்கே கொடுங்கள் அதை. நான் சொல்லுகிறேன்.&amp;quot; என்று பண்டிதர் அந்தச் சுவடியை என் கையிலிருந்து வாங்கிக் கொண்டார். அதில் உள்ள செய்யுளை அவர் படித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;''மாவிந்த மென்னும் வளநகர் கூற லுற்றாம்&amp;quot;''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ற பகுதி முதலில் இருந்தது. அதைப் படித்துக் காட்டி, &amp;quot;இந்தப் பாட்டைப் பாருங்கள். இதைல் மாவிந்த மென்னும் பெயர் தெளிவாக இருக்கிறதே. இது தெரியவில்லையா? இந்தப் பெயரே இது மாவிந்த மென்னும் ஸ்தலத்தின் புராணமென்பதை விளக்கவில்லையா? முதற் பக்கத்திலேயே இந்த அடையாளம் இருக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்காமல் என்னைக் கேட்கிறீர்களே&amp;quot; என்று அவர் கூறினார்; முன்பிருந்ததை விட அப்போது அவர் தொனி மிகவும் கம்பீரமாக இருந்தது. என் அறியாமையால் நான் விஷயத்தைத் தெரிந்து கொள்ளவில்லையென்பது அவர் எண்ணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் பேசப் பேச எனக்குச் சிரிப்போ தாங்க முடியவில்லை. &amp;quot;நீங்கள் நைடதம் படித்ததுண்டா?&amp;quot; என்று கேட்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நைடதம் படிக்காமலா இருப்பேன்? நான் ஒரு பெரிய வித்துவானுடைய மருமகன்&amp;quot; என்று அவர் சிறிது சினக்குறிப்போடு சொன்னார். உடனே பக்கதில் நின்ற வேலைக்காரன் ஒருவனை அழைத்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அப்பா, இந்தப் புஸ்தகசாலையில் நைடத மென்ற புஸ்தகத்தின் அச்சுப் பிரதியிருந்தால் எடுத்துக் கொண்டு வா&amp;quot; என்றேன். அவன் அதைக் கொணர்ந்தான். அதைப் பிரித்து நாட்டுப் படலத்தின் இறுதியிலுள்ள மேற்கூறிய செய்யுளைக் காட்டினேன். பண்டிதர் அதைப் பார்த்தார்;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
''''''கொல்லுலை வேற்க ணல்லார் கொழுநரோ டூடி நீத்த&amp;lt;br&amp;gt;வில்லுமிழ் கலன்கள் யாவு மிளிர்சுட ரெறிக்கு மாற்றால்&amp;lt;br&amp;gt;எல்லியும் பகலுந் தோன்றா திமையவ ருலக மேய்க்கும்&amp;lt;br&amp;gt;மல்லன் மா விந்த மென்னும் வளநகர் கூற லுற்றாம்.&amp;quot;'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது அச்செய்யுள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;நீங்கள் நைடதத்தைச் சரியாகப் பார்த்ததில்லை போலிருக்கிறது. இந்தச் சுவடியைக் கொஞ்சம் பின்னாலே புரட்டிப் பார்த்திருந்தால் உங்களுக்கே இது நளன் கதையென்று தெரிந்திருக்கும். போனது போகட்டும். நான் ஏமாற்றம் அடைந்த மாதிரி மற்றவர்கள் ஏமாறாதபடி இந்தச் சுவடியின் பெயரை இனிமேல் நைடதமென்று மாற்றிவிடுங்கள்.&amp;quot; என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;படித்ததெல்லாம் ஞாபகத்திலே இருக்கிறதா? ஆயிரத்திலே ஒன்று தவறாவது வழக்கந்தான்&amp;quot; என்ற முணுமுணுப்போடு அப்பண்டிதர் வேறிடஞ் சென்று விட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பால் நான் ராவ்பகதூர் ரங்காசாரியாரவர்களிடம் சென்று புத்தக அட்டவணையை முதலிலிருந்து நன்றாகப் பரிசோதித்தே வெளியிடவேண்டுமென்று தெரிவித்தேன். அங்ஙனமே வேறொரு தக்க பண்டிதரைக் கொண்டு முழுவதையும் பரிசீலனை செய்வித்து அட்டவணையை வெளியிட்டார்கள்.&amp;lt;br&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha sambasivam</name></author>	</entry>

	</feed>